https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 15 ஏப்ரல், 2019

அடையாளமாதல் - 441 *புதிய சமன்பாடும் விடையும் *

ஶ்ரீ:





பதிவு : 441 / 615 / தேதி 15 மார்ச்  2019

*புதிய சமன்பாடும் விடையும் 


எழுச்சியின் விலை ” - 43
முரண்களின் தொகை -03 .



தில்லியில் தனக்கு ஏற்பட்டிருக்கும் செல்வாக்கு சரிவை ஈடுகட்ட அவர் நினத்திருந்தநேரம் , நாட்டின் மீது மீளவும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் தினிக்கப்பட்டது . அப்போது தமிழகத்தில் நிலவிய சூழலால்  காங்கிரஸ் மொத்தமாக மதிப்பிழந்து  போயிருந்தது .ஆனால் புதுவையில் காங்கிரசின் தனிப்பட்ட ஓட்டுவங்கி நிலையானது , அதை நிற்ப்பவரின் செல்வாக்கு என தில்லி மேலிடத்தால் தவறாக அர்த்தம் கொள்ளப்படுவது  தவிற்க்கப்பட வேண்டும் .சோனியா எந்நேமும் தலைமையை கைப்பற்ற கூடிய சூழலில் அது சண்முகத்தின் தெளிவான அரசியல் மதிப்பீடு என்றே அப்போது நான் நினைத்தேன்  .அன்று தேர்தலை எதிர்கொள்ள சண்முகம் சொன்ன அதே  கோட்பாட்டின் விளைவாக  இன்று அவருக்கு சீட் மறுக்கப்படுவதற்கான  காரணம் உருவானது  காலத்தின் விந்தை

அது ஒருவகையில் சண்முகத்தின் அரசியல் இறங்குமுகத்தின் பிறிதொரு எல்லையை தொடங்கி வைத்த நிகழ்வாக அதைப்  பார்க்கிறேன் .சண்முகமும் தனது நிலையை எங்கோ உணர்ந்திருந்தார் .இதில் பெரும் வினோதம் முப்பதாண்டு காலத்திற்கு பிறகு உட்கட்சித் தேர்தல் நடைபெற்று அமைப்பின் தலைவர்கள் அனைவரும் முறையாக தேர்ந்தெடுப்பட்டிருந்தனர் . அதுவரை அனைத்து பதவிகளும் , தில்லி மேலிடத்தால் நியமிக்கப்பட்டவர்களே பதவியில் இருந்தனர் .

உட்கடசித் தேர்தல் மாநில அமைப்பில் பல செல்வாக்குள்ள தலைமைகளை அறிமுகம் செய்யும் வாய்ப்பை எனக்கு கொடுத்திருந்தது  . அது கொடுத்த ஊக்கம் இளைஞர் அமைப்பில் புதிய தலைமைகளை கொண்டு வருவதற்கான உத்வேகத்தை வழங்கியிருந்தது  . சண்முகத்திற்கு பாராளுமன்ற சீட் மறுக்கப்பட்டது எனக்கு நிலையழிதலை உருவாக்கிவிட்டிருந்தது.தில்லி மேலிடம் அவரின் விருப்ப மனுவை  தவிர்த்திருக்கலாம் .அல்லது எதிலும் அடிபடாமல் நிதானத்துடன் இருக்கும்  சண்முகம் அதை வெளிப்படையாக்கி தனக்கான சிக்கலை உருவாக்கி கொண்டிருக்கலாம் .மாநில கட்சியின் அனைத்து முன்னனி அமைப்புகளும் சண்துகத்திற்கு சீட் கொடுக்க சொல்லும் பரிந்துரை கடிதம் திரட்டப்பட்ட போது , அமைப்பு முறையாக உருவாகி வந்திருப்பதால் இந்த புதிய  வழமை உட்புகுத்தப்படுகிறது என நினைத்திருந்தேன் . ஆனால் அது அவரது கையறு நிலையை சூசனம் செய்ததை பின்னர் அறிந்து கொள்ள முடிந்தது.

அவர் தனது வழியில் இடையூராக எதையோ யூகித்திருக்க வேண்டும் .அனேகமாக அது நாராயணசாமியாக இருக்கலாம்.இந்த சந்தரப்பத்தில்தான் நாராயணசாமி சண்முகத்தை எதிர்த்து  வெளிப்படையாக தனது நடவடிக்கைகளை தொடங்கியிருந்தார் . அரசியல் ஒருவகையான கைபந்து விளையாட்டைப் போல , ஒருவர் எடுத்துக் கொடுக்க பிறிதொருவர் அதை ஓங்கி அடித்து வெற்றி கொள்வது . ஒரு மாநிலத் தலைமை தனது எண்ணத்தை அல்லது மாநில அமைப்பின் போக்கை பல அலகுகளில் சிலரைக் கொண்டு தில்லி மேலிடத்திற்கு முன்னமே தெரியப்படுத்தி இருக்கும் . அவர்கள் மாநில அரசியலின் போக்கையும் அதன் விளைவுகளையும் உருவகித்து, இருக்கும் சூழலில் அதை ஒட்டிய மேலதிக தகவல்களை மாநில தலைமை என சண்முகம் தில்லியில் முன் வைக்கும் போது , அவர் நினைப்பது சாத்தியப்பட்டு அவை காரியமெனக்  கைகூடும்  .

நாராயணசாமி தில்லியின் சண்முகம் தரப்பாக நின்று கட்சியின் போக்கை அவர்களுக்கு முன்னறிவித்தல் வேலையை திறப்பட செய்தவர் . சண்முகம் அதன் இறுதி கட்ட வேலையை பார்த்துக் கொண்டார் . 1991 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் இயைந்த கூட்டாக பெரும் வலிமையுடன் இருந்தார்கள். அதனால் மாநில அரசியலில் பிற தரப்புகளுக்கு தலையெடுக்க இயலாது போனது.முதல்வர் தெலுங்கு பேசும் ரெட்டியார் பிரிவை சேர்ந்தவர் , இளைஞர் மிகுந்த பணிவு மிக்கவராக பிரதமர் ராவை கவர்ந்தார் . அது முதல்வர் வைதிதிலிங்கத்திற்கு முதிய வாசலை திறந்து விட்டிருக்க வேண்டும் .சண்முகத்தின் எழுச்சி உச்சத்தில் இருந்ததால் , அவருக்கு மாற்றாக ஒன்று எழுந்தாக வேண்டும் என்கிற புடவி பெரு நெறியை ஒட்டி பிற அனைத்து தரப்பும் வைத்தியலிங்கம் தலைமையில் ஒருங்கு திரண்டது. அது ஆட்சியை கடந்து சண்முகத்தின் கட்சி தலைமை பதவிக்கு அறைகூவிய போது , புதிய சமன்பாடுகளை நோக்கிய காலம் பிறந்தது.

தன்னை முனவைத்து தலைவர் சண்முகம் விளையாடிய அரசியலில் ஒரு முணையான நாராயணசாமி சண்முகத்துடன் முரண்பட வேண்டும் என்பதும் அதே விதியின் பறிதொரு பகுதி . அதன் பிறகு அவர் தனக்கான களத்தை உருவாக்கும் விதமாக செய்பட துவங்கினார் , சண்முகத்தின் தற்காத்துக் கொள்ளும் வேலை இருமடங்கானது . ஒன்று தனது எண்ணத்தை முன்வைக்க அவரே களமிறங்க வேண்டி வந்தது , இரண்டு நாராயணசாமியின் முயற்சிகளை முறியடிக்கும் வேலையையும்  இணைத்து செய்ய வேண்டி இருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்