https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 29 செப்டம்பர், 2022

அடையாளமாதல் * முந்தும் புதியவை *

 ஶ்ரீ:



பதிவு : 642  / 832 / தேதி 29 செப்படம்பர்  2022



* முந்தும் புதியவை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 38 .






1998 பாராளுமன்றத் தேர்தல்கள வேலைகள் ஆரம்பத்த போது அது கட்சியின் முகத்தை கார்பரேட் பாணியில் மாற்றி செயல்படுத்துவதாக தோன்றியது சற்று வினோதமாக பட்டது . தேர்தல் வேலைகளை முழுமையாகவே அதை கரூர் பாஸ்கரனுடன் இணைந்து ஒருங்கிணைத்தோம். ஒவ்வொரு சந்திப்பிற்கு பிறகு அவர் அதை அனுகிய முறை என்னை அப்படி பார்க்க வைத்தது. முற்றாக புதிய அனுபவம். ஒன்றொன்றும் புதிய தளத்தில் நிகழ்ந்தது. வேட்பு மனு தாக்கல் அன்று அந்த ஊர்வலம் திட்டமிடலில் இருந்து அது துவங்கியது. ஈரோடு பக்கத்தில் இருந்து ஒரு மேளக் குழுவை முதல் நாளே வரவழைத்து தங்கவைத்து அவர்களை தேவைகளை பார்த்துக் கொள்ளச் சொன்னார். அது ஒரு இருபத்தி ஐந்து பேர் குழு அவர்கள் கொண்டு வந்திருந்த மேளங்கள் ஏறக்குறைய ஐந்தடி உயரமுள்ளவை சில சிறியவை. நம்மூரில் பயன்படுத்தப்படும் பறை போன்ற தோல் வாத்தியங்களல்ல. தில்லியில் அது போன்று பார்த்திருக்கிறேன். ஸ்டீல் டிரம்முகளில் இழுத்துக் கட்டப்பட்ட சிந்தடிக் பிளாஸ்டிக் போல ஒளி ஊடுருவக் கூடியது. தோல் வாத்தியங்களை போல அவை தொய்ந்து விடுவதில்லை. ஆரம்பத்தில் அதை வழக்கமான மேளமாக நினைத்திருந்த எனக்கு அடுத்த நாள் காலை துவங்கும் போது அதன் ஒலி அலைகள் ஏற்படுத்திய சிலிர்ப்பு அடங்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. ஒருமுறை மனதை கொடுத்துவிட்டால் அதிலிருந்து மீட்டுக் கொள்வது அவ்வளவு எளிதல்ல


