https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

* அழகால் நிறைத்தல் *

ஶ்ரீ:




பதிவு :  638 / தேதி 29 ஆகஸ்ட் 2019

* அழகால் நிறைத்தல்


சமீபத்தில் வாட்ஸப் புரபைல் பக்கத்தில் நண்பர் தாமரை கண்ணன் வெளியிட்டிருந்த புகைப் படத்தை பார்க்க நேர்ந்தது. பார்த்ததும் அதன் மிளிர்வை சொல்ல வார்த்தைகள் இல்லை , அழகு மிகுந்த இரு இளம் தளிர் முகங்கள் கண்களை விட்டு நீங்கவில்லை . பொதுவாக ஊடக விஷயங்களை பார்த்து கடப்பது என் வழமை என்றாலும் அதைப்போல இதை கடக்க இயலவில்லை 

நன்றி,
வாழ்த்துக்கள்.







(அப்புகைப்படம் எனக்கு ஒரு கண்ணதாசன் பாடலை நினைவுபடுத்தியது. அதனை கீழே அளித்துள்ளேன். ஒரு கணம் உள்ளம் நெகிழ்ந்து அகம் குளிர்ந்தது. ராம் கிருஷ்ண ஹரி என்றார் நண்பர் மயிலாடுதுறை பிரபு ) 


சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

பால் மணக்கும் பருவத்திலே
உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
பித்துப் போல் படுத்திருந்தேன்
அன்னாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வமொழி
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா.....
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா.......
பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா.....
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா.......
நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்து விட்டால்
இல்லை ஒரு துன்பமடா

கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ



புதன், 28 ஆகஸ்ட், 2019

அடையாளமாதல் - 457 *பார்வையும் பதிவும் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 457

பதிவு : 457 / 637 / தேதி 28 ஆகஸ்ட் 2019

*பார்வையும் பதிவும் 


எழுச்சியின் விலை ” - 58
முரண்களின் தொகை -03 .





அரசியலில் எந்த பின்புலமும் இல்லை என்றபோதும் , அது எனது  பிரதான துறையாக சிறிது சிறிதாக மாறி நின்றதற்கு எனது ஆழ்மன விழைவால்  செலுத்துதல்  , என்கிற ஒன்றைத் தவிர வேறு எந்த காரணமும் என்னுள் நிலை நில்லாதவை . அன்று அரசியலை  நான் இப்போதிருக்கும் புரிதலுடனும் அதற்குறிய கலைச்சொற்கள் தரும் திறப்புடனும் அனுகியதில்லையாரொருவரின் அதீத ஈடுபாடும் கூட அவரை வெற்றிக்கு அருகே கொண்டு நிறுத்திவிடுவதில்லை. காலம் என்கிற ஒன்று  கனியாமல் அரசியலில் என்று மட்டுமல்லாது அவற்றின் ஏறு படிகள் யாரின் கண்களுக்கும் புலப்படுவதில்லைஎனக்கு கிடைத்த வாய்ப்புகள் எனது தேடலின் பொருட்டு நிகழ்ந்தால் என்னவோ வெற்றி என்கிற அடியாளத்துடன் அதிலேயே நீடித்து இருக்க தேவைபடும் சமரசங்களை என்னால் ஏற்க முடியாது போனது.

வாழ்வின் யதார்த்தை பற்றி எனது பிற துறைகளை விட அரசியலில் நான் அடைந்த புரிதல்கள் அளப்பறியவை . இன்றுவரை விளங்கிக் கொள்ள முடியாதது ஒன்று உள்ளது என்றால் அது , எனக்கு அரசியலில் திறந்த அத்தனை கதவுகளும் எனக்கு வாழ்வின் புரிதலை கொடுக்க வல்லவையாக மட்டுமே இருந்தன .அது பிறர் எவரும் அடைய இயலாத உயரம் என்றாலும் , அது என்னை பிறர் எண்ணும் வெற்றி” என்கிற ஒற்றைக்கு அருகில்  அழைத்து செல்லவில்லை, ஆனால் என்னளவில் அவைகளில் நான் உணர்ந்தது வாழ்வியலின்  யதார்த்தம்”.எனவே எனது அரசியல் தேடுதலில் விளைந்தப் புரிதல்” என்கிற ஒன்றை கடந்து பிற எதையும் எனக்குள் ஏற்படுத்தவில்லை .

அதனாலேயே துரோகமும் ,கைவிடப் படுகையும் குரோதமும்,கசப்பும், வன்மமுமாக மாறி நிற்பது இத்துறையின் ஊழ் என்கிறபோதும் மனம் அலைக்கழியாது , அதை ஆழ்மனப் புரிதலால் மிக எளிதாக கடந்ததை  இப்போது எண்ணிப் பார்க்கிறேன் .

