https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

அடையாளமாதல் * விலகலில் துணிவு *

 ஶ்ரீ:



பதிவு : 697  / 886/ தேதி 08 பிப்ரவரி  2026




* விலகலில் துணிவு * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 94.





1997 களில் இருந்தே புதுவை கட்சி அரசியலில் சண்முகத்தின் இடம் அவரது விரல் இடுக்குகள் வழியாக நழுவிக் கொண்டிருந்தது. அது உருவாக்கிக் கொண்டு இருந்த வெற்றிடத்தை ஊகித்திருந்தேன். கட்சி ரீதியில் தலைவர் சண்முகத்திற்கு உதவும் பொருட்டு உருவாக்கிய அமைப்பு  எனது அபரிதமான வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. புதுவை அரசியலில் சண்முகம் பிதாமகர் அவரது கைகாட்டுதலில் வளர்வதைப் போன்ற நல்லூழ் யாருக்கும் நிகழாது. வல்சராஜ் சண்முகத்தின் அணுக்கராக இருந்த போது பல மேல்நிலை அரசியலுக்கு அவரை சண்முகம் பயன்படுத்தி இருந்தது வல்சராஜிற்கான நம்பமகத்தன்மையை அரசியலில் உருவாக்கி இருந்தது. அது அவரை சண்முகம் தரப்பின் பிரதிநிதி என்கிற அளவிற்கு கொண்டு சென்றிருந்தது. உள்ளூர் அரசியலில் அவருக்கு உருவாக்கிய சொல்சண்முகத்தின் முகம்”.


நீண்ட கால அரசியலில் பத்து வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் தலைமுறை மற்றும் கலாச்சார மாற்றத்திற்கு அரசியல் விதிவிலக்கல்ல. தொடர்ந்து பயணித்ததில் அந்த கால மாற்றத்தை சண்முகம் அவதானிக்க தவறியிருந்தார். ஒரு புள்ளியில் அவர் தனது வழமையான நிதானம் என்பது செயலின்மையை நோக்கி நகர்ந்துவிட்டதை அவர் அறியவில்லை. அந்த செயலின்மையின் புழுக்கம் அவரை சார்ந்திருந்த யாராலும் பொறுக்க முடியாத இடத்தை அடைந்திருந்தது. அவரவர் தங்களது அடுத்த கட்ட நகர்விற்கான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தனர். அவர்களுக்கு இருந்த அதே நிர்பந்தம் எனக்கும் இருந்தது. நான் உருவக்கிய அமைப்பை நிலைநிறுத்தும் சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தேன். புதுவை முழுவதில் இருந்து முதல் முறையாக இளந்தலைவர்கள் பொறுப்பிற்கு வர இருந்தார்கள். அவர்களின் நிலை உறுதியானால் அதற்கு மேலதிக இடம் எனக்காதாக உருவாகி நிற்கும் அது இப்போது நிகழாது போனால் ஒரு போதும் நிகழாது. இளஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை நான் இழந்த போதே எனது இடம் தூர்ந்து போனதாக எல்லோரும் நினைத்தார்கள். அது உண்மையும் கூட ஆனால் நான் எனக்கான அடுத்த கட்ட நிலையை நோக்கி நகர ஆரம்பித்தேன்

 

