https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

அடையாளமாதல் * தள்ளி நிற்கவும் *

 




ஶ்ரீ:



பதிவு : 635  / 825 / தேதி 09 ஆகஸ்ட்  2022



* தள்ளி நிற்கவும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 31 .





ஆட்சி மாற்றம் விரைவில் நிகழ இருப்பதற்கான அனைத்து காரணங்களும் வாய்ப்புகளும் அதற்கான முன்னெடுப்புகளும் ஒரு புள்ளியில் வந்து இணைந்து கொண்டிருந்தபோது,நான் அஞ்சிய அந்த நாள் நெருங்கி வந்துவிட்டதை உணர்ந்து கொள்ள முடிந்தது. அது போல ஒன்று நிகழும் முன்னர் இளைஞர் அமைப்பை முழுமையாக உருவாக்க வேண்டும் என முனைந்து கொண்டிருந்தேன். முழுமையாக உருப்பெற இயலாமல் அதுவரை அதைச் சிதறடித்த அனைத்து கூறுகளையும் கழித்து அதற்கு அப்பால் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் நான் அப்போது இருந்தேன் என்றால் அன்று அது தனியொருவன் கனவாக மட்டுமே இருக்க முடியும். அதுவரை இளைஞர் காங்கிரஸ் சந்தித்த அல்லது எதிர்கொண்ட உட்கட்சி சிக்கல் , மற்றும் அதில் தன்னை முன்னிறுத்தியது என தொடர்ந்து தாய் அமைப்புடன் மோதியதை மட்டுமே அரசியலென புரிந்து கொண்டிருந்தது . கண்ணனுக்கு பிற மாநில தலைவர்களை விட செல்வாக்குள்ள தனியாளுமையாக வளர்ந்து கொண்டிருந்தார். துவக்கத்தில் தெளிவான நோக்கம் இருந்தது அதற்கான வாய்ப்பும் திறந்து கிடந்தது. துரதிஷ்டவசமாக அவர் தலைவராக உயராது வெறும் அரசியல்வாதியாகி எல்லா வாய்ப்புகளையும் சிதைக்கத் துவங்கினார். அவரது அமைப்பு குறுங்குழுவாகி அதன் தலைவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை நோக்கிய செயல்பாடுகளுக்குள் சென்று தேங்கிப் போனது .அவரது வழியில் பயணித்த பாலன் தனக்கு சட்டமன்ற வாய்ப்பு என்பதை தாண்டி எந்த திட்டமுமில்லாததால் அவரது இளைஞர் காங்கிரஸ் இலக்கின்றி சிதறி அழிந்தது


தேர்தல் அரசியல் என் நோக்கமில்லை. தலைவனாக என்னை நான் ஒருபோதும் கற்பனை செய்து கொண்டதில்லை. நான் உருவாக்க நினைத்தது அரசியலில் ஒரு நண்பர்கள் வட்டம். சவால் மிகுந்த அரசியலை கூட்டாக எதிர்கொள்ளும் விதமாக அதை உருவாக்க வேண்டும் அங்கு யாரும் யாருடனும் உரையாட , விவாதிக்க முடியும் என்கிற ஒன்றைத் தான் முதலில் வைத்தேன். ஹோட்டல் சற்குருவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் வெறும் சடங்கல்ல அது ஒரு துவக்கம் என சொல்லுவதில் வென்றிருந்தேன். அனைத்தைப் பற்றியும் உரையாடும் விவாதிக்கும் இடத்தில் என்னை வைத்துக் கொண்டதால் இரவு நேர உரையாடல்கள் விவாதங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என சொல்லலாம். நண்பர்கள் மீள மீள வந்து சந்தித்து தொடர்ந்து உரையாடி ஒரு புள்ளியில் வந்து சேர்ந்த போது அமைப்பை முழுமை செய்யயும் எண்ணத்தை அடைந்தேன். அது ஒரு மிக நீண்ட பயணம். அது எப்படிப்டட வெற்றியை தரும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அது குறித்த பொய்யான எந்த தோற்றத்தையும் உருவாக்கிக் கொள்ளவில்லை.


தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பின் அடிப்படை வரைவை உருவாக்கத் துவங்கினேன். நான் எனக்கு சொல்லிக் கொண்டது ஒருபோதும் ஆதரவாளர்களை கொண்டு அதை நிரப்பக் கூடாது என்பதை. முரண்பட்டவர்களை உள்ளே கொண்டுவந்தாலும் அதன் எதிர்காலம் குறித்த பார்வை தெளிவானதாக இருந்தால் எனக்கு குழப்பங்களும் இல்லை . அனைவரும் ஏற்கும் ஒன்றை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருந்தேன் அதில் அனைவருகுமான உரையாடல் மட்டுமே எனக்கான இடத்தை பெற்றுக் கொடுக்கும் என நம்புகிறேன்.


தனிப்பட்ட முறையில் அதன் எதிர்காலம் அதை உருவாக்கும் கருக்கள் எங்கு சூல் கொண்டிருக்கலாம் என அதன் எதிர்காலத்தை பற்றி வெளிப்படையாக உரையாட இயலாத போதும் அது பற்றிய கனவுகள் பெரியதாக வளர்ந்து கொண்டேயிருந்தது. கனவில்லாமல் எதை நோக்கியும் செல்ல முடியாது . இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை அடைந்தால் அதுவரை திட்டமிட்டு நிகழ்ந்ததில் இருந்து உருவாகி வந்ததாக அது இருக்கும். பின் அங்கிருந்து செல்லும் பாதை மற்றும் நோக்கம் பற்றிய தெளிவை அங்கிருந்து உருவாக்கிக் கொள்ள நினைத்தேன் . தேர்தலரசியில் எனது கணக்கில் இல்லை அதே சமயம் கட்சி சார்ந்த எந்த பதவியையும் நான் மறுக்கப்போவதில்லை. நான் மூப்பனாரை எனது ஆதர்சமாக நினைத்திருந்தேன் எனக்கு அவரின் அனுகுமுறை மிக உகப்பாக அனுக்கமாக இருந்தது. சண்முகம் மற்றும் மூப்பானருக்கு இடையே கட்சி அரசியல் குறித்த பார்வையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. இருவரும் தஞ்சையை அடிப்படையாக கொண்டு உருவானது ஒரு தற்செயல் காரணமாக இருக்கலாம் . மற்றொரு தஞ்சைவாணியான கருணாநிதியும் அதற்குள் வருவார். நான் சண்முகத்தைப் பற்றிய அவதூறுகள் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதற்கிணையாக மூப்பனாரை 1983 முதல் உண்ணிப்பாக அவதானித்து வருகிறேன். அவர் அந்த நிலைப்பாட்டை எடுத்து அடைந்த வெற்றி, தோல்வி மற்றும் கைவிடப்படல் என அத்தனையும் அறிந்திருந்தேன். பின் எனக்கு ஏன் இந்த வீண் முயற்சிகள்?. எதை நோக்கிய பயணத்தில் இருக்கிறேன் என பல முறை கேட்டுக் கொண்டதுண்டு


எனக்கான சிறிய பங்களிப்பில்லாத எந்த நிகழ்விலும் பிறரைப் போல பார்வையாளனாக அமர்ந்திருப்பது ஒரு போதும் இயலுவதில்லை . அரைமணி நேரத்தை தாண்டி அங்கு  வெறுமனே அமர்ந்திருக்க முடியாது. அது எவ்வளவு பெரிய அல்லது முக்கியமான நிகழ்வாக இருந்தாலும் அங்கிருந்து வெளியேற மனம் உந்தியபடி இருக்கும் .சற்று நேரத்திற்கெல்லாம் அங்கிருந்து வெளியேறிவிடுவேன். கட்சி நிகழ்வை போல ஆயாசமூட்டுவது பிறிதில்லை. பேசி பேசி நோகடிப்பார்கள். அவை மணிக்கணக்காக நீள்பவை யாரும் யாருக்கும் சொல்ல ஒன்றுமில்லை என்பது இன்னும் அபத்தமானது .அது போன்ற இடத்தில் அடுத்தடுத்து செய்ய ஏதாவதொரு வேலை ஒன்றை எல்லோரும் விரும்பினாலும் அனைவருக்கும் வாய்ப்பதில்லை


