https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 5 டிசம்பர், 2022

அடையாளமாதல் * விபரீத மாற்று சிந்தனை *

 


ஶ்ரீ:



பதிவு : 651  / 841 / தேதி 05 டிசம்பர்  2022



* விபரீத மாற்று சிந்தனை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 46 .




அரசியலில் சுற்றி எதிர்மறையாக நிகழ்வன அனைத்தும் உணர்வுகளாக உருமாறி மோதி மனதை கொந்தளிக்கச் செய்கின்றன, அவற்றில் இருந்து விடுபட அவை அனைத்தையும் தகவல்களாக மாற்றி மனதில் பதிந்து கொள்ள மிக நுண்ணிய அவதானிப்பு அவசியமாகிறது . அந்த நிகழ்வுகள் பின்னர் நினைவுகூரப்படுகையில் கூட அவை தகவலாக மட்டும் ஆழ்மனத்தில் இருந்து செயல்பாட்டு மனதில் கொண்டு வந்து வைக்கப்படுகிறது . அப்போது யார் யார் அன்று எப்படியெல்லாம் விணையாற்றினார்கள் என்பது கூட உணர்வு கழிக்கப்பட்டே  வெளிப்படுகிறது. அது கொடுக்கும் விடுதலை அளப்பரியது. கூர் மதியால் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைப்பதை மிகத் திறமையாக செய்யத் தூண்டுவது . பின் அவை விளையாட்டு காய்களைப் போல முன்னும் பின்னும் நகர்த்தக் கூடியதாக மாறிவிடுகிறது. உணர்வுகள் அங்கு எழுவதில்லை.புதுவை அரசியல் வரலாற்று தருணங்களை ஒரு கற்றலைப் போல இதில் தொகுத்துக் கொள்கிறேன் எனக்கு அரசியல்  குரு அதை எனக்கு கற்பித்தார். இதில் வேடிக்கை அது அவருக்கு பலமுறை கைவந்த கலையாக இருந்தாலும் ஊழினால்  உரிய நேரத்தில் கைவராது போனதை பார்த்து திகைத்திருக்கிறேன். அவை பல தலைவர்களின் ஏற்பும் மறுப்புமான உள முரணியக்கத்தால் உருவாகி நிலைபெறுவது. இவை உறுதியானது அதே சமயம் உறுதிப்படாததும் கூட. அவற்றை உறுதித்தன்மை அதன் நிலையாமை பற்றியாதாக இருந்தது. இதில் உரையாடும் அனைவரும் அது பற்றிய தகவல்களை சொல்லியிருந்தாலும் ஒரு வேதியில் ரசாயன மாற்றத்திற்கு அதை வைத்திருக்கும் பாத்திரம் ஒரு விணையாற்றுகிறது என்பது இன்னும் நுட்பபான புரிதல். அது மனித மனம் மிக விந்தையாக செயல்படுவதை குறித்து. திறமையால் அதை அனுமானிக்க வேண்டியிருக்கிறது . ஆனால் அது உறுப்படாத தகவல்கள் போல பார்க்கப் படுபவை . என்னிடம் அதன் வரலாற்றுப் பூர்வ பின்னணிகளை விவாதிக்கும் போது நான் அதன்கான உறுதியான தகவல்களை விவாதிப்பதில்லை


விலக்கி வைக்கப்பட வேண்டிய வில்லங்கத்தை இப்போது விலக்குவது பெரும் தவறாகக் கூடியது என பல முறை முயன்று அவனுக்கு அதை புரியவைக்க முயன்று முடியவில்லை. அதை ஏன் நான் மாறனிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்கிற வெறுப்பு ஏற்பட்டாலும் , இன்று தலைவரை முடிவெடுக்க வைக்கும் விசை கரூர் பாஸ்கர் அவரின் பின்னால் மாறன் இருக்கிறான். இந்த கருத்து ஒரு போதும் அரசியல் பொதுவெளியில் விவாதிக்கும் இடத்தை இழந்திருந்தது முக்கியமான காரணம் அரசியலில் சிந்திப்பது பலவகையில் மீபொருண்மை கொள்கைக்கு ஒப்பானது. கற்பனையால் அதன் அத்தனை சாத்தியங்களையும் விரித்தெடுத்துக் கொள்ள முடியும். நான் அதை விருப்பு வெறுப்பில்லாமல் செய்ய முயலுவேன். பிறருக்கு அதற்கு நிரூபனவாதம் போல ஒன்றை ஒரு போதும் முன்வைக்க முடியாது . எனது பல ஊகங்களும் கற்பனைகளும் காலத்தில் உண்மையானதை பார்த்திருக்கிறேன். அதில் நமது இடம் பிற மானுட உளவியல் குறித்த புரிதல் மட்டுமே. அரசியல் களத்தில் உள்ள தலைவர்களின் உளவியல் அவரது இலக்கு , வாய்ப்பு தாங்குதிறன். விட்டுக்கொடுக்கும் புள்ளி, அனுசரித்து செல்லுதல், தலைமைப்பண்பை வெளிப்படுத்துதல் போன்ற பல காரணிகளை கொண்டது. தலைவரின் பெயரை சொல்லி அவரிடமிருந்து தனக்கான ஒப்புதல் இல்லாமல் அரசியலில் ஈடுபட்ட மாறன் தான் சிக்கும் இடம் குறித்த பதட்டம் காரணமாக விரைந்து தனது செயல்பாடுகளில் வழியாக லாபமடைந்த பிறகு வெளியேறும் அனைத்து வழிகளையும் திறந்து வைத்திருந்தான். அவனுடன் பொருந்தி செல்லாமயை உருவாக்கியது அவனது அந்த வெளியேறும் உக்தி. அவனது மொத்த அரசியலுமே அந்த ஒற்றை கதவை நோக்கி இருந்தது.அதற்கு இயந்து நான் எனது அரசியலை செய்ய இயலாது. அவனது ஒவ்வொரு முயற்சிக்கும் அதற்கு பின்னால் இருப்பதும் சொந்த லாபமாக மட்டுமே இருக்க முடியும். அது அரசியலில்  எதிர் மனநிலை கொண்ட ஆளுமை அதை எப்போதும் நான் தவிற்த்திருக்கிறேன்


