https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 29 மார்ச், 2021

அடையாளமாதல் * சாத்தியக்குறுகள் *


ஶ்ரீ:



பதிவு : 569  / 759 / தேதி 29 மார்ச்  2021


* சாத்தியக்குறுகள்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 47.





அரசியல்வெளி இன்று வேறொரு தலைமுறைக்கானதாக மாறியிருப்பதை பார்க்கவும் புரிந்து கொள்ளவும் முடிகிறது . ஒவ்வொரு பத்தாண்டுகளில் அது தீவிர மாறுபாட்டை அடைந்து கொண்டே இருக்கிறது . உற்று நோக்குபவர் அன்றி பிற அனைவரும் அதை நோக்கி குறை சொல்லும் இடத்திலேயே இருக்கிறார்கள் என்பது வேடிக்கையானது . இது எப்போதும் உள்ளதுதான் அவை கால மாற்றத்திற்கு ஏற்ப தீவிரமடைந்தபடி இருப்பவை . என்னுடைய பார்வையில் இருந்து இன்று நிலவும் இந்த அரசியல் நகர்வு சிக்கல் மிக தற்செயலான ஒன்றிலிருந்து துவங்கியது . அரசியல் பயனாளிகள், தவிற்க இயலாதவர்கள் மற்றும்  கொந்தளிப்பானவர்கள் என அவர்கள் மூன்று அடுக்குகளில் உள்ளவர்கள். அரசியலில் திறமையற்ற தலைமை வந்து அமரும் போதும் அல்லது அவர்களின் தவறாக முடிவுகளினாலும் கசந்து சிலர் வெளியேற , பலர் ஒதுங்கிக் கொள்கிறார்கள் . அப்போது உருவாகும் பெரும் வெற்றிடத்தை நிரப்ப மூன்றாம் அடுக்கு மனிதர்கள் உள்நுழைகிறார்கள் தங்களது மிதப்பான செயல்கள் மூலம்  பிறரின் வெளியேற்றத்தை மேலும் துரிதப்படுத்துகிறார்கள். சுயலாபத்தை வெளிப்படையாக முன்வைப்பது பற்றிய கூச்சம்மில்லாதவர்களாக எப்போதும் எதிலும் கொந்தளிப்பவர்களாக இருப்பவர்கள். முதல் இரண்டு நிலைத் தலைவர்களின் உதவிகளை அடைந்தவர்கள் என்பதால் அவர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு எதிரில் தங்களின் குறைகளை முனுமுனுப்பாக தயக்கத்துடன் ஒரு காலத்தில் முன் வைத்தவர்கள் பிற மூத்த தலைவர்களை கண்டதும் அடக்கி வாசிப்பவர்கள் . அத்தகையவர்களை கொண்டு கட்சியின் அனைத்து இடத்தையும் நிரப்புகின்ற போது  அரசியலின் அடிப்படை கோட்பாடுகள் விபரீத உச்சத்தை அடைகின்றன . உச்சக்கட்டக் குறுங்குழு மனநிலை  தவறில்லை என்கிற பார்வையை அது ஒரு புள்ளியில் நியாயப்படுத்திவிடுகிறது . பின் யாரும் யாருடனும் இணங்கிச் செல்வதே கூட  குற்றமெனப் பார்க்கப்படுவது தொடங்கி, முரண்படுவதை  செயல்பாடுகள் என நினைத்துக் கொள்வதில் முடிகிறது . ஆகவே அவர்கள் தங்கள் எண்ணங்களை ஓங்கிச் சொல்கிறார்கள் . எல்லா இடத்திலும் முட்டி மோதுகிறார்கள் . அனைத்து ஒளியின் கீழும் சென்று தயக்கமில்லாமல் நிற்கிறார்கள் . சர்சைக்குரிய, நியாயமற்ற கருத்துக்களை கூச்சமில்லாமல் ஆக்ரோஷத்துடன் முன்வைக்கிறார்கள் . அவர்களின் செய்கைகளால் எஞ்சி இருக்கும் மிச்ச மிதவாதிகளும்  கசப்படைபவர்களும் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள் . அகில இந்திய காங்கிரஸின் இன்றைய நிலை அதற்கு சிறந்த உதாரணம்.