கற்பனையும் செயலூக்கமும் மட்டுமே எனக்களிக்கும் கற்றல் மற்றும் எனக்கு முன் திறந்திருந்த வாய்ப்புகளை நிராகரித்து கடந்து செல்ல முடியவதில்லை . மேலும் அது ஒரு அறைகூவலைப் போல அங்கே நின்றிருப்பது, ஒவ்வொரு முறையும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதன் விளைவுகளை பொருட்படுத்தியதில்லை. அரசியலில் வேண்டாத வேலை என ஒன்று தனித்து இல்லை ஒருவகையில் அனைத்துமே அந்த வரையறைக்குள் நிற்கக்கூடியதே. ஒருகிணைத்தல் என் பலம் அதில் புதியவர்களை கொண்டு செய்யும் முயற்சிகளும் அதில் பயணப்படுவதே அதனால் அடைவது. கூட்டத்தில் தனித்திருப்பது அனைவரின் கவனத்தை ஈர்ப்பது. எனக்கான ஒரு பணியை உருவாக்கி கொள்வது என்பதற்கு அப்பால் எழுவது இளைஞர் காங்கிரஸின் அமைப்பு ஒரு நாள் தாய் கட்சிக்குள் சென்று அமர்வது . அரசியலை எங்களை சுற்றிப் பிண்ணிக் கொள்வது.


அடையாளமாதல் * காற்றுக்கு காத்திருப்பது *

 



ஶ்ரீ:



பதிவு : 635  / 825 / தேதி 09 ஆகஸ்ட்  2022


  • *  காற்றுக்கு காத்திருப்பது * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 31 .





பதவி ஏற்ற பின் ஒரு முதல்வருக்கு அவரது செயலாளர் மூலம் தனது  அரசை உற்றுப் நோக்கும் ஒரு முகம் கிடைக்கிறது. அது நிர்வாகத்தின் அகத்தை அசைவுற வைப்பது . அங்கிருந்து பின் அதுவே எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. அரசியலில் யாரும் சட்டென ஒரு உயர் பதவியை எட்டிவிடுவதில்லை. அப்படி திட்டமில்லாமல் விதிவசத்தால் அங்கு வந்து அமர்பவர் முதலில் தன்னை அழித்துக் கொண்ட பிறகு அனைத்தையும் ஒன்றுமில்லாததாக்குகிறார். அதிமுக ராமசாமியை அப்படி அனைத்து அரசியலாளர்களும் நினைவுறுபவர். சண்முகம் அந்த இடத்தை அடைந்தது முழுக்க முழுக்க கணக்கு தவறுதலால் நிகழ்ந்தது.அத்தனை அனுபவம் வாய்ந்தவர் குறைந்த கால முதல்வர் என்கிற பட்டியலில் சென்று அமர்ந்தது அவர் ஏமார்ந்த கணத்தில் நிகழ்ந்தது என்றாலும் அவருக்கான ஊழ் அங்கு காத்திருந்தது என்பதை தவிற வேறு எதை சொல்லியும் அதை வரையறை செய்து விட முடியாது .


