https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 27 ஏப்ரல், 2022

அடையாளமாதல் * அனைத்தின் மறு பாதி *

 



ஶ்ரீ:



பதிவு : 618  / 808 / தேதி 27 ஏப்ரல்  2022



* அனைத்தின் மறு பாதி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 15.





தொண்டமானத்தத்தில் இனி அனைத்தும் மிகச் சரியாக நிகழும் எனத்தோன்றிய பிறகு மேலதிகமாக ஏதாவது ஒன்றை செய்யலாம் என அந்த ஊர் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலுக்கு சென்று வணங்கி பின்னர் அங்கிருந்த பட்டரிடம் தலைவர் வரும் போது அவருக்கு சிறிய மாலை போட முடியுமா? என கேட்டேன்.அவர்பூர்ணகும்பம்கொடுக்க ஒத்துக் கொண்டார்! . ஒவ்வொரு இடத்திலும் இப்படி உருவாகி நின்று கொண்டிருக்கும் அரசியல் தனது வெளிப்படல் நேரத்திற்காக காத்திருக்கிறது. அதை சென்று யார் தொட்டாலும் அங்கிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அது தயங்குவதில்லை. என் அரசியல் நுழைவு கூட அப்படி யாரோ ? எதுவோ? தொட்டுசென்ற ஒன்று. ஆனால் அதை அங்கிருந்து வளர்த்தெடுக்க இளம் மனமும் கற்பனையுமாக ஒன்று தேவையாகிறது . முடிவில்லா கற்பனையில் திளைப்பதன் வழியாக தனக்கு உகந்த ஒரு சூழலை அது உருவாக்கிக் கொண்டு காத்திருக்கிறது . அதற்கு வயதோ அனுபவமின்மையோ ஒரு தடையில்லைஅதன் பின்னர் கொடியேற்ற நிகழ்வு தொடர்பு அறாமல் அங்கிருந்து துவங்கி அனந்தபுரத்தில் எதிர்பாராது நிகழ்ந்த வரவேற்பு வெடிவிபத்தில் ஒருவர்  கண்ணை இழந்தல் என்கிற திடுக்கிடும் குறியீட்டுடன் முடிய இரவு 11:00 மணியானது. தலைவரை வீட்டில் கொண்டு நான் விடும்போது இரவு 12:45 . நாள் முழுவதும் அந்த மொத்த தொகுதியையும் நடந்தே கடந்ததால் பெரும் உடற்சோர்வுடன் வீடு சென்றேன்


மாநில அளவிலான ஒரு பெரிய நிகழ்விற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை ஒரு சிறிய தொகுதி ஏன் எடுத்துக் கொண்டது? என்பதும் தேர்தலில் தோல்வியுற்ற மாரிமுத்துவால் சில நாட்களுக்குள் இவ்வளவு பெரிய அளவில் பொதுமக்களை திரட்ட முடியுமானால் இந்த பலம் அவரது தேர்தல் வெற்றிக்கு ஏன் உதவவில்லை . ஆனால் அடிப்படையில் இதில் ஆச்சர்யமடைவதற்கு ஒன்றுமில்லாத மிக எளிய அரசியல் கணக்கு . அரசியலாளர்களை விட சமூகம் தேர்தல் அரசியலை முடிவு செய்கிறது அதிலிருந்து திரண்டதை மட்டும் அரசியலாளர் பெற்றுக் கொள்கிறார். சமூகத்தின் கூரிய பகுதியாக சில மனிதர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒயாமல் பேசி பேசி அதை உருவாக்குகிறார்கள். பெரும்பாலும் மிகச் சிறிய முதலீட்டில் டீக்கடை தையற்கடை இருசக்கர பழுது பார்ப்பவர் என வந்தவர் சற்று நேரம் அமர்ந்திருக்க வேண்டிய தொழில் செய்பவராக இருப்பார். அவரே அந்த சமூகத்தின் திரண்ட பகுதியின் முணை . அவரது கடை சிறு கூட்டம் தொடர்ந்து வந்து சந்திக்கும் இடமாகவும் இருக்கும் இப்படி அந்த மொத்த சமூகமும் அவரை ஒரு மாதத்தில் சில தடவை அவரை சந்தித்துவிடுகிறது. அங்கு பேசு பொருள் எங்கு சுற்றினாலும் அது உள்ளூர் வம்பு மற்றும் அரசியலாக இருப்பது தவிற்க இயலாது. அந்த கடை உரிமையாளர் பலர் வந்து ஒயாமல் பேசிக் கொண்டிருக்கும் ஒரு கருத்தால் மின்னூட்டம் போல ஒன்றை அடைகிறார். தொடர்ந்து பேசப்படுவது கருத்தியலைப் போல ஒன்று உருவாகிவிடுகிறது . அதில் சொந்தக் கணக்கு ஏதாவது இருந்தால் அது இன்னும் உயரழுத்தம் கொண்டாதாகிறது. அன்னைத்தும் ஒரு பகடிபோல முன்வைக்கப்பட்டு செறிவாகி விவாதத்தை நோக்கி நகர்கிறது. எதை சொன்னாலும் அதற்கு எதிர்மறை வைக்கும் போக்கு எங்கும் உள்ளது போன்றே இங்கும் அவர்கள் அங்கு பேசப்படுவதை வேறு உயரத்திற்கு கொண்டு செல்கிறார்கள். கடை உரிமையாளர் எல்லா சமயங்களில் நடுவராக இருப்பார் . அல்லது வேறு வேலையற்ற ஒருவர் அந்த இடத்தில் அமர்ந்து கொள்வார் .


