https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

மணிவிழா. 11

 





ஶ்ரீ:



மணிவிழா - 11

30.10.2022





வாசகன் தன் பித்துநிலையைக் கொண்டே வாசிக்கிறான். அதைத்தான் அவன் பரவசநிலை என்றோ மெய்மறந்த நிலை என்றோ சொல்கிறான்அவற்றினூடாக அவன் தான் தர்க்கபூர்வமாக அறிந்தவற்றுக்கு அப்பால் ஒரு தளத்தை அடைகிறான். அங்கே அனுபவம் முதலில் நிகழ்கிறது. அதன்பின்னரே அறிதல் நிகழ்கிறது. அதாவது ஆழுளம் அறிந்துவிடுகிறது. அதன்பின் தர்க்கமனம் அதை வகுத்து தொகுத்து புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறது”.


-ஜெ-





ஜெயின்  இந்த வரிகளை கண்டடைந்து ஒரு சாவி கிடைத்ததைப் போலானது. இனி திறந்து பார்க்க வேண்டியதுதான் என்பதால் அதை ஒரு நுண் சொல் போல சொல்லிக் கொண்டிருக்கிறேன். தேடலுக்கான சரியான கேள்வியை உருவாக்கிக் கொண்ட பிறகு அதற்கான தர்க்கம் திரண்டு வரவேண்டும். ஆசாரத்தை ஆன்மீகத்தில் ஏற்றி வைப்பதை மிகச்சிறிய வயதில் இருந்தே என் ஆழுளம் ஏற்கவில்லை. ஆனால் அது ஏன் என்கிற புரிதலை அடையும் தர்க்கத்திற்காக காத்திருக்கிறேன் . அவற்றிற்கு விடை போல சில கிடைத்தாலும் பல விஷயங்களில் அதன் முடி அவிழ வேண்டும் என்று தோன்றியதுஇதுவரை கடந்து வந்த வாழ்கையில் நடைபெற்ற அனைத்திலும் முடிவும் அதற்கான தர்க்க நியாமும் சிறு கால இடைவெளிகளில் கிடைக்கப் பெற்றதால் இதற்கும் உரிய காலம் வரும் என்கிற என் காத்திருப்பை நம்புகிறேன். அதற்கான இறையின் அருளையும் நிராகரிப்பையும் ஒன்றென எடுத்துக் கொள்ளும் மனம் வாய்தால் அந்த காத்திருப்பிற்கும் அர்த்தம் வருவதாக நினைகிறேன்


ராமாநுஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் மீதுள்ள பிடிப்பு இதுவரை நழுவாதிருப்பதும், நம்மாழ்வார் இன்னும் என்னுள் இளமை குறையாதிருப்பதும் ஏன்? என்று தோன்றாதது என் நல்நூழ். அதை தவிற பிற விஷயங்களை ஆழுள்ளம் நிராகரிக்கிறது . அதற்கான தர்க்கமாககாலம் கடந்தும் நிற்பவைகளே அந்த யுகத்திற்கானது பிற அனைத்தும் உதிர்ந்து கொண்டே இருக்கும்என தொகுத்துக் கொள்கிறேன்.இன்று

பௌராணிக மரபு ஆன்மீகம் தொடக்கமும் முடிவும் இல்லாமல் சிதையுற்றிருக்கும் இன்றைய சூழலில் இனி அடுத்தடுத்த பத்தாண்டுகளில் அது அடைய இருக்கும் வீழ்ச்சியை தீவிர ஆன்மீக செயல்பாட்டாளனாக உணர்ந்திருந்தேன். அன்று பதட்டமும் அதற்கு ஏதாவது மாற்று செய்ய வேண்டும் என்கிற பதைப்பின் தொடக்கம் முன்பு சொன்ன ஆழுள நிராகரிப்பும அடுத்தடுத்து நிகழ்ந்து முடிந்தது . ஆரம்பத்தில் அதை தவிற்க முயற்சித்து உருவாக்க நினைத்த அனைத்து முயற்சிகளும் முட்டு சந்திற்குள் அடைபட்டுவிட அடுத்த கட்ட நகர்விற்கு காத்திருந்த சமயத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை கண்டடைந்தது கீதா முகூர்த்தம்


