https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 7 ஜனவரி, 2023

அடையாளமாதல் * விளையாட்டின் வெப்பம் *

 


ஶ்ரீ:



பதிவு : 657  / 847 / தேதி 07 ஜனவரி  2023



* விளையாட்டின் வெப்பம் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 52 .







காலை முதல் தலைவரின் வீட்டு இரும்பு கிராதி கதவை பூட்டி யாரையும் உள்ள அனுமதிக்காதுகேரோபோல ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்தோம். மாநில கட்சி முன்னணித் தலைவர்கள் தில்லி மேலிட முடிவை எதிர்க்கிறார்கள் என அவர்களை ஓரணியாகத் திரட்டி அதன் மூலம் நாராயணசாமி தனிமைபடுத்துவது என திட்டமிட்டேன். மரைக்காயர் எப்போதும் எதிர் தரப்பு என்பதால் அவர் இப்போதைய பிரச்சனை இல்லை. அவர் தனது இடத்திற்கான போட்டியில் துவக்க காலத்தில் இருந்து போராடிக் கொண்டிருப்பவர் ஆனால் நாராயணசாமியின் அரசியல் நுழைவு அப்படியானதல்ல . அவர் அரசியல் வாழ்க்கை சண்முகத்தின் தனிப்பட்ட கணக்கினால் நிகழ்ந்தது. அன்றைய சூழலில் நாராணசாமி போன்ற ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக நுழைவது அவர் கனவிலும் காண முடியாத ஒன்று. அது சண்முகத்தின் அரசியல் பிழையாக அப்போதே பார்க்கப்பட்டாலும் செய்நன்றியில் இருந்து வெளியேறும் உரிமை நாராயணசாமிக்கு இல்லை என்பது எப்போதைக்குமான அரசியல் கணக்காக இருந்தது. தலைவருக்கு அவர் முரண்பட்டதால் இன்று இது நிகழ்ந்திருக்கிறது. தலைவரை ஆதரித்து அனைத்து உப அமைப்புகள் தீர்மானம் கொண்டு வந்ததற்கு பின்னால் சண்முகம் இல்லை அது அந்தந்த அமைப்புகளின் சுதந்திர கருத்து. அதை ஒரு சான்றாக அவர் தில்லியில் உபயோகப்படுத்தியது அவரது அரசியல் பிழையாக மாறியது. என் போன்றவர்களை பற்றி எரிய செய்த விஷயம் ஜனநாயக ரீதியில் ஒட்டு மொத்த அமைப்பை நிராகரித்தது அன்று நாராயணசாமியின் குற்றமாக பார்க்கப்பட்டது. இதில் மரைக்காயரை சேர்க்க முடியாது அவர் எப்போதும் அனைத்திற்கும் எதிர் தரப்பு. நாராயணசாமி தன் கணக்கு தவிற பிற எதையும் கருத்தில் கொள்ளாதவர் என்பதால் அவர் அரசியல் அராஜகவாதியாக பார்க்கப்பட்டார் . தான் நினைத்ததை செய்ய அவர் கடைபிடிக்கும் பாணியால் அவருக்குநரிஎன பெயரால் அழைப்பவர்களும் உண்டு.


தலைவரை சந்திக்க விழைந்த யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பது பல மூத்த தலைவர்களை எரிச்சலடையச் செய்தாலும். அது ஒரு தீவிர எதிர்ப்பு நிலை இந்த தேரத்தில் வேறு எந்த வகைகளில் அதை வெளிப்படுத்துவது என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை. சீட்டு யாருக்கு என ஒட்டு மொத்த அமைப்பின் சிபாரிசு வெற்று அரசியல் யுக்தி என மேலிடத்தை நம்ப வைத்தது நாராயணசாமி. அது அவருக்கும் எதிராகி மரைக்காயருக்கு சாதகமாக திரும்பியது


