https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 29 ஜூன், 2022

நம் அமெரிக்க குழந்தைகள் 1 . ஜெயமோகன்





 அமெரிக்க நண்பர்கள் அமெரிக்கத் தமிழர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்று கேட்டார்கள். அறிவுரை ஆலோசனை சொல்வதெல்லாம் எப்படியோ ஒருவர் தன்னை சற்று மிகைப்படுத்திக்கொள்வது தான். எத்தனை பணிவாகச் சொன்னாலும் அதிலொரு அதிகப்பிரசங்கித்தனம் உள்ளது. சொல்பவனுக்கு இன்பக்கிளுகிளுப்பும் இல்லாமலில்லை.

ஆனால் அமெரிக்கா சென்றுவிட்டவர்கள் அங்கிருந்து நமக்கு பத்தி பத்தியாக ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை, இடித்துரைப்புகளை சொல்லும்போது நாமும்தான் சற்று சொல்லி வைப்போமே என்ற எண்ணம் எழுந்தது. ஆகவே சந்திப்புகளில் சொன்னவற்றை பதிவு செய்து வைக்கலாம் என்று தோன்றுகிறது.

அமெரிக்காவுக்கு நான் நான்குமுறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சராசரியாக ஒரு மாதகாலம் தங்கியிருக்கிறேன். பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒரு ஊரில் என தொடர்ந்து அமெரிக்கா முழுக்க பயணம் செய்து கொண்டே இருந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். அமெரிக்காவை அமெரிக்காவில் பலகாலமாக வாழ்ந்தவர்களை விட அதிகமாக பார்த்திருக்கிறேன்.

ஆகவே இந்தக்கருத்துகளை சொல்வதற்கான ஓர் அடிப்படைத் தகுதி இருப்பதாக நினைக்கிறேன். இவை என்னுடைய தனிப்பட்ட அவதானிப்புகள், என் தனிப்பட்ட பார்வை ஆகியவை சார்ந்தவை. பிடிக்காவிட்டால் கடந்துசென்றுவிடலாம். இந்த அவதானிப்புகளை தாங்களும் அடைந்தவர்கள் யோசிக்கலாம்.

அமெரிக்க நண்பர்கள் பெரும்பாலானவர்களின் முதன்மைக் கவலை என்பது அவர்களின் அடுத்த தலைமுறையில் தமிழ் வாழுமா என்பது. ஆனால் அது சட்டைமாற்றி வந்த கவலை. தங்கள் குழந்தைகள் தமிழர்களாக நீடிப்பார்களா என்பது அக்கேள்வியின் உள்ளடக்கம். ஆனால் அதுவும் சட்டைதான். அதற்கு அடியில் இருப்பது தங்கள் பிள்ளைகளுக்கும் தங்களுக்குமான எதிர்கால உறவு என்னவாக இருக்கும் என்பதே.

அமெரிக்க நிகழ்ச்சி ஒன்றில், நிகழ்ச்சி முடிந்தபின் அங்கே வந்திருந்த ஒரு மூதாட்டி மிக உருக்கமாக ‘அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்!’ என்று கூவினார். ‘ஐயா, உங்கள் பிள்ளைகளை தமிழ் பேச வையுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுங்கள். தமிழை அழியவிடாதீர்கள்’ என்றார்.

அது ஓரு தமிழிலக்கிய நிகழ்ச்சி என்பதனால் அக்குரலுக்கு மதிப்பிருக்கும் என அவர் எண்ணியிருக்கலாம். அமெரிக்காவில் உண்மையில் பெரும்பாலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் யாராவது ஒரு முதியவர் அந்த கோரிக்கையை உணர்ச்சிகரமாக முன்வைப்பார். ஒரு மாதிரி போர்வஞ்சினம் போன்ற ஒரு சூழல் உருவாகும்.

அவர்களில் ஒருவரை கொஞ்சநேரம் தனியாகச் சந்தித்து சில கேள்விகளை கேட்கவேண்டும் என்னும் துடிப்பு எனக்கு உருவாகும். வந்த இடத்தில் எதற்கு வம்பு என்று அடக்கிக் கொள்வேன். அந்த தமிழ்ப்பற்றுகொண்ட முதியவர் இந்தியாவிலிருக்கையில் வாழ்நாள் முழுக்க கனவு கண்டது தன் பிள்ளைகள் அமெரிக்கா சென்றுவிடவேண்டும் என்பதாகவே இருக்கும். முழுவாழ்க்கையில் ஈட்டிய செல்வத்தை முழுக்க அதற்கே செலவிட்டிருப்பார்.

இந்தியப் பண்பாட்டையோ, தமிழ்ப்பண்பாட்டையோ தன் பையன் அறிந்துகொள்வதும் ஈடுபடுவதும் அவனுடைய அமெரிக்கப் பயணத்துக்கு தடையாக அமையும் என கற்பனை செய்து பையனை எந்தப் பண்பாட்டு அறிமுகமும் இல்லாமல், சொந்தக்காரர்களுக்குக் கூட அறிமுகம் செய்யாமல் வளர்க்கும் பெற்றோரையே நான் திரும்பத் திரும்ப காண்கிறேன். அவர்களில் ஒருவராகவே இருப்பார் அந்த முதியவர் என்பது அவருடைய நடையுடை பாவனையிலேயே தெரியும். அதில் ‘வந்துட்டம்ல?’ என்ற தோரணை இருக்கும்.

அந்தப் பெற்றோரின் மகன்கள் உள்ளூர் திருவிழாவுக்கு ஒருமுறைகூட சென்றிருக்க மாட்டார்கள். உள்ளூர் கோயிலை பார்த்திருக்க மாட்டார்கள். சொந்தக்காரர்களின் திருமணத்துக்கு சென்றிருக்க மாட்டார்கள். குலதெய்வம் என்ன, குடும்ப மரபு என்ன என்று தெரிந்திருக்காது. தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு அமைப்பு பற்றி எந்த நேரடி அறிதலும் இருக்காது. எட்டாம் வகுப்பில் ரகசியமாக பொன்னியின் செல்வன் அல்லது ராஜேஷ்குமார் படித்தவர்கள் ஒரு இரண்டு சதவீதம் பேர் இருப்பார்கள். எஞ்சியவர்களுக்கு தமிழில் போஸ்டர்கள் எழுத்துகூட்டிப் படிக்குமளவுக்கே தமிழ் அறிமுகம் இருக்கும். அவர்கள் அறிந்ததெல்லாம் படிப்பு மட்டுமே. படிப்பு அல்ல அது, தொழில்நுட்பப் பயிற்சி. அப்படியே அமெரிக்கா.

தன்  பையனோ பெண்ணோ அமெரிக்காவில் இருப்பதைப் பற்றி அத்தனை பெற்றோரும் பெருமிதமடைகிறார்கள். செல்லுமிடமெல்லாம் சொல்கிறார்கள். அது தங்கள் வாழ்க்கையின் வெற்றி என எண்ணுகிறார்கள். ஆனால் அந்த வெற்றியின் திளைப்பினூடாக  ஒரு கட்டத்தில் அவர்கள் அறியும் ஒன்று, தங்கள் பேரப்பிள்ளைகள் இந்தியர்களோ தமிழர்களோ அல்ல என்பது. அந்த கண்ணியுடன் தங்கள் மூதாதையர் மரபு அறுபடுகிறது என்பது. முதிய வயதில் அது பகீரிடும் ஓர் அறிதல். அதன் பதற்றத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால் அப்போதுகூட அது தாங்களே விரும்பி ஏற்றுக்கொண்டது என அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஒப்புக்கொள்வதில்லை. அமெரிக்காவுக்கு எவராவது இவர்களின் பிள்ளைகளை நாடுகடத்தினார்களா என்ன? அமெரிக்க தூதரகம் முன்னால் தவமிருந்து சென்றவர்கள்தானே அனைவரும்? அதற்குப்பின் ஏன் இந்த உணர்ச்சிகரப் பாவலாக்கள்? தமிழ்மேல் உயிரையே வைத்திருப்பதுபோன்ற மிகையுணர்ச்சிகள்? மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே நடிப்பதுதான் அதிகம்.

