https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 31 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 480 * குழந்தையைப் பேணுதல் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 480

பதிவு : 480 / 666 / தேதி 31 அக்டோபர் 2019

* குழந்தையைப் பேணுதல்  * 


ஆழுள்ளம் ” - 02
தத்துவ தரிசனம் - 01 






ஜெயமோகனின் கீதை உரையை கேட்க்க கோயம்புத்தூர் செல்வது என தீர்மானித்த பிறகு , இடைப்பட்ட நாட்களுக்குள் அவரின் பிற ஆக்கங்கள் அனைத்திலிருந்து ஒரு விள்ளண்ணம் போல எடுத்துக் கொள்ள முயன்றேன் .அது செல் , செல்லாதே என்கிற இரண்டு எல்லைகளை ஒரே நேரத்தில் தொட்டது . ஒருநாள் முழுவதும் எனக்குள் என்ன ஓடுகிறது என அவதானிக்க முயன்றபடி இருந்தேன் . மனம் பலவாறு பிரிந்து கிடந்தது . அதை ஒற்றைப் புள்ளியில் தொகுத்துக் கொள்ளும்போது, எதை , யாரை , எதற்கு அஞ்சுகிறேன் என பிரித்துக் கொள்ள வேண்டி இருந்தது . அது அசையக்கூடியது , அசையாதது என இரண்டாக பிரிந்து நின்றது . எனது தேடல் எந்தப் பகுதிக்கானது என புரிந்து கொள்ள முடிந்தது

அசையாதது . அது அடிப்படை மரபின் மீதான நம்பிக்கை . அதை ஒட்டிய நான் எனக்கென செய்து செய்து உருவாக்கிக் கொண்ட என் பூஜா விதானங்கள் . ஒவ்வொரு நாளும் அதன் இறுதியில் கிடைக்கும் ஆழ்நிலை தியானத்திற்கு இணையான மன அமைதி , விளக்கவியலாத வாழ்வியல் புரிதல் . அது என்னை வாழ்கையின் பெரும் சிக்கல்களில் அலைக்கழியாமல் கரை சேர உதவியது . நாளை என்ன நிகழும் என கணிக்க முடியாத தருணங்களில் . வாழ்கை இன்றோடு முடிந்து விட்டது என் திகைப்புற்ற சில கணத்தில் . அது என்னை மிக அமைதியாக இருக்க வைத்ததுஇரவுகளில் படுக்கையில் புரளாத ஆழ் தூக்கத்தை கொடுத்தது .

எந்த வேண்டுதலுக்கும் , மன்றாடலுக்கும் இடமில்லாதது  என் பூஜை வழமை . ஒருவித கைவிடப்படலின் இறுதியில் நேரும் முற்றாக ஒப்புக்கொடுக்கப்பட்ட மனநிலையில், வருவதை எதிர் கொள்ளும், இழப்பதற்கு ஒன்றில்லை என நினைவுகளால் எழும் விட்டேற்றியும் , பதட்டமின்மையும் என் அடையாளமாக இருந்தது . எனது பூஜா விதானத்தில் என் பூஜைகளை பெற்றுக்கொள்ளும்  ஆராதன மூர்தத்தின் எதிரில் நான் கொள்ளும்ஆணவம்அது . அதனிடமிருந்து கோர ஒன்றில்லை என்கிற தன்னிறைவுணர்வு . தேவையை முன்வைக்காத பூஜையில் உருவாகும் ஒருவிததிமிர்”. அது தன்னம்பிக்கையின் ஆழ்வெளிப்பாடு . அது வார்த்தைகளில் எடுக்க முடியாத அனுபவம்

இங்கிருந்து தொடங்குகையில் , வேண்டுதல் என்பதே ஒருவித முறைமை மீறல் என உணர்ந்திருக்கிறேன்  . காலத்தை நடத்திச் செல்லும் பெரும் தெய்வத்திற்கு யாருக்கும்  செவிசாய்க்க வேண்டிய அவசியமில்லை. கருணையும் அளியும் கொண்டதானஅதுதன் பெரும் ஆடலில் பிண்ணப்பட்ட வலையில் நன்றென்றும் அல்லவென்றும் ஒன்றறில்லை . நல்லவையாக தோன்றுபவை உடனடி மகிழ்வளிப்பவை . அல்லாதவை என தோன்றுபவை எதிர்திசையில் நன்மை கொடுக்ககூடியவை . அது காலத்தால் விளங்குவது .

பூஜையின் கணம் பிழை பொறுத்தல் குறித்த மன்றாடுதல் அல்ல எனது முறைமை . அது ஒரு கடமை அதை செய்து முடிக்கையில் கிடைக்கும் ஆழ்ந்த அமைதியே அதன் பலன் . என் பொறுத்தவரை பூஜை என்பது நிகழ்ந்து முடிந்த அனைத்திற்குமான நன்றி . உழவன் வயலை வணங்குவது போல .........பிறிதொன்றில்லை .

