https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

அடையாளமாதல் * கடந்தவைகளின் தேங்குதல் *

 




ஶ்ரீ:



பதிவு : 662  / 852 / தேதி 29 ஜனவரி  2023



* கடந்தவைகளின் தேங்குதல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 57.






அறமீறல்கள் வஞ்சங்கள் வழியாக மட்டுமின்றி அசட்டுத்தனமாக கூட ஒரு சில அரசியல் தலைமை உருவாகி பதவியில் சில காலம் நீடித்து நிற்பதை எந்த கணக்கிலும் கொண்டு வைக்க முடியாது. அதைப் புரிந்து கொள்ள குறைந்தது ஒரு தசாப்தம் பின்னோக்கு பயணிக்க வேண்டியிருக்கும். அதில் இன்றைக்கான காரண விதையை கண்டடையலாம் என்றார் சண்முகம் . அரசியலின் அனைத்து விளைவும் ஏதோ ஒன்றின் தொடர்ச்சியாகத்தான் இருக்க முடியும் . எதனுடனும் சம்பந்தப்படாது முற்றிலும் புதியதாக ஒன்று உருவாகி வந்துவிடாது என்று சொல்லுவார் . அது புரிந்து கொள்ளக் கூடியதுஒவ்வொரு பத்து வருட அடுக்கும் ஒரு தசாப்தம். தசாப்தக் கணக்கை எந்த வருடத்தில் இருந்தும் தொடங்கலாம்முதல் அடுக்கு மற்றும் அதன் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு பயணிக்கும் போது அதன் மாபெரும் வலைப்பிண்ணலை பார்க்க முடியும் என்றார். சண்முகம் கை பிடித்து காட்டியதால் புரிந்து கொள்ள அந்தக் கோட்பாடு மிக எளிதாக இருப்பதாக தோன்றியது.நான் அது மாதிரி ஒன்றை உருவாக்க முயன்று ஒரு கட்டத்தில் அதில் தொலைந்து போயிருக்கிறேன். பல வருடம் கழித்து ஒரு நிகழ்வு என்னை பின்னோக்கி சிந்திக்க வைத்த போது சட்டென அந்த கோட்பாட்டிற்குள் பின்னர் நீண்ட அரசியல் காலத்தை முன்னும் பின்னுமாக நகர்த்தி வந்தது திகைக்க வைக்கும் அனுபவம்.


எல்லா அரசியல்வாதியும் கொஞ்சம் முயன்று அதன் உட்கூறுகளை அறிந்து கொள்ள முடியுமானால் அரசியலின் போக்கையே அது மாற்றிவிடுமேஎன்று நான் அவரிடம் சொன்ன போது  “இந்த கணக்கில் எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பிடி கிடைப்பதில்லை காரணம் அவர்கள் அரசியல் அதிகாரத்தில் திளைத்திருக்கிறார்கள். அதிகாரம் தளைப்பதால்தான் அந்த தேக்க நிலையே உருவாகிறதுஎன்றார். “அதிகாரத்தில் இருப்பவருக்கு அதில் உள்ள சுமையால் உள்ளம் குவியாது என்பதால் இவற்றை பார்க்க முடிவதில்லை. மேலும் இயற்கை ஒரு விழியின்மையை கொடுத்து விடுகிறது. அந்த பதவிகாலம் முடியும்வரை பிறவற்றை அந்தக் கண்களால் பார்க்க இயலாதுஎன்றார்


