https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

மணிவிழா 87. * முடிவுற்ற செல்திசை*



ஶ்ரீ:




மணிவிழா - 87


04-09-2026


முடிவுற்ற செல்திசை *



தென்னிந்தியா முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஆயிரமாவது ஆண்டு விழா குழு நிகழ்வு பற்றிய திட்டமிடல் அனைத்திலும் ஒருவித இடக்கரடக்கலை பார்த்துக் கொண்டிருந்தேன். அவை அனைத்தும் நின்று சட்டென உதிரிகளாக திரிந்து போய்க் கொண்டிருந்தது. திருப்பதி சின்ன ஜீயர் துவங்கி வேளுக்குடி கிருஷ்ணன் என நகர்ந்து அனைத்தையும் நகர முடியாமைக்குள் சென்று கொண்டிருந்தது . அது அளித்தது மன சோர்வல்ல என்றாலும் மிக நுண்மையான பிறிதொரு புரிதல். அதற்கு எதிராக வேகமாக செயல்பட முயற்சிப்பதில் உள்ள சிக்கலை மிக ஆழமாக உண்ந்திருந்தேன். அப்போது என்னிடம் நான் சொல்லிக் கொண்டது சிறிது காலம் அனைத்திலிருந்தும் விலகி நில். பதறாதே காலம் அதை நிகழ்த்த முடிவெடுத்திருந்தால் காலப் போதாமை நிகழாது. அனைத்தும் மிக சரியாக நிகழ்நதேறும். அதுவரை மனதை அமைதிபடுத்த பிறிது எதையாவது செய் என ஆழ்மனம் சொன்னபோது. நான் நம்மாழ்வாரின்திருவாய் மொழிக்குஒரு எளிய நவீனபாணி விளக்கம் எழுதிப்பார்த்தால் என்ன? என தோன்றியது ஒருகீதா முகூர்த்தம்அதற்கு விளக்கவுரை எழுத நினைத்தது விட அபத்தம் பிறிதொன்றில்லை


அதில் ஈடுபடும் போது அது அளித்த புரிதல்என்னுடைய மொழியின்மை”. அது வரை என்னை நான் அந்த கோணத்தில் அவதானித்ததில்லை. மொழி என்னை கைவிட்டதாக நான் எப்போதும் உணரந்ததில்லை. நினைத்ததை சொல்லில் கொண்டு வரும் ஆற்றல் எனக்கு எப்போதும் இருந்தது. ஆனால் இப்போது இது வேறு உலகம் அதற்குரிய கலைச் சொல் இல்லாமல் அவற்றை வெளியிட இயலாது. நவீனமானாலும் அதுவே அதன் அடிப்படை சட்டம். எக்காலத்துக்குமான தத்துவம் நவீனத்துடன் முயங்கியே சொல்லென திரள்கிறது என்பதால் தத்துவம் ஒரு போதும் காலாவதியாவதில்லை. அதை நவீனத்தில் வைத்து சொல்ல இன்னும் அதீத திறமை மற்றும் மொழி தேவையாகிறது என அது என்னை உணரவைத்த அந்த தருணத்தை நினைவுறுகிறேன். என்னுள் அளவில்லா ஆற்றாமை எழுந்து என்ன செய்வது என புரியவில்லை. அந்த எண்ணத்தை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு பலமுறை வாசித்த   வியாக்யணத்தை மீளவும் வாசிக்க துவங்கினேன். வாசித்து பக்கம் கடந்து சென்றாலும் ஒரு சொல்லும் அகத்தில் இறங்கவில்லை.அதன் மணிபிரவாள நடை அர்த்தம் செறிந்தது. அந்த கலைச் சொற்கள் இல்லாமல் வியாக்யாணம் எழுத முடியாது. ஆனால் அது இரும்பு கடலை தெளிவாக புரிந்து கொண்டாலும் அதை நவீன படுத்துதல் என்னால் இயலாது. அதற்கான திறம்மிக்கவர்கள் நவீன உலகில் உருவாகி வரவேண்டி இருக்கிறது. ஆனால் அதைவிட அது தெளிவாக சொன்ன செய்தி என்மொழியின்மைபற்றிய போதாமை.


என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது எனக்குள். சற்று நேரம் விட்டு மனதை தொகுத்துக் கொண்டு மீண்டும் வாசிக்கலாம் என சற்று கால அவகாசம் கழித்து வந்த போது பெரிய மாற்றமென ஏதுமில்லை. வலைபக்கத்தில் ஏதாவது தேடலாம் என முன்பு பழக்கத்தில் இருந்தஅனங்கராச்சாரியாரின்வலைப்பூ தளத்தை திறந்து பாசுரத்திற்கான நேர் பொருளை வாசித்துக் கொண்டிருந்தேன். “தற்செயலாககை பட்டு சொடுக்குண்டு அது பழக்கமில்லாத பிறிதொரு முற்றும் புதிய தளத்தை திறந்து கொடுத்தது. அதுஜெயமோகன்.இன்அவரின் வலைதளம்


