https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 31 மார்ச், 2026

மணிவிழா - 71. * அறப் பிழையும் மனப் பிறழ்வும்-1 *

 


ஶ்ரீ:






மணிவிழா - 71


31-03-2026


* அறப் பிழையும் மனப் பிறழ்வும்-1 *




என் நினைவுகள் வேண்டாத எதிர்கால சந்தேகங்களை கொண்டிருந்தது. மணிவிழா நிகழ்வுகள் அதன் ஒருங்கிணைப்புகள் குடும்ப உறவுகளுக்குள் தேவையற்ற மனப் பெயர்வை கொண்டுவரலாம் என சஞ்சலம் இருந்து கொண்டிருந்தது. துரதிஷ்டவசமாக என் சந்தேகங்கள் பலமுறை நிஜமாகி இருக்கின்றன. இம்முறை அது மிக தீவிரமாக நிகழ்ந்த போது அது நான் கணித்ததை விட மிக மோசமாக இருந்தது


மணிவிழா மிகச் சரியாக செய்ய வேண்டிய ஒன்று. ஆகமமும் வேள்வியும் நிகழ்வும் ஒரு ஒழுங்கிற்குள் இணைவது என அனைத்தும் நம்பிக்கை சார்ந்தது. என்றாலும் இயற்கை நாம் அறியாத அறைகூவலை எங்கோ கரந்து வைத்திருக்கிறது என நினைக்கிறேன். புரிதலை பொருத்து மிக சரியாக செய்யப்படும் மணிவிழா பூஜைகள் கூட சில நுண் குறைகளை கொண்டதாக அன்றி நிறைவடைவதில்லை. அதற்கு பல காரணிகள். ஹோமங்கள் செய்ய குறிப்பிடப்படும் பொருள்கள் பல இன்று கிடைப்பதில்லை. அல்லது பலவற்றின் பற்றி பெயர் குறிப்புகள் எதை சொல்ல வருகின்றது என்கிற புரிதல் கொண்டவர்கள் மிக அரிது என்பதால் முழுமையான யாகம் என்பது சாத்தியமல்ல . மேலும் யாக ஹோதாக்கள் போதிய கவனமின்றி பொருளியல் தேவைக்கு மட்டும் அதை செய்ய முயற்சிப்பது. அதில் அதர்வன ஹோமங்கள் மட்டுமே இன்றும் மிக மிக கவனமாக செய்யப்படுபவை. தவறுகள் செய்விப்பவர்களை முதலில் தாக்குவதால் அந்த கவனம் இருக்கலாம். பிற ஹோமங்கள் நீண்ட கால பலன்களை தருபவை என்பதால் செய்து கொள்பவர்கள் செய்விப்பவர்கள் என இருவருக்கும் அதில் உருவாகும் எதிர்மறை  பின்விளைவுகளை காலம் தாழ்த்தி உருவாக்குகின்றன என்றாலும் அவை பிரித்து அறிய இயலாதபடி அன்றாட சிக்கல்களில் அவை கரைந்து போகின்றன போலும் .


நான் என் வாழ்வின் நிறைதல்களை நோக்கி நகர முயல்பவன். அறிதலின் பொருட்டு நிகழும் அனைத்தும் நேர்மறையாக புரிந்து கொள்ளப்படுகின்றன . எது நிகழ்ந்தாலும் அதைகடந்து செல்வதுமட்டுமே என்கிற எண்ணம் கொண்டவன் . சிறு குறைகளைக் கொண்ட மணிவிழா உலகியலில் முழுதாக ஈடுபட்டு திளைக்கும் மிக சிலரைத் தவிர பிற அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறது என்கிற உணர்வை மிக தீர்க்கமாக உணர்ந்திருந்தேன். எங்கிருந்து அதை பெற்றேன் என தெரியவில்லை. அது எனது நினைவு மட்டுமே, ஆனால் அது அங்கே இருந்து கொண்டிருக்கிறது என என் ஆழ்மனம் சொல்லி அலற்றியது


