https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 29 நவம்பர், 2022

அடையாளமாதல் * அமரவியலாத பதவி *

 


ஶ்ரீ:



பதிவு : 650  / 840 / தேதி 29 நவம்பர்  2022



* அமரவியலாத பதவி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 46 .




 

முதலவரின் தனிச் செயலாளராக வில்லங்கம் பொறுப்பிற்கு வருவது பிற எவரையும் விட சண்முகத்திற்கே மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதை கடந்து அவரை வேண்டாம் என நினைக்க சண்முகத்திற்கு பல முக்கிய காரணம் இருந்தது. அது நிர்வாக ரீதியிலான சிக்கல். முதல்வரின் செயலாளராக அவர் அமராமல் போகும் வாயப்புப் பற்றி ஆரம்பத்தில் எனக்கு எந்த சிந்தனையும் இல்லை. காரணம் அவர் விலக்கி வைக்கப்பட கூடும் என நான் ஊகித்திருக்கவில்லை. காரணம் சண்முகம் தன்மனநிலை சார்ந்த முடிவுகளை அதற்கு உகக்கும் ஒற்றை காரணத்திற்காக செய்வதில்லை. பொது நிகழ்வில் தன் தனிப்பட்ட விருப்பத்தை முன் வைப்பதில் பெரிய தயக்கம் கொண்டவர். நானும் வில்லங்கமும் அந்த வார இறுதியில் நடைபெற இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியைற்பு நிகழ்விற்கு நாள் குறித்து பின்னர் துணைநிலை ஆளுனர் மாளிகையில் முன் தோட்டத்தில் மேடை அமைக்கும் இடம் தேர்வு செய்ய ஆளுனர் மளாகைக்எஉ சென்ற போது அங்கு மொத்த அமைச்சரவையும் பதவியேற்க இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆளுனர் மாளிகையுள்ளே நிகழ்த்த இடம் போதாது என்பதால் வெளியே நடத்த இடம் ஒருங்கி இருந்தார்கள். சுமார் 1500 பேருக்கு மேல் கலந்து கொள்வார்கள் என கணக்கிட்டிருந்தோம். சட்டசபையில் இருந்து எங்களை தொடர்பு கொண்டு அமைச்சர்களின் அறை சாவிகளை பெற்று போகச் சொன்னார்கள். சாவிகளைப் பெற சட்டமன்றம் செல்லும் போது பழைய நினைவுகள் எழுந்தன. 1994ல் அன்றைய முதல்வர் வைத்திலிங்கம் பாலனுக்கு சாதகமாக இளைஞர் காங்கிரஸை பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் கலைக்க சிபாரிசு செய்த போது எழுந்த மன உளைச்சலை இப்போது நினைவு கூர்கிறேன். பிரச்சனை முதல்வர் தலையிட்டு சமாதானம் அவரது அலுவலகத்தில் நிகழ்ந்தது.பொருந்தாத ஒப்பந்தத்திற்கு பிறகு மிகுந்த மனக் கொந்தளிப்பில் அவரது அறையைவிட்டு வெளிவந்தபோது எழுந்த பெரும் நிலையழிவையின் அடிப்படையில் இனி எனக்கான உரிய இடம் அமையாமல் சட்டமன்றத்தினுள் நுழைவதில்லை என்கிற வெஞ்சின் எடுத்திருந்தேன். ஐந்தாண்டுகள் சட்டமன்றத்தினுள் நுழையவேயில்லை. அந்த வெஞ்சினம் ஒரு வேடிக்கை போல

