https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 26 ஜூலை, 2019

அடையாளமாதல் - 454 *நம்பிக்கையின் மேல் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 454

பதிவு : 454 / 632 / தேதி 26 ஜூலை  2019

*நம்பிக்கையின் மேல் 


எழுச்சியின் விலை ” - 56
முரண்களின் தொகை -03 .




ஶ்ரீகாந்த் புதுவையில் முதல் முறை பணியில் இருந்த போது அவர் எனக்கு முகப்பழக்கம் மட்டுமே , பின்னர் அவர் தில்லியில் உள்துறையின்   உளவுப்பிரிவிற்கு  மாற்றலாகி அங்கு பணியாற்றிய போதுதான் அவருடான எனது நட்பு மிகவும்  அனுக்கமானது . புதுவையிலிருந்து மாற்றலாகி தில்லி உள்துறையின் சர்வதேச நுண்பிரிவுத் துறையில் பணியாற்றிய காலத்தில் இந்தியா முழுவதுமான அதன் செயல்பாடுகள் குறித்த அறிமுகத்தை நான் பெற்றது அவர் மூலமாகத்தான். வழக்காமான காவல்துறையில் பணியாற்றுபவர்களிடம் காணும் கரடுபாய்ந்த முகமற்று மிக இளையவராக மென்மையான முகமும் பேச்சும் கொண்டவர் .சொல்லில் நளினம் கொண்டவராக , கருத்துகளை மிக ஆழமாக முன்னிறுத்துபவராக .தெளிவான சிந்தனை உள்ள மனிதராக அவரை அறிந்திருக்கிறேன் .

சர்வ தேச அரசியலின் நுண்மையை அவர் சொன்ன போது அதன் யாதார்த்தத்தால் உலுக்கப்பட்டேன் .அங்கிருந்து இந்திய அரசியலின் போக்கை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது .அதுவரை நான்றியாத புதிய பாதை அது .அந்தப் பாதையால் என்னை முற்றாக களைந்து மீளவும் வகுத்துக் கொண்டேன்.மனதை அழுத்தி வலியை உருவாக்கும் அரசியல் நிகழ்வுகளால் , நான் பின்னாளில் கசப்படையாது இருந்ததற்கு  அங்கிருந்து நான் பெற்றப் புரிதல் அடைப்படையாக இருந்தது என காலம் தாழ்த்தியே அறிந்து கொண்டேன் .அந்தப் புரிதல் அளப்பறியது.

சர்வதேச அரசியல் சற்றும்  இரக்கமற்றது அதன் நீட்சியே இந்திய மற்றும் மாநில அரசியலின் போக்கு  . தன்னை நிலை கொள்ளச்செய்ய மனித மனம் செல்லும் உளவியல்  எல்லைகளை யாராலும்  அறிதியிட்டு விட இயலாது . அதன் உண்மைகள் முகத்தில் அடித்தால் போல வந்து அறைவது. அதன் எல்லைக்குள் அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களால் மட்டுமே அது ஏற்கப்படுவது .அங்கிருந்து விலகுகையில் அவர்களையும் அது விட்டு வைப்பதில்லை என்பது நாம் அறிந்து கொள்ள இயலாதது .

 சர்வதேச அரசியலில் இந்திய நுண்ணறிவு பிரிவுகளில்  ஒன்று இலங்கை குறித்து மிக தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம் .அதன் செயல்பாடுகளும், கருதுகோளும் , எனக்கு இந்திய அரசியலின் போக்கை அதன் பிற எல்லாவகை தொடுகைகளை எனக்கு அறிமுகப்படுத்தி இருந்தன. தில்லியையும் அதன் தேசிய அரசியல் செயல்பாடுகள் குறித்து பிறிதொரு கோணத்தில் பார்க்கும் பார்வையையும் , வழியை அங்கிருந்தே அடைந்தேன்.

கால மடிப்புகள் நீக்கப்பட்டு நிகழ்ந்து முடிந்த நிகழ்வுகளினால், கடந்து சென்ற மற்றும் இனி நிகழ இருப்பதை குறித்த  அனைத்து நிஜங்களையும் அருகில் இருந்து பார்க்க வைப்பது. அது ஒரு தனித்த உலகம் .அது ஒன்றின் மீது ஒன்று  கொள்ளும் நம்பிக்கையின்மையே அதன் பிரதானமாக மூலதனமாக இருந்தது.அவை வாழ்வியல் நம்பிக்கை குறித்த ஒவ்வாமையை கொடுக்க வல்லது.சாமாண்ய மனிதர்களின் உலகிலிருந்து முற்றாக வேறு பட்டிருந்தது.அது சொல்லும் செய்திகளை , தகவல்களை  அறிந்து கொள்ள நேரும்  எவரும் பின் ஒரு போதும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முடியாது

