https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 26 ஜூன், 2019

அடையாளமாதல் - 447 *நம்பிக்கை இழப்பு *

ஶ்ரீ:



அடையாளமாதல் - 447

பதிவு : 447 / 624 / தேதி 26 ஜூன்  2019

*நம்பிக்கை இழப்பு 


எழுச்சியின் விலை ” - 49
முரண்களின் தொகை -03 .



தனது அரசியலின் இறுதிப் பகுதியில் சண்முகம் தலைமைப் பொறுப்பை AV.சுப்ரமணியத்திடம் இழந்த போது, நான் மிகுந்த வருத்தமுற்றேன் . AV.சுப்ரமணியம் அதற்கு சற்றும் பொருத்தமற்றவர் என்பதை விட , மாநிலத் தலைமையை தேர்ந்தெடுக்கும் முறையில் அனைத்து மாநிலத்தில் செய்யும் அதே கூத்தை தில்லியின் மத்தியத் தலைமை புதுவையிலும் அரங்கேற்றியிருந்தது . இதில் பழிக்பட வேண்டியவர் நாராயணசாமி .அவர் இன்று மாநில அமைப்பை இருட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறார் . இவரை தெரிவு செய்த சண்முகமும் அதில் அவருக்குறிய பங்கை பெறுபவரே. அடுத்தடுத்த தலைமை நியமித்து அகில இந்தியத் தலைமை , புதுவை அமைப்பு முற்றாக அழியும் இடத்திற்கு கொண்டு சென்றது.

கட்சியின் செயல்பாட்டாளரின் விளைவை , அது ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதை  மட்டுமே கணக்கில் கொள்வதற்கில்லை . தவறான நேரத்தில் ஆட்சியில் அமர்வது ஒரு முற்றழிவிற்கு முன் நிகழும் மாபெரும்  சுழற்சியின் உச்சத்திற்கு கொண்டு சேர்க்கப்படுவது  .அதிலிருந்து வெளியேறுகிற போது சாரமிழந்து சக்கையாகப்பட்டு , வரலாற்றிலிருந்து உதிர்ந்து விடுவதே நிகழ்ந்திருக்கிறது . மத்தியல் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி அதிகார செயல்பாட்டின் விளைவை இன்றைய அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் கண்ட வரலாற்று தோல்வி உணர்த்துவது அதையே .புதுவை அமைப்பு அதைவிட மிக மோசமான பரிபவத்தை அடையும் என்றே நினைக்கிறேன் .

வருங்காலத்தில் புதுவை அரசியலில் அதிமுகவின் இன்றைய இடத்தை பிடித்தாலே விந்தைதான்.அது சந்தித்த அரசியல் வெறுமைக்கே , காங்கிரஸ் சென்றடையும். AV.சுப்ரமணியத்திடம் தனது தலைமைப் பொறுப்பை இழந்த போதே சண்முகத்திற்கான அரசியல் முடிவுற்றது . மட்டுமின்றி புதுவை காங்கிரஸ் வரலாறும் முட்டு சந்திற்கு வந்து சேர்ந்தது.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்தது . சண்முகம் மதிய உறக்கத்திலிருந்த என்னை எழுப்பினார் .அன்று காலைதான் தலைமை பொறுப்பு மாற்றப்பட்டதை அறிந்திருந்தேன்.எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் , அவருக்கு பின் அந்த பொறுப்பில் அமரும் AV.சுப்பரமணியம் குறித்து மிகுந்த மன விலக்கம் கொண்டிருந்தேன் . அவரை நன்கறிந்தவன் என்கிற வகையில் அவர் ஒரு தவறான தேர்வு என்பதில் இன்றளவும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

புதுவையின் காங்கிரஸ் வரலாற்றில் அது அழிவை நோக்கிய திருப்பு முணை .பிற மாநிலத்திலிருந்து மாறுபட்டது என்கிற நம்பிக்கையை சிதைத்த அந்த தருணத்தை என்னால் எப்போதும் மறக்க இயலாது . அலைபேசியில் என்னை அழைத்தவர் , உடனே தன்னை சந்திக்க சொன்னார் . ஞாயிற்றுக்கிழமையில் ஓட்டுனர் வருவதில்லை என்பதால் , நான் காரை ஓட்டிச் சென்றேன் .

