https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 321 * துணிதலின் பாதை... *

ஶ்ரீ:



பதிவு : 321 / 491 / தேதி :- 29 ஏப்ரல்  2018


* துணிதலின் பாதை... *



நெருக்கத்தின் விழைவு ” - 16
விபரீதக் கூட்டு -04




கட்சியின் ஆட்சி அதிகார அரசியல் , சட்டமன்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தினால் ஆனது . அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் பொருளியல் , மற்றும் அமைப்பின் தொண்டர்பலம் என்கிற இரு தளத்தில் இயங்கக்கடிய களத்திலிருந்து, தேர்தலை சந்தித்து வெற்றிபெற்று சட்டமன்றத்தினுள் நுழைகிறார்கள் . வெற்றிவாய்ப்பை சட்டமன்ற கட்சியின் ஆட்சி அமைப்பு நம்பியிருப்பதால், அதை நோக்கி செல்லும் சாத்தியமுள்ள கட்சி உறுப்பினர்களை அது தேர்தல் களத்திற்கு தெறிவு செய்கிறது.

தேர்தல் மற்றும் தொகுதிக்களம் பலவித காரணிகளை கொண்டதாக இருப்பதால் , அவை அனைத்தையும் கட்சியிலிருந்து தெறிவு செய்யப்படுபவர்களால் எதிர்கொள்ள இயல்வதில்லை. அதன் பொருட்டு ஒரு தொகுதிக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்களை கட்சி மனதில் வைத்திருக்கும் . அவர்கள் அனைவரும் கட்சி அமைப்பின் தொண்டர்பலத்தை பிரதானமாக நம்பியிருப்பவர்கள் . அவர்கள் உற்சாகமாக களபணியாற்ற வேண்டிய நம்பிக்கைகளை கட்சி தலைமை கொடுக்கும் . அவர்களுக்குள் எழும் போட்டியை ,கட்சி வளர்ச்சிக்கு தலைமை பயன்படுத்திக் கொள்ளும். இது எல்லா கட்சிகளிலும் உள்ள கோட்பாடு

தேர்தல் நேரத்தில கட்சி தலைமையின் வியூக பிறழ்வு அல்லது உட்கட்சி சிக்கலின்  நிர்பந்தத்தால் தான் நினைத்த நபரை முன்னிறிருத்த இயலாமல் ஆகும் போகும்போது , அவர்கள் அதிருப்தியாளராக தம்மை மட்டும் நம்பி துணிந்து பிற கட்சிகளுக்கு இடம்  பெயர்கிறார்கள் . இவர்களே களத்தின் போக்கை நிர்ணயம் செய்யும் சக்திகள் . அது நிகழும் போது அதைத் தொடர்ந்து எழும் விளைவுகளை எல்லா கட்சியிலும் ஏற்படுத்தி விடுகிறது . அதனால்  கட்சிகளின் கடைசீ நேர களவியூகங்கள் முற்றாக மாற்றிவிடுவதும் , அதன் பின்னர் வெற்றி என்பது ஊழின் கையிலும் , தோல்விகள் அனைத்தும் பலவித குற்றச்சாட்டுகளாக கட்சி தலைமையும் சுமக்க வேண்டிவரும்.

மக்கள் செல்வாக்குள்ள  கட்சி என்பது தொண்டர் பலத்தினால் எழுவது . அவர்கள் அனைவரும் எளியவர்கள் , அவர்களின் செயல்பாடுகளின்  பலனை  கட்சித் தலைமையால் ஒரு இடத்தில் குவிக்க முடிந்தால் . அதற்கு  வெற்றிபெறும் வாய்ப்புள்ள கட்சியாக ஒரு தோற்றம் எழுந்து விடுகிறது . அது  கட்சித் தலைமை அவர்களிடம் கொள்ளும் அணுக்கத்தினால் மட்டுமே நிகழ்வது .தினம் எழும் அவர்களின் பலவேறு சுக துக்க நிகழ்வுகளில்  கலந்து கொள்வதிலிருந்து அது துவங்குகிறது . அமைப்பையும் தலைமையையும் தொடர்புறுத்தலில் திறம்பட நிர்வகிக்கும் குழுவை வைத்திருப்பதிலிருந்து , கட்சி நிர்வாகமுறை துவங்குகிறது. பலவிதமான சந்திப்புகளை ஒருங்குவது ஒன்றே அனைவரையும் அணுக்கத்தில் வைத்திருப்பது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...