https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 20 ஜூன், 2026

மணிவிழா 78. அகத்தடை

 





ஶ்ரீ:



மணிவிழா - 78


20-06-2026





* அகத்தடை *



2008 களில் அனைத்திலிருந்தும் விடுபட்டு வெளியேறும் எண்ணம் மிக ஆழமாக எழுந்து கொண்டிருந்தது. மனம் விடாதுவிடுதலை விடுதலைஎன புலம்பிக் கொண்டிருந்தது. அது சொல்லும் விஷயம் என்ன என புரியாத போதும் அதில் இருந்த தேன் சுவைக்க கூடியது என புரிந்திருந்தது. முதலில் ரிஷிகேசத்தல் இருந்த போது யாரோ யாருக்கோ சொல்வது போல அந்த சொல் எனக்கு கேட்டது அது தமிழ் சொல் என்பதால் என் கவனத்தை ஈர்த்திருக்கலாம். அதிகாலை கேட்கும் முதல் பாடல் அன்று முழுவதும் தள்ள நினைத்தாலும் தலைக்குள் கேட்டுக் கொண்டே இருப்பது போல என்னால் அதை பலத்தை கொண்டு விலக்க முடியாதபடி இருந்தது. பின் எனக்கு நானே அந்த சொல்லை அரட்டிக் கொண்டிருந்தேன். “விடுதலைஅந்த சொல் மாற்றம் பெற்று ஒரு எண்ணம் போல, ஒரு ஊழ்கச் சொல் போல மீள மீள மனதிற்குள் ஒடிக் கொண்டே இருந்தது. அங்கிருந்து புதுவை திரும்பிய பிறகும் அது நிற்கவில்லை. அந்த விலகல் மனப்போக்கு அப்போதே உருவாகி இருக்க வேண்டும். அது சட்டென வெளிவந்து ஆட்கொள்ள சூழல் ஒன்று நிகழவேண்டும். ஆம் அது மிகத் தாமதமாக பின்னாளில் நிகழ்ந்தது


செய்து கொண்டிருந்த தொழிலை பொதுத்துறையாக விரிவு படுத்த முயன்று கொண்டிருந்த நேரம். அது முற்றும் புதிய முயற்சி என்பதைவிட ஒரு நீண்ட தாவல் . அது பிறிதொரு தளம். கடலூரை சேர்ந்த ஜியோடிரிக்ஸ் செல்வம் என்பவரை சந்திக்க நேர்ந்தது. அவர் நான் செய்து கொண்டிருந்த அதே தொழிலை உலகளாவி செய்பவர் கற்பனைக்கு அப்பாற்பட்ட பெரும் முதலீட்டில் அதை செய்து கொண்டிருந்தார். உள்நாட்டு மற்றும் அயல் நாட்டு பெரும் நிறுவனங்களுக்கு கட்டுமானத் துறையில் அவருக்கான இடம் மிக விசேஷமானது. அவரை சந்ததித்து மிக நீண்ட உரையாடலுக்கு பிறகு அவரின் தொழிலில் முக்கிய உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை துவங்கும் எண்ணத்தில் இருப்பதை பற்றி சொன்னவர் என்னால் அதை செய்ய இயலுமா என்றார். குறைந்தது இருபது  கோடி ரூபாய் முதலீட்டில் துவங்க வேண்டிய நிறுவனம். அப்போது தான் நான் எனது பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக மாற்ற நினைத்தேன். அது மிகப் பெரிய ய்ச்சல். பல வெளிநாட்டு நிறுவனங்களின் ஆர்டர் அவரிடம் இருந்தது


