![]() |
இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
ஶ்ரீ:
மணிவிழா - 79
24-06-2026
* நினைவென்னும் இழை *
“அரசே, பருப்பொருட்கள் பிரம்மத்தால் பொருளேற்றம் செய்யப்பட்டவை. மானுடன் அறிந்தும் அறியாமலும் அவற்றின் சாரமென உறைவது அதுவே. மானுடன் தன் உள்ளமைந்த சாரத்தால் பருப்பொருட்களின் சாரத்தை சற்றே அறிகிறான்”
வெண்முரசு நாவல் வரிசையின்
- பன்னிருப்படைக்களம் -
ஜெயமோகன்
நான் ஒரு குறிப்பிட்ட “டிசைனால்” ஆனவன் என்றும் எனக்கான வாய்ப்புகளும் அதில் இருந்து உருவாகிவரும் என்றும் அதன் எதிர்காலம் ஒரு எல்லைக்கு உட்பட்டவையாகவும் இருந்திருக்கின்றன என புரிந்து கொள்ள நீண்ட காலமானது.நான் உருவாக்கிய பேரியக்கம் முதல் சாதாரன நடவடிக்கை வரையில் அத்தனைக்கும் ஒரு “பேட்டர்ன்” இருப்பது போல இதற்கும் இருந்தது. அல்லது அது எனது பிறவிப் பழுதாக இருக்கலாம். புதிதாக நான் துவங்க நினைக்கும் ஒவ்வொன்றும் துவக்த்தின் போது அதன் உட்கூறுகளும் அதில் செயல்பட வேண்டிய நபர்பளும் சரியாக வந்தமரவில்லை என்றால் ஒரு புள்ளியில் வெறுத்து வேண்டாம் என கைவிடும் போது ஒவ்வொன்றும் தானாக வந்திறங்க அதற்கான வாய்ப்பு உருவாகி வந்து என்னை இழுத்து சென்றது. அதில் சிறப்பான ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழுவும் அதில் ஒன்று .
ராமாநுஜரின் ஆயிரமாவது பிறந்த நாள் 2017 சித்திரை திருவாதிரையில் நிகழ இருக்க புதுவையில் மட்டும் அதன் துவக்கம் 2012 களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக அதன் துவக்கம் நிகழ்ந்தது. நான் நினைத்த அமைப்பை உருவாக்க எனக்கு அத்தனை காலம் தேவைபடும் என ஊகித்திருந்தேன். அதற்கு ஒரு காரணம் இருந்தது. காஞ்சீபுரம் அருகில் உள்ள கூரம் கிராமத்தில் கூரத்தாழ்வாரின் ஆயிரமாவது ஆண்டு விழா 2011 களில் நிகழ்ந்து முடிந்ததை அறிந்து அதை பார்க்க விரும்பினேன். திருப்பதி செல்லும் வழியில் இருந்தது கூரம் கிராமம். அன்று மாலை நான் அங்கு சென்ற போது நான் ஊகித்திருந்த எதுவும் அங்கில்லை. கோவில் பூட்டி இருந்தது. கட்டிய அனைத்து தோரணங்களும் காய்ந்து சிதறிக் கிடக்க அன்று காலை துவங்கி மதியத்திற்குள் ஒரு சிறிய கோவில் உற்சவம் போல அதன் உள்புறப்பாடு நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த சூழல் மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. ராமாநுஜரை விதந்தோதும் அனைத்து வைணவர்களுக்கும் கூரத்தாழ்வான் ஒரு குறியீடு போல. ராமாநுஜரை விட ஞானஸ்தனாக முன்வைக்கப்பட்டவர். அவருக்கான விழா இதோ இங்கு இவ்விதம் நிகழ்ந்து முடிந்தது என்றால்
ஐந்து வருடம் கழித்து ராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு நிகழ்வு எப்படி இருக்கும் என்பதற்கு இது சான்று என நினைத்தேன்.
அதை பெரிதாக வளர்த்தெடுக்க வேண்டும் என தீவிர எண்ணம் உருவானது. என்ன காரணம் என புரியாது அதை மிக பெரியதாக விரித்தெடுக்க நினைத்தேன். அப்படி நினைக்க நான் யார் என்பது கேள்வி. நான் கனவுகளால் வழி நடத்தப்படுபவன். அந்த கனவே என்னை அதன் நிஜத்திற்கு கொண்டு செல்லும் என அறிந்திருந்தேன். அப்படி ஒரு கனவை உருவாக்கி அதை துவங்க நினைத்து அயோத்தி யாத்திரை நிறைவின் போது எனது ஆச்சாரியனிடம் அதை முதலில் சொன்னேன். அதை வெற்றிகரமாக துவங்க வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற பிரபல ஆளுமை தேவைபடுவார்கள் என்ற போது அவர் முகம் மாற்றமடைந்து திகைப்பதை பார்க்க முடிந்தது. நான் வேளுக்குடி கிருஷ்ணனை சந்திக்க அவரது உதவியை எதிர்பார்த்தேன். தன்னால் அதற்கு உதவ முடியாது என்றார். அரசியல் என ஒன்றில்லாத எதுவும் இல்லை. கோவிலை மையப்படுத்திய அமைப்பும் வேளுக்குடி போன்றவர்களுக்கு இடையே கண்களுக்கு புலப்படாத மின்சார பாய்ச்சல் போல ஒன்று அதன் அடியாழத்தில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. திருக்கோவலூர் ஜீயர் மூலமாக வேறுக்குடியை மிக எளிதில் அணுக முடியும் என நான் நினைத்தது நடக்காது என புரிந்தது. பின் ஒருமுறை அவரை சந்திக்க சென்னை சென்னபோது அங்கு வேறுவிதமான அரசியல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அரசியலால் வெறுப்படைந்திருந்த எனக்கு அந்த திட்டம் நடக்காது என முடிவு செய்து அதிலிருந்து விலக முடிவெடுத்து விலகியும்விட்டேன்.
