https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

அடையாளமாதல் * ஓய்வறியா தனிமை *

 


ஶ்ரீ:



பதிவு : 637  / 827 / தேதி 21 ஆகஸ்ட்  2022



* ஓய்வறியா தனிமை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 33 .





அன்று முன் மதியம் அலைபேசியில் தலைவர் அழைத்துஉடனேகிளம்பி வீட்டிற்கு வரச்சொன்னார். அவருக்கு எப்போதும் எல்லாமேஉடனேதான் . மற்றவர்கள் தங்களுக்கானதை நோக்கி கொண்டு காலம் கணிய கணிய காத்திருக்க வேண்டும். நான் வேண்டுமென்றே தாமதமாக அன்று மாலை அவரை சந்தித்த போதுஏன் உடனே வரவில்லைஎன கோபிக்கவில்லை கேட்கவில்லை கேட்கவும் மாட்டார். அந்த சந்தர்பங்களில் அங்கில்லாததைப் போல வெளியே நின்றுவிடுவார் அதற்கென தனித்த மனநிலை பயிற்சி வேண்டும் என நினைக்கிறேன். அரசியலில் பொறுப்பில் இருப்பவர் ஏவல் பணியாளர் அல்ல. தனியாளுமையாக நிற்பவர் என்பது ஒரு கூற்று என்றாலும் குற்றவாளி என அவர் யாரையும் சொன்னதில்லை. பெரும் குற்றம் செய்துவிட்டு அவரை வந்து பார்க்கும் யாரையும் அந்த மனநிலையில் வைத்து பேசமாட்டார். அசாதாரண சூழலை உருவாக்காது வேறு கதைகளை பேசி சிரித்துக் கொண்டிருப்பார். தன்னை நோக்கி எழும் என அவர்கள் நினைத்து வந்த எதுவும் அங்கு பேசப்படாது. எல்லாத் செயல்களும் அதை செய்பவர் கோணத்தில் ஒரு நியாயம் சொல்லப்படும் என சண்முகம் அறிந்திருந்தார். அது பேசப்படுவதால் அங்கு எதுவும் நிகழப் போவதில்லை என உறுதியாக இருந்தார். எனவே அறிவுறைகள் அவர்களுக்கு சொல்லப்படாது . இவற்றை புறந்தள்ளி சம்மந்தப்பட்டவரே நேரடியாக அந்த நெருப்பை கொண்டுவந்து வைத்து விடுவதும் உண்டு. தலைவரே அந்த சந்தர்ப்களில் அவர் பக்க நியாயத்தை எடுத்து வைத்து அதை ஒன்றுமில்லாமலாக்கி்விடுவார். வந்தவர் குழம்பி வணங்கி சென்ற பிறகு அங்கு கூடி இருக்கும் கூட்டம் அவர் சொல்லாட இருக்கும் வசை ஏளனம் என ஒன்று வெளிவருவதை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருக்கும். அது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்கு அடுத்த கதவை திறந்து கொண்டு வேறு தளங்களுக்குச் சென்று கூடி நின்றவர்களுக்கு உளச் சோர்வை கொடுத்து விடுவார்