ஜெயமோகனை எனக்கு இந்தியாடுடே முன்பே சிறிய அறிமுகம் செய்திருந்தது. அதில் பிரதானமாக இருந்தது அவரின் இளைஞர் ஈர்ப்பு பற்றிய அதன் கணிப்பு. இளஞர்களை கவரும் ஆங்கில எழுத்தாளர்சேத்தன் பகத்திற்குஇணையாக தமிழில் ஜெயமோகன் சொல்லப்பட்டிருந்தார் . அது மட்டுமே எனக்கு அவரை பற்றிய அறிமுகம் மற்றும் ஆர்வம் தாண்டி வேறொரு செய்தி சொன்னது . நான் இதுவரைசேத் பகத்தின்எந்த நூலையும் வாசித்ததில்லை என்றாலும்சேதன் பகத்பற்றி சிறிது அறிந்திருந்தேன்இந்திய டுடே மீதிருந்த பெரும் மதிப்பு காரணமாக அதில்சொன்னவற்றிற்கு மேலதிகமாக ஆராய்ந்து பார்க்க தோன்றவில்லை


ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவின் உருவாக்ககமே தேங்கி நின்ற ஆன்மீகத்தில் நவீன இளைஞர்களை உட்கொண்டு வரவேண்டும் என்கிற விழைவின் அடைப்படையில் உருவானது . அதன் காரணமாகவே நவீன கருத்தியல் மூலம் அவர்களை தொடர்பு கொள்ளயலும் இயலும் என்கிற நம்பிக்கை முற்றாக தடைபெற்ற சூழலில் மாற்று வழிகளை பற்றிய சிந்தனையில் இருந்த போதுஜெயமோகன்வலைதளத்தில் நுழையும் வாய்ப்பு அமைந்தது


அவரது தளத்தில் நுழைந்த போது அதில் உள்ளவற்றை வாசிப்பதன் மூலம் அவரை ஆவதானிப்பது எனது எண்ணமாக இருந்தது. அதன் வழியாக அவர் எனக்கு எப்படி உதவ முடியும் என புரிந்து கொள்ள நினைத்தேன். வெண்முரசின்முதற்கனல்சில அத்தியாயங்களை வாசிப்பதன் வழியாக அதன் தத்துவ செரிவு முதலில் எனக்கு புரியவில்லை. அதுவரை எனக்கு தெரிந்த நான் வாசித்திருந்த சிறுகதை மற்றும் நாவல்கள் அனைத்தும் சமூகக் கதைகள். இலக்கிய வாசிப்பு அறிமுகமாகி இருக்கவில்லை. மேலதிகமாக அன்றைய சூழலில் முற்போக்கு என்கிற வகைமையில் ஆன்மீகத்திற்கு எதிராக பேசுவதும் எழுதுவதும் ஒரு மோஸ்தராக இருந்த காலம். அவை எனக்கு எப்போதும் மனவிலக்கத்தை கொடுத்தன என்பதால் அத்தகைய எழுத்தாளர்களை கவனமாக தவிர்த்திருந்தேன். “வெண்முரசு எனக்கு படைபுலகத்தின் பிறதொரு பாதையை காட்டிக் கொடுத்தது. வேதாந்தத்தை மிக நுட்பமான அதே சமயம் புதிய கோணத்தில் முன் வைத்து. அதன் அடியில் இருந்த சாமான்யம் ஈர்ப்பும் விலக்கத்தையும் கொடுத்தது. அறிந்திருந்த அத்தனை ஆன்மீகக் கருத்தை மறுத்தும் பிறிதொரு பார்வையை முன்வைத்தது. என்றாலும் அதை மிக கவனத்துடன் கையாண்டிருந்தது


ஒருபுள்ளியில் அதை வாசிக்க வேண்டாம் என முடிவெடுத்தேன். ஆனால் அதன் கருத்துக்கள் தொடர்ந்து மனதை தொந்தரவு செய்தன. ஏன் மனம் பிறிதொரு கோணத்தை ஏற்க மறுக்கிறது என அவதானிக்க துவங்கினேன். அதற்கான தர்க்கத்தை உருவாக்கிக் கொண்டேன். ஒன்று ஜெயமாகனுக்கு இளைஞர் மத்தியில் உள்ள ஈர்ப்பும் அதிலிருந்து நான் புரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதற்காக அதை தொடர்ந்து வாசித்தாக வேண்டும். அதை ஏற்பதும் மறுப்பதும் அதன் பின் நிகழ வேண்டியது. வாசிக்காமல் அந்த இடத்தை அடைய இயலாது. சிக்கல் அது எனது எண்ணத்தை நிலைப்பாட்டை மறுக்கும் பல கருத்துக்களை முன்வைப்பது என்னை தொந்தரவு செய்கின்றன. ஆனால் அவை என்னை மாற சொல்கிறதா? என கேட்டுக் கொண்டால் இந்த வாசிப்பு அதை நோக்கியதல்ல. நான் சார்ந்த உலகிற்கு வெளியே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது எனபதை இதன் வழியாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும். கண்களுக்கு தெரியும் நிதர்சணம் நான் வாழும் உலகை விட பல்லாயிரமடங்கு பெருகிய பெருவெளி எனக்கு என்ன சொல்ல வருகிறது என இந்த வாசிப்பு எனக்கு புரியவைக்கலாம். முதிரா இளமை காலகட்டத்தில் வைக்கம் முகமது பஷீர் எழுதிய சிறுகதை தொகுப்மையும் வாசித்திருந்தேன்என் வாப்பா வீட்டில் ஒரு யானை இருந்ததுஎன அதன் தலைப்பு இருந்ததாக நியாபகம்.

