https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 27 மே, 2021

அடையாளமாதல் * ஒருங்கமைவும் அடிப்படையும் *

 


ஶ்ரீ:



பதிவு : 576  / 766 / தேதி 27 மே  2021


* ஒருங்கமைவும் அடிப்படையும்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 54.





சண்முகம் தனது அரசியலை ஆரம்ப நாள் முதல் துவங்கி அனைத்தையும் மிக நுட்பமாக திட்டமிட்டவர். பிறருக்கு புரிபடாத வாய்புகள் அவரை நோக்கி திறந்து கொண்டதை சரியான காலத்தில் அவரால் பார்க்க முடிந்தது. அவரை பொருத்தவரை அவை அனைத்தும் அவரது எளிய மனக்கணக்கும், புரிதலும் என்றே எப்போதும் முன்வைத்தார் . அந்த  எண்ணங்களை தர்க்க ரீதியில் அல்லது கலைச் சொற்கள் வழியாக முன்வைத்ததில்லை . அவரை செலுத்திய விசை அவரது ஆழ்மனக் கணக்கு அவை வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை, தர்க்க ரீதியில் அவற்றை விளக்க பிறருக்கு விளக்க முடியாது என்று நினைத்தார் . அது பற்றி முன்னாள் அமைச்சர் காந்திராஜுடன் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார்சண்முகத்தின் கணக்குகளை அவரால் தர்க்க ரீதியில் ஒருபோதும் முன்வைக்க இயலாது காரணம் அவரது நிறைவடையாத பள்ளி கல்விஎன்று. ஆம் அவர் சொல்லால் தன்னை ஒருபோதும் முன்வைத்ததில்லை . அடுக்கடுக்கான கேள்விகளுக்குஅது சரியாக வராதுஎன்கிற ஒற்றை பதிலைத் தான் எப்போதும் பெற்றிருக்கிறேன். அரசியலின் உச்தருணங்கள் அனைத்தும் அன்றாட பல்லாயிரக் கணக்கான கருதியல் வழியாக உருவானது . தன்னை சுற்றிச் சூழ்ந்து இயங்கும் மனிதர்களின் அரசியல் முரணியக்கம் வழியாக உருவாகி வரும் அரசியல் வாய்ப்புகளை ஆழ்மனப் படிமத்தின் உள்ளுணர்வின் வழியாக அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். எந்த செயல்பாடுகளிலும் அதன் வெற்றி வெளிப்பட்ட பிறகு அதன் அரசியல் லாபக் கணக்குகளை அறிந்து கொள்பவர்கள், அதிலிருந்து தங்களுக்கும் ஏதாவது வேண்டும் என விழைபவர்கள் அனைவரும் ஒரு அரசியலின் துவக்கப் புள்ளியில் அதில் இருக்கும் எதிர் வினைகளுக்கு அஞ்சுகிறார்கள் . எந்த புது முயற்சிகளையும் அவர்கள் முன்னெடுப்பதில்லை அனைத்தும் உருவாகி வருவதற்கு முன் அங்கு சென்று நிற்கும் அல்லது அதை உருவாக்கும் மனபலம் அற்றவர்கள், அவர்கள் அனைத்தையும் எளிய சந்தேகங்களால் விலக்குவார்கள் . தெளிந்து உருவாகிவரும் நிகழ்வை அனுசரித்து அதில் சென்று சேரும் முன்முடிவை அவர்கள் எப்போதும் எடுப்பதில்லை. யாரோ சிலர் அவற்றை ஊகிக்கிறார்கள் அந்நிகழ்வு நிகழும் முன்னர் அதன் சாதகங்களை தங்களை நோக்கி கொண்டுவரும் செயல்பாட்டிற்கு வழி வகுக்கிறார்கள் ,அதன் மாறாத வெற்றிக்கு தேவை அதை நிர்வகிக்கும் குழு. அக்குழுவை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எப்படி விளக்கினாலும் உடன் பயணிக்கும் படி வேண்டினாலும், பல வகைகளில் அவை நிகழ்வதேயில்லைஒன்று அவர்கள் அன்றாடத்தில் இருந்து விலகி புதிய ஒன்றை முயற்சிக்க அஞ்சுபவர்கள் ,நாளை நிகழ்பவற்றை பார்க்கும் பார்வையற்ற அனைவருக்கும் வேண்டியவர்களாக தங்களை வைத்துக் கொள்வது தங்களுக்கு உகந்தது நினைக்கிறார்கள்