அது மனதை பேதலிக்க செய்யும் பிறிதொரு நரகம் .போலியும் பாசங்குகளும் கழற்றப்பட்டு உண்மை மட்டுமே என முன்வைக்கப்பட்டு உலவும் உலகம் . நாமது சூழலும் அதை ஒட்டி நாம் உருவாக்கி வைத்து புரிந்து கொண்ட நமது வாழ்கையும் , வாழும் நிலப்பகுதியும் அதன் சூழல் என அத்துனையும் ஒரு பாவனை மட்டுமே ,என்கிற உண்மையை முகத்தில் வந்து அறையும் போது மனதை சமநிலையில் வைக்க இயலாதவர்கள் நிலைகுலைந்த போவார்கள் . நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற எண்ணம் முழுவதையும் காணாமலாக்கும் பிறிதொரு நிஜம் அங்கு பேருரு கொண்டு எழும் .அதை அறிந்து கொள்ளாதிருப்பதே ஒருவரின் நல்லூழ் என நினைக்கிறேன்.அதில் உழலும் எவருக்கும் நாளையும்  உண்டு”  என்கிற நம்பிக்கைத் தரும் நல்விடியல் இல்லை என்பதே அதன் அச்சமூட்டும்  உச்சப்பகுதி.

அரசு நிர்வாக முறை பற்றி பெரிய புரிதலை எனக்கு கொடுத்தவர் என்பதால் ஶ்ரீகாந்த் எப்போதும் எனது மரியாதைக்குரியவராக இருந்தார்.அவர் சணமுகத்திற்கு மிக நெருக்கமானவர் .அன்று பேசு பொருளாக சண்முகத்தின் அரசியல் வியூகங்கள் குறித்த எனது விமர்சனங்களாக அவை இருந்தன .என்னைப்போலவே அவரும் சண்முகத்தை பற்றி உயரிய கருத்து கொண்டவர் . அவர் முன்னிலையில் சண்முகத்திற்கு முரணான அந்த உரையாடலை நான் நிகழ்த்த விரும்பவில்லை .அது எனக்கும் அவருக்குமான தனிப்பட்ட உரையாடலாக திடீரென எழுந்தது .அதற்கு சாட்சியாக நான் யாரையும் வைக்க விரும்பாதது பிறிதொரு முக்கிய காரணம் .

செவ்வாய், 23 ஜூலை, 2019

அடையாளமாதல் - 453 * நிர்வாகம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 453

பதிவு : 453 / 631 / தேதி 23 ஜூலை  2019

நிர்வாகம்  * 


எழுச்சியின் விலை ” - 55
முரண்களின் தொகை -03 .




காவல்துறை உயரதிகாரி ஶ்ரீகாந்த் தலைவருக்கு மிக அனுக்கமானவர் . தலைவரின் ஆதரவாளர் எனவும் சொல்லலாம் .அரசு மற்றுமல்ல அரசியல் தலைமையும் காவல்துறை நுண்பிரிவும் விலக்க முடியாத கூட்டணியைக் கொண்டது   . ஆளும்  அமைப்பின் உறுப்பினர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க மற்றும் அமைப்பை சிக்கலின்றி நிர்வகிக்க அது இன்றியமையாதது .தலைவர் அதை ஆரோக்கியமான வழிகளில் நிர்வகித்தார் என்றே நினைக்கிறேன்  .உட்கட்சி மட்டுமின்றி பிற கட்சி தலைவர்களும் சண்முகத்தை அஞ்சியதற்கு காரணம் அனைவரைப் பற்றியும் அவர் வைத்திருந்த நுண் தகவல்கள் .

சாதரான உரையாடலை விவாத எல்லைக்கு தள்ளி கொண்டு வந்தவர் தலைவர் என்றாலும் ஶ்ரீகாந்த் முன்பாக அவரிடம்  அவருடைய அனைத்து முறைமைகளை கடந்து விவாதிப்பது எனக்கு பெருமை தருவாதாக இருக்கலாம் , ஆனால் அவருக்கும் எனக்குமான உறவிற்கு அது  உகந்ததல்ல என்பதால் நான் எனது விவாதத்தை முடித்து கொண்டேன் .

ஶ்ரீகாந்த் எனக்கு தலைவர் வீட்டில் பழக்கமானார் என்றாலும் தலைவர் வீட்டில் அவரை  சந்திக்கும் போது ஒரு சொல் இல்லாது இருவரும் ஒருவரை ஒருவர் புண்ணகையுடன் கடந்து சென்று விடுவோம். அவர் எனது நல்ல அனுக்க நண்பரானது தில்லியில்தில்லியில் உள்ள புதுவை விருந்தினர் இல்லத்தில் அப்போது அவர் தங்கி இருந்தார் . தில்லி சென்றிருந்த போது இருவரும் எதிர்பாரது சந்தித்துக் கொண்டோம். அவரிடம் ஓரிரு வார்த்தை பேசியது அப்போதுதான் . பின்னர் தில்லி செல்லும் போதெல்லாம் அவருடன் மாலை நடை ஒரு அலுவல் போலானது.