மணிவிழா குறித்து என்னிடம் விஜி ஓராண்டாக வற்புறுத்தி வந்ததை நான் மறுத்து நின்றதற்கான காரணம் நிச்சயமாக இதுவல்ல. வாழ்வை அதன் ஒழுக்கிற்கு விட்டபின் அதன் வளைவுகள் எப்போதும் ஒரு பொருட்டல்ல. நான் என் ஆழ்மனம் உருவாக்கும் கற்பனைகளை வாழ்வியல் கருவிகளாக கொண்டு எனது கனவுகளை உருவாக்கிக் கொள்கிறேன். அந்த கனவை தொந்தரவு செய்யும் எதையும் பொருட்படுத்தாது கடந்து செல்லவே முயற்சிப்பேன். ஏனோ என் 60 அகவை நிறைவு விழா பற்றிய கனவு அந்த அடுக்குகளில் இல்லை. ஏன் இல்லை என்பதற்கு என்னிடம் பதிலில்லை. இல்லை அவ்வளவுதான்


படைப்பூக்கம் மிக்க எனது திட்டங்கள் அனைத்தும் ஒருவகை கனவு போன்றவை. அந்த கனவுகளை நான் ஈடுபட்ட துறைகள் வழியாக திரளான பொது சமூகத்துடன் மிக இணக்கமாக அமையப் பெற்றவைகளாக உருவாக்கி கொள்வேன் . அது  அரசியல், தொழில் மற்றும் ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா இயக்கம் பின்னர் இலக்கிய நிகழ்வுகள் போன்றவை மிக பிரம்மாண்ட செயல்பாடுகளை கொண்டவை. அதன் வழியாக எனக்கு நிகழவிருக்கும் அடுத்த கட்ட நகர்வு பற்றிய கனவு தீவிரமாக எழுவதை தவிர்க்க இயலாது. ஒரு பயிற்சியின் பொருட்டு அது என்ன மாதிரியான எதிர்காலமாக இருக்கும் என்பது பற்றிய கனவையும் அதன் சாத்தியகூறு பற்றிய உணர்வுகளை அடைந்து முன்செல்வது எனது பாணியாக இருந்தது


ஆழ்மன தூண்டுதல்களை செயலில் இணைக்கும் முன்பு அதை அக மற்றும் புறவயங்கள் என்னும் இரண்டினால் உணர்கிறேன். ஒன்று மனம், பிறிதொன்று உடல். உள்ளம் எப்போதும் கிளர்ச்சி உடையது எண்ணங்களால் அதை உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும். உடல் வழியாக உணர்வது என்பது நாம்மால் தூண்டமுடியாத வேறு பரிமாணங்களினால் ஆனவொன்று என்பதால் அதை நான் அதை நம்மால் எளிதில் சென்றடைய இயலாத ஆழ்மனத்துடன் பொருத்திக் கொள்வேன். ஆழ்மனம் புறவய உலகின் நுண்மையுடன் தொடர்புடையது. சமூகம் கடந்து குமுக்கங்களின் உள்ளடக்கத்தில் தன்னை பொருத்திக் கொள்வது என்பதால் அது மிக பிரமாண்டமானது. அதில் என்வரையிலான எதிர்காலம் குறித்த உணர்வு நிலை என்பது அதன் மிக மிக சிறிய அலகு கடலில் ஒரு துளி போல என்றாலும் அதுவும் கடலே.  


ஒருவரின் பொதுத் தளத்தில் வெற்றி என்பது பிறர் கூட்டு மனத்துடன் தொடர்புடையது. தனிமனிதனின் கனவு பொய்க்கலாம். ஆனால் கூட்டு மனதின் கனவுகள் எப்போதும் வென்று முன் செல்வது. நான் கூட்டு மனதின் கனவுகளை விதைத்து அதை எனக்குள் வளர்த்தெடுக்க முயல்பவன். நான் ஈடுபட்ட பொதுமக்களை மையப்படுத்திய அனைத்து இயக்கங்களும் திட்டங்களும் எங்கோ ஒரு புள்ளியில் அதன் சாதக பாதங்களை உணர்ந்திருந்தேன் என்பதால் அவை நிகழும் போது மனம் களிப்படைவிதில்லை சோர்வடைவதும் இல்லை


