https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 14 செப்டம்பர், 2026

மணிவிழா -89 * சாத்தியமும் எதிர்பார்ப்பும்

 





ஶ்ரீ:



மணிவிழா - 89


14-09-2026


* சாத்தியமும் எதிர்பார்ப்பும் *





அன்று கைசிக ஏகாதசி திருக்கோவலூர் ஜீயர் பிரம்மரதம் ஏறும் நிகழ்வு. திருகோவிலூர் உலகளந்தான் மூலவர் சன்னதிக்கு எதிரில் விடியற்காலை முதற் புலரியில் கைசிக புராணம் வாசித்து பின்னர் பிரம்மரதம் ஏறி மேலுலகத்திற்கு செல்வதாக குறியீட்டு நிகழ்வு ஒரு நாடகம் போல ஒவ்வொரு வருடமும் நடத்தி காண்பிக்கப்படும். ஸ்வாமி வீதி புறப்பாடு வீடு வீடுக்கு தேங்ககாய் பழம் சூடம் ஏற்றி காண்பிக்க அந்த புறப்பாடு மாட வீதியில் சென்று பின்னர் மடத்திற்கு திரும்பும் . ஜீயர் முதல்நாள் ஏகாதசி விரதம் இருந்து பின் மறுநாள் நடக்கும் நிகழ்வு என்பதால் மறுநாள் காலை உணவிற்கு பிறகு சற்று ஓய்வாக இருப்பார். என்றுமில்லாது அன்று அவரை சுற்றி கூட்டம் அலையடித்தபடி இருந்தது . இவர்களுக்கு என்ன வேண்டும் அந்த பிரமரத புஷ்ப பிராசதம் அவர்கள் வாழ்வில் என்ன மாற்றத்தை கொண்டு வரும். அப்படியே கொண்டுவந்தாலும் அதை நிதானித்து உள் வாங்கும் மனநிலை இவர்களுக்கு இருக்கிறதா. அனைவரும் பிறிதெவரோ செய்யும் பொருளற்ற ஒன்றை பித்தேறி தாங்களும் முயற்சிக்கிறார்கள். இது அலையலையாக பெருகி நிகழ்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்எனக்கான அழைப்பு வரும்வரை மடத்தில் காத்திருப்பது எனது வழக்கம். நான் அன்று அவரிடம் பேச வேண்டியவற்றை மனதில் முழுமையாக கவலையுடன் தொகுத்துக் கொண்டிருந்தேன்


விழாகுழுவின் உயர் மட்ட உத்தேசிக்கும் தென்னிந்திய குழு நிர்வாகிகள் பட்டியலை இறுதி செய்து அவரிடம் சொல்ல வேண்டும். அதில் சில நடைமுறை சிக்கல் உள்ளது. அதன் பின்னால் உள்ள அரசியல் இன்னும் வலுவானது என்பதால் மிக மிக கவனமாக கையாள நினைத்தேன். உயர் மட்ட குழுவில் உள்ள அனைவரும் மடாதிபதிகள் மற்றும் பெரும் ஆன்மீக ஆளுமைகள் அவர்களை நிர்வாகிகளாக நியமித்து பின் அதனுள் செயல்படுவது என்பது நெருப்பில் நடப்பது போன்ற சாகசம். அவர்கள் அனைவரும் பிராம்னர்கள் நான் ஒருவன மட்டும் இதர வகுப்பை சேர்ந்தவன் முக்கிய நிர்வாகிகளான தலைவராக திருப்பதி சின்ன ஜியரும் செயலாளராக திருக்போவிலூர் ஜீயரும் இடம்பெறுவார்கள் என்பது அடிப்படை கணக்கு. இதில் வானமாமலை மற்றும் ஶ்ரீரங்கத்து ஜீயர்கள் அடுத்த படி நிலைகளிலும் பிற ஜீயர்கள் அதற்கு அடுத்த கட்ட இடத்தில் வேளுக்குடி கிருஷ்ணன் உள்ளிட்டவர்களை நான் அந்த பட்டியலை வரைவு செய்திருந்தேன்