இரவு தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு மாணவனுக்குறிய இடத்தில் நின்று கொண்டு மிக எச்சரிக்கையாக அவரிடம் அந்த கேள்விகளை வைத்ததுண்டு. மெல்ல தனது கோட்பாடுகளை சொல்லத் துவங்குவார். “குற்றவாளிகள் ஒரு போதும் தன்னிடமே அந்த குற்றத்தை ஒப்புக்கொளவதில்லை. அதை ஒப்பிட்டு தனக்குள் செய்து கொள்ள ஒரு பயிற்சி தேவையாகிறது. அது நிகழ்ந்தால் மட்டுமே அவற்றில் இருந்து புதியதாக ஏதாவது ஒன்றை அடைகிறார்கள். அது பிறர் பார்க்க ஒரு போதும் நிகழ்வதில்லை. அரசியல் வேகம் மிகுந்தது நின்று நிதாணக்க அது அவகாசம் வழங்குவதில்லை. ஆகவே கற்றல் நிகழ்வதில்லை. அரசியலில் முதன்மை பாடம் நமது எண்ணங்களை சொற்களை தேவையற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் ஏதும் நிகழப் போவதில்லை . அந்த கூட்டத்தில் இருக்கும் வீணன் ஒருவன் நன் சொன்னவற்றை அப்படியே வெளியே பரப்புவதில் அலாதி சுகம் காண்பவன். யாரை குறித்து நான் என்ன நினைக்கிறேனோ அதை அவனிடமே சொல்லும் துணிவு எனக்குண்டு அதற்கான சந்தர்ப்பம் வருப்போது அதை நான் அவனிடம் நேரில் சொல்லுவேன். அப்போது அது என் வார்த்தைகளாக மட்டும் இருக்கும். ஐந்தாவது காதிற்கு நான் சொல்ல ஒன்றுமில்லை. அப்படி சொல்வது நாகரீமில்லை என்றார்


அன்று இரவு சென்னை கிளம்பி செல்ல வேண்டுமென்றார். மறுநாள் மதியம் தில்லி விமானத்தில் சென்னை வரும் பாரளுமன்ற உறுப்பினரை ஒருவரை புதுவைக்கு அழைத்து வர வேண்டும். சென்னை கிளம்பும் முன்பாக தன்னை வந்து பார்க்க சொன்னார். வர வர அது ஒரு சடங்கு போலாகியிருந்தது. எதை செய்வதற்கும் அந்த தருணம் முன்பாக இறுதி வார்த்தை சிலவற்றை சொல்லுவார். அது அதற்கு முன்பே ஆயிரம் முறை எனக்கு சொல்லப்பட்டிருக்கும் . சலிப்பில்லாமல் அவரால் அதை மீள மீள சொல்ல முடிகிறது . ஏன் அது நிகழ்கிறது என விளங்கிக் கொள்ள முடிந்ததில்லை . சொன்னவைகள் சொல்லபட்டவைகளாக அவரது நினைவில் சென்று அமராமல் இருக்கலாம். அல்லது என் மீது கொண்ட பதட்டம் அவரை மீள மீள அப்படி சொல்ல வைக்கிறதா? நான் பொறுமை இழந்திருந்தேன். சொல்லுவதை அமைதியாக கேட்டு உள்வாங்கிய பிறகு செயல்படுத்த வேண்டியதற்கு உகந்தததை ஏற்று அதை என் பாணியில் மாற்றி செயலாற்றுபவன் என்கிற எண்ணமும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஒருவகையில் நான் அவருக்கு பதட்டம் கொடுப்பவனாக இருந்தாலும் அதன் பொருட்டே அவர் மீள மீள சில பணிகளுக்கு என்னை தேர்ந்தெடுக்கிறார். அனைத்தையும் சொல்லி முடிந்த பிறகு தில்லியில் இருந்து வருபவருக்கு அணிவிக்க வேண்டிய பட்டு சால்வையை கொடுத்தார். அது பல தோள்களை தழுவியது. ஆனால் புதியதைப் போல இருந்தது . இன்னும் சில நூறு பேரையாவது அது அரவணக்கப் போகிறது. ஒழுங்காக மடித்து வைக்கப்பட்டிருந்தாலும் அதில் வியர்வை நாற்றம் எழுவதாக மனம் கற்பனை செய்து கொண்டே இருந்தது ஒவ்வாமையை கொடுத்தது . வெளியே வந்ததும் எனது ஓட்டுனரை அழைத்து அவரிடம் கொடுத்துவிட்டேன். இம்முறை வருபவர் 1999 ல் நடக்க இருக்கும் புதுவை பாராளுமனத் தேர்தலுக்கு வேட்பாளர் தெரிவின் மேலிடப் பார்வையாளராக வருகிறார். நடைபெற இருக்கும் மத்திய பிரதேச பாராளுமன்றத்திற்கு தேர்தலில் போட்டியிட சீட்டு கிடைக்காத வருத்தில் இருந்தவரை தேடி கண்டுபிடித்து அவரை சமாதனாப்படுத்த இங்கு தேர்வு செய்யும் பொறுப்பை அளித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள் . காங்கிரஸில் தான் இந்த மாதிரி வேடிக்கைகளும் முரண்நகைகளும் நிகழமுடியும்