சில மாதங்களுக்குள்ளாக வேளுக்குடி கிருஷ்ணனின் “கிஞ்சித்காரம் டிரஸ்டின்” புதுவை பொறுப்பாளர் பரகாலன் தலைமையில் ஒரு குழு என்ன வந்து சந்தித்து ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழு துவங்குவது பற்றி என்னிடம் பேசினார்கள். நான் தற்செயல் வாதத்தில் நம்பிக்கையற்றவன். பெரும் திட்டத்தின் அலகுகள் சிறியவைகளாக தற்செயல் எடுக்கும் என புரிந்திருந்தேன். ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு என நான் காணும் கனவும் அதன் திட்டங்களும் மிக விரிவானவை, செலவேறியவை. அதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. புதுவை போன்ற சிறிய ஊர்களில் தொடர்ந்து ஆன்மீக நிகழ்வுகளுக்கு சொற்ப நிதி அளிப்பவர்கள் என ஒரு சிறிய வட்டம் உண்டு அதைக் கொண்டு அந்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் திருப்பதி கல்யாண உற்சவம் என்கிற பெயரில் நிகழும் கல்யாணம் மிக பிரம்மாண்டமானவை குறைந்தது இருபத்தி ஐந்து முதல் நாற்பது லட்சத்தை தாண்டும் நிகழ்வுகள். அதற்கான புரவலர்கள் மிக சிலர் ரசீது மூலமாக அல்லது உண்டியல் வாயிலக அந்த நிதி திரட்டப்படுவதல்லை. ஊர் பிரமுகர்கள் அந்த நிதியை அளிக்கிறார்கள். அதன் பின்னணி ஆன்மீகமல்ல அரசியலும் விளம்பரமும் அவர்களின் ஆணவம் ஈடு செய்யப்படுவதுமாக நிகழ்வது. இந்த நிகழ்விற்கு புதுவை முழுவதில் இருந்தும் இலவச பேரூந்து வசதி செய்யப்பட்டு குறைந்தது ஐம்பதாயிரம் பேர் கலந்து கொள்ளும் பெரு நிகழ்வு. இயற்கையாக திருப்பதி பெருமாள் என்கிற ஈர்ப்பு அந்த மாயத்தை செய்கிறது. திருப்பதிக்கே அது தேவையாய் இருக்கிறது. பெரும் கூட்டத்தில் முன்பு தங்களுக்கான மரியாதையை பெற நினைக்கும் பிரமுகர்கள் அதற்காக என்ன விலையும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.இங்கு அரசியலும் லாப நோக்கும் வைக்கப்பட்டு அதற்கான பொருளை அந்த இயக்கம் பெருக்கிக் கொண்டே செல்லும் வரையில் அது வெற்றிகரமாக இயங்குகிறது.
எளிய ஆன்மீக நிகழ்வுகளை பகத்தியுடன் நடத்த நினைக்கும் குழுவினர்களுக்கு அந்த தொகை நிச்சயம் எட்டக் கூடியதல்ல . நான் அந்த இரண்டையும் இணைக்க நினைத்தேன். அதில் உள்ள அரசியல் என்னால் கையாளக்கூடியது என அறிந்திருந்தேன்.
எனக்கான இடம் எப்போதும் இப்படித்தான் உருவாகி வருகிறது. அதற்கான முயற்சிக்கு முன்பு அதன் திட்டமிடலில் கிருஷ்ணபிரேமி, வேளுக்குடி கிருஷ்ணன்,முரளிதரஸ்வாமிகள், துஷ்யந் ஶ்ரீதர், ஹரிஜி அவருடைய மனைவி விசாகா ஹரி போன்றவர் உபன்யாச துறையில் பொருட்படுத்தக் கூடிய செயல்பாடுகளும் தங்களுக்கென தனிப்பட்ட கூட்டமும் கொண்டவர்கள். இதில் சிக்கல் அவர்களில் ஒருவர் பிறிதொருவரை ஏற்பதில்லை. அதற்கு பல காரணங்கள் நான் அதனுள் நுழைய விரும்பவில்லை. நான் வைணவம் சார்ந்து செயல்பட நினைப்பவன். எனது தேடல் தந்தை கற்பித்து என் வாழ்நாளில் அதன் சிறு பகுதியாவது செயல்பாட்டில் இருக்க வேண்டும் என நினைத்த போது அது கொடுத்த நிலையழிதலால் அது எனக்கு என்ன சொல்ல வருகிறது என கேட்டு கேட்டு மாய்ந்த காலங்கள் உண்டு . வைணவ தத்துவங்கள் காலத்திற்கு ஏற்காதவை காலாவதியானவை போன்ற எண்ணத்தை உருவாக்கி இருந்தது. இருந்தும் ஆழ்மனதின் உந்துதலால் அதன் மையம் நோக்கிய பயணம் பற்றிய கனவிருந்தது.
