https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 29 டிசம்பர், 2021

அடையாளமாதல் * எண்ணத்திலிருந்து உரு *

 



ஶ்ரீ:



பதிவு : 600  / 790 / தேதி 29 டிசம்பர்  2021


* எண்ணத்திலிருந்து உரு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 72.





அரசியலில் எனக்கானபுதியஇடமொன்றை கண்டடைவதற்கு  ஒருவகையில் சண்முகம் காரணம் . புதியவற்றை ஏற்காத பழமைவாதி . அங்கு வளர்தல் நிகழ்வதற்கான சாத்தியக்கூறு அனேகமாக இல்லை . கட்சி அமைப்பில் சிலருடைய இறப்பினால் உருவான வெற்றிடங்கள்கூட அப்படியே விடப்பட்டு நீண்ட காலம் ஒட்டடை பிடித்து இருந்தது . ஒரு வகையில் யாருக்கும் எந்த அதிகாரமும் பிரித்தளிக்கபடாமல் போனாலும் நிர்வாக சிக்கல்கள் எழுந்ததில்லை என்பது அடிப்படைக் காரணமாக இருக்கலாம் . கட்சி அரசியலில் அனைத்தும் தலைவரை சார்ந்து இயங்குவது . பொதுச் செயலாளர் பதவி இங்கு அலங்காரம் . அவரைப் பற்றிய புரிதல்கள் அனைத்தும் பழைய காங்கிரஸ் தலைவர்களுக்கு மத்தியில் மட்டும் உலவிக் கொண்டிருந்தது . அங்கிருந்து புதிய தலைமுறையினர் அவற்றை பெற்றுக் கொண்டார்கள் . கண்ணன் அன்று நவீனத்தின் முகமாக அறியப்பட்டார் . இயல்பில் அது ஒரு தலைமுறை இடைவெளி . அவர் வாழ்ந்த வீடும் கட்சி அலுவலகம் கூட புராதன அடையாளம் போல . அதில் நான் தூரத்தில் இருந்து பார்த்த சண்முகம் கடந்த காலத்தின் முகம் . அவருடைய செயல்கள் அனைத்தும் காலத்தில் பின்னோக்கி எங்கோவென இருப்பவை . அதுதான் அவரை பிற சராசரிகளிடமருந்து பிரித்து நிலைநிறுத்திக் கொள்ளவும் உதவுகிறது போல . சுடச்சுட புது செய்திகள் வந்தணைந்து கொண்டே இருந்தாலும் யார் எப்போது அந்த பழைய செய்தியை சொன்னாலும் புதுசு போல ஆர்வமாய் கேட்பார் . அப்படியா ? என்பார் பார்க்கப் பற்றிக் கொண்டு வரும் . அவரை நன்கு அறிந்தவர்கள் அது ஒன்றுமில்லை என நடந்து விலகிக் கொள்வார்கள் . ஆரம்பத்தில் அவை திக்பிரமையைக் கொடுத்தாலும் ஒரு கட்டத்தில்  அனைவரையும் போல எனக்கும் பழகிப் போனது என நினைக்கிறேன்நவீன காலத்திற்கேற்ப மேம்படுத்திக் கொள்ளுதல் தேவையும் தேவையற்றுதுமான இரட்டை நிலை. எங்கே அதை வரையறை செய்யும் கோடு கிழிக்கப்பட வேண்டும் என ஆழ்மனம் முடிவு செய்கிறது . நிலை மற்றும் மாற்றமுறு சக்திக்கான இடைவெளியை  சரியாக நிர்வகிக்க தெரியாமல் அதைஇருப்பிடமாககொள்ளும் அனைவரும் உலகியலின் அன்றாடங்களுக்கு பலியாகிறார்கள் . ஆனால் இவை அத்தனையையும் கடந்து சண்முகத்திற்கு நவீன முகமும் உண்டு . புதிதாக தெரிந்து கொள்ள ஆசைபடுவார் அதை ஒரு எல்லைக்குள் நிறுத்திக் கொள்வதை பார்த்திருக்கிறேன். நவீனத்தின் அவசியம் ஏற்படும்போது அதை மறுப்பவரல்ல என்பது எனது புதிய புரிதலாக இருந்தது . இன்றைய அரசியலை விரும்புபவர்களுக்கு மத்தியில் அவருக்கான இடம் என்ன? . மரபில் இருந்து நவீனமாக ஒன்றை பற்றி நகரும் போது பிற சழக்குகளுடன் கலக்காமல் வெளிவர கற்றுத்தரும் , நம்பிக்கை அளிக்கும் ஒரு ஆளுமை . கட்சியில் அந்த இரண்டுக்குமான பாதையை சீரமைக்க, சண்முகத்தை முன்றிறுத்திய முயற்சி எனக்கான இடத்தை உருவாக்கிக் கொடுக்கும் என உறுதியாக நம்பினேன் என நிலைப்பாடுகள் அனைத்தும் அதை சார்ந்தே இருந்தனஅதற்கான சந்தர்ப்பம் வழக்கமான சிக்கலுடன் வந்தது


காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நடைபெற இருப்பதாக தகவல் வந்தது , தில்லி சென்றேன். அதில் பயிற்சி முகாம் நடத்துவது பற்றிய குறிப்புகள் போன்றவை மூன்று நாட்களுக்கு பேசப்படும் என நினைத்திருந்தேன் . அது வழக்கம் போல முதுகை சொறியும் நிகழ்வு என நினைத்தேன் . வரவேற்புரையில் பேசியவர் வழிந்ததில் இருந்து தெரிந்தது. தலைமை நிலையத்தில் இருந்து பொதுச் செயலாளர்கள் ஆஸ்கார் பெர்னான்டஸ் மற்றும் PR.தாஸ் முன்ஷி போன்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். முதல்நாள் பங்கு  ஓரளவு திட்டமிட்டபடி நிகழ்வுகள் நடந்தன . அந்த கூட்டம் ஒரு சம்பிரதாயமானதாக இருந்தது . ஆஸ்கார் பெர்னான்டஸ் மற்றும் PR.தாஸ் முன்ஷி  போன்றவர்கள் நிர்வாகத்தில் கடுமை முகங்கள் . பிரதமர் நரசிம்மராவிற்கு அனுக்கர்கள் என்பதால் அவர்கள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்அவர்களை குஷிப்படுத்த முயன்றது நல்லபடியாக அவர்களை சென்று சேர்ந்ததாகத் தெரிவில்லை. எந்த இளிப்புமல்லாமல் மரியாதைகளை ஏற்றுக் கொண்டார்கள் . இருவரும் ஆங்கிலத்தில் உரையாடியதால் முதல் நாள் நிகழ்வு சட்டென முடிந்தது போல இருந்தது, அவர்கள் இருவரின் உரையும் மூத்தவர் இளையவர்களுக்கு அறிவுரை சொல்லும் தொணி இருந்தது . இருவரும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸில் இருந்து தலைமைக்கு சென்றவர்கள் என்பதால் அந்தகறார்இருந்திருக்கலாம்.


மூன்று நாள் நிகழ்வு . மற்ற முழு நாளும் இந்தியில் பேசியே கொன்றார்கள் .எத்தனை நாட்களுக்குள் நடத்த வேண்டும் முக்கிய பேசு பொருள் என்ன என்பதை பற்றிய மேலோட்டமான குறிப்புகளாகவே அவை இருந்தன. ஆஸ்கார் பெர்னான்டஸ் மற்றும் PR.தாஸ் முன்ஷி மீத நாட்களுக்கும் வந்திருக்கலாம் போல என தோனழறியது . இரண்டு நாள் நிகழ்வுகள் மிகுந்த ஏமாற்றமளிப்பவை. இதற்கு இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டாம் எனத் தோன்றியது . மூன்று நாள் பயிற்சி முகாம் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தனது தலைமைக்கு கணக்கு காட்ட கூட்டிய கூட்டம் போல நடந்து முடிந்ததுஅன்றிரவே வெறுப்பாக சென்னைக்கு ரயிலில் புறப்பட்டேன் . முதல் நாள் இரவு சரியான தூக்கமில்லை இரவு முழுவதும் கண் விழித்தபடி கடந்தது போல இருந்தது . இன்னும் ஒன்னறை நாள் பயணம் எப்படி இருக்க போகின்றது என்கிற அழுத்தம் உணர்ந்தேன். இடையில் எப்போது உறங்கினேன் எனத் தெரியவில்லை விடியற்காலையில் கண்விழிக்கும் போது நன்றாக தூங்கிய நிறை உணர்வு . அதிசயமாக ரயில் பயணங்களில் அது போல ஒரு ஆழ்ந்த உறக்கம் சில மணி நேரத்தில் கிடைத்து விடும். மூளை முழு ஓய்வாக இருந்தது . சட்டென செய்ய வேண்டிய பற்றிய முழுத் திட்டம் எழுந்தது . ஒரு மணி தேரத்திற்குள் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என இயல்பாக நிகழ்வுகளை மூளை அடுக்கத் துவங்கி இருந்தது . சென்னை மறுநாள் காலை வந்திருங்கும் போது முழு உற்சாகத்தில் இருந்தேன்