பல சமயம் ஒரு கருத்து உறுதியாவதற்கு அவர் சொல்லும் சில சொற்களே போதுமானவை. எவருடனும் அவர் விவாதிக்க வேண்டியதில்லை, அது அவரது வியாபார லாபத்திற்கு எதிராக சென்றுவிடக் கூடும் என்பதால் அதை  செய்வதில்லை . அது தன்னை எதிர்மறையாக கொண்டு நிறுத்தும் என தெரியும் . இருபக்கமும் நிகரெடை கொண்டு நிற்கும் போது கூரிய ஒரு சொல் போதும் அதன் நிகர்நிலையை குலைக்க . பின் அந்த கருத்தியல் நிலைகொண்டுவிடும். அவரின் மனச்சாய்வை பற்றி அறிந்தவர்கள் கூட ஒரு புள்ளியில் அவருடன் இணைந்து கொள்கிறார்கள். இந்த சிறு தொழில் செய்பவர்கள் வெளிப்படையான கட்சி சார்புடையாவராக சில மேலிடத் தொடர்புகளை கொண்டவராக இருந்துவிட்டால் அவரை நோக்கி சிறு குழு வந்து இணைந்து கொண்டேயிருக்கும். ஒரு முக்கிய கேந்திரம் போல உருவாகிவிடுகிறது . நகரின் மையத்தில் ஒரு சிறிய முடித்திருத்தம் செய்யும் கடையில் நாள் முழுவதும் அமர்ந்திருந்து, அங்கேயே அமர்ந்து சிலநாட்கள் உணவருந்துவதை வழக்கமாக கொண்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை பார்த்திருக்கிறேன். அவரின் அந்த சகிப்புத் தன்மை அந்த முடித்திருத்துபவர் அளவிற்கானதல்ல.புறநகர் பகுதிகளிலும் சில சமயங்களில் நகர் பகுதிகளிலும் கூட அப்படிப்பட்ட இடங்களே அனைத்திற்கும் குவிமையம். அங்குசட்டாம்பியாகஅமர்ந்திருப்பவர் பல சமயங்களில் அதை இயக்கும் விசை கொண்டவர்களாக இருக்கின்றார் . தங்களுக்கு எதிரானவர்களை அங்கு அமர்ந்து கொண்டு தொடர்ந்து அவருக்கு எதிரான போர் ஒன்றை நிகழ்த்துவது போல அவர் முற்றும் மதிப்பிழக்கும் வரை அவரை பற்றி பேசுவதை அவர் ஒழிவதில்லை. அவர்களின் வாய்க்குள் சிக்கியவர் பின் ஒருபோதும் அதிலிருந்து மீண்டதில்லை


