https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 30 டிசம்பர், 2022

அடையாளமாதல் * விரும்பாத நுழைவு *

 



ஶ்ரீ:



பதிவு : 655  / 845 / தேதி 30 டிசம்பர்  2022



* விரும்பாத நுழைவு *


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 50 .






பின்னால் அமரலாம் என நான் சொன்னதை மறுத்து காரின் முன் சீட்டில் அமர்ந்து கொண்டார். அழைத்துக் கொண்டு புதுவை கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் ஏதோ சரியில்லை என தோன்றிஏன் காற்று நேரடியாக உள்ளே வருகிறதுஎன்றார். நான் விபத்தில் கண்ணாடி உடைந்ததை சொன்னேன். அவர் விமான பயணத்தில் முழு அளவு குளிரூட்டப்பட்டிருந்ததால் அவருக்கு அந்த மேலதிக இரவு குளிர் தாங்கவில்லைகாரை சற்று நேரம் நிறுத்தி பெட்டியை திறந்து தனது வேட்டி ஒன்றை எடுத்து தலையை சுற்றிக் காதை மறைத்து கட்டிக் கொண்டார். பயணம் தொடர்ந்தது. தலைபாகையுடன் அவரை பார்க்க வேடிக்கையாய் பொருத்தமாய் இருப்பதாக தோன்றியது . வண்டி சென்னையின் முக்கிய பகுதிகளை தாண்டுவதற்குள் என்னையும் மாறனையும் சாப்பிட இறங்கச் சொன்னார். எனக்கு நல்ல பசி. சம்பிரதாயத்தற்கு மறுத்தேன். ஆனால் உறுதியாக நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என சொல்லி ஒட்டுனரிடம் தனியாக 200 ரூபாய் கொடுத்து அவரையும் சாப்பிட சொன்னார். எனக்கு சில வாரங்களுக்கு முன் நடந்த அந்த நிகழ்வு அவரையும் நாராயணசாமியையும் இணைத்து நினைவிலாடியது


தில்யில் இருந்து புதுவைக்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மோதிலால் ஓராவை அழைக்க சென்னை விமானநிலையைம் சென்று அவரை வரவேற்கும் போதுதான் தெரிந்தது உடன் நாராயணசாமியும் வருவது. பின் எங்களை எதற்கு அனுப்பினார் என்கிற கேள்வி எழாமல் இல்லை. என்னைக் கண்டதும் அவர் உள்ளே ஓடுவதை வெளியே கண்ணாடி போல தெரிந்தது.உடன் கலியனும் இறங்கினார். அவரைக் கண்டதும் நான் உஷ்ணமானேன் அவர் புதுவையின் இடைத் தரகர்களில் ஒருவர். அமைச்சர் கண்ணனின் கட்சி பொருளார் மாணிக்கசாமி அனுககர். மாணிக்கசாமி பல பெரிய நில ஊழல்களின் வழக்கில் பெயர் அடிபடுபவர். காங கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் வருகையில் அவருடன் கலியன் போன்ற வருவரை அழைத்து வருவது அரசியல் நெறிகளுக்கு எதிரானது. கண்ணன் மற்றும் மாணிக்கசாமியின் ஊழலகளை பெரிதாக இளைஞர் காங்கிரஸ் எடுத்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அந்த சூழலில் அதில் சம்பந்தப்பட்ட ஒருவருடன் தில்லியில் இருந்து வருவது நாராயணசாமியின் போக்கை என்னால் எதிர்க்காமல் இருக்க முடிநவில்லை. என்னை அவர் அங்கு எதிர் பார்ககவில்லை. முகத்தை கடுமையாக்கிக் கொண்டு என்னை வெறுமனே கடந்து சென்றார்


இரவு 9:00 மணி. விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நாராயணசாமியின் கார் சட்டென கிழக்கு கடற்கரை சாலை நோக்கி வேகமெடுத்தது. உடன் வந்திருந்த விநாயகமூர்த்திக்கு தாங்கவில்லை. என்ன அரி சாப்பிட்டாயா என கேட்க வேண்டாம் ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் விருட்டென கிளம்புவதற்கு நாம் எதிற்கு பாண்டியில் இருந்து வர வேண்டும். புலபம்பித் தள்ளினார். வண்டி போக்குவரத்து நெரிச்சலில் சிக்கி கிடைத்த சிறிது நேரத்தை பயன்படுத்தி பிஸ்கெட் மற்றும் பழங்களை வாங்கி வந்தேன். அன்று இரவு ஏகாதசி.