அதுவரை மாநிலம்முழுவதும் தேர்ந்தெடுத்து வைத்திருந்த தொகுதி தலைவர்களை களம் இறக்க இதைவிட சிறந்த சந்தர்பம் கிடைக்காது . கட்சி முடிவு என்பதால் சண்முக்கத்தை ஒத்துக் கொள்ள வைப்பதில் சிக்கல் இல்லை . அடுத்தது வல்சராஜ், அவர் மாதத்தில் பாதிநாளுக்கு மேல் புதுவையில் இருப்பதில்லை என்பதால் அந்த தேதிகளை முடிவு செய்யலாம். மாநில நிர்வாகிகளுக்கு உரிய இடம் நிகழ்வு நடக்கும் போது உருவாகும் என்பதால் அது நிகழும்வரை அதைப்பற்றி சலம்பிக் கொண்டிருப்பார்கள் . இது பயிற்சி முகாம் இல்லை அதை எப்படி நிகழ்த்துவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் என தெளிவாக அறிவித்துவிட வேண்டும். அவர்களிடம் கலந்து ஆலோசிக்கபட இருக்கிறது என்பது அவர்களுக்கு போதுமானது குட்டையை குழப்ப . யாரெல்லாம் பங்கு பெற போகிறார்கள் என்பது மட்டும் ரகசியம். தங்களுக்கு இணையாக யாரை வைத்தாலும் கலகம் செய்வார்கள் என்பதால் அந்த மந்தனம் . சிறப்பு அழைப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்த தொகுதித் தலைவர்களை அழைப்பது கடைசி ஒரு நாள் வேலை. அனுக்கர்களிடம் கூட அது பற்றி விரிவாக தெரிவிக்கவில்லை. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் என வல்சராஜிடம் சொன்னபோது முகம் சுழித்து வழக்கம் போல தனது ஆர்வமின்மையை சொன்னார். எதிர்பார்த்தது . எங்கு நிகழ்த்த திட்டம் என்பது குறித்து யாரிடமும் சொல்லவில்லை. அனைவரும் கட்சித் தலைமை அலுவலகத்தில் நிகழவிருப்பதாக நினைத்துக் கொண்டார்கள்முதல் நிலையில் அதை நிகத்துவது குறித்து சண்முகத்திடம் சொன்ன போதுஏற்பாடு செய்” “சூர்யநாராயணை உடன் வைத்துக் கொள்என்றார். அடுத்த கட்டம் அழைப்பிதழ் . ஒரு வாரத்திற்கு முன்பாக என்னுடைய அலுவலக கடிதத்தில் தட்டச்சு செய்யப்பட்டு நகல் எடுத்து முதலில் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டது . எனது அனுக்கன் விஜயகுமாரிடம் அனைவருக்கும் கடித்த்தை கொண்டு சேர்க்கும் பொறுப்பு . அவனே அதில்குட்டிக் குழப்பம்செய்பவன் . யாரும் எதிர்பார்க்காத ஒன்றை உருவாக்கி எடுத்து வந்து கொடுத்து அனைவரையும் திடுக்கிடச் செய்பவன் . அதே சமயம் கொடுக்கப்பட்ட வேலையை செய்வான் பத்தாதற்கு மேலதிகமாக ஏதாவது செய்து தொலைப்பான் .அழைப்பிதழை பெற்றுக் கொண்டதற்கான கையெழத்து பெறப்பட்டிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் தேதியும் இடமும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது . இடம் ஹோட்டல் சற்குருவின் சிறய அரங்கு அதற்கென ஒருங்கி இருந்தது . அனைத்தும் சென்று சேர்ந்தது என இரவு 9:00 மணிக்கு அவன் அலைபேசியில் சொன்ன பிறகு அடுத்த நாளை சற்று பதட்டத்துடன் எதிர்பார்த்தேன்.