சிறுவயதில் துரதிஷ்டவசமாக பாரதிதாசன் எழுதிய பிரகலாத சரித்திரம் என்கிற நாத்திக பிரச்சார நூலை அதன் வகைமை தெரியாது வாசித்தது உருவாக்கிய அதிர்வு எப்போதும் தங்கி இருந்தது.


அதன் பிறகு முற்போக்கு என்கிற சொல்லே கடும் ஒவ்வாமையை உருவாக்கியது. அந்த முற்போக்கின் சாயலை புதுவையில் நிகழும் கம்பன் விழா மற்றும் காப்பிய விழாக்களில் பார்த்திருக்கிறேன். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள். இதை பெருமை என ஏன் நினைக்கிறார்கள். இவற்றை மறுக்கும் வாதம் எப்படி இருக்கும் என எண்ணுகிற அதே வேளையில் இதை செய்வதனூடாக பிற மனிதர்களின் தலைகளில் சென்று அமர்கிறார்கள். பிறரின் நம்பிக்கையை நகையாடுகிறார்கள். அதை தங்களது அடையாளமாக முன் வைக்கிறார்கள். அதற்கு நேர் எதிர்புறமாக பக்தி மரபிலக்கியத்தை மேலும் மேலும் பக்தியை நோக்கி செலுத்துவதாக நினைத்து அந்த அவையில் கூடியிருந்தவர்களை தவிர அதை தவிர்த்து தங்கள் அன்றாடங்கிளல் மூழ்கி இருந்தவர்களுக்கு இவர்கள் சொல்ல ஒரு சொல் இல்லை. இரண்டும் இரண்டு எல்லைகள் மத்தியில் மக்கள் கங்கையை போல பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வகை வாதங்களும் அவர்களை சென்று சேரப் போவதில்லை என்பது இன்னும் விந்தை.


ஜெயமோகனின் எழுத்தில் முதலில் ஒவ்வாமை இருந்தாலும் அதில் பிறிதொரு சாரம் இருப்பதை ஆழ்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. இனி வாசிக்காமல் இதை கடந்து செல்ல இயலாது என்பதால் அப்போது மனதளவில் ஒரு நெறியை உருவாக்கி கொண்டேன். வாசிப்பில் எழும் முரணை இரண்டு வகையாக பகுத்துக் கொள்வது .1.புதிய கருத்துக்களை ஏற்க இயலாமனால் அதை தர்க்கத்தில் வைத்து ஏற்பது. ஏற்க இயலாதவைகளை வாசித்து கடந்து செல்வது. 2. வாசிப்பின் தொடர்ச்சியில் எங்காவது அந்த முரண்களுக்கான சமாதானம் கிடைத்தால் அப்போது அதை ஏற்பது. ஒரு புள்ளியில் ஏற்க இயலாதவைகளையும் கடந்த வாசிப்பு காலத்தில் அதற்கான சரியான சமாதனம் கிடைக்க அவற்றில் பலவற்றை ஏற்க துவங்கினேன். அதன் பின்னரே மெல்ல இலக்கிய வாசிப்பு அறிமுகமானது


எழுத்தின் வழியாக எழுதாத சொல்லும் கருத்தும் மனதில் எண்ணமாக தோன்ற ஆரம்பித்தவுடன் அதில் முழுமையாக மூழ்க இயன்றது. எனக்கு ஆழ்மன அமைதியின்மைக்கு எதிராக அவரிடமிருந்து ஏதாவது பிடி கிடைக்கலாம் என்கிற நம்பிக்கையை அது அதிகப்படுத்தி இருந்தது . அவருடைய தளத்தில் நுழைந்து அத்தனையும் வாசிக்கத் துவங்கினேன். அப்போதும் அது இலக்கியம் பற்றிய கருதுகோலை புரிந்து கொள்வதற்கு அல்லஜெயமோகன்எனகிற அந்த ஆளுமையை அவதானிக்கும் பொருட்டு. என் இயல்பில் நான் ஒன்றை புரிந்திருந்தேன். எனக்குசொல்,சிந்தனை,செயல்பாடு என அனைத்தும் ஒரு நேர் கோட்டில் நிற்பவர்கள் மேல் உள்ள ஈர்ப்பு. அது இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட்டு வலிகிவிடுகிறேன். எனது ஆதர்சமாக உணர்ந்த மிக சிலரில் இதை உணர்ந்தே அவர்களுடன் பயணிக்க இயன்றது