எனக்கு அந்த தேர்தல் மிக முக்கியமான ஒன்று. அதிகாரபூரவமற்று செயல்பட்டுக் கொண்டிருந்த இளைஞர் காங்கிரஸ் அமைப்பை வெளிப்படையாக களமிறக்க நேரம் பார்த்துக் கொண்டருந்தேன். இறுதிவரை அதற்கான வாய்ப்பு அமையவில்லை. சண்முகத்திற்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது அவருக்கு மிகப் பெரிய பின்னடைவு அரசியல் ரீதியாக தற்கொலை. கட்சித் தலைவராக அவர் எல்லா வாய்ப்புகளையும் கொண்டு முட்டி மோதிக் கொண்டிருந்தார். முதல் முறையாக அனைத்து உப அமைப்புகளும் அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என ஏக மனதான தீர்மாணம் நிறைவேற்றியிருந்தன. சண்முகம் மிகவும் பலவீனமடைந்திருந்ததை அது வெளிப்படுத்தியது. கட்சி சார்பாக பிறருக்கு வாய்ப்பளிப்பவரை மறுத்து அவரது அரசியலில் அவரை முட்டு சந்தில் கொண்டு நிறுத்திவிட்டது. அவர் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேறுவது மட்டுமே அன்று அவர் செய்யக்கூடுவது. கட்சி தலைவராக  அந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு சில நாட்கள் பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து பின்னர் நாங்கள் திரளாக அவரிடம் சென்று பேசி சமாதானமடைந்தது எல்லாம் பிறகு நிகழ்ந்தது