இரண்டாவது முறை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தில்லி சென்றிருந்த முதல்வர் சண்முகம் வல்சராஜ் மீதிருந்த அதிருப்தியில் தில்லியில் வல்சராஜ் குறித்த முதல்வர் சண்முகம் சொன்ன கருத்து எனக்கு உடன்பாடில்லை. இரண்டாம் முறை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அமைச்சர்கள் பட்டியலை சமர்பிக்க சண்முகம் தில்லி வந்திருந்தார் வேறு சில கட்சி வேலைக்குறித்து நானும் அப்போது தில்லியில் இருந்தேன். கடந்த ஒருவருட ஆட்சியில் வல்சராஜ் மற்றும் சண்முகத்திற்கு இடையே மோதல் முற்றியிருந்தது. இரண்டாவது முறை வல்சராஜை அமைச்சரவையில் கொண்டு வரும் எண்ணமில்லாது இருந்தார் சண்முகம். முதல் முறை முதல்வரான போது அதன் காரணமாக கட்சித் தலைவர் பதிவியை நாராயணசாமியிடம் இழந்தார். அது உருவாக்கிய பதற்றம் அல்லது நிலையழிவு அவரை நெருக்கடிக்கு தள்ளி இருந்தது. முதல் முறை முதல்வராக பொறுப்பற்று தனது செயல்பாடுகளால் நீண்ட காலம் பெற்றிருந்த அணுக்கர்களின் ஆதரவை இழந்து தனிமைபட்டிருந்தார். அந்த சூழலில் வல்சராஜுடான மோதல் அவருக்கு நல்லதல்ல. இதை தில்லியில் பலமுறை அவரிடம் சொன்போது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் ஆனால் அவரின் மனதளவில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை. என அறிந்திருந்தேன். புதுவையில் அரசியல் தலைவர்கள் சண்முகத்தை ஆமையுடன் ஒப்பிடும் வழக்கம் இருந்தது. என்ன காரணத்திற்காகவே அந்த ஆமை தனது தலையை உள்ளிழுத்துக் கொண்டால் பின் ஒரு போதும் வெளியில் வராது. வல்சராஜை தில்லியில் எதிர் கொள்வது எளிதல்ல , அவர் புதுவை அரசியல் களத்தில் வல்சராஜ் மிக பலவீனமானவர் அவரை இங்கு எதிர் கொள்வது ஏளிது.


1999 களில் சண்முகம் முதல் முறை முதல்வராக பதவி ஏற்க இருந்த சூழலில் அமைச்சர் பட்டியலை தயாரித்து கொண்டிருந்தார்கள். அதில் வைத்தியலிங்கத்திற்கு விவசாயம், கால்நடை துறை மற்றும் சில துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்திற்கு ஒதுக்கப்பட்மிருந்தது. தனக்கு ஒதுக்கப்பட்ட இலக்காக்கள் குறித்து கடும் அதிருப்தியில் இருந்தார். அதனால் புதுவைக்கு வருவதை தவிர்த்து நெட்டப்பாக்கத்தில் தனது பூர்வீக வீட்டில் தங்கி விட்டார். அவரது அணுக்கர்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு வைத்தியலிங்கம் என்னை சந்திக்க விரும்புகிறார் என்றனர். நடக்கும் இழுபறி அறிந்ததிருந்தேன் ஆனால் இதில் நான் என்ன செய்ய இருக்கிறது என தெரியவில்லை இருந்தாலும் சென்று சந்திப்பது நல்லது என தோன்றியது. ஒரு வகையில் இந்த சிக்கலின் துவக்கத்திற்கு நானும் ஒரு காரணம். மூப்பனார் முன்ணியில் சண்முகம் முதல்வராக வேண்டும் என கோரிய போது அவருக்கு புதுவை அரசியல் குறித்த புதிய செய்தியாக அது இருந்தது. கட்சி மேலிடத்தில் இருந்து மூத்த தலைவர்கள் புதுவையில் கட்சியனர் கருத்தை கேட்டுக் கொண்மிருந்தார்கள். கேரள முக்கிய மூத்த தலைவர் வயலார் ரவியின் தலைமையில் அந்த குழு புதுவையில் முகாமிட்டிருந்தது. நாளை காலை முதல்வர் ஏக மனதாக தேர்வு அது இயலாமலானால் கட்சி மேலிட தலைமையின் அறிவுத்தலை ஏற்பது என அந்த தீர்மானம் இருக்கும். அதுவரை ரங்கசாமி மற்றும் நாராயணசாமிக்கு இடையே போட்டி என்கிற சூழல் இரவு நாராயணசாமிக்கு ஆதரவாக மாறிய போது சென்னை செல்வது முடிவானது. அதற்கு முன் புதுவை மூப்பனாரின் கட்சி தலைவர் கண்ணன் திரைமறைவில் தனது காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். கண்ணன் தன்னை வலுவாக முன் வைத்தால் மூப்பானாரை சந்திப்பதில் அர்த்தமில்லை என மாலையில் முடிவானதும் என்ன செய்வது என புரியவில்லை. கண்ணனை நேரில் சந்திப்பது என நான் சொன்ன போது முனஃனாள் அமைசர் அனந்தபாஸ்கரனும் வில்லங்கமும் அதிர்ந்தார்கள். அனந்தபாஸ்கரன் கண்ணனை சந்திப்பது மொத்த திட்டத்தையும் கெடுத்துவிடும். அவர் அமைச்சராக இருந்த 1991 காலகட்டங்களில் அதற்கு முன்பு கண்ணன் வகித்த சுகாதரதுறையை கையாண்டார். அதில் சட்டமன்றத்தில் சபாநாயகர் கண்ணனுடன் அவர் நடத்திய சண்டை அன்று மிக பிரசித்தம். கண்ணனை யாரும் அந்தளவிற்கு நேரடியாக எதிர்த்ததில்லை என்பாதல் கண்ணன் உக்ரமாக இருந்தார். முதல்வர் பதவிக்கு போட்டியிட்டு வெல்லும் சூழலில் கட்சி மேலிடம் அதை மாற்றி உட்கட்சி சிக்கலால் கண்ணனின் சிறகுகள் வெட்டப்பட்டு சபாநாயகராக அமர வைக்கப்பட்டார். அது அவரது அரசியல் வெளிப்படையான செயல்களுக்கு பெரிய தடையை உருவாக்கி இருந்தது. அதை மனங்கவண்டவராக வைத்திலிங்கத்தை முதல்வராக இருந்த காலகட்டத்தில் சபாநாயகருக்கு அடங்கியவராக காட்டிக் கொள்ள சுகாதார அமைச்சராக இருந்த அனந்தபாஸ்கரன் தினமும் சபாநாயகருடனான முரணில் இருந்தார் . எனக்கு அந்தகாட்சிகள் கண்முன் படமென அந்த நிகழ்வுகள் மனதில் எழுந்தது. அனந்தபாஸ்கரன்அது நடந்து பத்து வருடமாகிறது. எனக்கு கண்ணனை சந்திப்பதில் சிக்கலில்லைஎன்றார். இருக்கலாம் ஆனால் கண்ணன் அப்படி எடுத்துக் கொள்ளமாட்டார் என எனக்கு தெரியும். சமாதானம் பேசப் போன இடத்தில் அது வேறுவிதமாக திரும்பலாம் என்பதால் அனந்தபாஸ்கரனை தவிர்க்க நினைத்தேன். உடன் அவரது அணுக்கரான வில்லங்கமும் அதில் அடக்கம்