மரைக்காயர் ஒரு ஆச்சர்யமான ஆளுமை புதுவை அரசியலில் ஏறிய படிகளில் இறங்காமல் வெற்றியை மட்டுமே தொடர்ந்து அடைந்தவர். 1991 களில் விதிவிலக்காக சில பின்னடைவுகளை சந்தித்தை கணக்கில் எடுக்கவில்லை என்றால் அவரை போல வெற்றிகரமான அரசியல் வாழ்க்கை புதுவை அரசியலில் யாருக்கும் அமையவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு மிக சிக்கலானது. மற்ற மாநில கட்சிகளைப் போல தலைமைக்கு  நெருக்கமானவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்ப்பட்டுக் கொண்டே இருந்தும் . தலைமையிடம் அதை கேட்கும் துணிவு மற்ற தலைவர்களுக்கு இருப்பதில்லை. அதே போல எந்த காரணத்தையும் சொல்லாமல் தூக்கி எறியப்படும் போதும் பிறர் ஆழ்ந்த மௌனத்தை மட்டுமே பதிலாக கொடுக்கிறார்கள். அது போன்ற ஒன்று காங்கிரஸில் இல்லை என சொல்ல மாட்டேன் ஆனால் பிற கட்சிகளை கணக்கில் அவ்வளவு எளிதில் நிகழ்வதில்லை. ஒவ்வொரு முடிவிற்கு பின்னாலும் ஒரு கருதுகோள் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மரைக்காயர் தனது சிறுபான்மை கார்டை பயன்படுத்தி மிக வெற்றிகரமாக தன்னை இருத்திக் கொண்டவர். காங்கிரஸில் இரண்டு கார்டுகள் பலமானவை ஒன்று தாழ்த்தப்பட்டவர்கள் இரண்டு சிறுபான்மையினர். மரைக்காயர் அதை மிகத் திறமையாக வாழ்நாளெல்லாம் கையாண்டார். இம்முறை எந்தத் தேர்தலிலும் தோல்வியுறாதவர் என்கிற கருதுகோள் அவரை தெரிவு செய்ய வைத்தது


போராட்டம் மூன்று மணி நேரம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. சற்று தணியும் போது புதிதாக வந்து சேர்பவர்களால் மீளவும் கிளர்ந்து விடப்பட்டு அடுத்த சில மணிநேரம் அந்த உணர்வு கொந்தளிப்பு நீண்டது. அதன் ஒரு உச்சகட்ட சூழலில் நாராயணசாமியின் உள்நுழைவு துரதிஷ்டவசமானது. அவரை பார்த்ததும் கூட்டத்தின் வெறி ஏறி ஏறி வந்தது. அதுவரை இலக்கில்லாமல் இருந்த கூட்டத்திற்கு எதிரி கண்ணில் பட்டது போலாகி கூட்டம் உக்கிரமானது. இப்போது அதற்கான இலக்கு கிடைத்துவிட்தால் அதுவரை இருந்த அனைத்து நெறிகளும் காணாமலாயின . கைகளை அவரை நோக்கி நீட்டி வசவுகள் வரத் துவங்கின. ஒரு சிறு ஊக்கி போதும் மொத்த கூட்டத்தையும் வன்முறை களத்தை நோக்கி நாகர்த்த. எதிர்ப்பை இந்த அளவிற்கு எதிர்பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். சற்று திகைத்தவர் தன்னை திரட்டிக் கொள்ள காருக்கு அருகில் நின்று கொண்டார்என்னை பார்த்ததும் அருகில் அழைத்தார். நான் அவரிடம் சென்று சூழ்நிலை சரியில்லை இப்போது நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். கூட்டம் சற்று ஓய்ந்த பிறகு உங்களை அழைக்கிறேன். இப்போது தலைவரை சந்திப்பது சரியாக இருக்காது என்றேன் . அவர் என்னிடம் ஏளனமாகஇது போன்ற வெற்றுக் கூட்டத்தை இதைவிட மிகப் பெரிய அளவில் வட இந்தியாவில் சந்தித்திருக்கிறேன். இதை உடனே நீ கட்டுப்படுத்த வேண்டும் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு கட்சி முடிவிற்கு எதிராக நீ செயலபடுவது உன் எதிர் காலத்திற்கு நல்லதல்லஎன்றார். அவரது மிரட்டல் பாணி என்னை உக்கிரமாக்கியது. நான் அமைதியாக எந்த பதிலும் சொல்லாமல் நின்றேன். நான் சொன்னவற்றை புறக்கணித்து தலைவர் வீட்டிற்குள் நுழைய முயன்றார். அவரது செயல் எரிவதில் எண்ணை விட்டது போலானது. ஆரம்பத்தில் அவரை சூழ்ந்து ஓழிக கோஷம் ஓங்கி ஒலிக்க அவர் அதை கண்டுகொள்ளாமல் நுழைவாயிலை நோக்கி நடந்தார். கதவு பூட்டப்பட்டிருப்பதை பார்த்ததும் அதிர்வடைவதை பார்க்க முடிந்தது. கதவை திறக்கச் சொல்லி உரத்த குரல் எழுப்பி கூட்டத்தை மிரட்ட நினைத்தது எடுபடவில்லை என்பதுடன் அதற்கு எதிர்விணை எழத்துவங்கியது அவரை சுற்றி சூழந்த கூட்டம் கூடி கூடி வந்து அதுவரை அவரை சுற்றியிருந்த கூட்டத்தின் உள் வளைவு குறுகத் தொடங்கியது. நான் விபரீதமாக உணர்வதற்குள் யாரோ அவரை பிடித்து தள்ள தடுமாறி படிகளில் விழுந்தார்.எழ முயற்சித்தவரை யாரோ மீண்டும் தள்ள மறுபடியும் தடுமாறினார். அவர் எவ்வளவு முயன்றும் தலைவர் வீட்டிற்குள் நுழைய முடியவில்லை. கோபமாக வன்மமாகி அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறினார். நான் அந்த வட்டத்திற்கு வெளியே அவற்றை பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தேன். அவரது உதவிக்கு செல்ல வேண்டும் என தோன்றவில்லை. நான் இது போன்ற ஒரு அசம்பாவிதத்தை உத்தேசித்து சொன்னவற்றை அவர் மறுத்த விதம் எனக்குள் கடும் சினத்தை உருவாக்கி இருந்தது 