மாநில அதிகார உச்சம் பற்றிய கனவு கொண்டவருக்கு அது மிக மெல்ல நிகழ்கிறது என்பதைக் கூட இங்கு சொல்ல முடியது என நினைக்கிறேன். கண்ணன் பிற எவரையும் விட கனவு கொண்டவராக தகுதியுள்ளவராக பார்க்கப்பட்டவர்.ஆனால் வெறும் கனவு மட்டும் உதவாது என்பதை நிரூபித்து அதில் இருந்து உதிர்ந்தார். கனவும் அதற்கான காலமும் மிகச் சரியாக கனிந்த இருவர் மரைக்காயர் மற்றும் ரங்கசாமி என நினைக்கிறேன். வைத்திலிங்கம் மற்றும் ராமசந்திரன் இருவரும் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டவர்கள் என்கிற அடைப்பிற்குள் வருபவர்கள். ராமசந்திரனை ஆள விடவில்லை அவரது இரண்டு அரசும் குறை கொண்டது. இரண்டு சண்முகமும் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை ஒன்று காங்கிரஸ் P.சணமுகம் பிறிதொருவர் திமுக MA. சண்முகம். அரசியல் ஏற்ற இறங்கங்களுக்கு ஈடு கொடுக்க முடியாதவராக உணச்சி கொந்தளிப்புள்ளவராக அறியப்பட்ட ராமசந்திரன் நிதானமாக அனுகும் சண்முகத்தை சமாளிக்க முடியவில்லை என்றாலும் திமுக வின் MA. சண்முகம் ஆவி அவரை எப்போதும் மன்னிக்வில்லை.


ஒரு முறை அரசியல் அதிகாரத்தை அடையும் யாரும் தனக்கான அத்தனை அரசு அதிகாரிகளையும் முன்னரே தெரிவு செய்து விடுவார் அல்லது அவரது செயலாளர் அவர்களின் பொருட்டு அதை செய்வார். சட்டென அனைத்தும் ஒரு புள்ளியில் கூர்கொண்டு விடுகிறது. சண்முகம் உச்ச ஆளுமை என்பதால் அது மிக இயற்கையாக தனக்கு ஒருங்கமையும் என அவர் கணக்கிட்டிருக்கலாம். அது ஒரு முணையில் அனைத்தையும் குவிப்பது. ஆனால் அது மிகை மதிப்பீடானது. கட்சி அரசியலில் நாராயணசாமி அவ்வளவு விரைவில் தனது தலைவர் பதவியில் வந்தமர்வார் என அவர் ஊகித்திருந்தாலும். தன்னை கேட்டு அந்த இடத்தை முடிவு செய்வார்கள் என நினைத்திருக்கலாம். அவர் காந்திராஜ் போல வேறு சிலரை தெரிவு தெய்து வைத்திருந்தார். வழக்கமாக முதல்வர் தேர்தலில் தோல்வியுற்ற மறு கணம் தனது அடுத்த இலக்கை நாராயணசாமி முடிவு செய்து அதற்கான நகர்வுகளை தில்லியில் துவக்கி ஏறக்குறைய முடித்து வைத்திருந்தார் . அதற்கு அப்போதிருந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாமநபி ஆசாத் முதன்மை காரணம். சண்முகம் மந்திரி சபையில் குலாம் நபி ஆசாத் சொன்ன எந்த பரிந்துறையையும் அவர் செவி கொள்ளவில்லை என்கிற வெறுப்பில் இருந்தார்


ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் நாராயணசாமியடம்அவருக்கு காது சரியாக கேட்காதா?. அல்லது நான் சொல்லுவது புரியவில்லையா எப்படி இவரிடம் பிறர் பேசுகிறார்கள்என்றார். அவருக்கு வேறு வழிகள் இல்லாததால் இறுதி கட்டமாக சோனியகாந்தி முன் நிகழ்ந்த ஆலோசனை கூட்டத்தில் மந்திரிசபை பற்றி சிபாரிசுகளை முன்வைக்க சண்முகம் தெளிவாகமந்திரிசபை குறித்த ஆலோசனை முதல்வருக்கும் அந்த மாநில தலைமை செயலாளருக்குமான தனிப்பட பேசு பொருள் அதை இத்தனை வெளிப்படையாக விவாதிக்க முடியாதுஎன சொல்லி சோனியா காந்தியின் முன்னால் குலாம்நபி ஆசாத்தின் மூக்கறுத்தார். சோனியாகாந்தியின் முன்னிலையில் சண்முகம் இப்படி பேசுவார் என எதிர்பார்க்காததால் திகைத்து விட்டார். மந்திரி சபை குறித்து குலாம்நபி ஆசாத்திற்கு சில தனிப்பட்ட விருப்பு இருந்தது அதற்கு காரணம். சண்முகத்திடம் சோனியா காந்தி அப்படியே செய்யுங்கள் என சிரித்தபடி கூறி எழுந்து கொண்டார்.அது சண்முகத்தின் அரசியல் ஆளுமையை வெளிபடுத்தினாலும் குலாம்நபி ஆசாத்தை கொதிநிலைக்கு கொண்டுவந்திருக்க வேண்டும். அவர் தனது நேரத்திற்கு காத்திருந்தார். தலைவர் மாற்றத்தை உடனே கொண்டு வந்தார் அதில் சண்முகம் முன்வைக்கும் அனைத்து வாதங்களும் அடைக்கப்பட்டிருந்தன . ஒரு கட்டத்திற்கு மேல் சண்முகம் தனது கோணத்தை வைக்க முடியவில்லை


முதல் நாள் இரவு அவர் தில்லியில் இருந்து என்னுடன் பேச வேண்டும் என்று சொன்ன தகவல் எனக்கு கிடைத்த போது புதுவை கட்சித் தலைமை மாற்றப்படுகிறது என என்னிடம் சொல்லவில்லை . அன்று இரவு 10:00 மணிக்கு நான் அவரை அழைத்த போது என்னை உடனே கிளம்பி சென்னைக்கு வரச் சொன்னார். நான் எதையும் ஊகிக்கும் இடத்தில் அப்போதில்லை முக்கிய நிர்வாகிகள் சிலரை அழைத்துக் கொண்டு சென்னையில் உள்ளபுதுவை விருந்தினர் மாளிகைக்குசென்றி இரவு அங்கு தங்கினேன். சென்னைக்கு செல்லும் வழியில் இரவு 11:45 மணிக்கு மீண்டும் என்னை அலைபேசியில் அழைத்தார் சண்முகம். மறுநாள் காலை 6:40 விமானத்தில் சென்னை வருவதாக சொன்னார். விமான நிலையத்தில் சந்திக்கலாம் என்றார் . என்னை விமான நிலையத்திற்கு வரச் சொன்னபோது சட்டென அனைத்து புலனும் விழித்துக் கொண்டது போலானேன் ஏதோ சரியில்லை என புரிந்தது. நான் தில்லி எனக்கு அணுக்கமான சிலரிடம் அலைபேசியில் அழைத்த போது புதுவை தலைமை மாற்றப்பட்டிருக்கும் தகவல் மற்றும அதன் பின்னணி குறித்த விஷயங்கள் அதிர்வளிப்பதாக இருந்தது