அன்று மாலை நான் வேறொரு முடிவில் இருந்தேன். நேரடியாக கண்ணனை சந்திப்பதில் உள்ள நடைமுறை சிக்கலை தவிர்த்து அவரது அணுக்கரான ரவிச்சந்திரனை சந்திப்பது நலம் என நினைத்தேன். அன்று மாலை நானும் நெடுமாறனும் சென்று ரவிச்சந்திரனை சந்தித்து முதல்வர் பட்டியலில் சணமுகம் இருப்பதை அவருக்கு சொன்ன போது அவர் அதை எதிர்பார்க்காத அதிர்வை உணரமுடிந்தது. உட்கட்சி விஷயத்தை மேலிடம்பார்த்துக் கொள்ளும். கூட்டணி கட்சி என்கிற அடிப்படையில் கண்ணனின் கருத்தை அறிய விரும்புவதை சொன்னேன். ரவிச்சந்திரன் கண்ணன் தனக்கான வாய்பபை முன் வைக்க நினைக்கிறார். நீங்கள் உங்கள் கருத்தை உங்கள் கட்சி மேலிடத்திற்கு சொல்லலாமே என்றார். நான் எனக்குள் சற்று உஷ்ணமாக உணர்ந்தேன் எனக்கு ரவியை பற்றி தெரியும். இந்த ரவிசந்திரனை கடந்து இருபத்து ஐந்து வருடங்களுக்கு மேலாக எதிர் கொண்மிருக்கிறேன். எதிர்ப்பு மட்டுமேயான ஒன்று. அவர் கட்சிக்குள் அல்லது வெளியே என்கிற வித்தியாசமில்லாமல். இதுவரை நேரடியாக சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் ஒருவரை ஒருவர் மிக அணுக்கமாக களத்தில் அறிந்திருந்தோம்.


