ஶ்ரீ:
பதிவு : 698 / 887/ தேதி 07 ஆகஸ்ட் 2026
![]() |
* கனவை நிகழ்தல் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 95.
அரசியலில் சில சமயங்களில் காய்கள் மிகச் சரியான இடங்களில் சென்று அமர்வது நிகழ்ந்து விடுகிறது. அப்போதும் அதுதான் நிகழ்ந்தது. இளைஞர் காங்கிரஸ் அவரை முன்னிறுத்திய இயக்கமாக உருவெடுத்தது அது நேரடியாக சண்முகத்தின் அதிகாரத்தை அறைகூவுவது. அதற்கு முன்பாக காங்கிரஸ் இரண்டு பிளவாக இன்டிகேட் சின்டிகேட் என செயல்பட்டதற்கு பின்னால் அதன் அடிப்படை காரணமாக இருந்ததில்லை. சண்முகத்திற்கு எதிராக கிடைத்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த குழுவில் கண்ணன் இரண்டாம் நிலை தலைவராக மட்டுமே அறியப்பட்டார். இந்திராகாந்தி அகில இந்திய அளவில் தனது அரசியல் இருப்பை மீட்டெடுத்த போது மூத்தவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு திரும்பவும் இந்திரகாந்தியை ஏற்பது அல்லது அரசியலை விட்டு விலகுவது. மூப்பனார்,பா.ராமசந்திரன் வெங்கட்ராமன் போன்றவர்கள் இந்திரா காந்தியின் தலைமையை ஏற்று கட்சிக்கு திரும்பினர் மற்றவர்கள் ஜனதா மற்றும் பிற கட்சியில் இனைந்து பின்னர் மெல்ல காணாமலாயினர். புதுவையிலும் அதுவே நிகழ்ந்தது. கண்ணன் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட போது ஏற்பட்ட முரணால் இளைஞர் காங்கிரஸை முன்னகர இயலாமல் செய்துவிட்டார் சண்முகம் . கண்ணன் அரசியலில் எதிர்மறை சக்தியாக உருவெடுப்பார் என மிகச் சரியாக கணித்தவர் அதை எதிர் கொள்ள எந்த மாற்று கருவியையும் வைத்திருக்கவில்லை. அது ஒரு அரசியல் பிழை என்பதை நிரூபிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிக ஆபத்தான ஆட்டம் என்றாலும் என்னை நிலைப்படுத்தி நான் நினைத்ததை செய்ய அது உதவும் என்பதால் முயற்சித்து பார்ப்பது என்கிற முடிவில் இருந்தேன். அதன் பின்னணியில் மாநில அரசியலில் உருவான வெற்றிடம் அதை செய்து பார்க்கும் துணிவை கொடுத்தது.
1996 களில் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பிறகு கட்சியின் அனைத்து மாநில அமைப்புகளும் நீண்ட உறக்கத்திற்கு சென்றன. கட்சி அலுவலகங்களில் நடைபெறும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களின் இறந்த நாள் பிறந்த நாள் கொண்டட்த்திற்கும் கூட கூட்டம் வராமலாகியது. தோல்வியின் சோர்விலிருந்து மீண்டெழும் சந்தர்பத்திற்காக சண்முகம் காத்திருந்தார். தோல்விக்கு பிறகு இப்படி நிகழும் என பேசிக் கொண்டே இருந்த போதுதான் எனக்கு மிகுந்த செல்வாக்குள்ள தொகுதிகளில் ஒன்றான ஊசுடுவில் ஒரு கொடியேற்றும் நிகழ்வை தொடங்கி பின் அதை மாநிலம் முழுவதும் செய்தால் என்ன? என அவரிடம் கேட்டேன். கட்சியின் உறக்கத்தில் இருந்து எழுப்ப ஒரு சந்தர்பாக அதைப் பார்த்தாரா அல்லது எதாவது செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்க வேண்டும் என நினைத்தாரா என தெரியவில்லை. அதற்கான ஏற்பாடுகள் தொடங்கபட்டு நிகழும் நாளும் குறிக்கப்பட்டது. நான் ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் இளைஞர்களை அழைத்து முழு திட்டம் பற்றி விவாதித்தேன்.