ஜெயமோகன் எழுத்தும் அது எனக்குள் நிகழ்த்திய மகத்தான மாற்றம் அவரை நேரில் சந்திக்க வைத்தது. பின் எனக்கு நிகழ்ந்தவைகளை பற்றி முன்பே பதிவிட்டிருக்கிறேன். விரிவாக இதில் பின்னால் சொல்ல நினைக்கிறேன். கீதை உரை எனக்கு தனித்த ஒரு செய்தியை கொடுத்திருந்தது. அவரின் இந்து ஞான மரபு நூல் அனைத்து வகையிலும் எனது எதிர்பார்பை நிறைவு செய்திருந்தது. “திறந்த அரங்கிற்காகநான் தேடிக் கொண்டிருந்த பாடத்திட்டத்திற்கு மிக பொருத்தமான நூல். ஆனால் அதை வைத்து யாரை உள்ளே கொண்டுவர இயலும் என புரியவில்லை. வேளுக்குடி கிருஷ்ணனிடம் ஜெயமோகனின் நூல் பற்றிய அறிமுகம் செய்துதிறந்த அரங்கம்நிகழ்த்த இருக்கும் விவாதங்களில் அவருடன் மேடையில் தோன்ற இயலுமா என கேட்ட போது மறுக்காமல் சம்மதித்தார். இது பற்றி ஜெயமோகனிடம் முன்பே பேசி ஒப்புதலும் பெற்றிருந்தேன். அவர் சொன்ன ஒரே நிபந்தனை. என்னால் யார் பாதத்தையும் தொழ இயலாது என்பது மட்டும்


எனக்கு அதற்கான உடன்பாட்டை அப்போதே ஜெயமோகனிடம் சொல்லி இருந்தேன். முதல் முறையாக உலகளவிலான அறிஞர்களை அழைத்து்தத்துவ மாநாடு நிகழ்த்தும் திட்டம் அப்புது உருவானது. அதற்கான முழு பொறுப்பும் தான் ஏற்றுக் கொள்வதாக அவர் சொன்னார். எனது பொறுப்பு நிதி மற்றும் அறிஞர்கள் மேலான்மை மட்டும் என முடிவானது. அதற்கு எனக்கு குறைந்தது நூறு தன்னார்வளர்கள் தேவை. ஆயிரமாவது ஆண்டு விழா குழுவில் இருந்து அவர்களை தெரிவு செய்ய வேண்டும். முதலில் அதற்கான குழு அமைக்க வேண்டும் என முடிவு செய்து பெருமாள் ராமாநுஜம் , கோசகன் பட்டாசாரியார் மற்றும் DA.ஜோசப்பை தெரிவு செய்து அறிவித்தேன். DA.ஜோசப் நான் நினைத்த திட்டத்தை மிக திறமையாக கையாளக்கூடியவர். அவரைத்தான் தலைவராக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அது சிக்கலை அழைத்து வரும். முதல் நிலையில் கருத்துரு உருவான பிறகு அதை முன்வைத்து பின் அதை தொடர்ந்து திறந்த அரங்கை முன்னெடுக்கலாம் என திட்டமிட்டேன்


திறந்த அரங்கம் அறிமுக கூட்டம் மிக சிறப்பாக நிகழந்தது. அந்த கூட்டத்தில் நான் முன் வைத்த கருத்தை ஒட்டி யாராலும் பேச இயலவில்லை. அது நான் எதிர்பார்த்தது என்பதால் DA.ஜோசப்பை பேச அழைத்தேன். அன்று அவரது உரை மிக சிறப்பாக அமைந்தது. அவருக்கு பிறகு பேச வந்தவர்கள் மிக எளிதாக அவர் சொன்ன கருத்திலிருந்து தங்கள எண்ணத்தை வைத்தனர். எனக்கு அறிமுக கூட்டம் மிக் பெரிய வெற்றி இனி அடுத்த நகர்வு பற்றி திட்டமிட ஶ்ரீரஙகம் சென்று வேளுக்குடி கிருஷ்ணனை சந்தித்த போது அவர் DA.ஜோசப்பை ஏற்கவில்லை. அவரை தவிர பிற எவரையும் என் மனம் ஏற்வில்லை என்பதால் முழு திட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஜெயமோகன் சொன்ன மாற்று திட்டத்தை செயல்படுத்தும் சூழல் உருவாகி நின்றதை புரிந்து கொள்ள முடிந்தது