நான் என என்னை புரந்து கொண்டதும் என் எண்ணம் என நான் உருவாக்கி கொண்டதும் எனது ஆழ்மன புரிதல்களின் வழியாக. அவை என் எண்ணங்களென திரண்டவை. எப்போதும் சிதறி பறந்து கொண்மிருந்தவை. அவற்றை தொகுத்துக் கொள்ளும் கருவிகள் அப்போது என்னிடம் இல்லை என்பதால் அவை நினைவுகளாக அச்சங்களாக உற்சாகங்களாக மட்டுமே எஞ்சின. தீவிரமாக செயல்படும் போது எனது கணிப்புகளை திட்டங்களை அச்சங்களை அடுத்தவர்களுக்கு புரியும் படி முன்வைக்க இயலாமல் போனதற்கு அவையே காரணங்கள் . மிக மிக பின்னால் இலக்கிய வாசிப்புகள் வழியாக ஜெயமோகனின் நேரடித் தொடர்பு போன்றவை உருவாக்கி எனக்கு அளித்த இடம் மிக பிரம்மாண்டமானது. அதுவரை என் எண்ணங்களாக திரண்டிருந்து அனைத்தையும் தொகுத்துக் கொள்ளும் கருவியை கண்டடைந்தேன். பின்னர் மெல்ல மெல்ல மனம் அமைதிகொண்டதும் அதனூடாக வாழ்வின் நிறை பற்றிய எண்ணங்களை கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டேன்.


என் கடந்த நாட்களில் நான் சந்தித்த பல பெரும் ஆளுமைகளுக்குள்ளே அவர்களை எனக்கானவர்களாக தெரிவு செய்யும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன். பெரும் ஆளுமைகளுக்குள்ளே மனம் சிந்தனை செயல்பாடுகளில் உள்ள ஒருமைபாடாடு என்னை அவர்களை நோக்கி கவர்ந்திருக்கிறதுஅவர்களின் பட்டியல் மிகப் பெரிது அதை எழுதி என் நாக்கத்தை வீணடிக்க விரும்பவில்லை ஆனால் அதே சமயம் அந்த பெரும் ஆளுமைகளின் தன்மையை மிக நுண்மையாக அறிந்திருக்கிறேன். அவர்கள் என் வாழ்வில் உருவாக்கிய தாக்கம் அதிலிருந்த ஒத்திசைவு என்னை அவர்களை நோக்கி மிக இயல்பாக ஈர்த்திருக்கிறது. அவர்களில் மூவர் மிக முக்கியமானவர்கள். வாழ்வில் நான்காவது விரலை விட்டு எண்ணும் ஒருவரை இதுவரை சந்திக்கவில்லை. இனிமேலும் அதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அவர்களிடத்தில் இருந்து எனக்கானதை பெற்றுக் கொள்கிறேன். அதிலிருந்து ஒரு சிறிய பகுதியையாவது வாழ்கையில் போட்டுப் பார்த்து அதன் ஆழத்தை புரிந்து கொள்ள முயன்றபடி இருக்கிறேன்


அவர்களை தாண்டி என்னை வந்து என்னை சந்திக்கும் கூட்டத்தில் இருந்தும் ஏறக்குறைய அதுபோன்ற ஒரு கூறை உருவாக்க முயற்சிக்கிறேன் அல்லது அவர்களின் செயல்பாடுகளில் அவற்றை எதிர்பார்க்கிறேன். ஆனாலும் அவர்களுக்கு உரிய சவாலை அறிந்திருந்தேன். அவர்கள் வலிந்து முரண்பட்டு என்னைவிட்டு விலகினாலும் நான் அவர்கள் மீது கசப்படைவதில்லை. காரணம் நான் என்னை என் ஆழத்துடன் தொடர்புறுத்துவதற்கு கருவியாக அவர்கள் இருந்தனர்.அவர்களிடையேயான என்னுடைய உறவும் அதன் இன்றைய இடம் என்ன? என்பது பற்றியும் பலத்தை பற்றியும் அவதானிக்க உதவுகிறது. அதனூடாக எனது அடுத்த கட்ட வாய்ப்பை உணர்கிறேன் . மனம் சொல்லுவதை உடல் உணர்வுகள் மறுத்தால் நான் உடல் சொல்லுவதையே கவனத்தில் கொள்வேன்


