https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

அடையாளமாதல் * பார்வை நகல்கள் *

                                                                                          ஶ்ரீ:



பதிவு : 566  / 756 / தேதி 23 பிப்ரவரி  2021


* பார்வை நகல்கள்  * 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 44.






மாநாட்டில் கலந்து கொள்வருபவர்கள் அடையாள அட்டை மற்றும் தலைவர்களுக்கான கடவு சீட்டு முதலியவைகளை  அப்போது பெற்றுக் கொள்வார்கள் . பலர் வந்து பிட்டாவை சந்தித்து சென்று கொண்டிருந்தனர். நாங்கள் காக்கவைக்கப்பட்டோம் .நேரம் கடந்து கொண்டிருந்தது . எனக்கு பிட்டாவின் மனநிலை தெளிவாகத் தெரிந்தது  . நேரில் சந்தித்த போது முகம் கொடுத்து பேசவில்லை . புதுவையில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக நிகழ்ந்த பொதுக் கூட்டதிற்கு வந்திருந்த போது அவரை சந்தித்திருக்கிறேன் . என்னை நோக்கிய சிறு புண்ணகையை தவிர என்னிடமும் பேசவில்லை . வல்சராஜ் நியமித்ததில் அவருக்கு உடன்பாடில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது . அதில் விய்பென ஏதும் இல்லை .அவர்அமைப்பு மனிதர்கீழிருந்து வளர்ந்து இந்த இடத்திற்கு வந்தவர் . அவர்களுக்கான மனநிலை வேறு .அமைப்பை சீரமைக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருந்தது . பிரதமர் நரசிம்மராவ் அதிகாரப்பூர்வமாக அமைப்பை அதனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க . அதை இளைஞர் காங்கிரஸில் இருந்து தொடங்க விரும்பினார் . மூத்த தலைவர்களின் மனநிலையை அறிந்து கொண்டு பிறகு காங்கிரஸில் செய்வது சரியாக இருக்கும் என யூகித்திருந்தார் . இளைஞர் காங்கிரஸ் நல்ல பரிசோதனைக் களம் . வல்சராஜ் தனக்கு நிகழ்ந்த  அவமதிப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை .வெளியே வந்ததும் காட்டமாக பேசிக் கொண்டிருந்தார் . எனக்கு அடுத்த நிகழ வேண்டியதைப் பற்றிய எண்ணம் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது . இரண்டு மாத காலமாக அடுத்தடுத்த தனி நிகழ்வுகள் ஆனால் ஒற்றை விஷயத்தை பிண்ணி பிணைந்திருந்தது . அந்த சந்தர்பத்தில் புதுவையில் முக்கிய சிக்கல் ஒன்று துவங்கியது. மாநாட்டில் கலந்து கொள்ள தில்லியில் இருந்த சமயத்தில் இளைஞர் காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் கமலக்கண்ணன் தலைமையில் கட்சியில் இருந்து வெளியேறிய செய்தி அறிந்து வல்சராஜ் பதட்டமானார் . தலைவர் சண்முகத்திடமிருந்து காலையிலேயே தொலைபேசி வந்திருந்தது .கடிந்து கொண்டார் என தெரிந்தது . பின்னர் தொடர்ச்சியாக தொலைபேசி அடித்த படி இருந்தது . ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தார் .நான் நடந்து கொண்டிருந்ததை ஒருவாறு ஊகித்திருந்தேன். ஆரம்பம் முதலே என்னை செயல்பட இயலாதபடி தடைகள் வல்சராஜின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுதான் நிகழ்ந்தது .என்னை ஏன் உறைநிலையில் வைக்க வேண்டிம் . என்ன நிர்பந்தம் எனத் தெரியவில்லை . கமலக்கண்ணனை  எனக்கு எதிரெடையாக வைத்தார் . சட்டமன்ற உறுப்பினர் சபாபதியின் அனுக்கர்கள் அதன் பிண்ணியில் இருந்திருக்க வேண்டும் . முக்கிய இடத்தில் பச்சைமுத்து என்பவர் இருந்தார் . பச்சைமுத்து அரசியல் சூது மிக்கவர் . பாலன் , பச்சைமுத்து , சுப்புராயன் , கமலக்கண்ணன் , தாமோதரன் என ஒரு நிரை அன்று கண்ணனின் அமைப்பில் இருந்தனர் . பாலனின் அரசியல் எதிர்காலத்திற்காக கண்ணனை விட்டு வெளியேறியதற்கு பிண்ணியில் பச்சைமுத்து இருந்தார் . பாலனை இயக்கியவர் . இவர்கள் அனைவரும் சபாபதியின் அணியைச் சேர்ந்தவர்கள் . முதலியார்பேட்டை அவர்களின் அரசியல் களம் .