அரசியலில் நிகழ்ந்த புரிதல்கள் என்னுள் சிதறிக் கிடைத்தவை .பின்னாளில் இலக்கிய வாசிப்பில் வழியாக அவற்றை  நினைவில் கொண்டுவந்து  விரித்தும் தொகுத்தும் கொள்ள முயன்றபடி இருக்கிறேன்.இந்த வலைப்பூ தளம் எனக்கு அதைதான் நிகழ்த்திக் கொடுக்கிறது .செயலின் விளைவுகள் கருத்துக்களாக ஆழ்மனதுடன் உரையாடுபவை. அவைகளை தொகுத்து ஒரு தரிசனமாக கொண்டால் வாழ்கையை பதறாதே வாழ்ந்து நிறைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறேன்

அரசியல் உணர்ந்ததை வாழ்வின் ஏதாவதொரு சமயத்தில் எதிர் கொள்ளும் போது , கிடைத்த அனுபவத்தைக் கொண்டு வாழ்கையை இன்னும் அனுகி புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் , கசப்படைதல் என்கிற ஒன்று நிகழாமலேயே கடந்து போக இயலும் . இந்தப் பதிவுகள் எனது மனதிற்கு மிக அனுக்கமாக உணரும் என் அரசியல் செயல்பாடுகளை குறித்து அமைந்துவிட்டது திட்டமிட்ட ஒன்றல்ல என்றாலும் விலக்கமுடியாத ஒன்று என்றே என்னளவில் நினைக்கிறேன்.தன்மயம்” என்கிற கோட்பாடிறகு இணங்க  சில காலம் கழிந்து இதறக்கெல்லாம் புது அர்த்தம் எழுந்து வரக்கூடும் .

எனது வாழ்கையில் நான் ஈடுபட்ட பல நடவடிக்கைகளில் எனது அரசியல் ஈடுபாட்டைத்தான் முதன்மையாக எப்போதும் எண்ணுவேன்எனது மனம் , புத்தி ,சிந்தனை,உடல் என சகலத்தாலும் ஈர்ககப்பட்ட ஒரு துறையாக அது எப்போதும்   இருந்திருக்கிறது. அரசியல் தத்துவமும் உளவியலும் பிணைந்த ஒன்று .அதனாலேயே நான் அறிந்து கொள்ள விழையும் துறைகளாக எப்போதும் இருந்ததை மிகத் தாமதமாக புரிந்து கொண்டேன்   .

மனம் . நான் என்னைக் கண்டடையும் முயற்சியில் அரசியலின் வழியாக என்னில் அது என்னவாக நிகழ்ந்தது என , அதை எழுத்தில் வெளிப்படுத்தும் போது என் மனதை மிக அனுக்கமாக உணர்கிறேன் . அதே சமயம் அதன் புரிந்து கொள்ள இயலாத பரிமாணங்கள் என்னை நடுக்குற வைக்கின்றன .நான் அறிந்த நான்” என்ற ஒன்று இல்லை என்பது அதற்கு காரணம் .உடலுடன் வாழ்வதை பல அறிஞர்கள் பாம்புடன் ஒரு கூரையில் துயின்றால் போல” என்கிற அவர்களின் கசந்த சொல்லாட்சியை நினைவுறுகிறேன்.அவை திடுக்கிட வைக்கும் உண்மைகள் .

இலக்கிய வாசிப்பே எனக்கு  மொழியை மீட்டுக் கொடுத்தது. வாழ்கையில் அடைந்த வருத்தமும் அதனூடாக அடைந்த கசப்புகளையும் எழுதி கடக்க இயலும் என எனக்கு இந்த வலைப்பூ தளம் புரியவைத்தது .எண்ணங்களை எழுதிக் கடக்கும் போது அவை என்னை விட்டு முற்றாக விலகுவதை அறிந்து கொள்கிறேன்.

எனது மரபான நம்பிக்கையை தக்க வைக்கும் முயலும் அதே சமயம் ,நவீன மனம் சிந்தனை வழியாக நான் அடைவது என்ன ? என்கிற இரண்டும் ஏக காலத்தில் எனக்குள் நிகழ்ந்ததை நினைத்துப் பார்க்கிறேன் .அது ஒரு அற்புதமான நிலை .

நான் எனது தேடலின் இறுதி பகுதிக்கு வந்து சேர்ந்திருப்பதை உணரமுடிகிறது .ஜெயமோகனின் வெண்முரசு” அதில் பெரும் பங்காற்றியது .எனக்கு மட்டுமே மிக அணுக்கமாக உணரப்பட்ட எனது நம்பிக்கைகளை அவரது எழுத்தில் பல சமயங்களில் பார்க்கும் போது மிக நுண்ணிய புரிதல்களை கொடுக்க வல்லவைகளாக இருக்கின்றது . அவரது சில கூற்றுக்கள் எனது மரபான மனதை சீண்டுபவையாக இருப்பவை .நான் அவற்றை  ஏற்க மறுத்தாலும் அற்றைக் கடந்தே என்னை அவற்றில் உள்ள பிறிதொரு கூற்றை கண்டடைகிறேன் என்பது மிகையல்ல .