புதுவையில் அடுத்து நிகழ இருப்பதன் முதல் துளி முற்றாக சம்பந்தம் இல்லாத இடத்தில் இருந்து எழுந்த போது அது பிறதொரு இடத்தில் கருக் கொண்டிருப்பதை ஊகிக்க முடியாத போனதை நினைத்துக் கொண்டேன் . பாண்டியன் இளைஞர் காங்கிரஸ் பெயரில் ஒரு ரத்ததான முகாம் நடத்தப் போவதை பற்றிய செய்தி என்னை அடைந்த போது தில்லியில் நடந்திருக்கக் கூடிய சாத்தியங்களை ஒருவாறு அடுக்கிக் கொண்டேனே தவிற தலைமை மாற்றம் பற்றி எந்த ஊகமும் இல்லை . அதன் பின்னரே நாராயணசாமி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தகவலை எனது தில்லி தொடர்பு உறுதிப்படுத்தியது. நாராயணசாமி புதுவை வந்து பதவி ஏற்கும் அந்த சிறிய இடைவெளியைக் கூட விட்டுவைக்க விரும்பவில்லை என்பதை பாண்டியனின் ரத்த தான முகாம் திட்டம் சொல்லியது. புதுவை நண்பர்கள் அதற்கான விரிவான ஏற்பாடுகளை ஒரு கல்யாண மண்டபத்தில் பாண்டியின் செய்து கொண்டிருப்பதை சொன்னார்கள். நாராயணசாமி புதுவை நுழையும் போதே நேரத்தை வீணாக்காமல் அனைவருக்கும் ஒரு செய்தியை சொல்ல நினைக்கிறார். முதல்வர் பந்தயத்தில் அதை நூலிழையில் அதை இழந்திருந்தார். அதற்கு ஒருவகையில் நானும் காரணம் என்கிற கோபம் இருந்திருக்க வேண்டும். அல்லது அது எனது கற்பனை.

புதன், 3 ஆகஸ்ட், 2022

அடையாளமாதல் * விலகும் முணை *

 


ஶ்ரீ:



பதிவு : 634  / 824 / தேதி 03 ஆகஸ்ட்  2022



* விலகும் முணை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 30 .





கடந்து முப்பது வருடம் வைத்தியநாதன் சண்முகத்தின் அரசியல் முகமாக அறியப்பட்டவர். சண்முகத்தின் கட்சி ஆட்சி என இரண்டையும் இணைக்கும் ஒரு புள்ளி.அரசு அதிகாரிகள் மட்டுமல்ல கட்சியனரும் வைத்தியநாதனை அஞ்சியதற்கு  சண்முகத்திடம் அவருக்கு இருந்த செல்வாக்கு. சண்முகம் அனைத்தையும் அறிந்த மௌனமானவர் என்பது அவரை சந்திக்கும் அனைவரையும் பதற்றம் கொள்ள வைப்பது. சண்முகத்திற்கு வைத்தியநாதன் அரசை தொட்டு இயக்கும் ஒரு கருவி என்பதால் அரசு அதிகாரிகள் சண்முகத்தை சந்திக்க தயங்குவது தங்களின் வழக்கமான வேலையையும் மறுக்கும், தள்ளிவைக்கும் இயல்பினால் தாங்கள் வழக்கமாக சொல்லும் ஒன்றை சண்முகத்திடம் முன் வைக்க முடியாது என நினைக்கிறார்கள் காரணம் வில்லங்கம் அந்த சிக்கலின் தன்மை அதிலிருந்து வெளி வரும் அத்தனை உப சட்டங்களையும் சொல்லி அவரை தயார் செய்து வைத்திருப்பார் என்கிற அவர்களின் பிரமை. அதை போன்று ஒவ்வொரு மனிதரும் தங்களைப் பற்றி சண்முகத்திற்கு தெரியும் என்கிற தயக்கத்துடன் அவரை அணுகுகிறார்கள். அவரை தினம் சந்திக்கும் எளிய மக்களுக்கு இத்தகைய அகத்தடைகள் இல்லை. அவர்கள் சட்டென மிக சரளமாக அவரிடம் உரையாட துவங்கிவிடுகிறார்கள். அவருக்கு தனக்கு ஒன்றுமே தெரியாது என்கிற பாவணையுடன் எதிரில் உள்ளவர் தான் அவற்றை எல்லாம் தனக்கு சொல்ல வேண்டும் என்பதைப் போல தோற்றம் கொண்டுவிடுவார்