பாலன் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது ஒரு சிறு காலம் அமைப்பு தொய்வடைந்திருந்தது . அந்த சந்தர்ப்பத்தில்தான் நான் பாலனுடன் இணைந்தேன் . நான் இணைந்த சில காலத்திற்கு பின்னர் பச்சைமுத்து கருத்து வேறுபாட்டினால் பாலனைவிட்டு விலகி சபாபதியின் அனுக்காராக தன்னை மாற்றிக் கொண்டார் . சபாபதி பாலனுக்கு எதிர் மனநிலைக்கு வந்ததின் பிண்ணனியில் பச்சைமுத்து இருந்தார் . பாலன் எனது வரவை உற்சாகமாக எடுத்துக் கொண்டார் . அரசியல் ஒரு வினோத ஆட்டம் . யாரை முன்வைத்து அது ஆடுகிறது என்பதை அவ்வளவு எளிதில் ஊகித்து வட முடியாது . என்னைப் போன்ற ஒருவன் பாலனை நாடி வந்தது அவரை சுற்றியிருந்தவர்களை பலவாறு கற்பனை கொள்ள வைத்திருக்க வேண்டும் . அனைய இருக்கும் ஒன்றை சிறு பொறி மீளவும் பற்றியெரிய வைப்பது போல நான் அங்கு வந்து சேர்ந்தேன் .அது பாலனை இன்னுமொரு சுற்று வர வைத்து அவர் தேர்தலில் நிற்க வைக்கும் அளவிற்கு கொண்டு சென்றது .எதிர்பார்பின் மத்தியில் வாழ்ந்தவர்களுக்கு எனது எதிர்பார்ப்பின்மை ஒருவித கிளர்ச்சியாக அல்லது ஒரு கோமாளியாக் என்னை தெரியவைத்திருக்கலாம் . நான் பெரும் பொருளியல் உதவ செய்வதாக எல்லோராலும் நம்பப்பட்டது . ஆனால் அது உண்மையல்ல . அங்கு நிளவிய அரசியல் என்னை பித்து கொள்ள வைத்தது . அதன் சுவை அதை நோக்கி நகர்தியது .பூச்சிகளில் இரண்டு வகை விளக்கையும் , தேனையும் நோக்கியவை . இரண்டின் முடிவு ஒன்றே ஆனால் வேறுவேறானவை என்பது போல . பாலனின் வீழ்ச்சி தள்ளிப்போக நான் காரணமானேன் என என் மீது தீராத வன்மம் கொண்டவராக இருந்தார் சபாபதி . அவரை சார்ந்தவர்கள் அனைவருக்குமே என்னிடம் அந்த கசப்பு இறுதிவரை இருந்தது. பச்சைமுத்து சண்முகத்தின் அணியில் இருந்ததால் வல்சராஜுடன் நெருக்கமும் , நல்ல அரசியல் சூழ்ச்சியாளர் என்பதால் அவர் சொல்லுக்கு தனி மதிப்பிருந்தது .என்னுடன் முரண்பட்டவர்கள் அவர் தலமையில் ஒருக்கு திரண்டிருந்தனர் . கமலக்கண்ணன் எளிய குடும்ப பிண்ணனிக் கொண்டவர் , ஆலைத் தொழிலாளி . நல்ல மேடைப் பேச்சாளர் என்பது அவரை அரசியல் திறன்நடுத்தரக் குடுபத்திற்கான பொருளாதாரா நெருக்கடி அவரை எப்போதும் தடுமாற்றம் கொண்டவராக வைத்திருந்தது  . அவரது அரசியல் பயணம் கண்ணன் தலைமையில் தொடங்கியது . கமலக்கண்ணனின் சகோதரர் பாலனுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவரை கண்ணனுக்கு அறிமுகப்படுத்தினார் . மேடையில் முழங்குவது தனித்திறனாக அறியப்பட்ட காலம் , அதன் வழியாக  முன்னாள் தலைவர் கண்ணனின் அனுக்கரானார் . அமைச்சராக இருந்த கண்ணன் அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தார்  .ஊழின் விசையால் பாலன் கண்ணனுடன் முரண்பட்டு வெளியேறிய போது அவரும் வெளியேறியது அவர் செய்த பெரும் பிழை . பாலனிடம் அவருக்கு பொருளாதார எதிர்பார்பிருந்திருக்க வேண்டும் . பாலனும் ஆரம்பத்தில் தன்னாலானதை செய்து கொண்டிருந்தார் . ஒரு கட்டத்தில் கமலக்கண்ணனின் மனநிலை புரிந்து கொண்டு விலகிவிட்டார் . கண்ணனின் ஆளுமையால் கவரப்பட்டதால் எப்போதும் கண்ணன் நோக்கிய மனச்சாய்வு கொண்டவராகவே இருந்தார். அது அவரை பிறவெல்லா இடத்திலும் நிலைகொள்ளாமல் செய்துவிட்டது . பாலனிடம் மனம் கசந்த கமலக்கண்ணன் பல முறை அவரிடம் இருந்த விலக முயன்றதை தடுத்தவர் தாமோதரன் . அது தாமோதரன் செய்த பிழை என்றானது . அந்த பிழைக்கு ஈடாக அவரை எல்லா சந்தர்ப்பத்திலும் ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் தாமோதரனுக்கு இருந்தது .

