https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 19 ஜனவரி, 2023

அடையாளமாதல் * தொடுவானம் *

 



ஶ்ரீ:



பதிவு : 660  / 850 / தேதி 19 ஜனவரி  2023



* தொடுவானம்  * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 55.





நுண்ணிய செயல்பாடாக, புரிதலாக அதன் வழியில் அவர்களின் சொந்த முடிவாக அது இருக்கவேண்டும் என்பதற்கு அதன் மையமான பேசு பொருளாக அவர்கள் நினைப்பதுடன் ஒருவருக்கு ஒருவருடனான தொடர் உரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என நினைத்தேன் . அது அவர்களுக்குள் சுதந்திரமான , இயல்பான இணைப்பு புள்ளியை உருவாக்கும். அரசியலில் மையத்தில் இருந்து கொண்டு செயல்பட நினைக்கும் எவருக்கும் அதில் உள்ள சவால்களை எதிர் கொள்ளும் கருவிகள் குறித்த அறிமுகம் அதில் இருந்து கிடைக்கும் என நம்பினேன். கருவிகள் உள்ளெழுந்து வருபவை. புறவய தர்க்கத்தால் உருவாகும் கருத்துருக்களை மட்டுமாக வைத்துக் கொண்டு அவற்றை நிறுவ முயற்சிப்பது எடுபடாது என்பது எனது கடந்த அனுபவமாக இருந்தது . எனக்கு முன்பாக இந்தத் துறையில் அதை முயற்சித்தவர்கள் இல்லை என்பதால்செய்து பின் பிழை நீக்கி முன்னகருந்துவழிகளை கண்டடைவது அந்த உரையாடல் வழியாக நிகழும் என உறுதியாக நினைத்தேன். அதில் உள்ள அசலான சவால்கள் என்னை எப்போதும் அச்சுறுத்துபவை .


நான் அஞ்சியது அரசியலின் அர்த்தமின்மையானகாலம்குறித்த பொதுவான கருதுகோள்காத்திருப்பது”. சில கால செயல்பாட்டில் சோர்வடைந்துஒன்றும் நடக்கவில்லைஎன அங்கலாய்ப்பதும்கிடைத்து விடும்என இங்கும் அங்குமாக பல தலைமை அல்லது கட்சிகளை நோக்கி ஓடும் அனைவரும்காத்திருப்புஎன்பதையே உணராத காலம் என ஒன்று உண்டு . அவர்கள் எதன் மீதும் யாரின் மீதும் நம்பிக்கையற்றவர்கள். ஆனால் அவர்களே மிகுதி. பெருங் குரலாளர்கள் அவர்களின் முன்னே அறிவுபூர்வமாக உரையாட நினைப்பவர்கள் இளிவரல் மற்றும் அவமானத்தை சந்திக்க வேண்டும் . ஆனால் அரசியல் அவர்களை மையப்படுத்தியே முன்னகர வேண்டியது என்பதால் அவர்கள் பதற்றம் கொண்டால் அது வழிந்தோடும் திசை தேர்வது இயலாது. இங்கு நம்பிக்கை மட்டுமே அதை கடக்க உதவும் ஒரே தோணி். ஆனால் அத்தகைய ஏற்பாட்டிற்கு எனது நண்பர்கள் இன்னும் தயாராகி இருக்கவில்லை என்பதை தங்கள் முரண் செயல்பாடுகளால் நிரூபித்தார்கள். அதை அவர்களுக்கு உணர்த்த போதிய நேரம் கிடைக்கவில்லை என்பதில் இருந்து அதைஊழ்என வகுத்துக் கொள்வதை தவிர வேறு வழிகள் இல்லை. அவர்கள் காத்திருக்கத் தெரியாதவர்களின் உரையாடல்கள் எப்போதும் சிக்கலானது. உரையாடுபவர்கள் எப்போதும் நமக்கான இடத்தை கொடுப்பதில்லை. அது எப்போதாவது தான் நிகழ்கிறது. அந்த உச்சம் எப்போதும் தொடுபுள்ளியாகி நிலைபெறுவதில்லை. உரையாடல் சமமானவர்களுக்கு இடையேயானது என்றாலும் சொல்பவரும் கேட்டபவரும் தங்களை வரையறை செய்து கொள்ளவில்லை என்றால் அந்த உரையாடல் அனுபவப் பகிர்வு என்பதில் இருந்து விலகிவிடுகிறது. நான் இங்கு ஆராதணை மனப்பான்மையை சொல்லவில்லை.


