https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 8 ஆகஸ்ட், 2026

அடையாளமாதல். * மனசாட்சி *

 


ஶ்ரீ:



பதிவு : 699  / 888/ தேதி 08 ஆகஸ்ட்  2026




* மனசாட்சி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 96.


திட்டமிடப்பட்ட நிகழ்விற்கு பின்னால் இருந்த நிஜ சிக்கல் மாரிமுத்துவின் தீவிர ஆதரவாளர்கள். ஊசுடு தொழிற்சாலைகளால் சூழ்ந்த பகுதி. அந்த நிறுவனங்களில் சில மாரிமுத்துவின் ஆதரவாளர்களில் சிலரை தேர்ந்தெடுத்து தங்கள் அரசியல் லாபத்திற்கு உபயோகப்படுத்துக் கொண்டன. அதற்குறிய சன்மானம் அவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது. அவைகளில் பெரும்பாலான தொழிற்சாலைகள் விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகில் இருந்தது உதாரணத்திற்கு சேதராப்பட்டு,கரசூர்,துத்துப்பட்டு போன்ற கிராம குடியிருப்பிற்கு மத்தியில் அவை அமைந்திருந்தன. அது பெரிய விதிமீறல். அரசாங்கத்தில் பலரை ஒழுங்குகட்டி அந்த நிறுவனங்கள் அங்கு நிறுவப்பட்டு இயங்கி வந்ததால் அதிலிருந்து எழும் பலவித மாசுகள் குடியிருக்கும் மக்களை நேரடியாக பாதித்தது. அரசாங்க துறைகள் யாவும் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் இருந்தார்கள் என்பதால் நிர்வாகம் யாருக்கும் அஞ்சாதவர்களாக உருவெடுத்திருந்தது . அவர்களுக்கு எதிரான போராட்டங்கள் காவல்துறையின் உதவி இல்லாமல் அவர்களாக நேரடியாக ஒடுக்க ஆரம்பிக்க சிக்கல் கொதிநிலையை அடைந்தது. இளைஞர் காங்கிரஸ் தொடர் போராட்டம் வழியாக நிலைமை சீர்பட்டாலும் அது புகை மூடிய நெருப்பாக இருந்தது. இதுபற்றி விரிவாக பழைய பதிவுகளில் சொல்லியிருக்கிறேன்


மாரிமுத்துவின் ஆதரவாளர்கள் சிலர் அந்த நிறுவனங்களிடம் இருந்து பணமும் சலுகைகளையும் பெற்றுக் கொண்டிருந்ததால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக பொதுமக்கள் எழுந்து விடாத படிபார்த்துக்கொள்ளப்பட்டனர். காங்கிரஸ் இளைஞர் அமைபிற்கும் அவர்களுகளுக்கும் எப்போதும் விரோதம் இருந்தது எனவே இளைஞர் காங்கிரஸ் அமைப்பு பலம் பெறுவது இரண்டு தரப்பிற்கும் ஏற்றதல்ல என்பதால் இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கு விரோதமாக பாலன் காலத்தில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அவர்களை இப்போது ஒரே அணியில் கொண்டுவருவதில் உள்ள சிக்கல் குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்துவிடம் பேசினேன். அந்த பிளவு மாரிமுத்து தனது அரசியல் காரணமாக வளர்த்தெடுக்கப்பட்டது இப்போது அதை பாசறைக்கு திரும்ப சொல்வதில் அவருக்குள்ள வலியை உணர்ந்து கொள்ள முடிந்தது அதை வெளிக்காட்டிக்  கொள்ள விரும்பவில்லை அது பற்றி தெரிந்தவனாக நானும் என்னை காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதன மூலம் எல்லா தரப்பிற்கும் சாதகமான சூழல் உருவாகலாம் என நினைக்கும் சில ஊகங்களை அவரிடம் முன் வைத்தேன்.   


