https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்த நாள் விழா

 2022ல் எனது மணிவிழாவிற்கு சரியாக ஒரு மாதம் முன்பு கோவையில் ஜெயமோகனுக்கு நண்பர்கள் எடுத்த மணிவிழாவில் கலந்து கொள்ளவும் உடன் எனது மணிவிழா அழைப்பிதழை அவருக்கு கொடுக்கு மனைவியுடன் சென்றிருந்தேன். மேடை முழுஜெநிகழ்வால் சரடுபோல கோர்த்திருந்த நடுவில் மாலை மாற்றிக் கொள்ள அருண்மொழிநங்கை மேடையில் ஏறி பின்னர் இறங்கி பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டார். அப்போது மேடையின் நிறைவில் உள்ள சிறு குறையாக எனக்கு பட்டவுடன் அதை புதுவையில் எப்படி நிகழ்த்த வேண்டும் என முழு பார்வையை உருவாக்கிக் கொண்டேன். என் மணிவிழாவில் இரண்டு முறை அவர்கள் மாலை மாற்றிக் கொண்டனர். ஒன்று அவர் எனக்கு மங்களநான் எடுத்துக் கொடுக்கும் முன்பு பின்னர் அவர்வைணவங்கள்தனியுரைக்கு முன்னர். அதுவே ஜெ பிறந்தநாள் நிகழ்வின் துவக்கமாக இருந்தது









இரண்டாவது ஆண்டு அது தற்செயலாக நிகழ்ந்தது. தங்கை மகள் திருமணத்திற்கு முதல்நாள் அரங்கத்திற்கு உள்ளே சிறு மேடையில்ஜெயின் குமரித்துறைவி புத்தகம் அனைவரும் இலவசமாக எடுத்துக் கொள்ள வழி செய்ய வேண்டும் என என் தங்கை சொன்ன போது அரைமனதுடன் அதற்கு உடன்பட்டேன். திருமண நிகழ்விற்கு மத்தியில் அது எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்கிற ஐயம் இருந்தது மேலும் அந்த திருமணம் உயர் மேட்டுக் குடி மனபாவணையில் நிகழும் என ஊகித்திருந்தேன். புத்தகம் கிடைக்குமா என விஷ்ணுபுரம் பதிப்பபகம் நண்பர் மீணாவிடம் கேட்ட போது புத்துகம் இருப்பை சொன்னார். மற்றபடி அதை விழாவாக எடுக்க வேண்டும் என்பது கடலூர் சீனுவின் திட்டம். “குமரித்துறைவிபுத்தகம் அதுவரை எங்கும் வெளியிடப்படவில்லை என்பதால் அதை வெளியீட்டு விழாவாக நிகழ்த்தலாம் என்றார். அவரும் நண்பர் நாகராஜும் அதை மேடையில் வெளியிட்டார்கள்.





மூன்றாவது ஆண்டு விழா வெண்முரசு கூடுகை நண்பர் அம்ருதவல்லி அவர்களின் எண்ணம். 22 ஏப்ரல் அவர்களின் திருமணநாள் என்பதால் ஒரு சிறு பணமுடிப்பு இளம் எழுத்தாளர் ஒருவருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு வருடம் அதை தான் தருவதாக சொன்னார். சில மாதங்களுக்கு முன்னர் அது பற்றிய பேச்சு வ்வந்த போதே அது எழுத்தாளர் அரிசங்கர் என முடிவு செய்திருந்தோம். “ஜெபிறந்தநாள் கொண்டாட்டம் 24.04.2024 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது 

சனி, 27 ஏப்ரல், 2024

புதுவை இளம் எழுத்தாளருக்கு கௌரவ பரிசு. தாமரை கண்ணன்

 எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய  மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான வெண்முரசு நாவல்  மீதான கலந்துரையாடல் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரியில் நடைபெறுகின்றது.  கடந்த 7 ஆண்டுகளாக புதுவை வெண்முரசு கூடுகை என்னும் வாசகர்கள் குழுவால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. கலந்துரையாடல் மட்டுமல்லாது எழுத்தாளர்கள் சந்திப்பு புதிய வாசகர்களுக்காக பயிற்சி முதலிய இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை புதுவை வெண்முரசு கூடுகை ஒருங்கிணைக்கின்றது.  எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு முதல் புதுவையை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஒருவரை கௌரவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் மாத கூடுகையில் புதுவையை சேந்த எழுத்தாளர் அரிசங்கர் படைப்புகள் குறித்து உரையாடல் நிகழ்ந்தது. 


