https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 29 மார்ச், 2022

அடையாளமாதல் * கேளாச் செவி *

 




 

ஶ்ரீ:



பதிவு : 613  / 803 / தேதி 29 மார்ச்  2022



* கேளாச் செவி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 12.





1996 தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு லக்ஷ்மிநாராயணன் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்து சண்முகத்தை சந்தித்தது கண்ணன் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கான சீட் பற்றியது என்றனர் . அப்போது மேலிடப் பார்வையாளாராக காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளர் ஜனார்தன பூஜாரி புதுவையில் இருந்தார் . காங்கிரஸின் நிர்வாக சிக்கலுக்கும் மேலிட பார்வையாளர்கள் சரியாக செயல்பட முடியாமைக்கு இருக்கும் தடை, மொழி. இங்குள்ள உண்மையான கள நிலவரத்தை கட்சி அமைப்பினர் தொண்டை கிழியஉரையாடினாலும்அதன் வழியாக அவர்கள் அடைய ஒன்றுமில்லை . சுவருடன் பேசுவது போல. இடையே நிற்பவர் முழு நிலவரத்தையும் வேறு திசைக்கு கொண்டு செல்ல முடியும் . இந்தி பேசாத மாநிலங்களில் கட்சி அவர்கள் அறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் குமுறிக் கொண்டிருப்பது அவர்களை சென்று சேராது . காங்கிரஸின் இந்த நிரந்தர ஊமைத்தனம் திராவிட அரசியலால் விளைந்தது . ஆந்திர கர்நாடக மாநிலங்களில் இந்த சிக்கல் இல்லை அவர்கள் பல மொழி பேசக் கூடியவர்கள் . ஜனார்தன பூஜாரி கர்நாடகத்தைப் பூர்வீகமாக கொண்டவர் என்பதால் தமிழ் புரிந்து கொள்ள முடிந்தது .சண்முகத்திற்கு மிக அனுக்கமானவராக அறியப்பட்டவர். ஜனார்தன பூஜாரி மீது சண்முகத்தில் செல்வாக்கு என்ன என்பது எனக்குத் தெரியாது . ஆனால் கண்ணன் அவரை நேரில் சந்தித்த போது அவரிடம் மிக கறாராக நடந்து கொண்டது சண்முகம் சொன்னதால் என பேசப்பட்டது எவ்வளவு உண்மை என தெரியவில்லை


கண்ணன் சபாநாயகராக பதவியில் யாருக்கும் கட்டுப்படாமல் நடந்து கொண்டது முதல் பிரதமர் வரை சென்ற பஞ்சாயத்து , பின் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிற முடிவு பிறகு தில்லி மேலிடம் அவரை சட்டமன்றத்திற்கு வர வேண்டியதில்லை என அறிவுறுத்தியது என அவரது ஐந்து வருட கடந்தாக கால செயல்பாடு அவருக்கு நினைவுறுத்தப்பட்டு ஏன்? என விளக்கம் கேட்க்கப்பட்டது . ஒருவருடம் அமைதியாக இருந்து தேர்தல் அறிவிக்க இருக்கும் நேரத்தில் அவர் நடத்திய பேரணி புதுக் கட்சி துவங்கும் நோக்கம் கொண்டதாக எல்லோராலும் அறியப்பட்ட பின் இந்த சீட்டு கேட்கும் ஆட்டத்தினால் ஆவதென்ன? . இறுதி ஒரு வருட காலம் துணை சபாநாயகர் Av. சுப்பிராமணியம் அந்த  சட்டமன்ற காலம் இறுதிவரை அமர்ந்து முடித்துக் கொடுத்தார் . ஜனார்தன பூஜாரி கண்ணனுக்கான சீட்டே சிக்கல் என்பது போல நடந்து கொண்டார் . சண்முகம் தலையிட்டு ஏதாவது செய்வார் என்கிற நம்பிக்கையில் லக்ஷ்மிநாரயணனிடம் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் சீட்டு என கோரிக்கை வைத்தார். அது குறித்து பலமான அலர் நிலவியது. அவர் 5 சீட்டு இல்லை 7 கேட்டார் என . அப்படி இல்லை தனக்கும் லக்ஷ்மிநாராயணனுக்கும் மட்டும் கேட்டார் என்றனர் . சண்முகம் கண்ணனுக்கு மட்டும் என்றால் தன்னால் மேலிடத்தை சமாதானப்படுத்த இயலும் என கூறி விட்டார் . அதன் பிறகு அண்ணா திடலில் கூட்டம் கூட்டி தன்னை  தமாக வின் புதுவை கிளைத் தலைவராக அறிவித்துக் கொண்டார் . இதில் வேடிக்கை அதுவரை மூப்பனார் தில்லியில் இருந்தார் .தாமாக துவங்குவது பற்றி அவருக்கே அப்போது தெளிவான திட்டமிருந்ததாகத் தெரியவில்லை. அந்த வாரம் சென்னை திரும்பினார். அந்த ஒருவருட காலம் காங்கிரஸ் அரசியலை வழக்கம் போல குழுப்பி அடித்தவர் ரஜினிகாந்த். தேர்தல் நேரத்தில் அமெரிக்கா சென்றுவிட்டார். கடைசி நிமிடங்கள் முப்பனாருக்கு சாதகமாக இல்லை. அவரால் காங்கிரஸை திமுக நோக்கி கொண்டுவர இயலவில்லை. இருக்கும் கூட்டணியை தக்கவைக்க காங்கிரஸ் அதிமுக வுடன் தேர்தல் கூட்டு என அறிவிப்பு வெளிவந்தது .


