https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

அடையாளமாதல் - 406 *இலக்கை நோக்கி *

ஶ்ரீ:

அடையாளமாதல் - 406

பதிவு : 406 / 569 / தேதி 30 செப்டம்பர்   2018

*இலக்கை  நோக்கி 


எழுச்சியின் விலை ” - 08
முரண்களின் தொகை -01 .





வாழ்வில் நிகழ்பவைகளுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்புண்டு என்றும் இல்லை என்றும் இரு வேறு கருத்தியலாக புரிந்து கொள்ளப்படுகின்றன. பெருந்திட்ட வாதம் எனக்கு என்றும் ஏற்புடையதே . அதை ஏற்றுக்கொள்ள இயலாது போனால் உலகியல் நோக்கில் காணுகிற அனைத்தும் அநர்த்மாக மாறிவிடுகிறது என நினைக்கிறேன் .  இதைப் பற்றி ஏற்றும் ஏற்காததுமாக பலர் சொல்லியபடி இருந்தாலும் எங்கோ அறிதாக அதன் மிக அருகிலென சிலர் சென்று அமர்கின்றனர். அத்தகையவர்களே பலகாலம் எள்ளல் செய்யப்பட்ட விளக்கவியலாத பெரும் வெளியின் ஆடலை கடற்கரை மணலின் ஒரு பொருக்கிற்கு நிகராக புரிந்து கொள்கிறார்கள் . சில சமயங்களின் நிகழ்வுகளின் பொருள்  காலத்தால் நமக்கு புரிந்ததை போல மயக்கி பின்னர் அதற்கு நாம் கற்ப்பித்துக்கொண்ட அர்த்தத்தை பொருளற்றதாக ஆகிவிடுகின்றன ,.

சிறு சிறு கூடுகையின் வழியாக எனக்கு அறிமுகமாகி இருந்த பலர் சமூகத்தின் பல்வேறு நிலைகளிலிருந்து வந்தவர்கள் . அவர்களுக்கு என்னுடன் இயைந்த அரசியல் என்கிற ஒரு பொது எண்ணம்  இருந்தாலும் , அதை செயல் படுத்துவதில் பல்வேறு கருத்தியல் மாறுபாடுகலினால்  பிரிந்து கிடந்தார்கள். என்னுடன் இனைந்து செயல்படுவதை ஒரு தற்காலிக முடிவாகக் கூட அவர்கள் எண்ணியிருக்கலாம் 

மாறிவந்த சூழலில் அவர்கள் எனது தொடர் நிகழ்வுகளுக்கு கொடுத்த ஒத்துழைப்பின் வழியாக எனக்கு அனுக்கமாயினர். பலநாள் நான் அவர்களுடன் இளைஞர் காங்கிரஸின் கருத்தியல் குறித்து உரையாடி இருக்கிறேன். அதுவும் கூட ஒரு விவாதமாகவே நிகழ்ந்திருக்கிறது. அதை ஏற்றும் பொருட்படுத்தாதும் அந்த குழுவினர் இருந்தனர் . அதை கடந்து செல்வதை தவிற எனக்கும் வேறு வழிகளில்லை. அரசியலில் அவரவர்களுக்கு தனித்த பாதைகளை அவர்கள் கற்ப்பித்துக் கொண்டு பயணிப்பதால் , அனைவரையும் ஒரு முகபடுத்துவது இனி நிகழ முடியாது. அது கண்ணன் , பாலன் காலத்தோடு கணாமாலாகி இருந்தது

என்னுடன் இணைந்து பணியாற்றும் வாய்பபை பற்றி அவர்களிடம்  பேசியிருக்கிறேன். அவர்களுக்கு பொறுப்புக்களை வழங்கும் நிலை ஒருநாள் எனக்கு வரும்  என அப்போது நான் நினைத்திருக்கவில்லை. பொறுப்புகளை வழங்குமிடத்திற்கு நான் வந்து சேர்ந்த போது , எனது குழு ஒரு ஒழுங்கிற்கு வந்தது . அவர்கள் பல பிரிவின் இயல்பை பிரதிபளிப்பதால் , எனது இலக்கும் அதன் தலைமையையும் அவர்களுக்கு தெளிவான களமாக தெரிந்திருக்க வேண்டும்