சென்னைக்கு காங்கிரஸ் மூத்த துணைத்தலைவர் அரியாங்குப்பம் விநாயகமூர்த்தியை அழைத்துக் கொண்டு கிளம்பிச் சொன்னார். விநாயகமூர்த்தி ஒரு வேடிக்கை மனிதர். 60 வயதை நெருங்கக் கொண்டிருந்தாலும் அந்த வயதிற்குறிய அனுபவத்தையும் தொகுத்துக் கொள்ளாதவர். அதே சமயம் தனது சீனியாரிட்டக்குள்ள அனைத்தும் முறையாக தனக்கு கிடைக்க வேண்டும் என நினைப்பவர். ஒரு வகையில் சண்முகத்தின் முகமாக தன்னை நிறுவிக் கொள்ள முயல்பவர் . வெளியில் இருந்து பார்பவர்கள் அனைவருக்கும் அந்த மிரட்சி இருக்கும். ஆனால் அது நடிப்பு மட்டுமே. நான் முதன் முதலில் சண்முகத்தை சந்திக்க வந்த போது அவர் செய்த அலப்பறையை நினைத்து சிரித்துக் கொண்டேன். அவை தன்னைப் பற்றிய மிகை மதிப்பு மரியாதை ஐயம் உருவாக்க அவர் முயற்சித்தவைகள். ஒரு விதரேகிங்போல அதை அன்று என்னிடம் செய்தார் ஆனால் அசலில் மிக எளிய மனிதர். தான் வலிந்து உருவாக்கும் பிம்பத்தை மிக விரைவில் அவரை சிதைத்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன். நான் தலைவரிடம்இவரை ஏன் அழைத்துக் கொண்டு போக சொல்கிறீர்கள் தலைவரே ஏதாவது உலறத்தொலைவார் எனக்கு ஏதாவது வில்லங்கத்தை உருவாக்கப் பார்கிறீர்களா ?” என்றேன். தலைவர் முகம் விஷமத்தால் மலரகூட்டிக்கிட்டு போயா சும்மா இருப்பார்என சொல்லி சிரித்தார். என்னிடம் கெஞ்சிகிற பாவனையில் விநாயகமூர்த்தி வந்து சேர்ந்ததும் மேற் கொண்டு சிக்கலாக்க விரும்பவில்லை. சில உள்குத்து வேலைகளில் அவர் சமர்த்தர் தேவையில்லாமல் அவரை விரோதித்துக் கொள்ள விரும்பவில்லை .

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

அடையாளமாதல் * தள்ளி நிற்கவும் *

 




ஶ்ரீ:



பதிவு : 635  / 825 / தேதி 16 ஆகஸ்ட்  2022



* தள்ளி நிற்கவும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 31 .