அந்த சூழலில் அமெரிக்காவில் இருந்து ரஜினிகாந்த் ஜெயலிலாதவிற்கு எதிரான அறிக்கை தமிழ்நாட்டில் புது அத்தியாயம் துவங்கி வைத்தது . அல்லது இது துக்ளக் சோ போன்றவர்கள் திட்டமிட்டு நிகழ்த்தியிருக்கலாம். துக்ளக் சோ கலைஞர்  மூப்பனாருக்கு இடையே பல சுற்றி பேச்சு வார்த்தைக்கு பின்னர்  பல்வேறு அரசியல் சூழலை கணக்கில் எடுக்கப்பட்டு பின்னர் தமாகா  துவக்கப்பட்டது . அந்த தேர்தலின் இறுதுவரை கண்ணன்சொல்லிக் கொண்ட தாமாகசார்பாக மூப்பனார் எங்கும் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை .கடலூரில் இருந்து சென்னை போகும் வழியில் ஒரு இரவு புதுவை ஆனந்தா இன்னில் தங்கினார் . அந்த ஹோட்டல் அமைந்துள்ள கண்ணனின் காசுகடை தொகுதியில் அவர் பிரசாரம் செய்யாத மர்மம் அனைவரும் அறிந்தது .திமுக தலைமையிலான ஆட்சியிலிருந்து கண்ணன் பாதியில் கழன்று விடுவார் என்பது மூப்பனார் உட்பட எல்லோருக்கும் தெரிந்திருந்தது ஆனால் அது எப்போது நிகழும் என்பது கேள்வி


காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த பிறகு அதற்கு கண் காது என எந்த புலனும் இயங்காது . அதற்கே உரிய சிக்கலும் தீர்வும் இயங்கு விசையும் வேறானவை அதில் எந்த புற நியாயங்களையும் கொண்டு வைக்க முடியாது. கட்சி உறுப்பினர்களுக்கும் அதற்குமான உறவு அறுந்து போய் , அந்த ஆட்சிகாலம் முடிவுறும் வரை அது அப்படியே நீடிக்கும். முற்றும் எதற்கும் சம்பந்தமில்லாத ஒரு கூட்டம் அனைத்து இடத்திலும் குவிந்து கிடக்கும். ஆனால் அதில் உள்ள நியாயம் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் புதுவை காங்கிரஸின் ஊழ் நெறிப்படுத்தப்பட்ட கட்சி ஆட்சி அமைப்பு என ஒன்று இல்லாதது பெரிய சிக்கல் . அப்படி அது போல ஒன்று அமைய யாரும் விரும்பவில்லை ,அதன் காரணம் வெளிப்படை. கட்சியில் இருந்து உருவாகிவரும் அரசு என்பது தமிழகத்தில் திராவிட இயக்கம் போல தொகுதிக்கு இவர் என எவரும் வகை செய்யப்படுவதில்லை . தேர்தல் நேரத்தில் வந்தடையும் ஒரு சிலருக்காக அது அப்படி வைத்துக் கொள்ளப்பட்டது . இங்கு முற்றதிகாரம் கொண்ட மாநில தலைவர் என ஒருவர் உருவாகிவிட முடியாது. தலைவர் என்பவர் பல குரல்களை கையாளத் தெரிந்தவர் மட்டுமே. அவர் அந்த வெவ்வேறு குரல்களை ஒன்றிணைக்கும் சமரசப்புள்ளி. அவர் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஓயாத உரையாடலில் இருந்தாக வேண்டி இருக்கிறது . அதில் கிடைக்கும் சந்தர்பத்தில்  தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கி தன்னை நிலைகொள்ளச் செய்ய அவருக்கு கட்சி மேலிடம்கருணைகொள்கிறது . அதையும் சத்தமாக செய்ய இயலாது . உரியது என்றாலும் அது பிறர் பார்க்க செய்து கொள்ள முடியாது . இந்தியா முழுவதும் இதுதான் நிலையா? என்றால் ஆம் ஆனால் மொழி ஒரு தடையாக இல்லாத மாநிலங்களில் ஒரு மாநில தலைவருக்கு இணையாக தில்லி கட்சி பொறுப்பாளர்களே மடை கட்டுகிறார்கள் தலைவர்கள் அனைவரும் தங்கள் கணக்கை மட்டும் மிக அழுத்தமாக முன்வைக்கிறார்கள் 

 

ஆட்சியை எந்த வகையிலும் கட்சி சார்ந்திருக்க முடியாது அதன் ஆட்ட விதிகள் வேறு உலகை சேர்ந்தவை. கட்சி அரசியல் அதிகாரம் என்பது ஆட்சியில் இருப்பது ஒரு அடையாளம் மட்டுமே. அதை செயல்படுத்த சட்டமன்றத்தை கடந்து வெளியே ஒரு பெரிய உலகம் இருக்கிறது அதற்கு கேட்கும் செவிகள் அதற்குறிய ஒலியமைப்புகள் கொண்டது . கட்சி முக்கியஸ்தர்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என எதிர் நோக்குவது மடமை ,அது இயல்வதல்ல. கட்சி செயல்பாடு ஒருவகை முக்கோண அமைப்பு கட்சி ஆர்வலர் , கட்சி அமைப்பு , அரசு அதிகாரிகள். இதில் பொது மக்கள் குறித்து பேச சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கட்சி அமைப்பாக இருந்தால் அது தனக்காகவும் அதிகார அமைப்புடன் பேச முடியும். அது அரசானாலும் அரசாங்கமானலும் .


செவ்வாய், 22 மார்ச், 2022

அடையாளமாதல் * ஆழ்மனமும் மனமும் *



ஶ்ரீ:



பதிவு : 612  / 802 / தேதி 22 மார்ச்  2022



* ஆழ்மனமும் மனமும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 11.





புதுவை அரசியலில் எந்த பின்புலமும் இல்லாமல் உயர்நிலைக்கு வந்தவர்கள் மிகச்சிலர் , அவர்களைப் பற்றி ஒரு பட்டியலில் இருந்தால் அதில் கண்ணனும் உண்டு . அவர்கள் அனைவரும் தங்களை பலவித அனுகுமுறையால் முன்வைத்தனர். கண்ணன் மீறல் மனப்பான்மை கொண்ட இளந்துருக்கியர் என்கிற பிம்பத்தை வெளிப்படுத்தினார் . தனது சோஷலிச சிந்தாந்தத்தக புறவயமாக வெளிப்படுத்தியவர் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் . 1980 களில் இந்திய அளவில் அந்த தலைமுறைக்கான தொடக்கம் நிகழ்ந்தது . இந்திரா காந்தியை மறுத்து வெளிவந்து காங்கிரஸிற்கு மாற்றாக தன்னை நிறுவிக் கொள்ள தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தவர் . கட்சி தொடங்கி பின்னர் கட்சிகளை ஒற்றிணைத்து என அதிகாரப் பதவியில் அதிகம் இல்லாது போனாலும் அவர் இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஆளுமை. அலலது அப்போதைய இளஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா அதே போல தாடியுடன் இருப்பவர் அவரிடமிருந்து தனக்கான அடையாளமாக அதைப் பெற்றிருக்கலாம். புதுவையில் கம்யூனிஸ்ட் இயக்கம் தனது பிடியை மெல்ல கைவிட்டுக் கொண்டிருந்தது . அவர்கள் பேசும் மார்க்சியம் இளைஞர் காங்கிரஸாருக்கு கவர்ச்சியை கொடுத்திருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக காங்கிரஸ் காந்தியின் அகிம்சாவாதத்தை முன்வைக்கவில்லை . அது அதற்கு சரியான மாற்றாக இருந்திருக்கும்