மாரிமுத்துவின் சமீபத்தில் நிகழ்ந்த தேர்தலில் தோல்வியுற்றதில் இருந்து அவரது ஆதரவாளர்கள் தங்களுக்குள் எழுந்த முரண் உள்ளிட்ட வேறு பல வேறு காரணங்களால் பிரிந்து கிடந்தனர். அவர்களின் முதன்மை ஆதரவாளன் என அறியப்பட்ட நபரின் தலைமையில் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரு சிறு கூட்டத்துடன் எதிர்கட்சிக்கு சென்றுவிட்டனர் அவர்கள் ஊருக்குள் யாரை வேண்டுமானாலும் எங்களுக்கு எதிராக தூண்ட முடியும். நிகழ்வில் எங்காவது வரு இடத்தில் அமைப்பிற்குள் கடும் மோதல் உருவாகும் சூழல் நிலவியது. அப்படிப்பட்ட  உருவானால் அது எனக்கு எதிரானதாக சண்முகம் முன் வைக்கப்படும். இதை என்றாவது ஒருவித்தில் எதிர் கொண்டேயாக வேண்டியது. அதை மறுத்தே எனது இடத்தை நான் நிறுவிக்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் அனைவரவையும் இணைக்கும் வாய்ப்பு உருவாகி நிற்கிறது. எளிய அச்சத்தின் காரணமாக இதை தவறவிட்டால் பின் பிறிதொரு சந்தர்பம் வாய்க்காது.அதை மாரிமுத்துவிடம் தெளிவாக கூறினேன். இன்றைய கள உண்மை நிலவரம் அவர் உருவாக்கி எடுத்த அமைப்பு நீர்த்து இன்று ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு ஆதாயத்தை பங்கு பிரிப்பதில் உள்ள சர்ச்சையில் நாங்கள் மூன்றாவது தரப்பினர். அமைப்பு ரீதியாக பெரும் கூட்டம் இதில் நாங்கள் ஏதாவது ஒரு தரப்பை ஆதரித்தால் அதில் எழும் தீவிரம் பின் ஒரு அணையாது என்பது மட்டுமல்ல உயிர் பலியை தடுக்க இயலாது. நான் இதற்கு முற்றும் எதிரான நிலைப்பாட்டில் இருந்தேன்


மாரிமுத்து அதை உருவாக்கினாலும் இன்று அது எதற்கும் கட்டுப்படாத கூட்டமாக நிற்கிறது. எதிர்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கும் சூழலில் அவரும் உள்நுழைந்தால் யாரும் யாரையும் காப்பாற்ற இயலாது. இன்று எங்களை ஆதரிப்பதை தவிற அவருக்கும் வேறு வாய்ப்புகள் இல்லை என என்னைவிட அவருக்கு தெரிந்திருந்தது. ஒருவாறு உடன்பட நிகழ்வு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இன்று நிகழ இருக்கும் நிகழ்ச்சி மாநில காங்கிரஸ் அமைப்புடன் இணைந்து நடைபெற இருப்பது. இயல்பில் இரண்டும் இருபது ஆண்டு காலம் எதிரெதிராக நின்றிருந்த சூழல் மாறி இன்று இணைந்து ஒரு நிகழ்வை நடத்த முயற்சிக்கும் வாய்ப்பு. அது எனக்கு தனிப்பட்டு தலைவர் சண்முகம் ஏற்ற திட்டம். அதை இளைஞர் காங்கிரஸ் நிகழ்வாக மாற்றியது இரு அமைப்பிற்குள்ளும் இருந்த முரண்களை சிறிதாவது சரி செய்யும் முயற்சி.  