ஆட்சி மாற்றம் விரைவில் நிகழ இருப்பதற்கான அனைத்து காரணங்களும் வாய்ப்புகளும் அதற்கான முன்னெடுப்புகளும் ஒரு புள்ளியில் வந்து இணைந்து கொண்டிருந்தபோது,நான் அஞ்சிய அந்த நாள் நெருங்கி வந்துவிட்டதை உணர்ந்து கொள்ள முடிந்தது. அது போல ஒன்று நிகழும் முன்னர் இளைஞர் அமைப்பை முழுமையாக உருவாக்க வேண்டும் என முனைந்து கொண்டிருந்தேன். முழுமையாக உருப்பெற இயலாமல் அதுவரை அதைச் சிதறடித்த அனைத்து கூறுகளையும் கழித்து அதற்கு அப்பால் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் நான் அப்போது இருந்தேன் என்றால் அன்று அது தனியொருவன் கனவாக மட்டுமே இருக்க முடியும். அதுவரை இளைஞர் காங்கிரஸ் சந்தித்த அல்லது எதிர்கொண்ட உட்கட்சி சிக்கல் , மற்றும் அதில் தன்னை முன்னிறுத்தியது என தொடர்ந்து தாய் அமைப்புடன் மோதியதை மட்டுமே அரசியலென புரிந்து கொண்டிருந்தது . கண்ணனுக்கு பிற மாநில தலைவர்களை விட செல்வாக்குள்ள தனியாளுமையாக வளர்ந்து கொண்டிருந்தார். துவக்கத்தில் தெளிவான நோக்கம் இருந்தது அதற்கான வாய்ப்பும் திறந்து கிடந்தது. துரதிஷ்டவசமாக அவர் தலைவராக உயராது வெறும் அரசியல்வாதியாகி எல்லா வாய்ப்புகளையும் சிதைக்கத் துவங்கினார். அவரது அமைப்பு குறுங்குழுவாகி அதன் தலைவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை நோக்கிய செயல்பாடுகளுக்குள் சென்று தேங்கிப் போனது .அவரது வழியில் பயணித்த பாலன் தனக்கு சட்டமன்ற வாய்ப்பு என்பதை தாண்டி எந்த திட்டமுமில்லாததால் அவரது இளைஞர் காங்கிரஸ் இலக்கின்றி சிதறி அழிந்தது


தேர்தல் அரசியல் என் நோக்கமில்லை. தலைவனாக என்னை நான் ஒருபோதும் கற்பனை செய்து கொண்டதில்லை. நான் உருவாக்க நினைத்தது அரசியலில் ஒரு நண்பர்கள் வட்டம். சவால் மிகுந்த அரசியலை கூட்டாக எதிர்கொள்ளும் விதமாக அதை உருவாக்க வேண்டும் அங்கு யாரும் யாருடனும் உரையாட , விவாதிக்க முடியும் என்கிற ஒன்றைத் தான் முதலில் வைத்தேன். ஹோட்டல் சற்குருவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் வெறும் சடங்கல்ல அது ஒரு துவக்கம் என சொல்லுவதில் வென்றிருந்தேன். அனைத்தைப் பற்றியும் உரையாடும் விவாதிக்கும் இடத்தில் என்னை வைத்துக் கொண்டதால் இரவு நேர உரையாடல்கள் விவாதங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என சொல்லலாம். நண்பர்கள் மீள மீள வந்து சந்தித்து தொடர்ந்து உரையாடி ஒரு புள்ளியில் வந்து சேர்ந்த போது அமைப்பை முழுமை செய்யயும் எண்ணத்தை அடைந்தேன். அது ஒரு மிக நீண்ட பயணம். அது எப்படிப்டட வெற்றியை தரும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அது குறித்த பொய்யான எந்த தோற்றத்தையும் உருவாக்கிக் கொள்ளவில்லை.


தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பின் அடிப்படை வரைவை உருவாக்கத் துவங்கினேன். நான் எனக்கு சொல்லிக் கொண்டது ஒருபோதும் ஆதரவாளர்களை கொண்டு அதை நிரப்பக் கூடாது என்பதை. முரண்பட்டவர்களை உள்ளே கொண்டுவந்தாலும் அதன் எதிர்காலம் குறித்த பார்வை தெளிவானதாக இருந்தால் எனக்கு குழப்பங்களும் இல்லை . அனைவரும் ஏற்கும் ஒன்றை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருந்தேன் அதில் அனைவருகுமான உரையாடல் மட்டுமே எனக்கான இடத்தை பெற்றுக் கொடுக்கும் என நம்புகிறேன்.


