https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 27 நவம்பர், 2020

அடையாளமாதல் * இயற்கையின் நகைச்சுவை *


ஶ்ரீ:



பதிவு : 548  / 741/ தேதி 27 நவம்பர்  2020


* இயற்கையின் நகைச்சுவை



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 26.






1940 களில் இந்திய விடுதலை மிக சமீபத்தில் உள்ளதை உணர்ந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சி அடுத்த கட்டம் நோக்கி நகர ஆரம்பித்திருந்தது . இந்தியா முழுவதும் காங்கிரஸ் கொள்கைகளை முன்வைத்து ஒருங்கிணைக்கவும் தனது அரசியல் சித்தாந்தத்தை செயல்படுத்தவும் அது நினைத்தது. வட இந்திய பகுதிகள் எதிர் கொண்ட சுதந்திர போராட்டத்தின் தாக்கம் போல தென்னக பகுதிகளில் அதன் பாதிப்புகள் குறைவு. காரணம் அவை தனிமனித பாதிப்பாக அல்லது குறுங்குழுவிற்கு நடந்த ஒன்றாக மக்களால் புரிந்து கொள்ளப்பட்டருந்தது . சுதந்திர போராட்டம் எப்போதும் இந்திய மக்கள் திரண்டெழந்து கலந்து கொண்ட ஒன்றல்ல. பசியும் பிணியுமாக வறுமையில் உழன்றவர்களுக்கு நாட்டின் சுதந்திரம் என்கிற ஒன்று தெரிந்திருக்க நய மல்லை . அன்று சுதந்திரமின்மையை வெளிப்படையாக அறிந்து கொள்ளும் இடமாக நீதிமன்றங்கள் இருந்தன . பிரிட்டீஷாரின் பிறிதொரு முகத்தை அங்கு கண்டுகொண்டவர்கள் வழக்குரைங்கர்கள் மட்டுமே. அதன் விளைவாகவே இந்திய போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களில் மிகப் பெரும்பாண்மையோர் வழக்குரைஞராக  தொழில் புரிந்தவர்கள் . இந்தியாவின் விடுதலை போராட்டத்தை தென்னகத்தை சேர்ந்த உள்ளூர் காங்கிரஸ் பெருந்தலைவர்கள் அதை மக்கள் மத்தியில் நிகர் போராட்ட வடிவில் கொண்டு சேர்த்திருந்தனர் . “மெட்ராஸ்மாகானம் என்கிற பெயரில் பெரும் நிலப்பரப்பு இன்றைய பல மாநிலங்களை உள்ளடக்கிய ஒன்றாக அப்போது இருந்தது . தென்னகப் பகுதிகளில் கவனம் செலுத்துவது குறித்து திட்டம் உருப்பெற்றிருந்த நேரம் . அன்று புதுவையை தமிழக பகுதிகளைச் சேர்ந்த ஒரு மாவட்ட கட்சியாக தில்லி அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வகித்து வந்தது . ஏறக்குறைய 1990 களின் இறுதி வரையிலும் கூட அந்த நிலையே நீடித்தது. அகில இந்திய அளவில் கட்சி நிர்வாகம் குறித்த சீரமைப்பு 1945 களில் முழு விசை கொள்ளத் துவங்கி இருந்தது. அதன் விளைவாக நிகழ்ந்தே 1955 களில் ஆவடி காங்கிரஸ் மாநாடு. சிறுக சிறுக தனது சோஷலிஸ கொள்கையை நேரு முழுவதுமாக வடிவமைத்தும் அதை முன்வைத்துப் பேசி அது சம்பந்தமாக தீர்மாணங்கள் இயற்றப்படுவது குறித்து அந்த மாநாட்டில் விவாதிகப்பட்டது . ஆவடி மாநாட்டிற்கு யூகோஸ்லாவியாவின் ஜனாதிபதி மார்ஷல் ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் . நேரு தனது கொள்கை முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரம் . பின்னர் அதே ஆண்டு சோவியத் யூனியனுக்குச் சென்று, சோவியத் பிரதமர் ஜார்ஜ் மலென்கோவும் அவருக்குப் பின் வரவிருக்கும் நிகிதா குருசேவையும் இந்தியாவிற்கு வரவழைத்து, பொதுத்துறையில் கனரகத் தொழிற்சாலைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆகஸ்ட் 1955 இல், குருசேவ் இந்தியாவுக்கு வருகை தந்தார் . அதன் விளைவாக ஆவடி தொழிற்சாலைகள் உருவாகி வந்தன. அதற்கு ஒரு வருடம் முன்பு 1954 களில் சுப்பையா நேருவை சந்தித்தார் . கம்யூனிஸ்டுகளின் இந்திய விடுதலை போராட்டமும் அதை பிரெஞ்ச் இந்திய நிர்வாகம் கையாண்ட அடக்குமுறைகள் மட்டுமே அன்று வெளிப்படையான சான்றாக இருந்த சூழலில் அவர்களின் சந்திப்பு புதுவை மட்டுமின்றி இந்திய அரசியலில் மாறுதலைக் கொடுத்திருக்க வேண்டும் .புதுவை அரசியல் நிலைமை குறித்து சுப்பையாவிற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகள் அன்று பிரெஞ்ச் இந்திய நிர்வாகத்தின் புதுவை விடுதலைக்கு எதிரான மனநிலைக்கு ஒரே தெளிவான ஆதாரம். நேருவின் உளநிலைக்கு அன்று கம்யூனிஸ்டுகள் இணக்கமாக கருதப்பட்டனர் .1959 களில் கேரள சட்டமன்ற கலைப்பிற்கு பிறகு அவர் இந்திய கம்யூனிஸ்டுகளைக் குறித்த தனது நிலைபாட்டை மாற்றிக் கொண்டார்