எந்த காரணத்திற்காக  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முதல் செயற்குழு கூட்டத்தில், என்னால் செய்ய முடியாது போனதோ அதை இம்முறை செயல்படுத்த வாய்ப்பு கிடைத்ததும் அதை இழக்க விரும்பாது அதை முறைப்படி செய்ய முடிவு செய்தென் . வல்சராஜ் தலைமையில் நிகழ்ந்த அந்த முதற் செயற்குழுவில், எனக்கு அவர்கள் செய்ய நினைத்ததை அவர்களுக்கு திரும்பச் செய்யும்  சிந்தனை இப்போதும் எனக்கு இல்லை . அந்தக் காழ்பபை சுமத்தில் எந்த பொருளும் இல்லாத நிலையில் அதைக் கடந்து வெகு தூரம் வந்துவிட்டிருந்தேன். ஆனால் அவர்களில் யாரேனும் வெகுஜன ஆதரவுள்ளஒருகால் பிற்காலத்திலே தேர்தல் அரசியலில் நுழையும் வாய்ப்புள்ளவர்களாக அவர்கள் இருப்பார்களேயானால் அவர்களுக்கும் , எந்த அரசியல் உள் கணக்குகளும் இன்றி  வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற விழைவு மட்டுமே அன்று எனக்கு இருந்தது . அதெல்லாம் கூட மடமையோ என சில நேரங்களில் எண்ணியதுண்டு.

அரசியல்மாற்றங்களுக்கு தேவைப்படுகிற இடங்களை , கட்சி மற்றும் சட்டமன்ற இடங்களை இட்டு நிரப்ப கூடியவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த கூடுகைக்கு வந்திருந்த எல்லோரும் தனியாளுமையுள்ள , தங்கள் பகுதிகளில் அங்கீகரிக்கப் பட்டவர்களாக இருந்தனர் . அவர்களுக்கு நான் தலைமையேற்க இருந்ததுதான் எனக்கான இடமாக நான் உருவகித்திருந்தேன்.

அவர்கள் எதன் அடிப்படையிலும்  எனக்கு கட்டப்பட வேண்டும் என்கிற நிர்பந்தமில்லாதவர்களாக உருவாகி வந்தார்கள் . அபாயகரமான அரசியலாக இது எல்லோராலும் எனக்கு சுட்டிக்காட்டப்பட்ட போது , அவர்களுக்கு இருந்த அதே மனநிலை சில நாட்கள் என்னை கலவரபடுத்தின. எப்போதும் ஏதாவதொரு கோட்பாட்டின் படி அத்துடன் உரையாடி வெளிவந்திருக்கிறேன்.

இவர்கள் என்னையோ என் கருத்தையோ ஏற்று என் பின் அணித்திரளவில்லை . அவர்கள் வளர்வதறகான சூழல் இங்கு இருப்பதை உணர்ந்து கொண்டதால் மட்டுமே அது நிகழ்ந்திருக்க முடியும். என்னை பலவீனமான தலைமையாக அவர்கள் கணக்கிட்டிருக்கலாம். இப்போது வகிக்கும் பதவியும் , நான் செயல்படும் முறையும் எனக்கான சவால்களும் அதற்கான காரணமாக அவர்களுக்கு தெரிந்திருக்கலாம் . அது நாளைக்கு இல்லமாகும், அப்போது எதை வைத்து இவர்களை கட்டுப்படுத்துவாய் என எப்போதும் தலைக்குள் ஒன்று சொல்லியபடி இருந்தது

அரசியல் ஓட்டம் இன்று எதைநோக்கி செல்கிறது எப்பதை கண்காளால் பார்க்க கூடியதாக இருக்கும் என நான் ஒரு போதும் அறிந்ததில்லை . அதைவிட அரிதாக இருந்தது அதை பிறருக்கு நான் காட்ட முயற்சித்து  , அது முடியாமலானது. அரசியலின் முழு பரிமாணம் இது , நல்ல தலைமை , சரியான நிர்வாகம் , அரசியல் நிகர்நிலை பேணும் உளமைவு , அதற்கான தேவையும் , அதற்கான கணம் உருவாகி இருக்கும் வாய்ப்பு , அதை தொடுவதற்கான திறன் , அனைத்தும் குறுக்கும் நெடுக்குமாக ஊடுபாவுபவை அவற்றை கண்களால் பார்க்கும் வாய்ப்புள்ளவனுக்கு இது ஆடக்கூடிய ஆட்டமே .