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

அடையாளமாதல் * அரசியல் நகர்வுகள் *

 



ஶ்ரீ:



பதிவு : 565  / 755 / தேதி 16 பிப்ரவரி  2021


* அரசியல் நகர்வுகள்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 43.





அமைப்புகள் எப்போதும் கண்களுக்கு நேரே உள்ள அதன் தலைமையின் ஆளுமையை நம்பி அதனுடன் இருப்பது, செயல்படுவது  . தங்களது சிக்கல் குறித்து பேச அது பற்றி ஆறுதல் பெற ஆற்றுப்படுத்த நேரடி தலைமை அதற்கு தேவையாகிறது . காங்கிரஸ் போல ஒரு அகில இந்திய இயக்கத்தில் உயர்நிலை தலைவர்களுக்கு மட்டுமே தங்கள் பதவிகளால் அடையாளங்களால் மத்தியத் தலைமையுடன் நேரடியாக உரையாட இயல்கிறது . மற்ற படிநிலை தலைவர்கள் அனைவரும் மொழி , பயணதூரம் பொருளியல் போன்ற  தடைகளினால் தொலைந்து போனவர்களே  . அவர்களுக்கான ஒரே வழி மாநிலத்தில் எளிதில் அனுகக் கூடிய தலைமையுடன் மட்டுமே . தங்களுக்குள்ளான பூசல்களை அங்கு முன் வைப்பதன் வழியாக அணிகள் கோஷ்டிகள் உருவாவது தவிர்க்க இயலாதது . இங்கு அரசியல் என்பதே தலைமையைச் சார்ந்தும் சுற்றியும் , எதிர்த்தும் இயங்குவது .சண்முகத்துடன் இருப்பவர்களுக்கு கூட  அவர் அந்த உண்மையை வாய்விட்டு சொல்லவேண்டும் என விரும்பினர் . அவரது தொடர் மௌனம் அவர்களை வெவ்வேறு  பக்கம் கொண்டு சென்றிருந்ததுஅது ஒரு வகையில் அவருக்கு அழுத்தம் கொடுப்பது . உயர்நிலை அரசியல்வாதிகள் அனைவருக்கும் இதுவும் ஒரு விளையாட்டு . அந்த மௌடியமான சூழல் . எனது எதிர்காலத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என அச்சம் கொண்டேன் . நாராயணசாமி வளர்ந்து வருவது எனது அனைத்து முயற்சிக்கும் பெரும் தடையை உருவாக்கிவிடும் . அரசியலில் பிழைத்திருக்க விரும்பும் அனைவரும் இருகரையர்கள் . அவர்கள் அனைத்திலும் கால் பாவிக் கொண்டு ,சில்லறை அரசியல் லாபத்திற்காக காத்திருப்பவர்கள். அவர்கள் விழைவது அதிகாரத்திற்கு எதிரான அறைகூவல் மற்றும் பிளவுகள் உருவாகும் தருணங்களுக்காக , அங்கு அவர்களுக்கான வாசல்கள் திறந்து