ஜியோடிரிக்ஸ் செல்வம் ஒரு ஆச்சர்யமான மனிதர். சாதாரன மீனவ சமூகத்தில் இருந்து வாய்புகளால் தன்னை வடிவமைத்துக் கொண்டவர். அவரை நோக்கி நான் ஈர்க்கப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுபவர்கள் மற்றும் தன்னுடன் பிறரை அழைத்து செல்பவர் என இரண்டு வகை மனிதர்கள் அவர்களில் செல்வம் இரண்டாம் வகை மனிதர். கடலில் மீன் பிடி தொழிளாலிகளாக இருந்தவர்களை தொழிட்நுட்பம் சார்ந்தும் உடல் உழைப்பையும் மூலதனமாக கொண்டவர்களாக உருவாக்கி எடுத்தார். இந்த தொழிலில் உள்ள சிக்கல் தொழிலாளிகளை தக்கவைத்து கொள்வது பெரிய சவால். அவர்களை நம்மில் ஒருவராக உணரவைத்து உடன் வைத்துக்கொள்வதில் உள்ள சவால் அதைவிட பெரிது. அதற்கு அது கேட்கும் நேரம் தொழில்  இடமளிப்பதில்லை. செல்வம் மிக முயன்று ஒரு பெரிய குழுவை உருவாக்கியது அவரை அந்த தொழில் சார்ந்த அளித்த இடம் மகத்தானது. அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட அவரது ஊழியர்களில் சிலர் என்னிடம் வேலை பார்த்தார்கள். மிக சிறந்த தொழில்நுட்ட அறிவு உள்ளவர்கள். அந்ததொழில் தவிற வேறு எதையும் அறியாதவர்கள். பலர் மீன் பிடித்தலை தவிர பல்வேறு சிறு தொழில் செய்து வந்தவர்கள் அவர்களை தேடித் தேடி கண்டடைந்து தனது தொழிலை சொல்லிக் கொடுத்து அவர்கள் அதுவரை பெற்றிராத பெரும் சம்பளத்தை அவர்களுக்கு அளித்தார். தனிப்பட்ட பேச்சில் ஒரு தலைவரை புகழ்வதைப் போல உறுகி அவரைப் பற்றி பேசுவதை பார்த்திருக்கிறேன். செல்வத்தை நோக்கி நான் செலுத்தப்பட்டதற்கு இது முதன்மை காரணம். தனக்கான வாய்ப்பில் லாபம் நோக்கமாக இருந்தாலும் தான் சார்ந்த சமூகத்தை அழைத்து செல்ல முயற்சித்தார். இந்திய கடற்கரைகளில் செறிந்து வாழும் மீனவ சமூகம் இந்தியாவின் முதன்மை பெரிய சமூகம். புதுவை போன்ற கடற்கரை பகுதிகள் உள்ள தொகுதிகளில் நான்கில் மூன்று அவர்கள் செறிந்திருந்தார்கள். முற்றும் ஒருங்கிணைக்க முடியாதவர்கள். உயிராபத்தான தொழில் என்பதால் போதை அவர்கள் வாழ்வின் ஒரு அங்கம். அதனால் உருவாகும் சர்சைகள் மிக எளிதில் கொலையில் சென்று முடிவதை பார்திருக்கிறேன். எனது அரசியல் செயல்பாடுகளில் விளிம்பு நிலை மனிதர்களுடன் மிக இணக்கமாக பழகும் வாய்ப்பை அடைந்திருந்தேன். அவர்களுக்கு நபார்டு வங்கி மூலம் கடனுதவி செய்ய முயன்று வேறு காரணங்களுக்காக அதை நடைமுறை படுத்த இயலவில்லை.