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

மணிவிழா 86 . * கைவிடப்படல் சொல்லும் செய்தியின் நுண்மை *

 ஶ்ரீ:



மணிவிழா - 86


01-09-2026





* கைவிடப்படல் சொல்லும் செய்தியின் நுண்மை *



   

ஒரு வகையில் ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு உருவாக்கப்பட்டது யாருக்காவும் இல்லை அது எனக்கானது மட்டும் என அதிர்வளிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன் . அப்படி எடுதுக் கொண்டால் மட்டுமே என்னால் அவற்றின் சிக்கலை மிக இயல்பாக அவிழ்க்கவும் அதன் நீண்ட இழைப்பிண்ணலை சிக்கல் விலக்கி நோக்கம் இயல்கிறது . அதன் பின் என் வாழ்கையில் நிகழ்ந்தவைகளும் அது இன்றுவரை என்னை கொண்டு வந்து அமர வைத்திருக்கும் இடமும் மனநிலையும் அதன் ஒருங்கமைவிற்கு பின்னால் அது நின்றிருக்கிறது என நினைக்கிறேன். பிரபஞ்ச விதிகள் யாருடைய ஊகத்திற்குள்ளும் வருவதில்லை என்றாலும் கடந்த சென்றவைகளை கொஞ்சமேனும் நினைவுகளில் நிறுத்தி அர்த்தப்படுத்திக் கொள்ளாமல் போனால் நிச்சயம் சில நல்ல விஷயங்களை இழக்க நேரிடலாம் . ஆம் இப்போது நான் உறுதியாக நம்புகிறேன் தனிப்பட்ட என் ஒருவனுக்காக மட்டுமே அந்த விழாக்குழு நிகழ்ந்து முடிந்ததும் அதில் நிகழாது போனதும் . அதிலிருந்து நான் பெற்ற அனுபவங்கள் மிக மிக தனிமையானவைகள், தனித்துவமானவைகள் என்பதை புரிந்து கொள்ள எனக்கு நீண்ட காலம் தேவையானது


அந்த கனவு நான் நினைத்தபடி ஏன் நிகழவில்லை. தனிமனித கனவுடன் இதை பொருத்த முடியாது குறைந்த பட்சம் தென்னகம் முழுவம் உள்ள ஆயிரக்கனக்கான வைணவர்களுக்கு சொந்தமானதும் நூற்றுக் கணக்கான கோவில்களில் சிலா மூர்த்தியும் காத்திருப்பதும். பின் ஏன் இப்படி என கேட்டுக் கொள்ளலாம். ஆனால் அங்கேயே தயங்கி நின்றுவிட்டால் அந்த கனவு பிறிதொரு தளத்தில் மிக தெளிவாக நிகழ்ந்து முடிந்திருப்பதை தவறவிட்டு விடுவேன் என நினைக்கிறேன். அது என்ன என அவதானிப்பதே இப்போதைக்கு தேவை. காரணம் அது எனது தனிப்பட்ட தேடலுக்கானது என்பதால் அந்த கனவு மேகம் போல கலைவதில்லை அது ஒரு போதும் பரு வடிவம் எடுக்காது. அதற்கான தர்க்க ரீதியான விளக்கம் என்பது என் தேடலை மையப்படுத்தியது என்பதால். அது ஒரு நுண்மான் நுழைபுலம் போல் ஒரு நுழைவாயில். என்னை எங்கு இட்டுச் சென்றது என்பதில் இருந்து அதற்கான தேவையை உருவகிக்க வேண்டி இருக்கும்


அவற்றை இன்னும் அணுகி அணுகி பார்த்து நேதி நேதி என்பது போல் இது நிகழவில்லை என்றால்,இது நிகழவில்லை. இது நிகழவில்லை என்பதால் இதன் பொருள் இதுவாகத்தான் இருக்கும் என்பதற்கான ஊகத்தை அடைய இயலும். நான் முன்னரே கணித்ததை இப்போது போட்டுப் பார்க்கலாம். அது நிகழ்ந்திருக்க வேண்டிய காலம் முழுவதுமாக கடந்து சென்று சுமார் பத்து வருடங்களாகிறது. என்றாலும் அதன் மிச்சல்கள் குறியீடுகள் போல எனக்கு எங்கும் காணகிடைக்கின்றன.