அதற்கு என்னிடம் எந்த அடிப்படை பலமோ எதிர்காலம் குறித்த தெளிவான திட்டமோ இல்லை அன்று அது ஒரு ஆற்றாமை மட்டுமே. அனைவராலும் கைவிடப்படப்படும் ஒரு சூழலில் நிராதரவாக விடப்பட்டவனின் குமுறல்இன்று இதோ சட்டமன்ற செயலாளரால் அழைக்கப்பட்டு நான் அந்த அறை சாவிகளை வாங்க அந்த சட்டமன்றத்தினுள் நுழைகிறேன். காலம் அதன் கனிவுவுறுதல் குறித்த  இனம்புரியாத அந்த எழுச்சியை வாழ்கையில் பெரும் நம்பிக்கையை கனவு போல உருவாக்கிய நிகழ்வு இது. ஆழ்மனதின் இடைவிடாத இறைஞ்சல் தெய்வங்களால் கேட்கப்படுகின்றது போலும் அது ஒரு காலத்தில் அதற்கு பதில் சொல்லுகிறதுஅதை கேட்டும் இடத்தில் நம்மை தொடர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நமக்கு நாமே விதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பல சந்தர்பங்களில் எனது கனவுகள் அப்படியே நிகழ்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் காலம் அல்லது எனது மனத்தால் நான் அங்கிருந்து வெளியேறியிருப்பேன் . ஆனால் நான் நினைத்தது அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. அது ஒருவகையில் மனநிறைவை அளிக்கிறது


அமைச்சரவை பதவியேற்ற மறுநாள் சட்டமன்றத்திற்குள்  நுழைந்த போது வில்லங்கம் அங்கு இல்லாமையை அறிந்து கொண்டேன். தனி செயலாளராக காரைக்கால் நெடுங்காட்டைச்  சேர்ந்து பன்ணீர்செல்வம் நியமிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிய்தது . அது ஒரு தீயூழ் என நினைத்தேன இறுதியில் அதுவே நிகழ்ந்தது மாறனிடம் தொடர்பு கொண்டு பேசிஎன்ன நடக்கிறது என கேட்ட போதுசற்றுப் பதட்டமடைந்தான் நேரில் வந்து சொல்லுவதாக் கூறினான். நேரில் சந்தித்த போது என்னிடம் மாறன் வில்லங்கம் பற்றி எதிர்மறையாக சொன்ன அனைத்து விஷயங்களும் மறுக்க முடியாத நிஜம். எனக்கு அவன் சொன்ன விஷயங்கள் எனது நிலைப்பாடும் அவனக்கு மிக அனுக்கமானது. ஆனால் அரசியலில் அதிகாரப் பதவிக்கு திறமை முதன்மைத் தகுதி அதை விருப்பு வெறுப்பினால் முடிவு செய்வதில்லை. முதல்வராக வந்திருக்கும் சண்முகத்தின் வயது மற்றும் அரசு நிர்வாகத்தில் அவருக்கு இருந்த நீண்ட இடைவெளி அரசு நிர்வகத்தில் சமகால யுக்தி அதில் உள்ள இளைய அதிகாரிகளின் அரசிலுக்கு ஈடு கொடுப்பது போன்றவை உருவக்கும் சிக்கலை நான் மாறனுக்கு எவ்வளவு எடுத்துக் கூறுயும் அதை அவன் ஏற்பதாக இல்லை. தனது செயல்பாடுகளை வில்லங்கம் முடக்கிவிடுவார் என்கிற ஒற்றைபடை சிந்தனையால் அஞ்சினான். இந்த விஷயத்தில் காரைக்கால் நெடுங்காடு முருகையன் மாறன் கரூர் பாஸ்கர் என மூவரும் ஒரே நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை துவங்க்கி வைத்தது நிச்சயமாக மாறனாக இருக்க வேண்டும். முருகையன் மாறனைவிட வில்லங்கத்தின் மீது கடும் குரோதம் கொண்டவர் ஆனால் சண்முகத்திடம் பேசும் ஆற்றலற்றவர். மாறன் அதை தலைவரிடம் நேரடியாக சொல்வதை தவிற்து கரூர் பாஸ்கரை பேச வைத்திருக்க வேண்டும். கரூர் பாஸ்கர் இதுபற்றி பேசி சண்முகத்தின் மனதில் அந்த மாற்றத்தை கொண்டுவந்திருந்தார் . மாறன் மற்றும் முருகையான் அதிற்கு பின்னால் இருப்பது மிக எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதுஅரசு அதிகாரத்தை தன்னை மிஞ்சி வில்லங்கம் செல்லக்கூடும் என்பது குறித்த சண்முகம் முன்னமே கவலை கொண்டிருந்தார் அவருக்கு முக்கியத்துவமில்லாத பதவி கூட கொடுக்க முடியாது என்பது அடிப்படை.   