ஒரு பெரும் மாற்றத்தை நிகழ்த்தும் செயல்பாடு கூட்டு நனவிலியில் நிகழ்வது . இந்தியா முழுவதையும் காற்றென இணைப்பது . சிறு சிறு மாறுபாடுகளுடன் நாட்டின் ஒட்டு மொத்தமாக அனைவரையும் ஒற்றை மனம் என்கிற கருதுகோளில் இணைப்பது . அதன் துவக்கத்தை 2001 களில் பார்த்திருக்கிறேன் ஆனால் வெகு சீக்கிரத்தில் அது தனது உச்ச இடத்தை அடையக்கூடும் என அவதானிக்க தவறினேன் . எனது இந்த கூற்று பொதுவாக வெளியேவர்கள் சொல்லும் குறையா  என்றால் , இல்லை . எனக்கு எதன் மீதும் எந்த வருத்தமும் காழ்ப்பும் இல்லை அனைத்திலிருந்தும் எனக்கான புரிதலை நோக்கிய பார்வையினூடாக இவற்றை இங்கிருந்து  தொகுத்துக் கொள்ள முயல்கிறேன் . 1995 களில் நின்று கொண்டு எதிர்வரும் 2005 களில் எங்களுக்கான இடம் எப்படி எப்படி உருவாகி வரும் என்பது பற்றிய எனது மதிப்பீடுகள் ஏறக்குறைய சரியாக இருந்தது ஆச்சர்யமில்லை . நிகழும் போது அதை ஒட்டி எழுவிருக்கும்  முரண்பாடுகள் அதனூடாக எழும் விலகல்கள் மற்றும் துரோகங்கள் குறித்து நான் ஊகித்திருந்த காலத்தைப் பற்றிய கணிப்புதான் தவறாகிப்போனது .  2010 களில்  நடக்கக் கூடியது என நினைத்திருந்தது பத்து வருடங்களுக்கு முன்னராக அதாவது 2001 களில் துவங்கி 2005 களில் வேறொன்றாக மாறி முடிவுற்று நின்றதால் அந்தக் கனவு கலைந்து போனது . இளம் தலைவர்கள் என நான் உருவாக்கியவர்கள் எல்லோருக்குமான கதவு திறக்கும் காலத்திற்கு சிறிது காத்திருப்பார்கள் என்று கணித்திருந்தேன். ஆனால் காத்திருக்க பழகாத ஒரு தலைமுறை உருவாகி இருந்ததை இன்று இங்கிருந்து பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. அன்று நினைத்ததை நோக்கிய மிகச் சரியாக நகர்விற்கு எனக்கு தேவை சிறிது அவகாசம் . அது கிடைக்காமல் போன வருத்தம் மட்டுமே அன்று எஞ்சி இருந்தது. சில காலம் அது குறித்து வருத்தமாக இருந்தாலும், அந்த அரசியல் முன்னெடுப்புகளும் திட்டங்களும் தனிப்பட்டஉனக்கானது இல்லைஎன்று நம்பினால்மௌனமாக வெளியேறுஎன எனக்கு நான் சொல்லிக் கொண்டே அனைத்திலிருந்தும் வெளியேறினேன் . அது மீள மீள எனக்கு நானே சொல்லிக் கொண்டமெய்மை சொல்லைபோல அது எல்லாவற்றிலும் இருந்து என்னை விடுவித்தது.


