https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 28 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 40 . மாய நதி .


ஶ்ரீ:



மாய நதி  






பதிவு :  430 / தேதி :-  28 பிப்ரவரி   2018






இளம் சூடும் , குளிருமாக கலந்து ஓடிக்கொண்டிருக்கும் நதியிலிருந்து வெளிவர  மனசாகாமல் . நதியின் பெருக்கிற்கு உடலை ஒப்புக்கொடுத்து விட்டு நிஷ்ச்சிந்தையாக இருந்தபோது , என்னுடன் எங்கள் குழுவை சேர்ந்த சிலர் மட்டிலும் என்னைப்போலவே நதி நீரில் அலைந்தபடி இருந்தனர்  . தூரத்தில் , கரையில் பெரிய மூங்கில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஜீயரின் ஆராதணைப் பெருமாளை அவரது மூத்த புத்திரன் எடை தாளாமல் சுமந்து வருவதை பார்க்க முடிந்தது. ஜீயர் ஸ்வாமிகள் தனது குளியலை முடித்துக்கொண்டு  கரைக்குத் திரும்பிவிட்டார் . அங்கு அவருக்கு நித்ய அனுஷ்டானத்திற்கு அவரது ஆராதனை பெருமாள் காத்திருந்தார். எப்படியும் அவர் தனது பூஜையை முடிக்க அரை மணியாகும் . அப்போது எனக்கு பக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவரை பார்த்தேன்  .நம்மூர் பக்கம் போல இருந்தாலும் அவரது தோற்றம் வெகு நாட்களுக்கு முன்பாக வடநாட்டிற்கு குடிபெயர்ந்தவர்போல இருந்தார் , அவரிடம் பேசினால் திரிவேணி சங்கமம் பற்றிய தகவல் கிடைக்கலாம் என தோன்றியதும் அவரை அணுகினேன்.

அவரை பார்த்து நட்புடன் சிரித்ததும் , என்னிடம்தமிழாஎன்றார் . உச்சரிப்பு மாறுபட்டது. நான்ஆம்என்றபடி அவரிடம்இங்கு மூன்று நதிகள் சங்கமிப்பதாக சொல்லப்படுவது வெறும் நம்பிக்கை மட்டும்தானா ? ,அல்லது கங்கை ,யமுனை சரஸ்வதி கலப்பதாக சொல்லப்படுவது உண்மையா?” என்றேன் . அதற்கு அவர் சிரித்தபடிஉங்கள்  குல தெய்வத்தை பிராத்தனை செய்துகொள்ளுங்கள், நான் பிறகு சொல்கிறேன்என்றார் . முதலில் ஒரு மாதிரி இருந்தாலும் எனக்கு அவர் சொல்லுகிறபடி செய்து பார்த்தால் என்ன என்று தோன்றி , கண்மூடி எனது குலதெய்வத்தை பிராத்தனை செய்து விட்டு, பின் அவரை பார்த்தேன். அவர் என்னிடம்திரிவேணி சங்கமம் பற்றி சொல்லப்படுவது வெறும் நம்பிக்கையல்ல, உண்மை அதை பார்க்கவும் உணரவும் முடியும். நம்பிக்கையோடு அனுகினால் அன்னை தன்னை மறைப்பதில்லைஎன்றார். எனக்கு அவர் சொன்னது சிலிர்ப்பை கொடுத்தது . ஆம் அன்னை அவள் தன் குழந்தையிடம் ஏன் தன்னை மறைக்கப் போகிறாள்? , என உள்ளே ஒன்று உணர்வுடன்  எழுந்து . நான் அவரை பின்தொடர்ந்தேன் . என்னை  அழைத்துக்கொண்டு , நீர் ஒழுக்கின் எதிர் திசை நோக்கி அனாயாசமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.