அகவயமான பார்வையால் அவற்றை மிக மிக யதார்த்மான நுட்பமான ஒன்றாக விளங்கிக் கொள்ள அனுமதிக்கலாம். இப்போது எதுவும் வெறும் ஊகமல்ல வரலாறு . இதில் மீளவும் ஊகம் என்பது இனி அதன் செல்திசையையும் அதன் உருவாக்கமும் உருவகிப்பும். ஆனால் பிறருக்கு அது விளங்க இன்னும் ஒரு நூற்றாண்டானாலும் ஸ்தூலமாக வெளிப்படாமல் போகலாம். அந்த காலத்தில் பிறப்பெடுக்க இருப்பவர்களுக்குமே கூட அது புரியாமல் போகலாம். ஆனால் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் முயற்சித்தால் அந்த காலத்தில் வாழும் கற்பனையை ஒட்டி என்னவெல்லாம் உருவகிக்க முடியும் என்பதில் அத்தனையும் இருக்கிறது . அப்போது காலமும் போனால் போகிறது என மனம் கனிந்து தன்னை சிறிதாளவாவது தன்னை திறந்து காட்டலாம். அந்த வெளிச்ச கீற்றை பார்பவன் வாழ்த்தப்பட்டவன். அவனுக்கு இது நீண்ட நெடிய காலத்தில் என்ன மாதிரியான விளைவை உருவாக்க இருக்கிறது என்பது பற்றிய பிடி கிடைக்கலாம்


இவ்வளவு பிரமாண்டமான நிகழ்வு என் ஒருவனை மையப்படுத்தியா? பின் அதை வேறு எப்படி எடுத்துக் கொள்வது . இலக்கை அடையா நிற்கும் பெருமுயற்சிகள் தயங்கி நின்றால் அது வேறு எதுவோ சொல்ல வருகிறதுபிற யாருக்கெல்லாம் அது என்னென்ன பொருள் படுமோ பின் அதுவே அதுவானது. பலர் தங்கள் உலகியல் லாபங்களை அதில் பார்த்தனர். சில அடையாளமற்றவர்கள் அதில் தங்களது புது அடையாளங்களை தேடினார்கள். பெரும் ஆளுமைகளுடன் நெருக்கமாக இருப்பதாக கனவு கண்டவர்கள் அதை நோக்கி சென்றார்கள். ஆன்மீகத்தில் தாங்கள் திளைத்திருப்பதாகவும் இறுதி சொட்டு தயங்கி தங்கள் தலைக்கு மேல் நிற்பதாக நினைத்தவர்கள் அதை பிறருக்கு ஓயாது சொன்னார்கள். பலர் தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள பிறருடன் கூச்சமற்று இணைந்தார்கள் முரண்பட்டார்கள்


இது அரசியலாக நொதித்து ஆறாக பல வாய்க்காலில் பாய்ந்து ஓடிய போது என்னால் அதை வேடிக்கை கூட பார்க்க இயலவில்லை. அவர்கள் எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களை அவர்களின் இடத்தை நோக்கி தள்ள நானும் அதில் இறங்கியாக வேண்டும். எனக்கு அதில் மனம் ஒப்பவில்லை. விழாக் குழுவின் மைய நோக்கம் மிக உயர்ந்த சம்பிரதாயம் மற்றும் தத்துவம் அதனின் நவீன உலகம் நோக்கிய பார்வை குறித்து. என்றாலும் இவர்களை பற்றி மிக நுணுக்கமாக அறிந்திருந்தேன்.


திட்டமிட்டபடி கருத்தியல் விவாதம் துவங்கி விட்ட பின் அதன் தாக்கத்தால் ஈர்க்கப்படுகிற ஒரு சிலரையாவது அடையாளம் காண இயலும் என்கிற தூரத்து கனவு இருந்தது. அடுத்த கட்ட நகர்வு இன்னும் தீவிரமானது என்பதால் அதற்கான நிர்வாக தகுதி கொண்ட சிலரையாவது அதற்குள் நான் கண்டடைய வேண்டும் என்கிற நிர்பந்தம் எனக்கு இருந்தது.இப்போது காணும் காட்சி இவர்களை ஒரு போதும் அங்கு அழைத்து செல்ல முடியாது போலும் என நினைக்கத் தோன்றியது. அப்போதைய ஏமாற்றம் நல்ல நிர்வாகிகள் கிடைக்கவில்லை என்பதைவிட அவர்களை கண்டடையும் சாதனமே இன்னும் கண்களுக்கு புலப்படவில்லை என்பதாக இருந்தது


ஆயிரமாவது ஆண்டு 2017 என்கிற இலக்கு நிர்ணயமாகிவிட்டது அதை நோக்கிய எனது பயணத்திற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்பாதல் ஐந்து வருடத்திற்கு முன்பாக அதாவது 2012 களில் அதன் துவக்கம் நிகழ்ந்தது.ஒவ்வொரு வருடமும் அடைய வேண்டிய இலக்கு என ஐந்து முக்கிய விஷயங்களை அப்போது அவதானித்திருந்தேன் 


1.முதல் வருடத்திற்குள் 2012 . அனைத்து சம்பிரதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அரசாங்கம் மற்றும் தொழிற்துறையின் பெரும் ஆளுமைகளையும் உள்ளடக்கிய மாநில அமைப்பு துங்கப்பட வேண்டும் அத்துடன் பத்திற்கும் அதிகமான துணை கமிட்டிகள் அவற்றன் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.அவை உடனடியாக செயல்பாட்டிற்கு வரவேண்டும். முதலாவது நிர்வாக கமிட்டி கூடுகை. அத்துடன் அடுத்த ஐந்து வருடத்திற்கான முழு திட்ட வரைவு சமர்பிக்கப்பட வேண்டும்