*

இதற்கு நான் ஏன் பதில்சொல்கிறேன் என்றால் நான் செல்லுமிடமெல்லாம் இக்கேள்வி எழுகிறது என்பதனால்தான். திரும்ப திரும்ப இத்தலைப்பு சார்ந்து அவ்வளவு பேசியிருக்கிறேன். இந்த அமெரிக்க பயணத்தில் ‘பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பது, தமிழர்களாக வளர்ப்பது பற்றிய கேள்விகள் வேண்டாம்’ என பல கூட்டங்களில் முன்னரே அறிவிக்கக்கூடச் செய்தோம்.

இந்த விவாதத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டியது ஒன்றுதான். கேள்வி இது ‘அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளை தமிழர்களாக வளர்ப்பது எப்படி?’ என் பதில் ‘குழந்தைகளை வளர்ப்பது இரண்டாவது விஷயம். நீங்கள் உங்கள் அறிவுவாழ்க்கை, ஆன்மிக வாழ்க்கை பற்றி கொஞ்சம் கவலை கொள்ளுங்கள். குழந்தைகளை வளர்ப்பது நீங்கள் அல்ல, சமூகம்’

நடைமுறையில் நிகழ்வதை வைத்துப்பார்த்தால், அமெரிக்கத் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழ் பேசவோ, தமிழர்கள் என்னும் அடையாளத்துடன் வாழவோ எந்த வாய்ப்பும் இல்லை. அவர்களை ‘தக்கவைத்துக் கொள்ள’ செய்யப்படும் எல்லா முயற்சிகளும் கடப்பாரைக்கு சுக்கு நியாயம் கொண்டவை மட்டும்தான். இதுவே உண்மை.

(வழக்கமாக அமெரிக்காவிற்கு விருந்தினர்களாக வருகை தருபவர்கள் “அமெரிக்காவிலே தமிழ் வாழும்!” என முழங்கி கைத்தட்டல் அள்ளிச் செல்வார்கள். என் வழக்கம் உண்மையைச் சொல்லி வசைகளை பெறுவது. அதை இம்முறையும் தவறவிட விரும்பவில்லை. பழகிவிட்டது.)

அடுத்த தலைமுறை அமெரிக்கக் குழந்தைகள் எங்குமே தமிழ்க்குழந்தைகளாக இல்லை. நான் எங்குமே அவ்வண்ணம் எவரையுமே பார்க்கவில்லை. சிலருக்கு கொஞ்சம் தமிழ் முனகத் தெரிகிறது, அதுவும் அப்பா அம்மா கட்டாயப்படுத்தினால். அது ஒரு இழப்புதான். ஆனால் அந்த இழப்புக்கு தயாராகத்தான் அவர்களின் பெற்றோர் இங்கிருந்து அங்கு செல்கிறார்கள். அதன்பிறகு அதைக்குறித்து வருந்தி பயனில்லை.

அமெரிக்காவில் இருக்கும் இந்தியக்குழந்தைகளின் சவால்கள் முற்றிலும் வேறானவை. அவர்கள் தங்கள் மரபுக்கு முற்றிலும் அந்நியமான, மேலும் நவீனமான, மேலும் ஜனநாயகமயமாக்கப்பட்ட, மேலும் நுகர்வுமயமாக்கப்பட்ட ஒரு பண்பாட்டை எதிர்கொள்கிறார்கள். அவர்களின் அம்மாவும் அப்பாவும் இருக்கும் பண்பாட்டுக் காலத்தில் இருந்து மிகமிக முந்தியது அவர்கள் பள்ளியிலும் வெளியுலகிலும் சந்திக்கும் பண்பாட்டு வெளி. அக்குழந்தைகளின் சவால் என்பது தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்து அந்த புதிய, நவீனச் சூழல் நோக்கி வளர்ந்து எழுந்து செல்வது. கூட்டுப்புழு நிலையில் இருந்து  கூடு உடைத்து எழும் பட்டாம்பூச்சி சந்திக்கும் அறைகூவல்.

இந்திய அமெரிக்கக் குழந்தைகள் அங்கே ஒரு பல்லினச் சமூகத்தில் வாழ்கிறார்கள். எனவே ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஒழுக்கம், பண்பாடுதான் உயர்ந்தது என்று அவர்கள் எண்ண வாய்ப்பில்லை. ஒரு குறிப்பிட்ட வகையான வாழ்க்கையே இயல்பானது அல்லது சரியானது என அவர்கள் நம்ப வழியில்லை. அப்படிச் சொல்லிக்கொடுத்தால் அவர்களை நாம் பண்பாட்டுரீதியாக முன்முடிவுகள் கொண்டவர்களாக ஆக்குகிறோம். அது சிந்தனையில் ஊனமுற்ற நிலை.

அத்துடன் நம்குழந்தைகள் தங்கள் நிறத்தாலும் வாழ்க்கை முறையாலும் எப்போதும் அந்நியர்கள் என்று அங்குள்ள புறச்சூழலில் அடிக்கோடிடப்படுகிறார்கள். அவர்கள் அதை வென்று அங்குள்ளவர்களாக திகழ்ந்தாகவேண்டும். இல்லையேல் அங்கே அவர்களுக்குச் சுற்றம் இல்லை. அந்நிலை முற்றிலும் இயல்பானது. நம் குழந்தைகள் டெல்லி சென்றாலே இச்சிக்கலை எதிர்கொள்வார்கள்.

அச்சூழலில் அவர்கள் தங்கள் அடையாளத்தை எந்த அளவுக்கு கரைத்துக்கொண்டு, எந்த அளவுக்கு அமெரிக்க பண்பாட்டின் ஒரு பகுதியாக பொருந்திக் கொள்கிறார்களோ அந்த அளவுக்குத்தான் அவர்கள் வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் அமைகிறது. தன்னை எப்படி முன்வைப்பது என்று அச்சூழலைக் கொண்டு அவர்கள் முடிவெடுக்கவேண்டுமே ஒழிய, வீட்டில் இருந்துகொண்டு நாம் சொல்லக்கூடாது.

ஆகவே கிண்டர்கார்டன் பள்ளியில் படிக்கும் இந்திய அமெரிக்கக் குழந்தையிலிருந்து அடுத்தடுத்த எல்லா படிநிலைகளிலும் உள்ள அத்தனை குழந்தைகளுமே எந்த அளவுக்கு அமெரிக்க தன்மையைக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு அமெரிக்கத் தன்மையை அள்ளிக்கொள்கின்றன. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தங்களை மாற்றிக்கொள்கின்றன. அவற்றின் இயல்பான வளர்ச்சி அத்திசை நோக்கி இருக்கிறது, சூரிய ஒளியை நோக்கி செடிகள் செல்வது போல.