2001 களில் நண்பர்களில் சிலருக்கு அரசியல் உச்சத்தை எட்டிப்பிடிக்கும் அவரசரம் காரணமாக அதுவரை நிகழ்ந்த அத்தனை உரையாடல்களுக்கு அர்த்தமில்லாமல் போனதுஅவர்களின் பிழை கணக்கால் சண்முகத்திற்கு எதிரான அரசியலை செய்த பாண்டியன் தலைமையிலான குழுவிற்கு சென்று இணைந்து போது இளைஞர் காங்கிரஸ் அமைப்பு சரி செய்ய முடியாத அளவிற்கு சிதறியது . சண்முகத்தை மையப்படுத்தியது எனது அரசியல். ஆனால் எனக்கான பாதையை நான் எப்போதும் தனியாக தெரிவு செய்திருந்தேன். அங்கு சொந்த பலத்தை மட்டுமே நம்பும் பயணத்திற்கானது. அதை நோக்கிய அரசியலை கடந்த ஐந்தாண்டுகளாக முயற்சித்து வெற்றிக்கு மிக அருகில் வந்திருந்தோம். சண்முகத்தை சார்ந்து இருப்பதற்கும் சொந்த அரசியல் நிலைபாட்டு என்கிற அந்த இரண்டிற்கும் இடையேயான நுண்ணிய வேறுபாட்டை உணர்வது கடினம் என்பதால் சண்முகத்தின் அரசியல் தோல்விக்கு எதிராக எழுந்த பெரும் கொந்தளிப்பு அலையில் நாங்களும் அடித்துச் செல்லப்பட்டோம். அந்த வெள்ளத்திற்கு முன்னால் என் நியாயத்தை புரிய வைப்பதும் கடினம். ஆகையால் சண்முகத்தின் தோல்விக்கு முதல் பலியாக நான் சென்று தலை வைத்து நிற்க வேண்டி வந்தது. இது ஒரு வகையில் எதிர்பார்த்தது தான். நரசிம்ம ராவ் அரசியலில் தோல்வியடைந்த போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணீந்தர் சிங் பிட்டாவிற்கு நிகழ்ந்ததை அருகிருந்து பார்த்திருக்கிறேன்.


முழு அமைப்பையும் உருவாகும் முன்பே அந்தக் கனவு சிதைந்து போன போது அதற்கு முட்டுக்கொடுக்க மனமில்லாமல் அது முழுவதுமாக நிகழந்து முடியும்வரை பார்த்துக் கொண்டிருந்தேன் .அது போல ஒன்று நடக்குமென எதிர்நோக்கி இருந்தேன் என்றாலும் அது கொடுத்த மனவழுத்தமும் உளக் கொந்தளிப்பும் பல நாள் தூக்கம் இழக்கச் செய்தாலும் மிக விரைவில் அதிலிருந்து மீண்டுவிட்டேன். நான் நியமித்த நிர்வாகிகளில் பலர் பாண்டியனுடன் சென்று நாராயணசாமியை சந்தித்தனர். என்னுடன் இருந்தவர்களை குழம்பிய அந்த சூழல் தெளிந்து வருவதுவரை வேறு செயல்பாடுகளில் கவனம் தெலுத்த சொன்னேன். அது எளிதல்ல என அறிந்திருந்தேன். எனது நிலைப்பாடு அந்த இடத்தை எனக்கு தெரிவு செய்திருந்தது

பொருளாதாரத்தை சார்ந்த மற்றும் தேர்தல் அரசியல் எப்போதும் என் வழிமுறை இல்லை. கட்சி அரசியல் நிர்வகத்திற்கு விருப்பமுள்ள அனைவருக்கும் நான் அதையே முன்வைத்தேன். எனது நண்பர்களும் மாநில கட்சிக்குள் நுழைந்து நிலை கொள்வதை பற்றிய செயல்பாடுகளில் இருந்தார்கள். ஆனால் அந்த திடீர் ஆட்சி மாற்றம் அனைத்தையும் கலைத்து போட்டுவிட்டது