கொள்கின்றன. நாராயணசாமி எனக்கான நேரம் ஒன்று குறித்து வைத்திருந்திருக்க வேண்டும் . பிற அனைவரையும் போல நான் என் நிலைப்பாட்டை சொல்லவேண்டும் என நினைத்தார் . நான் எந்த தயக்கமும் இன்றி அவருக்கு எனது எதிர்பை வெளிப்படுத்தினேன் . இறுதிவரை எனது நிலைபாடு அதுவாகவே இருக்கும் என நினைக்கிறேன்.அந்த சூழலில் தில்லி மாநாட்டிற்கு இளைஞர் காங்கிரஸ் சார்பாக நட்பர்களை அழைத்து செல்லும் சந்தர்ப்பம் வந்தது . நான் ரயிலில் அவர்களுடன் பயணிப்பது என முடிவெடுத்திருந்தேன் . எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ள இருக்கும் சிக்கலை மறைமுகமாக அல்லது நேரடியக  சொல்ல நினைத்திருந்தேன் ஆனால் ஊழ் வேறொரு கணக்கு வைத்திருந்தது . விந்தையான காரணத்தினால் நான் ரயிலில் அவர்களுடன் பயணிப்பது நடக்காது போனது . எனது இடத்திற்கான போராட்டம் அங்கு துவங்கியது .என்னை தற்காத்துக் கொள்ள மேலும் நகர வேண்டிய நிர்பந்தம் எழுந்தது .தொடர் அரசியல் நிகழ்வுகளில் இருந்துஅரசியலின் அடுத்த தலைமுறை உருவாகி வருவதற்கான வாய்ப்பை பார்க்கவும் , என்னுடன் பயணிக்க விரும்புபவர்களை  அங்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிர்பந்தமும் திரண்டது. அது 2020 ஆட்சியை நோக்கிய நகர்வு என்கிற கனவை  விதைத்தது  . இலக்கும் வழிமுறைகளையும் உருவாக்கிக் கொண்டேன் எப்படி அடைவது என்கிற வழிமுறைகளை பற்றிய  செயல்திட்டம் இல்லாமல் அந்த பாதையில் பயணப்பட்டேன் . ஒரு செயலை செய்யத் துவங்கியதும் அதன் எதிர்கால பயன் பற்றி கணக்கிட்டது இல்லை. எது என் மனதிற்கு நிறைவளிக்கிறதோ அதை செய்வது மட்டுமே அந்த தருணத்தில் எனக்குள் எழுவது  . அரசியல் நிலையற்றது , அதில் நம்பத் தகுந்தவர் என எவரும் இல்லை . யாரை முன்வைத்தும் எதுவும் திட்டமிடக்கூடாது என்கிற தெளிவான புரிதல் இருந்தாலும் , வாய்ப்புகள் முன்னே சென்று நிற்கவேண்டிய ஊழ் எழுகிற போது , அனைத்து  தவிற்க முடியாத காரணங்களும் உடன் வந்து கொண்டிருக்கிறது .இவற்றை கடந்த கால நிகழ்வுகளின் வலி எனக்கு அறிவறுத்தியிருந்தது  . 