முதன்மை அரசியலில் இருக்கும் ஒருவருக்குஅனைவருக்கும் பொதுவானவர்கள்என்கிற கருகோளே கிடையாது அவர்கள் எப்போதும் ஆதரவு, எதிர்பு என்றே அனைத்தையும் வகுத்துக் கொள்வார்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை. அவர்கள் உடன் வர மறுப்பதே அதன் முதன்மை சவால் என்றாலும் அவர்களை வெறுக்கவோ விலக்கவோ இயலாது. காரணம் கலத்தில் அந்த அரசியல் கணக்கு நிகழும் போது அதன் பொது வெளியில் அதிலிருந்து உருவாகும் பலனை மடைமாற்ற அல்லது அதிலிருந்து வெளிப்படுதை ஒற்றையில் வகுத்துக்கொள்ள இயலாது . அரசியல் எப்போதும் அனைவருக்குமானது அந்த அரசியலின் நிகழ்வில் தலைவரென ஒருவரை உயர்த்திப் பிடிக்க சில நூறு பேராவது அப்போது தேவைப் படுகிறார்கள் . இரண்டு எதிர்வரும் நிகழ்வையும் அதிலிருந்து பெறவிருக்கும் வெற்றி பின் இடத்தையும் சொல்பவரின் கணக்கில் இருந்து புரிந்து கொள்பவர்கள். அந்த கணிப்பை சொன்ன உடன் காரணமல்லாமல் அவர்கள் மீது கடும் காழ்ப்பை அடைகிறார்கள்அவர்கள் எப்போதும் திரளில் இருந்து ஒருவர் தனித்து  உயர்வது தங்கள் பங்களிப்பின் மூலம்மட்டுமே நிகழ இயலும் என குறுக்கு கணக்கில் சென்றமர்கிறார்கள் . அதன் பின்னர் அவர்கள் செய்யும் முதல் வேலை அதை எதிர்ப்பது . அத்திட்டம் தோல்வியுற வேண்டும் என ஆழமாக நினைக்கிறார்கள். ஒருபோதும் எவருக்கும் உதவ அவர்கள் சம்மதிப்பதில்லை. மிக எளிய மனிதர்கள் தங்களின் அன்றாடங்களில் இருந்து எழும் சோர்வை விலக்கிக் கொள்ள தங்களை தேடி வந்து பெரும் வாய்பபுகள் காத்து நின்றிருந்தன என சொல்லிக் கொள்வதால் மட்டும் மனநிறைவைப் பெருபவர்கள் . அதுவே அவர்களது ஆணவம். எப்போதும் தங்களை பற்றிய மிகை நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் அவர்களின் ஆனவம் தேவையற்றை வெளியே வந்து வெளியுலகுடன் உரசு புண்பட்டுக் கொண்டே இருப்பது. பிறருக்கு கிடைக்கும் எந்த அங்கீகாரத்தையும் காரணமில்லாமல் தங்களின் இழப்பாக கருதுகிறார்கள். பொதுவெளியில் பலர் தங்களை வந்து சார்ந்து நின்று சந்தித்து உதவி கோரியதாக சொல்லி அவற்றை இளிவரலாக்கி திருப்தி அடைகிறார்கள்.