அவர்கள் எப்போது துவங்க வேண்டும் என்கிற முடிவை என்னை எடுக்க சொல்லியிருந்தார்கள் . அதை நான் தலைவர் அலுவலகத்தில் இருந்து இறங்கி வரும்போது ஆரம்பிக்க நினைத்திருந்தேன். கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் அதை ஒருவர் மாற்றி ஒருவர் சமிக்ஞை மூலம் மட்டுமே ஆரம்பிக்கச் சொல்ல முடியும். நண்பர்கள் சிலரை அதற்கு நியமித்துவிட்டு நான் தலைவருடன் அவரது அறையில் இருந்தேன். வழக்கம் போல அவருடன் சிலர் சர்ச்சையை துவங்கினர். அரசியலில் அது ஒரு வேடிக்கை பிறரின் கவனத்தை கவர அப்படி செய்வார்கள். அவர்கள் அதற்காகவே வருவார்கள் போல. அன்று அதை எப்படி நிறுத்துவது என தெரியவில்லை கூட்டம் அவரது அறைக்கு உள்ளே வெளியே என கசகசத்து ஒருவருடன் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். எதை குறித்த சர்ச்சை என அறிந்து கொள்ள ஆர்வமில்லாமல் அங்கிருக்க முடியாமல் வெளியே ரோட்டிற்கு வந்த போது என் நண்பர்கள் தவறுதலாக நான் அந்த மேளத்தை துவங்க சொல்லுவதாக நினைத்துக் கொண்டார்கள். சட்டென அந்த மேளம் துவங்கிய முதல் கணம் காதில் ரீங்காரமாக ஒலித்து என்ன அது என்ன வகை தாளம் என புரிந்து கொள்ளவதற்கு முன்னர் உச்ச கதியை அடைந்திருந்தது . ஒரு மேளமே காதை பிளக்கும் ஒலியை எழுப்பக் கூடியது ஆனால் அனைத்தும் ஒரே சமயத்தில் துவங்கிய போது ஒத்திசைவு அதன் இசையை முதலில் வெளியிட்டது. துணை இசை கருவிகள் எல்லாமே மேளங்கள்தான். ஒலியில் அவை பலவிதமாக பிரதான மேலத்துடன் இணைந்து முரண்பட்டு தனித்து என ஒரு தாளகதிக்கு வந்த போது அதை கேட்பவர்களை முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டது. பூனையின் எலி நோக்கு போல ஏனென்று சொல்ல முடியாமல் அதை வெறித்து பார்க்க மட்டுமே முடியும். அதிலிருந்து ஒருவாறு மீட்டெடுத்துக் கொண்டு அலுவலகத்தை நோக்கி சென்றேன்மேளக் குழு கலவை சுப்புராய செட்டியார் , சின்ன சுப்புராயபிள்ளை தெரு முட்டும் இடத்தில் நின்று கொண்டிருந்தது. அதை ஒட்டி தலைவர் செல்லும் ஜீப் வண்டி ஒலி பெருக்கியுடன் கொடிகள் இன்னும் கட்டப்படாத நிலையில் நின்று கொண்டிருந்தது. அந்த ஒலி யாரும் யாருடனும் பேச இயலாமல் செய்துவிட்டது. மீறி தகவல் பறிமாறிக் கொள்ள விரும்பினால் தொண்டையை கிழித்துக் கொள்ள வேண்டும் . நான் என்ன செய்வது என திகைத்திருந்த நேரத்தில் அலுவலக பணியாளன் ஏழுமலை கைகள் நிறைய கழிகளில் கட்டப்பட்ட கைசின்னமிட்ட காங்கிரஸ் கொடிகளை அள்ளிக் கொண்டு வந்தான். நான் அவனை நோக்கி நேரமில்லை சீக்கிரம் என்று சைகையில் சொன்னேன். அவன் தன்தரப்பு பற்றி ஏதோ சொல்லவர அதை நிராகரித்து திரும்பவும் தலவரை சந்தித்து கிளம்பலாம் என சொல்ல வந்தேன். மனுதாக்கல் செய்வதற்கு உகந்த நேரம் சில நாட்களுக்கு முன்பே கணிக்கப்பட்டிருந்தது. இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. அவருடன் ஜீப்பில் செல்பவர்கள் அவர்கள் சாமர்த்தியத்தில் அதை நிகழ்த்தி கொள்ள விடுத்து இளைஞர் காங்கிரஸ் அமைப்பை வண்டிக்கு முன்னால் அணிவகுக்க சொல்லி திரும்பினேன். கை சின்னமிட்ட காங்கிரஸ் கொடி எப்பவும் ஒவ்வாமை அளிப்பது. ராட்டை சின்னம் கொண்ட கொடி மிக அணுக்கமாக உணர்வதுண்டு. அது எனக்கும் கட்சியின் சுதந்திர போராட்ட தொடர்ச்சியில் என்கான இடத்தை அதன் சரடை கொடுக்கிறது


