https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 24 ஜூன், 2018

அடையாளமாதல் - 357 * உரிமை *

ஶ்ரீ:




பதிவு : 357 / 538 / தேதி :- 24 ஜூன்  2018

* உரிமை *


நெருக்கத்தின் விழைவு ” - 50
விபரீதக் கூட்டு -04.



பயிற்சி என்பது திரும்பத்திரும்பச் செய்யப்படுவதன்மூலம் மனதுக்கோ உடலுக்கோ கைவரும் ஒரு பழக்கம். தட்டச்சுப்பயிற்சி என்கிறோம். வண்டிமாடு நுகத்திற்குப் பழகுவதை பயிற்சி என்கிறோம். நாம் நம் கல்விச்சாலைகளில் அளிப்பதும் இதுவே. கணிப்பொறியாளராக ஆவதற்கான பயிற்சி. பொறியியலின் ஏதேனும் ஒருபகுதியில் பயிற்சி. மருத்துவப்பயிற்சி.

பயிற்சி ஒருபோதும் ஆளுமையுருவாக்கத்தில் பங்கெடுப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட பயிற்சியை அதிதீவிரமாக எடுக்கும்போது உண்மையில் ஆளுமையில் ஒரு கோணல்தான் உருவாகிறது. பிற எதுவுமே தெரியாத ஓர் அசட்டுப்பிறவியாக அது மனிதனை ஆக்கிவிடுகிறது. இன்றைய நம் உயர்கல்விபெற்ற இளைஞர்களில் பெரும்பகுதியினரைப் பார்த்தாலே இது தெரியும். ஓர் அடிப்படை ஆளுமைத்திறன்கூட இல்லாத அற்பர்கள் அல்லது அசடுகள் அவர்கள்எனகிறார் ஜெயமோகன் தனது பதிவு ஒன்றில்

அது போன்ற ஒன்று நிகராதிருக்க தெய்வங்கள் அருள வேண்டும் .பயிற்சி இல்லாத எதுவும் தேவை ஏற்படும் சூழலில் ஒருவரை செயல்படவைப்பதில்லை ஆனால் அதே நேரம் வெறும் பயிற்சி மட்டிலும் ஈடுபட்டிருக்கும் ஒருவரை அது  அடிமை மனப்பான்மைக்கு தள்ளிவிடுகிறது . திறமை என்பது பயிற்சியினால் வருவது . ஆனால் பயிற்சிக்கும் ஆளுமைக்கும் மத்தியில் பிறிதேதோ ஒன்று அந்த கோணல் ஏற்படாது , நிலைமையை உணர்ந்து அதிலிருந்து தங்களது எதிர்காலத்தை நோக்கி எழுந்து வருகிறார்கள்

ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கனவையும் அதை நோக்கிய நகர்வையும் இந்த இயக்கம் பல ஆண்டுகாலம் கொடுத்து வந்ததை நான் அறிவேன் . அது இன்று சூம்பி போய் இருப்பதை பார்க்க சகிக்கவில்லை , அனைத்தையும் பார்த்து பார்க்காதது போல கடக்க இயலாமல் ,ஏதாவதொரு வழியில் இதை சரி செய்ய வேண்டும் என்கிற வெறி நேரத்திக்கு நேரம் கூடியபடி இருந்தது 

இந்த கருத்தை எட்டிய பிறகு தில்லியிலிருந்து உடன் புறப்பட வேண்டும் என்கிற அடக்க இயலாத உந்துதலுக்கு ஆளானேன். இளைஞர் காங்கிரஸ் தனது அனுபவத்திலிருந்து தனக்கான கருதியலை உருவாக்கிக் கொண்டது . அது தனி நபரின் சார்ந்திராது ஒட்டு மொத்த அமைப்பாக , அரசியலில் காலத்தின் பொருட்டு ஏற்படும் இடைவெளிகளை நிரப்புவதற்காக அது வளர்ந்தது. கண்ணனுடன் அது முரண்பட்டு வெளியேறியதறகு காரணம் , அதை ஒரு கம்பெனி போல சிலரிடம் கையளிக்க முயற்சித்த போது. பாலன் அதன் பலனை அடைந்தவர் . ஆனால் தேர்தல் களத்தில் ஏற்பட்ட தோல்வி அவரை பதட்டமடைய வைத்துவிட்டது

அதன் பிறகு அதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு தனியனுக்கும் அதில் ஏதாவதொரு பங்கிருகிருப்பதைப் போல ஒன்றை நிர்வகிக்கும் தலைமையை தரும் வாய்ப்பு முழுவதுமாக தூர்ந்து போனது. திட்டமிடலும் அதானால் விளையும் பலனிலும் அனைவருக்கும் ஏதாவதொரு வகையில் பங்கிருப்பது அந்த சூழலின் சிறப்பு . இனி அதுபோன்ற ஒன்று நிகழ வாய்ப்பில்லை .

