https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

அடையாளமாதல் * வளர்ச்சியின் பயனின்மை *

 


ஶ்ரீ:



பதிவு : 573  / 763 / தேதி 25 ஏப்ரல்  2021


* வளர்ச்சியின் பயனின்மை  * 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 51.






2008ல் தலைவர் சண்முகம் சொல்லி நான் முதல்வர் ரங்கசாமியை சென்று சந்தித்தேன் , 2001ல் முதல்வராக பதவியேற்ற பிறகு அதுதான் அவரை முதல்முறையாக சந்தித்தது. கட்சித் தலைவர் நாராயணசாமியுடனான முரண்களினால் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை 2001ல் இழந்த பிறகு இளைஞர் காங்கிரஸ் அமைப்பை விட்டு விலகி, மாற்று அரசியல் மூலம் காங்கிரஸில் நாரயணசாமிக்கு எதிரானவர்களை ஓரணியில் திரட்ட முயன்று கொண்டிருந்தேன். இளைஞர் காங்கிரஸின் தலைவர்கள் கண்ணன் தொடங்கி பாலன் வரை அவர்கள் முன்வைத்த குறுங்குழு அரசியலால் காங்கிரஸில் புதிய தலைவர்கள் எழுந்து வரும் வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டிருந்தது. கண்ணன் மட்டும் பிரபலமான தலைவராக உருவெடுத்திருந்தார். புதிய தலைவர்கள் என அவர் அமைப்பில் யாரும் இறுதிவரை உருவாகிவரவில்லை, பாலன் அவருடன் முரண்பட்டு வெளியேறிய பின் தலைவராக உருவெடுத்தார் . அவரது அரசியல் கனவுகள் அதன் கணக்குகளின் உள்ளெடை தாங்காது முறிந்தது. அவருடன் நான் இளைஞர் காங்கிரஸில் இருந்த இறுதி நாட்களில் அவரது செயல்பாடுகள் புதிய தலைமுறை உருவாகும் பாதைகள் என ஏதும் இல்லை என்பதுடன் முழு அமைப்பையும் இருளுக்கு அழைத்துச் சென்றார் என்கிற உண்மை மிகுந்த வருத்தத்தை அளிப்பது . அடுத்த நிரை தலைவர்களை உருவாக்கும் முயற்சியில் பாலனுடைய எதிர் அனுகுமுறையால் வெறுப்புற்று 1994 களில் அவரிடமிருந்து ஒதுங்க நேரிட்டது . அதுவரை நான் முன்வைத்த அனைத்து அரசியல் முன்னெடுப்புகளும் விளிம்பிற்கு வந்ததை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய என்னுடையப் புரிதலை ஆழமாக்கியது . காந்திராஜின் வற்புறுத்தலால் சண்முகத்தை சென்று சந்திக்கும் வரை அவற்றை முயற்சிக்க பிறிதொரு வாய்ப்பு சாத்தியமில்லை என்றே நினைத்தேன் . அமைப்பின் வழியாகவே எனக்கான அரசியல் களம் உருவாகும் என் உறுதியாக இருந்ததற்கு அடிப்படை நான் என்னைப் பற்றிய வரையறையில் தேர்தலரசியலில் நான் ஈடுபடுவதில்லை என்பது முதன்மையானது . அமைப்பின் பலத்தினால் மட்டுமே ஒருவருக்கான எதிர்காலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என முழு நம்பிக்கை கொண்டிருந்தேன் . அமைப்பை செறிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம்  இளைஞர் காங்கிரஸில் இருந்த போது உருவானது. மாநிலம் தழுவியதாக அதன் அரசியல் இருப்பதால் அதற்கான விழுமியங்களை உருவாக்கி முன்வைத்து மட்டுமே புதிய தலைவர்களை அடையாளம் காணமுடியும். அவர்களது எதிர்காலம் பற்றிய தெளிவான வரையறைகளின் வழியாக அவர்களுக்கான வாய்ப்பு அதன் எல்லைகள் என அவர்களுக்கு முழு சித்திரத்தையும் காட்டியாக வேண்டிய சூழல் உருவாகிவிட்டருந்தது . கண்ணன் , பாலனை போன்றோர் அழைத்து சென்றி காணாமலாகிய தலைவர்களோடு இளைஞர் காங்கிரஸின் சித்தாந்தம் செயல்பாடுகள் அதன் வழிமுறைகள் போன்றவை காணாமலாகி இருந்தது . புதிநவர்கள் அதைப்பற்றிய எந்த அறிமுகமும் இல்லாதவர்கள் . நான் சந்தித்தவர்களில் 90 விழுக்காடு அரசியல் குறித்து புரிதலும், நம்பிக்கையும் அற்றவர்கள் ஆகவே அனைத்தையும அடிப்படையில் இருந்து அவை கட்டமைக்கப்பட வேண்டும் என்பது அதன் முதன்மை சவால் .