ஞாயிறு, 26 டிசம்பர், 2021

அடையாளமாதல் * எல்லைகள் *

 




ஶ்ரீ:



பதிவு : 600  / 790 / தேதி 24 டிசம்பர்  2021


* எல்லைகள்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 72.




எங்கிருந்தாலும் யானை காட்டை தன்னுள் இழக்காதிருப்பது போல சண்முகம் மனதளவில் காரைக்காலை விட்டு சற்றும் விலகாதவர். புதுவைக்கு வந்து நீண்ட அரசியலில் 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் நிலைசக்தியாக இருந்தவர் ஆனால் உள்ளத்தே காரைக்காலை இழக்கவில்லை . சொந்த ஊரிலிருந்து யாராவது அவரை சந்திக்க வந்தால் முகம் மலர்ந்து விடும் . அவரிடம் அதுவரை கேட்காத தஞ்சாவூர் பாஷை வெளிபடும் . அனேகமாக எந்த சொல்லும் அழுத்தமான முடிவு கொண்டு வெளிப்படாமல் மொண்னையாக கரைந்து ஒலிப்பது போல தோன்றும் . அது வேறு மொழி அதற்கான தனி இலக்கனம் . அவர்கள் பேச்சில் வல்லவர்கள் நினைத்ததை சொற்களில் கொண்டு நிறுத்துவதை பார்த்து அசந்து போனதுண்மு  . “இதை போய் என்னத்துக்கு சொல்லஎன எந்த தயக்கமும் இல்லாதவர்களாக உள்ளத்தை வார்த்தையால் வடித்துவிடுவார்கள் . நீண்ட காலம் புதுவையில் இருந்தாலும் சண்முகம் தனக்கென சிறு மண்ணையும் புதுவையில் கொள்ளவில்லை . அரசியலில் இருந்து வெளியேறிய போது ஒருவித நிறைவின்மையால் ஆலைக்கழிக்கப்பட்டாலும் தெளிவாக புதுவையில் இருந்து காரைகாலுக்கு சென்றமர்ந்தார். அதன்பின் புதுவை வரும் போது அவரது நண்பர் சந்தானத்தின் இல்லத்தில் தங்கினார் . ஒரு விவாதத்தில் தனக்கு இன்னமொரு சுற்று இருப்தாக அவர் என்னிடம் சொன்ன போது , எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டாலும் சொல்லில் அது நிகழவில்லை . அவர் சொன்னதை முதன் முறையாக அவர் முகத்திற்கு எதிரே மறுத்தேன் . துரதிஷ்டவசமாக நான் சொன்னதே நடந்தது. அரசியல் அவரை விட்டு வலகி சென்று விட்டதை அவர் புரிந்திருக்க வேண்டும் . அதன் பின் புதுவையை விட்டு வெகு தூரம் விலகிச் சென்றார் .  1991 பிற அரசியல் தலைவர்களின் அரசு சூழ்தலில் சிக்கி முதல்வர் பதவியையும் பின்னர் தனக்கான ஒட்டுமொத்த இடத்தையும் இழந்தது 2001 களில். சமநிலை குலைந்த அர்த்தமற்ற கோபத்தினால் முதல்வர் பதவியை இழந்தாலும் அரசியல் தலைவர்கள் அனைவரும் சந்திக்க விழையும் இடத்தை மண்மறையும் வரை அவர் இழக்கவில்லை என்பதால் அவரது பதவி விலகல் ஊழின் முடிவல்ல என நினைக்கத் தோன்றுகிறது . அதன் பின்னர் அவர் வெளிப்படையான அரசியலுக்கு வராமல் போனாலும் ஏதோ ஒரு வகையில் காங்கிரஸிற்கு எதிரான மனநிலையில் முதல்வர் ரங்கசாமியை ஆதரிக்க துவங்கினார்