பழக்கமின்மையால் நீரின் ஓட்டத்திற்கு எதிர் நடப்பது எனக்கு சிரமாக இருந்தது . நீரில் தவறி விழுவதை தடுக்க சில அடிகளுக்கு ஒரு முறை என்னை நிகர்நிலையில் பேணிக்கொண்ட பின்அவரை தொடர்ந்து கொண்டிருந்தேன். சற்று தூரம் என்னை அழைத்து சென்று ஒரு குறிப்பிட்ட திசையை பார்க்கச்சொல்லி , ஒன்றன் பின் ஒன்றாக விளக்கி சொல்ல துவங்கினார் . குறிப்பட்ட ஒரு இடத்தை சுட்டிக்காட்டிய போது . அந்த இடத்தில் நீரின் அடர்த்தியால் இரண்டுவகையான வண்ணங்கள் போன்ற ஒன்றை பார்க்க முடிந்தது . பிரவாகமாக நீர் ஓடி வருவதையும், அவை ஒன்று கலப்பது போல ஒன்று அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது . நீரில் இளம் செம்மையான ஒரு தாரையில், கரிய நிறத்தில் ஒரு கறையைப்போல ஒரு பகுதியையும் அது நதி நீரில் நீண்டு படர்ந்து பின் தன் நிறத்தை இழந்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது . செழுமையான நிறத்தில் வருவதைகங்கைஎன்றும் கரிய நிறத்தில் வருவதையமுனைஎன்று அவர் பிரித்துக்காட்டினார். ஆம் , அவர் சொன்ன பிறகு , அவை இருவேறு பகுதிகளில் இருந்து ஓடிவந்து கலப்பதையும் , அவை நேராக நான் நிற்கும் இடத்திற்கு ஓடி வருவதையும் பார்க்க முடிந்தது.

அரிய நிகழ்வும் வெறுமையும் - 39 . நதி ஸ்நானம்.

ஶ்ரீ:



நதி ஸ்நானம்  




பதிவு :  429 / தேதி :- 27 பிப்ரவரி   2018








திருவேணி சங்கமம்  முழுவதுமாகவே கலங்கலான நதியாக எட்டிய தூரத்திற்கு  ஓடிக்கொண்டிருந்தது . அதன் அகலம்  தொடுவானம் தூரம்வரை ,நீரும் கரையுமாக மாறி மாறி தொடுத்திருந்தது . சிறு சிறு மணல் திட்டுக்கள் நூற்றுக்கணக்கில் ஆமை ஓடுகள் போல அங்கங்கே புடைத்து எழுந்திருந்தன . அவற்றை தாண்டி நதி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது . எல்லா திட்டுக்களிலும் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் நிறைந்து காணப்பட்டார்கள். ஒவ்வொரு மணல்  திட்டிலும் ஏராளமானவர்கள் குளித்துக்கொண்டும் , தர்ப்பணாதி கிரியைகளை செய்துகொண்டும் , ஈரத் துணிகளை கொடிபோல கட்டி உலர்த்திக்கொண்டும் இருந்தனர்

எங்கும் பார்க்க சலிக்காத பலவித முகங்களின் கொலு. தீர்த்தயாத்திரை என்பது பல்நெடுங்காலம் இந்துக்களின் ஆழமான நம்பிக்கை ,அதன் தொடர்ச்சியை இன்றுவரை பார்க்கும்போது ஆச்சர்யமளிப்பதாக இருந்தது .இடது புறம் கண்ணுக்கெட்டிய வரை நீண்ட கரை பகுதி . கரை மணல் சந்தன நிறத்தில் நீரால் ஊறியது போல இருந்தது, நடக்கையில் காலில் லேசாக ஒட்டினாலும், அவை சேறாகவோ களிமண்ணாகவோ மாற்றமையாது ,எப்போதும் ஈரப்பதத்தோடவே இருந்தன . அவை உலர்ந்துபோனால் புழுதி படலங்களாகி எங்கும் பறக்க துவங்கிவிடுகின்றன . கரை ஓரம் முழுவதும் சாரி சரியாக மனித நிரைகள் உற்ச்சாகமாக போவதும் வருவதுமாக இருந்தனர்  . மனம் முழுவதுமாக அழுத்தம் நிறைந்த அன்றாட தொழில் அழுத்தத்திலிருந்து விடுதலை பெற்ற எண்ணத்துடன் , நான் எந்த விதமான சிந்தையுமின்றி அவற்றை பார்த்துக்கொண்டு நின்றதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன் .