அதற்கு நேர் எதிராக அவர்களை தமிழை நோக்கி இழுக்க, தமிழ் அடையாளத்தில் அவர்களை சிறைப்படுத்த, அவர்களின் பெற்றோர் முயன்றார்கள் என்றால் அது தோல்வியாகவே முடியும். அவர்களை அவ்வண்ணம் சிறைப்படுத்தி வளர்ப்பது பான்சாய் மரம் வளர்ப்பதுபோல. தொடர்ச்சியாக வேர்களையும் கிளைகளையும் வெட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.

‘எப்படி என் குழந்தையை தமிழனாக நீடிக்க வைப்பது?’ என்று கேட்கும் எவரும் அக்குழந்தை அமெரிக்கச் சூழலில் அங்கே அளவிடப்படும் வெற்றியை அடையவேண்டியதில்லை என்று சொல்வதில்லை. அத்தனைபேருக்கும் பிள்ளைகள் ஹார்வார்ட் செல்வதைப் பற்றிய கனவுதான். அதற்காக சிக்கனமாக சேர்த்துக்கொண்டே இருப்பதுதான் அவர்களின் முழுவாழ்க்கையே.

அவர்களிடம் “சரிங்க, உங்க பையன் சுத்தத் தமிழனா இருப்பான். ஆனா ஹார்வார்ட் போகமுடியாது. சரியா?” என்று கேட்டால் பதறிவிடுவார்கள். அதன்பின் தமிழாவது, பண்பாடாவது.

அப்படியென்றால் இக்கேள்வியின் உண்மை அர்த்தம் என்ன? அவர்கள் சொல்வது இவ்வளவுதான். ‘என் குழந்தை அமெரிக்காவில் வெற்றியடையவேண்டும். அதற்கு அவன் நல்ல அமெரிக்கனாக ஆகவேண்டும். எனக்கு மட்டும் தமிழனாகவும் மகனாகவும் நீடிக்கவும் வேண்டும்’.

இது இதைச்சொல்லும் இவர்களின் பெற்றோருக்கு இருந்த அதே இரட்டை ஆசைதான். பையன் அமெரிக்காவிற்குச் செல்லவேண்டும். பேரன் தூயதமிழ் பேசவும் வேண்டும். ’நாந்ந்தான் ங்கொப்பண்டா நல்லமுத்து பேரண்டா’ என பேரன்கள் அமெரிக்காவில் கபடி ஆடவேண்டும். சின்னவயசில் நான் ஜேம்ஸ்பாண்ட் ஆகவும் விவேகானந்தர் ஆகவும் ஒரே சமயம் ஆசைப்பட்டேன்.

இதுவரைக்கும் உலகத்தில்  பிற நாடுகளில் குடியேறி வாழ்க்கையை அமைத்துக்கொண்ட மக்களில் மிகச்சில இனங்கள் தவிர பிற சமூகங்கள் தங்கள் பண்பாட்டு அடையாளத்தை ஓரிரு தலைமுறைக்குள் முழுமையாகவே இழந்து,  குடியேறிய நாட்டின் பண்பாட்டில் கரைவதே நடந்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள பெரும்பாலான சமூகங்கள் அப்படி கரைந்து அமெரிக்கச் சமூகமாக ஆகிவிட்டவைதான்.

அப்படிக் கரைந்தாலும் அவர்களிடம் மாறாமல் இருப்பவை என்ன? முதலில் தோல்நிறம், அந்நிறம் அளிக்கும் அடையாளம் எப்போதும் மிச்சமிருக்கிறது. அதை ஒன்றும் செய்யமுடியாது. மிக அரிதாக மதம் எஞ்சுகிறது.  ஏனென்றால் மதத்துக்கு மொழி தேவையில்லை. அது ஆழ்படிமங்கள் மற்றும் குறியீடுகளால் ஆனது. நமீபியா தலைநகர் விண்டூக்கில் முந்நூறாண்டுகளுக்கு முன்பு சென்று குடியேறிய தமிழர்களிடம் மதம்சார்ந்த சில குறியீடுகள், சடங்குகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அவர்களுக்கு தமிழ்நாடு, இந்தியா பற்றிக்கூட ஏதும் தெரியாது என்பதை கவனித்துள்ளேன்.

யூத மதம் போன்று மிக நெருக்கமான நெறிமுறைகள் கொண்ட, திட்டவட்டமான கட்டமைப்பு கொண்ட, ஒரு மதம் ஒருவேளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஒரு தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்ள உதவக்கூடும். அனைவருக்குமல்ல, ஒரு சாராருக்கு மட்டும். மற்றபடி மதமே கூட குறியீட்டுத் தொகையாக, தனிப்பட்ட நம்பிக்கையாகவே எஞ்சும்.

எஞ்சியோர் தங்கள் அடையாளத்தை தாங்கள் வாழும் நவீன சூழலிலிருந்து உருவாக்கிக்கொள்வது இயல்பானது, எப்போதும் நடப்பது, எவ்வகையிலும் தவிர்க்க முடியாதது. அதுவே வாழ்வின் இயல்பான போக்கு. அப்படித்தான் நாம் காணும் இந்த உலகம் உருவாகி வந்துள்ளது. அதே திசையில்தான் அது வளர்ந்துசெல்லும்.

அமெரிக்க- இந்தியக் குழந்தைகள் ஆங்கிலம் பேசுவதை, தங்கள் வாயை அவர்கள் வைத்திருக்கும் விதத்தை, அவர்கள் உடல்மொழியை நான் எப்போதும் வேடிக்கையுடன் கூர்ந்து பார்க்கிறேன். அதில் வெளிப்படுவது அவர்கள் சென்று வழங்கும் சூழலில் உள்ள ஒரே ஒரு பண்பாட்டுக்கூறுதான். அதைக்கவனித்தால் அவர்கள் முயற்சி எதை நோக்கி என்பது தெரியும்.

அமெரிக்காவில் நம் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் கருப்பினக் குழந்தைகள் இருக்கிறார்கள். ஜமைக்கன் குழந்தைகள் இருக்கிறார்கள். ஸ்பானிஷ் குழந்தைகளும், சீனக்குழந்தைகளும் உண்டு. நிறம் மற்றும் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் நம் குழந்தைகள் பெரும்பாலும் கறுப்பினத்தார், ஜமாய்க்கன் இனத்தார், ஸ்பானிஷ் இனத்தாருக்கே நெருக்கமானவர்கள். பண்பாடு என்றால் சீன இனத்தாருக்கு அணுக்கமானவர்கள்.

ஆனால் இவ்வினத்தாரின் நடைஉடை பாவனையையோ, மொழியையோ நகல் செய்யும் ஒரு இந்தியக்குழந்தை கூட கிடையாது. அத்தனை இந்தியக் குழந்தைகளும் அமெரிக்க வெள்ளையினக் குழந்தைகளை – இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலோ-சாக்ஸன் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க உயர்குடிக் குழந்தைகளை மட்டும் – நகல் செய்கிறார்கள். அவர்களின் மொழியையும் நடையுடை பாவனைகளையும் அப்படியே ஏற்கிறார்கள். அவர்கள் ஆகவிரும்பும் அடையாளம் அது. அவர்கள் தேடும் பண்பாட்டு இடம் அது.