அரசியலில் அனுபவமுள்ளவர்கள அந்த அகக்குருட்டில் இருந்து மனதளவில் மீட்சி கொள்ள நிகழ் அரசியலைப் பற்றிய புரிதலுக்கு அதை அவதானிக்க, கடந்த காலத்தை பிரித்து பிரித்து பார்த்து அதன் விதையை பின் அது உருவாக்கும் போக்கை அறிந்து கொள்வதுடன் , அந்த செய்திகளுக்கு முன்னும் பின்னுமாக நகர்ந்து அதன் ஒழுக்கு வேறு இடங்களில் எப்படி வெளிபடும் என புரிந்து கொள்ள முயல்வது அரசியலின் போக்கை ஒழுக்கை உணரச் செய்கிறது . பின் அங்கிருந்து தங்கள் எதிர்காலம் என்னவாக இருக்கக் கூடும் என்பது பற்றி அதனால் அரசியலின் விளைவு என்னவாக இருக்கும் என ஊகிக்க முயல்கிறர்கள் . நிகழ் அரசியலை உற்று நோக்குவதற்கு அவற்றின் வகைகளை அறிந்து கொள்ள மிக நுட்பமான வழிகளாக இவை சொல்லப்படுகின்றன . இது சண்முகத்திடம் இருந்து எனக்கு வந்த பழக்கம். ஒரு முறை தொட்டுவிட்டால் பின் அதிலிருந்து விலகுவது கடினமானது. அது ஒரு வகை மனப்பழக்கம் நம்மை மீறி மனதை அதில் ஒன்றச் செய்துவிடும். தன்னியல்பாக மிக தீவிரமாக பொருத்து பார்ப்பதை அது ஒருபோதும் நிறுத்தாது . உற்சாகத்தால் சம புரிதல் இல்லாதவர்களிடம் இது பற்றி உரையாடினால்கழன்ற கேஸ்பட்டம் நிச்சயம்.


அரசியல் அரசு சூழ்தலால் நிகழ்கிறது என்பது அதை ஆதரிப்பவர்கள் சொல்லுவது. அரசியலும் கூட அறத்தால் நிற்பது என்பதற்கு இங்கு மிக நீண்ட மரபு நமக்கிருக்கிறது. அரசியலின் பொருட்டு எதையும் இயற்றலாம் என்பது பரப்பிய அரசியல் எழுந்த பிறகு உருவானது. பின் அங்கிருந்து அது அடைந்த வீழ்ச்சியே இன்றைய அரசியல் பாணியாக இந்தியா முழுவதும் உருவாகி நிற்கிறது . அதை பொதுப் போக்காக கொள்ள முடியாது . அதை ஏற்காமல் அரசியலில் இருப்பவர்கள் மிகச் சிலர் என்றாலும் அவர்களை கொண்டே மொத்த அரசியலும் தன்னை வகுத்துக் கொண்டதை வரலாறு முழுக்க பார்க்க முடிகிறது


யாரையும் பொருட்படுத்தாத தலைமை ஒன்று நிகழும் போது அனைவரும் அதிர்ந்ததைப் போல பாவனை செய்தாலும் அதை பெயராளவில் கூட எதிர்ப்பதில்லை என்பது மொத்த அமைப்பை நீர்த்துப் போகச் செய்கிறது . அதன் வழியாக அவர்களும் அந்த வீழ்ச்சியில் பங்கு கொள்கிறார்கள் . குழு குழுவாக அதைப் பற்றிய அலர் பேச்சு எங்கும் இருந்தாலும் யாரும் அதற்கு எதிராக சிறு புல்லைக் கூட அசைக்க மாட்டார்கள். பேச்சும் அங்கலாய்ப்புமாக காலம் ஓடிக் கொண்டேயிருப்பதை பார்த்திருக்கிறேன் . அந்த தலைமையை நேரில் சந்திக்கும் போது பணிவும் அவர்களின் உடல்கள் வழியாக வெளிப்படும்  குறுகலும் குமட்டலை உருவாக்கிவிடும். அந்த தலைமை நீடித்தி நிற்கப்போகிறது என கூச்சமில்லாமல் பேசுவார்கள் அதற்கான் தர்க்கங்களை முன்வைத்து அரசியலை பேசி அவர்களும் அதன் அங்காமாகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால் அத்தகைய அரசியல் நீடிக்கிறது. அத்தகைய தலைமை வந்து அமரும் போது அவர்களின் செயல்பாடுகள் எந்த தர்க்க நியாயத்திற்கும் பொருந்தாமல் அடிப்படைகளை நோக்கிய கேள்வியை அது எழுப்பிவிடுகிறது . அது ஒரு அராஜகம் அதை எதிர்ககாமல் போவது அரசியல் இழிவு. ஜனநாயக பன்பு கொண்ட தலைவர்கள் அதே பதவிகளில் இருக்கும் போது அவர்களின் எல்லா அரசியல் செயல்பாடுகளை பற்றி விமர்சிக்கும் , எதிர்க்கும் இதே கும்பல் அறத்தின் காவலர்களாக மீறப்பட்டு விட்டதாக கொப்பளித்து ஆர்பரித்து நிற்கிறார்கள் . ஆனால் எதிர்மறைத் தலைமைக்கு முன் அவர்கள் கானாமலாகி விடுகிறார்கள். அரசியலில் ஜனநாயகப் பண்பிற்காக இடம் அவ்வளவுதான் போல.

