https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 16 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 312 * சார்பை மீறல் *

ஶ்ரீ:



பதிவு : 312 / 478 / தேதி :- 16 ஏப்ரல்  2018



* சார்பை மீறல் *





நெருக்கத்தின் விழைவு ” - 09
விபரீதக் கூட்டு -04







களத்தில் வெகுஜன வசீகரமும்,செல்வாக்கும் , அதிகாரமும் உள்ளவர்களையும் அண்டி நிற்கும் சிலர் அவர்களை தாண்டி அச்சுறுத்தும்  எதிர்மறை சக்திகளுக்கு பெரும் மதிப்பிருப்பது ஒரு சாபக்பேடு . அமைச்சர் ரேணுகா அப்பாதுரைக்கு உதவியாளராக வைத்தியநாதன் நியமிக்கப்பட்ட போதுதான், அவரது நேரடியான அரசியல் சகாப்தம் துவங்கியது . அரசாங்கத்தை ஒற்று பார்ப்பதற்காகவும், அரசாங்கத்தை பின்னிருந்து இயக்குவதற்கும் சண்முகத்தால் அவர் நியமிக்கப்பட்டவர் என்றும் , திமுக கூட்டணி மந்திரிசபையை மறைமுகமாக சண்முகம் இயக்குகிறார் என்கிற அலர் அரசியலில் இருந்த காலம்

அவரது செயல்கள் அனைத்தின் பின்னாலும் சண்முகம் இருப்பதாக உளட்கட்சியிலும் பேசப்பட்டது. அதானால் வெருண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் சணமுகத்திடம் நேரடியாக அதுபற்றி கேட்டபோதுமுழுவதுமாக உண்மைக்கு புறம்பானதுஎன மறுக்கப்ப்பட்டது . அரசியலில் இதற்கெல்லாம் பெரிய மதிப்பிருப்பதில்லை . அது சான்றளிக்கப்படாததாகவே  அர்த்தம் கொள்ளப்பட்டது .

வைத்தியநாதன் பற்றிய  முரண்பாட்டை நான் சண்முகத்திடம் விவாதித்துண்டு. மிக வித்தியாசமான ஒரு உரையாடல் அது  அரசியலில் ஏமாற்றுபவர் ஏமாறுபவர் என யாரும் கிடையாது. அவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள் . அதில் வென்றவர், தோல்வியுற்றவர் என்கிற இரண்டுக்குள்ளாக அனைத்தும் அடங்கிவிடும் . அரசியலில் எதுவும் கருப்பு , வெள்ளையாக இருப்பதில்லை அவரவர் புரிதலுக்கு எது உகக்குமோஎன்ன தேவையோ அதுவே பேருரு கொண்டு எழும் . தனது தேவைக்கு விழையும் ஒருவர் அதை பிறருக்கு தெரியாமல் அல்லது பிறருக்கு கிடைக்காமல், தான் செல்லும் வழியை அடைத்தபடியேதான் செல்கிறார்கள் ,அதன்பொருட்டே ஒவ்வொரு அரசியளாலரும் தனக்கான தனிப் பாதையில்  பயணப்படுகிறார்கள் , காரணம் அரசியல் ஆழ்மனப் புரிதல்களால் இயக்கப்படுவதுநிஜம் அல்லது நிழல் என ஒன்று இல்லாததுஅது உருவிலி , என்றார்.

வைத்தியநாதனைப் பற்றி புகார் சொல்லுபவர்கள் யாரும் ஏமாளிகள் அல்ல , அவர்கள் கோரும் உதவிகளை குறித்தோ அல்லது அதை வைத்யநாதனிடம் தாம் கோரியதையைப் பற்றியோ , என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசாதவர்கள்காரணம் அவர்களின் நோக்கம் தன்விழைவு , அல்லது பிறரை வீழ்த்த நினைக்கும் பின்புலம் கொண்டது . சில நேரங்களில் அவை எனக்கு முரணபட்ட அரசியல் நகர்வாகவும் இருக்கும் , அதனால் எனக்கு அது தெரியக்கூடாது என்பதில் அவர்கள்  மிக கவனமாக இருப்பவர்கள் , தங்களின் விழைவு பலிக்காத போது மட்டுமே என்னை நாடுவார்கள் , பொது கருத்து என்கிற ஒன்றின் உள்ளே அவர்களது எண்ணமே கரைந்திருக்கும்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான வேலைகளுக்கு அவரை பயன்படுவார்கள் . அதிலிருந்து தனது அரசியலை வைத்தியநாதன் கண்டடைகிறார். அதை முடித்து கொடுத்த பின்னர் , அதன் விளைவுகளுக்கு வைத்தியநாதறை மட்டுமே பின் எக்காலத்துக்குமாக அவர்கள் சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்து விடுகிறது . எனவே அது எப்படிபட்டதாக இருக்க வேண்டும் என்பதை  நாம் முடிவு செய்வதற்கு அதில் ஒன்றில்லை . அது அவரவர் குண விசேஷம் , யாரும் யாரையும் கட்டுப்படுத்திவிட முடியாதுஎன்றார்.