அரசியல் நான் கடந்துவந்த பாதை என நினைக்கவில்லை. அவை நான் உயிர்ப்புடன் வாழ்ந்த களங்கள். அவற்றை ஒருபோதும் கடந்து வரவில்லை. இங்கிருந்து கொண்டு அங்கு மேலும் மேலும் புதியவற்றை தேடிக்கொண்டிருக்கிறேன். அவற்றை தொகுத்துக் கொள்ள இந்த வலைப்பூதளத்தில் மீள மீள சில நிகழ்வுகளாக அவை சொல்லப்படுவதற்கு காரணம் நான் அவற்றில் இருந்து புதியவைகளை தொடர்ந்து கண்டுகொள்கிற தருணங்களுக்காக. இளைஞர் சக்தியின் பிரதிநிதியாக தன்னை அறிவித்துக் கொண்டாலும்,அவரது கணக்குகள் பல அடுக்குகளையும் அதில் ஓயாது ஊடாடும் மனமும் கொண்டவராக இருந்தார் . அதனால் எங்கும் அமைந்து அமராமால் தொடர்ந்து மாற்றமடைந்த மனத்துடன் இருந்ததால் அவருடன் யாரும் இணையமுடியாத இடத்தில் நின்று கொண்டார். தன்னை மட்டுமே முன்னிறுத்த அவர் முயற்சித்து தயக்கம் காரணமாக மூப்பனாரை சார்ந்து நிற்க முடிவெடுத்து , தமிழகத்தில் பெருக்கெடுத்த உணர்ச்சிகளை புதுவைக்கு கொஞ்சமேனும் கடத்தும் முயற்சியே புதுவையில் அவர் துவங்கிய தமாக


மூப்பனார் கட்சித் துவங்காதிருந்தால்? கண்ணன் அதை வேறு பெயரில் செய்திருப்பார் . பின்னாளில் அவர்புதுவை மாநில காங்கிரஸ்துவங்கி காணாமலானது வேறு கதை. அவர் மூப்பனாரை முன்னிருத்தியதில் சாதக பாதங்கள் இரண்டும் இணைகட்டி நின்றன . சாதகம் கட்சி துவக்கப்பட்டு சில வாரங்களில் கணிசமான வேட்பாளர்கள் உருவாகி அதில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தனர் . பாதகம் குறித்து இப்படி ஊகிக்கலாம் என நினைக்கிறேன். அவரின் முதல்வர் கனவு . தேர்தல் கூட்டணி அமர்ந்த முதல் விஷயத்தில் அவரது அனைத்து கதவுகளும் மூடுண்டன . கூட்டணி உடன்படிக்கை சென்னையில் மூப்பனாரின் முன்னனிலையில் தமிழகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது . புதுவை தமாகா விற்கு 6 தொகுதிகளே ஒதுகப்பட்டன . அதிக சீட்டுக்களை வழங்குவதில் உள்ள சிக்கலை திமுக தெளிவாக உணர்ந்திருத்து  . இரண்டாவது அடுக்கில் கண்ணனுக்கு தனது கட்சியின் சார்பில் நிற்கும் தன்னை தவிர மீதமுள்ள ஐந்தில் எத்தனை வெற்றி என்கிற குழப்பம் இருந்திருக்க வேண்டும் . போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் அனைத்திலும் அவரது கட்சி வெற்றி அவர் எதிர்பார்த்தாரா? என்பது தெரியவில்லை . அந்த முரண் கணக்கு சண்முகத்துடன் இறுதி நிமிட வரை பேரத்தை நிகழ்த்த இடம் கொடுத்திருக்க வேண்டும் .