இந்திய அரசியலில் நிகழ்ந்து கொண்டிருந்த தொடர் மாற்றங்கள் ஒன்றுடன் ஒன்று முயங்கி  புதுவை அரசியலில்  அதன் பாதிப்புகள் உருவாக்கி இருந்தது . 1991 களில் அர்ஜுன்சிங் , NT திவாரி , பிரனாப் முகர்ஜி போன்றவர்கள் நரசிம்மராவால் அரசியல்ரீதியாக ஓரங்கட்டப்பட்டது  பிற மூத்த கட்சி தலைவர்களை அதிர்ந்து போகச் செய்ததிருந்ததுகட்சி மற்றும் ஆட்சியில் நரசிம்மராவ் வலுவாக காலூன்ற அவருக்கு அந்த நடவடிக்கைகள் உதவியது .அதன் பிறகே சோனியா காந்தி அரசியலுக்கு வர வேண்டும் என்பது மெல்லத் துவங்கி பின் ஓங்கி ஒலித்தது  .சோனியா காந்தியின் தனது அரசியல் பிரவேசத்திற்கு நாள் குறிக்க 1995 இளைஞர் காங்கிரஸ் மாநாடு ஒரு முக்கிய காரணமானது .அதன் பின் ஒரு வருடத்திற்குள்ளாக நரசிம்மராவ் வீழ்ந்து , 1996 களில் சீத்தாராம் கேசரி தலைவராக வந்தபோது கட்சியை கைப்பற்ற சோனியாகாந்திக்கு நீண்டநாட்கள் தேவைப்படவில்லை . நரசிம்மராவிற்கு எதிராக சோனியாகாந்தியை மையப்படுத்தி எழுந்த விசைக்கு ஆதரவாக அப்போது திவாரி காங்கிரஸ் என்கிற பெயரில் கட்சி துவங்கப்பட்டு . வாழப்பாடி தமிழநாட்டிலிருந்து பெரும் படையை கூட்டிச் சென்றார் . ஆனால் கல்கத்தாவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிற்கு முதல் முறையாக வந்து தனது அரசியல் பயணத்தை துவங்கினார் சோனயா காந்தி .அதன் பின் திவாரி காங்கிரஸ் தேவை இல்லாமலாகியது . அதன் பின்னர் வாழப்பாடி ராஜீவ்காந்தி காங்கிரஸ் தொடங்கியது தனிக்கதை .


தேர்தல் பற்றிய அறிவிப்பிற்கான முஸ்தீபுகள்  நடைபெறக்கூடி சாத்தியகூறுகள் உருவாக்கியது. அது எனக்கான வாய்ப்பை உருவாக்குவதாக இருந்து .தேர்தல் நடக்க ஏற்ற சூழ்நிலை புதுவையில் முன்பே உருவாகியது . 1995 களில் பிட்டா தலைமையில்  அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் மாநாடு பிரதமர் நரசிம்ம ராவின் முன்னிலையில் நடைபெற்றது . இந்திரா மற்றும் ராஜீவ்காந்திக்கு இணையாக உயர்த்தி வைக்கப்பட்டார் பிரதமர் நரசிம்மராவ் .சோனியா காந்தியின் வரவை கட்சிக்குள் எதிர்பார்த்து இருந்த சூழலில் அவருக்கு விடுக்கப்பட்ட அறைகூவலை அங்கு கூடி இருந்த அனைவராலும்  உணரப்பட்டது .நரசிம்மராவ் தனது தடையை வெளிப்படையாக உடைத்து நடந்த முதல் கூட்டம் அவரின் நிலைப்பாடு  பிற மூத்த தலவர்களுக்கு திகைப்பை உருவாக்கி இருப்பதை பார்க்க முடிந்து . அது ஏறக்குறைய அகில இந்திய காங்கிரஸ் மாநாடு போலவே நடந்தது . நரசிம்மராவை ஆதரிக்கும் அனைத்து மூத்த தலைவர்களும் மேடையில் அமரவைக்கப்பட்டனர்உச்சகட்ட நிகழ்வாக நரசிம்மராவின் அரங்கம் அதிரும் நுழைவு நிகழ்த்தப்பட்டது பிண்ணனியில் உறுதியான , தெளிவான  திட்டமிடல் இருந்தது .