மேள கோஷ்டி காங்கரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் இரு மீட்டர் தூரத்தில் நின்று கொண்டிருந்தது. அந்த தாள கதியை என்னவென்று விவரிக்க இயலவில்லை. யாரையும் எதுவும் செய்ய விடாமல் ஒரு புள்ளியில் திகைத்திருக்கச் செய்திருந்தது. வந்தவர்கள் வந்த வேலையை மறந்து சட்டென அந்த மேளக்காரர்கள் இருக்கும் இடத்தை சுற்றி கூட ஆரம்பித்தனர். கூட்டத்தின் மொத்த கவனத்தையும் கவர்ந்த பின்னர் இரு சாரையாக நின்றிந்த  மேளம் ஒரு சிறு வட்டமாகி பின்னர் பிறிந்து விலகி கூடி பிறிந்து என ஒருவித நடனம் போல ஒன்றை ஆரம்பித்தனர். மேளத்துடன் ஒத்திசைந்து கூடியவர்களை வசீகரிக்க கூட்ட அடர்த்தி ஏறி ஏறி வந்தது. சற்றுமுன்னர் நான் அமைத்த ஊர்வல ஒழுங்கு முற்றாக சிதைந்து யார் எங்கிருக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடியாமலாக்கியது. ஊர்வலம் துவங்க சில நிமிடங்களே இருக்கையில் மீண்டும் அதை எப்படி ஒருங்குவது என்கிற மிரட்சி நிலையழிவை கொடுத்தது. இனி இந்த கூட்டத்தை ஊர்வலமாக மாற்ற இயலாது


ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சட்டென விலகி இரு பிரிவாகி நிற்க நடுவே அனைவரையும் கும்பிட்டபடி சண்முகம் வெளிவந்தார். மேளத்தில் கோல் விழும் வேகம் மேலும் அதிகரித்து போது எனக்கு அதன் அருகில் நிற்பது தாளமுடியாமலானது. இனி யாரும் யாருக்கும் ஒன்றும் சொல்லமுடியாது. ஊர்வல வண்டியில் அவர் ஏறியபிறகு அனைத்தும் ஒரு ஒழுங்கிற்கு வந்தாக வேண்டும். நகர்வு சரி செய்துவிடும் யாரும் அங்கு தேங்கி நிற்க முடியாது. நல்ல கோடைகாலம் வியர்வை வழிந்து கதர் சட்டை உடம்பில் ஒட்டிக் கொண்டது. அது கதர்சட்டைக்கே உள்ள சிக்கல். தனியடையாளம் இல்லாமலாகும் போது அனைத்தின் மீதும் ஒரு வித எரிச்சலை உண்டு பண்ணும். வியர்வை வெளிவராமல் முகத்திற்கு அடித்த பவுடர் கரையாத மனிதர்களை பார்க்கும் போது அது இன்னும் அதிகமாகும். வியர்ப்பதுதானே மனித இயல்பு இவர்களுக்கு ஏன்அது நடக்கவில்லை. சண்முகம் வண்டியில் ஏறாமல் அதை கடந்து சென்ற போது வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு நடந்து செல்ல உத்தேசிக்கிறார் என புரிந்தது. இனி அவரவர் இடத்தை அவர்களே தேர்வார்கள். கூட்டத்தில் மாட்டிக் கொண்டால் சிக்கல் என மனு பேப்பர்களை எடுத்துக் கொண்டு சூரியநாராயணனும் மாறனும் முன்பே அலுவலகம் சென்றுவிட்டருந்தார்கள் .


வியாழன், 22 செப்டம்பர், 2022

ஜெ தம்பதிக்கு எனது மணிவிழா அழைப்பு

 கோவை 20-21.09-2022



கோவை ஜெ 60 நிகழ்வு. நானும் வேதாவும் சென்றிருந்தோம் எனக்கு அங்கு செய்ய இரண்டு முக்கிய வேலைகள் இருந்தது. ஒன்று கோவையில் நிகழும் ஜெயமோகன் மணிவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது. இரண்டு 13-10-2022 புதுவையில் நிகழ இருக்கும் எனது மணிவிழாவிற்கு அரைப்பிதழை கொடுப்பது