என் மணிவிழா குறித்து இந்த முறை இரண்டும் ஒன்றும் சொல்லவில்லை என்பதில் இருந்து எப்படி புரிந்து கொள்வது என தெரியாமையால் அது குறித்து பெரிதாக எந்த எண்ணமும் எனக்கு உருவாகி இருக்கவில்லை. அதன் பொருட்டு நான் விஜி சொன்ன போது தொடர்ந்து மறுத்து வந்தேன். ஆழ்மனதில் அது நடக்க கூடிய சாத்தியகூறு பற்றிய எதிர்மறை சஞ்சலங்கள் என ஏதுமில்லை ஆனால் எதிர்கால சூழலில் எண்ணியிறாதவைகள் சில எழலாம். நான் அஞ்சும் சில கூறுகளின் அடிப்படைகளில் வீட்டு சூழலில் சில மாறுதல்களை அது கொண்டு வரும் என உறுதியாக நினைத்தேன். அடிப்படையில் மணிவிழா மூன்று நாள் நிகழ்வு என்பதால் மிக செலவேறியது. பிள்ளைகளின் பொருளியல் அணுசரனை குறிப்பிட்ட எல்லை கொண்டது என நான் ஆழத்தில் மிக அழுத்தமாக உணரத்துவங்கிய நேரம்


பொருளியல் வளம் என்பது ஒரு சுதந்திரம். எண்ணியவைகளை அது உருவாக்கி அளிக்கும் அதே சமயம் அது மட்டுமே வாழ்வியலை நிர்ணயிக்கும் என நினைப்பதை போன்ற பிழை புரிதல் பிறிதொன்று இல்லை. நான் என்னை சார்ந்த என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அளித்தது என் தந்தை எனக்கு கையளித்து சென்ற பாரம்பரிய கூட்டு குடும்ப விழுமியங்களை. அவற்றை சொற்களால் அல்ல என் வாழ்கை செயல்பாட்டில் நிகழ்த்தி காட்டியிருக்கிறேன்

அந்த செயல்பாடுகளே என்றும் மிக சிறந்தவை என்பதில் எனக்கு இருந்த சஞ்சலங்கள் இன்று முழுவதுமாக விலகிவிட்டிருந்தன


நவீன பொருளியலை சார்ந்த சித்தாந்தங்களில் பாரம்பரிய அனுபவங்களுக்கும் விழுமியங்களுக்கும் இடமில்லை . கைக் கொண்டிருந்த விழுமியங்களை ஒருவர் கைவிடும் போது அது அவரை எப்போது எப்படி ஒரு நோய் போல ஆட்கொள்கிறது சுதந்திரத்தை தருவதாக நம்பவைக்கிறது பின் அதன் காரணிகளின் தொற்று போல எப்படி உருவாகிறது என்பது பற்றி எனக்கு மிக தீவிரமான கோட்பாடுகளும் அதற்கான நிரூபணங்களும் உண்டு. அவர்கள் வாழ்கையை நிறைவுடன் கடந்து செல்ல அந்த எதிர்மறை எண்ணங்களை விலக்க சொந்தக் கருவிகளை அவரவர் தங்கள் வாழ்வில் கண்டடைய வேண்டியது.அது எப்போதும் அறத்தை மட்டுமே முன்வைப்பதுஅது அனைவருக்கும் நிகழும் என சொல்வதற்கில்லை அது ஒரு கீதா முகூர்த்தம் போல. அதன் அருள் வந்து நிலைகொள்ள வேண்டும்

ஞாயிறு, 22 மார்ச், 2026

கூடுகை 92 என் உரையின் எழுத்து வடிவம்

 



92 வது கூடுகை 

1 தம்பாசுரனின் மகன் சகஸரகவசன். மற்றும் நர நாராயணர்களின் பிறப்பு பற்றியது

அதன் நீட்சியாக கர்ணனையும் சூரிய அடையாளம் உருவாக்கும் நிலையழிவையும் புரிந்து கொள்ள முயல்கிறது

2 காகம் உருவாகி மூதாதை வடிவமாதல்.

3 அஸ்தினாபுரி காகங்களின் வருகையும் அதனால் நகர் நோயுறதலும்

4 கணிகரின் கனவு சொல்லும் குறியீடு என்ன

5 மகதத்தின் தூது மறுக்கப்படுதல் பின்னணி மற்றும் அது அஸ்தினாபுரி நிலைப்பாட்டை மாற்றுகிறது 

6 காக தீர்த்தம் பற்றிய குறிப்புகள். காசி எப்போதும் சாபமாக உருமாற்றம் அடைகிறது 

7 காக தீர்த்தத்தால் ஆஸ்தினாபுரி மீள்தல்


விரிவு

1 தம்பாசுரனின் மகன் சகஸரகவசன். மற்றும் நர நாராயணர்களின் பிறப்பு பற்றியது . அதன் நீட்சியாக கர்ணனை புரிந்து கொள்ள முயல்கிறது