புதன், 25 ஜனவரி, 2023

அடையாளமாதல் * தொடர் முயற்சிகள் *

 




ஶ்ரீ:



பதிவு : 661  / 851 / தேதி 25 ஜனவரி  2023



* தொடர் முயற்சிகள் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 56.






அதுவரையிலான தனது முழு அரசியல் காலத்தை ஆட்சி அதிகாரத்தின் பொது புத்திக்கு பொருந்தாத அறமீறலுக்கு எதிர் நிலையாக தன்னை வைத்துக் கொண்டதால் கட்சி என்கிற அமைப்பை தன்னை சுற்றி இயங்குவதில் சண்முகம் வென்றிருந்தார். அரசின் மெத்தனம் மற்றும் நடைமுறை சட்டத்தால் உருவாகும் கருணையற்ற செயல்களால் மனம் வெதும்பி தலைவரிடம் முறையிடும் அனைவருக்கும் அவரின் ஒரே பதிலாகபதவியில் அமர்பவர்கள் கட்சியையும் மக்களையும் மறந்து விடுகிறார்கள்என்கிற கடும் குற்றச்சாட்டை அரசாங்கத்திற்கு எதிராக வைக்க அவர் தயங்குவதில்லை. “ஆட்சியாளர்கள் கட்சித் தலைமையை விரோதிக்கிறார்கள்என்கிற அங்கலாய்ப்புடன் அவரை அனுகுபவர்கள் விலகுவார்கள். சில அமைச்சர்களுக்கு எதிராக மிக கடுமையான விமர்சனத்தை அவர் வைத்ததுண்டு. அது அரசு அவர் சொல்லுவதை கேட்கவேண்டும் என்கிற நிர்பந்தத்தின் கொக்கி கொண்டிருக்கும் . அதை மிக ரசனையாக செய்வார். பல சமயம் பார்ப்பவரை வெறுப்புற வைத்துவிடும். தனக்கு முன்பாக வரும் சிக்கலில் அரசின் பார்வையை விளங்கிக் கொள்ளாமல் அவரால்நான் செய்து கொடுக்கிறேன்என பொறுப்பேற்க இயலாது அதே சமயம் தட்டிக் கழிக்கவும் முடியாது . தன்னை நாடி வருபவர்களுக்கு காமராஜரின் புகழ்மிக்க ஆறுதல் சொல்ஆகட்டும் பார்க்கலாம்என்பது போல சண்முகத்திடம் ஒரு சொல் இல்லை