முதல் முயற்சியில் தோல்வியடைய தேரிட்டால் எனது பாதையை மாற்றி யோசிக்க வேண்டி இருக்கும் எது எப்படி  ஆயினும் இன்று எனக்கு மட்டுமே என திறந்திருக்கும் கதவின் வழியாக நான் எல்லோரையும் அழைத்துச் செல்லவேண்டும். துரதிஷ்டவசமாக இன்று அமைப்பில் சீனியர் ஜூனியர் என எவரும் இல்லை அது ஒருவகையில் ஆட்டத்தை கலைத்து ஆட எனக்கு வாய்ப்பளிக்கும் அதே சமயம் எனக்கான இடம் அவர்கள் அமர்ந்திருக்கும் பீடத்திற்கு மேல உருவாக வேண்டியது. பீடம் உருவாகாமல் போனால் எனக்கான இடம் எப்பதைக்கும் அல்லாமலாகும் . நான் எனக்குள சொல்லிக் கொண்ட ஊழ்க நுண்சொல் இது. மிக மிக கவனமாக ஒவ்வொரு நகர்வாக சென்று கொண்டிருந்தது. அதுவும் ஏறக்குறைய இதைவிட விரிந்த நிலையில் அரங்கேற்றப்பட்டாலும் அதன் மைய விசையை இழந்து நிற்காமல் பாரத்துக் கொள்ள வேண்டும். எதிர்பாளர்கள் என திரண்டிருப்பவர்கள் இன்று அமைப்பென ஏதும் இன்றி அரசு அதிகாரத்திற்காக செய்து கொண்ட சமரங்கள் அதனுள் அடங்கா முள் என குத்தி வெளிக்காட்டி நிற்கிறது என்பதால் தலைவர்கள் என யாரையும் நான் சென்று பார்க்கவில்லை. அதி காங்கிரஸின் மாநில தலைமை செய்ய வேண்டியது என அதிலிருந்து விலகி நின்றேன். அதற்கு முக்கியமான வேறு காரணங்களும் இருந்தது. தொகுதி தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நிலமுடை சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்களை நான் சென்று சந்திப்பது சரியாக இருக்காது என்றேன் . இளைஞர் காங்கிரஸின் இத்தனை கால அரசியல் இழப்பை இனியாவது ஈடு செய்தாக வேண்டும் என்பது நீண்ட கால கனவு அது நிகழும் காலம் ஒன்று வரும் என நான் கற்பனையிலும் நினைத்ததில்லை. இன்று ஊழ் என் அருகே நின்றுஎன்ன செய்யப் போகிறாய்?” என கேட்டு நிற்கிறது.


அரசியல் கைவிடப்படுதல் துரோகங்களால் முன் நகர்பவை இந்த இரண்டும் அதன் வளர்ச்சி சக்தியாக புரிந்து கொள்ளப் பட்டிமிருக்கிறது என்பதால் அது ஏற்கப்படும் செயல்முறை என வகுக்கப்பட்டு விட்டது. அதன் விளைவு என்ன என்பதை நன்கு அறிந்திருக்கிறேன். இதுநாள் வரை எனது அரசியல் அந்த இரண்டு மாற்றமில்லாத விதிகளுக்கு எதிரானவை. என் அரசியலை அப்படித்தான் உருவாக்கிக் கொண்டேன்என் சொந்த அமைப்பின் உறுப்பினர்களே நான் அவர்களை சென்று சந்திப்பதை விரும்பமாட்டார்கள். எந்த திட்டம் முன்வைத்தாலும் அதை ஏற்க மறுக்கலாம் மேலும் என்மீதிருக்கும் நம்பிக்கையை அது குலைத்துவிடும் என் அரசியலே நிலமுடை சமூகத்தை எதிர்த்து இளைஞர் அமைப்பை வெளிக் கொண்டுவருதுலில் இருக்கிறது. மூச்சடைக்க வைத்திருக்கும் சூழலில் இருந்து அவர்களை மீட்டாக வேண்டும்.


மாரிமுத்து இறுதி முடிவு எடுக்கும் முன்பு ஊர் பெரியவர்களை அஞ்சினார். அவரிடம் நான்ஊசுடுவில் எனக்கு எதிராக நிகழ்வது நிகழட்டும் அதை எதிர் கொள்ளும் ஆற்றலுடன் இருக்கிறேன் நான் அவற்றை இங்கு எதிர் கொள்ளும் முறை பின் எந்த தொகுயிலும் எனக்கு எதிர்ப்பில்லாமல் செய்து கொள்ளும் யுக்தியிலானது என்பதால் அவர்பளுடன் எனக்கு எந்த உடன்பாடும் தேவையில்லை. அவர்களின் செல்வாக்கு தொகுதியில் காலாவதியாகி விட்டதை தலைவர் புரிந்து கொள்ளாது இருக்கலாம் . ஆனால் நான் களத்தில் நின்று வளர்ந்தவன் இங்கு உள்ள உண்மை நிலை எனக்கு தெரியும்என்றேன்.இணைந்து செயல்படுவது என்கிற முடிவுடன் அவரது வீட்டில் இருந்து வெளியே வந்தேன்


வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

அடையாளமாதல். * கனவை நிகழ்தல் *

 



 

ஶ்ரீ:



பதிவு : 698  / 887/ தேதி 07 ஆகஸ்ட்  2026





* கனவை நிகழ்தல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 95.