1990 களில் கண்ணனுக்கு மாற்று முதல்வராக பிறரால் அமர்த்தப்பட்டு ஐந்தாண்டுகள் நிலையாய் ஆண்டு முடித்து வெளியேறியவர் வைத்திலிங்கம். அந்தக் காலகட்டதில் எழுந்த  “ஆர்பரிக்கும்இயற்கையின் வாய்ப்பை தவறவிட்டவராகவே அவரைப் பார்க்கிறேன் . அவரது மாநில அரசியலின் துவக்க நகர்வு ஒரு முதல் பிழையில் நிகழ்ந்தது , அங்கிருந்து சிதறிய அவரது ஆதரவு தளத்தை பின்னர் ஒருபோதுப் அவரால் கைபற்ற இயலவில்லை . மேலே சொன்ன இரண்டு முடியாமைகளையும் சந்தித்து அரசியலில் பிறரின் உதவி தனக்கு கடைக்கவில்லை என்கிற ஆதங்கம் உள்ளவராக அவரை பார்த்திருக்கிறேன். முதல்வராக அமர்ந்த உடன் முதலில் தான் கண்ணனுக்கு எதிரியில்லை என அவரை நம்பவைக்கும் முயற்சியில் தோல்வி அடையும் வரை அவர் அரசியலின் மையத்தில் இருந்து நழுவி விழுந்து கொண்டிருப்பதை அறிந்திருக்கவில்லை . கண்ணனை மிக சரியாக மதிப்பிட்டிருந்தவர் சண்முகம் . கண்ணனுடனான சமரச உடன்படிக்கைக்கு வைத்திலிங்கம் முயற்சிக்கும் போதே அவரது அரசியலின் மைய விசை அறுபடத் துவங்கிவிட்டது . கண்ணனுக்கு மாற்று முதல்வராக அல்ல மாற்றுத் தலைவராக உருவகித்தே அவருக்கான ஆதரவு தளம் முளைகட்டத் துவங்கி இருந்தது . தன்னை பிறர் என்னவாக பார்க்கிறார்கள் என்கிற கருத்தியலுக்கு அவர் சென்று சேரவேயில்லை என்பது இரண்டாவது பிழை  . கண்ணனுக்கு அவர் நீட்டிய கரம் கண்ணனால் மறுதளிக்கப்பட்ட போது அவரை சார்ந்து நிற்க நினைத்த அரசியல் களம் அந்தக் கணத்தில் காணாமலாகியது . கண்ணனை அஞ்சியவர்களின் கணக்கின் வழியாக உருவாகி வந்தவர் வைத்தியலிங்கம் . அவர்கள் அனைவரும் வைத்தியலிங்கம் தங்களை கைவிட்டார் என ஆதங்கத்தில் குமுறிக் கொண்டிருந்தனர், காங்கிரஸ் தலைவர்களை கொண்ட அடித்தளம் நேரடித்தன்மை கொண்டதல்ல , யாரும் எதையும் வெளிப்படையாக பேசுவதில்லை என்பதால் கலகங்களுக்கு அங்கு இடமில்லை . கலகத்தை பாதையாக கொண்ட கண்ணன் அவர்களால் ஏற்கப்படாதது ஒன்றும் வியப்பல்ல.

முதல்வர் பதவி தனது தந்தை வழியில் தனக்கு வந்து சேர வேண்டிய சொத்துக்களில் ஒன்றாக எண்ணினார் என்பது அடுத்தப் பிழை. அங்கிருந்தே அனைத்தையும் தொடங்கினார் . முதல்வராக நீடித்து நிற்க வேறு பல காரணிகள் வேண்டும் என அவர் புரிந்து கொண்டபோது அவரது ஆட்சி நிறைவுற்றது. அது அவரை உச்சகட்ட மனக் கொந்தளிப்பில் வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் அரசியல் குறித்து யார் அவருடன் உரையாட வந்தாலும் அவர்களுக்கு தர்க்க ரீதியில் வகுப்பெடுக்க முயன்றார் . இச்செய்கையால் முக்கிய தலைவர்கள் அவருக்கு ஆதரவு என்கிற எல்லைக்கு வெளியே சென்றுவிட்டிருந்தனர் . கண்ணனுடன் தனது சமரச உடன்பாடு திட்டம் செல்லுபடியாகாது என்பதை தாமதமாக புரிந்து கொண்டவரால் தன்னை நோக்கி வந்த ஆர்ப்பரித்த திரள் ஏன் வடிந்து சென்றது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அரசியலில் இதனை தனக்கு இழைத்த துரோகம் என்கிற இடத்திற்கு வந்து சேர்ந்தார் அது அவரை கசப்படைய வைத்தது . அதன் பின் அவரது உரையாடல் அந்த மெல்லிய கசப்புடன் வெளிப்பட்டபடி இருந்தது

சனி, 15 மே, 2021

அடையாளமாதல் * கனவும் பயணமும் இடைவெளிகளும் *

 


ஶ்ரீ:



பதிவு : 575  / 765 / தேதி 15 மே  2021


* கனவும் பயணமும் இடைவெளிகளும் 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 53.