இந்த பின்னனி தகவல்களுடன் புதுவையில் புறநகர் பகுதிகளில் பலம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 1946 களில் தனது முதல் நடவடிக்கையை துவங்கியது . அது பிரெஞ்சு இந்திய இணைப்பு மற்றும் அதன் உடைமைகளை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கும் தீர்மானத்தை முன்வைத்தது தனது பிரசாரத்தை துவக்கியிருந்தது . 1948 களின் பிற்பகுதியில், அவர்களுடன் பிரெஞ்ச் இந்திய மாணவர் காங்கிரஸ் அமைப்பும் இந்திய இணைப்பு என்பது பிரெஞ்சு இந்திய உடைமைகளை இந்தியாவுடன் இணைப்பதை உள்ளடக்கியது என்கிற தீர்மானத்தை பிரகடனப்படுத்தியது. அதற்கு மாறுபட்டு கம்யூனிஸ்ட் கட்சி இணைப்பை மட்டும் ஏற்குமாறு மக்களை கேட்டுக் கொண்டது . புதுவை விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகளின் பங்கு மகத்தானது என்பது மறுக்க முடியாதது . அதன் செயல்பாட்டை இரண்டு அடுக்குகளாக பிரித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன் . ஒன்று பிரெஞ்ச் இந்திய நிர்வாகம் உள்ளூர் பிரபுக்களுக்கு கொடுத்த பரிசீலனைக்கு உட்படுத்தப்படாத ஆதரவு திரும்பப் பெறப்படுவதை குறித்து. இரண்டு தன்னை அரசு அதிகாரம் நோக்கிய நகர்தலின் பொருட்டு . இவை இரண்டையும் அடிப்படையாக கொண்டே தங்கள் நிலைப்பாடுகளை வடிவமைத்துக் கொண்டார்கள் . அது எதிர்ப்பும் ஆதரவு , நடுநிலை என எல்லா சமயங்களிலும் மாறுபாடுகளை அடைந்து கொண்டே இருந்தது . அதன் மைய சரடை தொகுத்துக் கொண்டால் புதுவை விடுதலை போராட்டம் முதல் அதன் ஆட்சி அதிகார அரசியல் உருவாகி வந்ததை அறிந்து கொள்ள முடிகிறது . அனைத்தின் மத்தியில் சண்முகமும் அவர் எழுப்பிய கேள்விகளும் இருந்து கொண்டிருந்தன