அது பற்றி விவாதிக்க உரையாட அறிஞர்கள் கொண்ட சபை உருவாக்கப்பட வேண்டும் என நினைத்தேன். கிருஷ்ணபிரேமி, வேளுக்குடி கிருஷ்ணன், முரளிதரஸ்வாமிகள், துஷ்யந் ஶ்ரீதர், ஹரிஜி அவருடைய மனைவி , விசாகா ஹரி போன்றவர்கள் மத்தியில் வேளுக்குடி கிருஷ்ணன் தெண்கலை தீவிர வைணவ போக்கும் அவருக்கு இணையாக வடகலை அமைப்புகள் துஷ்யந் ஶ்ரீதரை முன்வைக்க ஆரம்பித்தன. அவர் உபன்யாசத்தோடு நிறுத்திக் கொள்ள வேளுக்குடி அதை தாண்டி அமைப்பு ரீதியாக செயல்பட ஆரம்பித்தார். அவருக்கு இணையாக அமைப்பை உருவாக்கி நிர்வகித்தவர் முரளிதர ஸ்வாமிகள் அவர் கிருஷ்ண பிரேமி நோக்கிய மனச்சாய்வு கொண்டவர். கிருஷ்ணபிரேமி அளவிற்கு இந்தத் துறையில் நீண்டகாலம் பயணித்தவர் வேறுயாருமல்ல. அதுவரை இருந்த ஆன்மீக செயல்பாடுகளின் அமைப்பை மாற்றி அமைத்தார். அது பஜனை சம்பிரதாயமாக உருவாகி வந்து ஒரு நூற்றாண்டு காலம் ஆனாலும் பிராமனர்கள் அதில் நுழைந்து அரை நூற்றாண்டு ஆனது . பஜனை சம்பிரதாயம் பாமர மக்களை மனதில் கொண்டது என்றாலும் பிராமனர் உட் புகுந்து அதன் அடிப்படை அமைப்பை மாற்றினார்கள். கோவில்களில் கூடும் திரளில் இருந்து அமைப்பிற்குள் வருபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக சொற்ப எண்ணிக்கையிலான மனிதர்கள்.
கிருஷ்ணபிரேமி போன்றவர்கள் துவக்கத்தில் பிராமன ஆச்சாரத்தை முன் வைத்து அவர்களை நோக்கி பேசியவர்கள். ஆனால் அது காலதிற்கு ஏற்றதல்ல என ஊகித்து பின்னாளில் அதிலிருந்து விலகி பொது தளத்திற்கு வந்தாலும் தனக்கென தனியான அமைப்பின் மீது பெரிய நம்பிக்கை இருந்ததாக தெரியவில்லை. அதே சமயம் அரசியல் காரணங்களுக்காக உருவான அமைப்புகளில் நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களாக இருந்தனர். இன்று ஆன்மீக நிகழ்வுகளில் கூடும் கூட்டத்தில் பெருமளவு பிராமனர்களை பார்க்க முடிகிறது. அவர்களின் எண்ணிக்கை விரைந்து குறுகி வருகிறது அது உருவாக்கும் பதட்டம் கிடைத்த அனைத்தையும் அள்ளிப் பற்ற முனைகிறார்கள். அவர்கள் யாராவது ஒருவர் தலைமையில் ஒருங்கிணைய முயல்கிறார்கள். அதற்கு இன்றைய சூழலில் எங்கும் நிலவும் பதட்டம் மிக முக்கிய காரணமாக இருக்க வேண்டும். இதர மனிதர்கள் மிக மிக குறைந்த எண்ணிக்கை. மேலும் பிராமனர்கள் கூட தங்கள் குடும்ப இளையவர்களை கொண்டுவர இயலாதவர்களாக இருக்கிறார்கள் என்றால் சாமான்யர்கள் நிலை அதை விட பரிதாபம். எங்கு குறையுள்ளது. தங்களுக்குள் பிளவுபட்டு நின்றாலும் அனைவரும் முன்வைத்தது பக்தி சார்ந்த அறம். இதில் பக்தி ஏற்கப்பட்ட அளவில் அறம் எங்கும் ஏற்கப்பட்டாதாக தெரியவில்லை. அறம் குறித்த விவாதம் அதன் முடிவு எப்போதும் அதற்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் வைக்கும் வாதத்திற்கு எதிராக பேச இயலாமல் போவது. ஏன் சாமான்யர்களால் அவர்கள் தங்களை முன்வைக்கும் சடங்குகள் பக்தி சார்ந்ததாக இருந்தாலும் அது குறிப்பிட்ட கால அளவிற்குள் நிற்பது. அது வாழ்வியல் முறைக்கு ஏற்றதல்ல என முடிவெடுத்து விடுகிறார்கள். இன்று உலகியல் அதுதான் அதை ஒன்றும் செய்வதற்கில்லை என புரிந்து கொள்கிறேன.தனிப்பட்ட வாழ்வியல் தேடல் கொண்டவர்களுக்கு அது அளிக்கும் இடம் மற்றும் நம்பிக்கை வேறுவிதமானது.
எனது தேடலின் பொருட்டு அந்த இயக்கத்தை மிக பிரம்மாண்டமானதாக உருவாக்கி எடுக்க நினைத்தேன்.ராமாநுஜர் முன்பு சொன்ன அத்தனை வார்ததைகளுக்கும் ஆயிரம் ஆண்டிற்கு பிறகு இன்று இப்போது எப்படி ஆர்த்தமாகிறது என்கிற கேள்வியை கேட்டுக் கொண்டு துவக்கப்பட்டது அந்த விழா குழு அமைப்பு. என்னை தவிர பிற அனைவரும் அந்த இயக்கத்தை ஒரு சம்பிரதாயமான ஆன்மீக செயல்பாட்டிற்கானது என நினைத்திருந்த போது எனக்கு வேறு திட்டங்கள் இருந்தன. என் தந்தை என்னிடம் சொன்ன அவரது வருத்தம் அதன் துவக்க முணை அது என்னை இன்று இங்கு கொண்டு சேர்த்திருக்கிறது.