அவரை  வீட்டில் சந்தித்த போது , தான் காங்கிரஸ் அலுவலகத்திற்கு செல்வதாக, முறைப்படி அலுவலகத்தை சுப்ரமணியத்திடம் ஒப்படைக்க இருப்பதை பற்றி சொன்னார்.அரசியல் தலைமை மாற்றமென்பது அரசு பணியாளர் மாற்றமல்ல . ஒப்படைப்பு என எங்கும் எப்போதும் நிகழ்வதில்லை . நான் கட்சி அலுவலர் யாரையாவது அழைத்து கொடுத்தனுப்பலாம் , அல்லது என்னிடம் கொடுங்கள் ,நான் கட்சி அமைப்பின் செயளாலர் .நான் சென்று கொடுப்பதுதான் சரி , நீங்கள் செல்ல வேண்டாம் என்றேன் .வழமை போல முறைமை ,கடைமை” என்று சொல்லத் துவங்கினார் .உச்ச கட்ட நிலையழிதலின் போதெல்லாம் அவர் அதீத உணர்வில் கொந்தளிக்கும் மனநிலையில் இருந்து  மீட்டெடுக்க  தன்னை தானே வதைத்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன் .அது அனைவருக்கும் ஒரு செய்தியை சொல்லுகிறது என நம்பினார் . அந்த காலம் வழக்கொழிந்த போயிருந்தது  என்பதுதான் வினோதம் . அப்போதெல்லாம் அவரைப் பற்றி பரிதாப உணர்வே ஏற்படும்  .அந்த உணர்வே என்னை அவரை நோக்கி எப்போதும் உந்தித்தள்ளி இருக்கிறது .

ஆனால் இம்முறை அவர்மீது வருத்தமும் மனவிலக்கத்தை அடைந்திருந்தேன் .முதலவர் பதவியிலிருந்து இறங்கிய போதே தனது தனித்தன்மையை முற்றாக இழந்திருந்தார்.அரசு இயந்திரத்தை கையாளும் இடத்தில் அவர் இல்லை என்பதுடன் , அவர் நினைவில் நிறுத்தியிருந்த அரசு அதிகாரிகளின் நிரை இப்போது காணாமலாகி இருந்தது.அனைவரும் நாற்பதுகளின் மத்தியில் இருந்தார்கள் .விழுமுயங்களும் , மரியாதைகளும் யதாரத்தம் என்கிற விபரீத அரசியல் சரிநிலைகளாக உருமாறி இருந்தது . தலைமுறை இடைவெளிபோல ஒன்று எப்போதும் எங்கும் எழுவது .அவர் சந்தித்த அரசுகளும் , அரசு நிர்வாகிகளும் இப்போதில்லை .அரசு நிர்வாக முறை பிறிதொன்றாக மாறி இருந்தது .அதற்குள் சென்று அமர முடியாமற் போன ஏமாற்றத்தினால்  அனைவரின் மீதும் பொருமையிழந்து போனார்.அவரது வாழ்நாள் அனுபவம் அவருக்கு கைகொடுக்காமல் நழுவிதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன் .அனுபவ அறிவை செயல்படுத்துவது நரம்பின் முடுக்கு போலும் , வயோதிகத்தால் அதை இழக்கும்போது ,அறிவு ஆணவமாக மட்டுமே எஞ்சுகிறது. இந்த உண்மையால் கடுமையான தாக்குதலை அடைந்தேன் .

அனுபவம் அறிவாக பரிணமித்தது அனைத்திற்கும் உந்துசக்தியாக எப்போதும் இருக்கும் என்கிற எண்ணம் தகர்ந்து போனது .மானுடர் உள்ள எரிந்து கொண்டிருக்கின்ற அனல் அவிந்து போகும் போது கற்றதெல்லாம் காணாமலாகும் என்கிற எண்ணம் வந்து முகத்தில் அறைந்த போது அனைத்தின் மேலும் நம்பிக்கை இழந்து போனேன் .

