https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 15 ஏப்ரல், 2019

அடையாளமாதல் - 441 *புதிய சமன்பாடும் விடையும் *

ஶ்ரீ:





பதிவு : 441 / 615 / தேதி 15 மார்ச்  2019

*புதிய சமன்பாடும் விடையும் 


எழுச்சியின் விலை ” - 43
முரண்களின் தொகை -03 .



தில்லியில் தனக்கு ஏற்பட்டிருக்கும் செல்வாக்கு சரிவை ஈடுகட்ட அவர் நினத்திருந்தநேரம் , நாட்டின் மீது மீளவும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் தினிக்கப்பட்டது . அப்போது தமிழகத்தில் நிலவிய சூழலால்  காங்கிரஸ் மொத்தமாக மதிப்பிழந்து  போயிருந்தது .ஆனால் புதுவையில் காங்கிரசின் தனிப்பட்ட ஓட்டுவங்கி நிலையானது , அதை நிற்ப்பவரின் செல்வாக்கு என தில்லி மேலிடத்தால் தவறாக அர்த்தம் கொள்ளப்படுவது  தவிற்க்கப்பட வேண்டும் .சோனியா எந்நேமும் தலைமையை கைப்பற்ற கூடிய சூழலில் அது சண்முகத்தின் தெளிவான அரசியல் மதிப்பீடு என்றே அப்போது நான் நினைத்தேன்  .அன்று தேர்தலை எதிர்கொள்ள சண்முகம் சொன்ன அதே  கோட்பாட்டின் விளைவாக  இன்று அவருக்கு சீட் மறுக்கப்படுவதற்கான  காரணம் உருவானது  காலத்தின் விந்தை

அது ஒருவகையில் சண்முகத்தின் அரசியல் இறங்குமுகத்தின் பிறிதொரு எல்லையை தொடங்கி வைத்த நிகழ்வாக அதைப்  பார்க்கிறேன் .சண்முகமும் தனது நிலையை எங்கோ உணர்ந்திருந்தார் .இதில் பெரும் வினோதம் முப்பதாண்டு காலத்திற்கு பிறகு உட்கட்சித் தேர்தல் நடைபெற்று அமைப்பின் தலைவர்கள் அனைவரும் முறையாக தேர்ந்தெடுப்பட்டிருந்தனர் . அதுவரை அனைத்து பதவிகளும் , தில்லி மேலிடத்தால் நியமிக்கப்பட்டவர்களே பதவியில் இருந்தனர் .

உட்கடசித் தேர்தல் மாநில அமைப்பில் பல செல்வாக்குள்ள தலைமைகளை அறிமுகம் செய்யும் வாய்ப்பை எனக்கு கொடுத்திருந்தது  . அது கொடுத்த ஊக்கம் இளைஞர் அமைப்பில் புதிய தலைமைகளை கொண்டு வருவதற்கான உத்வேகத்தை வழங்கியிருந்தது  . சண்முகத்திற்கு பாராளுமன்ற சீட் மறுக்கப்பட்டது எனக்கு நிலையழிதலை உருவாக்கிவிட்டிருந்தது.தில்லி மேலிடம் அவரின் விருப்ப மனுவை  தவிர்த்திருக்கலாம் .அல்லது எதிலும் அடிபடாமல் நிதானத்துடன் இருக்கும்  சண்முகம் அதை வெளிப்படையாக்கி தனக்கான சிக்கலை உருவாக்கி கொண்டிருக்கலாம் .மாநில கட்சியின் அனைத்து முன்னனி அமைப்புகளும் சண்துகத்திற்கு சீட் கொடுக்க சொல்லும் பரிந்துரை கடிதம் திரட்டப்பட்ட போது , அமைப்பு முறையாக உருவாகி வந்திருப்பதால் இந்த புதிய  வழமை உட்புகுத்தப்படுகிறது என நினைத்திருந்தேன் . ஆனால் அது அவரது கையறு நிலையை சூசனம் செய்ததை பின்னர் அறிந்து கொள்ள முடிந்தது.

அவர் தனது வழியில் இடையூராக எதையோ யூகித்திருக்க வேண்டும் .அனேகமாக அது நாராயணசாமியாக இருக்கலாம்.இந்த சந்தரப்பத்தில்தான் நாராயணசாமி சண்முகத்தை எதிர்த்து  வெளிப்படையாக தனது நடவடிக்கைகளை தொடங்கியிருந்தார் . அரசியல் ஒருவகையான கைபந்து விளையாட்டைப் போல , ஒருவர் எடுத்துக் கொடுக்க பிறிதொருவர் அதை ஓங்கி அடித்து வெற்றி கொள்வது . ஒரு மாநிலத் தலைமை தனது எண்ணத்தை அல்லது மாநில அமைப்பின் போக்கை பல அலகுகளில் சிலரைக் கொண்டு தில்லி மேலிடத்திற்கு முன்னமே தெரியப்படுத்தி இருக்கும் . அவர்கள் மாநில அரசியலின் போக்கையும் அதன் விளைவுகளையும் உருவகித்து, இருக்கும் சூழலில் அதை ஒட்டிய மேலதிக தகவல்களை மாநில தலைமை என சண்முகம் தில்லியில் முன் வைக்கும் போது , அவர் நினைப்பது சாத்தியப்பட்டு அவை காரியமெனக்  கைகூடும்  .