ஆனால் விஷயம் தீவிரமாக இருந்தால் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வார். “வில்லங்கம்நுழைவது இங்கு. அவர் அதை தொடர்ந்து கவனித்து செய்யக் கூடியதை முயற்சிப்பார். எதிலும் மேலதிகமாக அவருக்கான கணக்குகள் உருவாகி இருக்கும். எல்லா செயல்களிலும் தனக்கான அரசியல் கணக்கில்லாதவர்கள் அரசியாலாளர்களே இல்லை. தலைவர் அளவில் இது அன்றாட செயல்களில்வில்லங்கம்தன்னிடம் ஒப்புவிக்கப் பட்ட அனைத்தை பற்றிய நடைமுறை தகவலுடன் தனது சொந்த அரசியல் பார்வையையும் முன் வைப்பார். அது பிறர் எளிதில் கடந்து செல்ல முடியாததாக இருக்கும் . ஒரு புள்ளியில் அதுவே சண்முகத்தின் முடிவாகவும் மாறி விடுவதை பார்த்திருக்கிறேன். அது மிக நுட்பமாண ஆடல். “வில்லங்கம்சொல்வதில் எந்த முடிவும் இருக்காது. அவை வெறும் தரவுகளாக சண்முகத்திற்கு சொல்லப்படும். அந்தத் தரவுகளை எந்த திசையில் கோர்த்தாலும் அது சென்று சேருமிடம் வில்லங்கத்தின் கணக்காக இருக்கும். விளைவாக எது நிகழ்ந்தாலும் அது சண்முகத்தின் கணக்காக வெளிப்படும். இதில் விந்தை அவரும் அப்படியே நினைப்பார்அதன் பின் அந்த முடிவிற்கு யார் முரண்பட்டாலும் அவர்கள் சண்முகத்தை விரோதித்துக் கொள்வதாக சூழ்நிலை அமைந்து விடும். ஒரு அரசு அதிகாரியான வில்லங்கத்திற்கு அரசியலில் பிறர் எதிர்க்க அஞ்சும் இடம் இப்படித்தான் உருவாகிவந்தது.


அதில் உள்ள அரசியலின் இரு நிலைகளை புரிந்து கொள்பவர்கள் அதை அவர்களின் அன்றாட விளையாட்டு என நகர்ந்து விடுவார்கள். சண்முகத்தின் நிர்பந்தம் ஒரு முணையில் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் தன்னை அறுக்க அதே கத்தி  ஒரு நாள் இங்கு வந்து காத்து நின்றிருக்கும் என ஊகித்திருப்பாரா?. நாராயணசாமி கையாண்டது சண்முகத்தின் அதே பழைய ஆயுதம். அதில் அவரின் சண்முகத்திற்கு எதிரானதை கவனப்படுத்தும் காழ்ப்பு மட்டுமே இருந்ததால் பிற எவரையும் விட சண்முகத்திற்கு எதிராக அது மிக கூர்மையாக விணையாற்றியது. பிறருக்கு அவர் சொன்ன அதேகட்சியரை மதிக்கவில்லைஎன்கிற ஒன்று சொல் அவருக்கு எதிராக வந்து நின்றபோதுகெட்ட வசவாகஉருவு எடுத்து அவரை தாக்கியது. நிகழ்ந்தவற்றிற்கு யாராலும் சமாதனம் சொல்ல முயலவில்லை . சண்முகத்திற்கு நெருக்கமான ஒவ்வொருவரும் அந்த காலகட்டித்திற்குள் எங்கோ ஒரு புள்ளியில் அவரின் அணுகுமுறையால் காயமடைந்து கசப்பு கொண்டிருந்தார்கள்.


அரசியலின் அடிப்படை குற்றச்சாட்டுகளால் ஆனது. அது எவர் முன்பாக வைக்கப்பட்டாலும் அவற்றில் எதுவும் ஏற்கப்படுவதில்லை என்பதால் மிகச் சரியான மறுப்பிற்கு கூட எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடுகிறது . சண்முகத்தின் மறுப்பு யாரின் கவனத்தையும் கொள்ளவில்லை. மேலும் மேலும் அவதூறாக அது அவர் மீது கொட்டிக் கொண்டே இருந்தது.சண்முகத்திற்கு எதிராக சிக்கல்கள் அவர் முதல்வராக வந்தமர்ந்து கட்சி கைமாறிய ஒரே வாரத்தில் துவங்கிவிட்டது. நாராயணசாமி சண்முகத்திற்கு எதிராக மிக துல்லிய தாக்குதலை துவங்கி இருந்தார். இந்த சூழலை மன்பே உத்தேசித்து கட்சி அமைப்பை முழுமையாக செயாலற்றும் வாய்ப்பை உருவாக்க அங்கிருந்து பின் மெல்ல எதார்த்தத்திற்கும் அதற்கான நுழைவாயிலுக்கும் வந்து சேர்ந்தேன். மிகுந்த சவாலான காலகட்டம். நாராயணசாமியின் கடும் தாக்குதல் அவரது அணுக்கர்கள் அவர் மீது கொண்ட அதிருப்தி சண்முகத்தின் பிடிவாதம் என எனக்கு ஆதரவளிக்கும் அனைத்தும் முடங்கின. இனி சட்டமன்றத்தின் வழியாக கட்சி விஷயங்களை மேற்கொள்ள விருப்பமின்றி  சட்டமன்றத்திற்கு செல்வதில்லை என்கிற முடிவிற்கு வந்தேன்