1994 களில் பாலனிமிருந்து முரண்பட்டு வெளியேறியது அந்த விழுமியத்திற்கு எதிராக நிற்கும் அவருடைய போக்கு என்பது ஒரு அடிப்படைக் காரணம் . ஆனால் வெறுப்புற செய்தது அவர் யாரையும் அஞ்சியது, யாரையும் நம்ப மறுப்பது அரசியலின் அடிப்படை கூறு , ஆனால் நம்பிக்கை கொண்ட பெருங் கூட்டத்தை அதன் மேலேதான் கட்டி எழுப்பியாக வேண்டும். ஒருவருக்கு ஒருவர் ஓயாமல் ஒற்று சொல்வதை ஊக்கப்படுத்தியதியதுடன் அத்தகைய செய்திகளுக்கு செவி கொடுக்கிறார் என்பதால் அவை பெருக்கெடுத்தன. அவற்றின் உண்மைநிலையை சரிபார்க்கும் குறுக்கு வழிமுறை இல்லாமயையால் அவர்பெற்ற செய்திகள் அவரை நிலையழிச்செய்தது. தலமை பலவீனப்பட்டதால் அது  அடுத்த தலைவர்கள் என யாரையும் உருவாகாமலாக்கியது . சண்முகம் என்கிற ஆளுமையை எதிர்க்க அமைப்பின் செலூக்கம் அதன் எதிர்காலம் அனைவருக்குமான வாய்ப்பை பற்றிய புரிதல்  மட்டுமே வழி. தலைவர்கள் தங்களைத் தனி மனிதர்கள முன்வைத்ததால் அது  அன்று இயலவில்லை. அரசியல் என்பதே சண்முகத்தை எதிர்த்து வளர்வதென புரிந்து கொள்ளப்பட்டு பிற வழிகள் அடைக்கப்பட்டிருந்தன .சரியான நோக்கம் மற்றும் அனுகுமுறை இல்லாமல் புதிய அமைப்பை உருவாக்குவது சாத்தியமில்லை என்பது வெளிப்படையானது. கண்ணனும் , பாலனும் தன்னை இளம் தலைவராக முன்னிறுத்தியது போல நான் செய்யமுடியாது, அவர்கள் அமைப்பின் தலைவர்களாக இருந்ததால் அது சாத்தியப்பட்டது என்றால் தலைவராக வந்தவர்கள் அனைவரும் வென்றிருக்க வேண்டும்.கண்ணனுக்கு முன்பிருந்த பல தலைவர்கள் முகமிலிகளாக இருந்தனர். கண்ணனின் அனுகுமுறை அவரை முன்னிறுத்தியது என்றாலும் அதற்கான சூழ்நிலை ஒவ்வொன்றாக அன்று எழுந்தபடி இருந்தன. சண்முகம் எதிர்ப்பு என்பது அன்றைய யதார்த்தம் அதை அப்படியே பின்பற்ற பாலன் நினைத்தது பிழைபுரிதல். அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்து நிற்கமுடியாதவராகி முன்பின்னுக்கு முரண்பட்டு முடிவுகளை குறுகிய காலத்தில் மாற்றியபடி இருந்தது சருக்கலை ஏற்படுத்தியது