தொகுதியை கையகப்படுத்த மாரிமுத்து செய்தது இதை போல குவி மையங்களுடன் தன்னை தொடர்பு படுத்திக் கொண்டது . உள்நுழைய மிக எளிதான வழி அது . அப்படி ஊருக்குள் இருந்த சிலரை நெருக்கமாக வைத்திருந்தது அவர் தேர்தலில் வெற்றி பெற உதவியது. அவரை அறிமுகம் செய்து வைத்தது அந்த குழிவின் உறுப்பினர் ஒருவராக இருக்க வேண்டும். எதிர்பார்ப்பும் நிறைவேற்றுதலும் ஒன்றுடன் ஒன்று எப்போதும் இணைந்திருக்க முடியாத எல்லை என ஒன்று எல்லையுண்டு.

அங்கு அவர்கள் தன்நிலை அறியாதவர்களாக மிக கற்பனையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்களாக அவர்களின் ஒருவருக்கு கூட அதிகாரத்தில இருப்பவர்கள் அவர்கள் விழைதை வாழ்நாளெல்லாம் அவர்களுக்கு செய்து கொடுத்தாலும் நிறையாதவர்கள். பற்றி எரியும் நெருப்பை போல உண்ணுவதன் வழியாக மேலும் பெருகிக் கொண்டே இருப்பார்கள் . வென்றவர் தன்னையே தங்களுக்கு முன் வைக்கக வேண்டும் என நினைப்பவர்கள். அவர்கள் முன்னே பதவியில் உள்ளவர்கள் சிறுத்து நிற்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள் , நிற்க வைப்பார்கள் . சமூகத்தின் ஆணவத்திற்கு முன் நிற்கக் கூடியவர் எவருமில்லை. அதன் ஆழமனம் எதிலும் நிறைவடைவதில்லை


கடந்தகால ஆட்சியில் பொறுப்பில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்கம் அளித்ததிருந்த கார் இது போன்ற ஒருவரின் கிராமத்து வீட்டின் முன் எப்போதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .அதில் கட்டிவைத்திருந்த அவரின் வீட்டு மாடு ஒரு குறியீடு போல அங்கு நின்று கொண்டிருந்தது . அவர்களே கூரிய அரசியலாளர்கள். வாக்காளர்களில் திரண்ட பகுதி . எளிய மனிதர்கள் மீது தங்களின் அரசியலை ஏற்றி வைக்கிறார்கள். அதன் வழியாக முடிவெடுக்க தூண்டுகிறார்கள்


வெள்ளி, 22 ஏப்ரல், 2022

அடையாளமாதல் * இணையாத உடைவு *

 



ஶ்ரீ:



பதிவு : 617  / 807 / தேதி 22 ஏப்ரல்  2022



* இணையாத உடைவு * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 15.