வேட்பாளராக சண்முகம் மேலிடத்தால் மறுக்கப்பட்டது எனக்குள் உஷ்ண் அலையை கிளப்பியது. அதிகாலை அவரை சென்று சந்திக்கும் வரை என்னிடம் எந்த திட்டமும் இல்லை. ஆனால் எதிர்ப்பை மிகத் தீவிரமாக பதிவு செய்ய நினைத்தேன். அவரை சந்தித்த போதும் பெரிதாக எதுவும் பேசி விரும்பவில்லை. “செத்தவரிடம் என்ன துக்க விசாரிப்புஎன்பது போல பட்டது. செய்தி அறிந்து மெல்ல எனது நண்பர்கள் கூடத் துவங்கினர். காலை பத்து மணிக்கெல்லாம் முழு அமைப்பு கூடிவிட்டது. மெல்ல தீவிர எண்ணம் வெளிப்பட , நான் மூத்த தலைவர்களுக்கு முன் கட்சி மேலிடத்திற்கு எங்கள் எதிர்ப்பை காட்ட அவர்கள் அனைவரையும் புறக்கணைக்க முடிவு செய்தேன். எங்கிருந்தோ கொண்டு வரப்பட்ட பூட்டும் சங்கிலியையும் கொணடு அவரது வீட்டி நுழைவாயில் இரும்பு கிராதிக் கதவு இழுத்து பூட்டப்பட்டது. யாரை உள்ளே விட வேண்டும் எனகிற அதகாரம் மெல்ல என் கைகளில் வந்தது. காலை 9:30 மணி அதற்குள் 600 பேருக்கு மேல் கூடிவிட்டார்கள். கூட்டம் கட்சி மேலிடத்திற்கு எதிராக கோஷமிட ஆரம்பித்ததும் சண்முகம் பதற ஆரம்பித்தார் . பல வகையில் வெளிய வர முயறசித்தவரை எனது நண்பர்கள் கடைசீவரை விட வில்லை. கம்பி கதவிற்கு உள் பக்கம் நின்று கொண்டு உரத்த குரலில் என்னை எச்சரித்தார். நாங்கள் எதுவும் கேட்பதாக இல்லை. ஒரு கூட்டம் மரைக்காயரை காட்டமாக எதிர்த்து கோஷமிட ஆரம்பித்தது. பின்னர் அது மெல்ல நாராயணசாமிக்கு எதிர்பான அலையாக மாறத் துவங்கியது. துவக்கத்தில் நான் அதை இயல்பாக எடுத்துக் கொண்டேன். பலர் கூடிய இடத்தில் ஆரம்பத்தில் அதன் மீதிருக்கும் கட்டுப்பாடு நேரம் கடக்க கடக்க மெல்ல இழந்து போவதையும் புரிந்து கொள்ளக் கூடியது. உணர்ச்சி மயமாக சிலர் அதன் தீவிரத்தை உயர்த்தும் போது அதை தடுப்பது முட்டாள்தனமானது. அது நமக்கு எதிராக திரும்பிவிடும். கொண்டாட்ட மனநிலைக்கு வந்து அதில் திளைக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டு அவிழ்ந்து போகும் மீறல் அனைவரையும் களிவெறி கொள்ளச் செய்யும். தன்னிலை மறந்தநிலை புத்திபூர்வமான எதுவும் அதன் முன் எடுபடாது. நான் அதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த நினைத்து செய்த சில முயற்சிகள் பலனளிக்கவில்லை. அந்த தீவிரத்தை நான் ஓரளவிற்கு தேவை என நினைத்தேன். உடன் இருந்த நண்பர்கள் சண்முகம் இல்லத்தில் நாராயணசாமிக்கு எதிர்பான குரல் எழுவது நடந்தாக வேண்டும்.இருவருக்குமான பிளவை சில மாதங்களுக்கு முன்பாக நாராயணசாமி வெளிப்படுத்த துவக்கி இருந்தார். நாராயணசாமி அங்கு திடீரென வந்த து மொத்த கூட்டத்தையும் வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதன் பின் அங்கு வரும்பத் தகாத நிகழ்வுகள் நிகழ்ந்தது.

புதன், 28 டிசம்பர், 2022

மணிவிழா - 42

 


ஶ்ரீ:


மணிவிழா - 42


28.12.2022





மரணம் என்பது முழு முதல் இறை நம்மீது கொண்டுள்ள கருணை என பல சமயங்களில் தோன்றும் இடங்களை உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள். ஏன் இருக்கிறோம் என்கிற கேள்வியுடன் உலாவிக் கொண்டிருப்பவர்கள். அனைவரும் தொன்னூறு வயதை கடந்து இங்கு ஆற்ற ஒன்று மில்லாதவர்கள். அவர்களை குறித்து என் தந்தைஎமன் பட்டியலில் விடுபட்டு போனவர்கள்என வேடிக்கையாக சொல்லுவதுண்டு. இயற்கையின் முன் மனித முயற்சிகள் பலன் அற்றவை. வெற்றி தோல்விகளுக்கு பின்னால் நிஜமான காரணத்தை ஒரு வாழ்நாளில் புரிந்து கொள்ள முடியாது. அதற்கு அவரவர் கொடுக்கும் காரணங்களும் அகண்ட காலத்தால் ஒரு உறவும் இல்லாதிருக்கலாம் ஆனால் செய்ய வேண்டியவை என நம் முன் வந்து ஒன்று நிற்கும் போது அதை செய்யாமல் கடந்து போவது என்னால் இயல்வதில்லை