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

அடையாளமாதல் - 456 * இயற்கையின் மாறுபாடு *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 456

பதிவு : 456 / 636 / தேதி 26 ஆகஸ்ட் 2019

* இயற்கையின் மாறுபாடு  * 


எழுச்சியின் விலை ” - 57
முரண்களின் தொகை -03 .




தொழில் குறித்த நுண்ணுர்வுகளும் ,  அது பற்றிய பிற முடிவுகளையும்  ஆழ்மனத்தால் உணரப்படுவது , விளக்கங்களை கோராதது, தானான புரிதலைக் கொண்டது , அதற்கென சில அடிப்படை கோட்பாடுகள் உள்ளது என்பதையும் , அதில் முழுமையுடன் ஈடுபடும் எவரும் அதை உள்ளாழத்தில் எங்கோ உணர்ந்துதான் இருப்பர்  . அது பற்றிய புரிதல் இல்லாதவர்கள் ஊழின் வசத்தால் அத்துறைக்கு தவறி வந்தவர்கள் . அவர்களுக்கு உணருதல் என்கிற ஒன்றை சொற்கலால் விளக்க முயற்சிப்பது வீண் நான் அப்போது அறிந்திருக்கவில்லை . உரையாடல் மூலம் நான் உணரும் எல்லாவற்றையும் எல்லோருக்கும்  புரியவைக்க இயலும் என்கிற எனது கோட்பாடு இங்கு தோற்றுப்போனது. எனது நண்பர்களுக்கு கடைசீ வரை அவற்றை என்னால் உணர்த்த இயலவில்லை.கராணம் புரிதல் காலத்தினாலானது. அது திறந்து கொடுக்காதவரை நம் உரையாடல் யாருக்கு எவ்விதம் பொருள் படுகிறதோ அது நாம் அவருக்கு சொன்னதாகிறது.

தொழில் குறித்த“கருத்தியல்கள்” தானான புரிதலுக்கு உள்ளாகுபவைகள் அவற்றை புறவயமான சொற்களைக் கொண்டு புரியவைக்க முயற்சிப்பது போல ஒரு மொண்ணைதனம் வேறொன்றில்லை  என்பதை  மிக தாமதமாக உணர்ந்தேன் .பிறருக்கு புரியவைக்க நான் முயன்ற ஒவ்வொரு முறையும் அவர்களின் இளிவரலுக்கு ஆளாக நேர்ந்தது .கூட்டு முறிவதற்கு அதுவே காரணமானது. என்னால் விளக்க முடியாத"புரிதல்" என்கிற ஒன்றை வாழ்வின் வெவ்வேறு சந்தர்ப்பத்தில்  பல காலம் கழிந்து அவர்களும் அதை உணர்ந்தார்கள் என்பது வேறு விஷயம்

எனது வாழ்வியல் சார்ந்த முடிவுகள் குறித்து யாரிடமும் ஆலோசனை பெற்றதில்லை .அவை அனைத்தும் உள்ளுணர்வு சார்ந்தே எடுக்கப்பட்டவை .முடிவுகளை எடுக்க புறவயமான தகவல்களுக்கு நான் காத்திருப்பதில்லை.எடுத்த முடிவுகள் எதிர் திசையில் பயணிக்கையில் என்னை தற்காத்து கொள்ள இதுவரை யாரிடமும் இறஞ்சி நின்றதில்லை. எனது முடிவுகளால்  விளையும் எதையும் திறந்த மனதுடன் அனுகுவது ஒன்றையே இது நாள் வரை செய்து வந்திருக்கிறேன். தன்மயவாதத்தை ஏற்பவன் அனைத்தும் தற்செயல்” என்பதை நிராகரிக்கிறேன்.தற்செயல் என ஒன்று இருக்குமானால் அது  "அறம்"  என்பதற்கு எதிரானது .ஒருவர் விழைவு வேறொருவரின் கொடுங் கனவு .முடிவுகள்  மாற்றத்தக்கது  என்றால் அதை மாற்றி அமைக்க நமது முயற்சிகள் வழி செய்கின்றன என்றால் என்றால் யாரும் தங்கள் வாழ்வியல் போக்கை நிர்ணயிக்க முடியுமானால் அது உலகின் பொதுப்போக்கை மாற்றாக கூடியது .   செல்வாக்குள்ளவர்கள் கூட அதிலிருந்து தப்ப முடிவதில்லை என்கிறபோது தேடி பெரும் தரவுகள்   மட்டும் எப்படி அவற்றை மாற்றிவிடும் போகின்றன .