1996 ஆட்சி மாற்றத்தில் வில்லங்கத்தின் பங்கு இருந்ததை அறிந்த திமுக முதல்வர் ஜானகிராமன் கோபம் கொண்டிருந்தார். வில்லங்கத்தை மாஹேவிற்கு மாற்றம் செய்து அவர்மீது துறை ரீதியான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடத்த நிர்பந்து அங்கேயே அவர் கணக்கை முடிப்பதாக திட்டம். அவர் தனது அரசு வேலை மூலம் கிடைக்க வேண்டிய அத்தனை பலன்களையும் கிடைக்கவிடாமல் செய்யும் முயற்சிகள் துவங்கி

கொண்டிருப்பதை வில்லியங்கம் தனது அரசுத்துறை நண்பர் மூலம் அறிந்து கொண்டார் . மாஹிக்கு இடமாற்றம் செய்தபோது அமைதியாக அங்கு சென்று ஓரிரு மாதங்களில் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்தார். அரசு அவரை அவ்வளவு லேசில் விடுவாத இல்லை மிக நீண்ட அரசின் இழுபறிக்கு பின்னர்  வேலையில் இருந்து விலக அனுமதித்தது அந்த அரசு. சண்முகம் அவர் அரசு பதவியில் இருந்து விலகியதை காரணம் சொல்லி அவருக்கு செயலாளர் கொடுப்பதற்கில்லை என சொல்லி அனைவரையும் திகைக்க வைத்தார்.


செவ்வாய், 22 நவம்பர், 2022

அடையாளமாதல் * மாறாவிதி *


ஶ்ரீ:



பதிவு : 649  / 839 / தேதி 22 நவம்பர்  2022



* மாறாவிதி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 45 .




அரசியலின் வெற்றி என எதை என் வாழ்வில் வரையறை செய்கிறேன்? நிலையில்லாத மக்கள் ஆதரவை நேரடியாக பெரும் ஒருவரை கொஞ்சமேனும் தங்களை அவர்களுடன் பொருத்திக் கொள்ள முடிபவரை அரசியலில் வென்றவராக பார்க்க முடிகிறது. அது கனவும் கருணையையும் கொண்டதன் அடிபடையாக உருவாவது. அரசியலின் உயர் பதவி விரும்பம் கொண்டவர்கள் கனவை மையமாக வைத்து அதை நோக்கி நகர்பவர்களாக அமைப்பின் பலத்துடன் அதிகாரத்தில் வந்தமரும் போது தன்னுடன் தனது கனவை புரிந்து கொண்டவர்களின் நிரை சூழ அது நிகழ்ந்தால்  கொஞ்சமேனும் அந்த பதவிகளை அலங்கரிக்கிறார்கள். அவர்களின் முதன்மைச் சவால் அடங்க மறுக்கும் அரசு அதிகாரிகள். அவை யூனியன் பிரதேசங்களில் தவிற்க இயலாதது அதன் மேல அமர்ந்து பயணம் செய்ய மக்களாதரவு என்கிற சேனம் தேவையாகிறது. ஆனால் இங்கு ஒருவர் அரசாங்க உயர் பதிவியில் சென்று சேர்வது ஒரு தற்செயல் போல நிகழ வைக்கிறார்கள். அப்படியானால் கண்ணன் அதை வாழ்நாளெல்லாம் முயற்சித்தவர். அவருடன் பயணித்த அரசியலை மையமாக கொண்ட அனைவரும் விலகியது கண்ணன் முதல் முறையா அமைச்சரான ஒரு வருடத்திற்குள். அதன் பின்னர் அவரை சார்ந்து தங்களை வளர்த்துக்கொள்ள விழைந்த சிறு கூட்டத்தால் அவர் சென்றடைந்த இருள் பிறருக்கு அதை போல ஒன்றை முயற்சிக்க தடையாக இருக்கிறதா? 1991 துவங்கி வைத்திலிங்கத்தால் ஐந்தாண்டு நீடித்த ஆட்சியை கொடுக்க முடிந்தும் அது அவருக்கு வெற்றிகரமான அரசியல் பாதையை உருவாக்கிக் கொடுக்கவில்லை. அரசியலின் வெற்றி என அவர் வேறெதையாவது கருதியிருக்கலாம் ஆனால் பதவியில் அமர்ந்திருப்பது மட்டுமே வெற்றி என கணக்கிட்டிருந்தார் என்றால் அது பரிதாபகரமானது. அவர்கள் பலவித நிர்பந்தங்களுக்கு உள்ளாகி பச்சை மையில் கையெழுத்திடும் அரசாங்க அதிகாரிகளை பிரதி செய்பவர்களாக தங்களை நிறுத்திக் கொள்கிறார்கள். போதாமையை ஒரு தகுதியாக முன்வைத்து பிறரின் கைகளில் காயாக தங்களை இருத்திக் கொள்பவர்கள் உயர் பதவிகளில் வந்தமரும் போது வேடிக்கையானவர்களாக தோன்றுகிறார்கள்