அரசு நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் இருவரையும் அஞ்சுவது அவர்களிடம் உள்ள தகவல்களின் அடைப்படையில். நிர்வாகத்தில் உள்ளவர்களின் கடந்த கால செயல்பாடுகள் அவர்களை கையாளும் ஒரு வகை லகான். அரசியலில் கடந்த கால சரித்திரம் நிகழ் காலத்தில் நடக்க இருப்பதை ஓரளவிற்கு கணிக்க கூடியதாக இருந்து கொண்டிருந்தது. பல ஆண்டு செயல்பாடுகளில் சண்முகம் வைத்தியநாதனை சகித்துக் கொள்ள முடியாத ஆயிரக் கணக்கான விஷயங்கள் நிச்சயம் இருக்கும். வில்லங்கத்தின் செயல்பாடுகள் எப்போதும் அப்படிப்பட்டது. நன்றாக பரிமாறப்பட்ட இலையின் மூலையில் எதையோ வைத்தது போல நன்றாக செய்த ஒட்டு மொத்த விஷயத்தையுப் சிறப்பாக கையாண்டாலும் அதற்கு பின் அதற்கு முற்றும் எதிரான ஒன்றை செய்யாமலிருக்க அவருக்கு முடிவதில்லை. அவரது இயல்பு அப்படித்தான். அனைவரையும் ஒரு சிக்கலான நேரத்தில் பதற வைப்பது ஒரு விளையாட்டு போல நிகழ்ந்தேறிவிடும் . ஆனால் இந்த இடம் சண்முகம் வைத்தியநாதனை வைத்து கண்டடைந்த ஒரு புள்ளி. அவரை அப்படி உருவாக்கிய சண்முகத்தின் தேவை. இப்போது அவசிமற்றதாக அவர் கணித்தது பெரிய பிழை


முதல்வர் என்கிற இடத்தில் அமர்ந்த பிறகு வைத்தியநாதன் இடத்தை பலர் நிரப்பக் கூடும் என கணக்கிட்டிருந்திருக்கலாம். “வில்லங்கத்தினுள்இருக்கும் அரசியலாளன் கூர் மதி கொண்ட அரசு சூழ்தல் நிறைந்தவர் . அவர் நியமித்த பல செயலாளர்களுக்கு மத்தியில் அவருக்கான இடம் அரசியல் செயலாளராக இருந்திருக்க வேண்டும். முதல்வருக்கு சமர்பிக்கபடும் அத்தனை ஆவணங்களிலும் ஒரு அரசியல் கூறு இருக்கும். அது மறைக்கப்பட்டு மௌனமாக அதன் மீது ஏறி அமர்ந்திருக்கும் அதை அடையாளம் கண்டுகொள்ளும் ஒருவர் முதல்வர் அருகே இருந்தாக வேண்டும். அந்த இடத்திற்கு மிக இயல்பாக சென்று அமர்பவராகவில்லங்கம்தன்னை வைத்துக் கொண்டார். ஆனால் இப்போது சண்முகத்திற்கு அதற்கான தேவையில்லை என்பதை விட வில்லங்கத்தின் கூட்டணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள நினைத்திருக்கலாம். தனது அத்தனை வருட அனுபவத்தில் தன் முன் வைக்கப்படும் அனைத்தின் அரசியல் பின்புலம் அறிந்து அதன் மீது முடிவெடுக்க இயலும் என நினைத்திருக்கலாம்