செவ்வாய், 25 ஜூன், 2019

அடையாளமாதல் - 446 *அரசியல் வெறுமை *

ஶ்ரீ:



அடையாளமாதல் - 446

பதிவு : 446 / 623 / தேதி 25 ஜூன்  2019

*அரசியல் வெறுமை 


எழுச்சியின் விலை ” - 48
முரண்களின் தொகை -03 .



தன்னறத்தை பேணும் தலைவர்கள் அனைவரும் தங்களின் செயல்களை தர்க்கத்திற்கு கட்டுப்படாத யூக தளத்தில் இருந்து பெற்று அதன் வழிகாட்டலில் தங்களை நடத்திச் செல்கிறார்கள் .அதை  பிறிதொருவரை கலந்தாலோசிப்பது என்பது எப்போதும் அவர்களுக்கு  நிகழ்வதில்லை.அபூர்வமாக சிலர் பிறருடனான தொடர் உரையாடலின் வழியாக தங்கள் யூகங்களை கூர் கொள்ளச் செய்கிறார்கள் . அவர்கள் தங்கள் அரசியல் செயல்பாட்டில் முழு வெற்றியை அடைகிறார்கள் . சண்முகம் அந்த வகைமையை சேர்ந்தவர் 

அரசியல் கணிப்புகள் எப்போதும் தனித்தன்மை மிக்க புரிதல்களால் ஆனது . அதில் ஒரு ஆளுமை தான் உணரும்  ஒன்றை முற்றாக பிறிதொருவருக்கு கடத்துவது சாத்தியமற்றது . எனவே அவர்கள் அனைவரும் தங்கள் அரசியல் வாழ்வின் ஒரு புள்ளியில் தங்களின் அனுக்கர்களின் வெறுப்பிற்கு ஆளாகிறார்கள் ஊழின் விளைவாக அவர்களின் அரசியல் வீழ்ச்சி இங்கிருந்து துவங்குகிறது .

தங்களின் செயல்களுக்கான எதிர் விமர்சனத்தை தங்களின் அனுக்கர்களிடம் பெற்று வெறுப்புற்று மீளா வெறுமையை சென்றடைகிறார்கள் .அது ஊழின் கணக்கு போலும் . ஒவ்வொருவரும் அவர்களின் அனுக்கர்களின் எண்ணப்படி தோல்வியுற்றவர்களே. குடிமை சமூகத்தின் பார்வையில் எப்பெரும் செயல்களை ஆற்றியவர்களாக பார்க்கப்படினும் அவர்கள் சென்றடையும் இடம் அனேகமாக இதுவே என்பதுதான்  வினோதம் .

மத்திய அரசியலில் ,  மாநில அரசியல் சார்ந்த எந்த முடிவுகளும், அதன் மாநில தலைவர்களின் சொல் மத்திய தலைமையை எப்போதும் ஆளும் . இந்தப் போக்கினால் பிற மாநில அரசியல் அமைப்பிலிருந்து அகில இந்திய அமைப்புகள் பெரிதும்  மாறுபட்டிருந்தது . அந்த மாறுபாடுகளே காங்கிரஸில் வெகு காலம் நிலைபெற்றிருந்தது. காரணம் அதன் நீண்ட வரலாற்று தருணங்களின் புரிதல்கள் அவற்றை உயிர்புடன் வைத்திருந்தது .பின்னர் அமைப்புகளின் மனநிலை , கால சூழலுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு சிறுகச் சிறுக தனது விழுமியங்களில் இருந்து நழுவிப் போனது

இதை புரிந்து கொள்ள முடியுமானால் காமராஜர் போன்றவர்கள் தங்களின் இறுதி காலத்தில் சென்றடைந்த இடத்தையும் புரிந்து கொள்ள முடியும்,  . சண்முகமும் அங்குதான் சென்றடைந்தார். ஒருவகையில் சண்முகம் , காமராஜரை விட ஊழினால் வாழ்த்தப்பட்டவர் . அவர் சொல்வதை கேட்க ஒரு மாநில அரசு அவருக்கு எப்போதும் இருந்தது.அதனால் அனைத்து கட்சிகளும் அவரை அஞ்சின அதுவே அவரது சொல் எப்போதும் ஆளும் முகமாக இருந்தார்.