இந்த ஆட்டம் இந்த கணம் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்கிற ஆவேசம் எழுந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நான்அதற்கான பூர்வாங்க வேலைகள் முழுவதுமாக துவங்கப்பட்டுவிட்டது. நீங்கள் உங்கள் கருத்தை உங்கள் கட்சி தலைவருக்கு சொல்லிக் கொள்ளுங்கள். நான் உங்களை சந்திக்க வந்தது கண்ணனை விலக சொல்வதற்காக அல்ல. காங்கிரஸ் மேலிடத்தின் மனவோட்டம் பற்றி நட்பார்ந்து உங்களிடம் சொல்ல வந்தேன். தலைவர் மூப்பனார் கண்ணனை தனது முதல்வர் வேட்பாளராக முன்வைக்க மாட்டார். சண்முகம் முதல்வராக தேர்வு செய்யப்படுவதை எதிர்க்க மாட்டார் என்பது நீங்களும் அறிந்தது. இந்த சூழலில் சண்முகம் வெற்றி பெறாது ரங்கசாமி , நாராயணசாமி அல்லது வைத்திலிங்கம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டால் உங்கள் தலைவரின் இடம் என்ன?


சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் கூட்டணியில் அதை செய்வது அடிப்படையில் முரணை உருவாக்கும் என்பது நீங்கள் அறியாததல்ல. கண்ணன் தன்னை யாரிடம் முன்வைக்கப் போகிறார். வல்சராஜுடன் அவர் பேசிக் கொண்டிருப்பது நாங்களும் அறிவோம். காங்கிரஸ் மேலிட பார்வையாளர் வயலார் ரவியிடம் வல்சராஜிற்கு இருக்கும் தொடர்புகள் மற்றும் செல்வாக்கு போன்றவை முதல்வர் வேடபாளர் தெரிவு வரை செல்லும் என நீங்கள் நம்பினால் அது உங்களிஷ்டம். அதை கட்சிக்கும் அப்பாற்பட்டு வல்சராஜ் செய்யவேண்டி இருக்கும். அதற்கு அவர் வெளிப்படையாக துணிவாரா என்பது மற்றொரு கேள்வி. முதல்வர் பதவி காங்கிரஸிற்கு அதற்கு அடுத்த இரண்டு அமைச்சர் பதவிகள் தமாக விற்கு என முன்பே முடிவு செய்யப்பட்டதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியு இல்லை.தனது ஜூனியர்களின் அமைச்சரவையில் இடம் பெறப் போகிறாரா. அல்லது மீண்டும் சபாநாயகர் என்கிற கௌரவத்தோடு ஒதுங்கிக் கொள்கிறாரா? என்பதல்ல நான் முன்வைக்க நினைத்தது. தலைவர் சண்முகம் முதல்வரானால் அவரது அமைச்சரவையில் இடம் பெறுவது உங்கள் தலைவருக்கு அது பெருமை வாய்ப்பு மற்றும் அரசியலில் தன்னை முன் வைக்க மீளவும் பிறிதொரு வாய்ப்பு. நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம். நான் உங்களிடம் ஆதரவு கேட்டு வரவில்லை என்றேன. ரவிச்நந்திரன் கள அரசியல் நிபுணர். இதுவே அதிகம் .ஆதே சமயம் மேலதிகமாக ஒன்று சொல்லி முடிக்க அவர்  நினைத்தேன். இன்று இரவுற்குள் உங்கள் தலைவர் சண்முகத்தை வந்து சந்திப்பார் என்றால் அது அரசியலில் புதிய அத்தியாயத்தை துவக்கி வைக்கும். பின்னர் ஆக வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என சொல்லிவிட்டு வெளியேறினோம்.

அன்று இரவு தலைவர் சண்முகம் எதிர்பாராமல் அவரது வீட்டிற்கு கண்ணன் உள்நுழைந்து அவர் முதல்வராவது தனக்கு உகப்பானது என சொல்லி விடைபெறும் முன் தனது வழக்கமான யுக்தியில் அமைதியாக உட்கார்ந்திருந்த என்னை அழைத்து தனது பாணியில் தழுவி பின் கிளம்பினார். அதை எதிர்பாராத்தால் உண்டான துணுக்குறுதலில் இருந்து விடுபட்ட பிறகு தலைவர்  சண்முகம் என்னிடம் கண்ணனை வழியணுப்பந் சொன்னார். நான் அவர் பின்னால் சென்றேன். அதற்குள் கண்ணன் தலைவர் வீட்டிற்கு வந்த செய்தி பரவி பத்திரிக்கையாளர்கள் கட்சிக்கார்ர்கள் என கூட்டம் தலைவர் வீட்டிற்கு வெளியே சூழ்ந்து கொண்டது. காரில் ஏறி புறப்படும் முன்பாக என்னை அழைத்து கை கொடுத்துவாழ்த்துக்கள்என்றார். நான் பதிலேதும் சொல்லாமல் சிரித்து அவரை வழியணுப்பி வைத்தேன்