அதில் கலந்து கொள்ளவே இளைஞர் காங்கிரஸின் முழுக் குழுவுடன் தில்லி சென்றிருந்தேன் .அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாட்டுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா முழுவதும் இருந்து வந்திருக்கும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்களை அலுவலகத்தில் சந்திப்பது ஒரு மரபு . நான் வல்சராஜுடன் மணீந்தர்ஜித்சிங் பிட்டாவை சந்திக்க சென்றிருந்தேன் . அங்கு மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அடையாள அட்டை மற்றும் தலைவர்களுக்கான கடவு சீட்டு முதலியவைகளை அங்கு அப்போது பெற்றுக் கொள்ளாலாம் . அடையாள மற்றும் கடவு சீட்டு பெறுவதற்கு கோஷ்டிக்களுக்கிடயே தள்ளுமுள்ளு முதல் கைகலப்பு வரை நிகழும் . அது ஒரு சடங்கு போல .

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

அடையாளமாதல் * எண்ணிக்கையும் தொடர்பும் *

                                                              ஶ்ரீ:



பதிவு : 564  / 754 / தேதி 12 பிப்ரவரி  2021


* எண்ணிக்கையும் தொடர்பும்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 42.





இளைஞர் அமைப்பை சண்முகம் நோக்கி கொண்டு செல்ல எனக்கு சில தனிப்பட்ட நோக்கங்கள் இருந்தாலும் , பிற அரசியல் தலைவர்களில் அவர் மாறுபட்டவராக இருந்தது அடிப்படை காரணம் . அவர் காமராஜரை ஆதர்சமாக , காந்திய சிந்தனை கொண்டவராக தன்னை முன்வைத்தார் . அந்த அடையாளத்துடன் இறுதி கணம் வரை முயற்சித்தபடி இருந்தார் . 60 வருடங்களுக்கு மேலாக ஒரே கட்சியில், அதிகாரத்தில் இருந்தும் தனது வழிமுறைகளை, விழுமியங்களை மாற்றிக் கொள்ளவில்லை அதுவே ஒரு சாகசம் என நினைக்கிறேன். அறம் காலத்தினால் மாற்றமடைவது. முன்வைத்த கொள்கைகளை தொடர்வதால் நிகழும் ஏமாற்றமும் சலிப்பும் சமரசங்களும் அவரில் நிகழிவில்லை  . இன்று விழுமியங்கள் மாற்றமடைய யுக நேரங்கள்  தேவையாவதில்லை . மூன்று முதல் ஐந்து வருடமே நமது நடைமுறைகளை அவற்றை நோக்கி கேள்விகளை முன்வைக்கக் கூடியவை . இன்றைய சமூக அறமும் விழுமியமும் முரணியக்க விதிகளின் படி புதிய கோட்பாடுகளை உருவாக்கி கொண்டே நகர்ந்து வருவதை கண் கொண்டு பார்க்க இயலுகிறது . எனது தந்தையின் காலத்தில் இருந்து நான் வாழும் காலத்தில் அவை அடைந்திருக்கும் மாற்றம் திகைக்க வைப்பவை . என்றோ ஒரு காலத்தில் அது போல நிகழலாம் என சொல்லிக் கொண்டவைகள் திடுமென எதிரில் நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது . அந்நிலையில் சண்முகம் போன்றவர்கள் தங்கள் விழுமியங்களை அழுத்தமாக எப்போதும் எளிமை அரசியல் என்கிற கருத்தியல் கொண்டதாக , தன்னை எதிர்ப்பவர்களிடமும்  உரையாட தயக்கமில்லாதவராக , தன்னை நோக்கி குற்றம் சொல்லுபவர்கள் அதை தனது முகத்துக்கு நேராக சொல்லும் இடத்தில் தன்னை வைத்துக் கொண்டார் என்பது மிக அரிதான ஒன்று . “காந்தி தன்னை வெறுக்கும் தரப்பிடம் ஓயாது உரையாடியபடி இருந்தார்என்பதை நான் இங்கிருந்து புரிந்து கொள்ள முயல்கிறேன் . அந்த மனநிலையை அவர்கள்  எங்கிருந்து பெருகிறார்கள்?, தாங்கள் அவமதிக்கப்படும் கணங்களை கடக்கிறார்கள்? . பிற தலைவர்களிடம் நான் கணாத ஒன்று . அவரை தொடர்ந்து சில தலைவர்கள் அதை செய்து பார்க்க முயன்று முன்னிலும் வன்மம் கொண்டவர்காளாவதை பார்த்திருக்கிறேன்.  


