https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

வானப்பிரஸ்தம் “வாழ்கை அகத்தில் நிகழ்வது”

  வானப்பிரஸ்தம்    வாழ்கை அகத்தில் நிகழ்வது”


பதிவு : 001  / 721

வாழ்கை அகத்தில் நிகழ்வது”

புதுவை

தேதி:- 30 ஆகஸ்ட் 2020






வாழ்கை என்பது மானுட அகத்தில் நிகழ்வது’ .எவ்வளவு அசலான விஷயம் , கடந்து சென்ற நாட்கள்  நினைவுகளாக, வர இருக்கின்ற நாட்கள் ஏக்கங்களாக அல்லது அச்சுறுத்துபவையாக நம்மிடம் இருக்கும் போது வாழுதல் எங்கே நிகழ்கிறது அல்லது வாழ்தல் என்பதுதான் என்ன? என்கிற கேள்வியை உருவாக்கிக் கொண்டால் இந்த வரி பெரும் அர்த்முள்ளதாகிறது.


அது அழகியல் கொண்டதாவதற்கு இந்து ஞான மரபில்” சொல்லப்படும் நான்கு ஆஸ்ரமத்தில் முதல் மூன்றை ஒருகால் தவறவிட்டிருந்தாலும் நான்காவதாக உள்ள ஆஸ்ரமத்தை காலம் ஒவ்வொருவருக்கும் பணி ஓய்வு , உடல் உபாதை அல்லது நோய் என்று அளித்து அதை நோக்கி செலுத்துகிறதுஅதை வானப்பரஸ்தமாக தெரிவு செய்வது கொள்ள ஒரு கீதா முகூர்த்தம் நிகழ்கிறது . அதை தவறவிட்டவர்கள் பின் ஒருபோதும் திரும்பி வர இயலாது பிறர் மேல் வன்மம் கொண்டு, கசப்படைந்து , அனைத்தின் மீதும் நம்பிக்கை இழந்து தங்களது கடைசி காலத்தை நரகமாக்கிக் கொள்கிறார்கள் .தன்னைச் சுற்றியுள்ள பிறரையும் அதை நோக்கி தள்ளி விடுகிறார்கள்.


வானப்பிரஸ்தம் . வாழ்வாங்கு வாழ்ந்து முடித்தும் , முடியாது போனாலும்மிச்சமுள்ளதை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள முயல்வது .இந்த நவீன யுகத்தில் வனங்களில் வசிப்பது முற்றாக பழக்கமில்லாத , அரசுகளால் அனுமதிக்கப்படாத மற்றும் நமது அனுபவத்தில் இல்லாதது .விரக்த்ரராக சந்நியாசம் செல்வது , மலைக்குகைகளில் வசிப்பது இன்றும் நிகழ்கிறது அது வேறு ஆஸ்ரமம் .குடும்பஸ்தனுக்கு சொல்லப்பட்டதல்ல.


இன்றைய நவீன யுகத்தில் வானப்பிரஸ்தம் என்பது சமூகத்தின் மத்ததியில் வாழ்வது .வனத்தில் வாழ்வதற்கு  இணையான மனநிலையை உருவாக்கி கொள்ள முடிந்தால் வானப்பிரஸ்தம் நாட்டிலும் நிகழக்கூடிதே என யூகிக்கிறேன்வனத்தில் வாழ்வதை காட்டிலும் நகர வாழ்வு மேலதிக சவால்கள் உள்ளடக்கியவையாக இருந்தால் வியப்பில்லை.


நகர வானப்ரஸ்தம் வெளியுலக தொடர்பு தேவையற்ற நிலையை உருவகித்து அதனால் நிகழும் மனப்பதற்றத்தை எதிர் கொள்வது .நேற்றின் தொடர்ச்சியை அறுத்து , நாளைய பற்றிய கவலை இல்லாமலிருப்பது . இன்றில் நிறைந்து இனிது வாழந்து முடிப்பது .இறப்பு ஒன்றை தவிர அதை இடையறுப்பது பிறிதொன்றில்லை .