தப்பித்தவறி ஓர் இந்தியக் குழந்தை ஆங்கிலோ சாக்ஸன் வெள்ளையர் அல்லாதோரின் மொழியையும் பாவனையையும் தானும் கொள்ள ஆரம்பித்தால் நம் இந்தியப் பெற்றோர் பதறிவிடுவார்கள். குழந்தையை சொற்களால் குளிப்பாட்டிக் குளிப்பாட்டி, தேய்த்துத் தேய்த்துக் கழுவி, அந்த அடையாளங்களை விலக்கி மீட்டாலொழிய நிம்மதி அடைய மாட்டார்கள்.வெள்ளையினத்தாரின் மொழியும் அடையாளமும் மட்டும்தான் நமக்கு வேண்டும். இது இனவெறி அல்ல. அமெரிக்கப் பண்பாட்டின் மையம் எது என நாம் அனைவருக்குமே தெரியும்.

உண்மையில் நம் இந்தியப் பெற்றோர் தங்கள் குழந்தை பள்ளியில் கற்றுவரும் ஆங்கிலோ சாக்ஸன் வெள்ளையின உச்சரிப்பையும் உடல்மொழியையும் அவர்களிடமிருந்து தாங்களும் கூர்ந்து கற்றுக்கொள்கிறார்கள். அமெரிக்கச் சமூகத்தில் நுழைய பெற்றோருக்கு இருக்கும் வழி அக்குழந்தைகள்தான். தங்கள் குழந்தைகளின் ஆங்கிலேயத்தன்மைகளை இந்தியப்பெற்றோர் ரசிக்கிறார்கள், பெருமிதம் கொள்கிறார்கள். அக்குழந்தை வளர்ந்து பதின்பருவத்தில் முழு அமெரிக்கனாக மாறி நிற்கையில்தான் தமிழ்ப்பதற்றம் வந்தமைகிறது.

நம் அமெரிக்கத் தமிழ்க்குழந்தைகள் அமெரிக்கர்களாகும் பயிற்சியையே கல்வி என அடைகிறார்கள். அதற்கு எதிராகத்  தமிழைக்கொண்டு நிறுத்தினால் அவர்கள் தமிழை நோக்கி எதன்பொருட்டு வரவேண்டும்? அவர்கள் வருவதனூடாக அவர்கள் பெறுவது என்ன ?வந்தால் அவர்கள் இழப்பதே மிகுதி. அடிப்படைத் தமிழ்க்கல்வி பெற்ற ஒரு தமிழ்க்குழந்தை அக்கல்வியை முழுமையாக மறந்தாலொழிய அதற்கு நாவில் அமெரிக்க ஆங்கிலம் அமையாது. அமெரிக்க உடல்மொழி வராது.

ஆகவே பெற்றோரின் செல்வாக்கு செல்லுபடியாகும் மழலைவயதில், வேறுவழியின்றி அக்குழந்தை தமிழையோ, தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளையோ கற்றுக்கொள்கிறது. பெற்றோரை மீறிச்செல்ல முடியும் எனும் அகவை வரும்போது எளிதில் தமிழை உதறிச் செல்கிறது. பெற்றோர் அந்த வயதில்தான் கவலை கொள்கிறார்கள். தங்கள் குழந்தைகள் தங்களிடமிருந்து விலகிச்செல்வதை உணர்கிறார்கள். அவர்கள் வேறொருவராக ஆகிவிட்டதை, தங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு ஆங்கிலேயருக்கும் தனக்குமான ஒரு கலாச்சார இடைவெளி இருப்பதை அவர்கள் உணருகிறார்கள்.

நிறத்தாலன்றி மற்ற அனைத்தாலும் அயலான ஆளுமையாக மாறியிருக்கும் தன் குழந்தைகளை தங்களிடமிருந்து விலக்கும் மாபெரும் விசையெது என்று அறியாமல் திகைக்கிறார்கள். அல்லது தெரிந்து அதை சரிசெய்ய முயல்கிறார்கள். அல்லது அந்தப் பொறுப்பை வேறெதன்மீதாவது சுமத்த விரும்புகிறார்கள். அத்தனை வினாக்களும் அங்கிருந்துதான் வருகின்றன.

அமெரிக்கப் பெற்றோரிடம் குழந்தைகளுக்கு மூர்க்கமாக தமிழை வலியுறுத்துங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். தமிழை கற்றுக்கொடுங்கள், தமிழ்பேச வற்புறுத்துங்கள் என்று கூறமாட்டேன். தமிழ் அழிந்தால் அக்குழந்தைகளுக்கு அடையாளம் இல்லாமல் ஆகிவிடும் என்று நான் எண்ணவில்லை. நான் அக்குழந்தைகளின் தரப்பிலிருந்தே யோசிப்பேன். ஒரு குழந்தையின் அடையாளம் அதன் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் தன் அடையாளம் எது என அதுவே முடிவெடுக்க வேண்டும். பிறர் அதை புகுத்த முடியாது.

(மேலும்)

வெள்ளி, 17 ஜூன், 2022

அடையாளமாதல் * கணக்கும் யதார்த்தமும் *

 ஶ்ரீ:



பதிவு : 626  / 816 / தேதி 17 ஜூன்  2022



* கணக்கும் யதார்த்தமும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 22.




 

கூட்டம் நடக்கவிருக்கும் அரங்கை அடைந்தபோது மனம் சோர்ந்து போயிருந்தது . அத்தனை நாள் திட்டமிட்டதற்கு இந்த அர்த்தமின்மை தான் பதில் போலிருந்தது . இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை . இது முதற் கோணல் , இனி அது வரிந்து கொண்டே இருக்கப் போகிறது . உள்ளே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என அரசியலாகிறது . இந்த கூட்டம் இன்று எனக்கு எதிர் கருத்துக்களை உருவாக்குபவர்களை  மிக எளிதாக கடந்து சென்றுவிடப் பயன்படலாம் . ஆனால் கடந்த சென்ற பிறகு பெரும் தடையாக இருக்கப் போவது இந்த பாண்டியன் . அவன் கூட என் சிக்கல் அல்ல இதோ என் பக்கத்தில் நின்றிருக்கிறான் . அவனுக்கு எதாவது ஒன்று நடந்தாக வேண்டும். நாராயணசாமியை அனைவருக்கும் முன்னளித்து அனைத்தையும் கைக் கொள்ள பார்பான் . அல்லது பின்னர் சொல்லி மிரட்டவாவது பயன்படுத்திக் கொள்ளலாம். எனக்கு இணையான தலைமையாக இன்று வெளிப்பட்டு விட வேண்டும் என்கிற தவிப்பு அவன் என்னிடம் அந்த இடத்திற்கு மிக பொருத்தமாக நடந்து கொண்டதில் தெரிகிறது. அதை அப்படித்தான் என பிறருக்கு காட்டி கடக்க வேண்டியது என் அரசியல் . இப்போது என் சோற்றில் கல்லலென வந்திருப்பது நாராயணசாமிதான் இனி என்றும் என் சிக்கல்


இன்று கூட்டத்தில் கலந்து கொள்ள வரவிருக்கும் நாராயணசாமி அவனிடம் காலையில் தனது வருகை பற்றி சொல்லியிருக்க வேண்டும். எனக்கு சற்று முன்னர்தான் சண்முகம் சொன்னார். அவனது உற்சாகம் நான் கற்பனை செய்து கொள்வதா ? தெரியவில்லை . சண்முகம் நாராயணசாமியின் முரண் சரி செய்ய முடியாத பிளவை அடைந்திருந்தது . மேல் நிலை தலைவர்கள் அதை ஊகித்திருக்க முடியும் . மாநில தலைமை பிளவுறும் சந்தர்பங்களில் மேல் நிலை தலைவர்களின் நிலைபாட்டை கணிக்க முடியாது . அவர்கள் தங்கள் இடத்திற்கான பதட்டம் முழு அரசியலை முடிவு செய்யக் கூடியது . எனக்கு அது  சீக்கிரத்தில் வெளிப்படும் என்கிற நம்பிக்கை மட்டுமே என்னால் தெளிவாக மேல் நகர முடியும் . ஆனால் அது நிகழப்போவதில்லை