இப்போது அடுத்த சிக்கல் தலைவருக்கு தெரியாமல் முன்னெடுத்த முயற்சியில் என் முகம் வெளிப்பட்டுவிட்டது. கண்ணன் அதை வலிந்து செய்தார். அதில்லை இப்போது சிக்கல் தலைவர் சண்முகம் கடுமையான முகத்துடன் நான் அவர் அறை நுழைந்ததும் என்னை அவரது பிரத்யேக அறைக்கு அழைத்தார். இதெல்லாம் உங்கள் வேலையா? இது என்ன வேலை வாய்ப்பா? இப்போது நானும் பயோடேட்டா கொடுக்கனுமா? ஏன் என்னை இப்படி அவமானப்படுத்துகிறீகள்என்றார். அவரது இன்றைய நிலை மிக மோசமானது அவரை சமாதானப் படுத்தினால் இன்னும் சிக்கலாகும் என்பதால் நானும் குரலை உயரத்தி  “உங்கள் சீடர் நாராயணசாமி முதலவராவதை வேடிக்கை பார்க்கவாஎன்று சொல்லிவிட்டு சட்டென அவரது அறையில் இருந்து வெளியேறினேன். தான் தலைமை பொறுப்பில் இருக்க நடக்கும் எதுவும் அவரது கட்டுப்பாட்ணில் இல்லை என்பது வைத்து அவரது இடம் என்ன என்கிற கேள்வி மிக கொடுமையானது. ஆனால் ஒருவகையில் இது அவர் தனக்கு செய்து கொண்டது. மறுநாள் அதிகாலை சென்னையில் மூப்பனாரை சந்தித்து புதுவை நிலவரத்தை தெளிவுபடுத்திநாராயணசாமிக்கு சண்முகத்தின் ஆதரவில்லை சண்முகம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல்வர் பொறுப்பேற்க அவருக்கு ஆட்சேபனை இல்லைஎன்றேன். நாங்கள் புதுவை மதியம் திரும்பும் போது சண்முகம் முதல்வராக தேர்நதகடுக்கப்பட்ட செய்தியை அறிந்தோம். அது முழு மகிழ்வை தராமல் ஆழமான சந்தேகங்களையும் எழுப்பி நின்றது. காரில் இருந்த நாள்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபோது அனைவரின் மனநிலை அதுவே என்றிருந்தது


அடுத்த நாள் வைத்திலிங்கம் என்னை சந்திக்க விழைகிறார் என வந்த செய்தியை என்னவென்று எடுத்து கொள்வது என தெரியவில்லை. எதைப் பற்றி பேச விழைகிறார். வல்சராஜ் பற்றி இருக்கலாம். ஆனால் அவர் பற்றி நான் பேச என்ன இருக்கிறது. நெட்டப்பாக்கம் வைத்திலிங்கம் அவரது இல்லத்திற்கு சென்ற போது அவரது ஆதரவாளர்கள் குவிந்து வீடு உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தது. அவரை சந்தித்த போது நேரடியாக தனது வருத்ததை தெரிவிக்கஉங்கள் தலைவர் என்னை மாடு மேய்க்க சொல்கிறார்என்றார். விவசாயம் மற்றும் கால்நடை இலக்கா தனக்கு ஒதிக்கீடு செய்திருக்கும் செய்தி அறிந்து இப்படி சொல்கிறார் என தெரிந்தது. எனக்கும் அவர் சொல்வது குறித்த வருத்தம் உண்டானது. ஆனால் நல்லவேளை வல்சராஜ் பற்றினது இல்லை. “நான் என்ன சொல்வது என் தெரியவில்லை இது பற்றி நான் தலைவரிடம் என்ன பேசுவது. இது எனது தகுதிக்கு மீறிய ஒன்று இது குளித்து அவர் என்னிடம் பேசுவார் என நான் நினைக்கவில்லைஎன்றேன். மூப்பனாரை நீங்கள் சந்தித்து எனக்கு தெரியும் என்றார். இதை எப்படி எடுத்துக்கொள்வது எனவும் தெரியவில்லை. வில்லங்கம் வைத்திலிங்கம் அணுக்கர். சென்னையில் நடந்தவற்றை அவர்தான் வைத்திலிங்கதிடம் சொல்லியிருக்க வேண்டும். யாராலும் எதாலும் கட்டுப்படுத்த முடியாத வில்லங்கம். இது என்னவெல்லாம் கொண்டு வரப்போகிறது என்ற அச்சம் எழுந்தது. இவருக்கு எதிராக நான் மூப்பனாரிடம் பேசியதாக நினைத்தாலும் ஆச்சர்யபட தேவையில்லை. அரசியல் எப்போதும் பல அபத்தங்கள் வழியாக புதிய பரிமாணங்களை அடைபவை.