முதல் நாள் மதியம் கோவை சென்றுவிட்டேன். மாலை மணிவிழா அரங்கில் விஷ்ணுபுர நண்பர்களை சந்தித்துக் கொண்டே இருந்தேன். விழா மிகச் சிறப்பாக நிகழ்ந்தது. பலர் வாழ்த்திப் பேசினர். கல்பற்றா நாராயணனின் பேச்சு மலையாளத்தில் இருந்தாலும் ரசிக்கும் படி இருந்தது சிற்சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை என்றாலும் அவர் சொன்னதன் மையக் கருத்தை சென்றடைய முடிந்தது. பின்னர் மணவாளனின் சிறப்பான மொழிபெயர்பு படித்த போது அதன் பிதொரு ஆழம் அறிந்து கொள்ள முடிந்தது. இரண்டாவது பவா செல்லதுறை சொன்ன கதை. அது ஜெயமோகனின்மாயப்பொன்சிறுகதை. அதை அபாரமாக சொன்னார். பவா வின் கதைச் சொல்லை நேரில் கேட்பது தனி அனுபவம். அடுத்த நாள் காலை ஜெ தங்கியிருந்த விடுதிக்கு சென்று எனது மணிவிழா பத்திரிக்கை கொடுப்பது திட்டம். எப்போதும் ஐம்பது நணபர்கள் கூடியிருக்க அதன் மத்தியில் அமர்ந்திருக்கும் ஜெ மிஸ்ஸிங். அது சுவீட் பாணி விடுதி இரண்டு ரூம் மற்றும் ஒரு பெரிய வரவேற்பறையை கொண்டது என்பதால் நண்பர்கள் யாரும் இல்லை . கடலூர் சீனு, விஜயசூரியன்,அனங்கன் பின்னர் அரங்கா வந்து கலந்து கொண்டார். பின்னர் பேச்சு வேடிக்கையாக போய்கொண்மிருந்தது.







அரங்கா பேசும் போது ஜெயமோகனிடம் எனது மணிவிழா அழைப்பிதழை பார்த்து . “இது என்ன வெள்ளாழரில் வைணவராஎன்றார். பொதுவாக எங்கும் கேட்கப்படுவது. வெள்ளாழர்களில் அனைவரும் சைவர்களாகவே இருப்பார்கள் என்பது நடைமுறை புரிதல். ஜெ அதற்கு என்ன சொல்லப் போகிறார் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் ஶ்ரீபெரும்பூதூர் மடம் வட மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில் சிலரை பயணம் செய்ய வைத்து வைணவர்களாக ஆக்கினார்கள் என்றார். அவர சொல்லுவது  மிகச்சரிஆச்சயர்யமாக இருந்தது. அது மிக நுண்ணிய தகவல். அந்த சம்பிரதாயத்தில் உள்ள பலருக்கு தெரியாதது. உளவட்டத்தில் கூட அதை அறிந்து வைத்திருப்பவர்கள் மிக குறைவு. திருகோவலூர் மடத்தின் ஜீயர் ராமானுஜ நாவலர் என்கிற ஒருவரை அந்தப் பணிக்கு அனுப்பி வைத்தார் அவர் இங்கு வந்து ஆதிக்க சாதியை சேர்ந்த பலரை தீவிர வைணவர்களாக மாற்றினார். அவர் புதுவையில் நீண்ட நாட்கள் தங்கி இருந்து அதை செய்த தால் அவர புதுவை விலக்ஷ்னகவி ராமாநுஜநாவலர் என அழைக்கப்பட்டார். அவர் பல ஆக்கங்களை இயற்றினார். துரதிஷ்டவசமாக அவை இன்று புழக்கத்தில் இல்லை. இன்று தீவிர வைஷ்ணவர்கள் அவரது பரம்பரையில் வந்தவர்கள். அவர்களின் அந்த சிஷ்யப்பரம்பரை ஏறக்குறைய இல்லை என்கிற இடத்தை இன்னும் பத்தாண்டுகளில் அடைந்து விடும். எனது தந்தை வழியில் நானும் அந்த சிஷ்ய நிரையில் ஒரு கண்ணி



பின்னர் அரங்கா வேடிக்கையாக சொன்ன ஒரு செய்தி என்ன ஜெ உங்கள் தீவிர செயல்பாட்டளர்கள் அனைவரும் வைணவர்கள் தான் போல என்றார். ஆஸ்டின் சௌந்தர்,ஜாஜா, காளி,அரங்கா, மணவாளன் என சொல்லிக் கொண்டே சென்றார்நான் எனது மணிவிழாவிற்கு ஜெ மற்றும் அருண்மொழி இருவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து விட்டு புதுவை திரும்பினேன்.