என்னால் இதை தொடர்ந்து ஆடமுடியுமா , இல்லையா என்றெல்லாம் அவதானிக்க எனக்கு பொழுதில்லை. இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளை கொண்டவை . காலம் நேரம் வாய்ப்பு திறன் என மீளவும் அவை எதிர் திசையில் என்மீது ஊடாடுவதை பார்க்க முடிந்தது . எதுவம் நிரந்தரமல்ல . இது ஒரு பயணம் இதில் பயணிப்பதே அன்றி பிறிதொன்றை யோசிப்பதே தேவற்றதாகியது. அதில் பயணிப்பதே அதன் பலன் என்கிற காரணம் கொண்டதாகிவிடுகிறது.

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

அடையாளமாதல் - 405 *வாய்ப்பும் விளைவும் *

ஶ்ரீ:



பதிவு : 405 / 568 / தேதி 28 செப்டம்பர்   2018

*வாய்ப்பும்  விளைவும்  


எழுச்சியின் விலை ” - 07
முரண்களின் தொகை -01 .




வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே கழித்திருப்பதை நினைத்துப் பார்க்கிறேன் .பிறருக்கு  கிடைத்தற்கு அரியவைகள் மிக எளிதாகவும் , அனைவருக்கும் மிக எளிதென கிடைக்கும் பல விஷயங்கள்  எனக்கு எப்போதும் கிடைக்காததுமாகவே  வாழ்கை என்னைக் கடந்து சென்றிருக்கின்றன. கிடைக்காமல் ஆகும் எளிய விஷயங்களை அடையவே என் போராட்டங்களை நான் நிகழ்த்த வேண்டி இருப்பதை நினைக்கும் போதும் , அது பிறருக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை என்கிற நினைவே வலிமிகுந்ததாக இருக்கின்றன.

அறிய விஷயங்களில் இருந்து கிடைப்பவை நமக்கான அடையாளத்தை கொடுப்பவை ,அந்த அடையாளம்  பிறர் நம்மீது பொறாமை கொள்ள வைப்பவை , அதில் அவர்களது கற்பனைகள் நம் மீது ஏற்றி வைக்கப் பட்டு  , சில காலங்களுக்கு உள்ளாகவே அந்தக் கற்பனைகள்  நம்மைப் பற்றி என்ன கருத்தை உருவாக்கினவோ அதற்கு எதிர்மறையான புறவிளைவுகளை அவை படரவிட்டுச் சென்றிருக்கின்றன என்பதால், அந்த அரிய நிகழ்வுகள் எனக்குள் ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தி விட்டதை இப்போது அறிகிறேன்.

வாழ்வில் நிகழும் எளிய விஷயங்களே எல்லோர் மனதிற்கு அனுக்கமானவையாக  ,புற உலகை நம்முடன் இணைப்பவையாக , வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதுடன் , வாழ்வெனும் நெடும் பயணத்தை சுவைமிக்கதாக்கக் கூடியதாக இருக்கிறன்றன  . ஆனால் வினோதமாக அவை எவராலும் தொடர்ந்து நினைவுகூறாதபடி நிகந்து முடிகின்றன

இந்த சிக்கலை விலக்கிக் கொள்ள அல்லது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள , பிறரால் செய்ய இயலாத விஷயங்களை நோக்கிச் செல்வதை நான்  எனது வழமையாகிக் கொண்மிருக்கலாம் . அதன் பொருட்டே நான் எனது அடுத்த நகர்வுக்கான திட்டம் . ஆலோசனை கூட்டத்தின் வழியாக , புதியவர்களை, நான் நினைக்கும் இடத்தில் பொறுத்த முயற்சிக்கும் வேலையை துவங்கினேன் . அதற்கான ஆரம்ப நிலை பயிற்ச்சியாக அந்தக் கூட்டத்தை நிகழ்த்த இருந்தேன் . இப்போதும் எனக்கான வழியை எனது  ஊழ் ஏதாவதொரு வழியில் மாற்றவோ அல்லது தடுக்கவோதான் போகிறது . ஆனால் நான் செயல்படாது இருக்க முடியாது

