https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 27 நவம்பர், 2018

அடையாளமாதல் 422 * உள்கை*


ஶ்ரீ:



பதிவு : 422 / 587 / தேதி 27 நவம்பர்    2018

* உள்கை


எழுச்சியின் விலை ” - 23
முரண்களின் தொகை -01 .





என்ன காரணத்தினாலோ நாராயணசாமியின் மீது எனக்கு ஒரு வித ஒவ்வாமை இருந்தது . தலைவருக்கும் அவருக்குமான முரண் அதில் எந்த பங்குமாற்றவில்லை. எனது முடிவுகள் எப்போதும் என்னுடன் நிகழ்வதை கொண்டே இருந்தருக்கிறது. பிறரின் அனுபவங்கள் அதில் சில மாற்றங்களை கொண்டுவரலாம். அடிப்படையை மாற்றுவதில்லை . அவர் தனது விழைவுகளை அடைவதற்கு எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற லௌகீகமான , லோகாயதமான கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவராக எனது மனம் மதிப்பிட்டிருந்ததால் என. மனதில் அவரை பற்றிய விலக்கம் இருந்தது.

1996 ல் ஆட்சியை இழந்த பிறகு ராஜ்யசபை தேர்தலில் போட்டியிடுவது தேவையற்ற சிக்கலை கொண்டுவரும் என தலைவர் கணித்திருந்தார். ஆனால் அதில் உறுதியாக நிற்க இயலாத இடத்திற்கு அவர் எப்போதோ வந்து சேர்ந்திருந்தார் . எல்லா தர்க்ககளையும் தகர்க்கும் எதிர்வாதம் எப்போதும் அவரிடம் உண்டு , அதை பலமுறை செய்து தான் நினைத்ததில் வெற்றியும் பெற்றிருக்கிறார். காலத்தினால் தனக்கு எதிராக தனது உள்ளமைப்பிற்குள் ஒன்று எழும் என அவர் எப்போதோ கணித்திருக்க வேண்டும் , இப்போது இந்த ராஜ்யசபை தேர்தல் மூலம்  அது எழ வாய்ப்பிருந்ததால் அதை தவிர்க்க நினைத்தார்

1986ல் நாரயணசாமி ராஜ்யசபை உறுப்பினாராக சென்றபோது சண்முகத்தின் வீழ்ச்சிக்கான விதை விழுந்தது என அவர் நினைத்திருக்க  வாய்பபில்லை. தில்லியின் சண்முகத்தின் முகமாக அவர் சிற்ப்பாக செயல்பட்டதாகவே நானும் நினைகிறேன் . ஒருவரின் தயவில் பதவிக்கு வந்த பிறிதொருவர் அவருக்கு கடன்பட்டவரே , ஆனால் அதற்கு ஒரு எல்லை இருந்திருக்க வேண்டும் . யாரும் யாருக்கும் எதையும் சாஸ்வதமாக கொடுப்பதோ , பெருவதோ நிகழ்வதில்லை . அந்த மாற்றத்தை துரோகம் என ஒற்றைபடையாக எடுத்துக் கொள்ள இயலாது
அரசியலில் பல காலம் நிகழ்ந்து வந்த கொள்வதும் , கொடுப்பதும் ஏதாவதொரு புள்ளியில் முரண்பட்டேயாகவேண்டும் . ஒருவரை பிறிதொருவர் சந்தேகிப்பது நடைமுறை யதார்த்தம். அதை கலைந்து கொள்ள இருவருக்குமான பலவித உரையாடல்கள் எப்போதும் நடந்தேறிய படி இருக்கும் . ஏதோ ஒருப் புள்ளியில் ஏற்படும்  கசப்பு ,அவர்கள் தங்களை எதிரெதிரே என நிறுத்தக் கொண்டிருக்க வேண்டும். அந்த இடத்தில் நீண்ட நெடுங்காலம் ஒருவர் பற்றிய பிறிதொருவரின் ஐயம் அனைத்தும் முழு உண்மையாகி விடுகிறது.