வனத்தில் வாழ எதிர்கொள்ளும் சவால்களுக்கு இணையாக நகர வானப்பிரஸ்தத்திலும் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளுதல் , வனவிலங்குகளிடம் அச்சம்  நோய் பற்றிய எச்சரிக்கை , உணவு பற்றிய எதிர்பார்ப்பு.இறப்பை ஒரு பொருட்டாக எண்ணாத சூழலில் மூன்றுமே அர்த்தமிழந்து போகின்றன . மரணத்தை எதிர்கொள்வதற்கும் தற்கொலை மனநிலைக்கும் உள்ள வேறுபாடுகள் ஆழ்ந்த அகவயமானதுஅழுத்தமானது .  அதே நேரத்தில் மன நிறைவுற்று , அந்த வாழ்தலில்  திளைக்காதிருத்தல் மிக நுண்மையானது மகத்தானது . அன்றாடத்தில் உறிஞ்சபடாமல் அதை எதிர்கொள்ள நேர்கிறபோது.


நாட்டில் சமூகத்தில் வாழ்கிற போது இல்லம்” பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வைக்கிறது உணவுதேவைக்கு கைவசமுள்ள ஏற்பாடுகள் உதவலாம் . விலங்குகளின் அச்சுறுத்தல் இல்லை அதற்கினையாக உறவுகளிடமிருந்தும் சமூகத்தினிடமிருந்தும் . வனத்தில் புறவயமாக விலங்குகள் நிகழ்த்துவதை விட சமூகமும் உறவும் அகவயமாக செய்கின்ற அகவய பாதிப்புகள் அதிகம் என்றே நினைக்கிறேன்.அவற்றை எதிர்கொள்ள மரணத்தை பற்றிய அச்சமின்மையை உச்ச வரம்பாக வைத்துக் கொள்ள இயன்றால் இதிலிருந்து வெளி வருவது இயல்வதே என நினைக்கிறேன்.


மானுடன் தன்னை கடைநிலையில் உள்ளவனாக உருவகிக்கிற போது பேரியற்கையை பெரும் கருணை கொண்டாதாக உணரும் ஒரு தருணம் வாய்க்க வேண்டும் . அத்தருணம் நிகழ்கிற போது அவன் தன்னை தனியனாக எண்ணமுடிவதில்லை .ஆனால் அந்த பேருண்மையை நோக்கிய பயணத்தில் உணரக்கூடியது உண்மைகள் இறுதிநிலையில் மிக எளியவை என்பதை . ஆனால் கீழ்த்தளத்தில் அவ்வுண்மைகள் நடைமுறை வாழ்க்கையாக ஆகும்போது சிதறிப்பரந்து பலநூறு வழிகளாகப் பல்லாயிரம் முடிச்சுகளாக உள்ளன”.


பரமார்த்திக உண்மைகளை அன்றாட வாழ்க்கைமூலம் மட்டுமே மனிதனால் அறியமுடியும்அறிந்தவற்றைத் தொகுத்துத் தொகுத்து அதை அவன் செறிவாக்கித் தூய்மையாக்கி எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது”-ஜெ


மரபான சம்பிரதாய நம்பிக்கையும் ,இன்றைய நவீன ஊலகின் அதற்கான மதிப்பீடுகளையும் மறு உருவாக்கம் கொள்வதனூடாக அதை கடந்து செல்லதும் இயல்வதே.

யாரையும் எதையும் சாராது , அல்லது எதிர்பாராது இருக்கும் மனநிலையை உருவாக்கிக் கொண்டால் அது அதை நம்மில் நிகழ்த்திக் காட்டலாம் .


குடும்ப பொறுப்புகளில் இருந்து முற்றாக விலகி வெளியேறிஅவற்றை நிகழ்த்திக் கட்ட வேண்டியதில்லைகாரணம் பொருப்பில் இருந்து விலகுபவனை இங்கு உதாரணமாக கொள்ள இயலாது . அது சந்நியாசத்திற்கு சில படிகள் கீழ் . அதை முதல் தளத்திலேயே மறுதளிக்கிறேன் . அவன் எனக்கு சொல்ல ஒன்றுமில்லை .


அனைத்து உறவுகளுடனும் அது சார்ந்த சமூகத்துடனும் உள்ள தொடர்பை அறுத்துக்கொள்ள முடியாத நிலையில் வானப்பிரஸ்தம் சாத்தியமா ? என கேட்டுக் கொண்டால் அது ஒருவித மன ஒழுங்கு மற்றும் கற்பிதம் பொறுத்தது என நினைக்கிறேன்.