உத்தேசித்திருந்த தென்னிந்திய விழாக்குழு நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் பொறுப்பு குறித்து விளக்க வேண்டிய கடமை என்னுடையது என்பதால் மிகுந்த நிலையழிதலில் இருந்தேன். அன்று காலை திருக்கோவிலூர் ஜீயரிடம் உத்தரவு பெற்று மதியம் ஶ்ரீரங்கத்து ஜீயரை சந்திக்க வேண்டும் என்பது திட்டம் அன்றென பார்த்து பிரம்ரத உற்சவத்தில் கூட்டம் கட்டுங்கடங்காமல் இருந்தது. சாரை சாரையாக பலர் ஜீயரை வந்து வணங்கி சென்று கொண்டிருந்தனர். மனதில் முழுமையான திட்டம் உருவான பிறகு அதை தொடர்ந்து மனதில் தங்க வைத்துக் கொண்டிருப்பது பெரும் பாரமாக உணரப்பட்டு பெரும் பதட்டத்தை உருவாக்கி இருந்தது. இந்த கூட்டத்தில் நினைத்ததை நினைத்தபடி பேச நேரம் கிடைக்குமா. பேசுவது மிக நுட்பமான அரசியல் நகர்வு. அவரது கவனம் என் மீது இல்லாமலானால் முழுவதுமாக அவரிடம் சொன்ன நிம்மதியை இழந்து விடுவேன்.


அவற்றை நடைமுறை படுத்த நினக்கும் சூழலில் அவரது ஆற்றுப்படுத்துதல் எனக்கு மிக முக்கியமானது. அவரிடம் விரிவாக பேசி இயலாமலானால் நான் அதற்கான மாற்று வழிகளை பற்றிய சிந்தனையில் அதை ஜீயரின் மூத்த குமாரன் கோலாகலனிடம் பேசிய போது தனக்கு அந்த நிர்வாக சிக்கல் விளங்கவில்லை எதற்கும் தம்பி மணிவண்ணனிடம் பேசுங்கள் என்றார். எனக்கு அவரிடம் பேச பெரும் மனத்தடை இருந்தது. அதற்கு அடிப்படை காரணம் அவரது உடல்மொழி. பிரபந்தம் மற்றும் வேதாத்யாணம் கல்வி கற்று மீண்டுள்ள சூழலில் தர்க்கம் கொடுக்கும் நிமிர்வு அவரிடம் உரையாட தடையை உருவாக்கி இருந்தது. இது எனக்கான கடைசி வாய்ப்பு. சரி பேசி பார்த்துவிடலாம் என அவரிடம் உரையாட துவங்கும் முன்பு ஆயிரமாவது ஆண்டு விழா குழு அமைப்பு அதன் செயல்பாடுகள குறித்த திட்டமிடல்களை சொல்லிக் கொண்டிருந்தேன். அதில் என்னுடைய பங்களிப்பை சொன்ன போது அதில்நான்என்கிற சொல் மிகையாக வெளிப்பட்டிருக்கலாம்.அது அவரை சீண்டி இருக்க வேண்டும்


அதை ஒருவித குறிப்பால் எனக்கு உணர்த்துவதாக பட்டது. அல்லது அது எனது ஊகமாக இருக்கலாம். வைணவத்தில் ஒரு பிரிவினரைபாவனை வைணவர்கள்என சொல்வதுண்டு எப்போதும் சாதாரன பேச்சினூடாக தங்களைஅடியேன்என அடிக்கொரு முறை விளித்து கொள்வது ஒரு பேச்சி வழக்கு அந்த சொல் அதன் உண்மையான பொருள் உணர்ந்து சொல்லப்படுவதில்லை. அதற்கான எந்த நடைமுறையும் சிந்தனையும் இல்லாது வெறும் சொல்லாக அந்த வார்த்தை சொல்லப்படுவது எனக்கு மிகுந்த மனவிலக்கத்தை அளிப்பது. நான் அந்த சொல்லை பயன்படுத்துவதில்லை. நான் மிக இயல்பாக அவரிடம் பேசியது இப்போது ஒருவித ஆணவமாக பார்க்கப்பட்டிருக்கலாம். மேலதிகமாக நான் பேச நினைத்ததை பேசும் சூழல் இல்லை என்பதால்ஜீயரை பார்த்துவிட்டு வருகிறேன்என சொல்லி அவரிடமிருந்து விலகினேன்