அதுவரை அங்கிருந்து கற்றவை கொண்டு மீண்டும் ஒரு சரியான முயற்சியால் கதவை திறந்து விடுபவை என நான் நினைத்த ஒரு திட்டத்தை செயல்படுத்த நினைத்தேன் . நிதானம் மட்டுமே கட்சி அரசியலை அங்கே அங்கீகரிக்கும் கதவு திறக்கிறது என்பது அனுபவத்தில் இருந்து பெற்றது . அதை வென்றெடுக்க நான் திட்டமிட்ட நிகழ்வு மிகச் சரியாக நிகழ்ந்தாலும் காலம் அதற்கான வெற்றி வாய்ப்பைத் தரவில்லை. ஆட்சி மாற்றம்தான் என ஏறக்குறைய உறுதியான அந்த சூழலில் நிர்வாகிகள் அனைவரின் உளப் பதிவுகளை அளவிட ஒரு கூட்டம் ஒருங்கப்பட்டது. அதிகாலை 6:00 மணிக்கு ஒருங்கப்பட்ட கூட்டம் நிர்வாகிகளின் மனநிலையை கணிக்க கூட்டப்பட்டது. இரண்டு நிலைகளில் அந்த கூட்டம் மக முக்கியமானது.ஒன்று நாம் தாக்குதலில் இருக்கிறோம். கூட்டம் முழு அளவில் பங்கு கொண்டது உற்சாகத்தை கொடுத்தாலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் சவால் குறித்து யாருக்கும் எந்த புரிதலும் உருவாகவில்லை என்பதுடன் எனது நீண்ட கால பயிற்சியும் அதன் திட்டத்தால் தூரத்து பலன்களைப் பற்றி அதிருப்தி கவலையளிப்பதாக இருந்தது. முதல்வர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூட அரசு அதிகாரிகளை அழைத்து அவர்கள் சொல்லுவதை செய்து கொடுக்கும் படி சொல்ல முடியாது. அவர்கள் சொன்னவற்றிற்கு உள்ளே நம்மால் சரி செய்ய இயலாத சட்ட நடைமுறை சிக்கலை முன் வைத்து நம்மை முட்டாளாக்குவார்கள். இந்த சூழலில் ஆட்சி அதிகாரத்திற்கு பக்கத்தில் வந்த பிறகும் இந்து தொலைநோக்கு திட்டம் ஏன் ? என்கிற கேள்விக்கு என்னால் விளக்கமளிக்க முடியாது. ஒரு வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்து உணர்ந்தவைகளை வார்த்தகளால் பிறருக்கு புரியவைத்து விட முடியும் என் நம்முவதைப் போன்ற மடமை பிறிதில்லை

வியாழன், 19 ஜனவரி, 2023

அடையாளமாதல் * தொடுவானம் *

 



ஶ்ரீ:



பதிவு : 660  / 850 / தேதி 19 ஜனவரி  2023



* தொடுவானம்  * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 55.