அடையாளமாதல் * காற்றும் தூற்றலும் *

 



ஶ்ரீ:



பதிவு : 641  / 831 / தேதி 22 செப்படம்பர்  2022



* காற்றும் தூற்றலும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 37 .







நெடுமாறன்”. எல்லாரும் அழைக்கமாறன்அவனது விளிப் பெயரானது . அவன்  தலைவரின் வீட்டில் தங்கி இருந்ததும் அவரின் உறவினன் என்கிற அடையாளமும் அவனுக்கு பல கட்சி பிரமுகர்களுடன் அரசியல் பேசும் தகுதியை பெற்றுக் கொடுத்திருந்தது . தொடர்புறுத்தலுக்கு ஏற்றபடி முன்னணி தலைவர்களுடன் தீவிர அரசியல் பேசும் இடத்தால் கிடைக்கும் வசதி அது . புதுவை தலைவர்களுடன் அரசியல் பேசுவது ஒன்றும் அவ்வளவு சிக்கலானதல்ல. யாரும் யாரிடமும் பேசாலாம் என்பதே இங்குள்ள சூழல் . ஆனால் தங்களின் முக்கிய இடத்திற்கானதை அவர்கள் தனிமையில் முடிவு செய்வார்கள். அதற்கு யாரெல்லாம் துணைப்பார்கள் என எந்த குறியீட்டையும் வைத்துக் கொள்ள முடியாது . மாறன் செய்ய நினைத்தது ஒருவகையில் தனது இடத்தை மிக வலுவாக கட்டமைக்கும் முயற்சி . அவன் தன்னையும் தனக்கு தேவையானதையும் மிகத் தெளிவாக வரையறை செய்திருந்தான். நேரடி அரசியலில் அவனுக்கு எந்த இடமும் உருவாகாது என்பதால் அதில் எந்த ஈடுபடும் ஆர்வமும் எதையும் காட்டவில்லை. தனது எண்ணங்களை உரையாடல்கள் போல அமைத்துக் கொள்வான். அதன் பேசுபொருள் அனைவரையும் மிக எளிதல் தன்னுடன் இணைத்துக் கொள்வது. ஒரு இடைதரகராக மிக நேர்த்தியாக பேசக் கூடியவன் அவன் விரும்பிய இடம் அது. அரசியலில் தொடர்புறுத்தலினால் வரும் இடத்தை எங்காவது ஒரு புள்ளியில் பொருளியல் லாபமாக மாற்றிக் கொள்ள முடியும். அதை தெளிவாக அறிந்திருந்ததால் பேச்சின் அனைத்தையும் அதை நோக்கியே செலுத்தினான்.