சூரியனின் வரத்தால் பிறந்தவன். சூரியனின் ஆற்றல் நின்றெரிவது ஆற்றல் என்பதால் அவ்வாற்றல் கொண்டவனுக்கு இன்பமெனபதில்லை


தம்போத்பவன் தனது தந்தையான தம்பனால் கைவிடப்பட்டு வளர்ந்து பின்னர் அவனை கொன்று அரசேற்கிறான்

கர்ணனுக்கும் விதியின் அம்சம் காணப்படுகிறது.

சூரியனை வேண்டி ஆயிர கவசங்களயும் வெல்வதற்கரிய பலனையும் பெற்றான். எதிரென நிற்கும் தர்மன் என்கிற தாய் தந்தை கடனை கணக்கு வைக்கும் தேவன். சகஸ்ரகவசனை மறுக்கிறான். பின்னர் சிறைபிடிக்கப் படுகிறான்

கர்ணனுக்கும் பித்ரு கடன் எஞ்சி நிற்கிற ஒன்றுமை

தர்மனின் மனைவி மூர்த்திகை மும்மூர்த்திகளை வேண்டி சகஸ்ரகவசனை கொல்ல  நர நாராயணனர்களை பெறுகிறாள்.

நர நாராயணனுடன் போரில் அனைத்து கவசமும் உடைப்பெற்று ஒளி கொண்டவனாகி விலகி மரணமடைகிறான்…..அதன் நீட்சியாக கர்ணனை புரிந்து கொள்ள முடிகிறது. நரனாகிய அர்ஜுணனால் கர்ணன் கொள்படுகிறான. அந்த சுழற்சி முற்று பெறுகிறது.

2 காகம் உருவாகி மூதாதை வடிவமாதல்.

காஸயப்பிராஜாபதியின் மனைவிகள் மூலம் பலவித உயிர்குலங்களை சிருஷ்டிக்கிறார். அவற்றில் பறவையினமும் அடக்கம்

காகம் அதன் உணவு வகையால் எங்கும் சேராமல் தனித்து விடப்பட்ட சூழலில் மருத்தன் ராவணனை வெல்ல நினைத்து மகேஸ்வரசத்தர வேள்வி துவங்கினான்

அவனை எதிர்க்க வந்த ராவணனை அஞ்சி தேவர்கள் பல பறவைகள் ரூபத்தில் விலக யமன் தான் விலக எஞ்சி இருந்த காகத்தை கொண்டு மீள்கிறான் .

அதன் நன்றிக்கடனாக காகத்தை மூதாதையர்களின் எள்ளண்ணத்தை பலி கொள்ளும் பறவையாக அருள்கிறான் . காகம் மூதாதையின் வடிவாமானது

காகம் தனது முதல் பலியண்ணத்தை ராவணனிமிருந்து பெறுகிறதுஅவனை வாழ்த்துகிறது.

குறியீடு:- இருள் இருளை சந்திக்கிறது. உலகை அழிப்பவன் அழிப்பதை உணவாக கொள்ளும் காகம்.

3 அஸ்தினாபுரி காகங்களின் வருகையும் அதனால் நோயுறதலும்

இந்திரபிஸ்தத்தில் இருந்து அவமதிக்கப்பட்ட துரியோதனன் அஸ்தினாபுரிக்கு திரும்பிய சூழலில் அவன் நோய் கொள்ள அதை ஒட்டி மூதாதையர்களின் சாபாமாக அஸ்தினாபுரியை காகங்கள் சூழ்ந்து கரிய பரப்பை உருவாக்கி நகரை நோய் கொள்ளச் செய்தன. போர் மேகங்கள் சூழ்ந்துவிட்டதை அவை அறிவித்தன

கரணன் அஸ்தினாபுரத்திற்கு வந்து அந்த விசித்திர காட்சியை கண்டு ஆதை தீர்க்கும் வழி பற்றி ஆராயச் சொல்லி அவனும் நோயில் வீழ்கிறான்.

ஆடி மாத துவக்கத்தில் வானில் மேக வடிவில் குலைத்த வில்லுடனும் பேரவலி எழுப்பும் சங்கத்துடன் போர் தெய்வங்களான இரட்டையர் கலைமானில் எழுகின்றார்கள்.