அடுத்த தலைமுறையினரிடம் ஆன்மீகத்தை கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பௌரானிக மரபை சார்ந்துசநாதன தர்மம்அதன் கருதுகோளாக இருந்தது. அப்போது இந்து ஞான மரபு என்கிற சொல்லாட்சி அறிமுகமாகி இருக்கவில்லை. மாணவர்களுக்கு அதை கொண்டு செல்ல வேண்டும் என்கிற உத்வேகம் விவேகானந்தா பள்ளி தாளளர் செல்வகணபதி சொன்ன போது அதன் தேவையை அறிந்து கொண்டேன். அதற்கான பாடதிட்டத்தை உருவாக்க சிறந்த கல்வியாளர்களை தேடிச் சென்றபோது  கிடைத்த அனுபவம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.சந்தித்த ஆனைவரும் தலை வறண்டவர்கள். கற்பனை சிறுதும் அற்றவர்கள் ஆகவே ரசனையில்லை அது கொடுக்கும் இலக்கிய வாசிப்பு இல்லை என்பதோடு வாழ்வியல் குறித்த விஷங்களில் அரசியல் சரிநிலைகளத் தவிற பிற எவற்றின் மீதும் எந்த புரிதலும் இல்லைசிலர் கம்பனை மேற்கோள் காட்ட மட்டும் அதில் சில வரிகளை கற்றிருந்தார்கள். இவர்களை போன்றவர்கள் தான் அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார்களா? என்கிற திகைப்பை அடைந்தேன்




















சனி, 29 அக்டோபர், 2022

மணிவாழா 10

 



ஶ்ரீ:



மணிவிழா - 10

29.10.2022





மணிவிழா நிகழ்வது வாழ்வின் ஒரு கட்டம் நிறைவுற்று பிறிதொன்று துவங்குவது பற்றிய அறிதலுக்கும் அறிவித்தலுக்கும் . அது தீர்மானங்களால் உருவாவது . அதுவரை வாழ்ந்த வாழ்கை முறையை இன்னும் செறிவாக அர்த்தமுள்ளதாக உருவாக்கிக் கொள்ள மற்றுமோர் வாய்ப்பை அது கொடுத்திருந்தது. அதில் கொண்டாடம் என பெரிதாக ஒன்றில்லை என நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பிருந்தே மனதளவில் நான் எனக்கான வாழ்வியல் முறை பற்றிய ஒழுங்கிற்குள் வந்துவிட்டிருந்தேன். வாழ்கை அளித்த நெருக்கடிகளின் வழியாக அது நிகழந்தது. மெல்ல மெல்ல அதன் பாதையை அது தேர வைத்தது. அவதானிக்க அது மிக எளிதாக இருக்கலாம். ஆனால் மனதளவில் தொடர்ந்து நிகழும் வாழ்வியலின் நாட்டங்களின் நிரகரிப்பின் வழியாக மட்டுமே அதனுள் புக முடியும். ஒன்றன் பின் ஒன்றாக அது நிகழ்ந்து கொண்டே இருந்ததால் அதுதான் ஊழின் வழி போலும் என ஊகித்திருந்தேன் பெரிய விழாக்களில் கலந்து கொள்வதை தவிற்க துவங்கி இருந்தேன். காரணம் அது ஒரு போதும் அறுபடாத நீண்ட தொடர்ச்சி. நெருங்கிய அல்லது நான் பங்கு கொள்வதை மிகவும் விழைபவர் அழைத்தால் சென்று பங்கு கொண்டிருக்கிறேன்


பொது நிகழ்வில் இருந்து முற்றாக விலகிக் கொண்டது  மெல்ல பத்து வருடத்திற்கு முன்பு துவங்கியிருந்தது. பலமுறை சிந்தித்து அதன் பின்வளைவுகளை கணக்கிட்டு 

அதை கடந்து அந்த முடிவிற்குள் வந்தேன். அரசியலில் இருந்த போது கணக்கில்லாத நிகழ்வுகளில் கலந்து கொள்வது அன்றாடம் போல நடந்து சென்ற படி இருக்க வேண்டும். அரசியலில் இருந்து விலகுவது என முடிவெடுத்தது தீவிர எண்ணங்களுக்கு அடிப்படைக் காரணங்கள் இருண்டு ஒன்று.நான் உருவாக்கி வைத்திருந்த அமைப்பு குறுகிய கால லாபம் கருதி சென்று நாராயணசாமியடம் பணிந்து பின் ஒன்றும் நிகழாது தாங்கள் பலியானதை உணர்ந்த போது அவர்களுக்கும் எனக்குமான கனவுகளில் மிச்சமிருக்கவில்லை . விலகி சென்ற அனைவருக்கும் என்மீது எழுந்த கனல் என்னை சுற்றி எல்லா புறமும் பற்றி எரிந்தது. அரசியலில் ஒருவரை ஏற்பதும் மறுப்பதும் விலகுவதும் எப்போதும் எதிர்பார்க்கப்படுகிற ஒன்று. ஆனால் இம்முறை அது நிகழ்ந்த போது உருவாக இருந்த மொத்த எதிர்காலத்தை நிராகரித்தது