ஜீயர் வீட்டில் இருந்து மடம் மிக அருகில் இருப்பது. செல்லும் வழியில் என் முன் உள்ள சிக்கலின் விஸ்வரூபம் தெளியத் துவங்கியது. ஜீயரை தனிப்பட்டு சந்தித்து இது பற்றி விரிவாக உரையாடிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டேன். மடத்தில் முன்பை விட கூட்ட நெரிச்சல் மிகுந்திருந்தது. இதில் அவரை எப்படி தனியாக சந்திப்பது என புரியமல் நின்று கொண்டிருந்தேன்


நான் வீட்டிற்கு புறப்பட தயாராகிவிட்டதாக நினைத்து அருகழைத்து மதிய உணவிற்கு பின் கிளம்பலாம் என்றார். நான் அவரிடம் தென்னிந்திய விழாக் குழு நிர்வாகிகள் வரைவு பற்றி பேச நினைப்பதை சொன்னேன். மகிழ்வுடன் சொல்லு என்றார் அந்த அமளியில் நிதானமாக சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தேன். கவனம் என்மீது இல்லாமலும் நான் சொல்லியபடி செல்ல அவர் தன்னை வணங்க வந்தவர்களுக்கு ஆசிகளை அளிக்கும் இடைவெளியில் கேட்டார். பின் அது குறித்த எந்த அபிப்ராயமும் சொல்லாமல் ஶ்ரீரங்கம் சென்றுஜீயரை சந்தித்து அனைத்தையும் சொல்என்றார். தான் முன்னமே அவரை சந்திக்க வருவதை பற்றி அன்று காலை அவரிடம் சொன்னதாக கூறினார். நான் எந்த உணர்ச்சியும் இன்றி அவரை வணங்கி விடை பெற்றேன்


நான்கு வருடத்திற்கு முன்பு விழாக்குழு துவங்க இருக்கும் செய்தியையும் மாநில நிர்வாகிகள் பட்டியலையும் அவரிடம் காட்டிய போது எழுந்த முரண் மூன்று மணி நேரம் மிக விரிவாக நிகழ்ந்த விவாதம் பின் அரை மனத்துடன் அவர் அளித்த அனுமதியை இப்போது நினைவுறுகிறேன். ஆனால் நான் இன்று சொல்லப் விழையும் நிர்வாக ஏற்பாட்டு விஷயத்தில் பாதிக்கு மேல் அவர் ஒப்பப் போவதில்லை பல வித நாடகங்களுக்கு இடையே நான் அதை அவரிடம் கொடுத்து உடன் திரும்ப பெற்றுவிட வேண்டும். முற்றிலும் அவரது முடிவிற்கு விடுவதை விட ஆபத்து பிறிதில்லை. இது அவரிடம் தகவல் சொல்லுதல் மட்டுமே. அவர் முரண்பட்டாலும் அவருக்கு என் மீதுள்ள அன்பின் காரணமாக அவரை மறுத்து வந்த வேலையை முடிக்க வேண்டும். இது போல பலமுறை நடந்திருக்கிறது.


நான்கு வருடங்களுக்கு முன்பு விழாகுழு துவக்க இருப்பதையும் மிக மிக மகிழ்வாக அவர் ஏற்றதையும் அதன் செயல்பாடுகள் குறித்து நீண்ட உரையாடலுக்கு பிறகும் அவரது சந்தேகங்கள் விலகாதிருந்ததை உணர முடிந்தது. நிர்வாகிகள் பட்டியலை இறுதியாக சொன்ன போது கடுமையாக எதிர் விணையாற்றினார். அதில் நான் இணைத்திருந்த வடகலை சம்பிரதாயத்தை சேர்ந்த சில பெரும் ஆளுமைகளை குறித்த தனது கடும் கண்டனத்தை சொன்னார். “இது சரிவராது சிறுபிள்ளை விளையாட்டில்லை இது உருவாக்கும் எதிர்கால சிக்கல் உன்னை முழுமையாக முடக்கிவிடும்என்றார். அந்த பேராபத்தை நானும் மிக மிக நுட்பமாக உள்கை போல உணர்ந்திருந்தேன். அவருக்கு அதில் இடம் பெற்றிருந்த பிற ஸ்மார்த்த,ருத்ரவைணவ, சாக்த, வீரசைவ, காணபத்தியம், சௌரம் போன்ற பல முற்றும் முரண்பட்ட சம்பிரதாயத்தை சேர்ந்த முக்கிய ஆளுமைகள் இடம் மெற்றிருந்த போதும் வடகலை சம்பிரதாயத்தை சேர்த்தது பற்றி மட்டும் என்னை கண்டித்து நீண்ட நேரம் பேசினார். நான் இடையே ஒரு சொல் சொல்லாது அவர் முழுமையாக சொல்லி முடிக்கும் வரை காத்திருந்தேன்