வில்லங்கம் நாராயணசாமிக்கு எதிராக எனது நண்பர்கள் சிலரை திசை திருப்பி நான் சுதாரிக்கும் முன்பாக அவர் மீது அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பல நூறு பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் பல தரப்பினர் இருந்தனர் அரசியலில் எதிரிகளை விட நண்பர்களே எல்லா சமயங்களிலும் ஆபத்தானவர்களாகி நமது ஊழை வேறுவிதம் கொண்டு சென்று விடுகிறார்கள் . அன்றும் அது தான் நடந்தது .


செவ்வாய், 3 ஜனவரி, 2023

அடையாளமாதல் * சிறகும் சிறையும் *

  

ஶ்ரீ:



பதிவு : 656  / 846 / தேதி 03 ஜனவரி  2023



சிறகும் சிறையும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 51 .





சண்முகத்தின் தலைமைக்கு எதிராகமுதியவர்கள் பதவி விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்என்கிற தனது கலகக் குரலை நாராயணசாமி வெளிப்படுத்தினார். கட்சி உள்ளரங்கில் அதை சொல்லும் வாய்ப்பு அவருக்கு இருந்த போதும் அதை அங்கு சொல்லாமல் தனது ஆதரவாளன் பாண்டியனும் அவனின் சில நண்பர்களும் துவங்கி பல ஆண்டுகள் உறைநிலையில் இருந்தவெண்புற சேனைஎன்கிற அமைப்பில் கூட்டம் ஒன்றில் வெளியிட்டார். அந்த அறிவிப்பால் தலைமைக்கு எதிரான அறைகூவலாக அதை வைக்காமல் அவரை எச்சரிக்கும் தொணிதான் அதில் வெளிப்பட்டது. அது அவரிடம் தனது பேரம் தொடர்பாக இருக்கலாம் என ஊகிக்கிறேன். காரணம்அதன் பின் அவரின் எந்த செயல்பாடும் அதை நோக்கி செல்லவில்லை. பாண்டியன் போன்ற சிலர் அந்த அறிவிப்பால் அமைப்பு மீண்டும் உயிர் பெறும் என நம்பினார்கள். அப்படி எதுவும் பின்னர் நிகழவில்லை