நுண்ணிய செயல்பாடாக, புரிதலாக அதன் வழியில் அவர்களின் சொந்த முடிவாக அது இருக்கவேண்டும் என்பதற்கு அதன் மையமான பேசு பொருளாக அவர்கள் நினைப்பதுடன் ஒருவருக்கு ஒருவருடனான தொடர் உரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என நினைத்தேன் . அது அவர்களுக்குள் சுதந்திரமான , இயல்பான இணைப்பு புள்ளியை உருவாக்கும். அரசியலில் மையத்தில் இருந்து கொண்டு செயல்பட நினைக்கும் எவருக்கும் அதில் உள்ள சவால்களை எதிர் கொள்ளும் கருவிகள் குறித்த அறிமுகம் அதில் இருந்து கிடைக்கும் என நம்பினேன். கருவிகள் உள்ளெழுந்து வருபவை. புறவய தர்க்கத்தால் உருவாகும் கருத்துருக்களை மட்டுமாக வைத்துக் கொண்டு அவற்றை நிறுவ முயற்சிப்பது எடுபடாது என்பது எனது கடந்த அனுபவமாக இருந்தது . எனக்கு முன்பாக இந்தத் துறையில் அதை முயற்சித்தவர்கள் இல்லை என்பதால்செய்து பின் பிழை நீக்கி முன்னகருந்துவழிகளை கண்டடைவது அந்த உரையாடல் வழியாக நிகழும் என உறுதியாக நினைத்தேன். அதில் உள்ள அசலான சவால்கள் என்னை எப்போதும் அச்சுறுத்துபவை .


நான் அஞ்சியது அரசியலின் அர்த்தமின்மையானகாலம்குறித்த பொதுவான கருதுகோள்காத்திருப்பது”. சில கால செயல்பாட்டில் சோர்வடைந்துஒன்றும் நடக்கவில்லைஎன அங்கலாய்ப்பதும்கிடைத்து விடும்என இங்கும் அங்குமாக பல தலைமை அல்லது கட்சிகளை நோக்கி ஓடும் அனைவரும்காத்திருப்புஎன்பதையே உணராத காலம் என ஒன்று உண்டு . அவர்கள் எதன் மீதும் யாரின் மீதும் நம்பிக்கையற்றவர்கள். ஆனால் அவர்களே மிகுதி. பெருங் குரலாளர்கள் அவர்களின் முன்னே அறிவுபூர்வமாக உரையாட நினைப்பவர்கள் இளிவரல் மற்றும் அவமானத்தை சந்திக்க வேண்டும் . ஆனால் அரசியல் அவர்களை மையப்படுத்தியே முன்னகர வேண்டியது என்பதால் அவர்கள் பதற்றம் கொண்டால் அது வழிந்தோடும் திசை தேர்வது இயலாது. இங்கு நம்பிக்கை மட்டுமே அதை கடக்க உதவும் ஒரே தோணி். ஆனால் அத்தகைய ஏற்பாட்டிற்கு எனது நண்பர்கள் இன்னும் தயாராகி இருக்கவில்லை என்பதை தங்கள் முரண் செயல்பாடுகளால் நிரூபித்தார்கள். அதை அவர்களுக்கு உணர்த்த போதிய நேரம் கிடைக்கவில்லை என்பதில் இருந்து அதைஊழ்என வகுத்துக் கொள்வதை தவிர வேறு வழிகள் இல்லை. அவர்கள் காத்திருக்கத் தெரியாதவர்களின் உரையாடல்கள் எப்போதும் சிக்கலானது. உரையாடுபவர்கள் எப்போதும் நமக்கான இடத்தை கொடுப்பதில்லை. அது எப்போதாவது தான் நிகழ்கிறது. அந்த உச்சம் எப்போதும் தொடுபுள்ளியாகி நிலைபெறுவதில்லை. உரையாடல் சமமானவர்களுக்கு இடையேயானது என்றாலும் சொல்பவரும் கேட்டபவரும் தங்களை வரையறை செய்து கொள்ளவில்லை என்றால் அந்த உரையாடல் அனுபவப் பகிர்வு என்பதில் இருந்து விலகிவிடுகிறது. நான் இங்கு ஆராதணை மனப்பான்மையை சொல்லவில்லை.