திட்டமிட்டு வளர்த்தெடுத்த அமைப்பு . பாலனின் சுயநலத்தால் அது நடுத்தெருவிற்கு வந்து விட்டது. அவரிடம் இப்போது அதற்கும் தர்க்கரீதியான பதில் இருந்தால் ஆச்சரியபடுவதற்கில்லை . ஆனால் எந்த விசையால்  அதன் உந்து சக்தியால் காலநேரம் இல்லது உழைத்த ஆயிரக்கணக்கானவர்களின் தியாகம் , எல்லாம் ஆவியாகி போனதைப்போனது . இதற்கு யார் என்ன விலை கொடுக்கபோகிறார்கள் எனக் குழந்தை தனமாக கேட்டுக் கொள்ளலாம் , ஊழின் கால நகர்வை அதன் சம புத்தியையும் அற்ப ஆயுளை கொண்ட மனிதன் புரிந்து கொண்டுவிட முடியாது .

அந்த இரவு தில்லியின் குளிரகால இரவில் தங்க முடியாத வருத்தத்தை அடைந்த போது , இங்கு இருந்து கொண்டு என்னசெய்கிறேன் என்கிற கேள்வி ஆழ்மனம்  எழுப்பிக்கொண்டே இருந்த போதுஅவமானமாய் உணராத துவங்கினேன் . வல்சராஜ் தலைமையால் இயக்கத்தின் மீது வைக்கப்பட்ட எடை மிகுந்த கல் அது இயக்கத்தை எத்திசையிலும் நகரச் செய்யாது . அது கொழுக்கொம்பில் ஒட்டியிருக்க எளிய கொடியின் நெஞ்சில் கட்டப்பட்டது முடிச்சு , அதுவே அதன் வளர்ச்சிக்கும் தடை . கருணைபோல தோன்றும் பலவற்றிற்கு பின்னல் உள்ள நிஜம் கொடுமையானது

சனி, 23 ஜூன், 2018

அடையாளமாதல் - 356 * கௌரவம் *

ஶ்ரீ:




பதிவு : 356 / 537 / தேதி :- 23 ஜூன்  2018

* கௌரவம்  *


நெருக்கத்தின் விழைவு ” - 49
விபரீதக் கூட்டு -04.



இங்கே எழக்கூடிய முக்கியமான வினா இதுதான். இப்படி இவர்களை ஆக்கியது எது? திரும்பத்திரும்ப ஒன்றைத்தான் அனைத்து சமூக ஆய்வாளர்களும் சமூகச்செயல்பாட்டாளர்களும் சொல்வார்கள். இங்கே நமக்களிக்கப்படும் கல்வியின் அடிப்படையானது பிரிட்டிஷ் காலத்தில் வரையறை செய்யப்பட்டது. அதை நாம்கருங்காலிக்கல்விஎன்று சொல்லலாம். சொந்த சமூகத்துக்கும் சொந்த மக்களுக்கும் எதிரான ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்கும்நோக்குடன் வடிவமைக்கப்பட்ட கல்வி அது.