மூளை சோர்வு எத்தகைய ஆளுமையையும் செயலிழக்கச் செய்யக்கூடியது. அரசு அதிகாரிகள் அதை உருவாக்கும் கலை அறிந்தவர்கள். ஒரு கோப்பின் பற்றிய பின் புலம் அது வந்து சேரும் முதற் கணம் அது எப்படிப் பட்டது என்கிற புரிதல் முதல்வருக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் . இரண்டிற்குமான இடைவெளி மிக நுட்பமானது. சண்முகம் நேரடியான மாநில அரசு நிர்வாகத்தில நீண்ட காலமாக இல்லை .பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது பின்னர் சட்டமன்ற தேர்தலில் தோற்றது போன்ற பல காரணங்கள் அவரை நேரடி அரசு அலுவல் நகர்விற்கு அப்பால் இருக்க வைத்திருந்தது. அரசு நிர்வாக சிக்கல் குறித்த தகவல்கள் வைத்தியநான் மூலம் ஒரு வதந்தி போலவே அது இருந்தது. இப்போது ஒரு முதல்வராக அது மட்டும் போதுமானதல்ல. மிகச் சிறப்பான உளவு அமைப்பு , திறம்மிக்க, அரசு அதிகாரிகள் அவர்களுடன் ஒரு அரசியல் கூர்மதியாளனின் இடம் ஒரு சிக்கல் பற்றிய முழு சித்திரத்தை முதலவரின் பார்வைக்கு அதன் நுண்ணிய தகவல்களை வைக்கக்கூடியது. பின் தன் முன் வைக்கப்பட்டதில் இருந்து தனது முடிவை தேருவது முதல்வரின் பணி


அந்த இடத்தைவில்லங்கம்மட்டுமே செய்ய முடியும் என்பதல்ல இங்கு சொல்ல வருவது . ஆனால் அது போன்ற ஒருவரை என்ன காரணத்தினாலோ அவர் இறுதிவரை நியமிக்கவில்லை. அதன் தாக்கத்தினுள் சண்முகம் முழுமையாக சென்று சேர்ந்த போதுதான் தனது சில்லறை சீண்டல்களால் நாராயணசாமி சண்முகத்தை வெறுப்பேற்ற துவங்கியிருந்தார். சண்முகத்தின் சமநிலை குலைந்த இடமாக இதைப்பார்க்கிறேன். முதல் தவறில் இருந்து அடுத்தது , அடுத்தது என சுழல் போல ஒன்றுடன் ஒன்று பிண்ணி எழுந்து கொண்டே இருந்தது. கட்சி மூத்த நிர்வாகிகள் சண்முகத்தின் மீது கொண்டிருந்து கடும் கசப்பு அனைவரையும் நாராயணசாமி நோக்கி திருப்பிவிட்டது


அரசியலுக்கு அதிகாரமும் இருப்பும் மட்டுமே போதுமானது என்பது ஒரு தோற்றம் மட்டுமே .அது புறவயத்தில் பெருத்தமற்றதாக தெரிந்தாலும் அரசியிலின் ஆழ்விசை என்கிற நிர்வாகவியல் செயல்படுவது யாருக்காவது அல்லது எதற்காகவாவது அஞ்சியே. நிர்வாகம் அறத்தை பின்பற்றி நடப்பதில்லை. காரணம் அறம் மாநுட இயல்பல்ல என ஆயிரக்கணக்கான ஆண்டுகள்  சரித்திரம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது . அச்சம் மட்டுமே அரசியல் நிர்வாகத்தை மிக சரியாக செலுத்தக் கூடிய விசை .அந்த இடத்திற்குள் அந்த அச்சத்தை கொண்டே அனைவரும் தம்தம் இடங்களில் சென்று அமர்ந்து கொள்கிறார்கள். சட்டென அனைத்தும் மிக சரியாக பொருந்தி அரசை விசைமிக்கதாக்குகிறது . பின் அதன் எல்லைகளை தீர்மானிக்க வேண்டியது அதன் தலைமை பீடத்தில் அமர்ந்திருப்பவர். வைத்தியநாதனை போல ஒருவரை செயல்பட வைக்கும் தலைமையின் பிம்பம் அஞ்சக்கூடியது. இன்று வைத்தியநாதனை நிரகரித்து அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த பண்ணீர் செல்வம் ஒருதமாஷ்”. நேர்மையான திறமையான பல அரசு அதிகாரிகள் இருக்கையால் சண்முகம் பண்ணீர்செல்வத்தை கொண்டுவந்த போது அது சந்தேகத்திற்கிடமில்லாமல் தனது கோட்டை திறந்து கிடப்பதை அறிவித்துவிட்டது