2011 களில் நிகழ்ந்தது போல புது தலைமையின் தேவை சமூகத்தின் ஆழ்மனதில் இருந்து திரண்டெழுந்திருந்தது போல 1985 களில் நிகழ்ந்தத்தைக் காணமுடிகிறது . இது ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மீள மீள நகழ்ந்து கொண்டே இருக்கிறது . இளைஞர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அலையலையென அவர்களைப் பின்தொடர்கன்றனர் ஒரு கட்டத்தில் அவர்கள் கைவிடப்பட்டதாக நினைக்கும் போது தலைவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள்.   1994 முதல் 1996 வரை புது அமைப்பு நிகழ்வதற்கான சாத்தியகூறுகள் இல்லை என்பது எனது விலகலுக்கு முக்கிய காரணம் . தொடர் எதிர்ப்பு அரசியலால் சோர்ந்திருந்தோம் , பழைய நண்பர்கள் சந்திப்பின் போது அது துக்க விசாரிப்பு போல கடந்து சென்றுவிடும் . 1994 களில் இளைஞர் காங்கிரஸில் இருந்து வெளியேறி பிறகு அரசியலில் ஈடுபடுவதில்லை என உறுதியாக இருந்ததற்கான காரணம் இனி மாநிலம் தழுவிய அரசியல் என்கிற கோணத்தை சென்று அடைய முடியாது என்பது . ஆனால் பல்வேறு சூழலால் மிகுந்த மனக்கொந்தளிப்பல் இருந்து வெளிவரும் பொருட்டு எனக்கு ஆறுதல் அளிக்கும் என நான விழைந்து ஈடுபடும் ஒரு துறை தேவையாய இருந்ததால் தொகுதி அரசியல் போதுமானது என முடிவு செய்தே காந்திராஜை சென்று சந்தித்தேன்.

சனி, 24 ஏப்ரல், 2021

குமரித்துறைவி

 24.04.2021


அன்பிற்கினிய ஜெ, வணக்கம் 

நலம் ,உங்கள் நலத்தை விழைகிறேன் .


மீண்டும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


தொடர்ந்து சிறு சிறு குடும்ப நிகழ்வுகளினால் அடித்து செல்லப்பட்டு இரண்டு நாள் உங்கள் தளத்தை திறக்கவில்லை . புதுவை வெண்முரசு கூடுகைக்கான வாட்ஸப்பில் நண்பர் தண்டபானி துரைவேல்குமரித்துறைவிபற்றி சிறு குறிப்பு எழுதி இருந்தார் . அதன் பின்னரே உங்கள் அறுபது துவக்கம் பற்றிய பதிவும் பின்னர்குமரித்திறைவிகுறுநாவலையும் கண்டேன் . 150 பக்கம் என பயமுறுத்தி இருந்ததால் சற்று தயக்கத்துடன் துவங்கினேன், ஆனால் எதிர்பாரமல் அது சட்டென உள்ளிழுத்துக் கொண்டது.


நீண்ட நாட்களுக்கு பிறகு மதியம் தொடங்கி நள்ளிரவு முடிக்கையில் எழுந்த உணர்வுகள் கட்டுக்கடங்காமல் கொந்தளித்த படி இருந்தது . ஒருபக்கம் வாசித்துக் கொண்டிருந்தாலும் அதற்கு இணையாக சற்றும் அறுபடாத வேறொரு பல தளத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன் . மனம் பலவாறு பிளவுபட்டு அடுக்கடுக்கான தளங்களில் அறுபடாது பயணப்பட்டபடி இருந்த ஒன்றை நான் இதுவரை அனுபவித்ததில்லை. வாசித்து முடியும் வரை கண்களில் நீர் வழிந்து கொண்டிருப்பதை கட்டுப்படுத்த இயலவில்லை.





ஒரு புள்ளியில் என்னைஉதயன் செண்பகராமனாகமனம் பிரமிக்க துவங்கியதும்,ஒரே சமயத்தில் மனம் இறந்தகால நினைவுகளில் பாய்ந்து அலைக்கழிந்தும் எதிர்காலத்தில் நுழைந்து திளைத்தும் கொண்டிருந்தது . இவை அத்தனையையும் பார்த்தபடி நான் தனித்து வாசித்துக்கொண்டு இருப்பதாக பட்டது . மேலே சொன்ன அத்தனை உணர்வுகளையும் பார்ப்பவனாக அதில் எதிலும் நிலை கொள்ளாத மனநிலையில்  இருந்தது , இப்போது நினைத்துப் பார்க்கும் போது விசித்திரமாக இருக்கிறது.வாசிப்பு என்பது அதன் அழகியலை அள்ளி அள்ளி உள்ளே நிரப்புவதற்காக , பசி தாகம் போல


வாழ்நாள் முழுவதும் பிறர் துணியாத செயல்களை தேடி அதில் ஈடுபட்டிருக்கிறேன் , எந்த ஒரு எதிர்பார்பும், பலனுமின்றி. ஆனால் அதன் விளை பொருளை சிறிது காலம் கழித்து உணரும் போது , அவற்றினால் உருவான பல புள்ளிகளை இணைத்து ஒரு இறுதிக் கருத்தை உருவாக்கி கொள்வதும்,அதிலேயே நீடிக்க விரும்பியும், பின்னர் காலத்தால் அதிலிருந்து நழுவி விலகும்படி ஆகும் போது குழம்பிப் போவதுமாக எனது கடந்த காலம் இருந்திருக்கிறது.