“வைணவ சம்பிரதாயத்தின் உயர்ந்த அர்த்தங்கள் பெரும் விதவான்களுக்கானது நம்மை போன்ற எளிய சாமான்யர்களுக்கு அது என்ன சொல்ல வருகிறது. அதன் பாடதிட்டங்கள் அனைத்தும் இளநிலை கல்வி பயின்ற ஒருவருக்கு முதுநிலை கல்வி பாடதிட்டங்களை போல இருக்கிறது. இதில் முதல் வகுப்பு மட்டுமே படித்தவனுக்கு என்ன சொல்ல வருகிறது?. இது ஒரு அடிப்படை, எல்லோருக்குமான ஒன்று என்றால் அது எப்படி இவ்வளவு சிக்கல் மிகுந்ததாக இருக்க முடியும்.
இதில் அள்ளிப்பற்ற ஏதுமின்றி விட்டு விலகவே அனைத்தையும் அது திறந்து வைத்திருக்கிறது என்றால் அதற்கு அர்த்தமில்ல்லையே” என்றார் . எங்கு அந்த தடை உணரப்படுகிறது எந்த இடத்தில் அந்த நிராகரிப்பு நிகழ்கிறது ! ஏன்?.அவை இத்தனை சிக்கலான ஊடுபாவுகளைக் கொண்டிருக்கின்றன. பெரும் வெற்றிகளை அடைந்த அனைவரும் சொன்ன ஒன்று அவர்களின் வெற்றி தற்செயலாக கண்டடைந்தது என்று. நான் தற்செயல் வாதத்தை ஏற்பதில்லை. அனைத்தும் பெருந்திட்டத்தின் சிறு அலகுக்கள்
அருகில் நெருங்கும் ஒருவருக்கு அது தன்னை திறந்து கொடுக்கும் என்றால் பிரபஞ்ச விதி ஏன் இந்த சிக்கலை உருவாக்கி தருகிறது. மெய்மை என்பது ஒவ்வொருவரும் முயன்று தன்னளவில் அடைய வேண்டியது. வழிகாட்டல் ஒரு துவக்கம் மட்டுமே ஆனால் அந்த வழி பிறருக்கான மெய்யிலை தராது. நிச்சயம் அது மிக எளிய ஒன்றாக தான் இருக்க முடியும். நாம் எதை எங்கே தவறவிடுகிறேன் என தெரியவில்லை என பல முறை அரட்டுவதை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் இதை ஏன் என்னிடம் சொல்கிறார் என புரியவில்லை. இப்போதும் அதற்கான கதவு திறந்ததாக நினைத்துக் கொண்டேன் என்றால் அது ஒரு மடமை ஆனால் தந்தை மகனில் கூர் கொள்கிறார். இது ஒரு தொடர்ச்சி என் வழியாக என்னைத் தொட்டு இனி முடிவிலி வரை பலரை சென்று தொட்டுக் கொண்டே இருக்கப் போகிறது. அதன் தொடுகையால் நான் அறிவது எனக்கானவைகளே அன்றி அதற்கானதல்ல என்கிற புரிதலை அடைய நீண்ட காலமானது. நான் அதிலிருந்து அறிந்து கொண்டவை எனக்கான மெய்மை. ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழு பற்றி மிக விரிவான பதிவுகளை செய்திருக்கிறேன் அதில் சொல்லாமல் விட்டுப் போன சிலவற்றை மட்டும் இதில் சொல்ல முயல்கிறேன்.
இங்கு ஆன்மீக செயல்பாடென்பது கோவில்களின் விழா, அங்கு நிகழும் உற்சவங்கள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதை ஒட்டியதாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அங்கு எந்த அமைப்பும் ஒருங்காத திருவிழா கொண்டாட்டங்களை அதில் கூடும் திரள்களின் வழியாக “காண்பவர்” சென்று சேரக் கூடிய இடம் ஒரு அற்புத புரிதல் “ஜெ” இதுபற்றி அடிக்கடி சொல்வதுண்டு. பிற செயல்பாடுகள் கோவில்கள் மற்றும் வீடுகளில் முற்றோதுதல். எது எப்படி இருந்தாலும் கோவிலில் வேலையை அனைவரும் இழுத்துப் போட்டு செய்ய முடியாது அவை சில குறிப்பிட்ட ஜாதி அடையாளம் கொண்டவர்களுக்கானது. சைவ வைணன கோவில்களில் எந்த அடையாளத்தில் உள்ளவர்கள் செய்யக் கூடியது என்ன? என்பது கோவில் ஆகமங்கள் வழியாக வரையறை செய்யப்பட்டது.
