https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 31 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 480 * குழந்தையைப் பேணுதல் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 480

பதிவு : 480 / 666 / தேதி 31 அக்டோபர் 2019

* குழந்தையைப் பேணுதல்  * 


ஆழுள்ளம் ” - 02
தத்துவ தரிசனம் - 01 






ஜெயமோகனின் கீதை உரையை கேட்க்க கோயம்புத்தூர் செல்வது என தீர்மானித்த பிறகு , இடைப்பட்ட நாட்களுக்குள் அவரின் பிற ஆக்கங்கள் அனைத்திலிருந்து ஒரு விள்ளண்ணம் போல எடுத்துக் கொள்ள முயன்றேன் .அது செல் , செல்லாதே என்கிற இரண்டு எல்லைகளை ஒரே நேரத்தில் தொட்டது . ஒருநாள் முழுவதும் எனக்குள் என்ன ஓடுகிறது என அவதானிக்க முயன்றபடி இருந்தேன் . மனம் பலவாறு பிரிந்து கிடந்தது . அதை ஒற்றைப் புள்ளியில் தொகுத்துக் கொள்ளும்போது, எதை , யாரை , எதற்கு அஞ்சுகிறேன் என பிரித்துக் கொள்ள வேண்டி இருந்தது . அது அசையக்கூடியது , அசையாதது என இரண்டாக பிரிந்து நின்றது . எனது தேடல் எந்தப் பகுதிக்கானது என புரிந்து கொள்ள முடிந்தது

அசையாதது . அது அடிப்படை மரபின் மீதான நம்பிக்கை . அதை ஒட்டிய நான் எனக்கென செய்து செய்து உருவாக்கிக் கொண்ட என் பூஜா விதானங்கள் . ஒவ்வொரு நாளும் அதன் இறுதியில் கிடைக்கும் ஆழ்நிலை தியானத்திற்கு இணையான மன அமைதி , விளக்கவியலாத வாழ்வியல் புரிதல் . அது என்னை வாழ்கையின் பெரும் சிக்கல்களில் அலைக்கழியாமல் கரை சேர உதவியது . நாளை என்ன நிகழும் என கணிக்க முடியாத தருணங்களில் . வாழ்கை இன்றோடு முடிந்து விட்டது என் திகைப்புற்ற சில கணத்தில் . அது என்னை மிக அமைதியாக இருக்க வைத்ததுஇரவுகளில் படுக்கையில் புரளாத ஆழ் தூக்கத்தை கொடுத்தது .

எந்த வேண்டுதலுக்கும் , மன்றாடலுக்கும் இடமில்லாதது  என் பூஜை வழமை . ஒருவித கைவிடப்படலின் இறுதியில் நேரும் முற்றாக ஒப்புக்கொடுக்கப்பட்ட மனநிலையில், வருவதை எதிர் கொள்ளும், இழப்பதற்கு ஒன்றில்லை என நினைவுகளால் எழும் விட்டேற்றியும் , பதட்டமின்மையும் என் அடையாளமாக இருந்தது . எனது பூஜா விதானத்தில் என் பூஜைகளை பெற்றுக்கொள்ளும்  ஆராதன மூர்தத்தின் எதிரில் நான் கொள்ளும்ஆணவம்அது . அதனிடமிருந்து கோர ஒன்றில்லை என்கிற தன்னிறைவுணர்வு . தேவையை முன்வைக்காத பூஜையில் உருவாகும் ஒருவிததிமிர்”. அது தன்னம்பிக்கையின் ஆழ்வெளிப்பாடு . அது வார்த்தைகளில் எடுக்க முடியாத அனுபவம்

இங்கிருந்து தொடங்குகையில் , வேண்டுதல் என்பதே ஒருவித முறைமை மீறல் என உணர்ந்திருக்கிறேன்  . காலத்தை நடத்திச் செல்லும் பெரும் தெய்வத்திற்கு யாருக்கும்  செவிசாய்க்க வேண்டிய அவசியமில்லை. கருணையும் அளியும் கொண்டதானஅதுதன் பெரும் ஆடலில் பிண்ணப்பட்ட வலையில் நன்றென்றும் அல்லவென்றும் ஒன்றறில்லை . நல்லவையாக தோன்றுபவை உடனடி மகிழ்வளிப்பவை . அல்லாதவை என தோன்றுபவை எதிர்திசையில் நன்மை கொடுக்ககூடியவை . அது காலத்தால் விளங்குவது .