செயல்களினால் மட்டுமே நான் எல்லோராலும் அறியப்பட்டிருக்கிறேன். ஈடுபட்ட துறைகளில் அதன் உச்சத்தில் இருந்திருக்கிறேன்.ஆனால் ஊழ் என்னை அங்கே நிரந்தரமாக தங்க விட்டதில்லை.அது பற்றி தாளாத வருத்தம் இருந்தது.ஆனால் இப்போது இல்லை.அவற்றிலிருந்து விலகி நின்று பார்கையில் ஒவ்வொன்றிலிருந்தும் வேறொரு அனுபவத்தின் நிமித்தமாகவே அவை நிகழ்ந்தன , அதலிருந்து நிறைவும் அடைந்ததை இப்போது நினைவுகூறுகிறேன்.ஆனால் அந்த அரிய அனுபவத்தால் ஆவது என்ன என புரியவில்லை . வாழ்கையை மிக எளிதாக வாழ அவ்வளவு வலியும, விலகலும் தேவை போலும்.


கடந்த காலத்தில் அரசியல்,வியாபாரம்,ஆண்மீகமென என தொடர்ச்சியாக பல துறைகளில் முன்னெடுத்த பெரிய முயற்ச்சிகளில் விளைந்த சாதக பாதகங்க அனுபவங்கள் தேங்கி மறந்து போனவை நாவலை வாசித்த கணங்களிலுல் மீளவும் முளைத்துக் கொண்டிருப்பதை தலைமுழுவதுமாக நிறைந்துக் கொண்டிருப்பதைபார்த்துக்கொண்டிருந்தேன்.


இன்று,இங்கிருந்து பார்க்கையில் அவற்றில் வென்றதே அதிகம் என நினைக்கிறேன்.ஆனால் ஒவ்வொரு வெற்றிக்கு பிறகு தருக்கலும் தளும்பலும் பின்னர் ஒரு சிறிய உருத்தலும்,அவமதிப்புமாக அவை நிகழ்ந்ததை நான் மட்டுமாக அறிந்திருக்கிறேன்.அடைந்த வெற்றி பிறரின் மதிப்பும் செல்வாக்கும் என்னை அசைக்காத்தற்கு அந்த வெற்றிக்குபின் இருந்த எனக்கு மட்டுமே தெறிந்த அவமதிப்பு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.அதனால் முயற்சி பலனை கொடுக்கும் இறுதி கணத்தில் அதிலிருந்து முற்றும் விலகி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.நாவலில் நான் தனித்து பெற்ற அனுபவங்களை தொட்டுக்காட்டிய இடங்களில் திடுக்கிடுதலை உணர்ந்தேன்.


இரணியசிங்கநல்லூரின் தாழ்ந்த கூரைகொண்ட வீடுகளும் ஓராளுயர மண்கோட்டையும் தெரியலாயின. நான் சாய்வெயில் விரிந்த மாலையில் என் கோட்டைக்குள் நுழைந்தேன். கோட்டைக்கு வாசலுண்டு, ஆனால் கதவுகள் இல்லை. நூறாண்டுகளுக்கும் மேலாக காவலுமில்லை” 


என்கிற வரி மனத்தில் கரையாமல் நின்று கொண்டிருக்கிறது.இந்த எளிமையை கட்டற்ற தன்மையை உருவாக்கவே இவ்வளவு செயல்கள் தேவையாகிறது போலும் .


வாசிக்கையில் உங்களின் 2022 திட்டம் குறித்து பலவித கற்பனை எண்ணங்கள் ஏன் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது என புரியவில்லை. ஆனால்அறுபதும் அன்னையும்பதிவையும் இணைத்து இன்னதென புரியாத அவிழாத பொதிகளை போல ஆழ்மனதில் அடுக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.அவை அவழும் கணம் அதற்கு விடை கிடைக்கலாம்.இவ்வளவு எழுதி குவித்த பிறகும் தேடலின் வலி குன்றாது இருப்பதை பார்க்கும் போது வாழ்கை அப்படிபட்டதே என்கிற சமாதனம் அடைகிறேன்


ஆழந்த நட்புடன் 

கிருபாநிதி அரிகிருஷ்ணன்.


ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

அடையாளமாதல் * இடைச்செறுகல் *


ஶ்ரீ:



பதிவு : 572  / 762 / தேதி 18 ஏப்ரல்  2021


* இடைச்செறுகல்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 50.