அரிசங்கர் பாரீஸ். உண்மைகள் பொய்கள் கற்பனைகள், மாகே கஃபே ஆகிய நாவல்களும், மாயப்படகு என்ற சிறுவர் நாவலும் பக்கார்டி என்னும் குறுநாவலும் எழுதியிருக்கிறார்.  இவரது சிறுகதை தொகுப்புகள் உடல், பதிலடி. ஏமாளி, சப்தங்கள் ஆகியவை தற்போது அரிசங்கர் சிறுகதைகள் என்ற தொகுப்பாகவும் கிடைக்கின்றன. தொடர்ந்து புதுச்சேரியை தனது எழுத்தில் முன்வைப்பதாகவும்  எளிய மனிதர்களின் உலகத்தை அதன் அனைத்து நிஜங்களுடன் கதைகளில் காட்டும்படியாகவும் இவரது கதையுலகம் வழங்குகிறது . அரி நண்பர்களுடன் இணைந்து நவீன இலக்கியத்திற்காக பனை என்ற வாசகர் வட்டம் ஒன்றையும் புதுவையில் நடத்தி வருகிறார்.  












அரிசங்கரது சமீபத்திய நாவலான மாகே கஃபே குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது. அரிசங்கருக்கான பரிசை வெண்முரசு கூடுகை  வாசகர் திருமதி அமிர்தவல்லி அவர்கள் வழங்கினார், மூத்த வாசகர் திரு விஜயன் பொன்னாடை போர்த்தினார். அரிசங்கர் தனது ஏற்புரையில் புதுவையில் நவீன இலக்கியம் சார்ந்த தேவைகள் குறித்து பேசினார். இந்நிகழ்வுக்கு பிறகு மாதாந்திர கூடுகை துவங்கியது வெண்முரசு காண்டீபம் நாவலின் ஐந்து முகத்தழல் பகுதி குறித்து நண்பர் சிவராமன் பேசினார், அதன்பிறகு கூடுகை நண்பர்கள் அனைவரும் அப்பகுதி மீதான தங்கள் பார்வையை முன்வைத்து உரையாடினர்.  

-- 
WITH REGARDS,
L.S.THAMARAI KANNAN
.

புதுவை வெண்முரசு 70 வது கூடுகை நிகழ்வின் சில தருணங்கள்

 









திங்கள், 22 ஏப்ரல், 2024

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன்

புதுவை 1

தேதி 21.04.2024


நண்பர்களுக்கு வணக்கம்


புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். வழமை போல அனைவரின் உரையாடல்களும் மெல்ல மெல்ல தொட்டு தொட்டு கூர் கொள்வதாக இருந்தது. இம்பர்வாரியால் கம்பனை கடந்த சில மாதங்களாக அனுபவத்து வருகிறேன். ஜெ பேராசியர் ஜேசுதாசனை முன்வைத்து கம்பனை சொன்ன போதுதான் நான் தவற விட்டது எத்தகையது என்பதை இப்போது புரிந்து கொள்கிறேன் . இரண்டு விஷயங்கள் வழியாக கம்பன் விரிக்கும் காட்சியின் அழகு சொல்லில் அடங்காது. ஒன்று மந்திர ஆலோசனை காட்சியை கவி கூற்றாக வைத்த இடம். பேச இருப்பது சீதை கவர்ந்து வந்ததால் எழுந்த எதிர்வினை பற்றியது என்பதால் சிறை பிடிக்கப்பட்டு ஏவல் செய்து கொண்டிருக்கும்  வேறு உலகை சேர்ந்தவர்கள் முதலிலும் அதை தொடர்ந்து வயது முத்திராதவர்கள், பெண்கள் என தொடங்கி அறம் பற்றி எடுத்துக்கூறுபவர்கள் என்றாலும் நெருங்கிய உறவினர் தவிர பிறரை வெளியேற்றி பின்னர் கதவுக்கு அடைக்கப்பட்டு மூடிய கதவுகளுக்கு பின்னால் நிறுத்தப்பட்ட சேனை மாற்று கருத்து கொண்டோர் உடலோடு வெளியே செல்ல முடியாது என்கிற சூழலை உருவாகிய பின்னர் சிறு ஜீவராசிகளும் அஞ்சும் அந்த காட்சி கொண்டு எந்த மாதிரியான மந்திராலோசனை நிகழ இருக்கிறது என சொல்லி விடுகிறார்.  