இது போல பல முறை நடந்துள்ளது. அதிகாரத்தின் உச்சத்தில் உள்ள அனைவரின் அன்றாட நடைமுறை சிக்கல்களில் ஒன்று இது. அவர்கள் அமர்ந்திருக்கும் உயரம் பல கள ஏதார்த்தங்களை பார்க்க உதவாது. அவர்கள் எப்போதும் தங்களை சுற்றி அமைத்துக் கொண்டிருக்கும் அரண் தாண்டி வெளிவருவதில்லை. அனைத்தையும் உளபதிவுகளாக தொகுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்படுவார்கள். அது அவர்களுக்கு அரண் போல. அந்த அரண் பல பழைமையான முடிவுகளால் அறுதியிடப்படுவது. அனைத்திற்கும் ஒன்று போன்ற அனுகுமுறையை வைத்திருப்பார்கள். அது நடைமுறை உலகிற்கு அப்போல் வேறொரு காலத்தில் இருக்கும். அது உருவாக்கும் அர்த்தக் குழுப்பம் அவர்களுக்கு எதிராக நிற்பதை ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறேன்.


அதுவே இப்போதும் அவர் சொல்லி முடித்த பிறகு என் தர்பை வைத்தேன். இது வழக்கமான வைணவ மாநாடு போன்று ஒரு குறிப்பிட்ட பிறிவை சார்ந்து செயல்படாது. ராமாநுஜரும் அவரது கருத்துக்கள் அனைத்தும் அனைவருக்குமானது என அவர்களே நினைக்கிறார்கள். இதில் நாம் ஏன் அவரை குறுக்க வேண்டும். வடகலை குறித்த உங்கள் ஐயப்பாட்டை மிக மிக நுட்பமாக அறிந்திருக்கிறேன். இதில் அவர்கள் அரசியல் செய்ய ஒன்றுமில்லை அப்படி நிகழ்ந்தால் அதை நான் பார்த்துக் கொள்கிறேன். என்மீது உங்களுக்குள்ள நம்பிக்கைக்கு எதிராக நான் இதுவரை ஏதும் ஆற்றியதில்லை என நீங்கள் அறிவீர்கள். இப்போது என்பை நம்பி இதை மேற் கொண்டு நிகழ்த்த அனுமதிக்க வேண்டும் என சொன்னேன். வேண்டா வெறுப்பாக அனுமதித்தார்


வியாழன், 10 செப்டம்பர், 2026

மணிவிழா -88 * நிகழா கனவும் எதார்த்தமும்*






ஶ்ரீ:



மணிவிழா - 88


10-09-2026


* நிகழா கனவும் எதார்த்தமும் *





அனைத்தையும் கைவிடச் சொல்லும் ஒரு யதார்த்தம் நிலை கொண்ட போது அதை மீறி பயணிக்க முயன்று ஒரு புள்ளியில் மாற்று வழியில்லாமல் திணறிக் கொண்டிருந்தேன். விழா நிகழும் வாய்ப்பின்மை மெல்ல எழுந்து வந்தது. அதுவரை அலைகழித்துக் கொண்டிருந்த கனவும் முடிவிற்கு வந்ததை போல இருந்தது. திருப்பதி சின்ன ஜீயரின்மலை புராஜெக்கட்மற்றும் அவர் முன்னெடுத்து மேலக்கோட்டையில் நிகழ்ந்த ஆயிரமாவது ஆண்டு விழா துவக்கம் என அறிவிக்கப்பட்டாலும் பின் வேறெங்கும் நிகழாது போனது. வேளுக்குடி கிருஷ்ணின் திருப்புலிங்குடி கோவில் அனுபவம் அவருக்கு சொன்ன செய்திபெரும் காரியத்திலும் மனிதர்களின் சிறுமையும் பொது நோக்கின்மையும் வெளிப்பட அவர் கண்ட சுயநலமிக்க மனிதர்கள் அவரை சில காலம் செயலின்மைக்கு கொண்டடு சென்றனர்