தேனீ ஜெயக்குமாருக்கு வில்லியனூர் தாண்டி ஊசுடு பாகூர் மண்ணாடிப்பட்டு என பிற தொகுதி வேட்பாளர்களுடன் நல்லுறவும் வாக்காளர்களிடம் செல்வாக்கும் இருந்தது

அவர் ஜனதா தளத்தின் மாநில பொறுப்பில் இருந்த போது புதுவை புறநகர் மற்றும் நகர் சார்ந்த பகுதிகளில் அவருக்கான ஆதரவு தளம் உருவாகி வந்தது . தென்னகத்தில் ஜனதா தளம் போன்ற தேசிய கட்சிகளின் அவர்களுக்கான இடத்தைக் கொடுத்தது. காங்கிரஸிற்கு மாற்றாக அதை உருவாக்கிய தலைவர்கள் அவர்கள். காங்கிரஸின் பின்னால் நிற்க அவர்களுக்குத் தயக்கமிருந்தது அதே சமயம்  திரவிட அரசியலையும் நிராகரித்தனர் . கடந்த தேர்தல்களில் சில தொகுதிகளில் வெற்றியும் இரண்டாமிடமும் பெற்று தங்களின் இருப்பை உணர்த்தியும் உணர்ந்தும் இருந்தனர் . 1989 களில் பிரதமர் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பதவியை இழந்த பிறகு உருவான வெற்றிடம் அவர்களை நம்பிக்கை இழக்க செய்திருந்தது . 1991 தேர்தலில் குறிப்படத்தக்க வாக்கு விகிதத்தை பெற்றது அவர்களுக்கு அரசியல் நம்பகத்தன்மை குறித்து நம்பிக்கை அளிப்தாக இருந்தாலும் ஒரு சில உறுப்பினர்களுடன் சட்டமன்றம் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு அரசியல் குறித்து கனவிருந்தது. காங்கிரஸிற்கு மாற்றாக அவர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு மூப்பனார் தலைமையை கொண்ட தமாகவாக உருவான போது தயக்கமல்லாமல் அதில் இணைந்தனர். அவர்களுக்கு கண்ணனின் மனநிலை தெரியும். ஆனால் அவரைப் பொருட்படுத்தாமல் தங்களின் ஆளுமையை முன்வைத்து கட்சியையும் தேர்தலையும் எதிர் கொண்டனர்


தேசிய அளவிலான வசீகரத் தலைவர்களின் பிம்பம் உள்ளூர் தேர்தலில் எடுபடாது என அறிந்திருந்தனர். மூப்பனாரின் ஆளுமை காங்கிஸ் சார்ந்த தொண்டர்களை தங்களுக்கு மேலதிகமாகப் பெற்றுத் தரும் என கணக்கிட்டனர் . அது மிகச்சரியான அவதானிப்பு . அவர்கள் வெற்றிக்கு தேவையான ஊசல் ஓட்டுக்கள் அவை பெற்றுத்தந்தன. பின்னர் தனிப்பட்ட அரசியல் அனுபவமும் பொருளியல் பலத்தையும் முன்வைத்து தங்களை நிறுவிக் கொண்டனர் . கடந்த கால அரசியல் யாதர்த்தத்தினால் ஏற்பட்டப் புரிதல் கட்சியின் பிற தலைவர்களை சம ஆளுமைகளாக ஏற்று நடிப்பில்லாது அனைத்து செல்வது குறித்த பழக்கும் அவர்களுக்கு நல்ல பலன் கொடுத்தது . தங்களை பிறரையும் மிகச் சரியாக புரிந்து வைத்திருந்தனர், அவர்கள் தொண்டர்களுக்குள் அடுக்கு உருவாக்கிக் கொண்டு வேறு பக்கம் நிற்காமல் எளிய இடத்தில் நின்று கொண்டனர். புதுவை போன்ற மிகச் சிறிய மாநிலத்தின் அரசியல் வெற்றிக்கு மிக சிறந்த அனுகுமறை . ஆனால் பெரும் நடைமுறைச் சிக்கல் உள்ளது . ஒவ்வொருவரையும் தெரிந்து வைத்திருப்பதால் அவர்கள் குடும்ப நல்லதும் அல்லாததுமான நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும். ஒரு நடிப்பிற்காக அதை செய்பவர்கள் ஒரு கட்டத்தில் அது கட்டுபடியாகாமல் விலகி விடுவதைப் பார்த்திருக்கிறேன் . புதுவை முதல்வர் ரங்கசாமி அதற்கு மிகச் சிறந்த உதாரணம். நாள் ஒன்றிற்கு 30 முதல் 40 குடும்ப நிகழ்வுகளில் சலிக்காமல் கலந்து கொள்வதை பார்த்திருக்கிறேன். நம்பும் ஒன்று அது நேரில் அப்படி இருக்க வேண்டும் என்பதில்லை