தலைவரின் தில்லியின்  குரலாக நாரயணசாமி இருந்தவரை தில்லியிலிருந்த தலைவரின்  தொடர்புகள் பலம் வாய்ந்தவை.புதிய தலைமுறை எழுச்சி அவரால் முன்போல நேரடியாக தொடர்பு கொள்ள முடியாதபடி பலத்தடைகள் உருவாகி வந்தன . மொழி அதில் பிரதானமாக இருந்தது. பழைய விசுவாசங்களுக்கு பெரிய மதிப்பில்லாத காலமாக காங்கிரஸ் மாறியிருந்தது . அதன தொடக்கம் ராஜீவ் காந்தியின் காலத்தில் கட்சிக்குள் நிகழ்ந்த மாற்றம் வேகமெடுத்த காலம். பல புதிய தலைவர்கள் எழுந்து வந்தார்கள் . ராஜ்யசபை நடவடிக்கைகளில் அன்று மூன்று சாமிகளின் பெயர் வராத நாளில்லை திமுக வின் கோபாலசாமி, சுப்ரமணியசாமி மற்றும் நாராயணசாமி.

இந்த சூழலில் நாராயணசாமியின் அபரிதமான வளர்ச்சி சண்முகத்திற்கு கலக்கத்தை உருவாக்கியிருந்தால் அதில் ஆச்சர்யமில்லை. மூன்று முறை தொடர்ச்சியாக ராஜ்யசபை உறுப்பினராக பதவி வகித்து நான்காவது முறை அதற்கு முயற்சித்த போதுதான் , அவர்களுக்குள் பனிப்போர் மூண்டது. இம்முறை நாராயணசாமிக்கு வாய்பளிக்க சண்முகம் விரும்பவில்லை . ஆனால் அவரின் கருத்துக்களின் அடிப்படையில் செயல்படவேண்டிய நிரபந்தத்தலிருந்து நாராயணசாமி எப்போது வெளியேறியிருந்தார் . அதுநாள் வரை அனைத்து முடிவுகளும் சண்முகம் எடுக்க அதை செயல்முறை படுத்திய நாராயணசாமி ,தனித்து செயல்படத் துவங்கியது இந்தப் புள்ளியிருந்து

சண்முகத்தை அவர் நன்கு அறிந்திருந்தார் . தன்னுடனான முரண்பாட்டின் பொருட்டு நேர்முக எதிர்ப்பில் அவர் இறங்க மாட்டார் என்பது சண்முகத்தின் பலமும் பலவீனமும். ஒரு கட்டத்தில் அவர் அதை நேரடியாகத் துவங்கும் போது , நாராயணசாமி தனது பாதையில் நீண்ட தூரம் சென்றிருப்பார். ராஜ்யசபை தேர்தல் வியூகத்தில் நாராயணசாமிக்கு தில்லியின் ஆதரவிருந்ததால் உள்ளுக்குள் அவருக்கு எதிராக ஏதாவது செய்யதாலன்றி தடுக்க இயலாது என்கிற சூழல் உருவாகியது. சண்முகம் நிகழ்த்திய சில கூடுகை அவருக்கு எதிரான பலனையே தந்திருந்தது

நாராயணசாமி நிற்பது உறுதியானது. அங்கிருந்து அவர் தனித்து செயல்படத் துவங்கினார். ராஜ்யசபை தேர்தல் வேறுவிதமானவை . சட்டமன்ற உறுப்பினர்களே அதன் வாக்காளர்கள் . புதுவையின் மொத்தம் 30 உறுப்பினர்களில் 16 வாக்கு பெற்றால் அவர் வெற்றியடைந்து விடுவார் , அன்றைய சட்ட சபை நிலவரம்.காங்கிரஸ் 9 தனது கூட்டணியான அதிமுக 3 வுடன் சேர்த்து 12 சுயேட்சைமொத்தம் 14 , சபாநாயகரை சேர்க்காமல் பார்த்தால் சம பலம் ஒரு ஓட்டு மாறி விழுந்தால் நாராயணசாமி வெற்றி பெற்றுவிடுவதுடன் , ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி அரசு கவிழ நேரிடும் . பல விதமான குதிரை பேரம் நடப்பதாக பெருங் கூச்சல் எழுந்து கொண்டிருந்தது


1996 முதல் தில்லியிலும் ஸ்திரத்தனமை இல்லாத அரசுகளே வந்தன . மூன்று முறை ஆட்சியில் அமர்ந்த பஜக அரசு 13 நாள் 13 மாதம் என இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்து. அதிமுக வின் ஓட்டு பெற இயலாது வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது . அதில் காங்கிரஸுடன் இணக்கமாகியிருக்க வேண்டிய ஜெயலலிதா சட்டென காங்கிரஸிடமிருந்து விலகிப் போனார் . இந்த சூழலில் அதிமுக வின் வாக்கு ராஜ்யசபை தேர்தலுக்கு மிக முக்கியமான ஒன்று , நாராயணசாமி , தலைவர் ஜெயலலிதாவிடமுள்ள அவரின் தனிப்பட்ட செல்வாக்கை பயண்படுத்த வேண்டும் என எதிர்பார்க்க . சண்முகம் மௌனமானார்.