நிதி ஆதாரம் வேளுக்குடி கிருஷ்ணன் ஐந்து வருட தொடர் உபன்யாசம் மற்றும் காலஷேபம் வழியாக மற்றும் திருப்பதி சின்ன ஜீயர் தலைமையில் நிகழவிருக்கும் 1008 பரமாண்ட ஹோமம் வழியாக தேவை படும் 3 முதல் 5 கோடி வசூலை மிக எளிதில் அடைய இயலும் அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஐந்து வருட நிகழ்வுகள் முழுவதும் தனிப்பட்டு மிக சிலரின் நிதி உதவியுடன் நிகழ்ந்தது. வசூல் என எங்கும் நிகழவில்லை. அன்றைய சூழலில் நிர்ணயித்த தொகையை விட இரண்டு மடங்கு பெரும் வசதி வாய்ப்புகள் இருந்தன. எனது ஒரே சிக்கல் அவ்வளவு பிரம்மாண்டமான நிகழ்வை ஒருங்கினைக்கும் நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து நியமிப்பது. அனைத்தும் திட்டமிட்டபடி நிகழ்ந்து முடிந்தது. அதில் தொக்கி நின்றதுதிறந்த அரங்கம்என்கிற மதப் பாகுபாடு இல்லாத அறிஞர்கள் கூடி விவாதிக்கும் அரங்கு. அதன் தலைமையை நான் இன்னும் தெரிவு செய்யவில்லை காரணம் பின் அந்த மொத்த கமிட்டியும் அதன் உறுப்பினரும் அவரின் தெரிவுபடி அமைந்துவிடும் அது ஒரு கால் மைய திட்டத்திற்கு எதிராக இருக்கலாம் என்கிற அச்சம் காரணமாக அதற்கான தலைமையை தெரிவு செய்யவில்லை.


இவை அனைத்தும் மிக சரியாக துவங்கி எனக்கு மிகுந்த நம்பிக்கையை உருவாக்கி இருந்தது. திறமை வாய்ந்த நிர்வாகிகளை தெரிவு செய்யும் வாய்புள்ள பல களங்களை உருவாக்கி இருந்தேன் அங்கிருந்து அவர்களை மிக எளிதில் பெற இயலும் என்கிற நம்பிக்கை இருந்தது


முதல் வருட விழாக்குழுவின் துவக்கம் மிக மிக பிரம்மாண்டமான முறையில் அது மூன்று நாள் நிகழ்வாக ஒருங்கி இருந்தது. திருக்கோவிலூர் ஜீயர் மற்றும் வேளுக்குடி கிருஷ்ணன் பங்கு கொண்ட விரிவான ஏற்பாடு. சுமார் நான்காயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருந்தது


2. இரண்டாவது வருடத்திற்குள் 2013 திறந்த அரங்கமும் அதன் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் நியமனம் உடனடி செல்பாட்டிற்குள் வர வேண்டியது


முதல் இடற் இதில் துவங்கியது. “திறந்த அரங்கம்எனப்படும் தத்துவ உரையாடல் மற்றும் விவாதம் நிகழும் அரங்கத்தை ஒருங்க முதல் வருடம் முதலே துவங்கி இருந்தேன். அது சம்மந்தமாக  பல கூட்டங்கள் பல நூறு தனிப்பட்ட சந்திப்புகள் என வைணவ மற்றும் அறிவுத்துறையை சேர்ந்த ஆளுமைகளுடன் தொடர் விவாதம் உரையாடல் என பலமுறை முயற்சித்து அது நிகழவில்லை. இன்னும் ஐந்துவருடம் இருப்பதால்  தொடர்ந்து முயற்சிக்கலாம் என நினைத்தேன்.


இருபதுக்கும் அதிகமான துணை அமைப்புகள் மிக பிரமாதமாக செயல்பட்டுக் கொண்டிருந்தன. மனதளவில் அந்த குழுக்களில் இருந்து 16 பேரை தெரிவு செய்திருந்தேன். ஆனால் அறிவிக்கவில்லை. அனைவருக்கும் தலைமை நிர்வாக கூட்டத்தில் ஒரு முறையாவது கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் இருந்தது. அவர்களை கவர என்னிடம் உள்ள ஒரே தூண்டில் அது மட்டுமே. காரணம் தலைமை நிர்வாக கமிட்டியில. இருந்தவர்கள் புதுவையின் பல்வேறு துறைகளை சேர்ந்த நட்சத்திர ஆளுமைகள்


3. மூன்றாவது வருடத்தில் 2014முழு திட்ட செலவிற்கான வரைவு மற்றும் நிதி திரட்டல் பற்றிய திட்டமிடல் வில்லியனூரில் நடைபெறும் கூடுகையில் அதன் போஷகர்கள் உள்ளடக்கிய கூட்டம் நிகழ வேண்டும்