1997 களில் 2010 பற்றி எனக்கு ஒரு அரசியல் கனவு இருந்தது . அது கட்சி மூத்த பொதுச் செயலாளர் காந்திராஜுடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் அது  சட்டென உருவாகி வந்தது . இன்றளவும் அந்த கருதுகோள் சரி என்றே உணர்கிறேன் . காந்திராஜ் புதுவையின் புகழ்பெற்ற குற்றவியல் சட்ட நிபுணர் . சிறந்த அரசியல் ஊகவியளாலர் சிந்தனையாளர். 1996 தேர்தல் களத்தில் மிக எளிதில் தோற்கடிக்கபட்டு அமைச்சர் பதவியை இழந்தார். காங்கிரஸ் ஆட்சி அமைக்க கூடுதலாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேவை என்கிற நெருக்கடியில் பல ஜாம்பவான்கள் தோற்றுப்போனார்கள் . கட்சியின் கள செயல்பாட்டாளர்கள் தேர்தலில் வெல்லும் மற்றும் தோற்பவர் குறித்த பட்டியலில், தோற்பவர்கள் நிரையில் காந்திராஜ் பெயர் முன்னிலையில் இருந்தது . அவர் தோல்வியுற இருப்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் . காந்திராஜ் கூர்மதியாளர் அரசியல் கணிப்பாளர் என்றாலும் அவரின் தன்னுடை களம் குறித்து கொண்டிருந்த நம்பிக்கை  சற்று வினோதமானது . தனது ஊகங்களை ஏன் அவர் தனக்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை அல்லது அவரில் அது ஏன் எடுபடவில்லை என நினைப்பதுண்டு . ஒருவேளை தலைவர்களையும் காலத்தையும் கணிக்க இயல்வது போல மக்களை புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல போல . அவருடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் அந்த ஊகத்திற்கு சட்டென வந்து சேர்ந்தேன். அன்று புதுவை அரசியலில் கடும் தேக்க நிலையும்  எப்பக்கமும் நகர முடியாத சூழலால் முதன்மை அரசியல் தலைவர்கள் மெல்ல தங்களது செல்வாக்கை இழந்து கொண்டிருந்தார்கள் . அது ஒரு மெல்லிய புகை மூட்டம் போல  எல்லா கட்சியையும் சூழ்ந்து  தலைவர் தொண்டர் என்னும் மேல் கீழ் அடுக்குகளை காலாவதியாகிக் கொண்டிருந்து . எதிர் காலத்தைக் குறித்து நம்பிக்கை கொள்ள ஏதும் இல்லை என்கிற திகைப்புடன் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர்குழந்தை பிறக்க போகிறது இன்றைய அரசியலின் ரணத்திற்கு அதுதான் காரணம்என்றார். அவர் அதைக் கவித்துவமாக சொன்னாலும்  என்னை சொடுக்கிய விசை அது . அவர் சுட்டும் வெற்றிடத்தையும் அதில் உள்ள பிரகாசமான வாய்ப்புகளையும் என் ஆழ்மனம் முன்பே ஊகித்திருந்தது . அவர் சொல்லி முடித்ததும் அனைத்து காய்களும் அதனுள் சட்டென நுழைந்து அமர்ந்து கொண்டன . அடுத்த வழிநடத்த போவது யார் என்கிற  கேள்வி அர்த்தமற்ற தன்மையும் இனி அது போல நிகழப்போவதில்லை , நீ எதிர் நோக்கும் ஆளுமை அல்லது தருணம் எழுந்து வருவது எப்போதைக்குமாக இல்லை . நீ உனக்கான பாதையை உருவாக்கி கொள் உடன் பயணிக்க இருப்பவர்களை தேர்ந்தெடு இனி வழிநடத்துபவர் இல்லை எதிர்பார்பது நிகழப்போவதில்லை , தெளிவான திட்டமிடலே அனைத்தையும் வழிநடத்தும் என்கிற குரல் உள்ளிருந்து எழுந்தவுடன் அது ஒரு முதிரா சிறுவனின் சாகசக் கனவு போல அது தொடர்ந்து விரிந்து கொண்டே இருந்தது நிகழ்கால சவால்களை எதிர்க்கத் துணிந்தேன் பிறர் எதிர்க்க அஞ்சுபவரை உறுதியுடன் எதிர்த்து நின்றது போன்றவை இன்று மெல்லிய புன்னகையை கொடுத்தாலும் அன்று அவை ஆவேசமான நாட்கள் , புரிதல்கள் உச்சகட்ட கற்றல்கள் என எங்கும் பரபரவென்றிருந்தேன் .


வெள்ளி, 12 மார்ச், 2021

அடையாளமாதல் * அமைப்பின் நிலை *

 



ஶ்ரீ:



பதிவு : 568  / 758 / தேதி 12 மார்ச்  2021


* அமைப்பின் நிலை



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 46.






இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கட்சியின் மூத்த தலைவர்களின் அனைத்து தரப்பில் இருந்தும்

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் . ஆகவே அங்கு  சமநிலையை உருவாக்கவே முடியாதபடி ஒருவருக்கு ஒருவர் எதிர் திசையில் வைக்கப்பட்டு  இருந்தனர் . பல கருத்துக்களில் விலகி இருந்தாலும் என்னை முற்றாக புறக்கணிப்பதில் அனைவரும் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தனர் . இளைஞர் அமைப்பின் சண்முகம் அணியிலேயே கூட எனக்கு எதிர்பான நிர்வாகிகள் இருந்தனர் . நான் முற்றும் விலகிய மனப்பான்மை கொண்டிருந்ததால் உள்பூசலில் எந்த ஆர்வமும் இல்லாதிருந்தேன் . ஆனால் தில்லியில் இருந்த போது நிகழ்ந்தது அனைத்துக் கோணத்திலும் இருந்தும் ஒரு பாதை சுட்டப்படுவதை உணர்ந்தேன் . வழக்கம் போல அது எனது இலக்கானது  .மனதிற்கு மிக அனுக்கமான ஒன்று . அமைப்பை ஒருங்கு திரட்ட எனக்கிருந்த வாய்ப்பை சரியாக செய்வதில் இருந்தே எனக்கான இடம்.தில்லியில் உள்ள புதுவை விருந்தினர் இல்லத்தில் நான் நடப்பதை கவணித்துக் கொண்டிருந்தேன் .சில மணிநேரம் அது நடந்து முடிந்தது . வல்சராஜ் வெறுப்பின் உச்சத்திலிருந்தார் . அது குறித்து எவரிடமும் பேச விரும்பவில்லை என தெரிந்தது . நான் கமலக்கண்ணனை பத்து வருடங்களுக்கு மேலாக அறிவேன் . மிக எளிதில் உணர்ச்சி வசப்படுபவராக , முன்கோபம் உடையவராக , சட்டென முடிவு எடுத்து செயல்படுபவராக இருந்தார் . அவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது தாமோதரன் . அவர் எதிர்பாரது மரணித்தது கமலக்கண்ணனுக்கு பெரிய இழப்பு . ஆரம்பம் முதலே கமலக்கண்ணன் எனக்கு எதிரான மனநிலை கொண்டவராக இருந்தார் . பாலன் என்னை அவருக்கு எதிராக  வளர்த்தெடுப்பதாக அவர் நினைத்தது அந்த கசப்பிற்கு காரணம். அந்த மனக்கசப்புக்களை கலைய தாமோதரன் என்னுடன் நடத்திய உரையாடல்கள் கணக்கில்லாதவை . ஒவ்வொரு முறையும் தாமோதரன் முன்வைத்த அனைத்திற்கும் நான் உடன்பட வேண்டி இருந்தது . எனக்கும் கமலக்கண்ணன் என்னை பற்றி கொண்டிருந்த கசப்புக்களை களைய விரும்பினேன் . கடைசிவரை அது நிகழவேயில்லை .தாமோதரன் இல்லாத சூழலில் சொந்த முடிவுகளை எடுக்கத் தொடங்கியிருந்தார் .முறையான வழிகாட்டுதல் இல்லாதது அவரை தடுமாறச் செய்திருந்தது . வல்சராஜ் அந்த சந்தர்ப்பத்திற்கு பிறகு நிர்வாகிகளை சந்திப்பதை  நிறுத்திக் கொண்டார்


அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டாவிற்கு  நரசிம்மராவின் வெளிப்படையான ஆதரவிருந்தது.1996 களில் நரசிம்மராவ் வீழ்ந்த போது அவரும் வீழ்ச்சியடைந்தார் . நீண்டநாட்கள் காத்திருந்த மூத்த தலைவர்களின் தலையீட்டால் அமைப்பு சிதையத் துவங்கியது. வாரிசுகளும் தலைவர்களின் ஆதரவாளர்களும் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டு இயல்பான தலைவர்கள் உருவாவது தடுக்கப்பட்டது. இது பல காலம் நடந்து வந்ததுதான் என்றாலும் இம்முறை கட்டுப்பாடில்லாமால் ஆனது  . அகில இந்திய காங்கிரஸ் அமைப்பிற்கு இளைஞர் காங்கிரஸ் நாற்றங்கால் போல .தலைவர்கள் தொண்டர்கள் சமூகத்தில் இருந்து உழைப்பினால் முளைப்பவர்கள் . அந்த இரண்டாம் நிலை தலைவர்கள் இயல்பாக உருவாகி வரும் வழிகள் தூர்க்கப்பட்டது .அந்த இடங்களை கட்சியை அறியாத  எந்த அடிப்படையும் இல்லாத மேல்தட்டு நியமன இளைஞர்கள் வேலை வாய்ப்பை போல நிரப்பினர் . காங்கிரஸின் இன்றைய இழிநிலைக்கு அதுவும் ஒரு காரணம் . அரசியல் புறவெளியில் நிகழ்வதற்கு முன்னர் மனதில் நிகழ்வது.   இருப்பும் , எதிர்காலமும் கனவுகளால் ஆனவை .இங்கு கனவுகள் எப்பொழுதும் கனவுகள் மட்டுமே . எந்த உயர்பதவியை அடைந்தவர்களும் அதற்கு விலக்கல்ல . அரசியலில் மனநிறைவடைந்தவர்கள் என எவரும்  இல்லை என்பது அந்த ஆடலின் வனோத ஊழ்  . செய்ய நினைத்ததை செய்மால் போனவர்கள் அதிகம் . தனக்கான இடம் கொடுக்கப்படவில்லை என மனப் புழுக்கத்தை வழியாக கனியும் வாய்ப்பை அடைந்த இளைஞர்கள் பின்னர்தலைவர்களாயினர்  , பிறர் மனம்குறுகி சராசரிக்கு கீழே எதையும் செய்பவர்களாக திரிபடைந்து விடுகிறார்கள் . அரசியலில் அவமானப்படாதோர் இருக்க முடியாது . அந்த அனுபவத்தில் இருந்து வெளியேறக் கற்காதவர்கள் சொந்த நரகத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள் . அவமானங்களினால் குமுறி தங்களை அதில் தள்ளிக் கொள்பவர்களே அதிகம் . அதில் தங்களை  கண்டடைபவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள் .


இளைஞர் அமைப்பு அரசியல் பயிற்சி அளிக்கிறது , சமூக அமைப்பை வரலாற்றறை புரிந்து கொள்ளவும் , அதனுடன் அரசியல் எப்படி முயங்கிச் செயல்படுகிறது என்பதையும்தனக்கான இடம் வரும்வரை காத்திருக்கவும் கற்றுத்தருகிறதுகட்சியின் வரலாற்றை அறிமுகம் செய்து வைத்து , அங்கிருந்து தங்களுக்கான கருத்தியலை கண்டு கொள்ளவும் , தலைமைபண்பு உருவாகவும் காரணமாகிறது . அரசியல் பொருத்திருப்பதே அதன் கலை  எனப்படுகிறது. 1980 முதல் புதுவை இளைஞர் காங்கிரஸின் முரண்  செயல்பாட்டினால் அவர்கள் இயல்பாக நுழையக்கூடிய வாயில்கள் அனைத்தும் சண்முகத்தால் அடைக்கப்பட்டு , கட்சியில் எந்த அரவணைப்பும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டது . இளைஞர் காங்கிரஸ் என்பதுகெடு சொல்என புரிந்து கொள்ளப்பட்டு , அதன் மீது ஒரு தீச்சொல் நீண்ட காலம் அங்கிருந்து கொண்டிருந்தது . அதிலிருந்து மீட்பில்லை என்பதே யதார்த்தம் .மாநில் காங்கிரஸ் தலைவர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகத்தில் தலையிடுவது நடவாத காரியம் .இளைஞர் அமைப்பு அப்படி உருவாக்கப்பட்டிருந்தது. பாலன் கட்சியில் இருந்து வெளியேறிதும் , முன்முறையாக புதிய தலைவர் நியமனம் சண்முகத்துடன் ஆலோசிக்கப்பட்டு வல்சராஜ் தலவரானார் . அவர் தலைவராக நியமிக்கப்பட்டதே கூட அமைப்பை உறைநிலைக்கு கொண்டு செல்வதற்காக

1997 களின் தொடக்கத்தில் தலைவர் சண்முகத்துனுடான எனது இடம் வலுப்பெறத் துவங்கியது , எனக்கான அங்கீகாரத்தை அவர் தருகிறார் என உணரத்தொடங்கிய நேரம் . ஒரு போராட்ட வாய்ப்பின் மூலமாக உருவாகிவந்தது , போராட்டத்தை  சரியாக ஒருங்கிணைத்தது , புதுவை மாநிலம் முழுவதிலிருந்து வந்து இளைஞர் அமைப்பினர் கலந்து கொண்டது போன்றவை என் மீதான பார்வையை மாற்றியிருந்தது  . என்னுடன் பங்கு கொண்ட அவர்கள் அனைவரையும் அதற்கு முன்பு எதிர்நிலையில் மட்டுமே அவர் கண்டிருந்தார் .