மிக விரிவான ஒரு முழு நாள் என நீளும் அடுத்து 15 முதல் 30 நிமிடங்கள் நீளும் நிகழ்வுத் துளிகள் திட்டமிடப்பட்டு காலை 9:00 மணிக்கு சேதராப்பட்டில் துவங்கி இரவு 11:00 மணிக்கு அரியூரில் பொதுக் கூட்டத்துடன் நிறைவு என ஒருங்கப்பட்டது. முழு நிகழ்வையும் தலைவர் சண்முகத்திடம் சொன்ன போது அவர் விரிவான நிகழ்வு குறித்து எனது விவரிப்பை கேட்டு திகைப்படைவதை பார்க்க முடிந்தது. திரும்ப திரும்ப நிகழ்வு வெற்றி பற்றிய தனது சந்தேகத்தை கேட்டுக் கொண்டே இருந்தாலும் வேண்டாம் என சொல்லவில்லை . நான் எனது திட்ட வெற்றி பற்றி பேசும் சூழல் அதுவல்ல என உணர்ந்திருந்தேன். சற்று எதிர்மறை எதார்த்தம் பேசுவது நல்லது என தோன்றி அவரிடம் “எதிர் கட்சியாகி நிற்கும் சூழலில் இந்த நிகழ்வு தோல்வியடைந்தாலும் நாம் இழக்க ஒன்றுமில்லை” என சொன்னேன் நான் சொன்ன முறை அவருக்கு ஏற்புடையதாக இருந்திருக்க வேண்டும். அதை தவிர்த்து வேறு விஷயங்களுக்கு உரையாடல் தாவிவட்டிருந்தது.
குறிக்கப்பட்ட நாளில் நிகழ்வு சேதராப்பட்டில் துவங்கியது. நான் எனது நீண்ட நாட்கள் திட்டமிட்டிருந்தபடி அந்தந்த பகுதியின் விளிம்பு நிலை சமூக இளைஞர்களை முழுவதும் திரட்டி இருந்தேன். அதை பிழையின்றி ஒருங்க கிராமம் கிராமாக சிறு சிறு கூடுகை வழியாக அரசியலில் நிகழ இருக்கும் மாற்றம் பற்றியும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் விரிவாக விவாதித்து அந்தந்த ஊர் பெரியவர் முன்னிறுத்தி இது நிகழ வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். பெரியவர்களுக்கு நான் பேசியதில் பெரிய ஆர்வமில்லாமல் போனாலும். மாநில முதல் நிலை தலைவர்கள் ஒரு நாள் முழுவதும் தங்கள் தொகுதியில் இருப்பார்கள் அவர்களுடன் நாள் முழுவதும் பயணிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளும். அந்தந்த பகுதியில் அவர்களின் பெயர்கள் தலைமை மற்றும் முன்னிலை என்றிருக்க வேண்டும் என்கிற தகவல் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் இதே தலைவர்கள் சந்திக்க வந்து அவர்கள் முன்வைத்த வேட்பாளரை ஆதரிக்கும் கோரிக்கையை நிராகரித்து தங்கள் வெறுப்பை வெளிக்காட்டி இருந்தார்கள். அதன் விளைவு காங்கிரஸ் கட்சியின் மூத்த வேட்பாளர் மாரிமுத்து தோற்கடிக்கப்பட்டிருந்தார். அது நிகழ்ந்த ஓரிரு மாதங்களில் ஏறக்குறைய அதே போன்ற நிகழ்வுகள் தங்கள் தலைமையில் நிகழ இருப்பது ஏதாவது சிக்கலில் கொண்டு விடுமோ? என்கிற கவலை கொள்வதை பார்க்க முடிந்தது. கட்சி அல்லது கட்சி தலைவர்களின் மீது கடந்த ஐந்தாண்டுகள் உருவான கோபம் நடந்த முடிந்த தேர்தலில் வெளிப்படுத்திய திருப்தி அடைந்த நிமிடம் அந்த கோபம் காணாமலானதை பார்க்க எனக்கு விந்தையாக இருந்தது. இவர்களின் கோபம் ஒரு தேர்தலுக்கு பிறகு காலாவதியாவதை எப்படி புரிந்து கொள்ள. எவ்வளவு எளிய மக்கள் என்கிற எண்ணம்தான் முதலில் தோன்றியது.