நிகழ்ந்து முடிந்த செயற்குழு கூடுகை பற்றியும் நான் அதை நிகழ்த்திய விதம்பற்றி தன்னை சந்நிப்பவர்களிடம் தலைவர் ஓயாது பேசிக்கொண்டே இருந்தார் . அவற்றில் சிலவற்றை உண்மை என நான் நம்ப வேண்டி இருக்கிறது. அதுதான் என்னை தொடர்ந்து செலுத்தக் கூடிய விசை. அதை எதன் பொருட்டும் இழக்க முடியாது. என்னைப்பற்றி தனது எண்ணத்தை பலரிடம் சொன்ன தலைவர் அவற்றில்  சிலவற்றையாகிலும் என் அணுக்கர்களிடம் சொல்லியிருந்தால் அவை எனது பயணத்திற்காகவாவது உபயோகப்பட்டிருக்கும். அப்படி நிகழாதது அவர் என்னைப் பற்றி சொல்லியது  எனக்கோ அல்லது என்னை சர்ந்த பிறருக்கோ அது எவ்வித அர்த்தமுமில்லாது போயிருந்தது .

இப்போது வந்து சேர்ந்து இந்த இடத்திற்கு வருவதற்கு, நான்  திட்டமிடவில்லை. வளர்வதற்கான வாய்ப்புள்ள இத்தகைய சூழல் ஒருவனுக்கு அரிதிலும் அரிதாகவே நிகழ்கின்றது. என்றாகிலும் ஒருநாள் இங்கு வந்தடைவதே ஒரு தலைவனாக முயலும் ஒருவன் தனது வாழ்நாள் இலக்காக கொண்டிருப்பான் . அதற்கான வாசல் தெரிகிறபோது அதை சூழலின் பொருட்டு ,மனநிலை பொருட்டு என எந்த காரணத்தையும் சொல்லி அதிலிருந்து அவன் விலக முடியாது

இது ஒரு நாற்களப்பலகை, அதன் வாயில் நாம் இருக்கும் பக்கம் திறந்து கொள்ளுமேயானால், அதில் நுழைவது மரணத்தை கொண்டு  வருவதாக இருந்தாலும்கூட அதில் உள் நுழைவதே அவன் செய்யக்கூடியதாக இதுக்கும்எனது வாழ்வில் அப்படிப்பட்ட தருணம் மாற்றமுடியாத பல விளைவுகளைக் கொண்டதாக என்னை வந்து அடைந்து, எனது வாழ்க்கை முறையை முற்றாக மாற்றி அமைத்திருக்கின்றன.

கண்களுக்கு தெரியும் வாய்ப்புகளை அத்தனையையும்  எடுத்துக்கொள்ளவும், அதில் இருக்கும் சவால்களும் எதிர் கொள்ளவும் தயாரானேன் . நிலை கொள்ளாது திமிறும் மாநில கமிட்டியை கட்டுக்குள் கொண்டுவர, சமூகத்தின் அதன் அமைப்பின் வெகுஜன ஆதரவுள்ள இளந்தலைவர்கள் பல பொறுப்புகளில்  தொகுதிக்கும் மாவட்டங்களுக்கும்  நியமிக்கப்பட வேண்டும் என்பது எனது எண்ணமாக இருந்தது . மாநில அமைப்பில் என்னால் யாரையும் உட்புகுத்த முடியாது . காரணம் அது தில்லி அகில இந்திய தலைமை முடிவு செய்ய வேண்டியது .

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நான் அழைத்திருக்கும் அனைவரும் , எனக்கு இதற்கு சில காலத்திறகு முன்தான் அறிமுகமானவர்கள். அவர்கள் யாரையும் எந்த திட்டத்துடனும் நான் அனுகவில்லை . எனக்கான மேடை பேச்சு பயிற்சி களமாக நான் நிகழ்த்திய சிறு சிறு கூடுகையின் வழியாக, அவர்கள் எனக்கு அறிமுகமாகி இருந்தார்கள் . மாறிவந்த சூழலில் அவர்கள் எனது தொடர் நிகழ்வுகளுக்கு கொடுத்த ஒத்துழைப்பின் வழியாக எனக்கு அனுக்கமாயினர். பலநாள் நான் அவர்களுடன் இளைஞர் காங்கிரஸின் கருத்தியல் குறித்து உரையாடி இருக்கிறேன். அதுவும் கூட ஒரு விவாதமாகவே நிகழ்ந்திருக்கிறது. அதை கடந்து அதற்கு வேறு எந்த நோக்கமும் இருந்ததில்லை. என்னுடன் இணைந்து பணியாற்றும் வாய்பபை பற்றி பேசியிருக்கிறேன். அவர்களுக்கு பொறுப்புக்களை வழங்கும் நிலை ஒருநாள் எனக்கு வரும்  என அப்போது நான் நினைத்திருக்கவில்லை.