சனி, 24 நவம்பர், 2018

அடையாளமாதல் - 421 * அடையாளம் கேள்விகளினாலானது *

ஶ்ரீ:



பதிவு : 421 / 586 / தேதி 24 நவம்பர்    2018


* அடையாளம் கேள்விகளினாலானது * 


எழுச்சியின் விலை ” - 22
முரண்களின் தொகை -01 .





பாலனிடமிருந்து விலக எண்ணம் கொண்டபோது , நாராயணசாமி மட்டுமே எனக்குள் பேருரு கொண்டிருந்தார். தலைவர் பற்றிய சிறு நினைவும் அப்போது என்னில் எழவில்லை. அது ஆலமரம் அதனடியில் எதுவும் முளைக்காதுஎன ஒரு சொல்லுண்டு . எனது மனக்கணக்கில் நாராயணசாமி பெற்றிருக்கும் வெற்றிகள் இனி பெறப்போவதற்கு முன் அர்த்தமிழந்தவை என அறிந்திருந்தேன். ஆனால் இன்று தெளிவாகத் தெரியும் இரு தலைவர்களுக்குள்ளான பனிப்போர் அப்போதே கூர் கொண்டிருந்திருக்க வேண்டும்,  நாராயணசாமி தனக்கு கீழ் ஒரு அமைப்பை உருவாக்கவோ அல்லது உருவாகி வந்ததை போஷிக்கவோ மாட்டார். அவருக்கான தனி உலகில் பிறிதெவருக்கும் இடமில்லை. நிழலான திட்டங்களும் செயல்பாடுகள் உள்ளவராக அவர் எப்போதுமிருந்திந்ததால் , அவர் அனுக்கர்களுக்கும் அவரிடம் உளம் விலகியேயிருந்தார்கள் என்பது விநோதம் .

அரசியலில் அவருடைய செழிப்பான எதிர்காலம் குறித்த தெளிவான கற்பனை எனக்கிருந்தது , அவருடன் இணைந்து வளர்வதற்கு சூழல் இருந்தும் அது நடக்கவில்லை. இன்னதென சொல்லவியலா மிக நுண்மையாக இருந்த மனவிலக்கம் என்னை அவரை நோக்கி செல்வதறகு தடையாக அமைந்து விட்டது. தலைவர்களுக்குள் நிகழும் பனிப்போரல் யார் யார் எந்த அணியில் இணையவேண்டும் என்கிற  விளையாட்டு நிலைகொள்ளத் துவங்கியது.

எனக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களை தொட்டிழுக்கும் வேளை ஆரம்பமாகியிருந்தது . ஒருமுறை பாண்டியன் என்னிடம் பேச முயற்சித்த போதே என்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக அவனிடம் கூறி இருந்தேன் . என்னைப் பற்றியும் எனது நிலைப்பாடுகள் பற்றிய செய்திகளும்  அவருக்கு என்மீதான ஆர்வத்தை குறைத்திருக்கலாம் . அதற்குள்ளாக  அவர்மீது எனது அவநம்பிக்கை தர்கக நீதியான அடர்த்தியை அடைந்து விட்டிருந்தது . அவர் எனக்கு மட்டுமன்றி பிற எவருக்குமே தன்னை மிக மிக அப்பால் என வைத்திருந்தார் என்பது பிறிதொரு தடையாக இருந்திருக்கலாம் . பாண்டியனின் இந்த அணிசேர்க்கும் முயற்சி அவனது தனிப்பட்ட விழைவென்றே எனக்குத் தோன்றியது.