சண்முகத்தை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் தனிப்பட்ட ஆளுமைகள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பல ஆண்டுகளாக இருப்பவர்கள் . பல ஆட்சியை கண்டவர்கள் அனைவரும் அரசியல் சூழ்ச்சிகளில் தேர்ந்தவர்கள் , சமூக , பொருளியில் மற்றும் பழங்கால நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்டவர்கள் என பெருங் கூட்டம் இருந்தது . அவர்களு உள்ள ஒரே குறைபாடு கட்சியனரை ஒருங்கு திரட்டும் சக்தியில்லாமை  . தலைவர்கள் உருவாவது மூன்றின் அடிப்படையில் . பொருளியல் பலம் , அரசியல் சூழ்ச்சியாளர்  மற்றும் தொண்டர் திரளை ஒருங்கிணைப்பவர்.இதில் தொண்டர்களை ஒருங்கி திரட்டும் சக்தி உள்ளவர் முதன்மை நிலை பெறுகிறார்கள் .


புதன், 3 மார்ச், 2021

அடையாளமாதல் * பொறுப்பின்மை *

 




ஶ்ரீ:



பதிவு : 567  / 757 / தேதி 03 மார்ச்  2021


* பொறுப்பின்மை



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 45.





என்னை பற்றிய குறையாக, போதாமையாக நான் நினைத்துக் கொள்வது ஒன்றுண்டு . அது பிறர் செய்ய தயக்கம் கொள்ளும் படைப்பூக்கம் மிக்க செயல்களை செய்து முடித்து அதில் வெற்றியும் அடைந்த பின்னர் , ஏன் அவற்றில் நான் தொடர்ந்து இருந்து கொண்டிருந்ததில்லை என்பது  . வசீகரிப்பவனாக தோன்றுபவன் சட்டென அதிலிருந்து எப்போது ?ஏன்? நழுவி விடுகிறேன்  . அவற்றை நான் வெவ்வேறு அர்த்தங்களை கொடுத்துக் கொண்டு அதை கடந்து விடுகிறேன் என்றாலும் அவை வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு துறைகளில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது . வெற்றி தந்த இடத்தில் வெற்றிக்கு பிறகு ஏற்படும் சலிப்பு மீண்டும் மீண்டும் அதையே செய்து கொண்டிருப்பதால் எழுகிறதா? . அல்லது ஒன்றில் நிலைத்திருக்க தேவைபடும் சமரசத்தை என்னால் அடையமுடியாமையா ? . இவை மட்டும்தானா? என்றால் இல்லை என நினைக்கிறேன் . நான் தேர்ந்தெடுக்கும் பாதை அல்லது கருக்கோளில் இரண்டிலிருந்தும் அது துவங்குவதாக இருக்கலாம் . ஒன்று - நான் எனக்கான இலக்காக வைத்துக்கொண்டு முன்னகர்ந்தவற்றின் பெறுபகுதி பிறரது கனவையும் அதிலிருந்து உருவாகும் புதிய சாத்தியக்கூறுகளையும் புரிந்து கொள்ள முயல்வதனூடாக எழுந்தவைகள் . அதை அவர்கள்  முயற்சித்து பார்க்க தவறுகிறார்களா ? , அல்லது அவற்றின் தடைகளை மட்டுமே உணர்கிறார்களா? என கேட்டுக் கொள்வதுண்டு. தடைகளில் உள்ள வெற்றி எனக்கு மிக அனுக்கமாக தெரிந்த உடன் அவற்றில் நுழைய நான் தயங்குவதில்லை . இரண்டு - எனது மனதிற்கு அவற்றை மிக அனுக்கமாக உணரும் தேடல் விதையை அவதானிக்கும் போதே அங்கிருந்து எனது பயணம் தொடங்கிவிடுகிறது . முதலாவதில் நான் நேரடியாக அங்கு சென்று சேர்கிறேன் . சில காலம் அவர்களுடன் பழகும் போது ஏற்படும் புரிதல்கள் அதில் உள்ள நடைமுறை சிக்கல் போன்றவை அவர்களை ஏன் தயங்க வைத்து விடுகின்றன என புரிந்து கொண்ட பின் அதை சவாலாக எடுத்துக் கொள்ளும் போக்குடன் அவர்களை ஒருங்கிணைக்கும் வழியாக என்ன நிறுவிக்கொள்கிறேன். தெளிவான திட்டமிடலுடன் காலம் வைக்கும் பாதை என அவை உருவாகிவந்து பெரும் வெற்றியைப் பெறுகின்றன . வெற்றிக்கு உடன் வருபவர்கள் ஒரு கட்டத்தில் என் தேவை  அவசியமில்லாத ஒன்றாக உணர்கிறார்கள் . அங்கிருந்து  சொந்தமாக அல்லது கூட்டாக அதைத் தொடர நினைக்கிறார்கள் . அவர்களுக்கு நான் தேவையற்ற எடையாகிறேன் . அந்த ஊதாசீனம் என்னை சீண்டுவதால் நான் அங்கிருந்து வெளியேறிவிடுகிறேன் . அதுவரை நிகழ்ந்த செயல்களை மேலும் முன்னெடுப்பவர்களுக்கு தடையாக நான் அங்கு இருக்க விழைவதில்லை. ஆனால் அந்த செயல்களை ஒரு கட்டத்தில் மிக சாமான்யமான ஒன்றாக ஆக்கி விடுகிறார்கள் அல்லது அதை மேலும் முன்னெடுக்க இயலாமல் தோல்வி அடைகிறார்கள் . அத்த எல்லையை வந்தடைந்ததும் அவர்களை நான் கைவிட்டு விலகியதாக என் மீது வன்மம் கொள்கிறார்கள் . எப்போதும் அதுதான் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது . எது எப்படியாயினும் அந்த நண்பர்களை நான் நிரந்தரமாக இழந்து விடுகிறேன்