அன்று மாலை அனைவரும் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நான் வைத்திலிங்கம் அழைத்ததை சொன்னேன். சென்று சந்தித்தது பற்றி சொல்லவில்லை. தலைவர் நீ இதிலிருந்து விலகி இரு என்றார். எதிர்பார்த்தது தான் இழந்த கட்சி கட்டுப்பாட்டை மீட்டெடுக்கும் வாய்ப்பாக முதல்வர் பதவியை பயன்படுத்துகிறார். இது நல்லதுக்கல்ல என்பது மட்டும் தெளிவாகியிருந்தது. முதல்வர் இறுதி நிலையில் சில மாற்றங்களை செய்தார் என அறிந்து கொண்டேன் ஆனால் அது வைத்தியலிங்கத்திற்கு திருப்தி அளித்ததா என தெரியாது. நான் சொல்லி அந்த மாற்றங்கள் நிகழவில்லை நான் அவருக்கு அளித்தது கள நிலவரம் மட்டுமே. அதை எப்போதும் செய்வேன். அதன் பலன் குறித்து நான் அக்கறை கொள்வதில்லை. அந்த 18 மாதங்களில் முதல்வர் சண்முகம் அனைவருடன் தினம் ஒரு மோதலில் இருந்தார். தனித்து விடப்பட்டவராக அவர் உணர்ந்தாரா என தெரியவில்லை அடுத்தடுத்து நிகழ்ந்தவைகள் காரணமாக நான் சட்டமன்றத்திற்கு செல்வதை அறவே நிறுத்தி இருந்தேன். சண்முகம் முதல்வர் பதவியை இழந்து வெளியேறினார்.அந்த காலகட்டம் முழுவதும் முதல்வர் வீட்டிற்கு வைத்திலிங்கம் வருவது நின்ற பிறகு நான் அவரை பார்க்கவில்லை. பின்னர் சில ஆண்டு கழித்து முதல்வர் ரங்கசாமியுடனான வல்சராஜ் முரண் உருவான போது முதல்வர் வைத்திலிங்கத்திடம் ஒரு முறை பேசினால் அந்த சிக்கல் தீறும் என நினைத்து அதுபற்றி நான் வைத்தியலிங்கத்தின் அணுக்கர் வைத்தியநாதனிடம் பேசினேன் அவரும் வைத்திலிங்கத்திடம் பேசி சம்மதிக்க வைத்தும் அது நடைபெறாமல் போனது


தலைவர் சண்முகம் முதல்வர் பதவியில் இருந்து வெளியேறிய பிறகு நங்கசாமி எந்த எதிர்ப்பும் இன்றி முதல்வராக அமர்ந்தார். அரசியலில் மிக நுண்ணிய மாற்றம் நிகழ்ந்துவிட்டிருப்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். ஆனால் அரசியலில் விரக்தர் மனநிலை கொண்ட ஒருவரிடம் அரசியல் அன்றாடங்களை குறித்து உரையாடவதை விட அபத்தம் பிறிதில்லை . பலர் அவரை நெருங்க முயற்சிக்காததற்கு இது முதன்மை காரணம். தனது பதவி இலக்கு தாண்டிய எந்த அரசு சூழ்தலும் அறியாதவர் அல்லது முயற்சிக்காதவர் அல்லது அதுபற்றிய அக்கறை இல்லாதவர். ஆன்மீக ஈடுபாடு அரசியலில் அரசு சூழ்தலை சார்ந்து இருப்பதில்லை. தான் குருவாக நினைத்த அப்பா பைத்திய சாமியிடம் இருந்து ஆனை பெருபவராக பிற எதை பற்றியும் அக்கறை இல்லாதவராக வெளிப்படுத்திக் கொண்டார். அன்று மதிய உணவிற்கு என்ன அழைத்திருந்தார் நானும் அவரும் மட்டுமாக உடன் வந்திருந்த ஜெயபால் அவர் பேசத் துவங்கிய பிறகு ஜெயபால் அங்கில்லை என்பதை மிக தாமதமாக உணர்ந்தேன் . நானும் அவருமாக தனித்து விடப்பட்ட சூழலில் என்னிடம் தரையில் வைக்கப்பட்டிருந்த பெரிய அப்பா பைத்திய சாமி படத்தை காட்டி அவர் அமரச் சொன்னார் உட்கார்ந்தேன். அந்த படத்தை காட்டிஇவர் என்னை முதல்வரா இரு என்றார். பதவியேற்றேன். வேண்டாம் விலகிவிடு என்றால் வெளியேறிவிடுவேன்என்றார். இந்த மனநிலையில் அவரிடம் நான் பேச ஏதுமில்லாமல் அவர் சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தேன்.