நான் இதை வேறு வகையில் பார்த்தேன் மதம் தத்துவங்களால் புரிந்து கொள்ளப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது. தத்துவ கல்வி இதுவரை ஒரு சம்பிரதாயம் சார்ந்ததாக அதன் நியமங்களுக்கு உட்படுத்தப்பட்டு கற்பிக்கபடுகிறது. அதன் முதல் தடையே அதன் ஆச்சாரம் என இன்று கருதப்படுவது. மத ஆச்சாரங்களாக சொல்லப்படுபவை காலாவதியாகி விட்டது. அடிப்படை ஆச்சாரம் என சொல்லப்படுகிற உணவு விஷயத்தில் இருந்து அது துவங்கப்படுகிறது என்றால் அதனுள் யாரும் வரப் போவதில்லை. நான் ஆச்சாரங்களுக்கு எதிரானவன் அல்ல எனக்கு மதத்தில் புரட்சி செய்யும் எண்ணமுமில்லை ஆனால் ஆச்சாரங்கள் உருவாக்கும் தடை கடக்க சில அடிப்படைகளை விலக்கி வைக்க வேண்டி இருக்கிறது. இன்று ஆச்சாரங்கள் பொது வெளியில் நிராகரிக்கப்பட்டுவிட்டது மட்டுமின்றி அதை வலியுத்துவது சட்டப்படி குற்றம் என்கிற எல்லக்கு செல்கிறது. உணவு தொடங்கி வாழ்வியல் மற்றும் குடும்ப முறை மாற்றங்கள் நிகழத் துவங்கி அரை நூற்றாண்டாகிறது. அப்படியானால் மதம் என நாம் உருவகிக்கும் ஒன்று இன்றைய இளைஞர்கள் என எடுத்துக் கொண்டால் அது பெரு வெளி அங்கு செயல்படக்கூடிய அமைப்புகள் அந்த பணியில் இருந்து விலகி அதே அரை நூற்றாண்டுகள் ஆகின்றது. இந்தியாவில் பிரிட்டீஷ் அரசு இருந்த போது இரண்டு முயற்சிகள் இன்றும் நீடிக்கின்றன. ராமகிருஷ்ண மடத்தை முன்வைத்து விவேகானந்தர் துவங்கியது பிறிதொன்று ராஜாராம் மோகன்ராய் துவங்கியது புரட்சி இயக்கம்.
இதில் விவேகானந்தர் உருவாக்கிய இயக்கம் இன்றுவரை உலகம் முழுவதிலும் இருக்கிறது. என்றாலும் அது துவக்கபட்ட போது விவேகானந்தர் சொன்னார் “ நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன்” என்று. அவரது கனவு என்ன என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு அந்த நூறு பேர் கிடைக்கவில்லை.வித்தியாசமான பிறிதொன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தனது குருவான ஆளவந்தாரை சந்திக்க சென்ற ராமாநுஜர் ஆளவந்தார் திருநாடு அலங்கரித்தார் என்கிற செய்தி கடைத்து அவரை ஊழ் சந்திக்க இயலாமல் செய்தது.தனது ஆச்சாரியனை சந்திக்க இயலாமல் போன விரக்தியில் ராமாநுஜர் சொன்னது. ஆளவந்தாரை சந்தித்திருந்தால் வைகுண்டத்திற்கு அனைவரும் மிக எளிதாக ஏறி செல்ல படிகளை கட்டியிருப்பேன் என்றார். எதை மனதில் வைத்திருந்தார் என்பது இன்றுவரை ஊகத்தில் கூட அது இல்லை. அதே சமயம் இதை சொன்ன இருவரும் அதை செய்து முடிக்க முடியாமலாகிறார்கள் . அந்த கனவு கலைந்தாலும் தங்களது லட்சிய பயணத்தை தொடர்கிறார்கள். இதில் இந்த புடவி அந்த விதியை செய்திருக்கிறது போல. ஒருவர் நம்பிக்கை சார்ந்து வளர்த்தெடுக்கும் ஒன்றினால் அடையப்படும் புரிதல் பிறருக்கு கடத்தப்படக் கூடியதாக அவருக்கும் பலன் அளிக்க கூடியதாக இருக்குமா அல்லது அவரது காலத்தில் அவருக்கான புரிதலின் பலனை மட்டுமே அது கொடுக்கிறதா? அதில் பிறர் வாழ்வில் அதற்கான இடம் என்ன என பல முறை கேட்டுக் கொண்டதுண்டு.
வைணவ மரபை அனைவருக்குமாக ஆக்கிய ராமாநுஜர் தனது கொள்கைகளை நெகிழ்வுத் தன்மையாக மட்டுமே வைத்திருக்க வேண்டும். அதில் படி நிலைகள் இருந்திருக்கும்.ஆனால் பலன் அந்த படிநிலைகளில் ஒரு தொடர்ச்சியை அவர் உத்தேசித்திருக்க வேண்டும். அவை ஒரு இலக்கை சென்றடையும் பல பாதைகளைப் போல. பின்னாளில் இழந்தது அதன் உள்ளீட்டு பொருளை. வைணவ தத்துவத்தின் அடிப்படை சாரம் மட்டுமின்று பல நூற்றாண்டுகள் கண்ட பிற சம்பிரதாயங்கள் கூட இங்கு கைநழுவிப் போனதாக நினைக்கிறேன். பின்னாளில் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாளத்தை ஏற்படுத்த முயற்சித்து அது கைவராது போனதை உணர்வார் இல்லை. ஆச்சாரம் பக்திக்கும் ஞான மார்கத்திற்கும் உதவுபவை சில அத்தியாவசியமானவை ஆனால் ஆவை எல்லோருக்குமானவை அல்ல. இன்று வர்ணாஸ்ரம தர்மம் எப்படி பொருள் கொள்கிறது. அன்று ஜாதியை அடிப்படையாக கொண்டது இன்று மனநிலையை அடிப்படையாக கொள்கிறது. வர்ணாஸ்ரமம் பண்டைய பாரதத்தின் சமூக மற்றும் தனிமனித வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்த ஒரு கட்டமைப்பு . இது வர்ணம், ஆஸ்ரமம் என்ற இரு வெவ்வேறான கருத்துகளை இணைத்து உருவான ஒரு தத்துவார்த்த அமைப்பு
1. நான்கு வர்ணங்களின் சமூகக் கடமைகள்
சமூகத்தின் சீரான இயக்கத்திற்காக, மனிதர்களின் குணம் (மனோபாவம்) மற்றும் தொழில் (செயல்பாடு) அடிப்படையில் சமூகம் நான்கு பிரிவுகளாக உருவகிக்கப்பட்டிருக்க வேண்டும்
பிராமணர்: அறிவு, ஆன்மிகம், கல்வி, தத்துவம் மற்றும் வழிகாட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள்.