சனி, 29 ஆகஸ்ட், 2020

அடையாளமாதல் * கவனிக்கப்படுபவர் *

 ஶ்ரீ:





பதிவு : 528  / 720 / தேதி 29 ஆகஸ்ட் 2020


* கவனிக்கப்படுபவர்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 05.






புதுவை காங்கிரஸ் தலைவர் சண்முகத்திடம் எனக்கிருந்தது போற்றிபாடல்” போன்ற தலைமை வழிபாடா அல்லது அதைக் கடந்து அவரது ஆளுமை மீது எனக்கிருந்த தர்க்க ரீதியான மரியாதையா என பல முறை  எனக்கு நானே கேட்டுக் கொண்டதுண்டு . அவருக்கு எதிரான மனநிலை கொண்ட அமைப்புதான் என்னை அரசியலில் வளர்த்தெடுத்தது . நானும் அவருக்கு எதிரான மனநிலையில் தான் இருந்தேன்  முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் கண்ணனும், பாலனும் .


எல்லாவிடத்திலும் உள்ள குரு சிஷ்ய பரம்பரை போல இங்கும் ஒரு நீண்ட நிரை உண்டு  . பாலன் கண்ணனின் அரசியல் பாணியை ஒட்டி தன் அரசியலை கொண்டருந்தார் . ஆனால் அது கண்ணனின் அரசியலை நகல் செய்தது .நிஜமான தலைமை பண்பை பாலன் பெற்றிருக்கவில்லை .வெகு விரைவில் பாலனின் அரசியல் வீழ்ச்சி கண்டது .கண்ணன் தனது அரசியல் நிலைபாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்வதன் வழியாக மற்றும் அதி நம்பிக்கையால் அதனது அரசியல் முற்றழிவை சந்தித்தார் .


இவர்களுக்கு மத்தியில் சண்முகம் கவனிக்கத் தக்கவராக இருந்தார் என்பது உண்மை .அவரைப் பற்றிய நேர் மற்றும் எதிர்மறை செய்திகள் அறிந்திருந்தேன் .ஒரு புள்ளியில் அவை ஒன்றை ஒன்று சமன் செய்வதாக இருந்தது . இரண்டும் உண்மை . இரண்டு வகைகளில் .மிக நுட்பமான அரசியல் களத்தையும் அதில் காய்கள் நகர்த்தப் படுவதையும் அதில் சண்முகத்தின் நிலைபாடுகளை வெகு அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை ஊழ் எனக்கு அளித்திருந்தது என்று நினைக்கிறேன்.அரசியல் சரி நிலைகளைக் கடந்து ஒரு மெல்லிய கோட்பாடு அரசியல்” அவரிடம் இருந்தது. அவர் வாழ்ந்த காலத்திலேயே அரிதானது . மற்றைய அரசியலாளர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது அதுவே என நினைக்கிறேன்.


நேரு , இந்திரா , ராஜீவ் காந்தி என சண்முகம் அகில இந்திய கட்சி அரசியலில் தலைமைக்கு உகந்தவராகவும் அதனால்  பிற எவரிடமும் உதாசீனராக இருந்தவர் . எளிதில் யாராலும் கட்டுப்படுத்த முடியாதவராக , தில்லியின் நீக்குபோக்கான அரசியலில் வளைந்து கொடுக்காமல் அதில் இருந்து வேறுபடுத்தி  தன்னை வளர்த்துக் கொண்டதால் , அகில இந்திய காங்கிரஸ் அமைப்பில் அவருக்கு ஏராளமான  எதிரிகள் உருவாகினர் .தில்லி அரசியலில் பிழைத்திருப்பது ஒரு கலை .எதிலும் எவரும் உறுதியான வெகுஜன அரசியலை நிகழ்த முடியாது .எப்பேர்பட்ட தலைவர்களும் சூழ்நிலைக்கு ஏற்றபடியே தங்களை வைத்திருக்க வேண்டும் என்பது அரசியல் உண்மை .