அன்றைய முதல்வர் ஜானகிரமனுக்கு தூதுவர் போல இருந்தவர் தினசரி நாளிதழின் முக்கிய பொறுப்பாளர். கண்ணனுக்கும் பிற முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் நெருக்கமானவராக அறியப்பட்டவர் அல்லது அவர் அப்படிக் காட்டிக் கொண்டார். தனது இடத்தின் வசதியால் பதவியால் அவரால் ஒரு பேட்டி எடுப்பது போல் யாருடனும் தீவிர அரசியலுக்குள் சட்டென இறங்கி விவதிக்க முடியும். வெவ்வேறு தரப்பு தலைவர்களின் இடையேயான அவர்களின் சார்பு நிலை, பிறர் பற்றிய கசப்பு மற்றும் மந்திரிசபைக்குள் நிலவிய ஐயங்களை தீர்த்து வைக்க கூடியவராக இருந்தார். அரசியலில் ஐயங்களை ஒருபோதும் ஒப்பு நோக்க இயலாது. யாரிடம் என்ன தகவல் இழுக்கிறதோ அதிலிருந்து அடுத்து நிகழ்த்திக் கொள்ள வேண்டியதை முடிவு செய்வார்கள். அவற்றிலு் மிகப் பெரும்பாலும் பிறிர் வழியாக அறிந்து கொண்ட செய்திகள் பிரதானமாக இருக்கும். தகவல்களாக பறிமாறப்படுபவை யாரைப்பற்றியும் நல்ல செய்திகளாக இருக்காது. எதிர்மறை செய்திகளைப் போல சட்டென ஆர்வம் கொள்ள வைப்பது பிறதில்லை. அதுபிற்றி அணுக்கர்களிடம் பேசினால் இன்னும் பல்கிப் பெருகும். அந்த இடத்தை மிக கவனமாக தேர்ந்தெடுக்கும் சில அரசியல் தூதுவர்கள் அந்த சூட்டை தனிக்க முயல்வார்கள். நேர்மறை செய்தியாக சில பேசப்படும் போது அந்த சமரசப்புள்ளி தற்காலிகாமவது உருவாகிவிடும். பின் அது தொடர்ந்து நீடிக்கும் . அடுத்த சிக்கல் உருவாகும் வரை. சில மணிக்கணக்கில் காலாவதியாகிவிடுவதுண்டு .அவரை பார்த்து அதே பத்திரிக்கையில் வேறு சிலரும் அதே போல உருவெடுத்திருந்தனர். அவர்களில் ஒரு புகைப்படக்காரர்

அடைந்த உச்சம் அதை அவர் முன்னிறிருத்து பேசும் பாணி குமட்டலெடுக்க வைப்பது


அவர்கள் அரசிலுக்கு அப்பால் தங்கள் கற்பனைகளை  கொண்டு செல்பவர்கள் என்பதால். அனைத்து சிக்கலும் ஐயங்களும் ஒருவருக்கொருவர் இடையேயான முரண்பாடுகள் தீர்கப்படாமலேயே அவற்றை நீர்த்து போக செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் அவை சில குறுகிய கால லாப நோக்கோடு அடிப்படைக்கு எதிராக செயலபட தூண்டும் . அது சிலவற்றை சில காலம் நிறுத்தி வைக்கும். ஆனால் அதன் தேவை முடிந்து விசை வடிந்த பிறகு முன்பை விட பல மடங்கு வன்மத்துடன் அது மீண்டும் எழுந்து வருவதை பார்த்திருக்கிறேன். அத்தகைய போலி சமாதன முகவர்களால் ஆவதொன்றுமில்லை. அது அரசியலில் அதுவரை இல்லாத ஒரு தேக்க நிலையை புதுவை அரசியலில் உருவாக்கியது. அரசின் முக்கிய பதவிகளில்  இருக்கும் ஓரிவருக்கு  சாதகமாக இருந்திருக்க வேண்டும். அதை இணைத்து வைப்பதால் அந்தப, தினசரி பத்திரிக்கை நிர்வாகி தனிப்பட்ட முறையில் அல்லது வியாபார ரீதியாக லாபமடைந்திருக்கலாம்.


இந்தப் போலி முயற்சிகளை உண்மையான முயற்சிகளுடன் ஒப்பிடுவதென்பது அரசியலில் உள்ள மெய்யான முயற்சியையும் அர்ப்பணிப்பையும்  அவமதிப்பது. ரசனையை அவமதிப்பது. காலப்போக்கில் அதை அழிப்பது. இதில் குரூரமான ஒரு கறார்த் தன்மையுடன் மட்டுமே இருந்தாகவேண்டும். ஆனால் அவசர அரசியலில் அதை நிதானக்க நேரமில்லை. அங்கு துவங்கிய அரசியல் சிக்கல் பின்னாளில் அரசில் இருந்து வெளியேறி ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாகி பல புதிய தலைவர்கள் உருவாகி விட்டில் பூச்சிகளை போல அதே நெருப்பில் காணாமலாகி பல மூத்த தலைவர்கள் காலாவதியாக்கினார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...