2004 களில் களம் சூடு கொண்டது ரங்கசாமியை முதல்வர் பதவி நீக்கம் செய்யும் முயற்சி துவங்கியது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அவருக்கு எதிராக திரண்டனர். வல்சராஜால் மிக எளிதாக அவர்களை ஒருங்கு திரட்ட முடிந்ததன் காரணம் அடிப்படையில் ரங்கசாமியின் ஜனநாயக பண்பு பற்றி பல கேள்விகள் அப்போதே உருவாகிவிட்டிருந்தது. அவை பல வகையில் உண்மையும் கூட . 2000 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை முதல்வர் பொறுப்பேற்றாலும் இந்த கூறு அவரை நோக்கி வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 2000 முதல் கொந்தளிப்பாக உணரப்பட்டு அவரின் எதிர்ப்பு புள்ளிகள் ஒன்று திரட்டப்பட்டு அவர் பதவி விலகி பின்னர் காங்கிரஸை விட்டு வெளியேறி தனி கட்சி துவங்கி இரண்டு முறை முதல்வராக தொடர்ந்தாலும் 

இன்று வரையில் அமைச்சர்களுக்கிடையே அரசு அதிகார பகிர்விற்கு பிறகும் கூட மொத்த அதிகாரமும் முதல்வர் ரங்கசாமியிடம் குவிந்து இருக்கிறது . அனைத்து நாற்காலிகளிலும் அவரே சென்று அமர முயல்வதைப் போன்ற தோற்றத்தை அது உருவாக்குகிறது. அவரது முடிவே இறுதியாக இருப்பதென்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பிற அமைச்சர்கள் இலாக்கா பொறுப்பு பகிர்ந்தளித்த பிறகு அவர்களை நம்ப மறுப்பது போன்ற தோற்றம் உருவாவது தனியாளுமைகளுக்கு இடையே மோதலை உருவாக்கும் காங்கிரஸ் முதல்வராக அவர் இருந்த போது அதே நிலை நீடித்தது அதுவே அன்று உருவான முரணுக்கான அடிப்படை காரணி. இம்முறை அவரது போக்கில் மாறுதல் இல்லாமலானாலும் அமைச்சரவை சகாக்கள் அவரது குணாநலன் புரிந்து அதற்கு உட்டபட்டு தங்களது பாணியை உருவாக்கிக் கொண்டார்கள்


முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்தின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ரங்கசாமிக்கு எதிராக திரண்டதற்கு பின்னால் இதே காரணம் சொல்லப்பட்டதுஅதற்கு பின்னால் வல்சராஜ் இருந்தார். மொத்த சிக்கலும் ரங்கசாமி வல்சராஜை தனிப்பட்ட மோதல்களில் மையப்படுத்தி உருவானது. ரங்கசாமி பற்றி வல்சராஜின் மதிப்பீடுகளை தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர் பல முறை சொன்னவை. இருக்குமிடம் தாண்டிய பலமுள்ளவராக தன்னை அறித்து வைத்துள்ள வல்சராஜிற்கு புதுவை அரசியல் குறித்து எப்போதும் ஒரு எல்லலை பார்த்திருக்கிறேன். கேரளத்தை ஒட்டியுள்ள மாஹேவில் அங்கே அதன் சாராம்சம் ஒடுவதாக அதுவே நிஜ அரசியல் என்றும் தன்னை அதன் நீட்சியாக பார்ப்பது அவரது வழமை . அதன் அடிப்படையில் ரங்கசாமி பற்றிய அவரது மதிப்பீடுகள் அவ்வளவு சிறப்பானதல்ல. ரங்கசாமியை தொண்டர்கள் பார்க்கும் அனைத்து அம்சத்தையும் ரத்து செய்த பிறகு கிடைக்கும் மிச்சம் வல்சராஜின் பார்வை. ஆனால் ரங்கசாமி தொடர்ந்து இருபத்தி ஐந்து வருடங்களாக தன்னை நிலைதிறுத்திக் கொண்ட பிறகு இன்று வல்சராஜ் பார்வைக்கு பெரிய அர்த்தமில்லை.