ஆடிட்டர் கணேசன் ஒரு புலராத அதிகாலை கைநிறைய தாமரை மலர்களுடன் வீட்டிற்கு வந்திருந்தார். புதுவை கம்யூனிஸ்ட் கட்சி பெருந்தலைவராக இருந்த சுப்பையா அவர்களின் வீட்டிற்கு மிக அருகில் என் வீடு. அவரது வீட்டிற்கு வந்தவர், அரசாங்க பொறுப்பில் இருந்த வீடு அந்த வேளையில் திறக்கப்படாததால் அருகில் இருக்கும் என் நினைவு ஆடிட்டர் கணேசனுக்கு வந்திருக்க வேண்டும் . புதுவை கம்யூனிட் தலைவர் மன்மறைந்த சுப்பையா அவரின் மிக நெருங்கிய நண்பர். இருவருக்கும் இடையே அது ஒருவகை விந்தையான உறவு. இருவரும் நேர் எதிர் களத்தை சேர்ந்தவர்கள். அவரது தொழில் மிக பெரிய வெற்றியை அடைந்ததற்கு அது போன்றவை முக்கிய காரணிகளாக இருக்கலாம். அவருக்கு அரசு தொடங்கி பல முணைகளில் நண்பர்கள் இருந்தனர். அவர்களை இணைக்கும் சரடுகளை மிக சரியாக நிர்வகிக்க தெரிந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் அவரை ஒருவிதவிட்டேந்திமனநிலை கொண்டவராக அறிகிறேன். திருவண்ணாமலை யோகி ராம்சுரத் குமாரின் அணுக்கர். அவரின் மறைவிற்கு பிறகு கிருஷ்ணபிரேமிக்கு நெருக்கமானார். காஞ்சி மடத்தில் அவரின் செல்வாக்கு அபரிதமானது. சிலருக்கு தொழில், குடும்பம் அல்லது மனம் சார்ந்த நெருக்கடிகள் உருவாகும் போது விடுவித்துக் கொள்ள தங்கள் தலையை கொண்டு வைக்க ஒரு இடமும் தேவையாகிறது . திருவண்ணாமலை யோகி ராம்சுரத் குமார் சமாதியான பிறகு கிருஷ்ணபிரேமியிடம் நெருக்கமாக இருந்தாலும் என்ன காரணத்தினாலோ அவர் கிருஷ்ணபிரேமியுடன் ஒன்றி இருக்க இயலவில்லை. கிருஷ்ண பிரேமி ஒரு முணையில் அவரை போன்றவர். எதிலும் தன்னால் ஒட்டி இல்லாதபடி பார்த்துகொள்பவர்.  


ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழுவில் அவர் இணைந்த போது அதன் கதவுகள் மிக விரிந்து திறந்து கொண்டது. அவரது ஆதரவு பல தளங்களில் செயல்படும் வல்லமையை விழாக் குழுவிற்கு வழங்கியதுஅதிகாலையில் எதிர்பாராத அந்த சந்திப்பு எனக்கு மிகுந்த திகைப்பை கொடுந்திருந்தாலும் கைகளில் நூற்றுக் கணக்கான தாமரை மலர்களுடன் அவரை பார்ப்பது மனதிற்கு மிக நிறைவாக இருந்ததுஉங்க வீட்டு ராமர் நினைவிற்கு வந்தார். அவருக்கு இருக்கட்டும் என தாமரையை கொண்டு வந்தேன். இன்று முழுவதும் இங்கிருந்து கொண்டு ராம நாம சொல்லுவதாக இருக்கிறேன். உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையேஎன்றார். நாள் முழுக்க இங்கிருக்க போகிறாரா? என திகிலாக இருந்தது. வயதானவர்களின் கிறுக்கு கணிக்க முடியாதது. அவர்கள் செல்வாக்கும் உள்ளவர்களாக இருந்துவிட்டால் சிக்கல் பல மடங்கு. என்னிடம் எந்த பதிலையும் எதிர் நோக்காது ராமர் படத்திற்கு எதிரில் உள்ள மர மேடையில் அத்தனை பூக்களையும் வைத்து விட்டு உரத்த குரலில் ராம நாமத்தை சொல்ல ஆரம்பித்தார். நான் குளித்து முடித்து எனது பூஜையை துவங்கினேன்