தங்களின் அடையாளமாக சிலவற்றை உருவாக்கி வைத்திருந்தவர்கள் கூட ஒரு சந்தர்ப்பத்தில் அகில இந்திய அரசியலில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது .மிக சமீபத்திய உதாரணம் . வாழப்பாடு ராம மூர்த்தியும் , கருப்பையா மூப்னாரும் .தலைமை பொருப்பில் உள்ளவர்களும் வெகுஜன அரசியலை மனத்தில் கொண்டே தங்களின் அரசியலை வரையறை செய்கிறார்கள் . அந்த நிலைப்பாடுகள் சில சமயம் வெற்றிகளை கொடுத்திருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் காலை இடறிவிட்டிருக்கின்றன . யாராளும் புரிந்து கொள்ள முடியாதது அரசியல் குறித்து சமூகங்களில் நிகழும் முரணியக்க முடிவுகள் .


சீத்தாராம் கேசரி மற்றும் நரசிம்மராவ் அகில இந்திய தலைவராக நீடித்த போதும் அவர் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார் அரசியலை உற்று நோக்கினால் புரிந்து கொள்ள முடியும் அரசியலில் ஏற்றமும் இறக்கமும் மிக இயற்கையானது , அதில் பிழைத்திருப்பது என்பது பிறிதொன்றை சொல்ல வருவது 


தமிழக காங்கிரஸ் அரசியலை பாரத்தாலே இதை விளங்கிக் கொள்ளலாம் . தமிழக மாநிலத் தலைமை கடந்த நாற்பது ஆண்டுகளில் பலமுறை மாற்றப்பட்ட போதும் சண்முகம் தலைவராகவே நீடித்தார் .அதற்கு தமிழக கூட்டணி அரசியலை காரணமாக சொல்பவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள் . தமிழக கூட்டணி பொருத்து நிகழ்வதே புதுவைக்கும் சேர்த்தே நிகழ்ந்திருக்கிறது .


சண்முகம் புதுவை அரசியலில் தவிற்க முடியாத சக்தியாக தன்னை நிலைகொள்ள செய்ததற்கு முதன்மைக் காரணம் புதுவையில் காங்கிரஸ் ஆட்சி பல காலம் நீடித்தது என்பதும் . அதற்கு பின்னால் சண்முகம் இருந்தார் என்பதும் புதுவையில் காங்கிரஸ் ஒரு பலமிக்க அரசியல் கட்சியாக இருந்தது போன்றவை வெளிப்படையான காரணம் மட்டுமே .ஆனால் அதற்கு பின்னால் சண்முகத்தின் நிலைபாடு முக்கியமான காரணமாக இருந்தது .


பெரும் மக்கள் செல்வாக்கு பெற்றவரல்ல சண்முகம் , ஆனால் பல கட்சி தலைமைகளுடன் மற்றும் பிற அமைப்புகளை இணைக்கும் ஒரு புள்ளியாக தன்னை நிலைநிறுத்துக் கொண்டது அவரின் அரசியல் தொடர் வெற்றிக்கு அடிப்படை காரணம் என நினைக்கிறேன்.


சண்முகம் பற்றி பிற அரசியல் தலைவர்களுக்கு ஒரு நிலையான கருத்துரு இருந்தது .எளிதில் வளைந்து கொடுக்காதவராக மென்மையான அதே சமயம் அரசியல் அழுத்தம் தாங்குபவராக அவர் எப்போதும் இருந்தார். இணையும் போது பிரியவும் , பிரியும் போது மீளவும் இணையும் வாய்பபை மிகத் தெளிவாக உணர்ந்தவராக இருந்தார்.தனது நிலைப்பாட்டை இதை ஒட்டி உருவாக்கிக் கொண்டார். இது ஒரு முதன்மை அரசியல் கோட்பாடு என நினைக்கிறேன்.அதே சமயம் தனக்கென ஒரு முகத்தை உருவாக்கிக் கொண்டது வியப்பானது


நாளை என்ன கிழமை”? என்றால் தில்லியை கேட்டுச் சொல்லும் காங்கிரஸ் அரசியலில் அவர் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியது மிகவும் ஆச்சர்யமான ஒன்று .அவர் எப்போதம் தயக்கம் மிகுந்தவராகவே இருந்தார் . அதீத கூச்சம் சுபாவம் உள்ளவர் என்பது மிக நெருக்கமாக இருந்தவர்கள் மட்டுமே அறிந்தது .