ஹோட்டலின் கார் நிறுத்துமிடத்தில் விளக்குகள் மங்களாக இருந்தாலும் அரங்கின் உள்ளே இருந்து பளீரிடும் மஞ்சள் ஒளி உற்சாகத்தை தருவதாக இருந்தது . அந்த அரை இருட்டில் இன்று சற்று நின்று என்னைத் திரட்டிக் கொண்டு அரங்கை நோக்கி நடந்தேன் . வழியில் நின்று கொண்டிருந்த பாண்டியன் என்னைக் கண்டவுடன் ஓடிவந்து இணைந்து கொண்டான். அவனை இப்போது பொருட்படுத்தக் கூடாது . அவனை பக்கத்தில் இருத்திக் கொண்டு அடுத்த நகர்வை திட்டமிட வேண்டும் . அவனிடம் கூட்டத்தை ஒருங்கச் சொன்னேன். காரில் இருந்து கொண்டுவந்த நிகழ்ச்சி நிரல் கூட்டத்திட்டம் பற்றிய கோப்புகள் மற்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கும் பேசு பொருள் குறித்த வரைவுகளும் 

அதில் இருந்தன.


கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் யாரும் உள்ளே செல்லாமல் வெளியே சிதறி சிறு சிறு குழுக்களாக அரங்க வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தனர் . ஏறக்குறைய அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள் . என்னை பார்த்ததும் மரியாதை வணக்கம் சொல்ல ஒவ்வொருவரையும் கைப்பற்றி குலுக்கி வரவேற்றது அவர்களுடன் சிறு சிறு பேச்சுகள் நலம் விசாரிப்புகள் என நெருக்கம் கொள்ள வைப்பதுடன் அவர்களுக்குள் நிகழும் மனமாற்றத்தை உடல் மொழியில் பார்க்க விரும்பினேன் . எல்லோருக்கும் அரசியலில் தங்கள் இடம் பற்றிய பிரக்ஞை ஆழத்தில் உறைவது . அதன் அருகினில் அவர்களை தயக்கமல்லாமல் அழைத்து செல்வேன் என்கிற நம்பிக்கையை உருவாக்கினால் மட்டுமே அவர்களுடன் தொடர்புறுத்த சிறந்த அது இடமாக இருக்க முடியும். அங்கு கூடியிருந்தவர்களில் இருந்து எனக்கான ஒட்டு மொத்த இடத்தையும் நான் திரட்டிக் கொள்வதற்காக இந்த கூட்டத்தை கூட்டியிருக்கறேன் .அங்குள்ள அனைவரும் அதிலிருந்து ஒரு துளியை பெற்றுக் கொள்ள விழைபவர்கள்.


நிர்வாகிகளில் பலர் வந்திருப்பதையும் அவர்கள் அரங்கின் உள்ளே சென்று அமர்ந்திருப்பதையும் பார்க்க முடிந்தது . அனைவருக்கும் வன்மம் உள்முகமாக இருந்தாலும் வெளியே நட்பாக காட்டிக் கொண்டிருக்கலாம். உள்ளே இருப்பவர்கள் வெளியே நின்று கொண்டிருப்பவர்களுக்கு இடையே இப்போதுள்ள இடைவெளி அந்த நிர்வாகிகள் உருவாக்கி இருக்கிறார்கள் . அவர்கள் அனைவரும் வரும் காலத்தில் ஒரு இயக்கத்தற்கு மனமொன்றி செயல்பட இருப்பவர்கள் . ஆனால் துரதிஷ்டவஞமாக அவர்களை எனது ஆதரவாளர்களாக பகுத்துக் கொண்டார்கள் என்றால் அதைவிட பிழை புரிதல் வேறில்லை. அவர்கள் உள்ளே சென்று அமர்ந்ததை விட இங்கு இவர்கள் மத்தியில் அவர்கள் நின்றிருக்க வேண்டும். அவர்கள் அதுவரை செய்த அனைத்து எதிர்மறை அரசியலும் செயலற்றுப்போனதால் அந்த அமைதி திரும்பியிருக்க வேண்டும். சண்முகம் வரப் போவதாக நினைத்திருந்தனர். அங்கு எனக்கு கிடைக்க இருக்கும் இடம் பற்றிய எரிச்சலில் இருந்திருக்கலாம்.


அந்த நிகழ்வின் முன்னேற்பாடுகள் எனக்கு பிறிதொரு வாசலை திறந்து வைக்கும் என கணிக்கத் தெரிந்தவர்கள். சிலகாலம் அமைதியாய் இருப்பது என முடிவு செய்திருக்கலாம் . அவர்கான காலம் ஒன்று வரும் எனத்தெரிந்தவர்கள். அனைவரையும் அரங்கிற்கு அழைத்துச் சென்றேன்.நெடுநாளைய எதிர்பார்ப்பு , ஒரு கனவின் முதற்கணம். என்னை அவர்களுக்கு தெளிவாக அறிவித்தது. இனி இளைஞர் காங்கிரஸை வழிநடத்துபவர் யார்? அவர்கள் யாரை பின் தொடர வேண்டும் என்கிற சந்தேகத்திற்கு இடமில்லாமாமல். அது ஒரு தருக்கி நிமிரும் கணம். காலம் எப்போதும் அதற்கு மறு எடையாக பிறிதொன்றை கரந்து அதில் வைக்கிறது . அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்று தொகுதி எண்ணனின் அடிப்படையில் அமரச்செய்தேன் சராசரியாக தொகுதிக்கு மூவர்  என வந்திருந்தனர் நிர்வாகிகளை சேர்த்துக் கொண்டால் 120 பேர் எதிர்பாரத்ததைவிட 30 பேர் அதிகம் . அதற்கு தேவையான நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்தேன்.

பாண்டியனிடம் அவனிடமுள்ள கோப்புகளை சரிபார்த்து தொகுதி  எண் வாரியாக அவர்களுக்கான இடத்தை ஒருங்கச் சொன்னேன். பேச்சுகள் மிக மெல்லிய ஒலியாக , அவரவர் அவர்களுக்கான பெயர் எழுதப்பட்ட நாற்காலியில் அமரவைக்கப்பட்ட போது அவர்கள் முகத்தில் எழும் ஒளியை பார்த்தபடி சிறிய மேடைக்கு அருகே நின்றி கொண்டிருந்தேன்.கட்சி கூட்டங்களிலில் அரங்கு மேடை மற்றும் பார்வையாளர்கள் என எப்போதும் இரண்டாக பகுக்கப்பட்மிருக்கும். பார்வையாளர்கள் அங்கு எப்போதும் முகங்களற்ற திரள் மட்டுமே . அதை இங்கு உடைத்திருந்தேன் . அவரவர் தங்களின. இடத்தை கண்டடையும் நேரத்தை கொடுத்துக் கொண்டருந்தேன். பாண்டியன் அனைவருக்கும் முன்பிருந்த மேஜையில் நான் கொடுத்த அத்தனை கோப்புகளையும் அவர்களுக்கு எதிரே வைத்துக் கொண்டிருந்தான்


நான் ஒருங்குனர் மைக்கை எடுத்து கூட்டம் இன்னும் 30 நிமிடத்தில் துவங்க இருப்பதையும் நாராயணசாமி கலந்து கொள்ள போவதை சொன்னபோது கண்களால் பார்க்கக் கூடிய  அலை நிர்வாகிகளின் மத்தியில் மெல்லிய காற்று போல பரவியது  . அவர்கள் எதிர்பார்ககவில்லை . நாராயணசாமியின் அணுக்கன் பாண்டியன் என்னுடன் இருந்தான் . அவனும்மே அது புது தகவல் என அவன் திகைப்புறுவது தெரிந்தது . ஏன் எனக்கே கூடதான் . நான் நாராயணசாமியுடன் இணைக்கமாக செல்ல முடிவெடுத்து விட்டதாக அனைவரும் நினைத்தனர் . அது முன்னிலும் அந்த கூட்டத்தை இறுக்கமடைய வைத்தது . நான் என் அகத்தை வெளிக்காட்டாமல் அவர்கள் எனக்கு இப்போது கொடுக்கும் புது அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ளத் துவங்கினேன் . அதுவும் அரசியல்தான்.