எனது வழக்கமான காலை பூஜை சுமார் இரண்டு மணி நேரம். பூஜை அறையில் பிரபந்தம் அல்லது கிருஷ்ணபிரேமி ஸ்வாமியின் பாகவத பராயணம் ஒலித்துக் கொண்டிருக்கும். அனைத்தையும் தாண்டி ஆடிட்டரின் ராம நாமம் கேட்டுக் கொண்டிருந்தது. முந்தய நாள் ஏகாதசி. நான் விரதம் இருப்பதில்லை. இருந்தாலும் தூவாதசி பாரணை உண்டு. பூஜை முடித்து காலை சாதம் வாழைப்பூ கூட்டுடன் மிக எளிமையான உணவு. பிராமனான அவர் இங்கு சாப்பிடுவாரா? என சந்தேகம். பின்னர் உணவருந்துவதும் மறுப்பதும் அவர் விருப்பம் என அவரை சாப்பிட அழைத்தேன். மிகுந்த மகிழ்வுடன் உணவருந்தினார். ரசித்து உணவருந்தியது மனதிற்கு நிறைவாக இருந்தது


சாப்பிட்டு முடிந்ததும் அவர் என்னிடம்இன்று நான் சந்யாசம் வாங்கிக் கொள்ள முடிவெடுத்திருக்கிறேன். உங்களிடம் சொல்லி செல்ல வந்தேன் என்றார். எனக்கு பேச்செழவில்லை. நான் எங்கு யாரிடம் என்கிற கேள்வியை கேட்க நினைத்தாலும் கேட்கவில்லை.அன்று முழுவதும் இங்கிருக்கப் போவதாக சொன்னவர். என்ன நினைத்துக் கொண்டார் என தெரியவில்லை. சட்டெனஎனக்கு விடை கொடுங்கள்என்று சொல்லி சென்றார். பிறகு ஆறு மாத காலம் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. நான் விழா குழு ஆரம்ப கட்ட வேலைகளில் அவரை மறந்து போனேன. ஒரு நாள் அறிமுகமில்லாத அலைபேசி அழைப்பு. எடுத்தேன். ஆடிட்டர் கணேசன். நலம் பற்றிய விசாரிப்பு. பின்னர் மெல்ல எங்கிருக்கிறீர்கள் என தயங்கி கேட்டதற்கு. திருபுவணையில் உள்ள அவரது தொழிற்சாலையில் இருப்பதாக சொன்னார். எனக்கு புரியவில்லை. பேரன் உடல் நலமில்லாததால் அந்த தொழிற்சாலை நிர்வாகத்தை பார்க்கும் படி ஆனது என்றார். துறவறம் என்னவாயிற்று என நான் கேட்கவில்லை.


சனி, 24 டிசம்பர், 2022

மணிவிழா - 41

 




ஶ்ரீ:


மணிவிழா - 41


24.12.2022







ஆயிரம் ஆண்டு கொண்டாட்டமாக நிகழும் போது அதில் பொதுமக்கள் லட்சம் பேர் பங்கு கொள்ளும் விழாவாக இருக்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கிய பயணமாக அதை நினைத்தேன். அனைத்து திட்ட வரைவுகளும் அதை ஒட்டியே வடிவமைக்கப் பட்டிருந்தன. அதற்கு தடையாக நினைத்த அத்தனையும் களையப்பட்டன. அதை ஒட்டி எழும் அலரை எதிர் கொள்ள தயாராக இருந்தேன். அது எனது எல்லைக்கு உட்பட்டது என்பதாக எனது எண்ணமாக இருந்தது. ஆனால் விழா குழு துவக்க விழா பிரதான பங்கேற்பாளரான வேளுக்குடி ஸ்வாமி புதுவை வந்து இறங்கிய நொடி அதற்கு என்னிடம் எதிர்வினை ஆற்றுவார் என நான் ஊகித்திருக்கவில்லை