2001 நடக்க இருக்கும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பிருந்ததை பொதுப் புரிதலில் வழியாக அறிந்திருந்தான். அது நிகழும் போது தனது இடம் உறுதிப்பட்டுவிட்டால் தனக்கான வாய்ப்புகள் உருவாகிவிடும் என நினைத்திருக்க வேண்டும் . தலைவர் முதல்வராகும் வாய்ப்பு பற்றியெல்லாம் அப்போது யாருடைய கணக்கிலும் இல்லை. அவனது அரசியல் ஒரு ஒற்று செய்தி போல முன்னெடுக்கப்பட்டது.“சண்முகத்தின் கோணம் அல்லது பார்வைஎன்று பிறரிடம் அவன் உரையாடும் போது நேரடியாக சொல்வதில்லை என்றாலும் அவனது முதிரா சிறுவனின் உற்சாகத்தை சண்முகத்தின் மறைமுக தூதாக பிறரால் பார்க்கப்படும் என அவன் ஊகித்திருந்தான் . அது மிகச் சரியான கணிப்பு. அரசியலில் அவனை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற பிறரின் ஆவலை மிக எளிதில் தூண்டக் கூடிய தேர்ந்த பேச்சு ஒரு வலை போல விரிக்கப்பட்டது. அதிலிருந்து பிறர் தப்புவது கடினம். அவன் பேசும் அரசியல் அனைத்து தரப்பில் இருந்து திரட்டிக் கொண்டவை என்பதால் அதில் உள்ள சமகாலத்தன்மை தரவுகள் நிஜம் என்பதால் எவரையும் வசீகரிக்கக் கூடியவை. அதில் சிக்காமல் இருப்பதுதான் கடினம் . ஒரு புள்ளியில் தனது அரசியலின் கணக்கு குறித்து என்னிடம் விவாதிக்க துவங்கி இருந்தான். அவை பற்றிய எனது ஊகங்கள் அவனது அரசியில் பற்றிய என மன ஓட்டத்தை முழுமையாகப் அவனிடம் பகிர்ந்து கொள்வதில்லை. சில சமயங்களில் நான் முற்றும் அறியாத புதிய தகவல்களை அவன் சொன்னதுண்டு. எந்த புள்ளியில் இருந்து அது நண்பர்களின் உரையாடல் விலகி அரசியலாளர் விவாதமானது என்பது ஒரு விந்தையான கணக்கு . சண்முகம் முதல்வராக நாங்கள் செய்த முயற்சிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சட்டென எதிர்பாரத பலனை கொடுத்தவை. அதன் கூறுகள் அவரை முதல்வர் போட்டியாளர் என்கிற இடத்திற்கு நகர்த்தியது. சிக்கல் அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் துவங்கியது


சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக குடும்பத்தை தனது அரசியலில் இருந்து முற்றாக ஒதுக்கி வைத்திருந்த சண்முகம் 1998 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அதை மறு பரிசீலனை செய்யவேண்டிருந்தது. குடும்பத்தாரை அரசியலில் கொண்டுவந்தால் என்ன சீரழிவு நடக்குமோ அத்தனைனையும் அதன்பின்னர் நிகழ்ந்து முடிந்ததுஅந்த பாராளுமன்ற தேர்தல் போட்டியிடுவது என்கிற முடிவு பின்னர் எல்லா வகையிலும் அபத்தமானதாகியது  . ஆனால் அந்த சூழலில் அவரால் செய்யக்கூடியது பிறிதொன்றில்லைஅன்று அது ஒரு வித அரசியல் கட்டாயம் . கூட்டணி இல்லாமையால் அவர் எதிர்பார்த்த அனைத்து பொருளியல் உதவி செய்வதாக வாக்களித்த அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவரை கைவிட்டனர். சிலர் முற்றிலுமாக பாரமுகமானார்கள். சிலர் மிக அற்ப தொகையை கொடுத்தனுப்பினர். அரசியலில் அவை மிக சாதாரணம் என்றாலும் தேர்தல் தேரத்தில் வெற்றி தோல்வியை அவை மட்டுமே முடிவு செய்பவை. எதிர்பாராமல் அவரது அண்ணன் மருமகன் கரூர் பாஸ்கரின் மூலம் பொருளியல் உதவி கிடைத்த போது மறுக்க முடியாமலானார் . அதுவரை குடும்பதினரிடையே அரசியல்வாதியாக சண்முகத்திற்கு பெரிய இடமெல்லாம் ஒன்றுமில்லை. அண்ணன் மத்திய அரசாங்கத்தில் பெரிய பொறுப்பில் இருந்தார். வீட்டில் அரசியலில் ஈடுபடும்உருப்படாத இளவல்பட்டம்திருமணம் செய்து கொள்ளாத வாழ்கை போக்கு போன்றவை அவருக்கு இடத்தை பெற்றுத் தராமலானது . அதை அவரது உறவினர்கள் வீடுகளில் தலைவருடன் உணவருந்த செல்லும் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அந்த மௌன உளவிலகளை உணர்ந்திருக்கிறேன் . திராவிட கட்சிகளில் தங்கள் குடும்ப  அரசியல்வாதிகளை சூழ்ந்து கொண்டாடுவதைப் போல காங்கிரஸ் தலைவர்களுக்கு கிடைப்பதில்லை. பொருளியில் லாபம் தவிற பிற எதையும் எண்ணாதப் போக்காக அது இருக்கலாம். அல்லது சண்முகத்திற்கு தன்னியல்பில் யாருடன் ஒட்டாத போக்கு உருவாக அது காரணமாக இருக்கலாம். அவர் அடைந்த அரசியல் வெற்றிகள் அவரது குடும்பத்தாரால் உணரப்படவேயில்லை. ஏறக்குறைய குடும்பத்தாரால் நிராகரிக்கப்பட்டவர் போலானார். ஆனால் அது அனைத்தும் சண்முகத்தின் அண்ணன் மருமகன் கரூர் பாஸ்கர் புதுவை நுழையும்வரை தான். அதன் பின் அனைத்தும் மாறிவிட்டன. சண்முகம் முதல்வராக வர இருந்து உட்கட்சி பூசலில் தவறவிட்ட பிறகு குடும்பத்திற்குள் அது தீவிர விவாதப் பொருளாகியிருக்க வேண்டும். அதன் இந்த வாய்ப்பை தவறவிடகழ கூடாது என அவரது குடும்பம் முடிவெடுத்திருக்க வேண்டும்