ஏதோ ஒரு வகையில் எனக்கு ஊசுடு மிக அணுக்கமாக இருந்தது . அது மீள மீள எனக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது . அதன் வழியாக நான் என்னை கட்டமைத்துக் கொண்டே இருக்கிறேன். முதல் முறை விளையாட்டாக அரசியலில் நுழைந்து அதன் சிக்கலான பக்கங்களால் அலைகழிக்கப்பட்டு என்னை முழுவதுமாக தொகுத்தும் எனக்கான இலக்கையும் உருவாக்கிக் கொண்டேன் . துத்திப்பட்டு இளைஞர் காங்கிரஸ் நண்பர்கள் தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் என சொல்லி கொண்டு குடியிருப்பு பகுதியில் நுழைந்து நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் செய்தவர்களை காரணமின்றி அங்கே நிறுத்தி வைக்கப்பட்டனர். இரவு நேர சாகசம் போல அவர்களை மீட்டு வந்த பிறகு, இது இரண்டாவது . இந்த முறை அது என்னை வேறொரு தளத்தில் கொண்டு வைத்தது. சண்முகத்துடன் வந்து இணைந்த போது அரசியலில் இன்னமொரு முன்னிலை பெறும் வாய்ப்பு உண்டு என நான் நம்பவில்லை . ஆனால் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை மீண்டும் உருவாக்க முடியும் என நம்பிக்கை அளித்த ஊர் ஊசுடு. சண்முகத்தையும் பிற கட்சி மூத்தவர்களையும் எனக்கொரு வாய்பை உருவாக்கிக் கொடுத்து என்னை கவனிக்கச் செய்தது அங்கு நடந்த இரண்டு நிகழ்வுகள். இரண்டும் ஒருவகையில் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டது. இரண்டிலும் நான் எதிர்பாராமல் கலந்து கொள்ள நேர்ந்தது . ஒன்று தொகுதி முழுவதும் நடந்த கொடியேற்று விழா. இரண்டு பங்கூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லும் நிகழ்வு . கலவரத்திற்கு காரணம் முன்னர் நிகழ்ந்த கொடியேற்று விழாவாக இருக்கலாம் என்பது ஊகம் . கொடியேற்ற விழா முழுவதுமாக முன்னெடுத்தது ஊசுடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து. தேர்தல் தோல்வியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அந்த நிகழ்வை பயன்படுத்திக் கொள்ள நினைத்திருக்கலாம். அல்லது தன்மீது ஆழ்மனவருத்தத்தில் இருக்கும் சண்முகத்துடன் ஒரு மன்றாட்டு போல அதை செய்ய நினைத்திருக்கலாம். 1991 தேர்தலில் ஊசுடு தொகுதியில் வென்ற பிறகு சண்முகம் சொன்னதை மீறி  கண்ணனை ஆதரித்தது அவரின் கோபத்திற்கு ஆளானார் . இந்த கொடியேற்ற விழா ஒருவகையில் அவரை சமாதனப்படுத்தும் முயற்சியும் கூட. 1996 தேர்தலில் அவர் வெற்றிபெரும் வாய்ப்பில்லை என அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் வைத்திலிங்கத்தின் ஆதரவால் 1996 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றார் . மாரிமுத்துவின் எளிய தோற்றமும் அனுகுமுறையும் அவரை பலர் பயன்படுத்திக் கொள்ள வைத்தது.இன்றுவரை அவரை புரிந்து கொள்ள முயல்கிறேன். அவரை வில்லனைப் போல ஊசுடு நண்பர்கள் சொன்னவை உண்மைதானா என அவரை பார்க்கும் போதெல்லாம் தோன்றுவதுண்டு . எனக்கு ஊசுடு 1992ல் துத்திப்பட்டு தொழிற்சாலை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவப் போனபோது சிலர் நண்பர்கள் பழக்கமாகி இருந்தனர் . அன்று நாங்கள் எதிர்த்து நின்றது ஒருவகையில் இந்த மாரிமுத்துவின் அணுக்கனைத்தான் . அதன் பிறகு இப்போது சண்முகத்தின் தரப்பாக வந்திருக்கிறேன் இன்று உடன் மாரிமுத்து இருக்கிறார் நான் சொல்லுவதையெல்லாம் கேட்கும் இடத்தில் . காலம் மிக விசி்திரமானது. நாம் நினைக்கும் எல்லைகளை அது எப்போதும் அழித்தே ஆடுகிறது . நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஊசுடு செல்கிறேன் இப்போது அங்கு எனக்கு மிக குறைந்த நண்பர்களே அறிமுகமாகி இருந்தார்கள்