மக்களுக்கு மத்தியில் ஒரு பெரு விழவை கொண்டு செல்ல இயலவில்லை என்றால் இந்த இயக்கத்தினால் ஆவது ஒன்றில்லை. எல்லோரும் நினைத்தது போல பொருளியல் பலத்தை இலக்காக வைத்து இதை உருவாக்க நினைக்கவில்லை. ஆனால் பொருளாதார பலமில்லாமல் எதுவும் நீண்ட காலம் திகழ முடியாது. அதே சமயம் திரளான பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமலும் ஒரு பெரிய விழா வெற்றியடைந்ததாக கருத முடியது. அதற்கான பொருளியல் குறித்த திட்டத்தை யாரிடமும் முன்வைக்க முடியவில்லை. திருப்பதி பெருமாள் திருக்கல்யாண உற்சவம் புதுவையில் மிக பிரமாண்டமாக சில வருடங்களுக்கு ஒரு முறை முன்னெடுக்கப் படுகிறது. அதில் புதுவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வந்து குவிகிறார்கள். எண்ணிக்கை இருபத்து ஐயாயிரத்தை கடந்து விடும். இலவச பேருந்து வசதிகள் செய்து அந்த இலக்கை அடைகிறார்கள். எனக்கு நம்பிக்கை தரும் நிகழ்வாக அதை பார்த்தேன். அதன் மிகப் பெரிய வெற்றிக்கு நான் கருதிய இரண்டு காரணிகள் அங்கு மிகச் சரியாக அமைந்திருந்தது. சிறந்த நிர்வாகத்தை தரக்கூடியவர்கள் அதில் இருந்தனர். அவர்கள் பொருளியல் பலமும் கொண்டிருந்தனர். தனிப்பட்ட பொருளியல் பலமல்லாத சிலரும் கூட அதை திரட்டத் தரும் வல்லமை பெற்றவர்களாக இருந்தனர்


அதை முன் மாதிரியாக எடுத்து நான் புதுவையில் இரண்டு பெரிய நிகழ்வுகளை திட்டமிட்டிருந்தேன். ஒன்று  மாபெரும் யக்ஞ வேள்வி. அது எனக்கு இரண்டு வித பலனை கொடுக்கும் ஒன்று பொருளியல் இரண்டு முக்கிய ஆளுமைகளின் பங்கு அவர்கள் வழியாக நிகழும் பொது ஜெனத் தொடர்பு. இரண்டாவது அதன் பிரமாண்டம் மீள மீள நிறுவப்படும். இரண்டாவது பெரிய மற்றும் விழாக் குழுவின் நிறைவு நிகழ்வு. அது அனைத்து வைணவ மற்றும் பிற சம்பிரதாய மடாதிபதிகள் மாநாடு. அதில் பாரதப் பிரதமரை கலந்து கொள்ள அழைக்கும் முயற்சிகள் நடை பெறத் துவங்கி இருந்தது. பிரதமர் அந்த சூழலில் கலந்து கொண்மிருந்தால் தென்னிந்தியாவில் அவர் கலந்து கொள்ளம் முதல் விழாக அது இருந்திருக்கும். பிரதமர் பங்கேற்கும் அகில இந்திய மடாதிபதிகள் பஙகேற்கும் மாநாட்டில் இந்து அறநிலையத் துறையின் கோவிலின் ஆகம மீறல் மற்றும் நிர்வாக முற்றதிகாரத்தை மறு வரைமுறை படுத்தும் தீர்மானம் ஒன்று அந்த மாநாட்டில் கொண்டு வர திட்டமிட்டிருந்தேன்


