https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 319 * நிழலின் உரிமை *


ஶ்ரீ:



பதிவு : 319 / 486 / தேதி :- 24 ஏப்ரல்  2018


* நிழலின்  உரிமை *




நெருக்கத்தின் விழைவு ” - 14
விபரீதக் கூட்டு -04





சென்னைக்கு ஒரு வேலை விஷயமாக செல்ல இருப்பதாய் ஆனந்த பாஸ்கரிடம் சொன்ன போதுதான் , நாளை அவரும்  சென்னை செல்ல இருப்பதை சொன்னார் . என்னை தன்னுடன் வருமாறு அழைத்தார் . சொன்னபடி மறுநாள் அதிகாலை அவர் எனது வீட்டிற்கு வந்தபோதுதான் வண்டியில் வைத்தியநாதன் அமைந்திருப்பதை பார்த்தேன் . அப்போதெல்லாம் அவருடனான எனது உறவு அகலாது அணுகாது தீக்காய்வாராக  இருந்தது . ஒரு நட்பார்ந்த  புன்னகையுடன் என்னை பார்த்ததும் நான் அவருக்கு பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டேன்

ஆனந்த பாஸ்கரன் எப்போதும் காருக்கு ஓட்டுநர் வைத்துக்கொள்வதில்லை . அவரே ஓட்டுவதுதான் தனக்கு உகந்தது என்பார் , அன்றும் அவரேதான் ஓட்டிவந்தார் . பயண துவக்கத்தில் வைத்தியநாதன் என்னிடம் சற்றும் முகம் கொடுக்காத போக்கே கையாண்டார், ஆனால் திண்டிவனம் தண்டுவதற்குள்ளாக  , அவர் அதுவரை அணிந்து கொண்டிருந்த முகமூடி கழன்று போனது . ஆனந்த பாஸ்கர் எப்போதும் வெளிப்படையான பேச்சை கொண்டிருப்பவர் . அது பெரும்பாலும் அரசியலில் ஒன்று நினைத்து ஒன்று செய்த காரியங்களும் ,அதன் பின்விளைவுகளும் ,நடந்தபின் அவற்றை நினைத்துப் பார்பது நகைச்சுவையின் உச்சம் . ஆனால் அதில் இளிவரள் தொணி ஒலிப்பது ஆபத்தை வலிந்து அழைப்பது.

வைத்தியநாதனை கலாய்த்து நகைச்சுவையும் பகடி பேச்சும் வெடி சிரிப்புமாக யாரை பற்றியும் கவலை கொள்ளாது பேசும் போக்குடையவர் ஆனந்த பாஸ்கர். எல்லோரிடமும் வைத்தியநாதன்  காட்டும் முகத்தை ஏனோ இங்கு அவரால்  காட்ட முடியவில்லை . ஒரு கட்டத்திற்கு மேல் ஆனந்த பாஸ்கரினின்  நகைசுவை பேச்சு உச்சகட்டத்தை அடைந்த போது , என்னால் அதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை நானும் அந்த சிரிப்பில்  கலந்து கொண்டேன் .

சென்னை வந்ததும் அவரவர் வேலை நிமித்தமாக பிரிந்து சென்று , அன்று இரவு சவேரா ஹோட்டலுக்கு நான் தனித்து வந்தபோதுவைத்தியநாதன் மட்டும் அங்கு அமர்ந்து  தொலைக்காட்சியில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தார் , ஆனந்த பாஸ்கரன் இன்னும் அறைக்கு திரும்பி இருக்கவில்லை. என்னை கண்டதும் மிகவும் நட்புடன் பேசத்துவங்கினர். அது காலை ஆனந்த பாஸ்கர் அவரை கலாய்த்ததற்கு தன் தரப்பு நியாயமாக  அவை இருந்தன . எனக்கும் ஆனந்த பாஸ்கருக்குமான நட்பு , அவரிடம் சில மாற்றத்தை கொண்டு வந்திருந்தன . அவர் என்னிடம் பேசிய முறையில் இருந்து ஆனந்த பாஸ்கருடன் அவர் முரண்பட முடியாத சிக்கலை ஏதோ இருப்பதாக நான் உணர்ந்தேன். அதன் பிறகு எனக்கும் அவருக்குமான உறவில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால் தான் நினைத்ததை நிகழ்த்த அவர் தயங்குவதல்லை என்பது இப்போது பார்த்தாகிவிட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 73 அழைப்பிதழ்