தனிப்பட்ட முறையில் அதன் எதிர்காலம் அதை உருவாக்கும் கருக்கள் எங்கு சூல் கொண்டிருக்கலாம் என அதன் எதிர்காலத்தை பற்றி வெளிப்படையாக உரையாட இயலாத போதும் அது பற்றிய கனவுகள் பெரியதாக வளர்ந்து கொண்டேயிருந்தது. கனவில்லாமல் எதை நோக்கியும் செல்ல முடியாது . இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை அடைந்தால் அதுவரை திட்டமிட்டு நிகழ்ந்ததில் இருந்து உருவாகி வந்ததாக அது இருக்கும். பின் அங்கிருந்து செல்லும் பாதை மற்றும் நோக்கம் பற்றிய தெளிவை அங்கிருந்து உருவாக்கிக் கொள்ள நினைத்தேன் . தேர்தலரசியில் எனது கணக்கில் இல்லை அதே சமயம் கட்சி சார்ந்த எந்த பதவியையும் நான் மறுக்கப்போவதில்லை. நான் மூப்பனாரை எனது ஆதர்சமாக நினைத்திருந்தேன் எனக்கு அவரின் அனுகுமுறை மிக உகப்பாக அனுக்கமாக இருந்தது. சண்முகம் மற்றும் மூப்பானருக்கு இடையே கட்சி அரசியல் குறித்த பார்வையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. இருவரும் தஞ்சையை அடிப்படையாக கொண்டு உருவானது ஒரு தற்செயல் காரணமாக இருக்கலாம் . மற்றொரு தஞ்சைவாணியான கருணாநிதியும் அதற்குள் வருவார். நான் சண்முகத்தைப் பற்றிய அவதூறுகள் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதற்கிணையாக மூப்பனாரை 1983 முதல் உண்ணிப்பாக அவதானித்து வருகிறேன். அவர் அந்த நிலைப்பாட்டை எடுத்து அடைந்த வெற்றி, தோல்வி மற்றும் கைவிடப்படல் என அத்தனையும் அறிந்திருந்தேன். பின் எனக்கு ஏன் இந்த வீண் முயற்சிகள்?. எதை நோக்கிய பயணத்தில் இருக்கிறேன் என பல முறை கேட்டுக் கொண்டதுண்டு


எனக்கான சிறிய பங்களிப்பில்லாத எந்த நிகழ்விலும் பிறரைப் போல பார்வையாளனாக அமர்ந்திருப்பது ஒரு போதும் இயலுவதில்லை . அரைமணி நேரத்தை தாண்டி அங்கு  வெறுமனே அமர்ந்திருக்க முடியாது. அது எவ்வளவு பெரிய அல்லது முக்கியமான நிகழ்வாக இருந்தாலும் அங்கிருந்து வெளியேற மனம் உந்தியபடி இருக்கும் .சற்று நேரத்திற்கெல்லாம் அங்கிருந்து வெளியேறிவிடுவேன். கட்சி நிகழ்வை போல ஆயாசமூட்டுவது பிறிதில்லை. பேசி பேசி நோகடிப்பார்கள். அவை மணிக்கணக்காக நீள்பவை யாரும் யாருக்கும் சொல்ல ஒன்றுமில்லை என்பது இன்னும் அபத்தமானது .அது போன்ற இடத்தில் அடுத்தடுத்து செய்ய ஏதாவதொரு வேலை ஒன்றை எல்லோரும் விரும்பினாலும் அனைவருக்கும் வாய்ப்பதில்லை


கற்பனையும் செயலூக்கமும் மட்டுமே எனக்களிக்கும் கற்றல் மற்றும் எனக்கு முன் திறந்திருந்த வாய்ப்புகளை நிராகரித்து கடந்து செல்ல முடியவதில்லை . மேலும் அது ஒரு அறைகூவலைப் போல அங்கே நின்றிருப்பது, ஒவ்வொரு முறையும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதன் விளைவுகளை பொருட்படுத்தியதில்லை. அரசியலில் வேண்டாத வேலை என ஒன்று தனித்து இல்லை ஒருவகையில் அனைத்துமே அந்த வரையறைக்குள் நிற்கக்கூடியதே. ஒருகிணைத்தல் என் பலம் அதில் புதியவர்களை கொண்டு செய்யும் முயற்சிகளும் அதில் பயணப்படுவதே அதனால் அடைவது. கூட்டத்தில் தனித்திருப்பது அனைவரின் கவனத்தை ஈர்ப்பது. எனக்கான ஒரு பணியை உருவாக்கி கொள்வது என்பதற்கு அப்பால் எழுவது இளைஞர் காங்கிரஸின் அமைப்பு ஒரு நாள் தாய் கட்சிக்குள் சென்று அமர்வது . அரசியலை எங்களை சுற்றிப் பிண்ணிக் கொள்வது.