அந்தக்கல்வியை பெறும் ஒருமனிதர் முதலில் தன்னை தம்மைச் சார்ந்த பிறரிடமிருந்து வேறுபடுத்திக் கொள்கிறார். தான் அவர்களைவிட மேல் என்றும் அவர்களிடமிருந்து கூடுமானவரை விலகியிருப்பதே தனக்கு கௌரவம் என்றும் நினைக்க ஆரம்பிக்கிறார். ஒரு படித்த மனிதன் எவ்வகையிலும் அவனுடைய சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. அதற்காக அவன் அக்கறை காட்டுவதில்லை, போராடுவதில்லை. அதை சுரண்டுவதற்கும் அடக்கியாள்வதற்கும் அவனை பிறர் உரிய கூலிகொடுத்து எளிதில் பயன்படுத்திக்கொள்ளலாம். அவன் படிப்பின்மூலம் துரோகியாக, கருங்காலியாக மட்டுமே உருவாகிறான்என்கிறார் திரு.ஜெயமோகன் தனது கட்டுரை ஒன்றில் . இது பிரிட்டீஷ் அரசாங்கம்  விட்டுச்சென்ற அதன் நீட்சியான இந்திய கல்வி முறை , அந்த கோட்பாட்டை அதன் நடைமுறைச் சிக்கலை மிக உக்கிரமாக சொல்ல வந்தது இந்தப் பதிவு . அரசியலும் ஒரு கல்விதான் என்பதால்  இது அப்படியே அதன் தலையிலும் பிசிறில்லாது உட்காருவதை பார்க்க முடிகிறது.

தில்லிக்கு சென்று புதுவை விடுதியில் வாசராஜுடன் தங்கி இருந்தபோது , இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் எந்த கேள்வியோ? விலகல் கடிதமோ கொடுக்காது காங்கிரஸை விட்டு விலகி கண்ணனின் தமாகாவில் சென்று இணைந்ததனார் . செய்தியை வல்சராஜ் என்னிடம் சொன்ன போது நான் திகைத்துப் போனேன்இது அவருக்கு அதிர்ச்சி கொடுக்கவில்லை , என்றாலும் இதை அவரின் தனிப்பட்ட அவமானம் என்றே அணுகினார் . அவர்களை நோக்கி தனது கோபமான வசை சொற்களை சொல்லி மாய்ந்து பின் ஓய்ந்து படுக்க சென்றுவிட்டார் . எனக்குள் நெடுநாளாக உறங்கவைக்கப்பட்ட ஒன்று எழுந்து விட்டதை அறிந்து கொண்டேன் . இனி என்னால்  உறங்கமுடியாது .

நான் கலசலன மனநிலையில் படுக்க பிடிக்காமல் எழுந்து வெளியில் வந்தபோது டிசம்பர் மாத தில்லி குளிர் ஊசியால் குத்துவதை போல உணர்ந்தேன் . மன அழுத்தத்திற்கு அது தேவைபோல இருந்தது . மனம் தனது இயல்பான பாதையில் நிலையழிதலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. நான் மிகவும் அஞ்சுவது இதைத்தான் . அதன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது , எவ்வகையிலும் நான் சொல்லும் சமாதனத்தை அது ஏற்காது . நீண்டநாள் கட்டிவைக்கப்பட்ட ஓன்று கட்டவிழ்ந்தது போல இருந்தது

எனது சிந்தனை ஒழுங்கிற்கு வராது கலைந்து கிடந்தன முழுவதுமாக . இன்று நான் வந்து அடைந்திருக்கும் இந்த அமைதிக்கு பின்னால் கொந்தளிக்கும்  ஒரு வெளி உண்டு . மனப்பழக்கத்தினால் அதை நீண்ட நெடுங்காலமாக மெல்ல தடவி தடவி ஒரு படிமனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன் . நிகழ் அரசியல் எனது கவனத்தை வேறு பாதைக்கு திருப்பும் என்பதற்காக இதில் நுழைந்து சர்வ ஜாக்ரதையாக முக்கிய புள்ளியை நோக்கி நகர்வதை கவனமாக தவிர்த்து வந்தேன்


கடந்த சில ஆண்டுகளாக மிதமான செயல்பாட்டில் எனது பாதைகள் முழுவதுமாக தடைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த ஒரு குழு இதோ இன்று வெளியேறி விட்டது .மிச்சமுள்ளது கிருஷ்ணமூர்த்தி குறுங்குழு மட்டுமே . அதற்கு எப்போதும் தனியான திட்டம் என ஒன்று இருப்பதில்லை . இனி முழுமையான செயல்பாட்டிற்கு வருவது என்கிற எண்ணம் எழுந்தது. அதன் பாதையில் வல்சராஜையும் தலைவர் சண்முகத்தையும் கூட எதிர் கொள்ள நேரிடலாம் . கொள்ளும்படி வந்தால் அதை செய்துதான் ஆகவேண்டும் என்கிற மனம் மெல்ல அமைதியடைய துவங்கியது .நான் முழுவதுமாக சிதறி இருந்தேன்.