ஒரு கட்டத்தில் வைதியநாதனை பற்றி என்னிடம் குறை சொல்ல வருபவர்கள் , நான் அவருக்கு தரும் இடத்தால்தான் அப்படியெல்லம் நிகழ்கிறது என்கிறார்கள் . என்வரையில் அவரை எங்கு வைத்து இயக்க கூடுமோ அங்கேயே வைத்திருக்கிறேன் அது வைத்யநாதனுக்கும் தெரியும் . ஏன் உனக்குத் தெரியாதா ?.நீ அவருடன் என்னமாதிரியான உறவை வைத்திருக்கிறாய் என்பதும்பிறிதொருவர் அவருடன்  வைத்துள்ளதும் ஒன்றல்ல என புரிந்தால் நானும் அவரும் எங்கிருக்கிறோம் என்பது எல்லோருக்கும் புரியுமென்றார்

ஆம் , அவர் சொன்னது முற்றாக சரி . அது ஒருவிதமான மனநிலை , அன்று அதை புரிந்துகொள்ள முயற்சித்தேன் . அப்போது அதை செயல்படுத்துவது என் அனுபவத்திற்கும் , வயதிற்கு சாத்தியமில்லை என நினைத்ததுண்டு , ஆனால் நான் வைத்தியநாதனால் சீண்டப்பட்டபோது , அவர் செய்வதை போல ஒன்றை அவருக்கே நிகழ்த்தி காட்டினேன்

இப்போது அதை மிக நெருக்கமாக உணரமுடிகிறது. அரசியல் அவரவர் பேச்சிலிருந்து முளைத்து கிளை பரப்பி நிற்பது . அந்த உண்மையின் ஆழம் எங்கிருக்கிறது? என யாராலும் அவதானித்து விட முடியாது . நிகழ் அரசியல் இதைப்போன்ற வதந்திகளாலும் , அச்சத்தாலும்  இயக்கப்படுவது . அதுவேஅரசியல் செல்வாக்குஎன்கிற திரிபை அடைகிறது

1999 நடந்த பாராளுமன்ற தேர்தலில் சண்முகத்திற்கும் மரைகாயருக்குமான சீட்டு விஷயத்தில் எனது செயல்பாடுகளில் எதிர் ஊடுபாவுகள் மூலமாக எனக்கும் நாராயணசாமிக்குமாக எப்போதும் சரிசெய்ய இயலாத ஒரு விளையாட்டை வைத்தியநாதன் ஆடியபோது,அரசியலில்  ரீதியாக என்னை ஒருமோதும் மீட்டுக் கொள்ளவே இயலாது போனது. வெருண்ட நான் அதே போன்ற ஒன்றை வைத்தியநாதனுக்கு எதிராக ,என் வழமைப்படி வெளிப்படையாக அவருக்கு எதிர்ப்பு நிலை எடுத்து ,எந்த சண்முகத்தின் இடத்தில் அசைக்க முடியாத இடத்திலிருந்ததாக நம்பப்பட்டாரோ, அவரை  அங்கிருந்து முற்றாக விலக்க என்னால் முடிந்தது . அதற்கு பின்னாளில் அவரால் சண்முகத்திடமிருந்து மட்டுமல்லாது , அரசியலில் தனது இடத்தை எப்போதும் மீட்க இயலாதபடி இழந்துபோனார். நானும் அதில் நஷ்டமடைந்தேன் என்பது இன்னும் வினோதமானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...