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

அடையாளமாதல் * செயல்தடை *

 


ஶ்ரீ:



பதிவு : 636  / 826 / தேதி 14 ஆகஸ்ட்  2022



* செயல்தடை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 32 .






கட்சி அமைப்புகளில் தலைவரை தவிற பிற எவருக்கும் கட்சியில் பணியென எதுவும் செய்வதற்கில்லை . தலைவர் கூட அனேகமாக எல்லா நேரங்களிலும் ஓய்வெடுப்பது போல அமர்ந்து விடுகிறார். தேர்தல் காலத்தில் போர்களம் போல அதில் ஓய்வறியாத ஓடிக்கொண்டிருக்கும் விசையை அந்த ஓய்வில் இருந்து சேகரிக்கிறார் போல . சண்முகத்தின் தேர்தல் நேர உழைப்பு என்னை பிரமிக்க செய்வதுண்டு. உடலும் உள்ளமும் சோர்ந்து போகச் செய்யும் தொடர் நீண்ட பிரச்சாரம் பயணம்சொன்னதையே அர்த்தமில்லாது மீள மீள சொல்லிக் கொண்டிருப்பது உச்சகட்ட சலிப்பின் பெரும் பகுதி. அதை கேட்டுக் கொண்டு அவருடன் செல்வது போல அயற்சியடையச் செய்வது பிறிதில்லை. பெரும் வதையும் கூட. தேர்தல் பயணம் முடிவுறும் தேதியை பற்றி மனம் கணக்கிட்டபடி இருக்கும். அப்போதெல்லாம் மனம் இரட்டைநிலை ஊடாடும். ஆட்சி அமையாது போனால் நல்லது என்று சொல்லும் . செய்வதற்கு நிறைய இருக்கும் என்கிற எண்ணமும். பின் அதை வெகுண்டு தள்ளிஎதற்கு அஞ்சுவது இம்முறை ஆட்சி அமைந்த பிறகு முன்னர் செய்த பிழைகளை திருத்திக் கொள்ள வேண்டும்என்கிற வஞ்சனம் உரைத்துக் கொள்ளும். முன்பை விட நிலைமை நிறைய மாறி இருக்கிறது என்கிற சொல்லை ஒருவழியாக நம்ப ஆரம்பிக்கும். ஆனால் எதுவும் எப்போதும் மாறுவதில்லை. ஆட்சியில் அமர்ந்த பிறகு கட்சி அமைப்பு இரண்டாக பிளந்து ஒன்றை பிறிதொன்று இணைக்கவிடாமல் செய்யும் உயிர் விசையுள்ள மிருகம் எழுந்து ஒன்றை ஒன்று விழுங்க எழுந்து வருவது போல தோன்றும்


காலை 5:00 மணிக்கு புறப்படும் பிரச்சார வண்டியுடனான தொடர் பயணம் இரவு 12:00 மணிக்கு முன் வீடு திரும்ப முடியாமற் செய்துவிடும். இரவு உணவு எப்போதும் அவருடன். நான்கு ஐந்து இட்லியில் அந்த பயணம் நிறைவடையும். தலைவர் வீடு திரும்பிய பின் அவரது இரவு உணவிற்கு என்னிடம் கதவில் மாட்டப்பட்டிருக்கும் தனது சட்டை பையில் இருக்கும் பணத்தை எடுத்து கொடுக்கச் சொல்வார். எனக்கு என்ன வேண்டுமோ அதை வெளியே காத்திருக்கும் ஓட்டுனரிடம் சொல்லிக் கொள்ள வேண்டும். பணம் எடுக்க உள்ளே செல்லும் முன்பு வழக்கம் போல நன்கொடையாக அல்லது கட்சியில் இருந்து தேர்தல் செலவிற்கென வந்த பணத்தை தொடாதே என அலறுவார். கணக்கிற்காக அப்படி சொல்கிறார் என முதலில் நினைத்தேன். ஒரு முறைஏன் தேர்தல் செலவில் நமது உணவு வராதா?” என கேட்டதற்கு. “தேர்தல் நிதி யார் என்ன நினைத்துக் கொண்டு கொடுத்தார்கள் என யாருக்கு என்ன தெரியும் அதை கொண்டு சாப்பிடுவாவதுஎன்பார். சட்டைபையில் உள்ளது அவரது பாராளுமன்ற உறுப்பினருக்கான பென்ஷன் பணம். அது ஒரு நடிப்பாக இருந்தாலும் அந்த அர்த்தராத்திரியில் என் ஒருவன் பொருட்டு அரங்கேற்ற என்ன தேவை அவருக்கு? என நினைப்பதுண்டு