அரசியலில் சில சமயங்களில் காய்கள் மிகச் சரியான இடங்களில் சென்று அமர்வது நிகழ்ந்து விடுகிறது. அப்போதும் அதுதான் நிகழ்ந்தது. இளைஞர் காங்கிரஸ் அவரை முன்னிறுத்திய இயக்கமாக உருவெடுத்தது அது நேரடியாக சண்முகத்தின் அதிகாரத்தை அறைகூவுவது. அதற்கு முன்பாக காங்கிரஸ் இரண்டு பிளவாக இன்டிகேட் சின்டிகேட் என செயல்பட்டதற்கு பின்னால் அதன் அடிப்படை காரணமாக இருந்ததில்லை. சண்முகத்திற்கு எதிராக கிடைத்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த குழுவில் கண்ணன் இரண்டாம் நிலை தலைவராக மட்டுமே அறியப்பட்டார். இந்திராகாந்தி அகில இந்திய அளவில் தனது அரசியல் இருப்பை மீட்டெடுத்த போது மூத்தவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு திரும்பவும் இந்திரகாந்தியை ஏற்பது அல்லது அரசியலை விட்டு விலகுவது. மூப்பனார்,பா.ராமசந்திரன் வெங்கட்ராமன் போன்றவர்கள் இந்திரா காந்தியின் தலைமையை ஏற்று கட்சிக்கு திரும்பினர் மற்றவர்கள் ஜனதா மற்றும் பிற கட்சியில் இனைந்து பின்னர் மெல்ல காணாமலாயினர். புதுவையிலும் அதுவே நிகழ்ந்தது. கண்ணன் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட போது ஏற்பட்ட முரணால் இளைஞர் காங்கிரஸை முன்னகர இயலாமல் செய்துவிட்டார் சண்முகம் . கண்ணன் அரசியலில் எதிர்மறை சக்தியாக உருவெடுப்பார் என மிகச் சரியாக கணித்தவர் அதை எதிர் கொள்ள எந்த மாற்று கருவியையும் வைத்திருக்கவில்லை. அது ஒரு அரசியல் பிழை என்பதை நிரூபிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிக ஆபத்தான ஆட்டம் என்றாலும் என்னை நிலைப்படுத்தி நான் நினைத்ததை செய்ய அது உதவும் என்பதால் முயற்சித்து பார்ப்பது என்கிற முடிவில் இருந்தேன். அதன் பின்னணியில் மாநில அரசியலில் உருவான வெற்றிடம் அதை செய்து பார்க்கும் துணிவை கொடுத்தது


1996 களில் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பிறகு கட்சியின் அனைத்து மாநில அமைப்புகளும் நீண்ட உறக்கத்திற்கு சென்றன. கட்சி அலுவலகங்களில் நடைபெறும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களின் இறந்த நாள் பிறந்த நாள் கொண்டட்த்திற்கும் கூட கூட்டம் வராமலாகியது. தோல்வியின் சோர்விலிருந்து மீண்டெழும் சந்தர்பத்திற்காக சண்முகம் காத்திருந்தார். தோல்விக்கு பிறகு இப்படி நிகழும் என பேசிக் கொண்டே இருந்த போதுதான் எனக்கு மிகுந்த செல்வாக்குள்ள தொகுதிகளில் ஒன்றான ஊசுடுவில் ஒரு கொடியேற்றும் நிகழ்வை தொடங்கி பின் அதை மாநிலம் முழுவதும் செய்தால் என்ன? என அவரிடம் கேட்டேன். கட்சியின் உறக்கத்தில் இருந்து எழுப்ப ஒரு சந்தர்பாக அதைப் பார்த்தாரா அல்லது எதாவது செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்க வேண்டும் என நினைத்தாரா என தெரியவில்லை. அதற்கான ஏற்பாடுகள் தொடங்கபட்டு நிகழும் நாளும் குறிக்கப்பட்டது. நான் ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் இளைஞர்களை அழைத்து முழு திட்டம் பற்றி விவாதித்தேன்