இந்த பதிவுகள் சண்முகம் எழுப்பிய கேள்விகளில் இருந்து எழுந்தவை . அவரை எதிர் தரப்பிலிருந்து பார்த்தது முதல் மிக அணுக்கமாக அருகமர்ந்து அவரிடம் உரையாடும் போதும் , குடும்பம் என ஒன்றில்லாமல் , உணர்வு வடிகால் என ஏதும் இல்லாமல் , இருபத்து நான்கு மணி நேரமும் அரசியல் குறித்து மட்டுமே பேசி , சிந்தித்து செயல்படுத்தி என  மூளையை சிடுக்காக்கும் ஒரு துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக முதன்மைநிலை செயல்பாட்டில் இருக்கும் அளவிற்கு அவரை செலுத்திய விசை என்னவாக இருந்துவிட முடியும் என திகைத்த காலம் உண்டு . ஆனால் இந்த பதிவுகளை எழுதும் பொழுது மாட்டுமே உணர முடிகிற அந்த விசை அதற்கான பின்னணி கண் முன் எழுந்து வரும் உலகென்ன பார்க்க முடிகிறது . சுதந்திர போராட்டக் களத்தில் பங்கு பெற்ற ஆயிரக்கணக்கானவர்கள் முகமிலிகளின் பெயர் கூட வஞெங்கும் பதிவு செய்யப்படவில்லைவரலாறில் தங்களின் இடம் பற்ற சிறு குறிப்பாவது இடம் பெற வேண்டும் என அவர்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களுக்கு அரசியலின் நுண்ணிய மாற்றங்கள் அதை வழிநடத்துபவரின் மனத்தின் விழைவு வெறுப்புகளில் இருந்து கிளைப்பது . தெளிவான புரிதலும் , நிகழ்பவைகளை குறித்த திகைப்பும் , கையறு நிலையிலும் ஒரு மனிதனை அது என்ன பாடு படுத்தும் என புரிந்து கொள்ள முடிந்தால் சண்முகத்தை புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன் . ஊழின் வசத்தால் கையாளும் வாய்ப்புகள் கிடைக்காமலாகும் பித்தாக்கும் அதை வடிவமைக்கும் வாய்ப்பை பெற்றவனுக்கு அதை போன்ற நல்லூழ் பிறிதில்லை . ஐம்பது ஆண்டுகளாக வரலாற்றை இழுத்துச் சென்றவருக்குள் இருந்த விசை கணக்கிட இயலாதது ஆனால் அதை இறுதிவரை கையில் வைத்திருப்பது யாருக்கும் நிகழ்வதில்லை  போலும் . தனது இலக்கை அடைந்த விட்ட திருப்தி என்கிற இடத்திற்கு வந்து சேரும்  மனிதனை அது  வீழ்ச்சிக்கு இட்டு செல்கிறது என்பது தலைவர் சண்முகத்தின்  அரசியல் வாழ்வில் இருந்து எனக்கு கையளிக்கப்பட்டிருக்கும் பாடம் . இயற்கையை காட்டிலும் கொடும் நகைச்சுவை உணர்வு கொண்ட பிறிதொன்று இல்லை என்றே நினைக்கிறேன்.


வெள்ளி, 20 நவம்பர், 2020

அடையாளமாதல் * கொள்கையும் பாதையும் *

  

ஶ்ரீ:



பதிவு : 547  / 740/ தேதி 20 நவம்பர்  2020


* கொள்கையும் பாதையும்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 25.







சுதந்திரப் போராட்ட பெரியவர்களிடம் உரையாடியது புதுவை சுதந்திர போராட்டக்குழுக்களுக்கு இடையேயான ஆரம்பக் கால முரண் குறித்து மிக புரிதல் ஆழமானதாக, அதன் போராட்ட காலம் மற்றும் முந்தைய , பிந்தைய காலங்களில் நிகழ்ந்தவை , எப்படிப்பட்ட அரசியலை உருவாக்கி இருந்தது என்பதை ஊகிக்க முடிந்தால் , புதுவை அரசியல் வரலாறு குறித்து புதிய பரிமாணம் கிடைக்கலாம் என்பதாக அது இருந்தது. நான் இங்கு காந்தியை மிக அனுக்கமாக புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன். கால சூழலை ஒட்டி மனித மனம் இயங்கும் விசையை யாராலும் கணிக்க இயலாதது . பல வித மத இன கலாச்சாரங்களின் ஊடுபாவு சிக்கல்கிளல் இருந்த இந்திய மனங்களை வென்றெடுத்து , அவர்களை விடுதலை போருக்கு இட்டு சென்ற அவரது ஆளுமையை புரிந்து கொள்ள முயல்வதைப் போல ஒரு கற்றலை பிறிதொன்று கொடுக்க இயலாது .