வியாழன், 17 மார்ச், 2022

அடையாளமாதல் * பார்வைக்கு அடங்காதவை *

 



ஶ்ரீ:



பதிவு : 611  / 801 / தேதி 17 மார்ச்  2022


* பார்வைக்கு அடங்காதவை *


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 10.






இந்த முறை அதிகார அடுக்கு மாறுபட்டது . மரைக்காயர் மாநில அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டவர் போலாகி தனது சட்டமன்றத் தொகுதியை மகன் ஷாஜகானுக்கு கேட்டுப் பெற்று பிறகு மௌனமானார் . மரைக்காயர் இடத்தில் வைத்திலிங்கம் வந்தமர்ந்து சண்முகத்துடன் தொகுதி வேட்பாளருக்கான தேர்வில் பேச்சுவார்த்தை நடத்தினார். சண்முகத்தின் கருத்து வைத்திலிங்கத்தால் ஏற்கப்படவில்லை என அவர் பலமுறை குறைபட்டதை கேட்டிருக்கிறேன் அதனால் ஆட்சி அமைக்கும் வாய்பிழந்ததாக சொன்னார் . எல்லா சமையங்களிலும் அது உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்றாலும் இந்த விஷயத்தில் அவர் சொல்வது உண்மை என நினைக்கிறேன் . அவர் நிகழ் அரசியல் குறித்த முடிவுகளை ஆழ்மன புரிதல்கள் மூலம் உருவாக்கிக் கொள்கிறார் அதை சாமியாடி போலகருத்தாகமட்டும் முன்வைப்பவர் அதில் பிறரை சலிப்பூட்டும் அவரது காலத்தில் உறைந்து போன கடந்தகால அனுபவங்களில் இருந்து அவற்றை வகைப் படுத்துவார். அதன் மூலம் தன் கருத்தை மறைமுகமாக சொல்லுவார். அவரை வழிபடுபவர்களுக்கு வேண்டுமானால் அது கற்றலாக இருக்கலாம் ஆனால் அதிகாரத்தின் வழியாக சமநிலையில் அமர்ந்து பேசும் நிகழ்காலத்தை சார்ந்தவர்களுக்கு அது மனவிலக்கத்தை சிறு எள்ளலைக் கொடுக்கும் . ஒரு கருத்து அனைத்து விதமான தர்க்கத்தை முன் வைக்க வேண்டும் என எதிர்பார்க்கும் . தர்க்கம் அவர் அறியாதது. தர்க்கத்தை முன் வைக்க கூடியவர் வைத்திலிங்கம். இருவருக்குள் ஒரு தலைமுறை இடைவெளி என்பதால் இருவரும் வேறு வேறு தளத்தில் இருந்தனர் . சண்முகம் தன் அனுபவத்தால் ஆளுமையால் சமாளிக்க முடியாமைக்கு வைத்திலிங்கத்திற்கு பிரதமர் நரசிம்மராவின் ஆதரவிருந்தது ஒரு காரணம் என்றனர் . தோல்வியுருவார்கள் என முன்பே கணக்கில் கொள்ளப்பட்டவர்கள் காந்திராஜ்,பக்கிரி அம்மாள், மாரிமுத்து , மரைக்காயரின் மகன் ஷாஜகான், அனந்தபாஸ்கர். அவர்களுக்கு மாற்று வேட்பாளர்கள் இருந்தனர். ஆனால் சில நுட்பமான காரணங்களாலால் சண்முகம் சொன்னது போல வைத்திலிங்கத்தின் பிடிவாதம் காங்கிரஸ் ஆட்சி அமைவதை நூலிழையில் தவறவிட்டதுஅந்த எரிச்சலினால் அஇஅதிமுக ஆதரவு மற்றும் சுயேட்சையான நளமகராஜன் என ஆட்சி அமைக்கும் வாய்ப்பிருந்தும் சண்முகம் அதை உள்நோக்கத்துடன் நிராகரித்தார் என அவர் மீதான குற்றச்சாட்டாக நீடிக்கிறது