மிக விரிவான ஒரு முழு நாள் என நீளும் அடுத்து 15 முதல் 30 நிமிடங்கள் நீளும் நிகழ்வுத் துளிகள் திட்டமிடப்பட்டு காலை 9:00 மணிக்கு சேதராப்பட்டில் துவங்கி இரவு 11:00 மணிக்கு அரியூரில் பொதுக் கூட்டத்துடன் நிறைவு என ஒருங்கப்பட்டது. முழு நிகழ்வையும் தலைவர் சண்முகத்திடம் சொன்ன போது அவர் விரிவான நிகழ்வு குறித்து எனது விவரிப்பை கேட்டு திகைப்படைவதை பார்க்க முடிந்தது. திரும்ப திரும்ப நிகழ்வு வெற்றி பற்றிய தனது சந்தேகத்தை கேட்டுக் கொண்டே இருந்தாலும் வேண்டாம் என சொல்லவில்லை . நான் எனது திட்ட வெற்றி பற்றி பேசும் சூழல் அதுவல்ல என உணர்ந்திருந்தேன். சற்று எதிர்மறை எதார்த்தம் பேசுவது நல்லது என தோன்றி அவரிடம்எதிர் கட்சியாகி நிற்கும் சூழலில் இந்த நிகழ்வு தோல்வியடைந்தாலும் நாம் இழக்க ஒன்றுமில்லைஎன சொன்னேன் நான் சொன்ன முறை அவருக்கு ஏற்புடையதாக இருந்திருக்க வேண்டும். அதை தவிர்த்து வேறு விஷயங்களுக்கு உரையாடல் தாவிவட்டிருந்தது


குறிக்கப்பட்ட நாளில் நிகழ்வு சேதராப்பட்டில் துவங்கியது. நான் எனது நீண்ட நாட்கள் திட்டமிட்டிருந்தபடி அந்தந்த பகுதியின் விளிம்பு நிலை சமூக இளைஞர்களை முழுவதும் திரட்டி இருந்தேன். அதை பிழையின்றி ஒருங்க கிராமம் கிராமாக சிறு சிறு கூடுகை வழியாக அரசியலில் நிகழ இருக்கும் மாற்றம் பற்றியும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் விரிவாக விவாதித்து அந்தந்த ஊர் பெரியவர் முன்னிறுத்தி இது நிகழ வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். பெரியவர்களுக்கு நான் பேசியதில் பெரிய ஆர்வமில்லாமல் போனாலும். மாநில முதல் நிலை தலைவர்கள் ஒரு நாள் முழுவதும் தங்கள் தொகுதியில் இருப்பார்கள் அவர்களுடன் நாள் முழுவதும் பயணிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளும். அந்தந்த பகுதியில் அவர்களின் பெயர்கள் தலைமை மற்றும் முன்னிலை என்றிருக்க வேண்டும் என்கிற தகவல் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் இதே தலைவர்கள் சந்திக்க வந்து அவர்கள் முன்வைத்த வேட்பாளரை ஆதரிக்கும் கோரிக்கையை நிராகரித்து தங்கள் வெறுப்பை வெளிக்காட்டி இருந்தார்கள். அதன் விளைவு காங்கிரஸ் கட்சியின் மூத்த வேட்பாளர் மாரிமுத்து தோற்கடிக்கப்பட்டிருந்தார். அது நிகழ்ந்த ஓரிரு மாதங்களில் ஏறக்குறைய அதே போன்ற நிகழ்வுகள் தங்கள் தலைமையில் நிகழ இருப்பது ஏதாவது சிக்கலில் கொண்டு விடுமோ? என்கிற கவலை கொள்வதை பார்க்க முடிந்தது. கட்சி அல்லது கட்சி தலைவர்களின் மீது கடந்த ஐந்தாண்டுகள் உருவான கோபம் நடந்த முடிந்த தேர்தலில் வெளிப்படுத்திய திருப்தி அடைந்த நிமிடம் அந்த கோபம் காணாமலானதை பார்க்க எனக்கு விந்தையாக இருந்தது. இவர்களின் கோபம் ஒரு தேர்தலுக்கு பிறகு காலாவதியாவதை எப்படி புரிந்து கொள்ள. எவ்வளவு எளிய மக்கள் என்கிற எண்ணம்தான் முதலில் தோன்றியது