ஒரு பதவியில் வந்தமர்பவர்கள் அதை தங்களுக்கான மரியாதையாக,பிறருக்கு அருளப்படாத ஒன்று தனக்கென கனிந்திருப்பதாக தனது ஜாதகத்தில் குறிப்பிட பட்டிருப்பது நடந்துவிட்டதாக, மேலும் சாமியாரை நாடி அதை நீடித்திருக்க செய்ய முயற்சிக்கிறார்கள் . அதை ஊழ் என வகுத்துக் கொண்டு அனுபவதித்து பின் விலக மனமில்லாமல் அதில் ஒட்டிக்கொண்டிருக்க எல்லா சமரசங்களுக்கும் தயாராகி கை நீட்டி முரட்டுக் கடிபடும் இடம் ஒன்றையே தங்கள் இறுதிக் காலத்தில் சென்றடைகிறார்கள். கட்சி ரீதியில் அவர் சென்று அடைந்த இடம் என ஒன்றில்லை. அது ஒரு பதவி யார் அங்கு வந்திருந்தாரும் அதைச் செய்திருப்பார்கள் என்கிற எண்ணமே அவர்களுக்கான தனியாளுமை உருவாகத் தடையாக இருப்பது. அதிகாரத்திற்கு வரும் ஒருவர் அதை அடைந்த பிறகு தேங்கி விடுகிறார்கள். தங்களை சுற்றி படியும்போற்றி பாடும்குழுக்களை அவர்களே ஊக்குவிக்கிறார்கள். அனைத்திலும் வென்றாதாக தங்களிடம் சதா சொல்லிக் கொண்டிருக்க அவை அவர்களுக்கு தேவையாகிறது. அந்த குழு பதவி காலம் முடிந்து பறந்து விடுகிறது. பதவியில் இருந்து இறங்கிய ஒருவர் பின்னர் அவர் பங்கு பெறும் அனைத்து நிகழ்விலும் மெல்லிய அவமதிப்பை பெறுகிறார்கள் குமுறுகிறார்கள் அனைவரின் மீதும் கசப்படைகிறார்கள். அங்கிருந்து தங்கள் இருளை தேர்ந்தெடுக்கிறார்கள். அதுவே அவர்கள் தங்கள் பதவிகாலத்தில் இருந்து திரட்டிக் கொண்டது. இவர்களில் இருந்து வேறுபட்டவராக அமைப்பின் மனிதராக தன்னை வகுத்துக் கொண்டவர் சண்முகம். ஆனால் முதல்வராக ஏறியமர்ந்த இரண்டொரு நாட்களில் அவர் சென்று சேர்ந்த அந்த மோசமான இடம் திகைக்க வைத்தது. ஒவ்வொரு முதல்வரும் அந்த அறையை விட்டு வெளியேறும் போது அவர்கள் அதுநாள்வரை அணிந்திருந்ததை சட்டையை கழற்றி மாட்டிவிட்டு சென்றதை புதிதாக யார் வந்தாலும் அதையே மீண்டும் அணிகிறார்கள் போலும்.