1998 தேர்தல் செலவிற்கு அவர் எதிர்பார்த்த நன்கொடைகள் வரவில்லை. அப்போதிருந்த திமுக தலைமையிலான ஆட்சி அல்லது அதன் அமைச்சரான கண்ணனின் பங்கு அதில் இருந்திருக்க வேண்டும். பொருளியல் தெருக்கடியின் உச்சத்தில் ஒருநாள் காங்கிரஸ் அலுவலகத்திற்கு மாறனுடன் வந்த அந்த மனிதரை அலுவலகம் முழுவதும் நோக்கி நின்றது. கதர்சட்டைகளும் வேட்டிகளும் புழங்கிக் கொண்டிருந்த அந்த இருட்டு நடையில் சட்டென படியேறி வந்து நின்ற அந்த மனிதர் அப்படித்தான் எல்லோராலும் பார்க்கப்பட்டார். உயரமான உருவம் சற்று பிதுங்கிய வயிறு வழுக்கை தலை வயது நாற்பதுகளின் இறுதியில் கையில் சூட்கேசுடன் அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாதவராக தெரிந்தார். கட்சி தொண்டர் கூட்டத்தில் உரையாடிக் கொண்டிருந்த தலைவருக்கு அவர் அங்கு வந்திருப்பது தெரிவிக்கப்பட்ட சில நொடிகளில் அவருக்க அழைப்பு வந்தது. சூரியநாராயணனிடம் வந்தவர் யார் என கேட்கசண்முகம் அண்ணன் மருமகன்என்றார். அப்போது எனக்கு அதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வது பற்றிய திட்டமிடலின் போது மாறன் என்னை கரூர் பாஸ்கரனிடம் அறிமுகப்படுத்தினான். தேர்தல் குறித்து சில விஷயங்களை கேட்டறிந்து கொண்டார். கம்பெனி விஷயமாக கரூர் செல்ல வேண்டி இருப்பதால் அவரது கம்பெனி ஊழியர் இருவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். தேர்தல் வேலைகளை அவருடன் தொடர்புறுத்த சொன்னார் . அவர்கள் அனைத்து செய்திகளையும் தனக்கு தெரியப்படுத்துவார்கள் என்றும் ஒருவாரம் கழித்து திரும்ப வரும்போது சந்திப்பதாக சொன்னார். அவருடைய நிர்வாக ஆட்கள் அடுத்த இரண்டு மாதம் தலைவர் வீட்டில் மாறனுடன் தங்கியிருந்தனர்.