ஹோட்டல் மாஸில்நடைபெற்றவெண்புறா சேணைகூட்டத்தில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் சிலர் அழைக்கப்பட்டனர் . காங்கிரஸில் பல்வேறு உப அமைப்புகள் இருக்கையில் புதிய அமைப்புகள் ஏன் உருவாக்கபட வேண்டும் என்கிற கேள்விக்கு நாராயணசாமி பதிலளிக்காமல். கட்சியில் முதியவர்கள் ஓய்வு பெற்று பதவி விலவேண்டும். தலைமை இளைஞர்கள் கைகளில் கொடுக்கப்பட வேண்டும் என்கிற கலகக் கருத்தை முன்வைத்தார். கட்சிக்குள் பேச வேண்டியதை பொது வெளியில் பேசினார். அதை கட்சி அலுவலகத்தில் வெளிப்படுத்தியிருந்தால் அதற்கு எதிர்விணைகள் எழுந்திருக்கும். அவருக்கு முற்றிலும் எதிராக கூட அது சென்றிருக்கலாம். ஆனால் அந்த பேச்சு தேர்ந்த அரசுசூழ்தல் அது புதிய முரண்பாட்டை துவக்கியது பல விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. மாநில இளைஞர் காங்கிரஸை அவர் அங்கீகரிக்கவில்லை அல்லது அதன் மீது தனது செல்வாக்கு இல்லை என காட்ட நினைத்திருக்கலாம் . அது எனது முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது அடிப்படைக் காரணம். இளைஞர் காங்கிரஸ் அமைப்பு ரீதியில் பலமிக்கதாக உருவாகிக் கொண்டிருக்கிறது என அறிவார். ஆனால் மேல் கீழ அடுக்குகள் இல்லாமல் இருப்பது அதன் பலவீணம் என்றும் அறிந்திருந்தார். பாராளுமன்றத் தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு அதற்கு சாதகமில்லாத சூழலை எதிர்க்கும் என ஊகித்திருக்க வேண்டும். மிக தெளிவான காய் நகர்த்தல். பின்னர் தில்லியில் பாராளுமன்றத் வேட்பாளர் போட்டியில் தானும் இருப்பதை கட்சி மேலிடத்திற்கு தெரியபடுத்தினார். இவை எதுவும் புதுவை கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள் தவிர பிறர் அறியவில்லை. நாங்கள் மரைக்காயரை மட்டும் கணக்கில் எடுத்து எங்கள் செயல்பாடுகளை ஒருங்கியிருந்தோம். தில்லியில் நாராயணசாமி தலைவருக்கு எதிராக செய்த சில விஷயங்களை எதிர் கொள்ள அந்த அனைத்து அமைப்பு தீர்மானம் தேவையாய் இருந்திருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் தலைவர் அதை தவிற்திருக்கலாம்


நாராயணசாமியிம் மரைக்காயரும் தில்லியில் இருந்தார்கள். நீண்ட இழுபறி நாராயணசாமிக்கும் மரைக்காயருக்கும் நிகழ்ந்தருக்க வேண்டும். சண்முகம் அந்த ஆட்டத்தின முதல் நிலையிலேயே வெட்டுபட்டிருக்க வேண்டும். அமைப்பு விரும்புகிறது தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது போன்றவை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.காரணம் உப அமைப்புகள் தலைமைக்கு கட்டுப்பட்டவைகள் அவற்றின் கருத்து தலைவர் விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறது என எடுத்துக் கொள்ளப்பட்டது. அகில இந்திய கட்சி அமைப்பு தனது வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதை நூறு சதம் உறுதியானவருக்கு வழங்க விரும்பியது. கடந்த தேர்தலில் சண்முகம் தோற்றது அவருக்கு எதிராக திரும்பியது. மிச்சமுள்ள இருவரில் மரைக்காயர் அதுவரை தோல்வியடையாதவர் என்கிற நிலை அவருக்கு சாதகமாக திரும்பியது. நாராயணசாமியும் சண்முகமும் ஒரே அணியாக இருந்திருந்திருந்தால் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம். நாராயணசாமி சண்முகத்திற்கு எதிராக அன்று பேசியது இந்த பேரத்திற்கு. ஆனால் சண்முகம் அதற்கு உடனபடவில்லை. தில்லியின் அன்றைய போக்கை அவர் சரியாக கணித்திருக்கவில்லை என்பது அவரின் இறுதுகட்ட ஆட்டத்தில் இடமிழந்தது அவரது ஒட்டு மொத்த அரசியலுக்கும் பெரிய சறுக்கலை துவங்கி வைத்தது