புத்தி கூர்மையால் முடிவுகளின் பாதைகளை மாற்றி அமைத்துவிட்டதாக பலர் கூறுவதுண்டு . அது ஆற்றின் போக்கை மாற்றுவதைப் போல .ஒரு இடத்தில் நம் சொல்லுக்கு கட்டுபட்டதாக நடிக்கும் ஆறு வேறொரு இடத்தில் எண்ண இயலாத பாதிப்புகளை நிகழ்த்திவிட்டு செல்கிறது

வாழ்வின் இறுதிவரை உடன் வரும் மனம் இரக்கமில்லாததுநமது முடிவுகளில் இருந்து நமக்கு விரோதித்து விளைந்த அனைத்தையும் நம்மை பொறுப்பேற்க சொல்லுவது . குன்றி மன்றாடச் செய்வது , கழிவிரக்கம் கொள்ள வைப்பது, சுயகௌரவத்தை நிலைகுலைப்பது .அதில் சிக்கும் எவரும் உயிரிருந்தும்  , உயிரற்றவர்களே. அவர்களுக்கு அதிலிருந்து ஒரு நாளும் மீட்சியில்லை . முடிவுகள் நம்முடையதாக இருப்பினும் அது காலத்துடன் முயங்கியே முடிவுகளாக பரிணமிப்பவை, அதன் மேல் நமது முடிவுகள் நிலை கொள்பவை என்பது போல பேதமை வேறில்லை.

மனதிலிருந்து என்னைத் தற்காத்துக் கொள்ள நிகழ்வுகளை கருத்துக்களாக மாற்ற கற்றுக் கொண்டது அரசியலில் ஈடுபட்ட பிறகு .அதிலிருந்த தத்துவம் , தர்க்கமும்  என அது உளவியலில் நிகழும் தாக்கம் குறித்த ஆவல் என ஆழ்மனதில் எங்கோ உணர்ந்தபடி இருந்திருக்க வேண்டும்  . அதை அடிப்படையாக கொண்ட அரசியல் என்னில் அதீத ஈடுபாடு ஏற்படுவதற்கு , அது முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் .இல்லாது போனால் எந்த அரசியல் பின்புலமும் அற்ற நான் அதில் தீவிரத்துடன் ஈடுபட வேறு காரணம் இருக்க வாய்ப்பில்லை. விழைவுகள் ஆழ்மன தேவையால் நிகழ்வன என்பதை மிகத் தாமதமாக உணர்ந்தேன் .

மானுட உளவியலை இலக்கியங்கள் பல கூறாக தனித்தும் தொகுத்தும் கொடுத்திருந்திருப்பதை , அரசியலின் நிகர் வாழ்வின் கணங்களில்  நின்று பார்த்து அவற்றை பொறுத்தி உணர்ந்து புரிந்து கொள்வது போல இனிது  வேறொன்றில்லை  அரசியல் பல்வேறு உலகியல் கூறுகளை நேரடி அனுபவத்தின், வழியாக அறிதல் அவைகளை இன்னும் நுணிகி அறிய இயலுவதுவாழ்வின் பல பரிமாணங்களை உணரும் ஒருவர்  அடையும் வாழவியல் திருப்தியுறுகைக்கு நிகரான வேறொன்று இருப்பதாக நினைக்கவில்லை . பல வழிகாட்டியாக , அறிவுத்துவதாக இருந்தாலும் அவை அனைத்துமே சாமான்யனின் நிகர் வாழ்கையை நுண்மையாக உணராமல் போனால் அது வாழ்கையில் பிரதிபலிப்பதில்லை .

பல்வேறு தளங்களில் ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கும்  கருத்தியல் முரணியக்கத்தின் விளைவுகள்  அரசியலில் வெளிப்படும் போது அது  மானுட போக்கை நிர்ணயிக்கிற வல்லமையை அடைந்து விடுகிறது .ஏறக்குறைய ஒவ்வொருவரின் வாழ்கையில் ஏதாவதொரு தருணத்தில் ஏற்படும் அதன் பிரதிபளிப்பை தவிர்க இயலாது. யார் எடுக்கும் எவ்வகை முடிகளும் அவற்றை ஒட்டியும் , அல்லது அதற்கு எதிராக பயணிப்பது என வாழ்கையை நடத்திச் சென்றாலும், அது தனி ஒருவனுடைய சிந்தனையில் மட்டும் நிகழ்வதல்ல ஒட்டு மொத்த ஜனத்திரளின் மனநிலையின் தொகுப்பே அதிலிருந்து கிளைத்தவையாக , அதிலிருந்து ஒரு துளி ஒவ்வொருவரின் ஆழ்மனத்தில் அது வேர்விட்டு பரந்திருப்பதை பார்த்திருக்கிறேன் .