ஹோசூரில் கம்பெனிக்கான இடத்தை தேட ஆரம்பித்தோம் அதற்கு செல்வம் உதவினார்.அவருக்கு அந்த தொழிற்சாலை ஒன்று புதுவையில் அல்லது ஹோசூரில் துவங்கப்பட வேண்டும் என நினைத்தார்.ஹோசூர் எனது எண்ணமாக இருந்தது. காரணம் நான் அவர்களின் பெங்களூர் மிகவும் தொழிற்சாலைக்கு அருகில் இருக்க விரும்பினேன். எனக்கு அந்த தொழில் பற்றி முழுவதம் அறிந்து கொள்ள   அது உதவும்.அந்த உச்ச சூழலில் என்னால் ஹோசூரில் இடம் வாடகைக்கு எடுக்க இயலவில்லை தொடர் சிக்கல். இருக்கும் இடத்தில் நீடித்திருக்க எதையாவது துழாவி இருக்கப் பற்றி கொண்டிருக்க முடியும். ஆனால் அது பிழைத்திருத்தலின் பொருட்டே நிகழவியலும். பிழைத்திருத்தலுக்காக என்னால் ஒன்றை செய்ய இயலாது.அந்த சூழலில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு மொத்த திட்டத்தையும் தலைகீழாக்கியது. எனது விற்பனை பிரதிநிதி சேலம் சென்று திரும்பும் போது அவனக்கு அளிக்கப்பட்ட லேப்டாப் திருடு போனதாக சொன்னான். ஏன் காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை என்கிற கேள்விக்கு அவனிடம் பதிலில்லை. திருடன் அவன் என அவனது செயல்பாடுகள் காட்டிக் கொடுத்தன. எனக்கு அந்த சூழலில் கோபத்திற்கு பதில் வருத்தமே உண்டானது. இவர்களை போன்றவர்களை அன்பால் அரவணைப்பால் கவருதல் நடவாது. அவர்கள் முன் முட்டாளாக தோன்றுவதற்கு அது வழி உண்டாக்குகிறது. தவறு செய்தவனை தண்டித்திருக்க வேண்டி இருக்க நான் ஏன் கழிவிரக்கம் கொள்கிறேன் என புரியவில்லை. ஒரு வியாபாரி மிக சிறந்த உற்பத்தியை கொடுக்க வேண்டுமானால் சிறந்த நிர்வாகத்தை தர வேண்டும். நிர்வாகத்தில் வேலை பார்ப்பவர்களை ஒற்றறிய வேண்டிய செயலை செய்யும் உளநிலை இல்லாத போது அது ஒரு சோர்வை அளிப்பது. அன்று என் நண்பன் மேத்யூஸ் இல்லாத குறையை உணர்ந்த தருணம். அவன் பணியாளர் துறையில் நிபுணன். மனிதவள மேம்பாட்டை ஒரு துறையாக இல்லாமல் வாழ்கை முறையாக கொண்டவன். அவனை முன் வைத்தே இந்த வியாபார நிறுவனம் துவங்கப்பட்டது. நான் என்னை என் மனநிலையை மிக துல்லியமாக உணர்ந்த தருணம் அது. அந்த சூழலில் நிறுவனத்தை பிரம்மாண்டமானதாக வளர்ததெடுப்பது பைத்தியகாரத்தனம். யாரிடமும் கடினமாக நடந்து கொள்ளும் உளநிலை இல்லாத போது அந்த முயற்சி பெரிய ஆபத்தாக முடியும். மனம் நொய்மையாய இருந்தது இனி அதனால் கடுமையாக நடந்து கொள்ள இயலாது. உள்ளம் ஆர்பரித்துக் கொண்டிருக்கும் விடுதலை என்பது அனைத்திலிருந்தும் வெளியேறிதல்


விடுதலைஎன்பது நான் அதுவரை உருவகப்படுத்தி புரிந்து கொண்ட அன்றிருந்த எனக்கும் இன்றிருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விடுதலை என்கிற சொல்லின் பொருளை மொழியில் தேடுவது அபத்தம். இன்றைய நவீன நரம்பியல் ஆய்வாளர் சொல்வது மொழி ஆளுமை என்பது ஒருவருக்கு அது அந்த மொழியின் மீது அமர்ந்ததல்ல. முளை நரம்பில் இருக்கிறது என்று . அதன் அடிப்படையில் விடுதலை என்கிற சொல்லுக்கும் அது அளிக்கும் எதற்கும் நேரடி அர்த்தத்திற்கு தொடர்பில்லை அது ஒவ்வொருவருக்கும் தனியான ஒன்றை தருகிறது என புரிந்து கொண்டால் விடுதலை என்கிற சொல்லும் அதன் பொருளும் பன்முகத்தன்மை பிரம்மாண்டம் கொண்டதாக மட்டுமல்லாது அதற்குநான்என சொல்லப்படுகிற மனம் மூளை சிந்தனை போன்றவை எதுவும் அல்லாத பிறிதேதோ ஒன்று அதை உருவாக்கி அளிக்கிறது. அப்போது அடையும் மனநிலை அந்த விடுதலைக்கு பொருளாகிறது


என் ஆழ்மனம் எதைவிட்டு விலக நினைக்கிறது என எனக்கு புரியவில்லை. சந்தியாசத்தை அது உத்தேசித்திருக்கவில்லை ஆனால் வானப்பிரஸ்த்தம் போல ஒன்றை எனது ஆழ்மனம் உத்தேதித்திருந்ததை இப்போது உணர்கிறேன. அது எப்போதும் அப்படித்தான். ஒன்றில் நுழைவதற்கான கடவு சீட்டை முதலில் கொடுத்து எத்தகைய நுழைவாயில் காத்திருக்கிறது என்பதை கண்டடைய அதற்குறிய காலத்தை கொடுக்கிறது. அப்போது கை கொள்ளாமல் கடவுசீட்டுகளை வைத்திருந்தேன். எதை எங்கு பயன் படுத்த வேண்டும் என்பது காலத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அது ஒருவகை மனநிலை அடிப்படையாக கொண்டது. அந்த மனநிலை ஒரு நிகழ்வில் முடிவாகிறது இதில் ஒன்று தவறினாலும் பிறிதொரு பாதை திறப்பதை பார்த்திருக்கிறேன்.