ரங்கசாமிக்கான ஆதரவை வெளிப்படையாக அறிவிக்காதது அவரது அரசியல் அறம், ஒரு போது்ம் காங்கிரஸில் இருந்து வெளியேறாதவராக இருந்தார் . பொறுப்புகளில் இருக்கும் சண்முகமும் ரங்கசாமியும் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிரான வழமையுள்ளவர்கள் ஒருபோதும் இணைந்து பயணப்பட இயலாதவர்கள் . தனது அரசியல் இறுதி கணம் காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்ந்ததன் பின்னணியில் ரங்கசாமி இருந்தார் , அந்த காலகட்டம் சண்முகத்தால் ஜீரணிக்க இயலாததாக இருந்திருக்க வேண்டும் . சண்முகம் எதையும் ஒரு நேர் ஒழுங்கோடு செய்யவிரும்புபவர் ரங்கசாமி அதற்கு நேர் எதிர் ஒரு புள்ளியில் அவருடன் சேர்ந்து பணப்பட திணறினார்ரங்சாமியை் முதல்வர் பதவியில் இருந்து விலக்க தில்லி மேலிடம் முடிவு செய்த போது கட்சித் தலைவராக அதற்கு சண்முகம் உடன்படாததால் அவரை தலைவர் பதவியில் இருந்து விலக்கிய சில வாரங்களுக்குள் ரங்காசாமி முதலவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் . தன்னை நீக்கிய போது விடுதலையடைந்ததாக சண்முகம் உணர்ந்திருக்க வேண்டும் . அதன் பின் எந்த நிர்பந்தமும் இல்லாதவராக சுதந்திரமானவராக தன்னை உணர்ந்த போது ரங்கசாமியுடன் பயணிப்பது அவருக்கு தடையாக இருக்கவில்லை


காங்கிரஸ் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் . ரங்கசாமி அவரை மையப்படுத்தி இயங்கியதை அவர் மறுக்கவி்ல்லை அதே சமயம் காங்கிரஸிற்கு எதிராக தன்னை வெளிப்படையாக முன்வைக்கவில்லை . ரங்கசாமி பதவி இழந்து உள்ளூர் அரசியலாளர்களிடம் மனம் கசந்து கட்சியை விட்டு வெளியேறி புது கட்சி துவங்கி வென்று ஆட்சியில் அமர்ந்த போது நீண்ட காலம் அவரது அறையில் சோனியாகாந்தி படம் இருந்தது . அது ஒரு அரசியல் கோட்பாடாக அவர் முன்வைத்திருக்கலாம் அல்லது திரும்பவும் காங்கிரஸிற்குள் வரும் திட்டமிருந்திருக்கலாம் . ஒரு வகையில் இந்த பெரிய வெற்றியை அவர் ஊகித்திற்கு அப்பால் இருந்திருக்க வேண்டிம் . நாராயணசாமி ஆட்சியில் இருந்து அவமானகரமாக வெளியேற்றப்பட காரணமாக இருந்தவர் நமச்சிவாயம் . ரங்கசாமி வெளியேற அவர்தான் இறுதி மணியடித்தவர் . பஜக வில் இணைந்து ரங்கசாமியை மீளவும் முன் வைத்து தேர்தலை சந்தித்தவர் என்பது அரசியல் முரண்நகை . பஜக கூட்டணி அமைந்த பிறகு காங்கிரஸ் நோக்கிய மனச்சாய்வில் இருந்து அவர் வெளிவந்திருக்க வேண்டும் . அரசும் நிர்வாகமும் அவரை சுற்றி எப்போதும் போல இயங்கியது அந்த சலுகை கண்ணனுக்கு இல்லாதது . ராட்டினம் போல ஏற்றமும் இறக்கமும் அடுத்தடுத்த படிகளில் நின்று அவரை தொடர்ந்து அலைக்கழித்துக் கொண்டிருந்ததுஅரசியலில் எதை நோக்கி பயணப்பட்டார் எந்தெந்த இடத்தில் விட்டுக் கொடுக்காமல் நின்றிருந்தார் என எதற்கும் இன்று எந்த அர்த்தமும் இன்றி இறுதியில் முற்றிருளுக்குள் சென்று அமர்ந்தார். அவருக்கு இன்னும் சுற்று இருப்தாக நான் நினைக்கவில்லை .

கண்ணன் மற்றும் வல்சராஜ் போன்றவர்கள் அதிகாரப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போது தங்களை பிறருடன் இணைக்காதிருக்கும் அந்த கோடுகளுக்கு புது அர்த்தங்களை கொடுக்கலாம் ஆனால் அதை முன்னெடுப்பவர் அதில் புழங்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு  அளித்தது என்ன ? என்பதில் துவங்குகிறது . அதை செய்யும் உரிமை அவர்களுக்கு இருக்கிறதா ? . இன்று சுமார் இருபது வருடம் கடந்து அன்று நான் கணக்கிட்ட அத்தனை அர்த்மின்மைகளும் நிகழ்ந்து முடிந்து இன்று புதுவை அரசியலில் காங்கிரஸின் இடம் என்ன என்பதையும், மாற்று ஏற்பாடுகளை தயங்காது முன்வைத்து அதை செய்தவர்கள் இன்று சென்று அமர்ந்திருக்கும் அரசியல் இருள் அவர்கள் தங்களுக்கும் பிறருக்கும் செய்தது என்ன என்பதை தெளிவாக வரையறை செய்கிறது . அன்று நானெடுத்த முயற்சிகள் எனக்கு கலவையான பலன்களை கொடுத்திருந்தாலும் சராசரிகளுடன் அன்றாடங்களை நியாயப்படுத்துபவர்களில் இருந்து வேறுபட்டு, சரியென நினைத்ததை நம்பி முயற்சித்து பார்த்தவைகள் அளிக்கும் நிறைவை போல பிறிதில்லை. வெற்றியென்பது என்ன என்று கேட்டுக் கொள்கிறேன். வெற்றி என்பது அடையப்பட்டு தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதல்ல ஆவற்றில் திகழ்வது . முயற்சித்த நிறைவு ஒன்றே அதன் பலன் . ஒன்றில் வெற்றிபெறாமல் இருந்திருக்கலாம் ஆனால் இன்று இங்கு வந்து அமர்ந்து அவற்றை நினைவில் எடுத்து பார்க்கும் போது  சரியாக இருக்க முனைந்தவர்களுடன் இருந்திருக்கிறேன் . அரசியலின் பொதுவில் எதிரானவர்களை துணிந்து எதிர்த்திருக்கிறேன் என்கிற மன நிறைவு கொள்கிறேன்.

வியாழன், 16 டிசம்பர், 2021

அடையாளமாதல் * அரசியல் சரி *

 


ஶ்ரீ:



பதிவு : 599  / 789 / தேதி 16 டிசம்பர்  2021


* அரசியல் சரிநிலை * 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 72.




பத்து வருடத்திற்கு ஒருமுறை மீள மீள நிகழும் புரிந்து கொள்ள முடியாதஆர்பரிக்கும்நிகழ்வு 1970 களில் துவங்கி இன்றளவும் நிகழ்து கொண்டிருக்கிறது . அதில் சாத்தியங்களும் நழுவல்களுமாக பலரின் வாழ்கையை அது பிணைத்து ஒழுகுகிறது . 2016 களின் தனது அரசு சூழ்தல் என்கிற ஒரே பலத்தால் பலரை பதறடித்து வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்த நாராயணசாமி பிறதொருஆர்பரிக்கும்சுழற்சியை உருவாக்கும் நிமித்தமாக காலத்தால் ஆட்சியில் அமர்த்தப்பட்டு பின் அவமானகரமாக வெளியேறியது மட்டுமின்றி மீண்டும் ஆட்சி கருக் கொள்ளமுடியாதபடி காங்கிரஸ் அமைப்பை சிதறடித்து வெளியேறினார் . நாராயணசாமி புதுவை காங்கிரஸின் ஒரு தீயூழ் போல நிகழ்ந்து முடிந்ததார் . கட்சியில் இருந்து பலர் வெளியேறி ரங்கசாமியின் NR காங்கிரஸ் மற்றும் பாஜக வில் இணைந்து காங்கிரஸுக்கு மாற்றாக ஒரு அரசை அமைத்தனர் . 2020 களில் இன்னதென்று வரையறுக்க இயலாத அந்தஆர்பரிக்கும்நிகழ்வு மீண்டும் நடந்தேறி தான் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை தெரிவித்தது . 2021 களில் நாராயணசாமி ஆட்சியை பறிகொடுக்க, ரங்கசாமி மீண்டும் நான்காவது முறையாக முதல்வரானார் . 2021 துவக்கமே  மற்றொருஆர்பரிப்பிற்கானசுழற்சி மையங் கொண்டிருப்பதாக அச்சுறுத்துகிறது . இம்முறை நாராயணசாமியின் இடத்தை அமைச்சர் நமச்சிவாயம் எடுத்துக் கொண்டால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை . அடுத்த 2030 களுக்கு ஒன்பது வருடம் இருக்கும் நிலையில் அந்த இடைப்பட்ட காலத்தில் எது வேண்டுமானலும் நிகழலாம். அது எப்போதும் போல பேரியற்கையின் வசம் . ஆம் அப்பேரியற்கையை வணங்குவோம்


1980 களில் அது போன்ற ஓர்ஆர்பரிப்பைபயன்படுத்தி அனைவரின் கணிப்பை மீறி புதுவை அரசியலில் முக்கிய ஆளுமையாக கண்ணன் உருவெடுத்தார் என்பது அதன் உச்சம்அவர் வெற்றி பெறாது போனதற்கான காரணங்கள் பல இருந்தாலும் குறுங்குழுவாக அவர் செயல்பட்டது அவர் மீது பிற அனைவரும் அவர் மீது நம்பிக்கையிழந்தனர் அல்லது அவர் பெறும் அதிகாரத்தை அஞ்சினர் . அவரது தோல்வி அதன் இடைவெளிகளில் அரசியல் அனுபவம் என சொல்லப்படுகிற ஒருவர் பிறிதொருவருக்கு கையளிக்கப்படும் ஒன்று தொடர்ந்து அறுபட்டுக் கொண்டே இருக்கிறது . எனவே ஒவ்வொரு முறையும் அது புதிது போல  முன்னெழுந்து வருவதையும், அதில் தொடர்ந்து வெகு சிலரே வெவ்வேறு வேஷத்துடன் காலத்திற்கேற்ப பல அந்தக் களங்களில் தோன்றியபடி இருக்கிறார்கள் . அவர்கள் மீட்பர் போல  தோற்றமளிக்கிறார்கள் ,ஆனால் அவர்களிடம் பிறருக்கு அளிப்பதற்கு ஒன்றுமில்லை .


இந்திராகாந்தியின் அவசரநிலை பிரகடனம் இந்திய அளவில் காங்கிரஸிற்கு பாதகமாக எதிரொலித்த போது அதன் தாக்கம் புதுவையையும் விட்டுவைக்கவில்லை . 1974 முதல் 1980 வரை காங்கிரஸிற்கு மாற்று கட்சிகள் ஆட்சி அமைத்தன. இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுலில் இருந்தது. 1981 காங்கிரஸும் கூட கூட்டணி அரசாங்கமே அமைக்க முடிந்தது . 1977 களுக்கு பிறகு அரசியல் குழப்ப நிலை காரணமாக நிலையற்ற அரசுகள் அமைவதும், கலைவதுமாக இருந்தன. காங்கிரஸ் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொண்ட கட்சியாக சில காலம் இருந்தது . புதுவையை தமிழகத்தோடு இணைப்பது பற்றி அன்றைய பிரதமர் மொராஜி தேசாய் போகிற போக்கில் ஏதோ சொல்லி வைக்க புதுவை கலவர பூமியானது . “ஆரோக்கியத்திற்கான மருந்து கசப்புதான்என்று பிரதமர் மொராஜி தேசாய் சொன்னதை ஆதரித்த அன்றைய தமிழக முதல்வர் MGR தான் உடனடி அரசியல் பாதிப்பை எதிர் கொண்டவர் . அதுவரை இரண்டு முறை தொடர்ந்து அதிமுக அரசு அமைத்தது . அது புதுவை அரசியலில்  பெரிய பாய்ச்சல் . தமிழகத்தைப் போல திராவிட கட்சிகளின் கைககளுக்கு சென்று விட்ட ஆட்சியை மீட்க முடியாது என அரசியல் கணிப்பாளர்கள் நினைத்தனர் . ஆனால் இரண்டு முறையும் சொற்ப ஆயுளுடன் அதிமுக ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து 1980 களில் நடந்த தேர்தலில்  முழு தோல்வியடைந்து ஒரு சட்டமன்ற உறுப்பினரும் இல்லாத கட்சியாகி பின்னர் இன்று வரை 3 சட்டமன்ற உறுப்பினர் என்கிற அளவில் குறுகியது . அதை தனது பிம்பத்திற்கான அவமதிப்பாக கருதிய MGR அதன் பிறகு எதன் பொருட்டும் அவர் புதுவைக்கு வரவேயில்லை.


காங்கிரஸ்புதுவை மக்கள் விரும்பும் வரை தனித்தன்மையோடு நீடிக்கும்என பிரென்ச் அரசாங்கத்திற்கு பிரதமர் நேரு சொன்ன உறுதி மொழியை தேர்தல் வாக்குறுதியாக முன் வைத்து தேர்தலை சந்தித்தார் சண்முகம் . இந்திரா காந்தியின்  நிர்பந்தம் காரணமாக திமுக வடன் தேர்தல் கூட்டணியில் ஆட்சி அமைக்கப்பட்டது . 1983 களில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் முதல்வரனார் D.ராமசந்திரன். புதுவையின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்திற்கு திமுக வை சார்ந்த ஒருவரை அவர் முன்னிறுத்த , தன்னை கலந்து ஆலோசிக்காததை தனக்கான அவமதிப்பாக கருதிய சண்முகம் சில அரசியல் நகர்விற்கு பின் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசாங்கத்திற்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெற திமுக காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது .  1985 தேர்தலை சந்தித்து முழு பலத்துடன் ஆட்சியில் காங்கிரஸ் அமைத்து,நிலுவையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலர் இருக்க முற்றிலும் புதுமுகமான நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டு மாநிலங்கள் அவையில் கொண்டு அமர்த்தப்பட்டார் . சண்முகம் தனது வெற்றியாக மீள மீள சொல்லும் அந்நிகழ்வு பிற்காலத்தில் அவரது அரசியல் வீழ்ச்சியின் விதையாக அவரால் ஊன்றப்பட்டது முரண்நகை .


1977 முதலே காங்கிரஸ் தனது அடித்தளத்தை இழந்து கொண்டிருந்ததையும் மிக கவனமான நுண் அரசியல் கணக்குகளாலும் நெகிழ்வான சமரச முடிவுகளினால் மட்டுமே 1996 வரை அது தனது இடத்தை  தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது என்பதையும் புரிந்து கொள்பவர்கள் கட்சியை சமன் புள்ளியில் அமர வைத்ததின் பின்ணனியில் சண்முகத்தின் பங்கு மிக முக்கியமானவர் என்றும் புரிந்திருந்தனர் . 1991ல் அதன் சமநிலை குலையத் துவங்கியது . தலைவர் சண்முகமே அதைத் துவக்கி வைத்தார் என்பது வினோதம் . 1991ல் முதல்வர் வேட்பாளராக சண்முகம் களமிறங்கி கட்சி உள்ளூழலால் தோற்கடிக்கப்பட்டார் என்பது வெளித்தோற்றம். அவருக்கு செல்வாக்கான காரைகாலில் ஏதாவதொரு தொகுதியை முடிவு செய்திருக்கலாம் கண்ணனின் காசுக்கடை தொகுதியில் அவர் போட்டியிட முடிவு செய்தது அரசியல்பிழை . ஏறக்குறைய பாலனும் முதலியார்பேட்டையில் போட்டியிட முடிவு செய்தது அதே ஒரு கல் இரண்டு காய் கணக்கில் . சண்முகத்திற்கு தேர்தலில் ஓட்டுகளை ஒருங்கிணக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆரம்பம் முதலே வெற்றி பெற்றுவிட்ட மிதப்பிலும் இனி வெற்றி ஓட்டு வித்தாயசம் மட்டுமே என்கிற கணக்கு சொன்னார்கள் . முதல்வர் வேட்பாளர் சண்முகத்தின் கவனத்தைப் பெற முண்டியடித்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி தனிப்பட்ட விரோதங்களை தீர்த்துக் கொள்ளவும் அவற்றை முன்வைத்து ஒருவர் பிறரை ஓரம்கட்ட முயற்சிக்கும் விளையாட்டை  முன்நிறுத்தி நிலையமயை சிக்காலாக்கி  அவர்களுக்குள் வெற்றுப் பஞ்சாயத்து செய்ய வேண்டிய சூழலை உருவாக்கி சண்முகத்தின் கவனத்தை சிதறடித்தனர்.தேர்தல சமயத்தில் கண்ணனின் முக்கிய ஆதரவாளர்கள் சிலருடனான முன் விரோதத்தினால் அவர்களை சீண்டி வீண் வம்பு வளித்துக் கொண்டுவந்து சண்முகத்திடம் விட நெருக்கடி குளவிக் கூட்டை கலைத்தது போலாகி அவர்கள் வஞ்சினம் உரைத்து சண்முகத்தை எதிர்த்து அவரை தோல்வியுறச் செய்தனர் .