சேதராப்பட்டுகரசூர்,துத்திப்பட்டு,ராமநாதபுரம்,பிள்ளயார்குப்பம்,கூடப்பாக்கம், அகரம், உலவாய்க்கால்,கோனேரிக்குப்பம், பொறையூர், அனந்தபுரம் அரியூர், பங்கூர் என ஒவ்வொரு பகுதியிலும் அதை இணைக்கும் பேட் என்கிற காலனிகளும் அதற்கேயான உள்பூசலால் நிகழ்ந்த ஒருங்கிணைப்பு குளறுபடிகள் நேர விரையத்தையும் பதட்டத்தையும் உண்டாக்கியிருந்தது . சேதராப்பட்டில் துவங்கிய கொடியேற்ற நிகழ்வு ஊர்வலம் அதன் அடுத்த ஊரான கரசூரை கடந்து துத்திப்பட்டை அடைந்த போது அங்கு எதுவும் தயாராகியிருக்கவில்லை . கொடியேற்றம் பற்றி வாய்வார்தையாக இரண்டு நாட்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து அங்கு வந்து தனது அணுக்கனிடம் சொல்லிவிட்டு சென்றிருந்தார் . அவருக்கு தனது அணுக்கன் கட்டுப்பாட்டில் துத்திப்பட்டு இன்றும் இருப்பதாக நினைத்திருந்தால் அது  பிழை கணக்கு. தொகுதியில் அவர் உருவாக்கி வைத்தவர்களின் செயல்பாடுகளே அவர் தோல்வியடைந்ததற்கு அடிப்படைக் காரணம்


துத்திப்பட்டு மற்றும் சேதராப்பட்டு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள். அவை ஊர்கள் மற்றும் காலனிகள்  நிறைந்த பகுதிகளுக்கு மத்தியில் இருந்தது . ஒதுக்குபுறமானது என்பதால் அரசங்க விதிமுறைகளை பற்றி அவை கவலைப்படுவதில்லை . தனது முறைகேடுகளால் அங்குள்ள மக்களுடன் எப்போதும் மோதிக் கொண்டிருந்தது. சிக்கலை எதிர்கொள்ள சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் . மாரிமுத்துவை சார்ந்திருந்த அவரது அணுக்கர்கள் தொழ்சாலைகளால் லாபமடைய அவரது அணி இரண்டாக பிளந்து நின்று ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தது . மாரிமுத்து தவறுதலாக வழிநடத்தப்பட்டு, ஒவ்வொரு சிக்கலிலும் ஒவ்வொரு அணியை ஆதரிக்க வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்ததால் ஒருகட்டத்தில் ஒட்டு மொத்த அமைப்பிற்கும் எதிரானார் . ஊசுடு பலவகையில் மிக சிக்கலான திருகு முணைகளைக் கொண்டது . துத்திப்பட்டில் கொடியேற்ற நிகழ்விற்கு ஒரு சாரார் தங்களுக்கு தனிப்பட்ட அழைப்பில்லை என சொல்லி ஒதுங்கிக் கொள்ள நிகழ்வு ஏறக்குறைய நின்று போனது . தலைவர்கள் வந்து சேர்ந்த பிறகு அவர் முன் மாரிமுத்திற்கு எதிரான பஞ்சாயத்து போல் ஒன்று நிகழ்ந்து சண்முகம் முகம் சிறுத்தார். மாரிமுத்து தன் தரப்பை எடுக்க முடியாமல் திகைத்து நின்றுவிட்டார் . சிலமணி நேர சமாதானத்திற்கு பிறகு மிக மெல்ல அந்த நிகழ்வு நடத்தேரியது . துத்திப்பட்டு பெருமாள் ஊர். அங்கு அவனுக்கு நெருக்கமான சிலரை எனக்குத் தெரியும். அவர்களை அழைத்துக் கொண்டு நானாக அறுந்து கிடந்த ஒருங்கிணைப்பை உருவாக்கத் துவங்கினேன்


துத்திப்பட்டு சிக்கல் துவங்கிய சில நிமிடங்களில் மற்ற பகுதிகளில் என்ன நிகழும் என எனக்குத்தெரியும். துத்திப்பட்டில் இருந்து அதன் அடுத்த பகுதியான தொண்டமானத்தம் சென்றேன். அங்கும் இதே சிக்கல் ஆனால் தலைவர் வருகிறார் என்கிற சொல் அவர்களை ஒருங்கிணைத்தது. அழைத்து வந்திருந்தவர்களைக் கொண்டு கொடிக்கம்பம் நட்டு அதில் கொடியை கட்டும்  வேலையை துவங்கச் சொல்லிவிட்டு உடன் இருந்தவர்களை மூன்று பிரிவுகளாக பிறித்து ஒரு குழு ஊர் பெரியவர்களை அழைத்துக் கொண்டு ஊர் எல்லைக்கு செல்லச்சொல்லி இன்னொரு குழுவை துத்திப்பட்டிற்கு அனுப்பி இங்கிருந்து தகவல் வருமவரை எதையாவது செய்து நேரத்தை இழுத்தடிகச் சொன்னேன் . அங்கு இரண்டு மூன்று இடத்தில் கொடியேற்ற ஏற்பாடாகியிருந்தது. ஒரு இடத்தில் அரைமணி நேரம் காலம் தாழ்த்தினால் ஊசுடுவின் பெரிய ஊரான கூடப்பாக்கம் சென்று தேர மதியம் 2:00 மணியைக் கடந்துவிடும் . அங்கு அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடாகியிருந்தது. சிறிது நேர ஓய்வு எல்லாம் அற்றிற்கு அடுத்த கரையில் உள்ள அனைத்து ஊர்களிலும் சிறப்பாக எதையாவது செய்ய இயலும் எனக்கணித்திருந்தேன்.