தங்கள் மீதான தடை 1940 களில் நீக்கப்பட்டதை அடுத்து பிரெஞ்ச் இந்திய அரசாங்கம் நட்புக் கரம் நீட்ட சுப்பையாவின் கம்யூனிஸ்ட் இயக்கம் பிரெஞ்ச் அரசாங்கத்திற்கு ஆதரவான நிலையை எடுத்தது . ஒரு பத்து வருட காலத்தில் அதன் அரசியல் கருத்தியலின் நிலைக் குறித்து முன்னும் பின்னுமாக நகர அதற்கு இடம் கொடுத்தது எது? . 1940 களில் துவங்கி 1947 வரை நீடித்த இரு தரப்பிற்குமான உடன்பாடு தவிர்க இயலாததாக இருந்திருக்க வேண்டும். கம்யூனிஸ்ட்கள் தங்களது அரசியலின் இருத்தலியல் காரணமாகவும் அதன் குறுகிய கால லாபம் குறித்தும் அப்படி முடிவெடுத்திருக்கலாம். அல்லது அதுதான் தங்களின் போராட்ட முதற்காரணத்தின் விடையாகமுதல் வெற்றியாக அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம் . அதற்கான காரணத்தை , அதன் பின்புலத்தை வேறுவிதமாகத்  தொகுத்துக் கொண்டால் பிழை புரிதல் அடையாமல் இருக்கலாம் என நினைக்கிறேன் . பிரெஞ்ச் அரசிற்கு எதிரான போராட்டம் என்பது ஒருவகையில் உள்ளூர் பிரமுகர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து துவங்கியது என்பது அடிப்படை காரணமாக இருந்திருக்க வேண்டும் . பிரெஞ்ச் அரசாங்கம் பொது மக்கள் உள்ளூர் பிரமுகர்களால் சுரண்டப்படுவதை கண்டுகொள்ளாததாலும் , குபேர் போன்றவர்களின் செயல்பாடுகளுக்கு கொடுத்த வெளிப்படையான ஆதரவும் , அவர்களுக்கு எதிரான எந்த குற்றச்சாட்டையும் செவிகொள்ள மறுத்ததும்  அதை எதிர்த்து அணிதிரண்டு ஒரு புள்ளியில் பொதுவான கருதுகோளை நோக்கி அது நகர்ந்திருக்க வேண்டும். புதுவை சுந்திரப் போர் இந்திய சுதந்திர போராட்டம் போல நீண்ட கால வரலாறு அதற்கு இல்லை. காந்தியின் எழுச்சிக்கு பிறகே புதுவை சுதந்திரப் போராக மாற்றியமைக் படுகிறது . இந்திய சுதந்திரப் போருடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது தங்களை புறக்கணிக்க இயலாத சூழலை உருவாக்குவதற்காக இருந்திருக்கலாம் . ஒரு கட்டத்தில் அறவழிப் போராட்டம் மீது நம்பிக்கை இழக்க பிரெஞ்ச் இந்திய அரசின் நெருக்கடி காரணமாக இருந்திருக்க வேண்டும் . அவர்களின் உடனடித் கோரிக்கைகளுக்கு நீண்டநாள் நாள் காத்திருக்கும் அறவழி போராட்டம் பொருமைர இழக்கச் செய்து ஆயுதப் போராட்டமாக திரும்பியது . அதன் விளைவின் உச்சமாக 1938 ல் பிரெஞ்ச் அரசு ஆதரவாளர் செல்வராஜூலு செட்டியாரின் படுகொலை நிகழ்ந்தது. அதை ஒட்டி கம்யூனிஸ இயக்கம் தடை செய்யப்பட்டது.