அனுமன் நுழைவால் உருவான அலரால் தனக்கும் தன் மீது மக்கள் கொண்ட அதிருப்தியை அறிந்து கொள்ள அதே சமயம் தனது முடிவில் மாற்றமில்லை என்பதை வெளிப்படுத்தவும் அவன்  கூடுகையை அழைக்கிறான். அதற்கு முன் பிரம்மன் மூலமாக மயனை கொண்டு தீக்கிரையான நகரை சீரமைக்கிறான். இது இன்றும் உலக சர்வாதிகாரிகள் காட்டும் ஜனநாயக பாவலா


இராவணின் வழமை படி கூடுகை ஒரு நாடகம் போல நிகழாத் துவங்குகிறது   இரண்டு. அதை துவங்குபவன் பற்றிய கவியின் சிறுசொல்சூழ்ச்சிநிறைந்தவன் என பிரகஸ்தன் அறிமுகமாகும் சூழல் . இங்கு சூழ்ச்சி என்றால் வஞ்சம் என தற்கால பொருளில் எடுக்க வேண்டாம் என நினைக்கிறேன் . இங்கு அரசு சூழ்த்தலை சொல்லுகிறார் . இது போன்ற கூடுகையின் பேசு பொருள் மற்றும் அதை வெளிப்படுத்தும் முறை அதை செய்யும் நபர் மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்படுவது அரசு சூழ்தல் . முன்பே நன்கு திட்டமிட்டது என்பதை சுட்டும் சொல்லாக பிரகஸ்தனை கம்பன் அறிமுகப் படுத்தும் அந்த சொல்


இராவணன் தனக்கு எதிராக நினைப்பவர்களின் கருத்தை அறிந்து கொள்ள தன்னை தாக்கும் துணிவை வரவழைக்க தனக்கு மிக நெருக்கமான பிரகஸ்தனை தன்னை எதிர்த்து பேச வைத்து சபையை ஊக்க அவனை முதலில் களம் இறக்குகிறான் . இராவணன் கொடுக்கும் இடத்தால் அவனை நேரடியாக தாக்கும் துணிவை கொள்கிறான் . மந்த்ராலோசனை அரசு சூழ்தல் முறை அதுவே . இன்றுவரை அது அணைத்து கூட்டத்திலும் நிகழ்வதை சற்று கூர்ந்து பார்த்தல் அறிந்து கொள்ளலாம். பிரகஸ்தன் இராவணன் வைத்த பொறி அதில் சிக்குபவர்கள் பின்னர் பலியாவார்கள் . சூழ்ச்சி அறிந்தோர் அந்த அலையால் கொண்டு செல்லப் படாதவர்களாக இருந்து விடுவார்கள்


சபையில் பேசும் யாரும் சீதையை குறித்து மிக கவனமாக தவிர்த்து விடுவதை பார்க்க முடிகிறது. இன்னும் வரும் நாட்களில் இந்த நாடகம் இன்னும் கூர் கொள்ளும்



நன்றி 

கிருபாநிதி அரிகிருஷ்ணன்


புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 73 அழைப்பிதழ்