அசையக்கூடியது மனம் . அது கணத்திற்கொரு முடிவை எடுக்கும் அல்லது தவிற்கும் . அது நம்மை குற்றம் சொல்வதற்கென்றே உருவானது . அங்கிருந்து கொண்டு அது ஒவ்வொருவரையும் வதைக்கிறது . வீழ்ச்சியின் விளிம்பில் கொண்டு இருத்துகிறது .அந்த மாய வலையில் நான் இருப்பதை தவிற்க விழைகிறேன் . ஆச்சாரம் என்பது கூட ஒரு வித அஞ்சுதலில் இருந்து தொடங்குவதே . என் வழிபாடு குழந்தையைப் பேணுதல் . அது எனக்களிக்க ஒன்றில்லை . ஆனால் நான்தான் அதை சர்வ ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் .

மரபு , ஆழ்மனதின் படிமத்தின் வெளிப்பாடுகளை வெளிகொனருதல் , அன்றாடமோ நிமிடத்திற்கொருமுறை  அலைபாயுதலை படிமங்களாக மாற்றி ஆழ்மனதிற்குள் செலுத்த முயற்சிப்பது . என்ன ஒரு பைத்தியக்காரத்தனம் . அன்றாடம் உலகியல் மாற்றத்தில் பிணைப்பு கொண்டது . நான் இரண்டையும் தனித்தனியே பாதுகாக்க நினைக்கிறேன்.
நான் மரபை கொண்டு அதை நிறைக்க விரும்பவில்லை . எனது தேடல் மரபிற்கு நவீனத்தில் என்ன இடம் என்பது . மரபை மட்டும் சார்ந்து வாழ முடிந்தவர்கள் அதை வாழ்கை முழுக்க நிரப்பிக்கொள்ளலாம் . என்னால் அந்த இடத்திற்கு வர இயலவில்லை .காரணம் அவற்றில் உள்ளகாலப் பொருந்தாமைமற்றும் என்னிடமுள்ளபோதாமை” . 

பல்வேறு காரணங்களினால் அருகிக் கொண்டிருக்கும் அமைப்பாக தங்களின் மிகை அனுஷ்டானங்களால் அதை அனுஷ்டிப்பதாக நினைப்பவர்கள் , தங்களை தன்னிருள் நோக்கி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் . எல்லாவற்றிலிருந்தும் ஒருநாள் அது மீண்டெழலாம். அதில் இன்று நிகழ்ந்து கொண்டிருப்பது வளர்சிதை மாற்றம். பிறிதொன்று அதில் சொல்லப்பட்ட ஆச்சார விஷயங்களில் எனது போதாமையை கருத்தில் எடுக்கிறேன்.

நான் எனது நவீன மனம் அழகியலில் லயிப்பும், வாழ்கை வண்ணங்களால் நிறைந்ததுமாக நினைக்கிறேன்மரபை ஒட்டி சொல்லப்பட்ட வழமைகள் என்கிற புரிதல் ஒருவருக்கொருவர் கைமாற்றி அளிப்பது . அது தன்னியல்பை ஒட்டி உருவாகி வருவது . அதில் அனைவருக்கும் பொதுமை என ஒன்றில்லை என நினைக்கிறேன். அது ஒருவர் வாழ்ந்து நிறைத்து அறிந்து கொள்வது . பிறர் முடிவினால் மரபென ஒன்றை ஏற்க இயலாமை . என்னால் ஏற்கவியாத ஒன்றை எனக்குள் திணித்துக் கொள்ள இயலாது . அது என்னை ஏதாவதொரு புள்ளியில் இம்சிக்கலாம்

செவ்வாய், 29 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 479 * இரு முணை *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 479

பதிவு : 479 / 665 / தேதி 29 அக்டோபர் 2019

* இரு முணை


ஆழுள்ளம் ” -01
படிமத்தின் அலகு-12





எனக்கான மெய்மை தேடிய பயணத்தில், ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் பொது செயளாலர் பதவி , முதற்கல்லை இட்டது . அதன் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்ச்சியில் பெரும் வெற்றி அடைந்திருந்தாலும். “திறந்த அரங்கம்என்கிற கனவு திட்டம் பெரும் அலைக்கழிப்பையே தந்தது . “சனாதன தர்மத்தின்அத்தனை தத்துவ கோட்பாடுகளுக்கு ஒரு நல்ல துவக்கமிருக்க வேண்டும் என்கிற சிந்தனை என்னை எல்லா வழிகளிலும் கொண்டு சென்றுஇந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்வாசித்து முடித்த போது அக்கனவின் இறுதி எல்லைக்கு வந்து விட்ட உணர்வை அடைந்தேன் . அதன் விரிவாக்கத்தை வெண்முரசு வழியாக புரிந்து கொண்டேன்

முதல் வாசிப்பின் போதுஇந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்ஆக்கம் எனக்குள் சொடுக்கிய மின்னலை இப்போது ஆழ்ந்து அவதானிக்க தொடங்கி இருக்கிறேன். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் வாசிப்பு ஏற்ப்பட்ட கருத்தியல் தாக்கத்தின் பரவசத்திலிருந்து வெளி வந்திருக்கிறேன் . இது முன்பே திட்டமிட்டது தான்

தீவிர தாக்கத்தை கொடுக்க கூடிய கருத்தியல்கள் எனக்குள் எந்த விதமான பரிமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை சிறிது காலம் கடந்து மீள் அவதானிப்புக்கு வருவது என . நான்கு வருடம் கழித்து இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் ஆக்கத்தை இந்த பதிவுகளின் மத்தியில் மீண்டும் வாசிக்கத் துவங்கி இருக்கிறேன். இப்போது முன்பிருந்த பரவசம் இல்லாது போனாலும் . ஆழுளத்தில் சென்று அமர்ந்து அது உருவக்கிய தாக்கத்தை மெல்ல ஆராய்ந்து பார்க்க முயல்கிறேன் .

