இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
திங்கள், 20 மே, 2024
வெள்ளி, 17 மே, 2024
புதன், 1 மே, 2024
அறம் என்கிற காலம்
நண்பர்களுக்கு வணக்கம்
இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன். கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்றியது என நினைக்கிறேன். நண்பர்கள் எப்படி பார்க்கிறார்கள் என தெரியவில்லை
விபீஷணனின் வாத அடுக்கு முறை நுட்பம் வேறு வகைமை கொண்டாதாக பார்க்கிறேன். இராவணன் இன்றிருக்கும் இடம் சிக்கலுக்காட்படும் என்கிற வாதத்தை அவர் வைக்காமல் அவனக்கு கையில் கிடைக்க இருக்கும் இந்திரப் பதவி நழுவுவதை பேசுகிறார். வேறு காரணங்கள் அவனிட் எடுபடாது என நினைக்கிறார். எனவே இந்திரப் பதவி பராக்கிரமத்தால் மட்டும் அடைந்துவிடுவதல்ல அறம் மற்றும் விழுமியம் அதற்கு பலம் சேர்க்க வேண்டும் போல. இந்திரனை வெற்றி கொண்ட பிறகு சிலரை அடிமை கொண்டது தவிற இராவணன் இந்திரப் பதவியில் அமர்ந்ததாக எங்கும் இல்லை என நினைக்கிறேன். அமராத பதவிக்காக இராவணனின் வீண் போர் நிகழவில்லை என்பதால் கண்களுக்கு புலப்படாத “அறம்” இராவணனது விழுமியம் மூலமாக அடையப் பட வேண்டும் என அவனை காத்திருக்க வைத்திருக்கிறது போலும். இன்று அதற்கு ஆபத்து என விபீஷணன் சொல்ல வருகிறான்.
மேலும் மஹாபலி இந்திரனை வென்று ஆட்சியில் அமர்கிறான். அவனது பராக்கிரம் மட்டுமல்லாது அவனது விழுமியமும் அவனுக்கு துணைத்து அந்த பதவியை பெற்றுத் தந்திருப்பதால் இந்திரன் முறையிட பலத்தால் அவனை வெற்றி கொள்ளாமல் வாமண ரூபம் எடுத்து தானமாக பெற்றுத்தரும் செயல் அறம் என்கிற ஒன்று அனைத்தையும் அளக்கிறது போலும்.
புதிய பதிவுகள்
-
ஶ்ரீ : மணிவிழா - 41 24.12.2022 ஆயிரம் ஆண்டு கொண்டாட்டமாக நிகழும் போது அதில் பொதுமக்கள் லட்சம் பேர் பங்கு கொள்ளும் ...
-
ஶ்ரீ : விந்தம் எனும் விதி முகூர்த்தம். பதிவு : 447 / தேதி :- 16. மார்ச் 2018 2008 எனது வாழ்வில...
-
ஶ்ரீ : மாய நதி பதிவு : 430 / தேதி :- 28 பிப்ரவரி 2018 இளம் சூடும் , குளிருமாக கலந்து ஓடி...
-
ஶ்ரீ : பதிவு : 291 / 378 / தேதி :- 07 ஜனவரி 2018 * கையில் வராப் பொருள் * “ ஆளுமையின் நிழல் ” - 37 கருதுகோ...
-
ஶ்ரீ : * தன்னை தானென பிளவுறுதல் * இயக்க பின்புலம் - 39 அரசியல் களம் - 33 அன்றிருந்த வயதும் அனுபவமின்ம...
-
ஶ்ரீ : அடையாளமாதல் - 502 பதிவு : 502 / 688 / தேதி 19 டிசம்பர் 2019 * பிம்பமும் உருவகமும் * “ ஆழுள்ளம் ” - 03 ...
-
ஶ்ரீ : அடையாளமாதல் - 448 பதிவு : 448 / 625 / தேதி 07 ஜூலை 2019 * இருப்பும் அனுபவமும் * “ எழுச்சியின் விலை...
-
ஶ்ரீ : பதிவு : 163 / 237 தேதி :- 19 ஆகஸ்ட் 2017 * நானெனும் பார்வை * மாறியமைந்த முதற்கல் அடையாளமழித்தல் த...
-
ஶ்ரீ : பதிவு : 712 / தேதி 12 பெப்ருவரி 2020 புதுவை வெண்முரசு கூடுகை 35 அழைப்பிதழ்