https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 2 ஜூன், 2018

அடையாளமழித்தல் - 12 விளைநிலம்

ஶ்ரீ:


பதிவு : 525 / தேதி :- 02 ஜூன்  2018



விளைநிலம்





விஷ்ணுபுரத்தில்  பிங்கலனிடம் ஆசிரியர் கேட்பார். “வாழ்வும் அழிவும் நன்மையும் தீமையும் எல்லாம் விஷ்ணுவே என்றால் மிச்சமின்றி உன் உள்ளம் அதை ஏற்குமா?” அவன் “ஏற்காது, ஆனால்…” என ஆரம்பிப்பான்.  “அவ்வளவுதான், உன் பாதை பக்தியால் ஆனது அல்ல. அது ஞானத்தின் பாதை. அவ்வழியில் எத்தனை இடர் இருந்தாலும் உன்னுடையது அதுதான். கிளம்பு” என கிளப்பிவிட்டுவிடுவார். அவன் ஞானத்தின் பாதையில் தத்தளித்து அஞ்சி மீண்டும் பக்திக்கே வருவான். ஆனால் ஞானத்தின் துளி எஞ்சும்வரை திரும்பி வரவே முடியாது என உணர்வான், என்கிறார் ஜெயமோகன் .

எனது தந்தை தான் அடைந்த மெய்மையை நுண்மையாக எனக்கு கையளிக்க முயன்ற போது , அது கருத்தாக எனது சிந்தையில் அமராது விதைபோல எங்கோ விழுந்தது. அது தான் வளரவேண்டிய காலத்திற்கு காத்திருந்தது போலும் . அவர் என்ன விதைத்தாரோ அதுவாகவே அது முளைக்கத் துவங்கியது. நான் என் வாழ்வியலில் உளக்கொந்தளிப்புகளின் வழியாக அடைந்த புரிதல் என்கிற நீரை மட்டுமே அதற்கு வார்தேன் போலும் . என்னுடைய மெய்மைத் தேடலில் தந்தையுடன்  இயந்தும் ஊடியும் நான் கிளை பரப்பி இருந்தேன் . ஆனால் அதில் அவர்தான் எப்போதும் அமர்ந்திருந்தார். 

புரிதல் என்கிற ஊற்றை எனக்கு காட்டிக் கொடுத்தது இரண்டு பெண்கள், ஒருவர் எனது தாய் பிறிதொருவர் எனது மனைவி. அவர்களின் வழியாக என்னுடன் வினையாற்றிய பிற எல்லா மாநுடர்களையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அம்மா எனக்கு உயிரளித்தபோது தன்னை வலியால் உணர்ந்தவர் , என் மெய்மைக்கு தேடலுக்கும் அதன் புரிதலுக்கு  தன்னை முற்றழித்துக் கொண்டார் என்பதை எனது ஆற்றாமையாக உணர்கிறேன் . மனைவியிடம் பிறிதொரு மெய்மையை என் வயோதிகத்தில் பெறலாம் . யாருமற்ற தனிமையை என் வீட்டில் எதிர்கொள்ளும் தயாரிப்புகளும் அவசியமாகிறது. பாதுகாப்புணர்வு. சிலர் தனியாக இருப்பதைப் பார்த்தபோது ஓர் ஆசை எழுந்தது. வயதான காலத்தில் தனியாக இருக்கவேண்டும் என. எவரிடமும் கருணையையோ உதவியையோ நாடக்கூடாது. அதிலும் எக்காரணத்தாலும் பெண்களிடம் உதவி கோரக்கூடாது. பெண்கள் ஒரு வயதுக்குமேல் ஆண்களை வெற்றுச்சுமைகளாக உணர்வார்கள். சரியாக அந்தக் காலகட்டத்தில்தான் ஆண்கள் பெண்களைச் சார்ந்தும் இருப்பார்கள். கம்பீரம் ,தோரணை எல்லாம் போய் ‘பேச்சுகேட்க’ ஆரம்பிக்கும் காலம் அது . என்கிறார் ஜெயமோகன் 

என் மெய்மைத் தேடலுக்கு அம்மா விளைநிலமானார், அது நான் மகிழ்ந்திருக்க நிகழவில்லை . எனக்குள் நிகழ்ந்ததை பிறிதெவரும் வெளியிலிருந்து என்னுள் அவற்றை நிகழ்த்தியிருக்க முடியாது என உணர்கிறேன். எதையும் கடந்து வந்த எனக்கு ஊழ் அம்மாவை மையப்படுத்தி எனக்கான புரிதலை கொடுத்தது போதும்  என் ஆன்மா மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால் நிலைகுலைந்து போனேன். அதைவிட அம்மா ஆன்மா அழிந்தது போலானார். என் ஊழை முனிகிறேன் , காலம் இதற்கு என் தாயை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம்