க்ஷத்திரியர்: நிர்வாகம், ஆட்சி, பாதுகாப்பு, வீரம் மற்றும் நாட்டைப் பாதுகாக்கும் கடமை கொண்டவர்கள்.
வைசியர்: வணிகம், விவசாயம், பொருளாதாரம், பசு பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள்.
சூத்திரர்:உழைப்பு, கைவினைத்தொழில்கள் மற்றும் பிற மூன்று வர்ணத்தாருக்கும், சமூகத்திற்கும் தேவையான சேவைகளை வழங்குபவர்கள்.
தொடக்க காலத்தில் (வேத காலத்தில்) இது பிறப்பின் அடிப்படையில் அல்லாமல், ஒருவருடைய தகுதி மற்றும் குணத்தின் (குண-கர்ம) அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டதாக ஆன்மிக நூல்கள் பகவத் கீதை போன்றவை குறிப்பிடுகின்றன. பின்னாள்களில் இது பிறப்பின் அடிப்படையிலான சாதியமைப்பாக மாறியது.அல்லது புரிந்து கொள்ளப்பட்டது
2. நான்கு ஆஸ்ரமங்கள் (தனிமனித வாழ்வின் நிலைகள்)ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலத்தை 100 ஆண்டுகளாகக் கொண்டு, அவனது ஆன்மிக மற்றும் உலகியல் வளர்ச்சிக்காக வாழ்க்கை நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டது.
பிரம்மச்சர்யம்:முதல் 25 ஆண்டுகள். கல்வி கற்றல், ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல், அறிவையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ளும் காலம்.
கிருஹஸ்தம்:26 முதல் 50 ஆண்டுகள் வரை. திருமணம் செய்து கொண்டு, குடும்பத்தைக் கவனித்தல், பொருள் ஈட்டுதல் மற்றும் சமூகக் கடமைகளை ஆற்றுதல்.
வானப்பிரஸ்தம் துறவுக்கான ஆயத்தப் பருவம்:51 முதல் 75 ஆண்டுகள் வரை. குடும்பப் பொறுப்புகளை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு, உலகப் பற்றுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு, ஆன்மிகத் தேடலில் ஈடுபடுதல்.
சந்நியாசம் (முழுத் துறவறம்):75 ஆண்டுகளுக்கு மேல். உலக பந்தங்கள் அனைத்தையும் துறந்து, முழுமையாக இறைசிந்தனையிலும் மோட்ச (வீடுபேறு) நிலையிலும் கவனம் செலுத்துதல்.
நவீனப் பார்வையும் விவாதங்களும்
வர்ணாஸ்ரம தர்மம் என்பது தனிமனித ஒழுக்கத்தையும் சமூகப் பொருளாதாரச் சமநிலையையும் பேண உருவாக்கப்பட்ட ஒரு நெறிமுறை என்று ஒரு தரப்பினரால் ஆன்மிக ரீதியாக விளக்கப்படுகிறது.
இருப்பினும், காலப்போக்கில் வர்ண அமைப்பு என்பது பிறப்பின் அடிப்படையிலான, கடுமையான சாதியக் அடுக்குமுறையாக மாறியதால், இது சமூகத்தில் தீண்டாமை, உயர்வு-தாழ்வு கற்பிதம் மற்றும் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுத்தது என்ற வலுவான விமர்சனமும், அதற்கு எதிரான சமூகச் சீர்திருத்த இயக்கங்களும் வரலாற்றில் தோன்றின.வர்ணாஸ்ரம அமைப்பின் தத்துவார்த்தப் பின்புலம் மற்றும் அது காலப்போக்கில் சமூகத்தில் ஏற்படுத்திய வரலாற்று மாற்றங்கள் என இரு முக்கிய கோணங்களில் இதை அணுகலாம்.
1. தத்துவார்த்தப் பின்புலம். பண்டைய நூல்களின்படி, வர்ணம் என்பது ஒரு சமூகக் கோட்பாடாகவும், ஆஸ்ரமம் என்பது ஒரு உளவியல்-ஆன்மிகக் கோட்பாடாகவும் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.குண-கர்ம கோட்பாடு.பகவத் கீதையில் கிருஷ்ணர், "சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச" (நான்கு வர்ணங்களும் மனிதர்களின் குணம் மற்றும் செயல்களின் அடிப்படையிலேயே என்னால் உருவாக்கப்பட்டன) என்று குறிப்பிடுகிறார். அது சத்துவம் (அமைதி, அறிவு): பிராமண இயல்பு. ராஜஸம் (வீரம், ஆளுமை, செயல்வேகம்) க்ஷத்திரிய இயல்பு.தமஸ் (மந்தநிலை/அறியாமை) மற்றும் ராஜஸம் கலந்தது வைசிய, சூத்திர இயல்புகள் வரையறை செய்யப்பட்டது. தொடக்கத்தில் இது ஒரு நெகிழ்வான அமைப்பாக இருந்துதிருக்க வேண்டும் . உதாரணமாக, விசுவாமித்திரர் க்ஷத்திரியராகப் பிறந்து தன் தவத்தால் பிரம்மரிஷி (பிராமண நிலை) ஆனார். வால்மீகி வேடராக இருந்து முனிவரானார்.இன்று அந்த வர்ணாஸ்ரம நான்கல்ல அது பதினாறாக புரிந்து கொள்ளப்படுகிறது. அனைத்து வர்ணத்திலும் நான்கு வர்ண குணமுள்ள மனிதர்கள் இருக்கிறார்கள்.புருஷார்த்தங்கள். ஆஸ்ரம வழிமுறை என்பது மனித வாழ்வின் நான்கு முக்கிய இலக்குகளை (புருஷார்த்தங்கள்) அடைவதற்காக வகுக்கப்பட்டது:
அறம் :பிரம்மச்சர்யத்தில் கற்கப்படுகிறது.
