https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 22 டிசம்பர், 2022

அடையாளமாதல் * காலமில்லை *

 


ஶ்ரீ:



பதிவு : 654  / 844 / தேதி 22 டிசம்பர்  2022



* காலமில்லை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 49 .




அதிகாலை செய்தி சூர்யநாராயணனிடம் இருந்து . அவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு சொன்னது 1999 தேர்தலில் சண்முகத்திற்கு சீட் மறுக்கப்பட்டு மரைக்காயர் தேர்வாகி இருப்பதாக . அது மாதிரி ஒன்றை ஊகித்திருந்தேன். சீட் விஷயமாக தில்லியில் சண்முகம் தங்கி இருந்தவரை அழைத்து வரச் சென்னை சென்றபோது நிகழ்ந்த விபத்து அப்போதே ஒரு துர்நிமித்தமாகப் பட்டது.ஜெயலலிதா கும்பகோணம், நாகப்பட்டினம் தேர்தல் பிரசாரத்தில் காரைக்கால் தாண்டி சீர்காழி செல்ல வேண்டி இருந்ததால் அவரின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சண்முகத்தை தொடர்பு கொண்டு காரைகால் பிரசாரத்திற்கு ஜெயலலிதாவுடன் வர இயலுமாக என கேட்டுக் கொண்டார். புதுவை சுற்றுப்பயண திட்டத்தை பிறதொரு தேதி வைத்துக்கொள்ளலாம் என அவருக்கு சொல்லப்பட்டது. காங்கிரஸில் அதுவரை தனது வேட்பாளர் தெரிவு செய்யப்படவில்லை. மேலும் கட்சித் தலைவராக சோனியா காந்தி புதிதாக பொறுப்பில் வந்திருந்தார். அரசியல் தலைமை பொறுப்பிற்கு புதியவர் என்பதால் தங்களை அரசியல் வித்தகர்களாக அவர் முன் திரள வேண்டுய கட்டாயம் பலருக்கு. அது வழக்கமான குழப்பத்தை நீண்ட இழுபறியாக மாற்றி இம்முறை மேலும் மேலுமென நீடித்தது. காரைக்கால் சுற்றுப் பயணத்தை தவிற்து ஜெயலலிதா தனது பயணத்தை முடித்துவிட்டு போன பிறகு மீண்டும் இன்னொரு நாள் காரைக்காலுக்கு அழைத்து வர முடியாது என்கிற சூழல். காரைக்கால் ஆறு சட்டமன்றத் தொகுதியை கொண்டது. மேலும் அது தமிழக தேர்தல் பாணி மனச் சாய்வு கொண்டது. தமிழகத்தில் அடித்த அதே அதிமுக அலை காரைக்காலிலும் வீசிக் கொண்டிருந்தது. காரைக்காலின் அதன் புதுவை சட்டமன்றத்தில் 25% பங்கை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது . புதுவையில் ஒரு சட்டமன்ற உறுப்பினரே சில சமயம் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற நிர்ணயம் செய்யும் வல்லமை கொண்டவராக இருந்து விடுவதுண்டு . வாய்ப்பை இழக்காமல் சண்முகம் வேட்பாளராக இல்லாமல் கட்சித் தலைவராக ஜெயலலிதாவுடன் பிரச்சாரப் பயணம் செல்ல முடிவெடுத்தார்.


அன்று மதியம் தில்லயில் இருந்து என்னை தொடர்பு கொண்டு தான் இரவு சென்னை விமானநிலையம் வருவதாக சொன்னார். நான் எனது காரில் அவரை அழைக்க சென்னை கிளம்பினேன். எதிர்பாராமல் கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் அருகே சாலையில் குறுக்கே வந்த சைக்கிளில் மோதி எனது கார் விபத்துக்குள்ளானது. நல்லவேலையாக சைகிளில் வந்தவருக்கு பெரிய அடி ஒன்றுமில்லை. ஆனால் கார் கண்ணாடி சிலந்தி வலைப் போல சிதறி முழுவதுமாக விரிசல் விட்டிருந்தது . தொடர்ந்து ஓட்டுவது இயலாது. அடிபட்டவருக்கு மருத்துவ உதவி மற்றும் காவல்துறையில் இருந்து விபத்து பற்றிய குறிப்பு ஆகியவற்றை பெற்றுக் கொண்டு மகாபலிபுரம் நோக்கி பயணத்தை தொடர்ந்தேன். இடையில் மூன்று மணி நேரம் கடந்துவிட்டிருந்தது. வழி முழுவதும் கண்ணாடி உடைந்த சம்பவத்தை துர்நிமித்தம் என மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. எனக்கு அந்த தேர்தலில் சண்முகத்திற்கு வாய்ப்பு கிடைக்க வேண்டியது முக்கியமானது. அதற்கு பின்னால் எனது அரசியல் திட்டங்கள் மிக விரிவானவை.