4 கணிகரின் கனவு சொல்லும் குறியீடு என்ன

பன்னிரு படைக்களம் நாவலில் வரும் கணிகரின் இந்தக் கனவு, மகாபாரதப் போரின் சாரத்தையும், வரப்போகும் பேரழிவின் குறியீட்டுத் தன்மையையும் மிக நுட்பமாக விளக்குகிறது. கணிகர் சகுனிக்கும் துரியோதனனுக்கும் அரசியல் ஆலோசனைகள் வழங்கும் ஒரு 'நிழல்' ஆளுமை. அவரது கனவு என்பது வெறும் காட்சி அல்ல; அது ஒரு தீர்க்கதரிசனம்.

இந்தக் கனவு உணர்த்தும் முக்கியமான செய்திகள் இவை:

1. ஸகஸ்ர கவசன் (கர்ணன்) மற்றும் நரநாராயணர்கள்.      * அந்தச் சடலங்களுக்கு அடியில் சிதைந்து கிடப்பது ஸகஸ்ர கவசன் (கர்ணன்). 

* அவனது ஒரு கால் மடிந்திருப்பதும், கைகள் துண்டிக்கப்பட்டிருப்பதும் அவனது வரத்தின் தோல்வியையும், போர்க்களத்தில் அவன் சந்திக்கப்போகும் தர்ம சங்கடமான மரணத்தையும் காட்டுகிறது.

 * வில்லுடன் நிற்கும் அந்த வெண்ணிற வீரன் நரன் (அர்ஜுனன்).

2. "கடகம்" - விதியின் விளையாட்டு

கணிகர் கேட்கும் "என்ன மீன்?" என்ற கேள்விக்கு, அந்த வீரன் "கடகம்" என்று பதிலளிக்கிறான்.

 * சோதிட ரீதியாக 'கடகம்' என்பது தோளைக் குறிக்கும்.

 * அர்ஜுனன் கர்ணனின் தோளை (கவசத்தை) நோக்கியே அம்பு எய்தான் என்பதை இது குறிக்கிறது.

 * ஒரு கவசம் உடைந்தால் அதை உடைத்தவன் சாக வேண்டும் என்ற வரம் இருந்தாலும், நரநாராயணர்கள் ஒருவராகச் செயல்பட்டு அந்த விதியைத் தோற்கடித்ததை "தோள் வழியாகவே" என்ற உரையாடல் உறுதிப்படுத்துகிறது.

* அஸ்தினபுரியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்பதற்கான குறியீடாக இந்தக் கனவை அவர் காண்கிறார்.

5 மகதத்தின் தூது மறுக்கப்படுதல்

போர் எழுந்தால் அதை ஒட்டி போர் கூட்டு பற்றி செய்திகள் எழுந்தன. விதுரரின் அரசு சூழ்தலால் சகுனியின் தனது பழைய வஞ்சத்தின் பொருட்டு மகதத்தின் தூது மறுக்கிறான்இந்திரப்பிரஸ்தத்துடனான யுத்தம் பற்றிய சிந்தனை தள்ளிப் போடப்படுகிறது

6 காக தீர்த்தம் பற்றிய குறிப்புகள்

காசி மன்னனின் மகள் பெற்ற ஒற்றைச் சொல் மற்ற பகுதிகளை முற்றாக இணைக்கிறது. சிறுவயதில் காணாமலாகிறாள். அதன் பொருட்டு செவிலி மற்றும் வேடன் இறக்க பழி சூடுகிறாள்  கலாவதி

பின்னர் தாசார்கனை மணக்கிறாள். அவளால் தாசார்கன் நோயுறுகிறான். இமயத்தில் உள்ள காகதீர்தத்தில் நீராட சொல்கிறார் கர்க்கர்


7 காக தீர்த்தத்தால் ஆஸ்தினாபுரி மீள்தல்

அஸ்தினபுரியின் வைதிகர்கள் அந்த காகதீர்த்தத்தில் இருந்து நீரை கலியின் முன் படைத்து அருகே அமைத்த சுனையில் விட்டு துரியோதனனை நீராடச் செய்ய காகங்கள் வந்து அந்த சுனையில் விழத் துவங்கியது. பின்னர் கர்ணனை நீராட செய்கிறார்கள்


திரள்

சிறு தெய்வங்களின் அருள் பேரிருப்பிற்கு எதிராக போகுமானால் அதன் அருள் முறிந்து போகிறது. சகஸ்ரகவசனின் நீட்சியாக கர்ணனை சகுனி அடையாளப்படுத்தும் அவனது கனவு. நர நாராயணின் நரன் அம்சாம அர்ஜுணன் வெளிப்படுகிறான். தலைப்பாகை அவிழ்ந்திருந்தது அறத்திற்கு எதிரான கட்டவிழ்தலை குறிக்கிறது 

காகம் பழியாக சூழ்தலும் விலகும் குறியீடாக காட்டப்படுகிறது.