அனைத்தில் இருந்தும் ஓய்வும் அதை ஒட்டிய விலகலும் மரியாதைக்குறிய முறையில் எனக்கு இருக்க போவதில்லை என்பதை கடந்த பல பத்தாண்டு நிகழ்வுகள் சொல்லியிருந்தன. அதை எப்போதும் எதிர்பார்பதும் இல்லை. தனியனாக விடை அளிக்க ஆளில்லாமல் ஒற்றை மனிதனாகத் தான் நான் ஒவ்வொன்றில் இருந்தும் விடை பெற்றிருக்கிறேன். இப்பவும் அது அந்த வாய்ப்பையும் எனக்கு தரப்போவதில்லை. கொண்டாட்டம் என்பது மனதிற்கானது அதற்கு யாரும் துணை வர வேண்டியதில்லை நமக்கு நாமே அளிக்கும் இடமும் மரியாதையும் போதுமானது


பூர்வீக வீட்டை என் ஓய்வு காலத்திற்கு ஏற்ற மாறுதல்களை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தேன். மிகவும் செலவேறியதாக பிறர் நினைத்தாலும் எனது வழமையான பாணியில் மிக நுணுக்கமான அதே சமயம் பிறர் கணக்கிற்குள் வராத சிறிய செலவாகவே இருந்தது. அன்று வியாபார உச்சத்தில் இருந்தேன் ஆகையால் செலவு ஒரு பொருட்டல்ல. நான் எனக்கே எனக்கென அன்று சொல்லிக் கொண்ட ஒன்று உண்டென்றால் அதுவீழ்ச்சியில் வாழ்ச்சியை எண்ணி ஏங்குவது எல்லாருக்குமானது. ஆனால் நான் எனது வெற்றிக்களுக்கு மத்தியில் இந்த வீழ்ச்சி பற்றியும் அவதானித்திருந்தேன். நான் நினைத் காலத்தை தாண்டி அது நீடித்து எனக்கான வாய்ப்பை அளித்தது. அதற்கு என் நன்றிகள்.


ஊழ் உடன் பிறந்தாருடனான உறவு நிலைகளில் சமன் குலைவை உருவாக்கி இருந்தது. அவர்களுக்கு என்னை பற்றி இந்த வெற்றி அளிக்கும் மிதப்பு உருவகும் என்கிற சஞ்சலங்கள் அச்சங்களாக அவர்களுக்குள் எழுந்திருக்க காரணமாக இருக்கலாம். ஆனால் அனைத்திற்கும் அடியில் அசூயை போல் ஒன்று.அதற்கு காரண காரியங்கள் தேவைபடுவதில்லை.எதனாலும் கட்ட முடியதவனான என்னனை காலம்அம்மாஎன்கிற ஒருவரை முன்னிறுத்தியது. யாரையும் மீறல் எனக்கு ஒரு பொருட்டல்ல ஆனால் அதன் சிடுக்குஅறம்என்கிற ஒன்றிற்கு உள அனைத்தையும் திணித்து கொடுத்திருந்தது. ஒவ்வொன்றிலும் அது எழுந்து எழுந்து நின்று என்னை பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது. இல்லை என்றால் அதில் கட்டுண்டு இருக்க மாட்டேன். ஆனால் அதவை அங்கு வைத்தது ஊழ் என்பதைவிட வேறு சொல் இல்லை