அதை தொடர்ந்து சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாய்பை இழந்திருந்த மாரிமுத்துவை சந்தித்து நிகழ்வு பற்றி பேசினேன். அவரது கண்களில் அடிப்பட்ட வலியை பார்க்க முடிந்தது. எனது திட்டம் அவரை பதற்றத்தில் கொண்டு விடுவதை உணர்ந்தேன் . மாரிமுத்துவுடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு இருந்ததில்லை. அவர் என்னை தனக்கு எதிரானவனாக பார்த்தார். இப்போது பழைய விஷயங்களை பேசுவதில் அர்த்தமில்லை. நான் அவரிடம் அவரது தோல்வக்கான காரணம் என்ன என்பதை அதை அவர் அறிந்திருப்பார் என நினைத்தேன் அதை மு்ன் வைத்து பேச முயன்றேன். அவர் கட்சிக்கு சீட்டு கேட்டு சண்முகத்தை சந்தித்த போது அங்கிருந்தேன். அவர் மீதிருந்த வெறுப்பினால் உள்ளூர் தலைவர்கள் வேறு ஒருவரை முன் மொழிந்தனர். ஆனால் ஒரு சிறிய வேறுபாட்டை அப்போது நான் உணர்ந்தேன். அவர்கள் முன்வைத்த வேட்பாளருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவர் கண்ணன் தலைமையிலான தமாகா வில் இணைந்து வெற்றிபெற்றார். இதில் வினோதம் மாரிமுத்து அந்த தொகுதியில் வசிக்காமல் போனாலும் நகரில் உள்ள அவரது வீடு சட்டமன்றத்திற்கு மிக அருகில் என்பதால் நாள் முழுவதும் அங்கு தொகுதி மக்கள் திரள்வதையும் அவர்களை உபசரிப்பதுமாக மாரிமுத்தை பார்த்திருக்கிறேன். இப்போதைய வேட்பாளர் அவர்கள் தொகுதியில் வசித்தாலும் சென்று சந்திக்க முடியாமலான போதுதான் தங்கள் தவறை உணரத்துவங்கினர்.
மாரிமுத்துவிற்கு நிலமுடை சமூகத்தில் அரசியல் காரணங்களுக்கு அப்பால் தனிப்பட்ட விரோதம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. அதை இப்போது பயன்படுத்த முயன்றேன். இளைஞர் காங்கிரஸ் அவருக்கு ஒருபோதும் எதிர் நிற்காது என்றும் அடுத்த முறை தேர்தலின் போது ஊர் பெரியவர்கள் முன் சென்று சிறுத்து நிற்க வேண்டிய தேவை இருக்காது என சொன்னேன். நான் நிலமுடை சமூகத்தின் ஆதிக்கத்திற்கு எதிரான அரசியலை மாநிலம் முழுவதும் முன்னெடுத்துக் கொண்மிருக்கிறேன் எந்த தொகுதியிலும் அவர்களுடன் எனக்கு சமரசமில்லை இத்தனை ஆண்டு காலம் இளைஞர் காங்கிரஸ் இழந்த அரசியல் பாதங்களை சரி செய்து அந்த தடத்தில் சென்று அது வெற்றி பெருவது பற்றிய கனவை சொல்லியிருந்தேன். அது நிக்ழந்தால் அடுத்த மாநில கட்சி நிர்வகிகளில் 75 விழுக்காடு இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்களாலக இருப்பார்கள். அதை செய்து முடித்தால் அரசியலில் தனக்கான இடத்தை யாரிடமும் சென்று யாசகம் கேட்காமல் சென்று அமர்வது பற்றிய திட்டத்தை அவரிடம் சொன்னேன்.
அவர் இணங்கினாலும் மறுப்பு தெரிவித்தாலும் இந்த நிகழ்வு நடைபெற போகிறது என சொல்லி அவருக்கு முடிவு செய்ய அவகாசம் அளித்து விடை பெற்றேன். அன்று மாலை என்னை வீட்டில் வந்து சந்திப்பார் என எதிர்பார்கக வில்லை. வந்த போது எனது திட்டத்தை முழுவதும் செயல்படுத்துவதாக வாக்களித்தால் உடன் நிற்பதாக சொன்னார். நானும் என் நிலைபாட்டில் எந்த மாறுதலும் இருக்காது அவருக்கு வாக்களித்தேன் .