கட்சி அரசியலில் தனக்கான இடம் என அவர் உருவகித்திருந்தது தனக்கிணையாக புதுவையில் யாரும் இல்லை என்பது அவரது தீர்மானம். அதை ஒரு படிநிலை வரை உண்மை என நான் ஏற்பேன். இளைஞர் காங்கிரஸ் தலைவராக அவர் இருந்த சூழலுக்கு முன்பிருந்தே அவரை அறிந்திருக்கிறேன். வல்சராஜ் எனக்கு 1990 களில் அறிமுகமாகி இருந்தார் அப்போது முதல் முறை அவர் சட்டமன்ற உறுப்பினர். தலைவர் சண்முகத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர். கட்சி அவருக்கு கொறடா பதவி கொடுத்திருந்தது. எல்லோரையும் போல மந்திரி கனவில் இருந்தார். அதை நோக்கிய தீவிர செயல்பாடுகளை கொண்டவர். மிக சிறந்த தொடர்புறுத்துனராக அவரை அறிவேன். ஒரு சிறிய நிலப்பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் வேறு மொழியை கொண்டவர் என்கிற காரணத்தால் ஒவ்வொரு முறையும் அரசியல் ரீதியான அவரது முன்னேற்றம் தடைபட்டுக் கொண்டே இருந்தது அவருக்கு எல்லாவற்றின் மீதும் கசப்பை உருவாக்கி இருந்தது. நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவராக அறிவேன். எல்லாவற்றையும் பற்றியும் தலைவர் சண்முகம் உட்பட அனைவரின் மீதான எள்ளலை அவர் மறைத்ததில்லை


தான் புதுவையில சிறுய பகுதியில் மொழியில் வேறுபட்டிருப்பதால் தனக்கான இடம் புதுவையில் இல்லை என்கிற வருத்தமே இவற்றின அடிப்படை. இந்த மனநிலையில் உள்ள ஒருவர் ரங்கசாமி போன்ற ஒருவருடன் தொடர்புறுத்தும் போது விளைவு விபரீதமாக இருந்துவிடுகின்றன. எங்கோ ஒரு புள்ளியில் இருவருக்குமான உறவு சரி செய்ய இயலாதபடி காயப்பட்டது . அவரை மாற்ற தில்லியில் தனது செல்வாக்கை பயனபடுத்த நினைத்தார். அதற்கான முதல் நிலை சிக்கல் புதுவையில் இருந்து துவங்க வேண்டும ஏற்பனவே ரங்கசாமி மீது மிகுந்த அதிருப்தியில் இருந்த காங்கரிஸ் சட்டமன்ற உறுப்பினர்களை ஒருங்குதிரட்ட அவருக்கு சிக்கலில்லை என்றாலும் அதற்கு தான் தலைமை ஏற்க இயலாது என்பதால் தலைமை பொறுப்பை வைத்திலிங்கதடம் கொடுத்தார். வைத்திலிங்கத்தின் மீதும் எந்த மதிப்பும் இல்லாதவர் ஆனால் வேறு வழியில்லை அவரை சார்ந்து ஆதை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதன் பின்புலம் குறித்து மிக தெளிவான பார்வையுள்ளவன் என்பதால் அதை எதிர் கொள்ளும் வாய்பை பெற்றேன். நான் வல்சராஜ் வைத்திலிங்கம் இழுவருக்கும எதிரான மனநிலை உள்ளவன். என் மதிப்பில் இருவரை விட ரங்கசாமி பலமடங்கு உயர்ந்தவர் என நினைக்கிறேன்.


புதிய பதிவுகள்

அடையாளமாதல் * விலகலில் துணிவு *

  ஶ்ரீ : பதிவு : 697  / 886/ தேதி 08 பிப்ரவரி   2026 * விலகலில் துணிவு  *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 94. 1997 களில் இருந...