https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 26 ஏப்ரல், 2018

புதுவை வெண்முரசுக்கூடுகை – 14 மயிலாடுதுறை பிரபு

ஸ்ரீ:


பதிவு : 488 / தேதி :- 26 ஏப்ரல்  2018





புதுவை வெண்முரசுக்கூடுகை  14 
(நாள்: 26.04.2018 / வியாழன்)







அனைவருக்குமென் வணக்கம்

யாங்கள் முன் நாள் ஈட்டிய தவமும் பின் நாள் முயற்சியும் இயைந்தது போல எனச் சொல்வதா அல்லது விதியே நல்கினது போல எனச் சொல்வதா என அறியேன் இக்கூடுகைகைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற அருமருந்தன்ன நண்பர்களை.  அவர்களுள் சமீபத்தியவர் தான் அஞ்சன வண்ணத்தவரும் எமது ஆருயிர் உள்ளத்தவரும் அன்பிற்கினிய எழுத்தாளருமான மயிலாடுதுறை பிரபு அவர்கள்.  ஒவ்வொரு மாதக்கூடுகைக்கும் நூறு கிலோமீட்டர் பயணித்து வந்து பங்குபெற்று நள்ளிரவில் வீடு திரும்பிச் செல்வதெல்லாம் நாடி நரம்பு ரத்தம் சதை அனைத்திலும் இலக்கிய ஆர்வம் ஊறியவர்களுக்கேயுரியது. அவருக்கான நன்றி எப்போதும் நினைப்பிலிருக்கும்.

இம்மாதக் கூடுகையில் மழைப்பாடலின் தூரத்துச் சூரியன் மற்றும் நீள் நதி பகுதிகளை வைத்து பிரபு மிக நேர்த்தியானதோர் உரை நிகழ்த்தினார்.  அதற்கு முன்பாக நண்பர் அரிகிருஷ்ணனது தாயாருக்கு யாவராலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
என்னளவில் நினைவில் நின்றவைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

மார்திகாவதியின் குந்திபோஜனால் துர்வாசரை வைத்து கௌந்தவனம் அமைக்கபெற்றதே ஒரு மாபெரும் அரசியல் முன் நகர்வு எனும் பார்வையில் கொண்டு சென்றார்.

குந்தி ஓர் மாபெரும் அரசு மதிசூழ்பவளாக திகழ அவளது பால்யமே களம் அமைத்து கொடுத்தது.  அதிலும் லவண குலத்தைச் சேர்ந்த அவளது அன்னை மரீஷை ஒடுக்கப்பட்டதிலிருந்து வெளிப்பட்டிருக்கலாம் எனும் கோணம்.

குழந்தையை கன்னித்தாயான குந்தி கைவிடுவது எந்நிலையிலும் விரும்பி  எடுத்த முடிவு   போல காட்சிப்படுத்தப்படவில்லை எனினும் அக்குழந்தை தேடியும் கிடைக்கப்பெறாத போது ஒரு அன்னையாக பெருமூச்சோடு கடந்து வருவதும் கூட அக்குழந்தையை காக்குமொருச் செயலே எனும் திறப்பு.
இம்முறை ஊடாடும் உரையாடற்காரர்களான திரு நாகராஜனும் துரைவேல் அவர்களும் வரவியலாத போதும் அப்பணியை மேற்கொண்டது அன்பர் பண்ருட்டி ராதாகிருஷ்ணன்.

வெண்முரசில் குதிரையோடு மட்டுமே ஒப்பிடப்பட்டு வந்த சூரியன் ராஜநாகத்தோடு ஒப்பிடப்பட்டிருக்கும் காரணம் பற்றி நண்பர் தாமரைக்கண்ணன் கேட்டதற்கு ராகுவும் கேதுவும் ஞாயிறையே தலைவனாக கொண்டுள்ளவை என்பது நமது புராண மரபிலேயே உள்ளது என்றும் மேலும் கர்ணனிடமிருந்து வாழ்நாள் முழுக்க வெளிப்படும் அவனது இருநிலையற்ற ஒற்றை சமநிலையும் நன்றியுணர்வும் விஸ்வாசமும் பைரவி அன்னை பால் குடித்ததால் பெறப்பட்டிருக்கும் எனும் நோக்கில் கடலூர் சீனு பேசிய போது சுவாரஸ்யமாக எடுத்துரைத்தார






தாமரைக்கண்ணனின் உரை.   

சென்ற பகுதியில் காந்தாரத்தில் இருந்து திருதிராஷ்டிரனுக்கு மகட்கொடை பெறுகிறது அஸ்தினபுரிஇந்தப்பகுதியில் யாதவப்பெண்ணான பிருதை அஸ்தினபுரிக்கு தேரப்படுகிறாள்பாலையின் வேட்டை சமூகத்தில்பெண் பெற்றபின், மேய்ச்சல் சமூகத்தில் பெண் கோருகிறது அஸ்தினபுரியயாதியின் சாபத்தால் பிரிந்து சென்ற துர்வசுவின் கொடிவழி காந்தாரம் யதியின் வழிவந்தவள் யாதவப்பெண்ணான பிருதைசென்றபகுதியின் தமக்கை தம்பிக்கிடையேயான (வசுமதி  சகுனி) புரிதலுணர்வைப் போல இப்பகுதியில் தமையன் தங்கைக்கிடையேயான (வசுதேவன்  பிருதை)  உளப்பரிமாற்றம் கூறப்படுகிறது .  இப்பகுதியின்தொடக்கம் பிருதையின் தோழியான அனகை ஒரு மருத்துவச்சியை (சுருதை) தேடிச்செல்வதாக துவங்குகிறது எப்போதோ சிறுமியாக இருந்தபோது கதவிடுக்கில் வழியே கண்ட அம்முதியவளைபெயர் மட்டுமேதெரிந்த ஊரில் தேடிச்செல்கிறாள் அனகை  
பிருதை முற்றும் தீர்க்கமான முடிவுகளை மட்டுமே எடுக்கிறாள்சிறந்த அரசியல் மதிசூழ்பவளாக திகழ்கிறாள்சிறுமியான அவள் எடுக்கும் கௌந்தவனத்துக்கு செல்லும் முதல் முடிவே சிறந்த அரசியல் முடிவு.அவளது ஒவ்வொரு அடியும் மிகுந்த தைரியத்தோடு வைக்கப்படுபவைமருத்துவச்சி  நான் உன் ரகசியத்தை அறிவேன் என்றவுடன் அதனாலேயே நீ ஆபத்திலுள்ளாய் என்ற மறுமொழியில் மூலம் ஒடுங்கச்செய்துவிடுகிறாள்கருக்கலைப்புக்கு எந்த மயக்க மருந்தும் தேவையில்லை என்று சொல்லிவிடுகிறாள்அம்முதியவள் இறந்த அடுத்த கணம் வசுதேவனுக்கு தகவல் அனுப்புகிறாள்இதையெல்லாம் அவள் முன்பேமுடிவெடுத்து வைத்திருக்கிறாள்.  கர்ணனை அவள் கைவிடுவதும் கூட முன்பே எடுக்கப்படும் முடிவுதான்.   



அன்புடன் 


_ மணிமாறன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...