நண்பர்களுடன் சண்முகம் வீட்டில் அதிகாலை போராட்ட வடிவு குறித்த ஆலோசணையின் போது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட மரைக்காயர் மரியாதை நிமித்தமாக சண்முகத்தை அன்று காலை சந்திக்க வருகிறார் என்கிற செய்தி கிடைத்தது அன்னறை போராட்டத்திற்கு ஒரு வடிவத்தை ஏற்படுத்திக் கொடுத்தது . மரைக்காயரை சண்மகத்தை சந்திக்க விடக்கூடாது என்பது மட்டுமல்ல யாரையும் சந்திக்க விடுவதில்லை அதை மீறி சந்திக்க விரும்புபவர்கள் மரைக்காயார் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்பது அதன் ஒற்றை திட்டம். பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அனைத்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி தோல்வியுற்றறவர்கள் கூட இணைந்து செய்யவேண்டியது. வாக்கு வங்கி என்பது நீண்ட காலம் அவர்கள் உருவாக்கி வைத்திருப்பது. அவர்களின் ஆதரவால் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. வேட்பாளரின் ஆளுமை மற்றும் கூட்டணி அந்த வெற்றியை எளிதாக்கினாலும் இன்றைய நாங்கள் திட்டமிட்ட எதிர்ப்பு தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு அது ஒரு தடையை உருவக்கும். மரைக்காயர் தானக விலக  அது வழி கொடுக்கும் என்பது தாண்டி அதனால் தில்லியில் என்ன நிகழும் என்பது பற்றிய எந்த விவாத்த்திற்கும் நான் தயாராக இல்லை. போராட்டம் கிளர்ந்து விரிந்து கொண்டே இருந்தது. நாராயணசாமியும் அன்று புதுவையில் இருப்பது எனக்குத் தெரியாது.துவக்கத்தில் மரைகாயருக்கான எதிர்ப்பை விட நாராயணசாமி எதிர்ப்பு கொழுந்து எரிந்தது


நாடகீய அதன் உச்ச கட்டத்தில் நாராயணசாமி சண்முகம் வீட்டிற்கு வந்திறங்கினார். வில்லங்கம் அதை முதலிலேயே அறிந்திருக்க வேண்டும். அவர் எனது நண்பர்களை நாராயணசாமிக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகளை சொல்லியிருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இது பற்றி என்னிடம் பேசிய போது நான் அதை உறுதியாக மறுத்துவிட்டேன. தலைவர் விருப்பம் என என்னிடம் சொன்னதை நான் நிராகரித்து அது போல ஒன்று நிகழ வேண்டும் என தலைவர் விரும்பினால் அதை என்னிடம் நேரடியாக சொல்லட்டும் என கூறிவிட்ட பின்னர் நான் அறியாது என் நண்பர்களை அழைத்து பேசியிருக்க வேண்டும்.வில்லங்கம் நேரடியாக அழைத்து அன்றி காலையில் சொன்னதால் அவை எனக்கு உடன்பாடானவை என அவர்கள் பிழையாக புரிந்து கொண்டனர். கட்சி அரசியலில் வன்முறைக்கான இடம் இல்லை. அது எதிர்மறையான பலன்களை உருவாக்கும் என்பதால் அதன் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை என்பதுடன் எனது இருபத்தி ஐந்தாண்டு கால அரசியலில் அது எனது வழிமறையாக ஒரு போதும் இருந்ததில்லை. போராட்டத்தில் வில்ங்கத்தால் தூண்டிவிடப்பட்டு கொந்தளித்துக் கொண்டிருந்த bsnl தொழ்சங்கத்தை சேர்ந்த தாயகராஜனை நான் அவதானிக்க தவறினேன். அவனது உணர்வுநிலை சூழலால் உருவானது என பிழையாக புரிந்து கொண்டேன். நாராயணசாமி தலைவர் வீட்டிற்கு வந்து இறங்கும் போது மதியம் 12:00 மணிநை நெருங்கிக் கொண்டிருந்தது. அனைத்து பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் முழுமையாக கூடிவிட்டனர். எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி போய்கொண்டிருந்தது நடவில் என் நண்பர்கள் ஒரு வளையம் போல காலை 9:00 மணிமுதல் நுழைவாயிலை பூட்டி பாதுகாத்தபடி கோஷம் போடுவதும் எறி ஏறி வந்தது. ஒவ்வொரு முறையும் தலைவரை சந்திக்க வரும் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரது வீட்டிற்குள் நுழைவை தடுக்கும் போது உருவாகும் வாக்கு வாதம் தலைவர் இரும்பு கிராதி கேட்டிற்கு உள்ளே நின்று கொண்டு அங்கு கூடியிருந்தவர்களை கண்டிக்கும் போது சாம்பல் பூத்த கோஷம் விசிறி விடப்பட்டு புதுக் கொழுந்து எழுந்து நின்று ஆடிக் கொண்டிருந்தது


புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 65 நிகழ்வுகள்