இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
திங்கள், 20 மே, 2024
வெள்ளி, 17 மே, 2024
புதன், 1 மே, 2024
அறம் என்கிற காலம்
நண்பர்களுக்கு வணக்கம்
இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன். கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்றியது என நினைக்கிறேன். நண்பர்கள் எப்படி பார்க்கிறார்கள் என தெரியவில்லை
விபீஷணனின் வாத அடுக்கு முறை நுட்பம் வேறு வகைமை கொண்டாதாக பார்க்கிறேன். இராவணன் இன்றிருக்கும் இடம் சிக்கலுக்காட்படும் என்கிற வாதத்தை அவர் வைக்காமல் அவனக்கு கையில் கிடைக்க இருக்கும் இந்திரப் பதவி நழுவுவதை பேசுகிறார். வேறு காரணங்கள் அவனிட் எடுபடாது என நினைக்கிறார். எனவே இந்திரப் பதவி பராக்கிரமத்தால் மட்டும் அடைந்துவிடுவதல்ல அறம் மற்றும் விழுமியம் அதற்கு பலம் சேர்க்க வேண்டும் போல. இந்திரனை வெற்றி கொண்ட பிறகு சிலரை அடிமை கொண்டது தவிற இராவணன் இந்திரப் பதவியில் அமர்ந்ததாக எங்கும் இல்லை என நினைக்கிறேன். அமராத பதவிக்காக இராவணனின் வீண் போர் நிகழவில்லை என்பதால் கண்களுக்கு புலப்படாத “அறம்” இராவணனது விழுமியம் மூலமாக அடையப் பட வேண்டும் என அவனை காத்திருக்க வைத்திருக்கிறது போலும். இன்று அதற்கு ஆபத்து என விபீஷணன் சொல்ல வருகிறான்.
மேலும் மஹாபலி இந்திரனை வென்று ஆட்சியில் அமர்கிறான். அவனது பராக்கிரம் மட்டுமல்லாது அவனது விழுமியமும் அவனுக்கு துணைத்து அந்த பதவியை பெற்றுத் தந்திருப்பதால் இந்திரன் முறையிட பலத்தால் அவனை வெற்றி கொள்ளாமல் வாமண ரூபம் எடுத்து தானமாக பெற்றுத்தரும் செயல் அறம் என்கிற ஒன்று அனைத்தையும் அளக்கிறது போலும்.
புதிய பதிவுகள்
-
ஶ்ரீ : 27.01.2023 * கனவுகள் எளிதல்ல * எனது திட்டங்கள் எப்போதும் வலுவான அடித்தளத்தோடு துவங்கப்படுவதில்லை காரணம் அவை எ...
-
https://www.jeyamohan.in/192752/ அன்பிற்கினிய ஜெ , வணக்கம் , நலம் நலனை விழைகிறேன் . திவ்ய பிரபந்த பயிற்சி முகாம் வெள்ளிமலையி...
-
ஶ்ரீ : * விஸ்தரிக்கும் நீர்மைத் தொடர்புகள் * இயக்க பின்புலம் - 56 அரசியல் களம் - 37 கும்பகோணம் ...
-
ஆறு தரிசனங்கள் வேதப் பரிச்சயம் உள்ளவர்கள். இவர்கள் ஒரு சிறு தொகுதியாக இருப்பவர்கள்.அடிப்படை ஞானம் இல்லாதவர்களிடம் பேச இயலாதவர்கள்.அவற...
-
ஶ்ரீ : விந்தம் எனும் விதி முகூர்த்தம். பதிவு : 447 / தேதி :- 16. மார்ச் 2018 2008 எனது வாழ்வில...
-
ஶ்ரீ : பதிவு : 673 / 862 / தேதி 15 ஏப்ரல் 2023 * நேரத்திற்கு மாறும் கணக்கு * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 71. காலை...
-
ஶ்ரீ: அடையாளமாதல் - 71 * மலர் சூடும் பனிமுகம் * திரு . ப . சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 44 அரசியல் களம் -...
-
https://www.jeyamohan.in/184845/ அன்புள்ள ஜெ என் 17 வயதான மகன் இஸ்லாமிய நூல்களை வாசிப்பது, இஸ்லாமிய கருத்துக்கள் மேல் மிகுந்த ஆர்வத்துடன் ...