தாயை கைவிடும் மகனினும் கீழோன் பிறிதொருவரில்லை . அதற்கு நிகரியான ஊழின் கணத்தில் பிறிதொன்று, தாயால் கைவிடப்படும் மகனின் நிலை . மரபார்ந்தவர்களின் பொது வெளியில் இது திடுக்கிடலை உணர்த்தலாம் . ஆனால் நவீன சமூகத்தின் அற விழுமியங்களின் வீழ்ச்சியால் சிதைந்த பல பண்பாடு நிலைகளில் இதுவும் ஒன்று . அதை நான் மெல்ல அடையும் புரிதலின் வழியாக எந்தவித நோய் தொற்றும் இல்லாது என்னை மீட்டெடுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறேன்.

பண்பாட்டு வீழ்ச்சியை ஒரு பொருளியல் தற்சார்பு என்கிற விசை இயக்குகிறது போலும் . அது நிலைபெற்ற ஒருவரை அவர் யாரையும் சார்ந்திருக்க செய்வதில்லை . புதிய விடுதலையை அனுபவிக்கும் முதல் தலைமுறை பெண்கள் அனைத்துவித்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும்  விழைவின் விளைவுகளால் குடும்பத்துள் நிகழும் வளச்சிதை மாற்றத்தின் நுட்பம் உணர்வதில்லை . தருக்களும் பிறரை சீண்டுதலில் வழியாக அடையும் முக்கியத்துவத்திற்காக எதையும் செய்யும் மனோபாவம், பலரை வாழ்வியல் நரகில் அழுத்துவதை அவர்கள் அறிவதில்லை . அறிந்தபின் அதன் எதிர் நிகழ்விற்கு  பொறுப்பேற்காது விலகி நிற்பதால் சிக்கல் மேலும் சீரழிவை நோக்கி செல்கிறது . 

பிறிதொருவருக்கு மாற்றென தன்னை முன்னிறுத்துவதை இங்கு குற்றமாகாது எனினும் , முன்னிறுப்பது ஒற்றைப்படையானதில்லை . அது கோரும் இடங்கள் யாவற்றிலும் அவற்றை நிகர் செய்தாக வேண்டும் . அனுபவமும் , பொறுப்பும் அறியாத ஒருவரால் அது நிகழ இயலாது . அது அடைகாக்கும் பொறுப்பை கோழியிடமிருந்து எடுத்து பாதியில் கைவிடுபவரின் மனநிலையை ஒத்தது. 

இளமையில் நான் வீட்டில் என்னவாக இருந்தேன் என இப்போது நினைத்துப்பார்க்கிறேன் , எனக்கென அடையாளம் என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை . ஆனால் சுபாவம் என ஒன்றிருந்ததை இப்போது உணர்கிறேன் . அப்பா அக்கைகளிடம் ஒரு மாதிரியும் தங்கைகளிடம் வேறு மாதிரி இருந்தார் . ஆனால் அவை நிகழ்ந்தது வெவ்வேறு காலகட்டத்தில் .

கடும் கண்டிப்பாய் எனக்கு முன்பிறந்தாரிடமும் , மிக எளிமையான தந்தையாக என் தங்கைகளிடமும் நான் அவரை பார்க்க நேர்ந்தது . அது ஒரு மாறுபட்ட பார்வையை எனக்குள் விதைத்திருக்கலாம் . என்னிடம் அவரது அணுகுமுறை வேறுமாதிரியானது . என்மேல் அவருக்கு ஆழ்ந்த விலக்கிக்கொள்ள முடியாத சந்தேகங்கள் எப்போதும் கவிந்திருந்தது . நான் அப்படிதான் இருந்தேன் . பிள்ளைகளுக்குள் ஆண் பெண் பேதமில்லாது போயிருக்கலாம் . அல்லது அவரது பின் பகுதி மிகவும் கனிந்திருந்ததும் ஒரு காரணியாக இருந்திருக்கும் . இவை இரண்டிற்கும் மத்தியில் நான் அவரை அடையாளப்படுத்திக்கொள்ள தெரியாமல் திண்டாடிய காலம் . அக்கைகளின் திருமணம் புதுவீடு கட்டி இடம் பெயர்ந்தது . போன்றவை வீட்டிலிருந்து விலகி இருந்த அப்பாவை பெரும்பாலும் வீட்டில் கட்டிப்போட்டது . அதுவே அவர் கனிவதற்கு பெரும்பங்கு வகித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...