பொதுவாக அரசாங்க உயர் பதவிகளில் உள்ளவர்களிடம் பழக சில காரணத்தினால் நான் மன விலக்கம் கொண்டிருந்தேன். பெரும்பாலும் அவர்கள் தங்களைப் பற்றி மிகை மதிப்பு கொண்டிருப்பார்கள், அதனாலேயே  எல்லாவிடத்திலும் புண்படுவார்கள் .அதை ஆற்றிக்கொள்ள கிடைப்பவர்களிடம் எல்லாம் தலைகணத்துடன் நடந்து கொண்டு மேலும் இழிவை சம்பாதித்துக் கொள்வார்கள் .

அதிகாரிகளின் அரசு நிர்வாகமென்பது ஒருவித அரசியலை முழுமையாகக் கொண்டது .முதல்வர்கள் மாறும் போதெல்லாம் அரசு உயரதிகாரிகள் இடமாற்றம் பெறுவார்கள் .அத்தகைய அதிகாரிகளில் செல்வாக்குள்ளவர் நிர்வாக வசதிக்காக தனக்கென ஒரு அதிகாரிகளின் நிரையை உருவாக்கிக் கொள்வார் .அந்த நிரைகளில் இடம்பெறுபவர்கள் மட்டுமே அதிகாரத்தின் அருகே சென்று அமர இயலும் . முடிவுகளை ஒருபோதும் அவர்கள் எடுப்பதில்லை என்றாலும் ,முக்கிய முடிவெடுக்கும் இடத்தில் அவர்களே திரும்ப திரும்ப நியமிக்கப்பட்டு வெகு விரைவில் பலர் கனவிலும் எண்ணாத உயரத்தில் சென்று நிலை கொள்வார்கள்

அவர்களின் விசுவாசமே தகுதி என இருக்கும் .அவர்கள் தனிப்பட்ட அடையாளமோ, திறமையோ ஏதுமின்றி , இட்டதை ஆற்றுபவர்கள் மட்டுமே. அவர்களுக்கான மதிப்பை தனது அலுவலகத்திலோ , தன்னை உருவாக்கியவர்கள் மத்தியிலோ ஒரு நாளும் பெறுவதில்லை. அது ஒருவித அடிமை அமைப்பு .யதார்தத உலகில் அவர்கள் ஒரு நாளும் பொருந்தி இருப்பதில்லை .சுய சிந்தனை அற்றவர்களாக இருப்பர் . ஒரு சிலர்  தனது துறையில் சூரர்களாக இருந்தலும் , அதை கடந்து பொது வாழ்கையில் ஏதும் அறியதவர்களகவே இருப்பர் .திரைபடம் , மலிவான நகைச்சுவைகளை கடந்து வேறு எதைப் பற்றியும் அவர்களிடம் உரையாட இயலாது .

மிகச் சிலரே ஆளுமைகளாக இருப்பதை பார்த்திருக்கிறேன் . அவர்கள் தனக்கென சிறு வட்டத்தை உருவாக்கி தனித்திருப்பார்கள் .யாருடனும் எளிதில் பழகாதவர்கள்.அரசு நிர்வாக அதிகாரிகளுக்கு இருப்பதை விட பலமடங்கு வீங்கியது காவல்துறை உயரதிகாரிகள் தங்கள் மீது கொண்டிருக்கும் தன்மதிப்பு.அவர்களிடம் மரியாதை நிமித்தமாக கூட பழக முடியது . அது யாரையும் புண்பட செய்வது என அறிந்திருக்கிறேன் .விதி விலக்கு எங்கும் உள்ளதே . ஶ்ரீகாந்த் அந்த விதிவிலக்கு ரகம்

முதல் உரையாடலின் போதே அவர் பிறரிடமிருந்து மாறுபட்டிருப்பதை  அறிய முடிந்தது .பலநுண் தகவல்களை தெரிந்து வைத்திருப்பதுடன் அவற்றை பற்றிய தனிப்பட்ட கருத்தும் கொண்டவர் .நல்ல வாசிப்பு பழக்கமுள்ளவர் .அதன் பிறகு தில்லிக்கு செல்லும் போதெல்லாம் நானும் அவருமாக மணிகணக்கில் பல விஷயங்களை குறித்து உரையாடி இருக்கிறேன்

பொதுவான தளத்தில் அவை இருக்கும் .அவசியமிருப்பின் புதுவை மற்றும் அகில இந்திய கங்கிரஸ் அரசியலை குறித்ததாகவும் அவை இருக்கும்  .அவைகளுக்கு இடையே தான் கற்ற விஷயங்களை மேற்கோளிட்டு பேசுதல் பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள இயன்றது . புதுவை அரசியல் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் அவருக்கிருந்தது. தொடர்ச்சியாக அதை என்னிடம் விவாதித்ததில் . எனது கருத்துகளை ஏற்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். இருவரும் எவ்வித மனச்சாய்வும் இன்றி உரையாடியதற்கு நல்ல நட்பாக இருந்ததற்கு அது முழு காரணமாக இருந்திருக்கலாம்.