அதை தொடர்ந்து சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாய்பை இழந்திருந்த மாரிமுத்துவை சந்தித்து நிகழ்வு பற்றி பேசினேன். அவரது கண்களில் அடிப்பட்ட வலியை பார்க்க முடிந்தது. எனது திட்டம் அவரை பதற்றத்தில் கொண்டு விடுவதை உணர்ந்தேன் . மாரிமுத்துவுடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு இருந்ததில்லை. அவர் என்னை தனக்கு எதிரானவனாக பார்த்தார். இப்போது பழைய விஷயங்களை பேசுவதில் அர்த்தமில்லை. நான் அவரிடம் அவரது தோல்வக்கான காரணம் என்ன என்பதை அதை அவர் அறிந்திருப்பார் என நினைத்தேன் அதை மு்ன் வைத்து பேச முயன்றேன். அவர் கட்சிக்கு சீட்டு கேட்டு சண்முகத்தை சந்தித்த போது அங்கிருந்தேன். அவர் மீதிருந்த வெறுப்பினால் உள்ளூர் தலைவர்கள் வேறு ஒருவரை முன் மொழிந்தனர். ஆனால் ஒரு சிறிய வேறுபாட்டை அப்போது நான் உணர்ந்தேன். அவர்கள் முன்வைத்த வேட்பாளருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவர் கண்ணன் தலைமையிலான தமாகா வில் இணைந்து வெற்றிபெற்றார். இதில் வினோதம் மாரிமுத்து அந்த தொகுதியில் வசிக்காமல் போனாலும் நகரில் உள்ள அவரது வீடு சட்டமன்றத்திற்கு மிக அருகில் என்பதால் நாள் முழுவதும் அங்கு தொகுதி மக்கள் திரள்வதையும் அவர்களை உபசரிப்பதுமாக மாரிமுத்தை பார்த்திருக்கிறேன். இப்போதைய வேட்பாளர் அவர்கள் தொகுதியில் வசித்தாலும் சென்று சந்திக்க முடியாமலான போதுதான் தங்கள் தவறை உணரத்துவங்கினர்


மாரிமுத்துவிற்கு நிலமுடை சமூகத்தில் அரசியல் காரணங்களுக்கு அப்பால் தனிப்பட்ட விரோதம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. அதை இப்போது பயன்படுத்த முயன்றேன். இளைஞர் காங்கிரஸ் அவருக்கு ஒருபோதும் எதிர் நிற்காது என்றும் அடுத்த முறை தேர்தலின் போது ஊர் பெரியவர்கள் முன் சென்று சிறுத்து நிற்க வேண்டிய தேவை இருக்காது என சொன்னேன். நான் நிலமுடை சமூகத்தின் ஆதிக்கத்திற்கு எதிரான அரசியலை மாநிலம் முழுவதும் முன்னெடுத்துக் கொண்மிருக்கிறேன் எந்த தொகுதியிலும் அவர்களுடன் எனக்கு சமரசமில்லை இத்தனை ஆண்டு காலம் இளைஞர் காங்கிரஸ் இழந்த அரசியல் பாதங்களை சரி செய்து அந்த தடத்தில் சென்று அது வெற்றி பெருவது பற்றிய கனவை சொல்லியிருந்தேன். அது நிக்ழந்தால் அடுத்த மாநில கட்சி நிர்வகிகளில் 75 விழுக்காடு இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்களாலக இருப்பார்கள். அதை செய்து முடித்தால் அரசியலில் தனக்கான இடத்தை யாரிடமும் சென்று யாசகம் கேட்காமல் சென்று அமர்வது  பற்றிய திட்டத்தை அவரிடம் சொன்னேன்


அவர் இணங்கினாலும் மறுப்பு தெரிவித்தாலும் இந்த நிகழ்வு நடைபெற போகிறது என சொல்லி அவருக்கு முடிவு செய்ய அவகாசம் அளித்து விடை பெற்றேன். அன்று மாலை என்னை வீட்டில் வந்து சந்திப்பார் என எதிர்பார்கக வில்லை. வந்த போது எனது திட்டத்தை முழுவதும் செயல்படுத்துவதாக வாக்களித்தால் உடன் நிற்பதாக சொன்னார். நானும் என் நிலைபாட்டில் எந்த மாறுதலும் இருக்காது அவருக்கு வாக்களித்தேன்


புதிய பதிவுகள்

அடையாளமாதல். * மனசாட்சி *

  ஶ்ரீ : பதிவு : 699  / 888/ தேதி 08 ஆகஸ்ட்   2026 * மனசாட்சி *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 96. திட்டமிடப்பட்ட நிகழ்விற்கு...