ஞாயிறு, 12 ஜூன், 2022

அடையாளமாதல் * நம்பிவிடுகை *

 ஶ்ரீ:



பதிவு : 625  / 815 / தேதி 12 ஜூன்  2022



* நம்பிவிடுகை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 21.





நாராயணசாமியின் தீவிர ஆதரவாளன் பாண்டியன் . தினம் என்னை சந்திக்கவருபவர்களில் தவறாமல் இடம் பெறுபவன் . மாதத்தில் மூன்று நான்கு நாள் புதுவைக்கு வரும் நாராயணசாமி புதுவையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . அவர் புதுவைக்கு வரும் சமயத்தில் அவருக்கு உதவியாளனாக இருக்கும் நேரம் போக மற்ற நாட்களில் என்னைப் பார்க்க வந்துவிடுவான். சண்முகத்தை சந்திப்பதில்லை . நாராயணசாமி மீதிருக்கும் கசப்பை அவர் தன்மீது காட்டுவதாக என்னிடம் சொல்லியிருக்கிறான். அவ்வளவு எளிய உணர்சிகளை பிறர் அறிய வெளிக்காட்டுபவர் அல்ல அவர் . அது உண்மையா என எனக்குத் தெரியாது . அவனது நெஞ்சுக்கு அப்படி தோன்றியிருக்கலாம்.நான் நாராயணசாமியை பிறர் போல வந்து சந்திக்க வேண்டும் என்பது அவன் என்ன பேசினாலும் அதன் மையக் கருவாக இருக்கும். என்ன காரணத்தினாலோ அவரை சந்தித்த போது எனக்கு எதிர்மறையான உணர்வுகளை அடைந்ததால் அவரை சென்று சந்திப்பது எனக்கு உகப்பதாக இல்லை . இது ஒருவேளை சண்முகம் குறித்து பாண்டியன் சொன்னது போல இதுவும் இருக்கலாம்.நான் தர்க்கப்பூர்வமாக அதை நிறுவிக் கொள்ள முயன்றிருக்கிறேன்.


நாராயணசாமி புதுவை வந்திருப்பதை கட்சியை சேர்ந்தவர்களும் அவரை சந்திக்க விரும்பும் அனைவரும் அன்றைய தினசரிகளில் வந்திருக்கும் அவரது பேட்டி அல்லது அறிக்கை மூலமாக தெரிந்து கொள்கிறார்கள் . அதே போல ஒரு சில நாள் கழித்து அது போன்ற செய்தியை காண நேர்ந்தால் அவர் தில்லி கிளம்பிவிட்டார் என புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அந்த செய்திகள் அதுக்காகவே என சிலர் பகடியாக சொல்லுவதுண்டு. பாண்டியனின் வற்புறுத்தலால் அவரை சிலமுறை அவரது வீட்டில் சந்தித்திருக்கிறேன் . அங்கு அதுபோல கட்சியை சேர்ந்த பலருடன் தனிப்பட்ட முறையில் சந்திக்க வந்த கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் அவரை சந்திக்க காத்திருப்பதை பார்த்திருக்கிறேன் . நாராயணசாமி வழக்குரைஞராக தொழில் செய்பவர். அது அவரது சட்ட அலுவலகம் . அவரது ஜூனியர்கள் நிறைய பேர் அங்கு அமர்ந்து அவரது வழக்குகளை கவனித்துக் கொள்கிறார்கள்


நாரயணசாமியின் அலுவலகம் எல்லையம்மன் வீதியில் உள்ள அவரது வீட்டு கீழ் தளத்தில் அமைந்திருந்தது . அது மிக பழையபாணி கட்டிடம்ரோட்டில் இருந்து இரண்டடி உயரத்தில் உயரத்தில் இருந்தது . பழைய கொலாப்ஸபல் கேட் என்கிற குறுக்குவாட்டில் இழுக்கும் இடம் அடைக்காத கேட். அதைத் தாண்டி சிறிய நடை அதன் இடப்புறம் செங்குத்தாக முதல் மாடிக்கு செல்லும் படிகட்டு . அந்த வீடு மீளுவாக்கம் செய்யப்பட்டதை சொன்னது . சிறிய நடையைத் தாண்டி ஒரு பெரிய வரவேற்பறை எதிரே இடது மூலையில் அவரது சந்திக்கும் அறை . வந்திருந்த கட்சிப் பிரமுகர்கள் தனித்த அறையில் அவரை ஒருவர் பின் ஒருவராக சென்று சந்தித்துக் கொண்டிருந்தனர் . எனக்கு அது ஒவ்வாமை கொடுத்தது . எனக்கு அவரிடம் சென்று பேசி ஆகவேண்டியது ஒன்றுமில்லை . பாண்டியனின் நச்சரிப்பு தாங்கமால் வந்திருக்கிறேன் . இந்த முறையை கட்சி அரசியல் சார்ந்த தலைவர்கள் யாரும் புதுவையில் கடைபிடிப்பதில்லை . அனைவரும் பொது வரவேற்பறையில் அமர்ந்திருப்பார்கள். சந்திக்க வருபவர்கள் தனியாக பேசிவேண்டும் என்றால் மட்டும் பக்கத்திலிருக்கும் தனியறைக்கு செல்வார்கள் மற்றபடி சந்திக்க வருபவர்கள் அனைவருக்கும் மத்தியில் பொதுவாக அது நடக்கும் . ஆனால் இங்கு நாராயணசாமியை பொதுவில் சந்திக்க இயலாது