வில்லியனூரில் பெரும் திட்டமிடலுடன் துவக்கப்பட்ட வேளுக்குடி கிருஷ்ணனின் உபன்யாசம் அவரது தனிப்பட்ட காரணத்தினால் கடைசி நிமிடத்தில் ரத்தானது எனக்கு பெரிய அதிர்வை கொடுத்திருந்தது. திருப்புலிங்குடி கோயில் திருப்பணியில் அவர் அப்போது முழுமையாக ஈடுபட்டிருந்தார். அதுவரை எல்லா சம்ரோஷ்ணத்திற்கும் ஆதரவு அளித்து வந்தார். முழுமையாக ஈடுபட்டது திருபுலிங்குடி கோவில் சம்ரோஷணம். அதில் ஏதோ ஒரு வகையில் மனம் கசந்து போனார். நிச்சயம் அது நிகழ்வு ஒருங்கிணைப்பில் நிகழ்ந்திருக்கலாம். அவரிடம் தொலைபேசியில் பேசிய போது. புதுவை நிகழ்விற்கு வர இயலாததை தெரிவித்தார் காரணம் கேட்ட போதுகொஞ்ச காலம் ஶ்ரீரங்கத்தோடு போகலாம் என்றிருக்கிறேன்என்றார். அது என்ன ஶ்ரீரங்கத்தோடு போவது? எனக்கு விளங்கவில்லை.அவரின் பெரிமுயற்சியில் நிகழ்ந்த திருப்புலியூர் திவ்யதேச திருப்பணியில் ஒருங்கிணைப்பில் அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட வருத்தங்கள். வைணவ உலகம் பிரமுகர்கள் எல்லா சந்தர்பங்களிலும் மிக எளிய மானிடர்களாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் வட்டம் எவ்வளவு சிறியது என்பதும் அவர்களை ஒரு போதும் அதில் இருந்து வெளியில் அழைத்து செல்ல இயலாது என்பதுடன் அவர்கள் வேளுக்குடி கிருஷ்ணன் பற்றிய மதிப்பீடு அவரின் நம்பிக்கை சிதைத்தது. வைணவ ஆன்மீக உலகம் எத்கைய இருளில் இருக்கிறது என்கிற செய்தி அவருக்கு பெரும் உளச்சோர்வை கொடுத்திருந்தது. இது ஒரு வகையில் எனக்கு உணர்த்திய புரிதல் மிகத் தெளிவானது. என்னை நிதானிக்கச் செய்த செய்திகள் அவை


ஒன்றன்பின் ஒன்றாக வந்த செய்திகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய சொல்லிற்று. தடைகள் பெரிதாக வளர்கிறது அல்லது நிஜ உலகின் இருள் மெல்ல எழுந்து வருகிறது என்பது புரிந்தது. திருப்பதி சின்ன ஜீயர் தனதுமலை புராஜக்டைகைவிட்டார் என்கிற செய்தி வந்து சேர்ந்தது. அது சொல்லும் தகவல் மிகத் தெளிவானது. மனம் மிகவும் சோர்வுற்று யாரையும் சந்திப்பதில்லை எந்த நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்திருந்தேன். இடைப்பட்ட அந்த காலத்தில் தனித்திருக்க விரும்பினேன். எனது குருவான நம்மாழ்வாரின்திருவாய் மொழிக்குஒரு எளிய நவீனபாணி விளக்கம் எழுதிப்பார்த்தால் என்ன என தோன்றி உடன் செயலில் இறங்கினேன். முதல் பத்து பாடல்களுக்கு உரை போல ஒன்று எழுத துவங்கிய போது மண்டையில் அடித்தது போல ஒரு செய்தி புரியவந்தது. என்னிடம்மொழி இல்லைகருத்துக்களை மொழி வடிவில் கொடுக்கும் ஆற்றல் இல்லை என்பது புரிந்து போனது. மிக இளமை முதலே தமிழில் எண்ணங்களை மிக தெளிவாக கட்டுரையாக செய்தி குறிப்பாக எழுதி இருக்கிறேன். இளஞர் காங்கிரஸின் செய்தி குறிப்பிகளை எழுதி தருவது நானும் கமலக்கண்ணனும். இருவரும் இணைந்து எழுதிய பல செய்தி தகவல்கள் மிக பிரமாதமாய அமைந்தவை அந்த நினைப்பில் துவங்கிய போது ஆழ்மனம் சொன்ன செய்தி வேறு விதமானது

புதிய பதிவுகள்

மணிவிழா 87. * முடிவுற்ற செல்திசை*

ஶ்ரீ : மணிவிழா  - 87 04-09-2026 *  முடிவுற்ற   செல்திசை  * தென்னிந்தியா முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஆயிரமாவது ஆண்டு விழா குழு ...