2001 களில் நண்பர்களில் சிலருக்கு அரசியல் உச்சத்தை எட்டிப்பிடிக்கும் அவரசரம் காரணமாக அதுவரை நிகழ்ந்த அத்தனை உரையாடல்களுக்கு அர்த்தமில்லாமல் போனதுஅவர்களின் பிழை கணக்கால் சண்முகத்திற்கு எதிரான அரசியலை செய்த பாண்டியன் தலைமையிலான குழுவிற்கு சென்று இணைந்து போது இளைஞர் காங்கிரஸ் அமைப்பு சரி செய்ய முடியாத அளவிற்கு சிதறியது . சண்முகத்தை மையப்படுத்தியது எனது அரசியல். ஆனால் எனக்கான பாதையை நான் எப்போதும் தனியாக தெரிவு செய்திருந்தேன். அங்கு சொந்த பலத்தை மட்டுமே நம்பும் பயணத்திற்கானது. அதை நோக்கிய அரசியலை கடந்த ஐந்தாண்டுகளாக முயற்சித்து வெற்றிக்கு மிக அருகில் வந்திருந்தோம். சண்முகத்தை சார்ந்து இருப்பதற்கும் சொந்த அரசியல் நிலைபாட்டு என்கிற அந்த இரண்டிற்கும் இடையேயான நுண்ணிய வேறுபாட்டை உணர்வது கடினம் என்பதால் சண்முகத்தின் அரசியல் தோல்விக்கு எதிராக எழுந்த பெரும் கொந்தளிப்பு அலையில் நாங்களும் அடித்துச் செல்லப்பட்டோம். அந்த வெள்ளத்திற்கு முன்னால் என் நியாயத்தை புரிய வைப்பதும் கடினம். ஆகையால் சண்முகத்தின் தோல்விக்கு முதல் பலியாக நான் சென்று தலை வைத்து நிற்க வேண்டி வந்தது. இது ஒரு வகையில் எதிர்பார்த்தது தான். நரசிம்ம ராவ் அரசியலில் தோல்வியடைந்த போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணீந்தர் சிங் பிட்டாவிற்கு நிகழ்ந்ததை அருகிருந்து பார்த்திருக்கிறேன்.


முழு அமைப்பையும் உருவாகும் முன்பே அந்தக் கனவு சிதைந்து போன போது அதற்கு முட்டுக்கொடுக்க மனமில்லாமல் அது முழுவதுமாக நிகழந்து முடியும்வரை பார்த்துக் கொண்டிருந்தேன் .அது போல ஒன்று நடக்குமென எதிர்நோக்கி இருந்தேன் என்றாலும் அது கொடுத்த மனவழுத்தமும் உளக் கொந்தளிப்பும் பல நாள் தூக்கம் இழக்கச் செய்தாலும் மிக விரைவில் அதிலிருந்து மீண்டுவிட்டேன். நான் நியமித்த நிர்வாகிகளில் பலர் பாண்டியனுடன் சென்று நாராயணசாமியை சந்தித்தனர். என்னுடன் இருந்தவர்களை குழம்பிய அந்த சூழல் தெளிந்து வருவதுவரை வேறு செயல்பாடுகளில் கவனம் தெலுத்த சொன்னேன். அது எளிதல்ல என அறிந்திருந்தேன். எனது நிலைப்பாடு அந்த இடத்தை எனக்கு தெரிவு செய்திருந்தது

பொருளாதாரத்தை சார்ந்த மற்றும் தேர்தல் அரசியல் எப்போதும் என் வழிமுறை இல்லை. கட்சி அரசியல் நிர்வகத்திற்கு விருப்பமுள்ள அனைவருக்கும் நான் அதையே முன்வைத்தேன். எனது நண்பர்களும் மாநில கட்சிக்குள் நுழைந்து நிலை கொள்வதை பற்றிய செயல்பாடுகளில் இருந்தார்கள். ஆனால் அந்த திடீர் ஆட்சி மாற்றம் அனைத்தையும் கலைத்து போட்டுவிட்டது