பாண்டியன் அவரது உதவியாளன் போல அங்கிருந்து கொண்டு அவரை சந்திக்க வருபவர்களை ஒருங்கு செய்து கொண்டிருப்பான் . அங்கு அது அவனக்கான இடம் . நான் அங்கு வந்த சில நொடிகளில் என்னை அவரை சந்திக்க நேரம் ஒருங்கிவிடுவான் . முதல்முறை அவரை தனியாக சந்தித்தபோது . தனிப்பட்டு அவரிடம் பேச வேண்டிய தகவல்கள் என என்னிடம் ஒன்றும்மில்லை.என்ன பேசப் போகிறேன் என திகைத்திருந்தேன் . பாண்டியன் என்னைப் பற்றி அவரிடம் என்ன சொல்லியிருப்பான் என எனக்குத் தெரியாது . முதல் முறை சென்று சந்தித்த போது நட்புடன் கைகுலுக்கி பின் பாண்டியனை பார்க்க அவன் அந்த அறையைவிட்டு வெளியே சென்றுவிட்டான் . அவரே தொடங்கினார். பிற தலைவர்கள பற்றிய தகவல்களை ஆர்வமாக சேகரித்துக் கொண்டார். அது அவரது பாணியாக இருக்க வேண்டும். அவரை சந்திக்க சொல்பவர் ஆர்வமிகுதியால் பல உள் தகவல்களை அவருக்கு சொல்லாவார்கள் . நாராயணசாமி தான் ஊரில் இல்லாத போது அரசியல் ரீதியில் புதுவையில் நடந்த அவருக்கு சொல்லாமல் விடபட்ட தகவல்களை அவர்கள் வழியாக வாங்கி நிரப்பிக் கொள்கிறார் . அதே ஆர்வத்தில் அவர்கள் மீளவும் அவரை வந்து சந்திக்கும் போது பேசும் ஆரவமற்றவராக தன்னை வைத்துக் கொள்கிறார் . இரண்டுமுறை சந்தித்த பிறகு அவரது உளநிலை உருவாக்கிய ஒவ்வாமை காரணமாக அங்கு செல்வதை தவிற்த்துவிட்டேன்


உடனடி பலன் இல்லாத எதையும் செய்யத் தயாராக இல்லாதவராக அவரை அறிகிறேன். அவர் வேறேதோ ஒரு உலகில் வசிப்பவர். அவருக்கு இந்த உலகம் வெறும் தகவல்களால் ஆனது . அதைத் தவிற அவர் இங்கிருந்து பெற்றுக் கொள்ள ஒன்றுமில்லை போதுமென்ற அளவு கேட்டுவிட்டதாக உணர்ந்து விட்ட பின்னர் அவர்களை  இரண்டாம் முறை அவர் சந்திக்க விரும்புவதில்லை. அவரை தனது தலைமையாக கொண்ட பாண்டியனை எண்ணி வருந்தினேன் . அவனும் ஒருநாள் இதை உணர்ந்திருக்க வேண்டும். சில காலத்திற்கு பிறகு அவரை விட்டு விலகி வேறு கட்சிக்கு சென்றுவிட்டான். ஒரு நடாளுமன்றத் தேர்தல் வீதிப் பிரச்சாரத்தில் அவன் பேசிக் கொண்டிருப்பதை பார்ததேன். அவன் சார்ந்த தனது கட்சி வேட்பாளரை எதிர்த்து நிற்கும் நாராயணசாமி பற்றி மெட்டை வசவுகள் . பின்னர் ஓரிரு வருடங்களுக்கு பிறகு நாராயணசாமிடம் திரும்பச் செனழறு சேர்ந்திருப்பதாக கேள்விப்பட்டேன். பின்னர்  நிராதராவாக கைவிடப்பட்டவனாகி அவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் ஒரு நாள் வந்தது .


வியாழன், 2 ஜூன், 2022

அடையாளமாதல் * எதிர் காலமெனும் நம்பிக்கை *

 


ஶ்ரீ:



பதிவு : 624  / 814 / தேதி 02 ஜூன்  2022



* எதிர் காலமெனும் நம்பிக்கை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 20.






ஹோட்டல் சற்குருவில் நிகழ்த்த திட்டமிட்டிருந்த பயிற்சி முகாம் ஆலோசனைக் கூட்டம் நடபெற இருந்த ஒருமணி நேரத்திற்கு முன்பாக சண்முகம் அந்த கூட்டத்தில் தான் கலந்து கொள்வதைவிட நாராயணசாமி கலந்து கொள்வது எனது எதிர்காலத்திற்கு நல்லது என்று கூறிவிட்டார். அதன் பின்னணி அரசியலை நான் உணர்ந்திருந்தாலும் இதன் வழியாக அவர் எனக்கு என்ன சொல்ல வருகிறார் எனப் புரியவில்லை. மேல்மட்ட விளையாட்டில் எப்போதும் எளிதில் பிடி கிடைப்பதில்லை . ஆரம்பத்தில் நான் அதற்கு சம்மதிக்காமல் மறுத்து ஒரு கட்டத்தில் அதனால் பயனில்லை என புரிந்தது . சண்முகம் தன் முடிவில் உறுதியாக இருந்தார் . இறுதியில் அவர் சொன்னதை ஏற்று நாராயணசாமியை அழைப்பதாக சொல்லிவிட்டு வெறுப்புடன் ஹோட்டலுக்கு புறப்பட்டேன்


போகும் வழியில் என்னுடன் இருந்த கோபாலிடம் என்னை ஹோட்டலில் இறக்கிவிட்டு, நாராயணசாமி வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வரச் சொன்னேன் . முதலில் அதிர்ந்து மறுத்தான் . நான் அவரை நேரில் சென்று அவரை அழைக்க வேண்டும் அது தான் முறை , இது தேவையற்ற சிக்கலை உருவாக்கும் என சொன்னான் . இனிமேல் புதிதாக உருவாக ஒனழறுமில்லை . நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். எனக்கும் அவருக்குமான உறவு இனி எந்த வகையிலும் சுமூகமாக இருக்கப் போவதில்லை . இந்நிலையில் நான் முயற்சிக்கும் எந்த சமாதனமும் அதற்கு உதவாது . அவன் சென்றேயாக வேண்டும் என சொல்லி ஹோட்டலில் இறங்கிக் கொண்டேன். எவ்வளவு யோசித்தும் தலைவர் சொன்னதை என்னால் உருவகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. மிக வருத்தமாக உணர்ந்தேன். அந்தக் கூட்டம் நடத்த இருந்த உற்சாகம் முழுமையாக வடிந்துவிட்டிருந்தது


இன்று பார்க்கையில் அது முதல் கோணல். அங்கிருந்து எல்லாமே தவறான முணைக்கு சென்று அமர்ந்தன. அதுவரை அடைந்த வெற்றிகள் தற்காலிகமானது என்கிற சொல்லுக்கு அன்று அர்த்மிருந்தது . ஒரு தவறு அதை அடுத்து முறை சரி செய்து விடலாம் . எதிர்காலம் என ஒன்று நீண்டு கிடந்தது . அதில் எத்தகைய தவறுகளையும் திருத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது . வெற்றியும் அர்த்தமின்மையும் இன்று புரிந்து கொண்ட அளவு அன்று யாராவது என்னிடம் சொல்லியிருந்தால் அவரைப் புண்ணகையுடன் கடந்து சென்றிருப்பேன். சண்முகம் கட்சியின் அடையாளம் . எனக்கு கட்சியின் அடைப்படையிலான கையகப்படுத்த வேண்டியது சந்திதேகத்திற்கிடமில்லாத தலைமை யார் என சொல்லியாக வேண்டிய நிர்பந்தம் இருந்தது . என்னிடம் காலமல்லை.