நாராயணசாமி தில்லியின் சண்முகம் தரப்பாக நின்று கட்சியின் போக்கை அவர்களுக்கு முன்னறிவித்தல் வேலையை திறப்பட செய்தவர் . சண்முகம் அதன் இறுதி கட்ட வேலையை பார்த்துக் கொண்டார் . 1991 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் இயைந்த கூட்டாக பெரும் வலிமையுடன் இருந்தார்கள். அதனால் மாநில அரசியலில் பிற தரப்புகளுக்கு தலையெடுக்க இயலாது போனது.முதல்வர் தெலுங்கு பேசும் ரெட்டியார் பிரிவை சேர்ந்தவர் , இளைஞர் மிகுந்த பணிவு மிக்கவராக பிரதமர் ராவை கவர்ந்தார் . அது முதல்வர் வைதிதிலிங்கத்திற்கு முதிய வாசலை திறந்து விட்டிருக்க வேண்டும் .சண்முகத்தின் எழுச்சி உச்சத்தில் இருந்ததால் , அவருக்கு மாற்றாக ஒன்று எழுந்தாக வேண்டும் என்கிற புடவி பெரு நெறியை ஒட்டி பிற அனைத்து தரப்பும் வைத்தியலிங்கம் தலைமையில் ஒருங்கு திரண்டது. அது ஆட்சியை கடந்து சண்முகத்தின் கட்சி தலைமை பதவிக்கு அறைகூவிய போது , புதிய சமன்பாடுகளை நோக்கிய காலம் பிறந்தது.

தன்னை முனவைத்து தலைவர் சண்முகம் விளையாடிய அரசியலில் ஒரு முணையான நாராயணசாமி சண்முகத்துடன் முரண்பட வேண்டும் என்பதும் அதே விதியின் பறிதொரு பகுதி . அதன் பிறகு அவர் தனக்கான களத்தை உருவாக்கும் விதமாக செய்பட துவங்கினார் , சண்முகத்தின் தற்காத்துக் கொள்ளும் வேலை இருமடங்கானது . ஒன்று தனது எண்ணத்தை முன்வைக்க அவரே களமிறங்க வேண்டி வந்தது , இரண்டு நாராயணசாமியின் முயற்சிகளை முறியடிக்கும் வேலையையும்  இணைத்து செய்ய வேண்டி இருந்தது.


ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

அடையாளமாதல் - 440 *கணக்கின் பிழை *

ஶ்ரீ:





பதிவு : 440 / 614 / தேதி 14 மார்ச்  2019

*கணக்கின் பிழை 


எழுச்சியின் விலை ” - 42
முரண்களின் தொகை -03 .



அகில இந்திய காங்கிரஸ் கட்சி அமைப்பிற்குள்  தலைமையுடன் முரண்பட்டு பிளவுற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதுவை அமைப்பும் கிழிபட்டதுண்டு . ஆனால் அது அகில இந்திய அளவில் நீர்த்து போவதற்கு முன்னதாகவே இங்கு காணாமலாகியது . ஆட்சி அதிகாரம் மட்டுமே கட்சி அமைப்பை சிதையாது பாதுக்காக்க வல்லது . கட்சியை கைப்பற்ற அல்லது பிளவுபட்டு தனித்து செயல்பட முயன்று சில சமயம் வென்ற அமைப்புகள் கூட பல்வேறு முகங்களை கொண்ட  இந்திய நிலப்பரப்பில் தங்களை ஒருங்கிணைக்க முடியாது போனதால் இந்திய அளவில் ஒன்று பட்ட மாற்று அமைப்பாக செயல்பட அவர்களால் இயன்றதில்லை

பின்னர் அதை மாநில அளவில்  வெற்றிகரமாக சில தலைவர்கள்  உருவாக்கி வெற்றிகண்டார்கள் . அந்த மாநிலங்களில் காங்கிரஸ் முதன்மை அல்லது இரண்டாம் இடத்திக் வலுவாக இருந்திருக்கின்றன . அகில இந்திய கட்சி அமைப்பிலுருந்து தமிழகம் சில முறை தனித்து செயல்பட முயன்ற வரலாறுகள் உண்டு . காமராஜ் போன்றவர்கள் அதை முன்னெடுத்தும் வெற்றியடைய இயலவில்லை . அந்த காலகட்டத்தில் திராவிட பரப்பியல் அரசியல் ஓங்கி இருந்தது பிரதானமான காரணமாக அமைந்து விட்டது . புதுவையில் அதை ஒட்டிய அமைப்புகள் தோன்றி  நீர்த்து போவதும் பின்னர் காங்கிரஸ் அமைப்பிற்குள் ஐக்கியமாவதுமாக அவை முடிந்து போயின