எனது திட்டமான நுண் அரசியல் அவர்களுக்கு புரியவில்லை என்பதுடன் அதை அவர்களுக்கு விரிவாக விலக்க முடியமற்போனது. அல்லது அதற்கான காலம் திரளவில்லை


அந்த காலகட்டங்களில் ஊழ் ஒன்றை தொடர்ந்து வலியுறுத்தியது. அனைத்தும் ஒரு கட்டத்தில் திருகிக் கொள்ள நான் அரசியல், வியாபாரம், ஆன்மீக செய்பாடு என அனைத்தில் இருந்தும் விலகிக் கொண்டேன். மனதளவில் கொந்தளிப்பை அளித்த குடும்பமும் அதை சார்ந்த விஷயங்களில் அந்த பராமுகத்தை கொண்டிருக்க முடியாது. அது மெல்ல என்னை கசப்பில் ஆழத்தி விடும். குடும்ப உறுப்பினர்களால் உள்ளமும் உடலுமாக மிகவும் புண்பட்டிருந்ததால் இயல்பாக அங்கிருந்து காழ்பிற்கு செல்லும் வழி அகலத் திறந்திருந்ததாக அறிகிறேன் . நான் மன அமைதி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன். அனைவரிடமும் எனக்கான இடம் மறுக்கப்படுவதை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன். அதனால் பாதிப்படைந்து குமுறுவதை விட்டு விலகி இருந்தேன்

அது எனக்காக வகுக்கப்பட்ட ஒன்று. எனக்கு நிகழ்வது ஊழ். அருளும் மறுப்பும் என்கிற வரையறைகள் பெருந்தெய்வத்தின் கருணை. அவற்றின் மீது நமது அர்த்தங்களை ஏற்றுவது தேவையற்றது. அது நிகழ காரணங்களாக இருக்கும் எளிய மனிதர்களை பொறுப்பாக்க முயல்வது முழுப் பெரும் இறையை நோக்கிய எனது இளிவரல் போல என உணர்ந்திருந்தேன்


ஆழ்மனம் எனக்கான பாதைகளை அதன் சிடுக்களில் இருந்து பிறித்துக் கொடுத்திருந்தது. பாதை கடினம். அதே சமயம் அது பிறிதொரு பக்கம் திரும்பும் வாய்ப்பை முற்றாக நிராகரித்து செல்ல வேண்டிய பாதை இது என அழுத்தமாக சொல்லிவிடுகிறது. பயண இறுதி சுவாசம் வாங்கிக் கொள்ள அமர்கையில் மட்டுமே அதன் கொடையை உணரும் வாய்ப்பை தருகிறது. விதி உள்ளவர்கள் அதை ஆழ்ந்து அனுபவிக்கிறார்கள்.

இங்கிருந்து பார்க்கும் போது வெற்றி தோல்வி மரியாதை அவமானம் என்பவை பொருளற்றவை. நிறைந்து இருத்தல் மட்டுமேயான காலம். ஊழுக்கு நன்றி.

















வெள்ளி, 28 அக்டோபர், 2022

மணிவிழா. 9

 ஶ்ரீ:



மணிவிழா - 9

28.10.2022.




மணிவிழா ஏற்பாடுகளை மனைவியும், விஜியும் பார்த்துக் கொண்டனர் எனக்கு ஒரு வேலையும் இல்லை. செலவுக்குகூட மிக மிக குறைந்த தொகையே எனது பங்காக கொடுத்திருந்தேன் அதுவும் என் வரையில் ஒன்றும் கொடுக்கவில்லை என எனக்கு இருக்கக் கூடாது என்பதற்காக. மற்றபடி முழு செலவையும் விஜி நிவாஸ் பார்த்துக்கொண்டனர். என் மனைவி அவர் செலவிற்கு அவர் அம்மா கொடுத்ததாக சொன்னார் அது எவ்வளவு என தெரியாது