அம்மா என் தந்தையின் இறப்பிற்கு பிறகு அதுவரை நான் அறிந்திரா பிறிதொருவராக மாற்றமடைந்து கொண்டிருந்தார். எங்கும் எப்போதும் தனது நிறைவின்மையை வெளிப்படுத்தும் கடும் சொல்களை வைப்பது அவரது பாணி. எனது இளவயது காலத்தில் அவர் உள்ளொடங்கியவராக அறிந்திருந்தேன்.அதற்கு  காரணம் என் தந்தை. ஒவ்வொரு முறை அம்மா தன் எல்லையை கடக்க முயலும் தோரும் அதை மட்டுறுத்தியபடி இருப்பார். அது அம்மாவை ஆழ் மனக் குமுறலுக்கு கொண்டு சென்றது. அம்மா நிரந்திர அமைதி இழந்தவர் போலானார். அந்த நாட்கள் நான் அம்மாவுடன் மிக அணுக்கமாக இருந்தேன். தந்தை அவரை ஏன் தொடர்ந்து கட்டுப்படுத்துகிறார் என புரியாத வயது அப்பா மீது வன்மம் கொள்ள வைத்தது . அப்போதெல்லாம் அப்பாவிடம் இருந்து அம்மாவை காப்பாற்றுவதற்கு என்னாலானதை செய்வேன். அப்பாவின் இருதயநோய் எதிர்பாராது அவரை தாக்கிய பிறகு ஐந்து வருடம் மருத்துவணையில் உடன் இருந்து பார்த்துக் கொண்டது அம்மா. மருத்துவமணை தனிமை. வாழ்கை பற்றிய கற்பனையற்ற தன்மை போன்றவை அவர்கள் இருவருக்குள் புதிய புரிதலை உருவாக்கி இருந்தது. அப்பா மெல்ல அம்மாவிற்கு அடங்கியவரானார். அப்பா இறந்து பல வருடம் கழித்து அதை உணர்ந்தேன். அந்த இடைப்பட்ட காலத்தில் மணவாழ்வில் எதிர் கொண்ட சிக்கல்கள் மிக ஆழமானவை ஒரு போதும் சரி செய்ய இயலாதவை. அதை எனக்கு அளித்த அனைவரும் அது போல ஒன்று நிகழவே இல்லை என்பது போல அதை மறந்து கடந்து சென்றனர்.


அப்பாவுடனே நீண்ட காலம் இருந்தவர் அம்மா இறந்த சூழலில் அவரை இழந்த அம்மாவை எப்படி கையாளப் போகிறேன் என்கிற அச்சம் இருந்தது. அப்பா இறந்த சூழலில் இறுதி மரியாதை செய்ய வந்த தனது அண்ணன் அன்னியை கண்ணியகுறைவாக அம்மா நடத்தியது என்னை திடுக்கிட வைத்தது. அது அவர் சென்றடைந்த இருளின் ஆழம். சூழ்ந்திருந்த அனைவரையும் முகம் சுழிக்க வைத்த நிகழ்வு. அம்மாவை எல்லோரும் தங்கள் வாழ்வில் இந்த தருணத்திற்காக அஞ்சி இருக்கிறார்கள். அம்மா பிறரால் கட்டுப்படத்த இயலாதவராக உருவாகிக் கொண்டிருந்தார். அதன் ஆபத்தை நான் முதலில் உணரவில்லை


வாழ்நாள் முழுவதும் நான் எதிர்பார்த்த எனக்கான இடம் நெருடல் இல்லாத  மிக கண்ணியமானதாக இருக்க வேண்டும் என விரும்பியதுண்டு. சுற்றம் மத்தியில் அம்மாவின் இடம் இல்லாமலானதால் பொது நிகழ்வுகளில் நான் புழங்கும் போது முதுகிற்கு பின்னால் சிறிய இளிவரளை எப்போதும் அறிந்திருக்கிறேன். அது மிகுந்த தொந்தரவை கொடுத்தது. அம்மாவின் கட்டுப்பாடில்லாத பேச்சின் சாயலை என் சகோதரிகள் பலரிடம் உணர்ந்திருக்கிறேன்.நான் எப்படி இருக்க வேண்டும் என என்னை வரையறை செய்யும் அளவுகோலாக அதுவே எப்போதும் இருந்திருக்கிறது


அப்பாவின் உடன் பிறந்தார்களுடன் மட்டுமின்றி தனது உடன் பிறந்தாருடனான அம்மாவின் அர்த்தமற்ற சர்சையினால் அவர்கள் அனைவரும் விலகி எனக்கு இரு தரப்பு குடும்ப உறவுகளும் இல்லாமலானது. குடும்ப உறவுகள் எப்போதும் சிக்கல் நிறைந்தவை யாரும் யார் மீதும் அறுதி முடிவை எடுத்துவிட முடியாது. உறவை பேணுதல் பிறிதொரு திறமை. சமூக நிலை அந்தஸ்து என்பது எதற்கும் உதவாத இந்த உறவுகளைப் பற்றித்தான் சொல்கிறது. அவர்களுடன் இணைந்து வாழ்வதும் ஒரு செல்வம் போன்றது. வேலையாள்கள் அமைவதும் பிறிதொரு செல்வம். இவை அனைத்தும் சம்பத்து என்கிற வகைமையில் வருகிறது.கட்டி மேய்க்க இயலாது என்றாலும் அதனுடன் பயணிப்பது ஒரு வகை சமூக ஏற்பை குறிப்பது