தனது முதன்மை சீடராக முன்னிறுத்திய நாராயணசாமி தன்னை நேரடியாக எதிர்க்க துவங்கிய போது அவர் திகைத்திருக்க வேண்டும் அல்லது ஆழத்தில் எங்கோ அதை ஊகித்தருக்க வேண்டும் . ஆனால் அப்படி அல்ல என்பது போல , அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பது போல நடந்து கொண்டார்தன்னால் வளர்த்தெடுக்கப்பட்டவர்  எதிர்கிறார் என்பதை பொது வெளியில் ஏற்க அவருக்கு கூச்சமாக அல்லது பலவீனமாக இருந்திருக்க வேண்டும் . சண்முகம் நாராயணசாமி உறவின் விரிசல் சண்முகத்தை பலம்குறைந்து போனவராக காட்டியது . எப்போதும் வரலாறு அப்படித்தான் நிகழ்கிறது . உரிய தகுதியில்லாதவர்களை அரசியலின் பொருட்டு எடுத்து மேலே வைக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வீழ்ச்சியை அங்கிருந்தே துவங்குகிறார்கள் என்பது ஒரு எளிய உண்மை .நான் மாநில அமைப்பை புதிதாக நிறுவத் துவங்கிபோது , நிரபப்படாத ஒரு இடத்திற்கு அந்த பட்டியலை இறுதி செய்ய வேண்டிய அவசரத்தில். தகுதியில் மிகவும் பின்தங்கிய பொருத்தமில்லாத ஒருவரை அணுக்க நண்பர் சிபாரிசு செய்தார் என்கிற ஒரே காரணத்திற்காக அவரை நியமித்தேன். நாராயணசாமியை மையப்படுத்தி எனக்கெதிரான தடை கிளம்பியபோது என் அணியில் இருந்து வெளியேறிய முதல் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அவர். அந்த பாடம்  வலி மிகுந்தது .


நாராயணசாமி  சண்முகத்திற்கு மாற்றாக தன்னை முன்வைக்க துவங்கிபோது கட்சியின் உயர் நிலையை சேர்ந்த அனைவராலும் அது தங்களுக்கான பிறிதொரு அரசியல் லாபமாகப் பார்க்கப்பட்டது . சண்முகத்தின் அனுக்கர்களுக்குள்ளும் எதிர்மனநிலை கொண்டவர்கள் இருந்தனர் . இயற்கையின் எண்ணிடலடங்கா விதிகளில் ஒன்று. உலகை இயக்கும் விசை. அவர்கள் அதை தங்களின் சந்தை மதிப்பை உயர்த்துவதுடன் , இருத்தரப்பினருடனும்  பேரம் பேசும் இடத்தை உருவாக்கித் தரும் என உணர்ந்திருந்தனர். சண்முகத்தின் மௌனம் அதை நிராகரித்தது . நாராயணசாமி அனைத்து வாசலையும் திறந்து வைத்திருந்தார் . ஆனால் அதற்கும் எந்த அர்த்தமும் இல்லை என்பது விந்தை . ஒரு பக்கத்தில் மட்டும் செல்லுபடியாவது ஏதும் இல்லை . கதவை மூடியவர் தன் தரப்பை மட்டுமல்ல எதிர் தரப்பையும் மூடிவைத்தார் என்பது கற்றலுக்கு உரிய அரசியல் .பேரத்திற்கு காத்திருந்தவர்கள் ஊசல் மனநிலை உள்ளவர்கள் . ஒருகாலமும் எவருடைய நம்பிக்கைக்கும் உரியவராக மாறாதவர்கள் ,ஆனால் அவர்களின் பேச்சும் செயல்பாடுகளின் ஊடாக மட்டுமே அரசியல் நகர்கிறதுஅவை தலைவர்களை பலமுள்ளவர்களாக , செல்வாக்கிழந்தவர்களாக காட்சி படுத்துகிறது . வேறு சிலர் இருவரின் உரசலை இளிவரலாக்கினர் . அவை அனைத்தும் நான் உருவாக்க நினைப்பவற்றை சிதைக்கக் கூடியது. கண்ணன், பாலன் காலத்திலிருந்து இளைஞர் காங்கிரஸில் உருவாகி வந்த மாநிலத் தலைமைக்கு எதிரான அரசியல் போக்கை விலக்கி அதனுடன் இணக்கமாக செல்லுவது, மாநில அரசியலின் மையப்போக்குடன் பயணப்படுவது, அதன் வழியாக எதிர்கால இடத்தை உருவாக்கி கொள்வது போன்ற சாத்தியங்கள் கலைந்து போகலாம்எனது நிலைப்பாடுகள் வெளிப்படையானவைகள் . ஆதரவும் , எதிர்ப்புமான அரசியல்போக்கே எனக்கானது . மறைமுக அரசியல் ஒரு சூது .அதில் எப்போதும் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை . அது மட்டுமின்றி அது எனக்கு கட்டுபடியாகாது


