https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 14 மே, 2017

அடையாளமாதல் - 65 *தொடுதிறன் மூளை

ஶ்ரீ:





அடையாளமாதல் - 65
*தொடுதிறன் மூளை  
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 38
அரசியல் களம் - 18




கண்ணனை கையோடு கூட்டிக்கொண்டு தான் இருக்கும் மரைக்கார் வீட்டிற்கே சண்முகம் வருவார் என ஜோசப் மரியதாஸ் எதிர்பார்க்கவேயில்லை. மந்திரிசபை இலாக்கா மாற்றம் விஷயத்தில், பொதிந்திருந்த ஆரசியலை புரிந்து கொள்ளாது , மரக்கார் கண்ணனை தனக்கு ஆடுத்ததாக வைக்கும் எண்ணமில்லை என்றும் அவரது குடும்ப பெருமை பாரம்பரியம் காரணமாக தான் அவருக்கு அதை வழங்க விரும்பிவதாக கூறியதில்,அதில் தனக்குள்ள தனியாளுமை வெளிபாடாக இருந்ததால் அதில் உள்ள அரசியல் கணக்கு அவருக்கு தெரியாது போனதில் வியப்பென ஒன்றில்லை.

அன்று மாலை சண்முகம் தன்னை வந்து சந்திக்குமிறும் சில   விஷயங்களை பற்றி தான் பேசவிரும்புவதாகவும் சொல்லியிருந்தார். அது தினசரியாக அவர் பேசும் விஷயமாக பட்டதால் , அடுத்த வந்த மரைக்காரின் அழைப்பு முக்கியமாகப்பட்டது. 1980 -1985 மரியதாசின் பழகுமுறை மிக எளிதாக அனைவரையும் கவர்ந்து விடக்கூடாது . , சண்முகத்திற்கு மதிய உணவு மரியதாஸ் வீட்டிலிருந்த செல்லுமளவிற்கு அவர்களிருவருக்குமான உறவு மிகவும் பலபட்டஇருந்தது.

சண்முகத்தினுடைய ஒரு பழக்கம் தான் மனமுவந்து கொடுக்க விரும்புவதை பெறுபவர் அறியாது வைத்திருந்து , எதிர்பாராத சந்தரப்பத்தில தருவது அவர் வழக்கம். இப்பபோதும் அதுதான் நிகழவிருந்து . கண்ணன் முறையிட திடீரென்று வந்ததும் காட்சி முழுவதுமாக மாறி அவரை மரைக்கார் வீட்டிற்கு கொண்டு விட்டது . அங்கு ஜோசப் மரியதாஸ் . அவரது விரைந்து கணக்கிடம் செயலமிகு தொடுதிறன்  மூளை பலவராக பரவி படர்ந்தது  விட்டது.

மரியதாஸுக்கு சுருக்கென இருந்தாலும் அவர் இதை சண்முகத்தை சந்தித்து விளக்கிவிடக்கூடியதாக சாதாரண விஷயமாக தோன்றியது .ஆனால் சாதாரணமான நிகழ்வுகளுக்கு அரசியிலில் "பொருளே வேறு " என அன்று புரிந்து கொள்ள இயலாமல் போனாலும் , நிச்சயம் பிற்காலத்தில் உணர்ந்திருப்பார். இந்த வம்பில் அவரை சிக்கவைத்தார் மரைகார் . அவர் பொருட்டு தன் அவயங்களை உள்ளுழுத்துக் கொண்ட ஆமை கடைசீவரை வெளிவரவேயில்லை எனபது சோகம்

இதில் ஒரு விந்தையிருப்பதை கவனித்திருக்கிறேன் . முதல்முறை சண்முகத்தை சந்திப்பதற்கு முன்னரோ அல்லது அவரால் பதவிக்கு வருவதற்குமுன்பாகவோ , ஒருவருக்கு சண்முகம் பலமிக்க ஆளுமையாகத் தெரிவதும் , வந்தபிறகு அவரின் ஆளுமையின்  வெளிப்பாடுகள் அனைத்தும் தற்செயல் நிகழ்வாகவும் , அவர் ஒரு விபரம்தெரியாத கிராமத்து ஆளாகத்தெரிவதும் தான் இதில் சிக்கலே

இது உளவியல் ரீதியான சிக்கலாக இருக்கலாம். ஒரு பலமிக்க தலைவராக மனோரீதியில் உருவகப்படுத்துதில் ஏற்படும் பிம்பம் , கற்பனையாக பலவித புனைவுகளை ஏறிட்டுக்கொள்கிறது . தன்னை மிக சாதாரணமானாகவும் அகங்காரம் முற்றழிந்த நிலையில் தன்னை வைத்துக்கொள்ள அதற்கு ஒரு சங்கடமும் இல்லை  . ஆனால் அதே ஆளுமையை நேரில் சந்திக்கும்போதோ , அவருடன் பயணப்படும்போதோ இழந்த அகங்காரம் திரும்ப உட்புகுந்து கொள்ள , தன்னடையே எதிரே உள்ளவரை தான் ஏற்றிய அனத்து பிம்பங்களையும் ஒவ்வொன்றாக அது சிதைக்கிறது .