அவை  எப்போதும் தேர்தல் வரை சென்றதில்லை . புதுவையில் முதல் முறையாக தேர்தல்வரை சென்றது மூப்பனார் தமிழகத்தில் தனிக்கட்சி அமைத்து திமுக கூட்டணி கண்டபோது , இங்கு புதுவையிலும் கண்ணன் தலைமையில் அதற்கான அணிப்பிரிந்து முதல்முறையாக தேர்தலை சந்தித்து , திமுக கூட்டணி அரசாங்கத்தை பகிர்ந்து கொண்டு அமைப்பதில் வெற்றி கண்டது .வெளிப்படையான பார்வைக்கு இது மூப்பனாரின் அணிபோல தென்பட்டாலும் , அது முழுக்க முழுக்க கண்ணனின் குறுங்குழு மட்டுமே . மூப்பனார் பிரிந்து தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே அதற்கான முன்முடிவுகள் கண்ணனால் புதுவையில் எடுக்கப்பட்டுவிட்டது . பின்னர் அதற்கு தமாக” என பெயர் சூட்டப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு . ஒரு வகையில் அது உண்மையும் கூட  .திமுக வுடன் கண்ணன் முரண்பட்டு வெளியேற மூப்பனார் தடையாக இருந்தபோது , மூப்பனாரை ஒதுக்கி ஆட்சியிலிருந்து வெளியேறி பின்னர் காங்கிரஸுடன் இணைந்து மாற்று அரசாங்கம் கொடுத்தார்.

புதுவையில் திமுக , தமாக கூட்டணியிடம் தோல்வியடைந்து ஆட்சியை இழந்து இருப்பினும் காங்கிரஸ் மட்டுமே தனிப்பெரும் கட்சியாக நீடித்தது .வெற்றி பெற தேவைபடும் மேலதிக வாக்குகளை சேகரிக்கும் அமைப்பை அது இழந்திருந்ததும் , கௌரவமான வாக்குகளை பெறும் என்றாலும் வெற்றி நிச்சயமற்றிருந்தது  .1996 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் அவமானகரமான தோல்வியை அடைந்திருந்தது .அந்த நேரத்திலும் புதுவையில் காங்கிரஸ் வெற்றி பெற்றது .

1998 தேர்தல் சமயத்தில் அகில இந்திய அமைப்பில் மாற்றம் வரும் என்கிற சூசனை அனைவரும் அறிந்த ரகசியம். கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்து சோனியா காந்தி உரையாற்றி சென்ற பிறகு நடக்கூடியது என இருப்பது அது ஒன்றே.சோனியகாந்தி தலைமை பொறுப்பிற்கு வரக்கூடிய சூழலில்  கூட்டணியில்லாமல் காங்கிரஸ் பெறும் வாக்குகள் காங்கிரஸ் கட்சி சார்பாக யார் நின்று வென்றாலும் அது அவர்களின்  செல்வாக்காக பார்கப்படலாம் , மரைக்காயர் நின்றாரென்றால் அது தனக்கு அரசியல் நீதியான பெரும் பின்னடைவை கொடுத்து விடும் என கணக்கிட்டார். தன்னுடைய  இருப்பை பிறிதொருவழுக்கு தாரைவார்கக அவர் தயாரில்லை

கண்ணன் தனிக்கட்சி கண்டு விலகிய நிலையில் எப்போதும் போல மரைக்காயரை மட்டுமே  தனக்கு எதிர்நிலையில் வைத்திருந்தார் . ஆனால் காலம் புதிய சவால்களையும் அதற்குறிய சமன்பாடுகளையும் கண்டடைய  வேண்டி நிர்பந்தம் எழுந்திருப்பதை  சண்முகம் கணக்கிட்டிருக்கவில்லை என்றே நினைக்கிறேன்

சண்முகம் தில்லி கிளம்பும் பின்னிரவில் அவரை சந்தித்து எக்காரணம் கொண்டும் சீட்டை விட்டுத்தர வேண்டாம் என அமைப்பின் தீரமானத்தை அவருக்கு கொடுத்த போது, தில்லியில் ஏற்பட்டிருக்கும் செல்வாக்கு சரிவை ஈடுபட்ட நினைத்திருந்த அவர்   "புதுவையில் காங்கிரசின் தனிப்பட்ட ஓட்டு , பிறருடைய செல்வாக்கு என தில்லி மேலிடத்தால் தவறாக அர்த்தம் கொள்ளப்படுவது  தவிற்க்கப்பட வேண்டும்" என்றார் .சோனியா எந்நேமும் தலைமையை கைப்பற்ற கூடும் என்கிற அலர் பரவலாக இருந்த நேரம் அது என்பதால் . அது அவரின் தெளிவான அரசியல் மதிப்பீடு என்றே நினைத்தேன்  .அன்று தேர்தலை எதிர்கொள்ள சண்முகம் சொன்ன அதே  கோட்பாடு இன்று அவருக்கு சீட் மறுக்கப்படுவதற்கான  காரணமானது காலத்தின் விந்தை.