மணிவிழா பெற்றோருக்கு குழைந்தைகள் நடத்துவது . நான் என் தந்தைக்கு இதுபோல மூன்று நாள் நிகழ்வாக ஒருங்கி இருந்தேன். மிக சிறப்பாக நடந்தது . என் தந்தையின் மணிவிழா 1991ல் நடைபெற்றது அந்த சூழலில் எனக்கும் எனது இரு தங்கைகளுக்கும் திருமணம் நிகழாத சூழலில் என் தந்தை அவரின் மணிவிழா திட்டத்தை மறுத்தார் என்றும் அவரது நண்பர்கள் மற்றும் சம்பிரதாய பெரியவர்கள்தவிர்ப்பது முறையல்லஎன்று சொன்னதற்கு பின்னர் ஏற்றார் என அறிந்திருக்கிறேன் . அப்பாவின் மணிவிழா முதல் நாள் வைதீகமாக திருக்கோவிலூர் ஜீயர் தலைமையில் துவங்கி பின்னர் கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வாக நிறைவடைந்தது. அது அவரின் வாழ்வின் முழு பயணத்தையும் பிரதிபலித்தது . நான் எனக்கான தேடலை அவர் விட்டு சென்ற இடத்தில் இருந்து துவங்கி இருக்கிறேன் என்பதை மிக தாமதமாக உணர்ந்தேன்


மணி விழா ஏற்பாட்டில் முக்கியமாக மூன்று விஷயங்கள் ஒருங்கு திரள வேண்டும் என்பதால் ஐந்து மாதத்திற்கு முன்பாக ஏற்பாடுகளை துவங்க வேண்டி இருந்தது . பட்டாசாரியார் கோஸகன் முதலில் உள்வரவேண்டியவர் . அவர்தான் மூன்று நாள் நிகழ்வை முழுமையாக கொண்டு செல்லபவர் . விஜி அவரை சந்தித்து அவரது பங்களிப்பை உறுதி செய்த பிறகு பிற வேலைகள் திட்டமிட்ட பாதையில் மெல்ல நிகழத்துவங்கியது .


வேதா நெருங்கிய உறவினர்கள் அனைவரின் குடும்பத்தார்களுக்கும் பட்டு புடவை, வேட்டி,சட்டை மற்றும் தாம்பூலத்துடன் அழைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தாள் . நான் அது செலவேறியது என்று தவிர்க்க சொல்ல மறுத்தது விட்டாள் . முன்பே அறிந்தது தான்குறைந்தது முப்பது குடும்பத்திற்கான உடைகள் . பின்னர் பணியாளர்கள் உடை என பட்டியல் நீண்டு சென்றது .அதற்கு முழுமையாக மூன்று மாதம் எடுத்துக்கொண்டாள் . அதற்கு பிறகும் வெவ்வேறு காரணங்களை கண்டு அது இன்னும் வளர்ந்தபடி இருந்தது . பொருளியல் தாண்டி உடல் உழைப்பு இன்னும் தீவிரமான ஒன்று . அந்த ஐந்து மாதமும் காலை மாலை என தனி ஒருத்தியாக செல்வதும் வருவதுமாக இருந்தாள். ஒவ்வொரு முறையும் வீடு திரும்பும் போது கை நிறைய துணி பைகளுடனும் சிரிப்புமாக இருந்தாள். பெண்களுக்கு பொருட்களை வாங்குவதில் உள்ள சந்தோஷதிற்கு இணை பிறிதில்லை. அது யாருக்காக வாங்கியதாக இருந்தாலும் அதே உணர்வை அடைந்து விடுகிறார்கள்


அடுத்த கட்டமாக எழுத்தாளர் ஜெயமோகனை  தொடர்பு கொண்ட போது வெள்ளிமலையில் இருந்தார் . மணிவிழா பற்றி அவரிடம் சொன்ன பிறகு இரண்டு விஷயங்களை அவரிடம் சொன்னேன். ஒன்று அவர் தனது மனைவியுடன் அவசியம் வந்து பங்குபெற்று திருமாங்கல்யம் எடுத்து தர வேண்டும். இரண்டு நிறைவு விழாவை ஒட்டி நிகழ இருக்கும் சிறிய கலை மற்றும் பண்பாட்டு நிகழ்விற்காக அவருடைய தனி உரை ஒன்று நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் இரண்டாம் அமர்வாக   தூரன் விருது பெற்ற கரசூர் பத்மபாரதி அவர்களுக்கு பாராட்டு விழாவில் நடத்த இருப்பதையும் அதிலும் அவர் கலந்து கொள்ள வேண்டும் என சொன்னேன் . மிக மகிழ்வாக ஏற்றுக்கொண்டார். அனைத்தும் மிக சரியாக அதனதன் கட்டத்தில் அமைந்தது பிற்றிதொரு கீதா முகூர்த்தம்








புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 73 அழைப்பிதழ்