தில்லியில் பலம்பெற்றிருந்த நாராயணசாமிக்கு , இங்கு ஒரு குழுவை அமைத்து அதன் அடிப்படையில் செயல்பட வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இல்லை என்றே நான் அவதானித்தருந்தேன்தில்லி தலைமையிடம் நெருக்கமான அகில இந்திய நிர்வாகிகள் , தங்களை நிலைநிறுத்திக்கொள்ள மாநில தலைவர்களின் ஆதரவை பெற்றிருப்பார்கள். அது பல அடுக்குகளை கொண்டது , அதில் நாராயணசாமி பலம்மிக்க குலாம்நபி ஆசாத்தின் அணியில் இருந்தார். குலாம்நபி ஆசாத் பலம்மிக்க காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவர். அவர் முண்ணனி நிலை நோக்கி நகரும் தோரும் , அவர்சார்ந்த மாநிலத் தலைவர்களும் தங்கள் மாநிலங்களில் முக்கிய பொறுப்புகளில் அமர்வார்கள்

இந்திய மாநிலங்களில் உள்ள அனைத்து காங்கிரஸ் கமிட்டிகள் அனைத்தும் இதை ஒட்டிய வேறு தளத்தில் சென்று அமரும் , பல அரசியல் தலைவர்களின் வாழ்வை  மாற்றும் வல்லமையுள்ளதாக இது எப்போதும் இருந்திருக்கிறது . அகில இந்திய அரசியலின் நுட்பம் தெரிந்தவர்கள் தங்களின் எதிர்காலத்தை இதைக் கொண்டு தெரிவுசெய்து கொள்வார்கள் , பிற அனைவரும் உள்ளூர் அரசியலிலிருந்து சரியும் பிழையுமாக அமைவதை தங்கள் ஊழ் என ஏற்றுக்கொளவார்கள் , அல்லது அதிலிருந்து வெளியறிவிடுவார்கள்.

எனகேற்பட்ட அரசியல அனுபவங்கள் இதன் இரண்டிற்கும் மத்தியில் அமர்ந்ததாகவே எப்போதும் இருந்திருக்கிறது. தில்லி அரசியல் ஒட்டி உள்ளூர் அரசியலாளர்களை இதில் உள்ள நுட்பம் நோக்கி அழைத்துச்செல்லவதன் ஊடாக எனது அரசியல் தளத்தை நான் எப்போதும் ஏற்படுத்த முயற்சித்தவண்ணம் இருந்திருக்கிறேன். நான் எனது அனுக்கர்களுக்கு புரியாத புதிராக இருந்தது இதன் அடிப்படையில்தான். சுய பலமுள்ள ஒருவராக யாரும் தில்லியில் அமர்ந்துவிட முடியாது . ஒவ்வொரு நாளும் தங்களின் வாழ்வை மாற்றிக் கொள்ளும் வல்லமை உள்ளவரகளுக்கானது கங்கிரஸ் கட்சி அரசியல் எப்போதும் இருந்திருக்கிறது. அதில் ஏற்படும் இடைவெளியை உணர்ந்து கொண்டவனுக்கு அங்கு எப்போதும் வாய்ப்பிருக்கிறது .

நான் என் நண்பன் கோபாலை அனுப்பிவிட்டு நாராயணசாமிக்கு காத்திருக்கத்துவங்கினேன் . இது எனது ஆணவத்தின் வெளிப்பாடு என்றது ஒன்று இல்லை சரியான அரசியல் நகர்வுதான் என்றது பிறிதொன்று. நான் நாராயணசாமிக்காக காத்திருந்தேன் . அரசியலில் தனி நபர் ஸ்துதி என்பது அடிப்படை, அதைக் கொண்டே எந்த அரசியலாளரும் தங்களை நிறுவிக்கொள்கிறார்கள் என்றாலும்  நான் அதில் உடனொட்டுவதில்லை .அதே சமயம் தனித்த அடையாளங்களை கொண்ட தனியாளுமையாக , உலகியலில் நியாயங்களில் இருந்து சிறிதளவாவது மாறுபட்ட பார்வை கொண்டவராக இருந்தால் அவர்  எத்துறையாயினும் தலையால் கொள்வது உகந்தது, என்பது எனது கோட்பாடாக இருந்தது . அரசியல் அதற்கு விதிவிலக்கில்லை. இதன் அடிப்படையில் என்னால் முழுதும் ஏற்க்கப்பட்ட தலைவராக சண்முகம் இருந்தார்.

என்ன காரணத்தினாலோ என்னால் நாராயணசாமியை அங்கு கொண்டுவர முடியவில்லை . அவரால் முற்றும் மாறுபட்ட தனித்த அடையாளம் உள்ள ஆளுமையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளமுடியாது என்றே யூகித்திருந்தேன். தான் நினைப்பதை எவ்வகையிலாவது அடைந்து விட வேண்டும்  என்கிற விழைவவில்லாத மனிதர் என யாருமில்லை . ஆனால் அதை அடைவதற்கு எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற லௌகீகமான , லோகாயதமான கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்ட யாருடனும்  எனக்கு உடன்பாடில்லை