நான் என்னை ஒரு போதும் அமைப்பின் மையத்தில் வைத்துக் கொள்ளவதில்லை . மையத்தை வலுப்படுத்துவதன் வழியாக ஓர் அமைப்பை உறுதியாக நிலைநாட்டமுடியும் என்று நம்பிக்கைகள் எனக்கில்லை . அனைவரையும் இணைக்கும் வல்லமை அதன் வலுவாக இருக்கவேண்டும் என்றால் அதன் அத்தனை உறுப்புகளும் சுதந்திரமாக செயல்படுவதை அனுமதிக்க வேண்டும் என நினைத்தேன். மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை என்னால் மாற்றிருக்க முடியுமானால் தொகுதி அமைப்பற்றியும் அது செயல்பட வேண்டிய விதம் பற்றி எனது எண்ணத்தை மாற்றிக் நான் கொண்டிருக்கலாம். அப்போது அவர்களை நிர்வகிக்க மாநில தலைவர்களே எனக்கு போதுமானவர்களாக இருந்திருப்பார்கள் . அது ஒரு இடைவெளியை உருவாக்கி கொடுத்திருக்கும் . அந்த இடைவெளி அனைத்தையும் மிகச் சரியானதாக அனைவரையும் அவரவர் இடத்தில் வைத்திருக்கலாம் . மாநில அமைப்பு நிர்வாகிகளிடம் நான் தொடர்ந்து நிகழ்த்திய உரையாடல் எடுபடவேயில்லை. ஒவ்வொரு முறையும் அவர்கள் நான் பலவீனமடைந்திருப்பதாக கற்பனை செய்து கொண்டு என்னை நிராகரித்தனர்இப்போது இயந்து இணக்கமாக செயல்படாது போனால் நமக்கான எதிர்காலம் இல்லை என்கிற ஒன்றை அவர்கள் புரிந்து கொள்ள முயலவில்லை. காரணம் அரசியல் குறித்த எந்த கருத்துருவும் அவர்களிடம் இல்லை. அவர்கள் தங்கள் தலைவர்களை திருப்தி படுத்தும் எளிய தொண்டர்களாக அவர்கள் கொடுக்கும் பதவிக்காக இடத்திற்காக காத்துக் கிடந்தனர். சிலர் தங்களுக்கான இடம் உருவாகாது என தெரிந்து கொண்டு காழ்பினால் என் பாதையில் தொடர்ந்து தடைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அது அரசியலில் அங்கீகரிகப்பட்ட குறைந்தபட்ச விளையாட்டு. துரதிஷ்டவசமாக அவர்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்தவர்களுக்கு சில தெளிவான கணக்குகள் இருந்தன. அவர்கள் சொல்லுவதை அல்லது சொல்ல விரும்புவதை அவர்கள் சொல்லுக்கு முன்பாக செய்து முடிக்க முண்டியடித்தனர் . அதை கடந்து அரசியலை பற்றி எந்த கனவு இல்லதது அதற்கு முதன்மையான காரணமாக இருந்திருக்க வேண்டும். காலம் கடந்து கொண்டிருந்தது அவர்களிடம் மன்றாடுவதில் எந்த பயனும் இல்லை என்பது திட்டவட்டமான் போது நான் அந்த அபாயகரமான அடுத்த நகர்வை திட்டமிட்டேன். அது முற்றாக மாநில நிர்வாகிகளை நிராகரித்து தொகுதி தலைவர்களை உருவாக்கி முன்நிறுத்துவது. அதற்கு எந்த கேள்வியையும் எழுப்பாத தேர்தல் அவசரம் மிகச் சிறந்த வாய்ப்பு.

மகாபலிபுரத்தில் இந்த இரவு திறந்திருந்த ஒரு ஒர்க்‌ஷாப்பில் உடைந்த கண்ணாடியை முழுவதுமாக கழற்றிவிட்டு பயணத்தை தொடர்ந்தேன். காரின் முன் கண்ணாடி இல்லாமையால் மொத்த கடற்கரை காற்றும் வண்டிக்குள் புகுந்து பீறிட்டு வெளியேறிக் கொண்டிருந்தது. கண்ணாடி துகள் கண்களைத் தாக்கும் அச்சத்தினால் நான் கண்ணடி அணிந்து கொண்டேன். இரவு பத்து மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைந்த போது மாறன் அங்கு என்னைக் காத்து நின்றிருந்தான். காரை  அதன் நிறுத்துமிடத்தில் இருக்க சொல்லிவிட்டு விமான நிலைய நுழைவுவில் நின்றிருந்த மாறனை பார்த்து கையசைத்தேன். விபத்தில் சிக்கி காரின் கண்ணாடி உடைந்த சேதியை சொல்லவில்லை. தலைவர் கேட்டால் அதை சொல்லலாம் என நினைத்தேன். அவரும் அதை துர்நிமித்தமாக அவர்கள் நினைக்கக்கூடும். எப்படியும் தெரிந்து போகும் கேட்ட பிறகு சொல்லலாம் என நினைத்தேன். பதினோறு மணிக்கு சண்முகம் வந்தார் அப்போதெல்லாம் விமான நிலையத்தின் உள்ள சென்று அழைத்து வரலாம். நான் தலைவரிடம் இரவு உணவு பற்றி கேட்டேன். விமானத்தில் சாப்பிட்டதே போதும் என்று சொல்லிவிட்டார். வழக்கம் போல முன் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டவரை தடுக்க மனமில்லாமல் விட்டு விட்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...