நூலிழைப் பெரும்பாண்மையுடன் ஆட்சிக்கு வந்த திமுக அரசு பலவீனமானது ,கண்ணன் அதன் மீதமர்ந்த எடை . அந்த இடத்தில் இருந்து திறந்தால் பார்த்தால் மொத்தமும் வேறொரு பரிமாணத்தை காட்டக்கூடியது. அந்த சூழலில் இதை கண்ணனும் ஊகித்திருக்க வேண்டும் . தனிக்கட்சி என்பதை விட சட்டமன்றத்தில் சுயேட்சை என்கிற நிலை அவரை தேர்தல் நடந்த பிறகும் விருப்பம் போல செயல்படும் உரிமையை பெற்றுக் கொடுத்திருக்கும் . அவர் சட்டமன்றத்தில் எந்தக் கட்சியின் ஆணைக்கு கட்டுப்பட வேண்டிய நிர்பந்தமில்லை . தேர்தல் முடிவு குறித்த நிச்சயமற்ற நிலையால் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கள நிலைமையை அவதானித்தப் பிறகு தனது இடத்தை முடிவு செய்யலாம் என அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இவை எல்லாம் அரசியல் ஊகம் மட்டுமே . கண்ணன் படிவம்B சமர்பிக்காதது ஒரு விபத்து அதற்கு பின்னால் எந்த அரசியல் கணக்கும் இல்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. தலைவர் சண்முகம் ஜோதி நாராயணசாமியிடம் கண்ணன் வேட்புமனு தாக்கல் செய்யும் வரை பொறுத்திருக்க சொன்னது ஏன்? என்கிற கேள்வி எழும்வரை . அது விபத்தல்ல என முடிவாகிறது . தேர்தல் நேரத்தில் புதுக் கட்சி துவக்கி அதன் பொருட்டு திமுக வுடன் கூட்டணியில் இணைந்து வேட்புமனு வரையில் வந்து நிற்கும் ஒருவருக்காக சண்முகம் ஏன் தனது கட்சி வேட்பாளரை காக்க வைத்தார் என்பதை பிற புதுவை அரசியல் கட்சித் தலைவர்களும் அறிந்திருக்க வேண்டும் . அந்த சந்தேகத்தின் நிழல் கண்ணனை துரத்திக் கொண்டே இருந்தது. எங்கும் அமையாத உள்ளம் கொண்டவராக அந்த காலகட்டம் முழுவதிலும் இருந்தார்


முதல்வர் ஜானகிராமன் திராவிட பாணி அரசியல் பின்புலம் கொண்டவர் அவரது நேரடித்தன்மையை சமாளிக்க முடியாமல் கண்ணன் திணறினார். முதல்வர் கண்ணனை பொருட்படுத்தாதற்கு மூப்பனார் , கருணாநிதி மற்றும் மத்தியை ஆண்ட வாஜ்பாய் அரசாங்கம் என வெவ்வேறு அரசியல் கிளைகளாய் பிரிந்து பிரிந்து கண்ணனின் அனைத்து சிந்தனைகளையும் தடுத்துக் கொண்டே இருக்க காரணங்களை தொடர்ந்து முன்வைத்தது . பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒரு கட்டத்தில் கண்ணன் முப்பனாருக்கு எதிரானார். சண்முகம் , கருணாநிதி , மூப்பனார் என தஞ்சை அரசியல் பின்புலம் கொண்டவர்களை அவரால் சமாளிக்க முடியவில்லை . இவர்களுக்குள் கட்சி கடந்த பொதுப் புரிதல் இருக்கக்கூடும் என சந்தேகித்தார். கண்ணன் நிலையற்ற மனம் கொண்டவர் என்கிற சந்தேகப் புள்ளி அனைவருக்கும் அவர் மீது நிழலைப் போல படிய அது தமிழக தலைவர்கள் மற்றும் அவரது புதுவை கூட்டணி தோழர்களின் இடையே அவர் மீது நம்பிக்கையின்மை உருவாக்கிவிட்டிருந்தது .அது அவரை மேலும் மேலும் பதட்டமுள்ளவராக்கி இருக்கலாம் . 1996 களின் இறுதி கட்டத்தில் ஆட்சி மாற்ற ஊழலில் வைத்திலிங்கத்தை மத்திய புலனாய்வு வரை கொண்டு சென்றது அந்த பதட்டத்தால் எழுந்த மிகையான நடவடிக்கையாக அரசியலிளர்களால்  விமர்சிக்கப்பட்டது