எனக்கு அவை இரண்டும் இரண்டு கோணங்களிலும் வெவ்வேறு திசைகளிலும் இருந்தாலும் அவை ஒன்றையே சொல்ல வந்தது என தோன்றியது. பலரின் விழா முன்னெடுப்பு முயற்சிக்கான அனுபவங்களும் அதன் முடிவுகள் ஏறக்குறைய இது போன்றே இருந்தது. இவ்விழா குறித்து முன்னெடுக்கப்படும் பெரும் முயற்சியில் ஈடுபடும் ஆளுமைகளை ஏதோ ஒன்று மனம் வெறுக்க வைக்கிறது. விலகி பின்னங்கால் எடுக்க தூண்டுகிறது. அதில் பிறிதொன்று, நிகழவிருக்கும் பெரும் செயல்கள் பற்றி அதன் மையப் பெரும் பொருளின் பாராமுகமும் சில்லரை சர்சைகளால் அந்த  பெரும் நிகழ்வுகளை கை நழுவிப் போகும் போக்கும் உணரப்பட்டது.நின்று போன விழாக்களுக்கு காரணங்கள் என பல இருந்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் ஊழ் அனைவராலும் உணரப்பட்டிருக்க வேண்டும 


அவை என்ன சொல்ல வருகிறது என ஆராய யாரும் தயாரில்ரை . மாற்றம் பற்றிய ஏதோ ஒன்றை குறிப்பால் உணர்த்துகிறது. செயல்களால் அல்ல எண்ணங்களாலால் , அனுமானங்களால் சென்று தொட இயலாது பிறிதேதோ ஒன்றை அது கோருகிறது . அது காலத்தில் முன்னே எங்கோ இருந்தது. தனக்கான இடத்தை அது அங்கு உருவாக்கிக் கொண்டிருந்தது ஆனால் அதை பார்க்கும் அல்லது உணரும் ஆற்றல் இன்று இங்கு யாருக்கும் இல்லை


இங்கு அடிப்படையில் மாற்றம் தேவை என காலம் கருதுகிறது. அதுவரை சொல்லப்பட்டவைகள் என்றோ காலத்தால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது. தேவை காலத்திற்கான அடுத்த கட்ட மாற்றம். ஆனால் துரதிஷ்டவசமாக அதை பற்றிய புரிதலோ அல்லது அதை செய்யக்கூடியவர்களோ அமைப்போ என எதுவும் இன்றில்லை. என்ன காரணத்தினாலோ அவர்கள் ஒருங்கு திரளும் வாய்பும் கண்களுக்கு எட்டிய தூரம் வரை இல்லை. இருக்கும் அமைப்புகள் எதுவும் மக்கள் மீது எந்த செல்வாக்கும் செலுத்த இயலாத கையறு நிலையில் இருக்கின்றன. அனைவரும் இன்றைய தேவை குறித்த மறுபரிசீலனை பற்றிய புரிதல் உள்ளவர்களாக தெரியவி்லை. அதை எங்கு எப்படி துவங்குவது என்கிற தெளிவின்மையில் சிக்கியுள்ளார்கள். அல்லது அவர்களின் முதல் சரணாகதியே இந்த சம்பிரதாயத்தை காக்க முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கான எந்த அவசியமும் அதற்கு தேவையில்லை


என்ன மாதிரியான மாற்றம் மற்றும் அது நிகழும் காலம் கண்களுக்கு புலப்படவில்லை. அதுவரை தங்கள் அனுஷ்டானங்களில் பின் நோக்கி திரும்பி அமர்ந்து கொள்ள வேண்டியதுதான் . இந்த சூழலில் அவர்கள் செய்யும் சரணாகதியின் விளைவும் அதன் பொருளும் நிச்சயம் ஒருநாள் உணரப்படலாம் . ஆனால் அதை பார்க்கும் ஆயுள் இன்றுள்ள எவருக்கும் இல்லை.