பொருள். இன்பம் கிருஹஸ்தத்தில் (இல்லறத்தில்) அனுபவிக்கப்படுகிறது.
வீடுபேறு. வானப்பிரஸ்தம் மற்றும் சந்நியாசத்தில் இலக்காக மாறுகிறது.
வரலாற்றுப் பின்புலம் மற்றும் வீழ்ச்சி போன்றவை காலப்போக்கில் தத்துவார்த்தமாக இருந்த வர்ண அமைப்பு, நடைமுறையில் கடுமையான சாதியமைப்பாக மாறியதற்குப் பல வரலாற்று காரணங்கள் இருக்கலாம்.
மனுஸ்மிருதி போன்ற பிற்கால தர்ம சாஸ்திர நூல்களின் காலகட்டத்தில், வர்ணம் என்பது குணத்தின் அடிப்படையில் அமைவதிலிருந்து மாறி,"பிறப்பின்” அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும் ஒன்றாக மாறியது. இதனால் சமூக நகர்வு தடைபட்டது. ஒரு வர்ணத்தில் பிறந்தவர் எவ்வளவு திறமையற்றவராக இருந்தாலும் அதே வர்ணத்திலேயே நீடித்தார்; உழைக்கும் வர்ணத்தில் பிறந்த திறமையாளர்கள் ஒடுக்கப்பட்டனர்.சொத்துரிமை, அதிகாரத் தக்கவைப்பு மற்றும் தூய்மை வாதம் காரணமாக வெவ்வேறு வர்ணங்களுக்கு இடையே திருமணங்கள் தடை செய்யப்பட்டன. இது சமூகத்தை எண்ணற்ற உட்பிரிவுகளாகவும் (சாதிகளாகவும்) தீண்டாமை போன்ற கொடுமைகளாகவும் பின்னாளில் மாற்றியது.
அதற்கு இலக்கிய மற்றும் சீர்திருத்த இயக்கங்களின் எதிர்வினை உருவாகி வந்தன . வர்ணாஸ்ரமத்தின் பெயரால் நடந்த சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராக பாரத வரலாற்றில் தொடர்ச்சியான எதிர்ப்புகளும் சீர்திருத்தங்களும் தோன்றி வந்துள்ளன:பண்டைய எதிர்ப்பு: பௌத்தமும்,சமணமும் பிறப்பின் அடிப்படையிலான வர்ண அமைப்பை முற்றிலுமாக நிராகரித்து, ஒழுக்கத்தையும் தகுதியையுமே முதன்மையாகக் கருதின.அதன் பிறகு உருவான பக்தி இயக்கம் ஆழ்வார்களும், நாயன்மார்களும், வடநாட்டில் கபீர், ரவிதாஸ் போன்ற துறவிகளும் இறைவனின் முன்னால் அனைவரும் சமமே என்று முழங்கினர். பக்தி இலக்கியங்கள் மனித சமத்துவத்தைப் பேசின.நவீன காலச் சீர்திருத்தங்கள்:நாராயண குரு, மகாத்மா ஜோதிராவ் புலே,.போன்ற ஆளுமைகள் சமூக நீதிக்காகவும், பிறப்பின் அடிப்படையிலான அடுக்குமுறையை ஒழிப்பதற்காகவும் தீவிரமாகப் போராடினர்.
மகாத்மா காந்தி வர்ண கோட்பாட்டின் தத்துவார்த்தப் பக்கத்தை ஆதரித்தாலும், தீண்டாமையையும் உயர்வு-தாழ்வையும் கடுமையாக எதிர்த்தார். நவீன ஜனநாயக அமைப்பில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிறப்பின் அடிப்படையிலான அனைத்து பாகுபாடுகளையும் சட்டவிரோதமாக்கி, அனைவருக்கும் சமத்துவத்தையும் தனிமனித உரிமைகளையும் வழங்கியுள்ளது.இதையே வேறு விதமாக சொல்ல முயற்சிக்கிறேன். வர்ணாஸ்ரம அமைப்பில் தனிமனித வாழ்க்கையை நெறிப்படுத்திய"நான்கு ஆஸ்ரமங்கள்".மற்றும் அதன் தத்துவார்த்தப் பரிமாணங்களை இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால் பண்டைய பாரத சிந்தனையில், மனித வாழ்க்கை என்பது வெறும் பொருளாதாரத் தேடலோ அல்லது இன்ப நுகர்ச்சியோ மட்டும் அல்ல; அது ஆன்மாவின் பரிணாம வளர்ச்சிக்கான ஒரு களம் என்று கருதப்பட்டது. அதற்கு இந்த ஆஸ்ரம முறை வழிகாட்டியது.ஆஸ்ரமங்களின் உளவியல் மற்றும் ஆன்மிகப் பகுப்பாய்வு. ஒவ்வொரு ஆஸ்ரமமும் ஒரு மனிதனின் வயது, அவனது மன முதிர்ச்சி மற்றும் சமூகப் பொறுப்புகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே வடிவமைக்கப்பட்டது.