யாரையும் எந்த சூழலில்லும் நம்பாதராவே அவர் அதனது இறுதிகாலம் வரை இருந்தார் .எவரை பற்றியும் சந்தேகம் கொண்டவராக இருந்தார் . அரசியலில் யாரும் எதையும் சந்தர்ப்ப சூழலில் செய்யக் கூடியவர்களே என்பதால் அவரது சந்தேகங்கள் பெருமாலும் உண்மையாகிப் போயின.


திங்கள், 24 ஆகஸ்ட், 2020

அடையாளமாதல் - * சிதைந்து போன கடந்த காலம் *

 ஶ்ரீ:



பதிவு : 527  / 719 / தேதி 24 ஆகஸ்ட் 2020



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 04 .






தொகுதிகளுக்கு தலைவர்களாக வரக்கூடியவர்களை தேர்ந்தெடுத்து வைத்திருந்ததை இப்போது பயண்படுத்தி பார்க்க முடிவெடுத்தேன் . அதில் கடைசி நேர மாற்றங்களை செய்து அவர்களுக்கு முறைப்படி செய்தி அனுப்பினேன் . தில்லியில் நடைபெற இருக்கும் கூட்டத்தை யாரும் தவிற்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் . மிகச்சிலரை தவிர மற்றவர்கள் தில்லி வருவதை உறுதி செய்தனர் .பட்டியலை இறுதி செய்து தலைவரிடம் கொடுக்க காத்திருந்தேன் . 75 பேரை தில்லி அழைத்து சென்று வருவது மிகவும் செலவேறியது என்பதால் என்னால் அதற்கு செலவு செய்ய இயலாது . அனைவரும் தில்லி சென்று வருவதற்கான செலவை அவரே ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார் . அது அவரின்  வழமை .


கடைசி நிமிடத்தில் வல்சராஜ் தில்லி மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பது மேலும் ,புதுவை வருவதாகவும் இணைந்து செல்லலாம் என எனக்கு செய்தி அனுப்பி இருந்தார் .அவர் விமானத்தில் செல்பவர் .நான் புதிய நண்பர்களுடன் ரயிலில் செல்ல முடிவெடுத்தேன் .தில்லி ரயில் பயணம் சுமார் இரண்டு நாளெடுப்பது நண்பர்களுடன் உரையாட நிறைய நேரம் கொடுப்பது . அனைவரின் கவனத்தையும் சிதறரடிக்காமல் ஓரிடத்தில் குவித்து கொடுப்பது என்பதால் அதுவே சிறந்தது .

எனது எதிர்கால திட்டம் குறித்து விரிவாக உரையாட ஒரு நல் வாய்ப்பு . அதை ஒருபோதும் தவறவிடக்கூடாது .


எனக்கு ரயில் பயணங்கள் மிகுந்த உற்சாகம் தருவதாக இருப்பது என்பது அடிப்படையான காரணமாக இருந்தாலும் அந்த பயணங்கள்  எனக்கு எப்போதும் பல்வேறு ஆழ்மன புரிதல்களை கொடுத்திருக்கிறது . திகைத்து நின்ற முட்டுச்சந்துகளில் இருந்து வெளிவருவதற்கான வழிகளை நான் சட்டென கண்டுகொண்டது ரயில் பயணத்தின் போது .ரயில் பயணம் எதையும் நேர்மறையாக சிந்திக்க செய்வது , மிகுந்த செயலூக்கம் கொடுப்பது அது ஏன் என்பதற்கான   காரணத்தை என்னால் சொல்ல முடியவில்லை


தில்லிக்கு வருபவர்கள் பட்டியலை பல முறை சண்முகம் வற்புறுத்தி கேட்ட பிறகும்  நான் அதை அவரிடம்  கொடுக்க காலம் தாழ்த்தி வந்தேன் . அவர் என்னிடம் கேட்பது போலவே மாநில அனைத்து தலைவர்களிடமும் கேட்டிருப்பார். அது தவிர கட்சியின் அனைத்து தொகுதி தலைவர்களிடமிருந்தும் ஒரு பட்டியலை கேட்டு வாங்குவார் என்பதால் நான் எனது பட்டியலை அவரிடம் கொடுக்க கால தாமதப்படுத்தினேன்.  