ஆதிக்க சக்திக்கு எதிராக துவங்கி பிரெஞ்ச் இந்திய விடுதலை பின்னர் விடுதலை போராட்டமாக உருவெடுத்தது. புறநகர் பகுதிகளில் வேரூன்றி இருந்த காங்கிரஸ் இயக்கம் கொள்கை மற்றும் நிலைப்பாடுகள் கரணமாக கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து செயல்படுவதை விரும்பாததற்கு அதன் தொடக்கமும் அதன் ஊசல் மனநிலையும் காரணமாக இருந்திருக்கலாம் . இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்த இழுபறி நிலையே நீடித்தது . 1940 களில் பிரெஞ்ச் இந்திய அரசு தனது தடையை நீக்கி கம்யூனிஸ்ட் இயக்கத்தை நோக்கி பிரெஞ்ச் அரசு நட்புக்கரம் நீட்டிய அரசியல் விநோதத்தின் உச்சம் , அதைவிட கம்யூனிஸ இயக்கம் அதற்கு உடன்பட்டது இன்னும் திகைப்பைக் கொடுக்கக் கூடியது . காந்திய வழியில் இருந்து வெளியேறிய சுப்பையா தங்களின் கட்சியை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நீட்சியாக உருவாக்கிக் கொண்டதற்கு சிறு வட்டம் விட்டு வலகி உலகப் பொதுச் சூழலுக்கு வந்து சேரும் அரசியல் கனவு அவருக்கு இருந்திருக்க வேண்டும் . இலட்சியவாத்த்தில் நம்பிக்கை பெருக்கெடுத்த காலம் . எந்த அரசியல் பின்புலமும் இல்லாத எளிய மக்கள் புட்சியினால் கிடைக்கும் புது உலகம் பற்றி கனவு விரியத் துவங்கி இருந்தது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ரஷ்யா நேசநாட்டுப் படைக்குள் வந்த போது ஐரோப்பிய நாடுகள் அதை வரவேற்றன . பாரதி சொன்ன யுகப் புரடச்சி துவங்கி விட்டதை போன்று சூழல் உருவாகி வந்தது . உலகளாவிய மாற்றத்தை ஒட்டி பிரெஞ்ச் இந்திய அரசு கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை  உனடியாக மாற்றிக் கொண்டது . தனது இருப்பை கேள்விக்குறியதாக ஆக்கும் இயக்கத்துடன் அரசியல் கூட்டணி உடன்பாடாக  மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை என்ன ? என்பது ஆழமான கேள்வியை எழுப்பக் கூடியது . தன்னை வெளியேற்ற வேண்டி போராட்டம் நடத்தும் இயக்கத்துடன் அது நட்புறவை பேணியது அதன் ஆழந்த காலணி அரசியல் புரிதலையும் உள்ளூர் அரசியலின் உள்நெசவுகளையும் அது நன்கு அறிந்திப்பதை வெளிப்படுத்துகிறது


சற்று பின்நோக்கி சென்றால் மேலதிக காரணம் எளிதில் காணக் கிடைக்கிறது . இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தங்கள் கைவசமுள்ள காலனிகளில் சாதகமில்லாதவற்றை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகிக் கொண்டிருந்தது . 1940 களில்  இந்திய விடுதலை பெறும் காலம் மிக சமீபத்தில் இருக்கும் சாத்தியக்கூறை அவை முன்பே ஊகித்து இருக்க வேண்டும் . அதே சமயம் சாதகமான காலணிகளை விட்டு வெளியேற அவை விரும்பவில்லை . ஒட்டு மொத்த காலனிகளில் இருந்து வெளியேற விரும்பியிருந்தார் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளை போன்ற சிலவற்றில் இருந்தும் அவை வெளியேறி இருக்க வேண்டும் . ஆனால் கிழக்கு ஆப்ரிக்க நாட்டை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியது . இந்திய சுதந்திரத்திற்கான கொள்கை பிரகடனம் அதற்கு ஒரு தடையாக இல்லை


பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக கிழக்கு ஆப்பிரிக்காவிலும் பல ஆண்டுகளாக விடுதலைப்  போர் நடந்து கொண்டிருந்தது. 1948 களில் கிழக்கு ஆப்ரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக வெள்ளையர்களை கொண்ட கிழக்கு ஆப்ரிக்க தேசிய கட்சி என்கிற பெயரில் அங்கு தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டிருந்தது . நெல்சன் மண்டேலா 30 வருட சிறையில் இருந்ததை குறித்து எந்த வெட்கமும் அந்த அரசு கொள்ளவில்லை . அங்கு தொடர்ந்து நிகழ்ந்த சுதந்திர போராட்டத்தின் விளைவாகவும் உலக நாடுகளின் கொடுத்த வந்த அழுத்தம் கரணமாக 1994 களில் சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கு ஆப்பிரிக்கவை விட்டு வெளியேறியது . அதே சமயம் கிழக்கு ஆப்பிரிக்க குலக் குழுவிற்கு இடையே பெரும் வன்முறை நிகழும் என எதிர்பார்ப்பும் அதை அடுத்து அரசியல் மாற்றத்திற்கும் , தங்களுக்கான மறுவாய்ப்பு பற்றி  அவர்களுக்கு எண்ணம் இருந்தது. நெல்சன் மண்டேலாவின் விட்டு கொடுக்கும் புரிதலால் அந்த கலவரம் நிகழவில்லை . கைவசமுள்ள தங்கள் காலணிகளை விட்டு முற்றாக வெளியேற அவை ஒருபோதும் விரும்பியதில்லை . இதுவே அன்றைய ஐரோப்பிய நாடுகளின் பார்வையாக இருந்தது . பிரெஞ்சு இந்திய அரசாங்கத்திடமும் அப்படிப்பபட்ட பார்வை இருந்திருக்க வேண்டும் . இல்லை எனில் உலகளாவிய அரசியல் மாற்றத்தை அனுசரித்து தனது நிலைப்பாட்டை ஒரு சிறிய காலனி அரசு உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை என்ன? . இந்திய சுதந்திரம் தவிர்க்க முடியாதது என்கிற நிலை உருவாகி வருவதை அறிந்த பின்னரே அவை புதுவை கம்யூனிஸ்டுகளை நோக்கிய தனது நட்ப்புக் கரத்தை நீட்டியது . இன்னும் ஆழமாக பார்த்தால் இந்திய விடுதலைக்குப் பிறகு எல்லா சிறு அரசுகளுக்கும் தாங்கள் திரும்பவும் ஆட்சிக்கு வர முடியும் என்கிற கனவிருந்தது . இந்திய சுதந்திரத்தை ஒட்டி இங்கு பெரும் குழுமப்பம் விளையும் என ஐரோப்பிய அரசுகள் நம்பின  . இங்கிலாந்தின் வின்ஸ்டர் சர்ச்சில் , “இந்தியாவை ஆளும் சக்தி இந்தியர்களுக்கு இல்லைஎன அறிவித்தார் . ஏறக்குறைய ஐரோப்பிய நாடுகளுக்கு இதே எண்ணம் இருந்திருக்க வேண்டும் . தனது கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் தனக்கு எதிரான குரல் இருக்க கூடாது என அது நினைத்திருந்தால் அதில் வியப்பில்லை . உலகளாவிய சூழலை ஒட்டி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கம்யூனிஸ்ட்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவெடுத்தது .


திங்கள், 16 நவம்பர், 2020

களிற்றியானை நிரை …புத்தக சமர்பணம் ……ஜெயமோகன்

 

மீண்டெழுவன

November 16, 2020

ஆறாம் வகுப்பு படிக்கையிலேயே அன்றெல்லாம் இலக்கணம் அறிமுகமாகிவிடும். நானோ அன்று பழைய முறைப்படி ஆசிரியர் இல்லம்சென்று தமிழ்படித்தேன். அன்று அறிமுகமான சொல் களிற்றியானைநிரை. அதை பித்தன் என சொல்லி அலைந்தது உண்டு.