நான் அடுத்தடுத்து செய்ய திட்டமிட்டிருப்பதை செயல்படுத்த சண்முகம் இங்கு என் அருகில் அமர்ந்திருப்பது என்னளவில் மிக முக்கியம்


புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர் காங்கிரஸிற்கு முதல் முறையாக தங்கள் தொகுதிகளை பிரதிநிதிப்படுத்தும் சரியானவர்கள் அங்கு வந்திருக்கிறார்கள். நான் சாத்தியப்படுத்திய கனவு அது. அதன் முந்தைய  தலைவர்கள் முயன்று அதன் வெறுமைக்குள் சென்றமர்ந்தனர். இதோ அதை நான் சாத்தியப்படுத்தி இருக்கிறேன். இந்தக் கூட்டம் வழியாக நான் அவர்களுக்கு சொல்ல நினைத்தது எந்தளவு வெற்றி பெறும் எனத் தெரியவில்லை . ஆனால் இவர்களை சண்முகம் நேரடியாக பார்ப்பது எனக்கு மிக முக்கியமானது . அவர் அப்படிப்பட்ட கனவுடன் புதுவைக்கு வந்தவர். அதன் பெருட்டு அவர் வாழ்நாளெல்லாம் சீண்டப்பட்டார் . அவருக்கு தெரியும் இந்த கனியின் விலைமதிப்பற்றதைப் பற்றி. இந்த கூட்த்தில் இருப்பவர்களில் பலர் அவருக்கு முன்பே அறிமுகமானவர்கள் . என்னைப் பற்றிய அவரது தயக்கங்கள் என ஏதாவது மிச்சம் இருந்தால் இந்தக் கூடுகை அதை கலந்துவிடும். இன்று இது முழு அமைப்பாக உருவாகி விட்டது என அங்கீகரிக்க வேண்டியவர் அவரே. அவரைத் தவிற பிற எவருக்கும் இது சிறு மனிதத் திரள். அவருக்கு அது அளிக்கும் அரசியல் ரீதியாக கணக்கும் அர்த்தமும் பிற எவருக்கும் உருவாகப் போவதில்லை. நாராயணசாமிக்கு போன்றவர்களுக்கு இது மிக சிறிய கூட்டம் இது நான் சண்முகத்தை ஏமாற்ற நினைக்கும் சிறுபிள்ளை விளையாட்டு . அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பில் இருக்கும் தான் வட இந்தியாவில் சந்தித்த ஆயிரமாயிரம் தொடர்களுக்கு முன் இது ஒன்றுமில்லை என தருக்கி வந்தமர்ந்தால் அந்த நினைப்பே எனக்கும் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த அமைப்பிற்கும் எதிராகவே முடிவும் .


தில்லி தலையகத்தில் அமர்ந்து கொண்டு கருத்தியல் ரீதியில் கொள்கை முடிவெடுப்பவர்களுக்கு இங்கு ரத்தமும் சதையுமாக அமர்ந்திருப்பவர்களின் வாழ்வில் அரசியில் எந்த வகையில் ஊடுருவி இருக்கிறது. இதில் உருவகப்படுத்துவது என ஒன்றில்லை என்கிற மேட்டிமையால் ஆவது ஒன்றுமில்லை . தலைவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் இழைக்கும் சிறு அரசியலின் பிழை முடிவுகள் இவர்களின் நாளை காலையை இருட்டடியச் செய்துவிடும் . தலைவர்களின் தலைவர் என தருக்குபவர்களுக்கு தொண்டர்களின் தலைவர்களின் மத்தியில் இங்கு பேசப்படும் மொழியும் அரசியலும் புரியாது , ஒருவேளை இளிவரலாகக் கூட தோன்றலாம். இந்த மண்ணில் இருந்து வேரரறுந்து போன ஒருவருக்கு இங்குள்ளவர்களின் அரசியல் புரியப் போவதில்லை.அனைத்தையும் விட அரசியலில் முதல் நிலை ஒழுங்கமைவதற்கு முன்பான இங்கு பல கட்டத் தலைமை இருப்பதாக பிழையாக புரிந்து கொள்வதும். அனைவரயும் அனுசரிக்கவேண்டும் என்கிற பிழைப்புரிதல் இந்த அமைப்பை எடுத்துச் செல்வதில் சவால்களை உருவாக்கிவிடும் .


என் பக்கத்தில் அமர நினைத்து இதோ என்னை விடாது சுற்றி சுற்றி வரும் பாண்டியன் தன்னை தீவிர நாராயணசாமியின் ஆதரவாளனாக முன்வைப்பவன். அவனது உண்மை நிலை என்ன என அவனுக்கும் தெரியும். இருப்பினும் அதை பிறர் காண தொடர்ந்து முன்வைத்தபடி இருப்பவன் . அது அவனது அரசியல் என நிகழ்ந்தாலும் அதை மீள மீள முன்வைத்தபடி இருப்பவன் . ஒரு நாள் தன்னை நாராயணசாமி முழுமையாக அங்கீகரிப்பார் என நம்புகிறான்.வல்சராஜ் தலைமையில் புதிய நிர்வாகக் குழு நியமிப்பது குறித்து பரிசீலனையில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் விடாமல் என்னை சந்தித்து தன் பெயரை அந்தப் பட்டியலுக்கு சிபாரிசு செய்யச் சொன்னான். அது  நான் முன்பே ஊகித்திருந்தேன. நாரயணசாமியின் அரசியல் அப்படிப்பட்டது . அவனிருந்த உண்மை நிலையை புரிந்து கொண்டேன். அரசியலில் மிக இயல்பானது அதுநாராயணசாமியின் அணுக்கான உணக்கு வல்சராஜ் சிகப்பு கம்பளம் விரிக்கத் தயாராக இருக்கும் போது என் சிபாரிசுக்கு என்ன பொருள்என்றதற்கு . நாராயணசாமி தன்னை சிபாரிசு செய்யாமாட்டார் என்றான் . நான் அவனிடம் அவன் தன்னை பிறர் முன்பாக உருவகிக்க நினைக்கும் இடம் ஒரு நாள் நாராயணசாமியால் தகர்க்கப்படும் என எச்சரித்திருந்தேன்


அவன் என்னை நாராயணசாமி அணுக்கர்களின் நிரையில் கொண்டு வைக்க என்னுடன் எப்போதும் முயன்று  கொண்டிருப்பான் . நான் நாராயணசாமிக்கு அணுக்கமாவது தன்னுடைய நலனுக்காக என பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறான். அவன் செயல்பாட்டில் நம்பிக்கை கொண்டவன் . நாராயணசாமியின் அணியில் செயல்பாடுகள் என எதுவும் இல்லை . அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலம் தொடங்கி அவரது செயல்பாடு என்பது தில்லியில் நிலை கொண்டிருந்தது . அது எந்த மாதிரியானவை என யாருக்கும் தெரியாது . நான் அறிந்த வரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத்தின் அணியில் ஒரு நிலையில் இருந்தார் அவருக்கான அரசியல் அல்லது பணிநிமித்தமான உத்தரவுகள் அவரிடமிருந்து பெற்று அதை செயல்படுத்துபவராக அவர் இந்தியவின் அனைத்து மாநிலங்களினூடாக பயணம் செய்தபடி இருந்தார். அந்தப் பயணத்தில் அவருக்கு அரசு அதிகாரிகள் பெரும் தொழிலதிபர்கள் கட்சிக்கு அப்பாற்பட்ட தலைவர்கள் என இந்திய பல வேறு துறையைச் சேர்ந்த ஆளுமகைள் அறிமுகமாயினர்.அவர் அவர்களை அனைவரின் கணக்குகளின் நன்மைக்கு செயல்பட்டுக் கொண்மிருந்தார். இதற்கு பின்னால் குலாம்நபி ஆசாத் இருந்தார்


புதிய பதிவுகள்

“கீதா முகூர்த்தம்” - 8 . * திகைக்கும் தெய்வங்கள் *

  25.03.2023 “ கீதா முகூர்த்தம் ” -  8 . * திகைக்கும் தெய்வங்கள் * “ ஆஸ்திகன் திரும்பி ஜனமேஜயரிடம் “ மாமன்னரே , சத்வ , ரஜோ , த...