மெல்ல மெல்ல அது சொல்ல வந்த பிறிதொருகீதா முகூர்த்தம்”. அத்தனையும் நிகழந்தது இதற்காகவா?. அந்த கேள்விக்கு இன்றுவரை பதிலில்லைஆம்என சொல்லியே இந்த பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்


ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவின் பிரதான திட்டமானதிறந்த அரங்கத்திற்காகஎடுத்த முயற்சி அறிவியக்கவாதிகள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்களுடனான ஒரு திறந்த உரையாடலுக்காக அலைந்து திரிந்து நூற்றுக்கணக்கானவர்களை சந்தித்து புரியவைத்து இதற்குள் கொண்டு வந்தாலும் நான் நினைத்த இடத்திற்கு சென்று சேர்ந்திருக்க முடியுமா? எட்டப்படு் கருத்தியலுக்கு பிறரின் ஏற்பும் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. அவர்கள் ஆன்மீகத்திலோ பக்தியிலோ சிக்குண்டவர்களாக தெரியவில்லை. ஆச்சாரங்களில் சிக்குண்டிருந்தார்கள். அதன் வேறுபாடு மிக ஸ்தூலமானது என்பதால் ஆச்சார அனுஷ்டனங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இன்னும் தங்கள் மீது அதீதமான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். யாராவது சற்று செவி கொடுத்தால் அவர்களுக்கு அனைத்தையும் புரியவைத்து விட முடியும் என்கிற மூடநம்பிக்கையை பற்றி என்ன சொல்ல.


திட்டமிட்டிருந்த நான்காவது வருடம் 2015ல் துவங்குகிறது அதில் ஆயிரம் வைதிகர்களும் ஒரு லட்சம் பார்வையாளர்கள் அமர்ந்த மாபெரும் வேள்வி பத்து நாள் நிகழும் . அதற்கான நிதி திரட்டல் மற்றும் நிர்வாக  குழு செயல்பாட்டிற்கு வர வேண்டும். நிர்வாக குழுவில் இடம் பெற்றிருக்கும் மடாதிபதிகளின் தொடர் அமர்வு. நிறைவு நாள் திட்டமிடல். அதில் வைக்கபட இருக்கும் தீர்மானங்கள் குறித்த வரைவு . அத்துடன் திறந்த அரங்கம் நிகழ்த்தி அளித்த விவாதம் குறித்த முழு அளவிலான பரிந்துரைகள். அனைத்தும் பொருளிழந்தது போல தெரிந்தது.எதை நோக்கி நகர வேண்டும் ஏன் நகர வேண்டும் போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. அப்பெரும் விழாவை ஒரு வெற்று சம்பிரதாய விழாவாக நடத்தி முடிக்க என் ஆழ்மனம் ஒப்பவில்லை


இனி ஐந்தாவது 2016 வருடம் ஐந்து லட்சம் பேர் பங்கேற்கும் பத்து நாள் மாநாட்டு நிகழ்வு. பிரதமர் வருகை. தீர்மான நகல் சமர்பிப்பு. விழா நிறைவு. இப்போது நினைத்து பார்த்தால் பெரும் உள நடுக்கமடைகிறேன். களம் முறையான தயாரிப்பில்லாமல் அறநிலைய துறை கோவில்களின் படி விலக வேண்டும் என்கிற தீர்மானம் எத்தனை அபத்தமானது. நல்லவேளை நான் அதை முயற்சிக்கவில்லை. அதற்கான வெற்றி எனது கைகளில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் முயற்சித்தே என்னால் ஒரு காலத்தில் என்னை மன்னிக்க இயலாது போயிருக்கும்


சுருக்கமான என்னுடைய இந்த கனவு திட்ட வரைவை இங்கு சொல்ல வேண்டிய காரணம். எங்காவது அதை 