எனக்கான களம் , மாநில அரசியல் எங்களுக்கு என தனித்த ஒரு இடம் அதுவரை இளைஞர் காங்கிரஸார் கனவுகளை உருவாக்கி வந்தவைசண்முகம் தலைமையில் உள்ள நிர்வாகிகள் பட்டியலில் இடம் பெறுவது பற்றி தலைவர்களுக்கே அந்த கனவு இருந்தது . சண்முகம் மாநில நிர்வாக உறுப்பினர்களை அப்படி உருக்கி செதுக்கி செய்திருந்தார் . ஆட்சி , கட்சி இரண்டையும் சமன் செய்யும் வித்தை அது. முதல்வர்களாக , அமைச்சர்கள் என ஆட்சியை புதியவர் யாருக்கு வேண்டுமானலும் எந்த பதவிகளையும் எடுத்து கொடுப்பவர் கட்சி நிர்வாகிகளை  நியமிப்பது தனது நம்பிக்கைக்கு உரிய விசுவாசுகளுக்கு மட்டுமே . கட்சியின் தலைவர்கள் பலமுறை வெளியேறிய போது கட்சி பிளவுண்டது போன்ற தோற்றம் உருவாகவே இல்லை . பல சந்தர்ப்பங்களில் சென்றவர் திரும்பி வந்தனர் . நிர்வாகிகள் வெளியேறுவது ஒருபோதும் நிகழவில்லை.


தலைமைகளுக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்கிற புரிதல்களின் வழியாக இளைஞர் காங்கிரஸில் புதிதாக இணைந்தவர்களுக்கு தங்கள் நிலைகளை எடுக்க  வேண்டும் என விழைந்தேன் .ஆனால் அமைதியாக இருப்பது என்கிற சண்முகம் தன் வழமை மூலம் தனது அறைகூவலை கடந்து செல்லத் துவங்கியது எனது இடத்தை சிக்கல் மிகுந்ததாக உருவாக்கி இருந்தது .நாராயணசாமி சண்முகத்திற்கு எதிராக தனது முரணை வெளிப்படுவதற்கு வெகு காலம் முன்னரே நாராயணசாமியை நம்பத் தகாதவராகவே என் ஆழ்மனம் உருவகித்திருந்தது . பல வருடங்களுக்கு முன்பு நான் பாலனுடன் நாராயணசாமியை முதல் முறை சந்தித்த போது தனது தலைவர் என கூறிகொண்ட சண்முகம் குறித்து நாராயணசாமி முன்வைத்த விமரசனம் எனக்கு அவரைப் பற்றிய ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தது. இவரை எப்படி சண்முகம் நம்புகிறார் என கேட்டுக் கொண்டேன்அன்று உயர்நிலை அரசியலாளர்கள் எனக்கு அதிகம் அறிமுகமில்லாததால் மேல்நிலை அரசியலில் அதுவும் ஒரு  வழமை போல என எண்ணிக் கொண்டேன்.ஆனால் அது அப்படி அல்ல எக்காலத்திற்குமாக சில பொது நியதிகள் உண்டு என மெல்ல மெல்ல வந்து சேர்ந்த போது புரியவந்தது


புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்