முதல்வர் ரங்கசாமி மற்றும் வல்சராஜ் இருவேறு சந்தர்பங்களில் என்னிடம் சொன்ன சில விஷயங்களை அடிப்படையாக வைத்து இதை இப்படி ஊகிக்கிறேன் . 2008 களில் முதல்வராக இருந்த ரங்கசாமியை மாற்றும் பொருட்டு அவருக்கு எதிராக வல்சராஜ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வரிந்து கட்டிக் கொண்டிருந்த நேரம் . 2001ல் தலைவர் சண்முகம் முதல்வர் பதவில் இருந்து விலகியதில் இருந்து வல்சராஜ் புதுவை அரசியலில் எதிர்க இயலாத தனியாளுமையாக எழுந்து கொண்டிருந்தார்அவரை நான் அறிந்த வரை அவரின் கரவுத்தண்மை அவரை அரசியலில் வலிமையுள்ளவராக்கியது அவரது பலவீனமும் அதுவே  . பிறரின் கவனத்தை ஈர்க்காத அரசியல் பாணி அவருடையது. 2001 இறுதியில் தலைவர் சண்முகம் இரண்டாம் முறை முதல்வரான அந்த இடைப்பட்ட காலத்தில் சண்முகம் வல்சராஜ் இருவருக்குள் முரண்பாடுகள் உள்ளூறப் புகைந்து கொண்டு இருந்தது கொதிநிலையடைந்தது . அதன் துவக்கம் 1996 களில் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்தது . இருவருக்குள் நிகழ்ந்த அரசியல் நிலைப்பாடுகள் வல்சராஜை தலைவர் அணுக்கர் என்கிற கோட்பாட்டிலிருந்து வெளியே தள்ளி அவர்களின் உறவை கடுமையாக பாதித்திருந்தது . 1996 களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தட்டிக்கழித்தார் என சண்முகம் மீது வல்சராஜ் வைத்த முதற் குற்றச்சாட்டு . அது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் பொதுக் கருத்தும் கூட . அந்த தேர்தலில் காங்கிரஸின் முதல் நிலை தலைவர்களில் பலர் தோல்வியுற்றதால் ஆட்சி அமையுமானால் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக இருந்ததே அவர்களின் பதட்டத்திற்கு காரணம் . சண்முகம் ஆட்சி அமைப்பதில் ஆர்வம் காட்டாதது அவர் மீது வெறுப்பு உருவாகினாலும் அவர் மீதிருந்த ஆச்சம் காரணமாக அதை வெளிப்படையாக பேசத் தயங்கினர். அந்த கால கட்டத்தில் நாராயணசாமியும் சண்முத்திடம் இருந்து விலகல் துவங்கியது . வல்சராஜ் எப்போதும் நாராயணசாமிக்கு அணுக்கர் என்பதால் அந்த விலக்கத்தினால் ஊக்கம் பெற்று சண்முகம் எதிரான விம்சனத்தை வெளிப்படையாக வைக்கத் துவங்கினார் . ஆட்சி மாற்றத்திற்கான முயற்சியையும் அதற்கான வாய்ப்பிற்கு பிற எல்லோரையும் போல வல்சராஜ் காத்திருக்காமல் அது நிகழும் வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்தார் . 1997 களில் நிகழ்ந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்தை முதன்மை குற்றவாளியாக்கி மத்திய புலனாய்வின் கைகளுக்கு சென்றது அனைவரையும் சில காலம் வெருளச் செய்திருந்தது . அதன் பின் ஆட்சி கவிழ்ப்பை மறந்து ஆட்சி மாற்றம் பற்றி யோசிக்க துவங்கினர் . ஆட்சியில் இருந்த முதல்வர் ஜானகிராமன் மற்றும் கண்ணனுக்கு இடையேயான இழுபறிகள் அந்த வாய்ப்பை எளிதாக்கி ஊகங்களை உலவிட்டது . 1998 மாநிலங்களவை தேர்தலில் கட்சி போட்டியிட வேண்டாம் என சண்முகம் முடிவெடுத்தது மற்றொரு அரசியல் பிழை . அரசியல் தனிப்பட்ட காரணங்களே முக்கிய மாற்றங்களை கோருபவை என்றாலும்  கோட்பாடுட்டு ரீதியாக யாரும் மறுப்பு சொல்ல இயலாமல் அவற்றை முன்வைப்பதே அரசியல் என்பது , சண்முகத்தின் பலமே அனைத்தையும் அத்தகைய கருத்தியலுக்குள் கொண்டுவருவது . அம்முறை அவரால் அது  இயலவில்லை . அனைத்து தரப்பின் முற்றுகையில் இருந்தது முதல் காரணம் மற்றும் அரசியல் அடுத்த தலைமுறைக்கு கைமாறி இருப்பதை கணிக்க தவறியது இரண்டாவது காரணம் . வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு போட்டிடுவது கட்சி கடமைகளில் ஒன்று . அவர் நாராயணசாமி போட்டியிடுவதை தவிற்க விரும்பினார் அல்லது அவருக்கு மாற்று யாராவது அவரது திட்டத்தில் இருந்திருக்கலாம், கட்சி கூட்டத்தில் அதை சரியாக முன்வைக்க மிகுந்த தயக்கம் எழுந்ததற்குநாராயணசாமியுடனான முரண் வெளியில் தெரியவேண்டாம் என அவர் நினைத்திருக்கலாம் . ஆனால் அது ஒரு சிறு கணக்கு மட்டுமே. பதவியுள்ள நாராயணசாமியை  அவர் அஞ்சினார் என்பது உள்முகம்  . அவரது எதிர்பை மேலிட தலையீடினால் கடந்து 1998ல் நடந்த மாநிலங்களவை தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நாராயணசாமி தோல்வியடைந்தார் . அதிமுகவின் ஆதரவின் அடிப்படையில் அவர் வென்றிருக்கும் வாய்ப்பிருந்ததாக வல்சராஜ் உறுதியுடன் சொன்னார் . சண்முகம் தமிழக முதல்வருடனான நெருக்கம் அதை நிகழ்திக் கொடுத்திருக்கலாம் . அவர் அதற்கு முயற்சிக்கவில்லை என்பது அவரது குற்றச்சாட்டாக எழுந்தது  . அனைத்து காட்சிகள் மாறத் துவங்கியது அதன் பிறகு .  1998 நாடாளுமன்ற தேர்தலில் போட்டிட்ட சண்முகம் தோல்வியுற நேர்ந்தது அதே அதிமுகவின் ஆதரவின்மையால் . நாராயணசாமியின் மாநிலங்களவை தேர்தலில் சண்முகம் அதிமுகவின் ஆதரவை கேட்டுப் பெற்றிருந்தால் காங்கிரஸ் அதிமுகாவின் கூட்டணிக்கான வாய்ப்பு உருவாகியிருக்கலாம் . மொத்த அரசியலும் வேறொரு இடத்தை அடைத்திருக்கும்