இரவுணவற்கு பிறகு அடுத்த நாள் பற்றிய திட்டம் . யார் யாருக்கு எந்தெந்த தகவல்கள் சொல்லப்படவேண்டும் . யாரை சந்திக்க வேண்டும் அல்லது தவிற்க வேண்டும் என அதற்குள் முன்பு உருவாக்கி  வைத்திருந்த பயண திட்டம் பெரிய மாற்றத்தை அடைத்துவிட்டிருக்கும். மீண்டும் முதலில் இருந்து துவங்கி சலிப்பே இல்லாத அடுத்த பயண திட்டம் சந்திக்க இருக்கும் தொகுதி முக்கியஸ்தர்கள், தவிற்க வேண்டியவர்கள் குறித்த வரைவு . சந்திக்க வேண்டியவர்கள் சரி தவிற்க வேண்டியவர் என ஒரு பட்டியல் தேவையா ? என கேட்டதற்குஆம் அது மிக முக்கியம் ஊரின் முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு கேட்பதற்கு இணையாக தவிற்க வேண்டியவர்கள் பட்டியல் மிக கவனமாக தயாரிக்க வேண்டும். தவிற்க வேண்டியவர்கள் கட்சியில் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கை பற்றி கட்சித் தலைமை்கு தெரியும் என்பதை போல அவர்களுக்கு ஆறுதலளிப்பது பிறதில்லை என்றார். அது அந்த செய்தி அந்த ஊர் மக்களுக்கு தெளிவாக சொல்லுவது .அவர்களை நம்மை நோக்கி கொண்டு வருவது. விலக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் உள்ளவர்கள் வெகு ஜன விரோதிகள் . கட்சி மற்றும் தலைவர்களின் பெயரை தங்கள் சுய லாபத்திற்கு அதுநாள் வரை பயன்படுத்துவதன் வழியாக அனைவரின் வெறுப்பிற்கு ஆளாகி இருப்பார்கள். அவர்கள் மீளவும் தங்களை பலப்படுத்திக் கொள்ள அல்லது தான் இன்னும் முக்கிய இடத்தில் இருப்பதாக பொது மக்களிடம் காட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தமுள்ளவர்களாக இருப்பவர்கள்இந்த தேர்தல் காலத்தில் வெளிவந்து அதிலிருந்து லாபமீட்ட முயல்வார்கள். பிரசாரத்திற்கு வரும் முக்கிய தலவர்களின் கார்களில், அவர்களின் ஊர்வலத்தில் இடம் பெற முண்டியடிப்பார்கள். அதற்காக பிற முக்கியஸ்தர்களுக்கு தடையை உருவாக்குவார்கள். தலைவர்களுடன் அந்த மாதிரி ஆட்களை ஒன்றாக பார்கக நேரும் போது பொதுமக்கள் கசப்படைவார்கள். அது எதிர்மறையான சிக்கலை உருவாக்கும். தலைவர் சந்திக்கும் ஊர் முக்கியஸ்தர்களில் சிலரை அவர்கள் தொகுதி எல்லைவரை  அவரின் பிரசார ஜீப்பில் இடம் ஏற்படுத்தி தரவேண்டும். பிறரை நகர்த்தி ஏற்றிவிடுவது எவ்வளவு கடினமோ அதைவிட அவர்கள் எல்லை முடிவுற்றதும் அவர்களை நாசுக்காக வண்டயில் இருந்து இறக்கி விட வேண்டும்தலைவர் இறக்கி அவர்களுக்கு நன்றி சொல்லி சால்வை அணிவிக்கச் செய்து அடுத்த தொகுதியை நோக்கி நகர வேண்டும். உள்ளூர் முக்கியஸ்தர்கள் வழியாக அந்தந்த பூத் பகுதிகளில் மக்களிடம் சொல்ல வேண்டியதை முன்பே கேட்டு வாங்கி சிறு குறிப்பாக அந்த இடம் வரும் போது அவரது கைகளில் கொடுக்க வேண்டும். என்னுடன் பயணிக்கும் நண்பர்களை இதில் திறம்பட செயல்படுத்துவது என் வேலை.