அவர்கள் உருவாக்கும் சிக்கலுக்கு அப்பால் அவர்களை தனித்து உணர்ந்து புரிந்து கொள்ளுதல் மட்டுமே இங்கு இயலக்கூடியது. ஒவ்வொரு சிக்கலுக்கு பின்னால் ஒருவரை விட்டு வெறுத்து விலகுதல் என ஆனால் இந்த பரந்த உலகில் தனிமைப்பட்டு நிற்க நேரிடும். அது உருவாக்கும் அவமானங்கள் எப்போது நம்மை சுற்றி சுழன்றபடி இருந்து கொண்டிருக்கிறது. நானும் முற்றாக வேண்டாம் என நினைத்த சில உறவுகள் உண்டு ஆனால் அவற்றிற்கு பின்னால் நீண்ட தர்க்கமும் அதன் நியாங்களும் இருக்கும். ஆனால் அதையும் மீறிய சில அறுபட்ட உறவுகள் உண்டு ஆனால் அவை எண்ணிக்கையில் மிக சொற்பம்


அப்பாவின் மரணத்திற்கு பின் குடும்ப உறவுகளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய எண்ணத்தில் இருந்தேன். சமூகம் என்பது நாலு பேர் அவர்கள் யார் என அறிய இயலாது என்றாலும் அவர்களை உள்ளடக்கிய வாழ்கையே நமக்கு விதிகப்பட்டு இருக்கிறது. அம்மாவை மையப்படுத்திய சர்ச்சைகள் ஆன்மாவை பாதிப்பவை உடன் பிறந்தார் செய்த அவற்றின் பின்புலத்தை இங்கு ஆய்வு செய்ய விரும்பவில்லை. எனக்கு எதிரே இருந்தவை இரண்டு கேள்விகள் மட்டுமே. ஒவ்வொரு நாளும் பூஜை அறைக்குள் நுழையும் முன்பு நான் என்னிடம் கேட்டுக் கொள்ளும் முதல் கேள்வி ஆன்மீகமானது. “அம்மாவிடம் சரியாக நடந்து கொள்கிறேனா? இரண்டுஉடன் பிறந்தார் என்னை உணரவில்லையா? அவர்கள் அனைவரும் அம்மாவின் குணம் தெரியாதவர்கள் இதில் என்னை காயப்படுத்துவதால் அவர்கள் அடைவதென்ன என்பதாக இருந்தது. வாழ்கையின் முன் எனக்கு வழங்கப்பட்ட இரண்டு வழிகளில் ஒன்றுவெறுப்புஇரண்டுஅன்புநான் இரண்டாவது வழியை தேர்வு செய்தேன்.


அந்த சூழலில் பல கேள்விகள் என் முன்னே நின்றிருந்தன. அரசியல் மற்றும் தொழில் என அனைத்திலிருந்தும் வெளியேறி மனம் முழு அமைதி நோக்கிய பயணத்தில் மனதை அரித்துக் கொண்டிருந்த வேட்டல்கள் அத்துடன் ஆன்மீகமான பல கேள்விகளுக்கு பதில் தேடிய சூழலில்ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழுவை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது பற்றி மிக விரிவாக இதில் பதிய நினைக்கிறேன் அந்த தேடலே தொடர்ந்து இலக்கியத்தில் கொண்டு விட்டது. அதன் ஒரு பகுதியாக எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்தது நல்லூழ். கீதா முகூர்த்தம். இலக்கிய வாசிப்பு பற்றிய எண்ணத்தை புரிதலை அவரது எழுதஃதும் தனிப்பட்ட உரையாடலும் ஆற்றுப்படுத்தியது. இலக்கியம் பற்றிய அடிப்படைகளை அது உருவாக்கி இருந்தது. அதன் வழியாக அதுவரை நான கடந்து வந்த பாதையில் பல துறைகள் மூலம் அடைந்த அனுபவங்களை அதில் பொருத்தி பொருத்தி மனம் அடங்கி அதனுள் சென்று அமர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

புதிய பதிவுகள்

மணிவிழா 78. அகத்தடை

  ஶ்ரீ : மணிவிழா - 78 20-06-2026 * அகத்தடை * 2008 களில் அனைத்திலிருந்தும் விடுபட்டு வெளியேறும் எண்ணம் மிக ஆழமாக எழுந்...