கட்சித் தலைவர் பதவி அவருக்கு முள் கிரீடம் போலானது . சுயேட்சை என்பதால் சட்டமன்றத்திற்குள் கட்சித் தலைமையாக செயல்பட முடியவில்லை . தேனீ ஜெயகுமார் அந்த பொறுப்பில் வந்தார் . சட்டமன்ற நடவடிக்கை குறித்த செயல்பாட்டில் கண்ணனுக்கும் தேனீ ஜெயகுமாரும் இணையாளுமைகள் என்பதால் தலைவர் தொண்டர் என்கிற நிலை அங்கு உருவாகவில்லை. எப்போதும் தன்னை மேலதிகமாக கொண்டு வைத்து பழகிய கண்ணனுன்னு இந்த உட்கடசி ஜனநாயக புரிதல் வசப்படவில்லை. பிற முன்னணி தலைவர்களுக்கும் இதுவே சிக்கலாக உருவெடுக்க அனைவரும் தேனீ ஜெயகுமார் பின்னால் கூடினர். பின் உரசல்கள் மெல்லத் தோன்றியது. புதுவை தமாக ஒரு விசித்திரமான உருவை கொண்டது. அதனுள் பல ஆளுமைகள் தேர்தல் வெற்றியை முன்வைத்து மட்டுமே இணைந்திருந்தனர். இது சண்முகம் தலைமையிலான காங்கிரஸ் பல ஆண்டுகளாக செயல்படுத்தி ஆழ்ந்த நடைமுறையால் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது . அதற்கு பின்னால் சண்முகத்தின் அரவணைக்கும் போக்கு முக்கியமான காரணி . காங்கிரஸில் கூட அவருக்கு பின்னர் வந்த தலைவர்களால் பிற இணைத் தலைவர்களுடைய மனதை வென்றெடுக்க முடியவில்லை


கண்ணனால் தன்னுடன் முரண்படுபவர்களை கட்சி கட்டுப்பாடு என்கிற ஒன்றில் கொண்டு நிறுத்த முடியவில்லை . தன்னை அழுத்தமாக கண்ணன் முனவைக்கும் சந்தர்பங்களில் அவர்கள் மூப்பனாரின் பின்னால் நிற்பது கண்ணனை நிலைகுலையச் செய்திருக்க வேண்டும் .தேர்தல் நேர பரபரப்பில் வேறு ஒன்றையும் பற்றி கருத்தில் கொள்ளாது அனைத்தையும் கடந்து கண்ணன் மிக சரியாக வெற்றிபெரும் வாய்ப்புள்ளவர்களை தன்பக்கம் கொண்டுவந்திருந்தார் தனது ஆதரவாளரான உப்பளம் தொகுதி மனோகர் மட்டுமே அன்று வெற்றிவாய்ப்பை உறுதி செய்ய இயலாதவராக அறியப்பட்டவர் . ஊசுடு நாகரத்தினம், மண்ணாடிப்பட்டு ராஜசேகர உடையார் தவிற  

வில்லியனூர் தேனீ ஜெயக்குமார், பாகூர் கந்தசாமி இருவரும் தனியாளுமைகள் அவர்களின் அரசியல் புறவயாமாக மட்டுமின்றி அகவயமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது . மக்கள் நினைப்பது போல தேர்தல் வெற்றி தோல்வி குறித்து மிக சாதாரணமாக சென்றையும் இடம் தலைவர்களுக்கு வாய்ப்பதில்லை அவர்கள் பல்வேறு அலகுகளுடன் இதை அணுகுகிறார்கள்.


புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்