முழுமையாக பதிவாவது செய்துவிட வேண்டும் என்கிற வேகம். அந்த விழா நடவாமல் சென்றது குறித்து நான் வருந்துவதில்லை எந்த இடத்தில் இருந்து அதன் மைய நோக்கம் திசைமாற ஆரம்பித்தது என்பது குறித்து சொல்ல நினைத்தேன். அதன் பின்னால் உள்ள ஒளி எனக்களித்த புரிதல் மகத்தானது அதை மிக விரிவாக பதிவிடுவதனூடாக என் ஆழ்மன தேடலை தொடர முயற்சிக்கிறேன். விழா குறித்த என் திட்டம் கனவாகவே சென்றுவிட வேண்டாம் என்பதுடன் குறைந்த பட்சம் அதன் பிரம்மாண்ட திட்டமும் அது நகர்வை மாற்றிய பிறிதேதோ ஒன்று என்மீது கருணை கொண்டு எனக்காக அதை நிகழ்த்தி கொடுக்காமலானது.அது பற்றிய ஒரு ஆய்வு போல முன் வைக்க நினைக்கிறேன்.


திருப்பதி சின்ன ஜீயரின் அனுபவமே எனக்கு போதுமானது. அவர் ஒரு மாபெரும் ஆன்மீக ஆளுமை அவரது செல்வாக்கு எந்த துறையிலும் குறைவற்றது. மத்தியில் இருந்து மாநிலம் வரை பெரும் அரசியல் செல்வாக்குள்ளவராக இன்று வரை திகழ்கிறார். இவ்ளவும் அவரது கனவை நிகழ்த்தி கொடுத்ததா? தெரியவில்லை ஆனால் வெளிப்படையாக தெரிந்தது அவரது ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம் மேல்கோட்டை நிகழ்விற்கு பிறகு எந்த வைணவ திவ்வியதேசத்திலும் அது கொண்டாடப்படவில்லை என்பதை வைத்து அவரது உள்ளம் விரும்பிய ஏதோ ஒன்று நிகழாது போனதை அறிந்து கொள்ள முடிகிறது


ஒரு வகையில் புதுவையில் அவர் ஏதாவது துவங்கி இருக்க முடியும். சேலத்தில் அவருடன் வந்திருந்த திருக்கோட்டியூர் மாதவன் போன்ற பதட்டமே நிறைந்த ஒருவரை அருகில் இருக்க பிறர் அவரை கடந்து செல்ல இயலாமலானார்கள். என் வாழ்நாள் முழுவதும் அவரை போன்றவர்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறேன். மிக எளிதில் அவர்களை அடையாளம் கண்டு தவிர்த்து விடுவேன். அவர்களின் வரைபடத்தில் நான் ஒருபோதும் சென்று நிற்பதில்லை.

இறுதியில் புதுவை ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி நிகழ வேண்டிய விழா ராமாநுஜ கூடத்தில் மிக மிக சொற்ப எண்ணிக்கையில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நிகழ்ந்து முடிந்தது. கனத்த இதயத்துடன் எனக்கு அளிக்கப்பட்ட தாம்புல பையை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன். தாங்க இயலாத வலி என எதுவும் இல்லை. இது இப்படித்தான் நிகழ்ந்து முடியும் என முன்னரே அறிந்திருந்தேன் என்பதால் மிக எளிதில் கடந்து சென்றேன். என் கனவுகள் சில உதிர்ந்து போய் இருக்கின்றன அதில் ஆயிரமாவது ஆண்டு விழா்க்குழுவின் நிகழ்வுகள் குறித்த ஐந்தாண்டு திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கலைந்த படி இருந்தது. அதன் முதல் முடிச்சி அவிழ்ந்து போன இடமும் தருணம் இன்றும் என் உள்ளத்தில் இருக்கிறது.

புதிய பதிவுகள்

மணிவிழா -89 * சாத்தியமும் எதிர்பார்ப்பும்

  ஶ்ரீ : மணிவிழா - 89 14-09-2026 * சாத்தியமும் எதிர்பார்ப்பும் * அன்று கைசிக ஏகாதசி திருக்கோவலூர் ஜீயர் பிரம்மரதம் ஏ...