நான் கருத்துரு மூலம் ஒரு புதிய தலைமுறையை அரசியல்வாதிகளை உருவாக்கும் கனவில் இருந்தேன்.அவர்களை கட்சி சார்ந்த நிர்வகத்திற்கும் பின்னர் அவரவருக்கான இலக்குகளை உருவாக்கிக் அதை நோக்கிய பயணம் என அது இரண்டு நிலைகளினால் ஆனது


கடந்த பல வருட உரையாடல் பலன் கொடுக்கத் துவங்கும் முன்பாக ஆட்சி மாறியபோதும் அந்த கனவு கலையத் துவங்கியது. கனவு என்பதே கலைவதற்கானது போலும்.தலைவர் முதல்வரானதும் அச்சரிவு பல நூறு மடங்கு வேகமெடுத்தது. யாரும் யாருக்கும் எதையும் விளக்கு புரியவைக்க முடியாத அளவிற்கு அதிகார நுகர்வு தாக்கம் அனைத்து தர்க்கத்தையும் ஒன்றுமில்லாம் செய்துவிட்டது. அதுவரை கருத்தாக மட்டுமே அறிமுகமாகி இருந்த அனைத்தும் தொட்டுவிடும் நிலையிலும் அவை தூரத்துக் கருத்துருக்கள் மட்டுமே. வெறும் சொற்களால் ஆனவை. நிகழ் நிஜம் வேறு முகம் கொண்டது. அங்கிருந்து அதிகாரத்தை நேரடியாக தொட்டெடுக்கும் கருவிகள் ஏதும் இல்லாதவை. சுற்றிலும் பரப்பரப்பான அதிகார மையங்கள் சுறுசுறுப்பாக கடந்து செல்லும் அரசு அதிகாரிகள் என சட்டமன்றத்தில் கைவிடப்பட்டவர்களாக அனைவரும் திரிந்து கொண்டிருந்தனர். ஜன்னல்களில் காட்சிப்படுகிற அரசியலின் அதன் வாசலில்லாத சுவற்றை மட்டுமே பார்க்க முடிந்தது.


எனக்கு பழகிய காட்சி இது. ஆரம்ப கால முதலே அஞ்சியது இந்தக் காட்சியை. 1991 வைத்திலிங்கம் முதல்வராக அமர்ந்த போது சட்டமன்றத்திற்குள் நுழைந்து இதே போல பாலனுடன் நூற்றுக்கணக்கானவர்கள் சென்று திகைத்து நின்றிருந்தோம். அன்று கைவிடப்பட்டதாக நினைத்ததற்கு பாலன் தேர்தலில் தோல்வியுற்றது காரணம் என்கிற பிழைப் புரிதலை அடைந்திருந்தோம். பாலன் வென்றிருந்தால் நிலைமை இதைவிட கீழானதாக இருந்திருக்கும் என அப்போது அவதானிக்கவில்லை. 1994 களுக்கு பிறகு தலைவருடன் இயந்த அரசியல் புரிதல் அதன் கொடூரமான பிறிதொரு பக்கத்தை காட்டியது. அங்கிருந்து நான் பார்த்த சட்டமன்றம் ஈவுயிரக்கமற்ற உரியினம். அது அனைவரின் அதுநாள் வரையிலான தன்னறம் என்கிற கைப்பணத்தை அதன் வாசலில் காவு கொடுத்த பின்னர் உள் நுழைய அனுமதிக்கிறது. ஆண்மையிழப்பு போல. பின் வெளிவுலக நியாயங்களுக்கு அங்கு இடமில்லை. தேர்தல் அரசியலை நான் ஆழ்மனத்தால் வெறுத்த காரணத்தை மிக மெல்ல அங்கு கண்டடைந்த தருணம். அரசியலில் தயக்கம் நிதானம் ஆழ்மனத்துடன் தொடர்புறுத்துபவை. விதியாக திரளாத அந்த கணம் ஆரம்பத்தில் சலிப்பூட்டுவது. ஆனால் அதன் ஆழந்த மௌனத்திற்கான விளக்கம் கிடைக்கும் போது வழிமுறையாகிறது