சரியாகி முடிந்து நான் வீடு திரும்ப இரவு 2:00 மணி ஆகியிருக்கும் . திரும்பவும் காலை 5:00 மணிக்கு செல்லவேண்டும் . உடலும் உள்ளமும் முழுமையாக உறக்கம் தழுவி ஒரு கணத்தில் வழிப்பு வரும்போது மறுநாளாகி இருக்கும். எழுந்தது அமர்ந்ததும் கண்களில் முதலில் எழும் கடும் எரிச்சலுக்கும் உடல் சோர்விற்கும் அளவே இல்லை. திரும்ப படுக்கச் சொல்லி உடல் கெஞ்சல் ஓங்கி நிற்கும். அது எடுபடும் என்கிற எண்ணம் எழும் முன்னர்இல்லைஅது ஒரு கணம்தான் அதற்குள் என்னைத் திரட்டிக் கொள்ள வேண்டும் . களத்தில் தொண்டர்கள்தான் கேட்பாரற்று பரபரப்புடன் கட்சி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் . அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். நான் போயேயாக வேண்டும் . விடுப்பெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது. வெறி கொண்டு கூவி பின் தொடர்கிறார்கள் திரிகிறார்கள் அதில் திளைக்கிறார்கள். திருவிழா மனநிலை அவர்பளின் அன்றாடங்களைக் கடக்க தேவையாகின்றன. சமயத்தில் நானும் அவர்களில் ஒருவன் தானோ என நினைத்துக் கொள்வேன்  . 


என்னை செயல்படுத்திய விசை இளைஞர் காங்கிரஸ் ஒரு தனி அமைப்பு என்பது . அதற்கு கொடுக்கப்பட்ட எல்லைகளுக்குள் தனித்து சற்று தீவிரமாக செயலாற்ற திட்டமிட இயலும் என்பதால் அதில் எனக்கான கதவை திறக்க எப்போதும் காத்திருந்தேன் . எனக்கிருந்த தடைகள் அனைத்தும் விலகி நான் செயல்படத் துவங்கியது வல்சராஜ் தனது தலைவர் பதவியில்  ஆர்வமிழந்து போன பிறகு . எதிர்ப்புகள் கூரிழந்திருந்தன . 1998 களில் ஏறக்குறைய நான் தலைவரைப் போல செயல்படத் துவங்கியிருந்தேன். அதற்குள் இரண்டு பாராளுமன்றத் தேர்தல்கள் வந்து சென்றுவிட்டிருந்தன. 1999 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி நிகழ்ந்த நாராயணசாமிக்கும் எனக்கும் உருவான மோதல் என் அரசியலை முற்றாக திசை திருப்பி விட்டது . “வில்லங்கம்அதற்கு முதன்மை காரணம். அரசியலில் எதிரிகளை விட நண்பர்களே எல்லா சமயங்களிலும் ஆபத்தானவர்களாகி நமது ஊழை வேறுவிதம் கொண்டு சென்று விடுகிறார்கள் . அன்றும் அது தான் நடந்தது .


புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...