தலைவர்கள் அனைவரும் தங்கள் கட்சியின் உள்ளரசியலில் வென்றே தங்களின் இருப்பை அடைகிறார்கள் .அவர்களின் செயல்பாடுகளை கட்சியின் மத்தியத் தலைமை எவ்விதம்  அனுமதிக்கிறது என்பதை பொறுத்தே  அக்கட்சியின் மாநில அரசியல் போக்கை முடிவுசெய்யப்படுகிறது .

மாநில அரசியல் அமைப்புகள் சிறியவை என்பதால் அவை அனைத்தும் மையத் தலைமையின்  மனப் போக்கை மிகத் துல்லியமாக உணரும் இடத்தில் உள்ளது , அவற்றை அனுசரித்து தங்களது எல்லா அரசியலையும் அவர்கள் முன்னெடுக்கிறார்கள் . அந்த போக்குடையவர்கள் மட்டுமே அங்கு செல்வாக்குடன்நிலைக்க இயல்கிறது .இந்தப் போக்கு மாநில கட்சிகளை ஊழல் நிறைந்தவைகளாக ஆக்குகின்றன .

அகில இந்திய அரசியலின் மையத் தலைமையும்  இந்த போக்கு கொண்டால் , அது குடிமை சமூகத்திலிருந்து புதிய தலைமை எழுந்து வருவதை முற்றாக அழித்து விடுகிறது . நடைமுறை யதார்த்த அரசியலிலிருந்து அமைப்பை விலக்கி வைத்து விடுகிறது  .ஒவ்வொரு தோல்வியிலும் , தன்னை வென்றெடுக்க கற்பனை வரண்டவர்களிடையே புதிய கருதுகோளுக்கான தேடலை நடத்துகிறது . அசலான தலைவர்களின் உள்நுழைவை தடுத்துவிடுகிறது, அதனால் அமைப்பு காட்டோற்றமில்லாமல் ஆகி தேங்கி குறுகி நாற்றமெடுக்கிறது .

தலைவர் சண்முகத்தின் வழியாக நான் காங்கிரஸ் அரசியலை புரிந்து கொள்ள முயன்றேன் . என் வழியாக தனது சில சிக்கலான கணக்குகளை அவர் நிறைவேற்றிக் கொண்டார் . அதன் கசப்பான விளைவுகளை நான் எதிர்கொள்ள நேர்ந்தது . அதை எதிர்நோக்கியே எனது செயல்பாடுகளும் இருந்தன  அவர் எனக்கும் , நான் அவருக்குமாக தேவைப்பட்டது இந்தப்புள்ளியில்.எனது அரசியல் இதை ஒட்டி நிகழ்ந்தது  .எனது வளர்ச்சியும் , வீழ்ச்சியும்  அதன்  சட்டத்திற்கு உட்பட்டே நடந்து முடிந்தது என்பதை உணர்ந்து இருந்ததால் , எக்கசப்பும் இன்றி அதிலிருந்து முற்றாக வெளியேறினேன் என நினைக்கிறேன்.

சண்முகம் கட்சியின் கிளைத் தலைவர்களின் நியமன மற்றும் செயலபடு கோட்பாட்டை எனக்குள் எங்கோ புகுத்தியிருந்தார் , அதுவே எங்களிருவருக்குள்ளும் எந்த வார்தையாடல் இல்லாமலேயே அவரின் அரசியல் யூகங்களை என்னால் உணரமுடிந்தது என நினைக்கிறேன். பெரும் பகுதி அவரது யூகங்கள் எனக்கு ஏற்புடையவையாகவே இருந்திருக்கின்றன .அவை வென்றும் முன்னின்றன . தனது இறுதிக்காலத்தில் அவர் தனக்கு இன்னுமொரு வாய்ப்பிருப்பதாக நம்பினார் , ஆனால் நான் அதில்  முரண்பட்டேன்.அவருக்கான இடம் இல்லாமலாகி இருந்தது .அவருக்கான வாய்ப்புகள் இல்லை , அதை மீறி ஊழினால் உள்நுழைந்தால் அதுவரை பெற்றிருந்த இடத்தை முற்றாக இழந்து வெளியேற வேண்டி இருந்திருக்கும் . அவரின் நல்லூழ் அது நிகழாமல் மண்மறைந்தார்.