வெள்ளி, 15 ஏப்ரல், 2022

அடையாளமாதல் * நிறுவிக்கொள்ளுதல் *

 




ஶ்ரீ:



பதிவு : 616  / 806 / தேதி 15 ஏப்ரல  2022



* நிறுவிக்கொள்ளுதல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 14.






BSNL தாயகராஜன் தனது மார்க்கிய தொடர்புகளில் இருந்து வெளியேறியிருந்தாலும் அவரின் லட்சியவாத பார்வை விலகவில்லை காங்கிரஸிற்கு வந்த பிறகும் இங்கு அதை ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார் . மார்ஸிய மனச் சாய்வு கொண்டவர்களுக்கு காங்கிரஸ் பெரும் துயரம் அளிக்கும் அமைப்பு . இங்கு காணப்படும் இடைவெளி அவர்களின் சிந்தனையில் மார்ஸியத்தை இங்கு செயல்படுத்த வேண்டும் என்பது ஒருவித மன்றாட்டு மனநிலையில் அதை சுற்றியே உரையாடல்கள் செல்வது அவரால் தவிற்க இயலாததாக இருக்க வேண்டும். ஆனால் அவற்றில் எதை எங்கிருந்து எப்படி இதில் கொண்டு வைக்க முடியும்? என கேட்டால் அவரிடம் பதில்லாமல் போகலாம் . தாயகராஜன் பாபுலாலுக்கு அவனது வியாபாரம் வழியாக அறிமுகமாகியிருக்க வேண்டும் . பாபுலால் சின்னகடை முனிசிபல் கட்டிடத்தில் கறிக்கடை வைத்திருக்கிறான் . அரசியல் குறித்த ஆழமான விமர்சனங்களையும் கேள்விகளையும் அவன் தாயாகராஜனிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். தாயகராஜன் முன்வைப்பவை இங்கு யாருக்கும் என்னவென்று புரிவதில்லை. அதை மேடைதோரும் முழுங்கும் கம்யூனிஸ்டுகள் கூட இன்று அவற்றை பற்றிய நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை . இன்று அதை மேடையில் பேசுகிறவர்களுக்கு அது ஒரு அலங்காரம் போல அடையாளம் போல பேச்சில் வெளிப்படுகிறது . காங்கிரஸில் உள்ளவர்களுக்கு அவை முற்றிலும் புரியாத வேறொரு உலகம். அதன் சிறு பகுதியை புரிந்து கொண்டவர்கள் கூட ஒரு ஏளனப் பார்வையுடன் சிரித்தபடி கடந்து சென்றுவிடுவார்கள்