இதுவுமே இப்போது என கூட நான் திட்டமிடாததே . முதல் நிலையில் வெறுப்பவர்களுக்கும் வழிபடுகிறவர்களுக்கும் இடையே உள்ள வியக்கத்தக்க ஒற்றுமை என்னவெனில், இருதரப்புமே இந்து ஞான மரபு என்பது முற்றிலும் ஆன்மிக மரபுதான் என்றும், அது தவிர்க்க முடியாதபடி மதச்சடங்குகளுடனும் மத நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது என்றும் நம்புவதுதான். இந்து ஞான மரபினைப் பற்றிய மிகத் தவறான புரிதல் இதுஎன்கிறது ஒரு கருத்தியல் அவை அந்த இரண்டிற்குமான உறவை ரத்து செய்கிறது . இரண்டையும் வெவ்வேறு தளத்தில் நிறுத்துகிறது . அத்வைத கொள்கையை ஏற்காது இதனுள் நுழைய முடியாது என கருதுகிறேன்.

விசிஷ்டாத்வைத கொள்கை அத்வைதத்தின் வேறொரு பரிமாணம் , அது அத்வைதத்தை விசேஷித்து சொல்ல வந்தது. என்கிற என் ஆச்சாரியன் கூற்றை இங்கு நினைவில் கொள்கிறேன் . அவர் சொன்னதிலிருந்து வந்து சேர்ந்தால் அது  பெரும் தெய்வமாக கண்ணனை கொண்டிருக்கும் காலத்தில் நுழைந்து வெண்முரசென்னும் நவீன விரிவிற்குள் இறங்க முடிகிறது . அது எனது மிக நீண்ட பண்பாட்டின் மரபின் எல்லையின் விரிவை நோக்கி சிந்திக்க வைக்கிறது .

எனது பூஜா விதானம் பல்வேறு கேள்விகளுக்கும் , புரிதலுக்கும் உட்பட்டு இங்கு வந்து சேர்த்திருக்கிறேன் . ஒரு புள்ளியில் நம்பிக்கை தளர்ந்த போது , என்னை ஆற்றுப்படுத்திய விஷ்ணு சகஸ்ரநாம தியான ஸ்லோகம் . அப்போது அது தமிழில் வெளிவரத் துவங்கியிருந்த காலம் . சமஸ்கிரத உச்சரிப்பில் அனைத்தையும் கேட்டு பழகிய பின்  தமிழாக்கம் சிறு தயக்கத்தை கொடுத்தது . ஆனால் அதை கேடக்க முயற்சித்த போது அது வேறு தளத்திற்கு இட்டுச் சென்றன . நான் பீஷ்மரை எனது குருவாக அடைந்ததும் . அவருடைய தாய் எனக்கு குரு மாதாவாகியதும் , மஹாபாரதம் ஒரு அனுக்கமான வாழ்வியல் சாத்தியமாகிப் போனது .

வெண்முரசு அதனாலேயே விவாதித்து புரிதலை அடைய வேண்டிய ஒன்றகியது . பிற நாவல்களை விட இது எனக்கு அதிக நம்பகத்தன்மையை கொடுத்தது . அதிலிருக்கும் உளவியல் கருத்துக்களை வியாச பார்த்ததில் போட்டுப் பார்த்து அது அவற்றின் இடைவெளிகளை எப்படி நிரப்புவது , நிரவுகிறது என்பதில் தொடங்கி அன்றாடங்களில் மேல் கொண்டு வைத்த அவற்றை மதிப்பிட இன்னும் அனுகி பார்த்திட வைக்கிறதுஇவை அனைத்துமே ஜெயமோகனை  பற்றிய மிக தெளிவான ஒரு சித்திரத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது . அடுத்த எல்லையான திறந்த அரங்கம் குறித்த திட்டத்திற்கான முன்வரைவு உருவாக்க முடியும் என்கிற எண்ணம் மேலோங்கியதும் , நேரில் சந்தித்து அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்கிற விழைவு மிகுந்தது

அவரது கீதை உரை பற்றிய அறிவிப்பு வெளியான பிறகு ஒதுக்கி வைத்திருந்த விஷ்ணுபுரத்தை வாசித்து முடித்து , அவரின் பிற ஆக்கங்களை புரட்டத்துவங்கினேன். அது எனக்குள் செல் , செல்லாதே என்கிற இரண்டு எல்லைகளை ஒரே நேரத்தில் தொட்டுக் காட்டியது .