கணிகரின் கனவில் நரன் என்கிற அர்சுணன்

கணிகரின் கனவில் வரும் அர்ஜுனனின் அந்தத் தோற்றம் (வெண்ணிறமானவன், தலைப்பாகை விழுந்திருப்பவன்) தலைப்பாகை என்பது ஒரு அரசனுக்குரிய அதிகாரம், கௌரவம் மற்றும் அவனது சமூக அடையாளத்தின் சின்னம். அது விழுந்திருப்பதாகச் சொல்லப்படுவதற்குப் பின்னால் உள்ள நுட்பங்கள்:

1. சுமை (The Burden )

அர்ஜுனன் அந்தக் கனவில் "கசப்புடன்" நிற்பதாகக் கணிகர் காண்கிறார்.

 * தலைப்பாகை என்பது ஒரு மனிதன் தன் தலையில் சுமக்கும் "நான்" (Ego) எனும் அடையாளத்தைக் குறிக்கிறது.

 * அவன் ஸகஸ்ர கவசனை (அல்லது கர்ணனை) வீழ்த்தியது ஒரு வீரனாக அவனுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. மாறாக, அது ஒரு கடமையாக, விதியின் கட்டாயமாக அவனுக்குக் கசப்பையே தருகிறது.

 * தலைப்பாகை விழுந்திருப்பது, அவன் ஒரு 'அரசனாக' அல்லது 'வீரனாக' அங்கு நிற்கவில்லை, மாறாக விதியின் கையில் ஒரு வெறும் கருவியாக (Instrument of Destiny) நிற்கிறான் என்பதைக் குறிக்கிறது.

தலைப்பாகை இல்லாத நிலை ஒரு விதமான துறவைக் குறிக்கிறது.

 * போர்க்களத்தில் அர்ஜுனன் ஒரு யோகியைப் போலச் செயல்பட வேண்டும் என்பது கிருஷ்ணனின் உபதேசம்.

 * எஞ்சி இருப்பது அவனது "சுருள் குழல்கள்" மட்டுமே. இது அவனது இயற்கையான, ஆதி வடிவம் (நரன் எனும் முனி வடிவம்).


சுருக்கமாக:

தலைப்பாகை விழுந்திருப்பது அர்ஜுனனிடம் இருக்கும் அகந்தை அழிந்திருப்பதையும், அவன் கர்மவினையின் ஒரு கருவியாக மட்டுமே எஞ்சியிருப்பதையும் காட்டுகிறது. அவன் சுருள் குழல்களுடன் இருப்பது, அவன் ஒரு போர்ப் பித்தனாகவோ அல்லது ஒரு துறவியாகவோ மாறிவிட்ட அந்த 'இடைநிலை' (Liminal state) நிலையைத் துல்லியமாகச் சித்தரிக்கிறது.

2. அஸ்தினாபுரி மீதான காசியின் தீச்சொல்

காக தீர்த்தம், காசி மற்றும் பானுமதி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு 'வெண்முரசு' நாவல் கட்டமைப்பில் மிக நுட்பமான ஒரு வலைப்பின்னல் போலப் பின்னப்பட்டுள்ளது

1. காக தீர்த்தம்: கர்மாவின் முனையம்

காசி என்பது முக்தித் தலம் மட்டுமல்ல, அது "கர்மாவைத் துறக்கும்" இடமும் கூட. காக தீர்த்தம் என்பது ஒருவன் தன் அகங்காரத்தையும், தான் செய்த பாவங்களையும் (பழியை) காக உருவில் வெளியேற்றும் இடமாகக் கருதப்படுகிறது.

 * தாசார்கன் கதையில் அவனது கரிய நிறம் (பாவம்) காகங்களாகப் பிரிந்து சென்றது காசியின் அந்தப் புனிதத் தன்மையையே குறிக்கிறது.