நிஜமான தற்சார்பு அமைப்பு ஒன்றை அதன் அடிப்படை கட்டமைப்புகளுடன் எழுப்புவது  மட்டுமே நீண்டகால இளைஞர் அரசியல் நிலைத்தன்மை உருவாகிவரும் .இதில் என்னை ஏற்பவர் மட்டும் இணைக்கப்படுவது குறுங் குழுவே உருவாகி வரும்  அதை நான் விழையவில்லை . அது எந்நிலையிலும் மாநில அரசியல் நுழைய இடம் கொடுக்காது.


 அதை கடந்த காலத்தில் இருந்து கற்றிருந்தேன் . முன்னாள் இளைஞர் இமைப்பின் பெரும் தலைவராக அறியப்பட்ட கண்ணனும் , அவரை நகல் செய்ய முயன்ற பாலனும் சென்று சேர்ந்தது முற்றழிவு மட்டுமே.அதை பிறருக்கு நிகழ்தியவர்கள் இறுதியில் அவர்களும் அங்குதான் சென்றனர்.


மாநில இயக்கத்தை நான் முன்னின்று வழிநடத்தும் காலம் என ஒன்று வரும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை . இப்போது அந்த வாய்ப்பு பலர் கைகளில் இருந்து நழுவி என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது. அதை விருப்பு வெறுப்பிற்கு அப்பால் நின்று செய்ய முயற்சிப்பது அதன் முற்றான வெற்றிக்கு இட்டுச் செல்லும் . எனக்கான அடையாளம் அதில் மிக மெல்லத்தான் உருவாகி வரும் . ஒருக்கால் அப்படி நிகழாது போனாலும் , அதற்காக முயற்சித்தது மட்டுமே மனநிறைவை கொடுக்க வல்லது.


தில்லி மாநாட்டிற்கு நான் தெறிவு செய்து வைத்திருந்தார்களில் பெரும்பாண்மையோர் அந்தந்த தொகுதி தலைமைக்கு அனுக்கமானவர்கள் , அரசியல் காரணங்களுக்காக தொகுதி முக்கியஸ்தர்கள் , அவர்களை தவிர்ககவே எப்போம் முயல்வார்கள். மாநில அரசியலில் ஈடுபாடு  அரசியலின் நெளிவுகளை சொல்லிக் கொடுப்பது . ஒரு முறை மாநில அரசியலின் போக்கை அறிந்து கொண்டவர்கள் பின் ஒருபோதும் தொகுதி அரசியலை திரும்பமாட்டார்கள்..


அவர்களை தொகுதி அரசியலில் முடக்கிப் போட்டு தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அவர்களின் பெயர்களை இணைக்க மாட்டார்கள் .அவர்கள் தொகுதி அரசியலுக்கு திரும்பமாட்டார்கள் என்பதுடன் தொகுதி தலைமைக்கு கட்டுப்படாமல் போக வாய்ப்பிருப்பதாக அவர்கள் கருதுவதே அதற்கான காரணம் .


அனைத்து தலைவர்களும் கொடுத்த பட்டியலில், விடுபட்டவர்கள் பெயர்களை சூர்யநாராயணனிடம் இருந்து பெறுவது சிரமமல்ல ,  விடுபட்டவர்களின் பெயர்களை மட்டும் கொடுக்கும் பட்டியலில் இணைத்து கொடுப்பதின் வழியாக , நான் நினைக்கும்  முழுமையான அமைப்பை அது உருவாக்க உதவலாம் .


அது ஒரு முக்கிய அரசியல் சூழல் வெகு விரைவில் நாராயணசாமி சண்முகத்திற்கு எதிராக தன்னை முன்னிறுத்த முயல்வார் என கணித்திருந்தேன் . ஆனால் அது குறித்து எனக்கு அனுக்கமானவர்களிடம் கூட கருத்து பரிமாறிக் கொள்ள இயலாத சூழல் . புதுவை மிக சிறிய மாநிலம் அலர் செய்திகளும் ஊகங்களும் காட்டுத்தீயாக பரவக் கூடியவை . அனைத்திலும் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன் .