புதுவையில் அப்போது ரங்கசாமி முதல்வராக இருந்தார். அவரிடம் அந்த தீர்மானத்தின் நகலை கொடுக்க முடியும். அவரிடம் அது குறித்து பேசி போது தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தார். தீர்மானம் ஏற்கப்பட்டு ஒரு மாநிலத்தில் செயல்முறை படுத்தப்பட்டால் அது அகில இந்திய கவனத்தை பெற்றிருக்கும். அதை ஒட்டி அரசின் கோவில் நிலைப்பாடு குறித்து அந்த அகில இந்திய மாநாட்டில் சில் முக்கிய தீர்மானங்களை அரசிற்கு அளிக்கும் நிகழ்வை ஒருங்கிணைக்க திட்டிமிட்டிருந்தேன். அதுவரை இருந்த தயக்கம் விலகி பெரும் இயக்கமாக அதை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையை அவர்தான் முதலில் ஏற்படுத்தினார். ஆடிட்டர் கணேசன் எண்பது வயதை கடந்தவர். பிராமனர். புதுவையில் மிகுந்த செல்வாக்குள்ளவர்களில் முதன்மையானவர். சிலர் ஒரு இயக்கத்திற்குள் இருப்பது அதன் உயர்வை சொல்வது. பிறர் அதில் வந்திணைய வேண்டும் என்கிற உந்துதலை கொடுப்பது


அவர் கணேசன் & கோ என்கிற பிரபல ஆடிட் நிறுவனத்தின் ஸ்தாபகர் . புதுவையின் அத்தனை பெரிய வியாபார நிறுவனங்களின் கணக்கையும் அவரின் நிறுவனம் தான் தணிக்கை செய்கிறது. அந்த நிறுவனம் ஒரு குடும்ப அமைப்பு. அதன் பங்குதாரர்கள் அவரின் உடன் பிறந்தவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள், மருமகன்கள். அவர்களுள் பிரதானம் அவரது தம்பிரகுஅந்த நிறுவனத்தின் முகம் போன்றிருந்தவர் . பல அமைப்புகளின் உறுப்பினர். அவரது வழியாக அந்த நிறுவனம் அசுர வளர்ச்சியடைந்தது. கணேசனும் ரகுவும் நிறுவனத்தின் அகமும் புறமும் போல. கணேசன் ஆரம்பம் முதலே உலகியலுக்கு வெளியில் நிற்பவராக தோன்றியதால் அவருடன் உரையாடுவது எளிதல்ல. ரகு மிக இயல்பானவர். அரிமா சங்கம் போன்ற பல சமூக இயக்கதில் தீவிர பங்கு கொண்டதால் அனைவருக்கும் இனியவர். உரையாடலுக்கு எளிவர். அது ஒரு நிறுவனம் வெற்றி கொள்ள தேவையானஇருவித முகங்கள்”. ஒரு நிர்வாகத்திற்கு மிக முக்கியமானதாக நினைக்கிறேன்.


முக்கிய முடிவெடுக்கும் சமரசமில்லாதகறார்முகமும் அதை வெற்றிகரமாக செயல் படுத்தும் பிறிதொருஇனியமுகமுமாக இருந்தனர். “ரகுவின் திடீர் மறைவு கணேசனை நிலைகுலைய செய்து விட்டது. துவக்கம் முதலே உலகியலுக்கும் விரக்திக்குமான நிலைக்களுக்கு இடையே ஊடாடிக் கொண்டிருந்தார்


வயோதிகத்தை சரியாக திட்டமிடாதவர்களின் வாழ்கை தனக்கும் பிறருக்குமான வதை. அவர்களில் இரண்டு வகையானவர்களை சந்தித்திருக்கிறேன்முதல் வகை ஆயுள் நீடிப்பால் கிடைத்த காலத்தை வைத்து என்ன செய்வது என தெரியாது திகைத்தவர்கள். அன்றாடங்களுக்கும் விரக்திக்கும் இடையே இருபவர்கள். இரண்டாவது வகை ஆயுள் நீட்டிப்பை கொண்டாடுபவர்கள். புதிதாக பிறந்தவர்கள் போல நடந்து கொள்வார்கள். அனைத்திலும் தேவையற்று நுழைத்து கருத்து சொல்வார்கள். மரபைப் பற்றயோ நவீனம் பற்றிய புரிதலோ இருப்பதில்லை. இதில் கணேசன் முதல் வகையை சேர்ந்தவர்


புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 73 அழைப்பிதழ்