நான் யேனாமில் வந்து தங்கியிருந்த போது கரூர் பாஸ்கரனிடம் புதுவையில் சொல்லாமல்  விட்டதை மீளவும் சொல்லும் சூழல் உருவானது. என் தரப்பை இன்னும் தீவிரமாக வைத்து அன்று இனி அதிலிருந்து யாரும் மீண்டு வெளியே வர இயலாது என்றேன். முதலில் சொன்னவற்றிற்கு அவர் முதல்வரின் செயலாளர் நியமனம் குறித்த அரசாங்க அலுவல் கோப்பு சென்றுவிட்ட நிலையில் அதை மாற்றுவது இயலாது என எனக்குத் தெரிந்தாலும் அடுத்தடுத்த பல பொறுப்பிற்கான தனி செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கும் சூழலில் அதற்குள் வில்லங்கத்தை கொண்டுவர முடியும் என நம்பினேன் இனி யார் வந்தாலும் நிகழ்வதை தவிற்க இயலாது. நான் மிக நீண்ட அந்த பேச்சின் இறுதியில்வில்லங்கத்தின்பதவி குறித்து ஒன்றும் சொல்லவில்லை என்பதால் கரூர் பாஸ்கரன் குழம்பிப் போனார். அடுத்து என்ன நிகழும் என கேட்ட போது அது அவரின் கடைசி கால அரசியலாக இருக்கும் என்றேன். என் மீது கடும் கோபம் கொண்டார். அதன் பின்னர் அவரிடம் நான் பேசவில்லை. நான் அன்று அவரிடம் சொன்ன ஒவ்வொன்றும் நடந்து ஒரு வருடம் கழித்து சண்முகம் அவமானகராமாக அரசில் இருந்து வெளியேறினார்


வில்லங்கத்தின் மீது தலைவர், வைத்திலிங்கம், நாராயணசாமி போன்ற கட்சி முக்கிய தலைவர்கள் முதல் சாதாரன் தொண்டன் வரை கொண்டிருந்த அதே கசப்பும் நிராகரிப்பும் எனக்கும் இருந்தது,ஆனால் அதை கடந்து கட்சி ஆட்சி என இரண்டையும் மிகச்சரியாக இணைக்கக்கூடிய இடத்தில் வில்லங்கம் இருப்பதை என்னால் மட்டுமின்றி புதுவை நிர்வாக அரசியல் அறிந்த எவரும் மறுக்க முடியாது. இங்கு ஏற்படும் உடனடி சிக்கல்களை எரிச்சல்களை விட அதன் பிறிதொரு பக்கத்தில் உருவாகும் கட்சி நிர்வாக ஒழுங்கும் அதன் செயல்பாடுகளும் மிக முக்கியம் என நான் கருதினேன். பல தலைவர்கள் முதல் தொண்டர்வரையிலான ஒரு நீண்ட நிரையில் ஒவ்வொரு தனி நபரின் பின்புலம் தேவை சிக்கல் போன்றவை குறித்த தகவல்கள் அவரின் ஆகப் பெரும் பலம். யாருக்கு யாரை பிணை மற்றும் எதிரெடை வைக்கலாம் என்கிற நுண்னிய தகவல்கள் அறிந்ததன் காரணமாக உருவாகும் ஒருவித அங்கத பேச்சும் உடல் மொழியும் கேட்பவரை கேட்ட மாத்திரத்தில் பற்றி எரியச் செய்வது.அவர் அந்த பதவியில் அமரந்தால் பிறகு என்னென்ன பாதிப்புகள் நிகழுமோ அது எனக்கும் நடக்கும். ஆனால் அவரிடம் கருத்தியல ஈதியில் சிக்கல்களை மிக தீவிரமாக முன்வைக்க முடியும். அந்த சூழலில் இந்த அங்கத மனநிலை காணாமலாகி தீர்வு மட்டுமேயான ஒருவர் எழும் கணம் அனைத்து சிக்கல்களையும் சரி செய்ய இயலும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும்