https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 30 ஜனவரி, 2024

அயோத்தி

அயோத்தி

அயோத்தி பால ராமர் பிராண பிரதிஷ்டை நாடு முழுவதும் பிரச்சாரம் சூடு பிடித்திருந்தது. நான் என் நினைவுகளை துழாவிக் கொண்டிருந்தேன். சில வருடங்களுக்கு முன்பு அயோத்தி யாத்திரை சென்றது நினைவிலாடியது. தரிசனம் வெகு தூரத்தில் இருந்து. ஒரு ராணுவ கூடாரம் போல இருந்த இடத்தில் வைத்திருந்தார்கள். செப்பு விக்ரஹம். பக்தர்கள் வளைவு வளைவான சுற்றறுகளுக்குள் நீண்ட பயணத்திற்கு பின்னர் ராமரை பார்க்க அனுமதித்தனர். இன்றும் நினைவில் இருக்கும் வன்று மூல விக்ரஹம் வைத்திருந்த இடத்திற்கு மிக அருகில் புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கான விடுதி ஒன்றை பார்க்க முடிந்தது சற்று திகைப்பை கொடுத்தது. ராணுவ பாதுகாப்பில் ராமரை பார்த்த போது சக்ரவர்த்தியாக தெரிந்தார். ஒரு வேலை சிறை கைதியோ….மிக அழகான விக்ரஹம்










திங்கள், 15 ஜனவரி, 2024

காணும் பொங்கல்

 காணும் பொங்கல்


ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கல் அன்று நாதஸ்வர வித்வான் கணேசன் அவர்களின் நாதஸ்வர இசை ஒலிக்கும். அதிகாலை வந்து விடுவார். பூஜை அறையில் அவர் வாசிக்க சொல்லுவது வழக்கம். இந்த முறை பொங்கல் அன்றே வருகிறேன் என்றார். இம்முறை பொங்கல் பூஜை அவரது நாதஸ்வர இசையுடன் நிகழ்ந்தது ஒரு இனிமையானதாக இருந்தது. மனத்திற்கு மிகவும் அணுக்கமாக உணர்தேன்















புதன், 10 ஜனவரி, 2024

இல்லத்து ஆழ்வார் மோட்சமும் மீளலும்

 நம்மாழ்வார் மோட்சம் பற்றி நிறை நிகழ்வுகளை அறிந்திருந்தாலும் சிலமுறை சமூக ஊடகங்களில் பார்த்திருந்தாலும் நித்தியபடி கன் ஆராதனையில் இருக்கும் என் இஷ்ட தெய்வமான அவருக்கு அதை என் வீட்டில் நிகழ்த்தி பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியதில்லை. சட்டென அந்த நாள் வந்ததும் இது நினைவில் எழ என் பூஜை அறையில் அதை நிகழ்த்தி பார்த்தேன்

மனதிற்கு மிக நெருக்கமாக இருந்தாலும் சூழ்விசும்பு பாசுரம் ஒலித்த  போது மனம் விம்முவதை அமக்க முடியவில்லை. ஒரு வேளை பெருமாள் அவரை எனக்கு திரும்பத் தராது போனால் என்ன செய்வது என்கிற அச்சம் எழுந்ததை தவிற்க முடியவில்லை. திருக்கண்ணமுதுடன் நிறைவாக இருந்தது.