நான் கருத்துரு மூலம் ஒரு புதிய தலைமுறையை அரசியல்வாதிகளை உருவாக்கும் கனவில் இருந்தேன்.அவர்களை கட்சி சார்ந்த நிர்வகத்திற்கும் பின்னர் அவரவருக்கான இலக்குகளை உருவாக்கிக் அதை நோக்கிய பயணம் என அது இரண்டு நிலைகளினால் ஆனது


கடந்த பல வருட உரையாடல் பலன் கொடுக்கத் துவங்கும் முன்பாக ஆட்சி மாறியபோதும் அந்த கனவு கலையத் துவங்கியது. கனவு என்பதே கலைவதற்கானது போலும்.தலைவர் முதல்வரானதும் அச்சரிவு பல நூறு மடங்கு வேகமெடுத்தது. யாரும் யாருக்கும் எதையும் விளக்கு புரியவைக்க முடியாத அளவிற்கு அதிகார நுகர்வு தாக்கம் அனைத்து தர்க்கத்தையும் ஒன்றுமில்லாம் செய்துவிட்டது. அதுவரை கருத்தாக மட்டுமே அறிமுகமாகி இருந்த அனைத்தும் தொட்டுவிடும் நிலையிலும் அவை தூரத்துக் கருத்துருக்கள் மட்டுமே. வெறும் சொற்களால் ஆனவை. நிகழ் நிஜம் வேறு முகம் கொண்டது. அங்கிருந்து அதிகாரத்தை நேரடியாக தொட்டெடுக்கும் கருவிகள் ஏதும் இல்லாதவை. சுற்றிலும் பரப்பரப்பான அதிகார மையங்கள் சுறுசுறுப்பாக கடந்து செல்லும் அரசு அதிகாரிகள் என சட்டமன்றத்தில் கைவிடப்பட்டவர்களாக அனைவரும் திரிந்து கொண்டிருந்தனர். ஜன்னல்களில் காட்சிப்படுகிற அரசியலின் அதன் வாசலில்லாத சுவற்றை மட்டுமே பார்க்க முடிந்தது.


எனக்கு பழகிய காட்சி இது. ஆரம்ப கால முதலே அஞ்சியது இந்தக் காட்சியை. 1991 வைத்திலிங்கம் முதல்வராக அமர்ந்த போது சட்டமன்றத்திற்குள் நுழைந்து இதே போல பாலனுடன் நூற்றுக்கணக்கானவர்கள் சென்று திகைத்து நின்றிருந்தோம். அன்று கைவிடப்பட்டதாக நினைத்ததற்கு பாலன் தேர்தலில் தோல்வியுற்றது காரணம் என்கிற பிழைப் புரிதலை அடைந்திருந்தோம். பாலன் வென்றிருந்தால் நிலைமை இதைவிட கீழானதாக இருந்திருக்கும் என அப்போது அவதானிக்கவில்லை. 1994 களுக்கு பிறகு தலைவருடன் இயந்த அரசியல் புரிதல் அதன் கொடூரமான பிறிதொரு பக்கத்தை காட்டியது. அங்கிருந்து நான் பார்த்த சட்டமன்றம் ஈவுயிரக்கமற்ற உரியினம். அது அனைவரின் அதுநாள் வரையிலான தன்னறம் என்கிற கைப்பணத்தை அதன் வாசலில் காவு கொடுத்த பின்னர் உள் நுழைய அனுமதிக்கிறது. ஆண்மையிழப்பு போல. பின் வெளிவுலக நியாயங்களுக்கு அங்கு இடமில்லை. தேர்தல் அரசியலை நான் ஆழ்மனத்தால் வெறுத்த காரணத்தை மிக மெல்ல அங்கு கண்டடைந்த தருணம். அரசியலில் தயக்கம் நிதானம் ஆழ்மனத்துடன் தொடர்புறுத்துபவை. விதியாக திரளாத அந்த கணம் ஆரம்பத்தில் சலிப்பூட்டுவது. ஆனால் அதன் ஆழந்த மௌனத்திற்கான விளக்கம் கிடைக்கும் போது வழிமுறையாகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...