பின்னர் ஒரு கட்டத்தில் , அவர் ஒன்றும் தான் நினைத்தை போல இல்லை என்பதில் திருப்தியுருகிறது விலகியேறிய அகங்காரம் . வெளிப்பகட்டுக்கு உள்ள ஒரு நம்பகத்தன்மை ,யதார்தமான அனுகுமுறை உள்ளவர்களிடம் ஏற்படுவதில்லை . எதையும் மிகையாக உருவகப்படுத்தப்பட்டதே ஏற்புடையாதாக இருக்கிறது.

இது அனைவருக்கும் நிகழ்வதே அதற்கு மரியதாஸ் வதிவிலக்கல்ல . திமுக வில் இருந்தவரை அவருடன் பேசியவர்கள் சண்முகத்தைப் பற்றி ஏற்றிய அனைத்து வண்ணங்களும்  , அவரை நேரில் சந்தித்து பழகி அமைச்சர் நிலைக்கு உயர்ந்தபிறகு நிறமிழந்தது . தனக்கான பாதையில் அவர் செய்வதற்கு ஒன்றில்லை என்றும் , தன் வழி இனி தன்முடிவென எடுக்கும்போது சண்முகம் முற்றாக கலைந்து போகிறார் . இது பலபேருக்கு நிகழ்ந்தது.

கண்ணன் சிக்கல் வேறு தளத்தைச் சேர்ந்தது . தனக்கு தான் உருவாக்கிக் கொண்ட பிம்பத்தை உண்மையென நம்பத்தொடங்கியதும் அது உண்மையில்லை என்பதும் ஒருமுறை முகத்தில் வந்து அறையும் போது ஏற்படும் வலி வார்த்தைகளுக்கு அப்பால் உள்ளது . பிறர் அவரைநோக்கி வரும் ஆர்பரிப்புகளுக்கு ஒரு மாயை , இந்த இடத்தில் அதற்கு ஒரு பொருளும் இல்லை என்பது போல புரிந்ததிருக்கலாம்

சட்மன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் தன்னுடைய ஸ்தானம் வேறு அங்கு மரியதாஸ் , வைத்தியலிங்கம் , மரைகார் போன்ற பாரம்பரிய மற்றும் பொருளியல் சக்திபினபுலம் உள்ளவரகளின் இடம் வேறு . அங்கு தனக்குறிய மரியாதை கிடைக்காதென்பது வரும்போது , அங்கும் தன் தனித்தன்மையை உருவாக்கியெடுக்கும் முயற்சிகள் பலனளிக்காது  என்பதும் தேர்தெடுகப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் மனதை வென்று அவர்களை தன்பின்னால் அணியாக திரளவைக்க முடியும் என்கிற கனவு கலைந்து போனது .

தன்னுடைய பிம்பத்தை மேலும் ஊதிப்பெருக்கிக் கொள்ளும் திட்டத்துடன் அவர் புதுவைமுழுவதும் பாதையாத்திரையாக கிளம்பியது இந்த சந்தர்பத்தில் . அது மிகப்பெரிய எழுச்சி என்பதில் சந்தேகமில்லை . சமூக பொது புத்தியில் தன்பற்றிய உயர்பிம்பத்தை அவரால் ஆழப்பதிக்க முடிந்தது.

அவரின் கணக்குகள் மாறத்தொடங்கியது இங்குதான் , இளைஞர் காங்கிரஸ் இயக்கம் அவரது பாதையாத்திரையை வெற்றிகரமானதாக உருவாக்கி கொடுத்தது . சண்முகத்தையும் , மரைகாரையும் தாண்டி தன்னுடைய ஆளுமை எடுபடுவதற்கான காலமே அவர்கண்களுக்குத் தெரியவில்லை . அவருள் கனன்று கொண்டிருந்திருந்த நெருப்பில் எண்ணை வார்த்தது போல் மரைகார் மெக்கா பயணத்தின் போது தற்காலிக முதல்வர் பொறுப்பையும் பார்க்க நேர்ந்தது , அவரை அந்த கனவிலிருந்த நிரந்தரமாக வெளிக்கொணர அது விடவேயில்லை.


இளைஞர் காங்கிரசின் தலைமையின் வெற்றியாக பார்க்கப்படுவது அவரின் ஆர்பரிக்கும் செயல்பாடுகளில் வெளிப்படும் அகவய பாதிப்புகள் செல்வாக்காக மலினப்படுவது . அது ஒரு முதிரா இளைஞனாக நீடிக்கும் வரை அதற்கென சிறப்பான இடமுண்டு . ஆனால் அதுவே அவரது அரசியல் வழிமுறையானது. அவர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாயையிலிருந்து மீளவேயில்லை. வைகோ போல எதைச்சொன்னாலும் உணர்ச்சி பொங்குதலை பேசுமுறையாக வைத்திருந்தார் ஒரு கட்டத்தில் எவருக்கும் அயாசமளிப்பது அத

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...