நதி எவ்வளவு ஆழமிருக்கும் என நான் கேட்டதற்கு படகு ஓட்டுனர் நதியின் மையப் பகுதி முப்பது அடிகளுக்குமேல் ஆழம் என அறிவுறுத்தினார் . சிறிது நேரத்திற்கெல்லாம் எங்கள் யாத்திரை குழுவின் ஒரு பகுதியினர் தாங்கள் இறங்கியிருந்த மணல்மேட்டிலிருந்தபடி எங்களை நோக்கி உற்சாகமாக கூவியபடி கைகாட்ட , நாங்கள் அந்த தீவில் இறக்கிக்கொண்டோம் . இங்கு படகுதுறை போல ஒரு ஏற்பாடு இல்லாததால் கரை இறங்க பெண்கள்தான் சிரமத்திற்கு ஆளாயினர் . நதி நீர் கரை ஓரம்போலில்லாமல் சுத்தமாக இருப்பதுபோல தோற்றம் கொண்டிருந்தது . திரிவேணி சங்கமம் என்பது மூன்று நதிகளின் இணைவு பொதுவில் அதைபிரயாகைஎன்பார்கள் . நான் மூன்று நதி தனித்தனியாக ஓடி வந்து இணைவதை பார்க்க முடியும் என்கிற நினைப்பில் இருந்தேன். ஆனால் இந்த அளவில் பிரம்மாண்டமாக ஒரு நதியை நான் எண்ணியிருக்கவில்லை . எங்கும் நீர் சூழ்ந்து இருப்பதால் மூன்று நதிகள் எங்கு வந்து இணைகின்றன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை

எங்கு பார்த்தாலும் ஜலப்பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கும் நதியில் , அதை பிரித்துப்பார்ப்பது இயலாது என்றே தோன்றியது . இந்து சம்பிரதாயத்தில் குருவுடன் சேர்ந்து செல்லும் தீர்த்த யாத்திரை பற்றி  புராணத்தில் விசேஷித்து சொல்லப்படுகிறது . ஆச்சர்யனுடன் செல்வது அதனினும் பாக்கியம் . எங்கள் குழுவுடன் எங்களுக்கு இது இரண்டாம்நாள் . என்றாலும் அவர்கள் அனைவரும் எங்களை விட மூன்றுநாட்கள் முன்னதாக ஜீயர் ஸ்வாமிகளுடன் பயணப்பட்டு வருகிறார்கள் . எங்களுக்கு அவருடன் இது முதல் தீர்த்தமாடல் . நான் அமைதியாக நடப்பதை பார்த்தபடி இருந்தேன் . ஜீயர் ஸ்வாமிகள் முதலில் இறங்கி அவரது அனுஷ்டானங்களை முடித்த பிறகு . நாங்கள் ஒருவர் பின் ஒருவராக நதியில் இறங்கினோம்  

எங்களுடன் வந்தவர்கள் ஜீயர் ஸ்வாமிகளை சுற்றி வட்டமாக நின்றுகொள்ள நடுவில் கோபிகளுகளுக்கு கண்ணனைப்போல ஜீயர் ஸ்வாமிகள். எங்கள் அனைவரின்மீதும் அவர் நீரை வாரி இறைக்க , நாங்களும் பதிலுக்கு அவர்மீது நீரை இறைதித்தோம் , இது ஒரு விளையாட்டுபோல நிகழ்ந்தது , அதன்பின்னர் நாங்கள் ஒருவர்பின் ஒருவராக அவரை அருகணைய ,எங்கள் தலையில் நதிநீர் விட்டு ஆசியளித்தது மனதிற்கு நிறைவாகவும் ,வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது

ஜீயர் ஸ்வாமிகள் தனது குளியலை முடித்துக்கொண்டு  கரைக்குத் திரும்பிவிட்டார் . அங்கு அவருக்கு நித்ய அனுஷ்டாணத்திற்கு அவரது ஆராதனை பெருமாள் காத்திருந்தார் . பெரிய மூங்கில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஜீயரின் ஆராதணைப் பெருமாளை அவரது மூத்த புத்திரன் எடை தாளாமல் சுமந்து வருவதை பார்க்க முடிந்தது. நதியிலிருந்து வெளியேற மனசாகாமல் . நாங்கள் சிலர் மட்டிலும் நதி நீரில் அலைந்தபடி இருந்தோம் . எனக்கு பக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவரை பார்த்தேன்  . நம்மூர் பக்கம் போல இருந்தாலும் வெகு நாட்களுக்கு முன்பாக வடநாட்ட குடிபெயர்ந்தவர்போல இருந்தார் , அவரிடம் திரிவேணி சங்கமம் பற்றிய தகவல்களை அறிய அணுகினேன்