பின்னர் பத்மநாபபுரம் அரண்மனையை ஒட்டியிருந்த என் சிற்றப்பா வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. மிக அருகே ஒரு கோட்டையை அப்போதுதான் முழுவுணர்வுடன் பார்த்தேன். அதற்குமுன் ஐந்து வயதாக இருக்கையில் ஓராண்டு பத்மநாபபுரத்தில் நாங்கள் தங்கியிருந்தோம். அன்று பார்த்த கோட்டையின் நினைவும் உடன் இணைந்துகொண்டது

கன்னங்கரிய கோட்டை. மழைநீர் வழிந்து கருகிய கருங்கற்களுக்குமேல் கருகிய மென்மையான புல்பரவிய வெட்டுகற்கள் அடுக்கப்பட்டது. அருகே நின்றால் அதன் உடலை என் அகத்துள் எதுவோ உணர்ந்தது. அன்று அது கனவில் வந்தது. அதற்கு யானைவிழிகள் இருந்தன. மின்னும் கரிய நீர்க்குமிழிகள் போன்றவை.

களிற்றியானைநிரை என்பது கோட்டை என்ற எண்ணம் என்னுள் எப்போதுமிருந்தது. பின்னர் பத்மநாபபுரத்தில் குடியிருந்தபோது கோட்டையை யானைநிரையாகவே எண்ணிக்கொண்டிருந்தேன். பிற்பாடு சோழர்களும் ஹொய்ச்சாளர்களும் கட்டிய கோயில்களில் களிற்றியானைநிரையை ஆலயங்களில் செதுக்கி வைத்திருப்பதை கண்டேன்

இந்நாவல் அஸ்தினபுரி மீண்டெழுவதைப் பற்றிய நாவல். ஹஸ்தியின் நகர். யானைகளின் நகர். யானைகளால் கட்டப்பட்டது, யானைகளையே கோட்டை எனக்கொண்டது.நாழிகைமணி போல நேர்த்தலைகீழாகக் கவிழ்ந்து தன்னை முற்றாகக் கொட்டிக்கொண்டு ஒழிந்து மீண்டும் நிரப்பிக்கொள்கிறது அம்மாநகர். புதியமக்கள், புதிய மொழி, புதிய எண்ணங்கள்.

எரியுண்ட காடு ஒரு மழைக்குப்பின் புதிதென மீண்டெழுவதுபோல அஸ்தினபுரி மீள்கிறது.அது அப்போரில் இருந்து அடைந்தது எதை? எல்லா போருக்குப்பின்னரும் நாடுகள் புதுவீச்சுடன் எழுகின்றன. ஜப்பானோ ஜெர்மனியோ. அவை கற்றவை என்ன? காட்டுத்தீ காட்டிலுள்ள மட்கிய, உலர்ந்த அனைத்தையும் அழித்து காட்டை இளமையாக ஆக்கிவிடுகிறது. தன்னால் தன்மேல் எடையென அமைந்திருந்தவற்றை அஸ்தினபுரி அப்போர்வழியாக உதிர்த்துவிட்டதா?

எந்த அழிவுக்குப்பின்னரும் மீளமீள தன்னைக் கட்டிக்கொள்ளும் ஆற்றலை மானுடம் எங்கிருந்து பெற்றுக்கொள்கிறது? அந்த அடிப்படையான உயிர்விசைதான் அனைத்து அறங்களையும் எடைபோட்டு மதிப்பிட்டுக்கொள்கிறதா? போருக்கு பிந்தைய அனைத்தையும் ஒரே வீச்சுடன் தொகுத்துக்கொள்ளும் இந்நாவல் அந்த உசாவல்களை முன்வைக்கிறது

இந்நாவலை வெண்முரசுக்கான வாசகர்கூட்டங்களை நடத்தும் நண்பர்கள் சென்னை ராஜகோபாலன், சௌந்தர்ராஜன், காளிப்பிரசாத், பாண்டிச்சேரி அரிகிருஷ்ணன், கடலூர் சீனு, மணிமாறன் ஆகியோருக்கும் வெண்முரசை கொண்டு சென்று சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளும் ஆஸ்டின் சௌந்தர்ராஜன், ராஜன் சோமசுந்தரம் ஆகியோருக்கும் சமர்ப்பிக்கிறேன். எந்த ஆக்கமும் அதற்கென்றே தங்களை அளித்துக்கொள்ளும் ஒரு சிறுவாசகர் வட்டத்தால்தான் காலத்தை கடக்கிறது. வெண்முரசின் வாசகர்கள் அனைவருக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன்.

ஜெ