அதன் பிறகு ஆட்சி மாற்றத்திற்கான எல்லா வாய்ப்பிற்கும் வல்சராஜ் தயக்கமில்லாது முயற்சிக்க ஆரம்பித்திருந்தார் . அவர் சட்டமன்ற உறுப்பினர் என்பதும் சண்முகத்தின் அணுக்கர் என்கிற அவரது முயற்சிகளின் பின்னணியில் சண்முகம் இருப்பதைப் போன்ற தோற்றம் இருந்தது . அதை மறுக்கும் இடம் தலைவர் சண்முகத்திற்கு இல்லை. மாநிலகட்சித் தலைமையை தாண்டி வல்சராஜ் எடுத்த முயற்சிகள்  சண்முகத்திற்கு பெரும் கொதிப்பை கொடுத்திருக்க வேண்டும்  . அவரது நீண்ட அரசியல் அனுபவம் அவற்றை மௌனமாக கடக்க சொல்லிக் கொடுத்திருந்தது . அவர் வழமை அவரது பலமாக இருந்தது . அனைத்தையும் சாதகமாக எடுத்துக் கொண்டு காய் நகர்த்த துவங்கி ஒரு கட்டத்தில் வெற்றி அடைந்தனர். 1999 ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் வல்சராஜ் மற்றும் கண்ணன்  இடத்தில் இருந்தனர் . அது சண்முகம் நினைக்காத காலத்தில் நிகழ்ந்து புதுவை அரசியல் சண்முகத்தின் பிடியிலிருந்து  நழுவியது . அவரது வீழ்ச்சி துவங்கியது அந்த புள்ளியில் . அவரது வீழ்ச்சி சட்டென நிகழவில்லை .1999 களில் முதல்வராகி பின்னர்  இறக்கங்கள் நிகழ்ந்து  பின் அவரால் தவிற்க இயலாம ஒரு தருணத்தில் அது திகழ்ந்து முடிந்தது

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 73 அழைப்பிதழ்