பிரம்மச்சர்யம்மாணவப் பருவம் — ஒழுக்கமும் அறிவும் கொண்டதாகவும். இலக்கு: ஆற்றலைச் சேமித்தல் மற்றும் உள்வாங்குதல்.நெறிமுறை: குருகுலக் கல்வி முறை இதன் மையமாக இருந்தது. இங்கு அரசன் மகனானாலும்,ஏழையானாலும் சமமாகவே நடத்தப்பட்டனர்.அதன் தத்துவம் நிலையின் முக்கிய நோக்கம் புலனடக்கம் . இது பிற்கால வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான மன வலிமையையும், சுய கட்டுப்பாட்டையும் வழங்கியது.
கிருஹஸ்தம் என்பது இல்லறப் பருவம் — சமூகத்தின் அச்சாணி அதன் இலக்கு பொருள் ஈட்டுதல் (அர்த்தம்) மற்றும் அறவழியில் இன்பம் துய்த்தல் (காமம்)என்றும் அதன் நெறிமுறை மற்ற மூன்று ஆஸ்ரமங்களில் இருப்பவர்களுக்கும் (மாணவர்கள், முதியவர்கள், துறவிகள்) உணவும் ஆதரவும் வழங்க வேண்டிய கடமை இல்லறத்தானுக்கு மட்டுமே இருந்தது. எனவே, இது"ஜேஷ்ட ஆஸ்ரமம்" தலைச்சன் ஆஸ்ரமம் எனப் போற்றப்பட்டது.இதன் தத்துவம்'பஞ்ச மகா யக்ஞங்கள்' (தெய்வங்கள், முன்னோர்கள், சக மனிதர்கள், பிற உயிரினங்கள் மற்றும் இயற்கை ஆகியவற்றுக்கு நன்றிக்கடன் செலுத்துதல்) மூலமாகத் தன் சுயநலத்தைக் கடந்து வாழ மனிதன் இங்கு பழகுகிறான்.
வானப்பிரஸ்தம் (துறவுக்கான ஆயத்தம் — பற்றறுத்தல்) அதன் இலக்கு உலகியல் பொறுப்புகளிலிருந்து மெல்ல விலகுதல்.அதன் நெறிமுறை பிள்ளைகள் வளர்ந்து குடும்பப் பொறுப்புகளை ஏற்கும் வயதில், பெற்றோர்கள் தங்களின் அதிகாரத்தையும் பற்றையும் விட்டுக் கொடுக்க வேண்டும். காடுகளுக்கோ அல்லது அமைதியான இடங்களுக்கோ சென்று தியானத்திலும் ஆன்மிகத்திலும் ஈடுபடத் தொடங்குதல்.இன்றைய நவீன உலகில் இது சாத்தியமில்லை. காடுகள் சட்ட ரீதியாகவே அணுகுதலுக்கு எதிரானாவை. வீட்டில் இருந்தேயாக வேண்டும் அத்துடன் எதிலும் பட்டுக் கொள்ளாதிருத்தல். பண்டைய வானபிரஸ்த விதிகளை விட இவை மிக கடுமையானவை. அதற்கான உள்ளத்தை பழக்குதல் இயலவதில்லை. அதன் உளவியல் நவீன காலத்தில் பலர் சந்திக்கும் "Identity Crisis" அல்லது முதுமைக்கால மன அழுத்தத்திற்கு இந்த 'பற்றற்ற விலகல்' ஒரு சிறந்த உளவியல் தீர்வாகப் பண்டைய காலத்தில் பார்க்கப்பட்டது.
சந்நியாசம் என்கிற முழுத் துறவறம் — வீடுபேற்றை
இலக்காக கொண்ட மோட்சம் முக்தி.இவர்களை பற்றி சொல்ல எனக்கு ஒன்றுமில்லை. அவர்கள் நாம் வாழும் இந்த உலகை முழுவதுமாக நிராகரிப்பவர்கள். அந்த மனநிலைக்கு செல்வது பற்றியதல்ல இந்த பதிவுகள். நான் வானப்பிரஸ்தம் என நினைக்கும் என் வீட்டில் எனக்கு கிடைக்கும் தனிமை அதை உருவாக்கிக் கொள்ள எனக்கு நான் சொல்லிக் கொண்டவை்என அவை இங்கே விரிந்து எழுகின்றன.
இலக்கியங்களில் ஆஸ்ரம தர்மம் அதன் தமிழ் பின்புலம் பற்றி சொல்லுவதென்றால் தமிழ் மரபிலும் இந்த ஆஸ்ரம தர்மங்களின் தாக்கம் மிக ஆழமாகப் பதிந்துள்ளது, குறிப்பாக இல்லறம் மற்றும் துறவறம் சார்ந்த சிந்தனைகளில்.திருக்குறள் காட்டு நெறி மிக விரிவானது. திருவள்ளுவர் வடமொழி ஆஸ்ரம அமைப்பை அப்படியே ஏற்காவிட்டாலும், அதன் தத்துவ சாரத்தைத் தமிழ் மரபிற்கேற்ப மாற்றியமைத்தார். 'அறத்துப்பால்' என்பதில் இல்லறவியல், துறவறவியல் என இரண்டாகப் பிரித்து, இல்லறத்தின் பெருமையையும், துறவின் தேவையையும் மிக அழகாக விளக்கியுள்ளார்.அதேபோல, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும், பிற்கால பக்தி இலக்கியங்களிலும், நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகளிலும் உதாரணமாக, ஜெயமோகனின் தத்துவார்த்த நாவல்கள் மற்றும் மகாபாரத மறுவாசிப்பான வெண்முரசு வரிசை நூல்களில் இந்த ஆஸ்ரம நிலைகளும், அவற்றிற்கு இடையே மனித மனம் சந்திக்கும் தார்மீகச் சிக்கல்களும் மிக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.