தாயகராஜன் கடந்த காலத்தில் உறைந்திருந்தார். அவர் பேசுவதெல்லாம் ஒருகாலத்தில் கம்யூன்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு சுற்றி இருப்பவரை பற்றிக்கொண்டு எரிந்தது. உள்ளுக்குள்ளே கூட ஒத்த கருத்துள்ளவர்களை பார்க்க முடியாது . ஒருவர் சொன்னதை பிறிதொருவர் மறுத்து பேசியேயாக வேண்டும் என்பது ஒரு சட்டம் போல. கலைந்து சென்ற பிறகும் பேசப்பட்ட கருத்துக்கள் எடுத்துச் செல்லப்படாமால் பருப் பொருள் போல அங்கேயே இருந்தது . கேட்டவர்கள் காதிலெல்லாம் ஒரு மயக்கு அவர்களுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கலாம் . இன்று அவர்களிடையே கூட புதிய தலைமுறைகள் ஒன்று உருவாகிவந்துவிட்டது. அவர்கள் மத்தியில் இவை மீண்டும் அதே உக்கிரத்துடன் மீளவும் விவாதிக்கப்படுகிறதா என தெரியவில்லை. என்னுடன் அரசியலில் இணைந்து பணியாற்றிய பல கம்யூனிஸ நண்பர்களை நான்பின் தொடரும் நிழல்குறித்த கேள்விகளை ஒரு சீண்டலுக்காக கேட்பதுண்டு . அவர்கள் அதை பதட்டமில்லாமல் கடந்து செல்வது ஆரம்பத்தில் எனக்கு திகைப்பை கொடுத்ததுண்டு . பின்னர் அதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிந்தது. எங்கும் உள்ள இளைஞர்களைப் போல இங்கு அரசியலின் பதவி மற்றும் அதிகாரத்திற்கு  கொள்கைகள் அவர்களை தங்களின் அரசியலின் நிறம் பிறித்தலுக்கு பயன்படுபவை. அது புறவயமாக அவற்றை தொகுத்துக் கொள்ளும் அதே சமயம் அகவயமாக அதை நெருங்க தயங்குபவர்களாக அல்லது அஞ்சுபவர்களாக அவர்களை பார்த்திருக்கிறேன். மார்க்சியம் ஒரு தரிசனம் அதை ஒட்டு மொத்த உலகியலுக்குள் கொண்டு வைக்க இயலும் என ஜெயமோகன் சொல்வதுண்டு . அப்படியானால் அது எக்காலத்திற்கும் உரிய பொதுத்தன்மை கொண்டிருக்க வேண்டும். அதை காலத்திற்கு எற்று அல்லது ஏற்ப பொருள் சொல்லபவர்கள் இல்லை என்பதால் அது நிறுவனமாக மாறிப் போனதற்கு காரணமாக இருக்கலாம்.


நான் நினைக்கும் அமைப்பும் ஒருவகையில் நிறுவனப்படுத்துலா அதனால் நிகழும் முரண்பாடுகள் நான் தெளிவாக வரையறை செய்து கொள்ள எப்போதும் முயன்றிருக்கிறேன். கட்சியும் கொள்கைகளும் நிரந்தரமாக பிரிந்துபோன ஒரு காலகட்டத்தில் அந்த விவாதங்களுக்கு என்ன அர்த்தம் என்பது  திகைப்பை கொடுத்தது . நானும் ஒரு வகையில் இவர்களை போல கட்சிக்கும் காலத்திற்கும் பொருந்தாத ஒன்றை முயற்சிக்கிறேனா என கேட்டுக் கொண்டு அவர்களது உரையாடல்களை சந்திக்கிறேன். உறுதியாக அப்படி இல்லை. என் செயல்பாடுகள் வழியாக நான் முயற்சித்துக் கொண்டிருப்பது அரசியலை அல்ல நான் ஆராய்ந்து கொண்டிருப்பது என் சிந்தனையை . நினைக்கும் அமைப்பை உருவாக்குவதை பற்றிய எனது முன்னோடி கண்ணன் மற்றும் உருவான இயக்கத்தை கையாண்ட சண்முகம் மற்றும் பாலன் போன்றவர்களிடமிருந்து எனக்கானதை புரிந்து கொண்டிருக்கிறேன். கட்சி அமைப்பில் இருப்பவர்களின் உளம் செல்லும் திசையை மிக அணுக்கமாக பார்த்திருக்கிறேன் அதில் அந்த நொடிப் புரிதல் சொந்த லாபத்தை தாண்டி அவர்கள் செல்வதில்லை. அதைத்தாண்டி தன் பங்காக சிறிது கிள்ளி எடுத்துவைத்தவர்கள் கூட நினைவுகொள்ளப்பட்டதில்லை. அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்கள் தங்களுக்கு தலைமை தாங்கியவர்களை கைவிட்டிருக்கிறார்கள் அல்லது சூழல்நிலை காரணமாக நிராகரித்திருக்கிறார்கள். இதுவே அரசியலில் நிரந்தரமானது. மாற்ற முடியாத விதி. பின் அவற்றை எதன் பொருட்டு முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்பவர்கள் அரசியலுக்குள் பொருந்தியிருக்க முடியாதவர்கள்.