3. பானுமதி: காசியின் மகள்

துரியோதனனின் மனைவி பானுமதி காசி மன்னனின் மகள். மகாபாரதத்தில் காசி என்பது எப்போதுமே ஒரு "எதிர்ப்பின்" அடையாளமாகவே இருந்துள்ளது.

 * அம்பை, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூவரும் காசியைச் சேர்ந்தவர்களே. அவர்கள் வழியாகவே குரு வம்சத்தில் ஒரு பெரும் குழப்பமும், விதியின் விளையாட்டும் (பீஷ்மரின் சபதம் மற்றும் விசித்திரவீரியனின் மரணம்) தொடங்கியது.

 * பானுமதி காசியிலிருந்து அஸ்தினபுரிக்கு வரும்போது, அவளுடனும் காசியின் அந்த "மீட்க முடியாத ஊழ்" (Inescapable Destiny) உடன் வருகிறது.

4. பானுமதிக்கும் காகத்திற்கும் உள்ள தொடர்பு

நாவலில் பானுமதி ஒரு தனித்துவமான கதாபாத்திரம். அவள் துரியோதனனின் அரசியாக இருந்தாலும், அவளுக்குள் ஒரு தீர்க்கதரிசனப் பார்வை உண்டு.

 * குலப்பழி: காசிப் பெண்கள் அஸ்தினபுரிக்கு வரும்போதெல்லாம், அந்த வம்சம் ஒரு பெரும் அழிவை நோக்கி நகர்வதைக் காணலாம். பானுமதி தன் கணவன் துரியோதனனின் அழிவை முன்கூட்டியே உணர்ந்தவள்.

 * காகங்கள் எப்படி அழிவை எதிர்நோக்கிக் காத்திருக்குமோ, அதேபோல பானுமதியும் அஸ்தினபுரியின் அந்தப் பேரழிவை ஒரு மௌன சாட்சியாகக் கவனிப்பவள்.

 * காக தீர்த்தத்தில் ஒருவன் தன் கர்மாவைக் கழுவுவது போல, பானுமதி அஸ்தினபுரியின் அந்தப் பெரும் கர்மச் சுமையை (குலப்பழி) தன் மௌனத்தாலும், துயரத்தாலும் சுமப்பவளாகச் சித்தரிக்கப்படுகிறாள்.

4. தத்துவார்த்தத் தொடர்பு

காசி என்பது சிவனின் நகரம். சிவன் 'காலகாலன்' (காலத்தையே கடந்தவன்). காகம் காலத்தின் தூதுவன்.

 * பானுமதி காசியிலிருந்து வந்தவள் என்பதால், அவளுக்கு அஸ்தினபுரியின் அந்த "கால முடிவு" (The end of an era) நன்கு தெரியும்.

 * துரியோதனன் தன் அதிகாரத்தால் உலகை ஆள நினைக்கும்போது, பானுமதி அந்த அதிகாரத்தின் கீழ் இருக்கும் "மரணத்தின் நிழலை" (காகத்தின் நிழலை) காண்கிறாள்.

சுருக்கமாக:

காசி மற்றும் காக தீர்த்தம் என்பது "சுத்திகரிப்பு" மற்றும் "அழிவை" ஒருசேரக் குறிக்கும் இடங்கள். பானுமதி அந்த மண்ணிலிருந்து வந்தவள் என்பதால், அஸ்தினபுரியின் அழிவு என்பது ஒரு சாபம் என்பதை விட, அது ஒரு பழைய கர்மாவைக் கழுவும் "காக தீர்த்தம்" போன்ற ஒரு செயல்முறை என்பதை அவள் உணர்ந்திருக்கிறாள்.

அதனால்தான், பேரழிவின் விளிம்பிலும் அவள் ஒருவிதமான அமைதியுடனும், அதே சமயம் ஆழ்ந்த துயரத்துடனும் இருக்கிறாள்.


புதிய பதிவுகள்

மணிவிழா - 71. * அறப் பிழையும் மனப் பிறழ்வும்-1 *

  ஶ்ரீ : மணிவிழா - 71 31-03-2026 * அறப் பிழையும் மனப் பிறழ்வும் -1 * என் நினைவுகள் வேண்டாத எதிர்கால சந்தேகங்களை கொண்டிர...