நண்பர் கமலக்கண்ணன்தலைவர்-தொண்டர்உறவு என்கிற எளிய கருத்தியல் கொண்டவர் . தலைவர் என்பவர் தொண்டனின் எல்லா தேவைகளை நிறைவேற்றித் தருபவராக இருக்க வேண்டும் என நினைப்பவர் . குறுங்குழுக்குள் அது இயல்வதும் தவிற்க இயலாததும் கூட  . ஒரு புள்ளியில் கமலக்கண்ணனின் எதிர்பார்ப்பை பாலனால் செய்து கொடுக்க முடியவில்லை . பாலனும் எளிய ஆலைத் தொழிலாளி . ஒரு கட்டத்திற்கு பிறகு கமலக்கண்ணனை முன்னிறுத்தும் தமோதரனின் நிலை சங்கடமானது . இருவருக்கும் இடையே அவர்தான் ஓயாத தூது சென்றுகொண்டிருந்தார். தாமோதரன் பாலனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் . சிறந்த தொடர்புறுத்துனர் . அமைப்பு நிர்வாகத்தில் நல்ல அனுபவமுள்ளதால், அவரை தவிற்க பாலன் நிறையவே சிரமப்பட்டார் . தனக்கான எதிர்காலம் கண்ணனிடம் இருக்கிறது என எப்போதும் உறுதியாக நம்பினார் கமலக்கண்ணன் . ஆனால் அது நடைமுறைக்கு ஒவ்வாத கணக்கு . அரசியிலில் ஒரு முறை நம்பிக்கை இழந்தவராக அறியப்பட்டவர்கள் ஒரு போதும் பழைய நிலைக்கு திரும்ப முடியாது . அவரும் அதை அறியாதவர் அல்லர் . ஆனால்மிக விழைவுயாதார்த்தத்தை பார்க்க மறுப்பது . பாலனுக்கு பிறகு சிதறருண்ட அமைப்பு வல்சராஜ் தலைமையின் கீழ் திரள வேண்டிய சூழ்நிலை எழுந்த போது . நான் நேரடியாக சண்முகத்தின் கீழ் இணைந்ததால் அங்கு வல்சராஜை தலைவரின் சக அணியை சேர்ந்தவராக பார்க்க நேர்ந்தது என் நல்லூழ் . வல்சராஜிடம் நிலைகொள்ளாதவராகவே கமலக்கண்ணன் இருந்தார் . தாமோதரனின் இடத்தை பச்சைமுத்து எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் . ஆனால் அது நிகழவில்லை. அவரை எனக்கு எதிரெடையாக வல்சராஜ் வைத்த போது என்னிடம் சமரச அரசியலை கமலக்கண்ணன் முன்வைத்தார் . நான் எந்த இடத்தையும் விழையாத ஒன்றிற்கு வந்து சேர்ந்து வெகு நாட்களாகியிருந்தது .மேலும் சண்முகம் பாலனின் நிர்வாகத்தில் இருந்த எவரையும் இறுதிவரை நம்பவில்லை .என்னைப் பற்றிய அந்த சந்தேகத்தின் நிழல் எப்போதும் அவருக்கு இருந்திருக்க வேண்டும் . அதுவே என் விஷயத்தில் எல்லா முடிவுகளுக்குக்கும் மிக தாமதமாக வந்து சேர்ந்தார் . என்னுடைய அரசியல் நிலையாமைக்கு அது ஒரு முக்கிய காரணம் .அதை நான் பொருட்படுத்தும் இடத்தில் இல்லை . முன்பு பதிவிட்டபடி சண்முகம் இன்னார் எனத் தெரிந்தே இருந்தேன் . கமலக்கண்ணனை பற்றி சண்முகம் தெளிவாக தெரிந்து வைத்திருந்தார் . நான் எவ்விதத்திலும் கமலக்கண்ணனுடனான சமரசத்தை ஏற்கவில்லை .


வல்சராஜ் தலைமையில் புதிய நிர்வாகக்குழு அமைந்தவுடன் புதிய சூழல் எழுந்தது . அரவணைப்பும் கருணையும் அற்ற அரசியலை கமலக்கண்ணன் எதிர்பார்த்திருக்கவில்லை . குறுங்குழு அரசியலுக்கு பழகி இருந்தவர் யாருடைய நிழலும் இல்லாத ஒற்றை அரசியல் அவருக்கு பழக்கமில்லாதது . நேரடியாக வெய்யிலில் வந்து விழுந்தவர் போலானார் . பச்சைமுத்துவின் திடீர் மரணம் அவரை இன்னும் நிலைகுலையச் செய்திருந்தது . கண்ணனுடன் திரும்பவும் இணைவது மட்டுமே தனக்கு மீட்பு என எண்ணியிருக்க வேண்டும் . அவர் எடுத்த மிகத் தவறான முடிவு அது . கட்சியிலேயே இருந்திருந்திருந்தால் என்ன கிடைத்தருக்கும்? யார் அதற்கு உத்திரவாதம்? என அவர் கேட்க்கக் கூடும் . அதை சென்ற இடத்திலாவது அவரால் பெற முடிந்ததா என்பது கேள்விக் குறியது . அரசியல் யாருக்கும் எதையும் உறுதி செய்யாது . கிடக்கப் பெற்றவர்கள் நல்லூழ் வாய்த்தவர்கள். கட்சியைவிட்டு வெளியேறுவதை அவர் ஒருநாள்  செய்யக்கூடும் நான் எதிர்பார்த்தேன் . எதிலும் நிலையற்ற மனிதாராக அவரை எப்போதும் பார்த்திருக்கறேன் . தமோதரனை இழந்ததும் அச்சாணி கழன்றது போலானார் . திரும்பவும் கண்ணனிடம் சென்றடைந்தார் . அவரது எதிர்பார்பபு அங்கு நிகழ்ந்ததா என தெறியவில்லை . வல்சாராஜிற்கு கமலக்கண்ணனின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது . இப்படி நிகழும் என அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை .அதன் பிறகு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகத்திலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கிக் கொண்டார் .


அது முற்றிலும் நான் எதிர்நோக்காதது. எனக்கான வாய்ப்புகள் சட்டென திறந்து கொண்டன. மிக தீவிர அரசியலை நோக்கி இழுக்கப்பட்டு அதன் அத்தனை சாத்தியகூறுகளின் வழியாக பயணப்பட்டு  வழக்கம் போல எனது தனித்த இடத்திற்கு வந்து சேர்ந்தேன் . மகிழ்வும் வருத்தமற்ற ஒரு இடம் அது . காலம் எனக்கென உருவாக்கித் தருவதில் நான் எனக்கென நிலைப்படுத்திக் கொள்வது .


புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்