பூஜையின் கணம் பிழை பொறுத்தல் குறித்த மன்றாடுதல் அல்ல எனது முறைமை . அது ஒரு கடமை அதை செய்து முடிக்கையில் கிடைக்கும் ஆழ்ந்த அமைதியே அதன் பலன் . என் பொறுத்தவரை பூஜை என்பது நிகழ்ந்து முடிந்த அனைத்திற்குமான நன்றி . உழவன் வயலை வணங்குவது போல .........பிறிதொன்றில்லை .

அசையக்கூடியது மனம் . அது கணத்திற்கொரு முடிவை எடுக்கும் அல்லது தவிற்கும் . அது நம்மை குற்றம் சொல்வதற்கென்றே உருவானது . அங்கிருந்து கொண்டு அது ஒவ்வொருவரையும் வதைக்கிறது . வீழ்ச்சியின் விளிம்பில் கொண்டு இருத்துகிறது .அந்த மாய வலையில் நான் இருப்பதை தவிற்க விழைகிறேன் . ஆச்சாரம் என்பது கூட ஒரு வித அஞ்சுதலில் இருந்து தொடங்குவதே . என் வழிபாடு குழந்தையைப் பேணுதல் . அது எனக்களிக்க ஒன்றில்லை . ஆனால் நான்தான் அதை சர்வ ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் .

மரபு , ஆழ்மனதின் படிமத்தின் வெளிப்பாடுகளை வெளிகொனருதல் , அன்றாடமோ நிமிடத்திற்கொருமுறை  அலைபாயுதலை படிமங்களாக மாற்றி ஆழ்மனதிற்குள் செலுத்த முயற்சிப்பது . என்ன ஒரு பைத்தியக்காரத்தனம் . அன்றாடம் உலகியல் மாற்றத்தில் பிணைப்பு கொண்டது . நான் இரண்டையும் தனித்தனியே பாதுகாக்க நினைக்கிறேன்.
நான் மரபை கொண்டு அதை நிறைக்க விரும்பவில்லை . எனது தேடல் மரபிற்கு நவீனத்தில் என்ன இடம் என்பது . மரபை மட்டும் சார்ந்து வாழ முடிந்தவர்கள் அதை வாழ்கை முழுக்க நிரப்பிக்கொள்ளலாம் . என்னால் அந்த இடத்திற்கு வர இயலவில்லை .காரணம் அவற்றில் உள்ளகாலப் பொருந்தாமைமற்றும் என்னிடமுள்ளபோதாமை” . 

பல்வேறு காரணங்களினால் அருகிக் கொண்டிருக்கும் அமைப்பாக தங்களின் மிகை அனுஷ்டானங்களால் அதை அனுஷ்டிப்பதாக நினைப்பவர்கள் , தங்களை தன்னிருள் நோக்கி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் . எல்லாவற்றிலிருந்தும் ஒருநாள் அது மீண்டெழலாம். அதில் இன்று நிகழ்ந்து கொண்டிருப்பது வளர்சிதை மாற்றம். பிறிதொன்று அதில் சொல்லப்பட்ட ஆச்சார விஷயங்களில் எனது போதாமையை கருத்தில் எடுக்கிறேன்.

நான் எனது நவீன மனம் அழகியலில் லயிப்பும், வாழ்கை வண்ணங்களால் நிறைந்ததுமாக நினைக்கிறேன்மரபை ஒட்டி சொல்லப்பட்ட வழமைகள் என்கிற புரிதல் ஒருவருக்கொருவர் கைமாற்றி அளிப்பது . அது தன்னியல்பை ஒட்டி உருவாகி வருவது . அதில் அனைவருக்கும் பொதுமை என ஒன்றில்லை என நினைக்கிறேன். அது ஒருவர் வாழ்ந்து நிறைத்து அறிந்து கொள்வது . பிறர் முடிவினால் மரபென ஒன்றை ஏற்க இயலாமை . என்னால் ஏற்கவியாத ஒன்றை எனக்குள் திணித்துக் கொள்ள இயலாது . அது என்னை ஏதாவதொரு புள்ளியில் இம்சிக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...