அரசியல் உலகில் அத்தனையும் சாத்தியமா? என்றால் ஆம்! என்பதே அதன் பதிலாக இருக்க முடியும் . இல்லை என்பது பிறதொரு சாத்தியகூறு மட்டுமே . என்னென்ன சாத்தியங்களினால் அவை இல்லை என்றாகிறது காரணங்களை கண்டடைகிறது , எந்தெந்த வாய்ப்புகளில் பாய்ந்தோடி இணைந்து கொள்கிறது எப்படியெப்படித் தன்னை உருமாற்றி அமைத்துக் கொள்கிறது, எப்படி தன்னைத்தானே கண்டடைகிறது. அதில் இருந்து என் இடத்தில் இருந்து இதுவரை , இனிமேல் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை . அதுதான் எனக்கு முக்கியம். இது எனக்கு மட்டும் திறந்து காட்டும் வழி அதை நானே கண்டடையும் பரவசத்துக்காகவே நான் அரசியலில் தொடர்ந்து முயற்சி செய்கிறேன். வெல்கிறேன் , தோற்கிறேன் அதன் முடிவுகள் எனக்கு பொருட்டள்ளானால் அதிலிருந்த கற்றுக் கொள்கிறேன் .


நிலைத்து நிற்கவே இயலாத ஒரு அமைப்பை கொண்டு அதிலிருந்து அடைய ஒன்றுமில்லாத போது அதை ஒரு உருவாக்குவதில் என்ன லாபம்? இது இன்னொரு நம்பிக்கையிழப்பு கைவிடப்படல் . அப்படி எத்தனை நூறு முயற்சிகள் அவை ஒவ்வொரு இயற்கையின் சக்திகளை வாய்ப்புகளை நான் அறிந்து கொள்வதில் ஒரு புதிய திறப்பு. இயற்கையை அரசியலை நான் கையாள்வதில் ஒரு புதிய சாத்தியம் அதிலிருந்து வெற்றி அல்லது இல்லை என்கிற இரட்டைக்குள் வைத்து பார்க்காத போது அது தரும் இடம் மகத்தானது . ஒவ்வொரு முயற்சியும் இயற்கையில் இருந்து எனக்கு கிடைக்கும் ஒரு நிகழ்வு ஒரு அனுபவம் ஒரு சாத்தியம் ஒரு சொல் ஒரு புரிதல் ஒரு குறியீடு இப்படி சொல்லிக் கொண்டே செல்லாலாம் . ஆனால் எல்லா நிகழ்வுகளும் குறியீடுகள்தான். இயற்கையாக அது  சூழ்ந்திருக்கிறது. இந்தவானம், இந்தமழை, இந்த மலைகள், இந்த நகரம் இந்தக்காடு அவற்றின் மொழி வானமெங்கும் நிறைந்திருக்கிறது. அந்த மொழி கடல் என்றால் மானுடர் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் சிந்தனை ஒரு  மொழி என்பது அதில் ஒரு துளி. இயற்கையின் பெருமொழிமேல் மானுட மொழியைக் கொண்டு முட்டிக் கொண்டே இருப்பது போல செயல்பாடுகளை கொண்டு அதை செய்கிறேன் . அடிபெருத்த மரத்தை அறைந்து உலுக்குவதுபோல. அவ்வப்போது ஒரு சொல் உதிர்கிறதுவானிலிருந்து நேராக சிந்தனையில் நாவில் சொல்லில் தோன்றியது இடியாக. செயல்களில் இருந்து உருவான இடம் என்னை நான் கட்டமைத்துக்கொள்ள உதவின.


புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...