1990 களில் தொடங்கி ஊழ் எங்கோ கருக் கொண்டிருந்தது. திரளில் மேலெழுந்து நின்று கொண்டிருந்த அவர்களுக்கு அது  வழங்கிய சலுகைக்கு மாற்றெடை நிகர் வைக்கவேண்டும் என்பது பொது விதி , அதை செய்த அல்லது தவறிய ஒன்றிற்காக இருவரையும் இணைத்து அதற்கொரு திட்டம் இருந்திருக்க வேண்டும் . இருவரையும் ஒரே நேர் கோட்டிற்குள் எதிர் புதிராக கொண்டு வந்து நிறுத்தியதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது . சண்முகம் மற்றும் கண்ணன் இருவரும் காலத்தால் வேட்டையாடப்பட்டவர்கள் போல அவர்களால் மிக எளிதில் எட்டிப்பிடித்திருக்கக் கூடிய உச்சத்தை அது வெவ்வேறு வகையில் மறுதளித்துக் கொண்டிருந்த அதே சமயம் இருவருக்கும் இன்னதென அறிய இயலாத இணையான பிறிதொரு வாய்ப்புகளையும் அவர்களின் அருகருகே வைத்திருந்தது . எதிர்பார்ப்பு நிகழாததால் எதுவும் முடிந்து விடுவதில்லை. அது பிறிதொரு வாய்ப்பை அங்கு வைத்தே முன்னகர்ந்திருக்கிறது அது நமது விருப்த்திற்குறியதாக இருக்க வேண்டிய நிர்பந்தமில்லைமுற்றான பிறிதொரு கோணம், பிறிதொரு வாய்ப்பு என்று அதன் பாதைகள் சில காலத்திற்கு கழித்தே பார்வைக்கு வருகின்றது பின் அங்கிருந்து புதிய உச்சத்தைப் புதிய கனவுகளை அவர்கள் சென்றடைய அவை உதவுகின்றன .  1991 களில் சண்முகம் மற்றும் கண்ணன் இழந்தது அவர்களின் கனவான முதல்வர் பதவியை. ஒருவர் இழந்தவர் பிறதொருவர் இழக்க காரணமானவர் என குற்றம் சுமத்தப்பட்டவர் .கனவு கலைந்த பிறகு இருவரும் அந்த பாதிப்புகளை அவர்கள் என்னவாக எடுத்துக் கொண்டார்கள், வெளிப்படுத்தினார்கள் என்பதில் இருந்து அவர்களது அரசியல் எதிர்கால வாழ்வை தீர்மானித்தது , சண்முகம் திரளின் தலைவராக தன்னை ஒருபோதும் முன்வைத்ததில்லை. அரசியலில் நிகழ்பவைகளை ஜீரணிக்க கற்றதன் வழியாக தன்னை நிறுவிக் கொண்டவர் . ஆகவே பரபரப்பில்லாத மௌனம் அவரது பாதையாக இருந்தது அங்கு சொல்லப்படாத சொற்கள் விதை என எழுத்தபடி இருப்பதும் அவை உள்நோக்கிய கேள்விகளின் வழியாக பிறர் அறிந்திராத விடைகளையும் கொண்டவையாகவும் இருந்துவிடுகின்றன. அரசியலின் ஆகச்சிறந்த இடமாக அதை நினைக்கிறேன் . அதே சமயம் தொடர் ஆழ்மனத்தூண்டுதலால் கசப்பையும் காழ்ப்பையும் நோக்கி மிக விரைவராக செலுத்தக் கூடியது அதன் எதிர்நிலைப் பண்பு அதன் பிறிதொரு விசை , அதன் அடிப்படைகளை இந்த பதிவு முழுவதும் புரிந்து கொள்ள முயல்கிறேன். சண்முகம் தனது வழமையான மௌனத்தின் வழியாக அந்த காலகட்டத்தை கடந்தார் அது அரசியலின் பிடி அவர் கைகளில் தொடர்ந்து இருக்கும் படி பார்த்துக் கொண்டது


இணையான தலைவராக உணரப்பட்ட கண்ணன் சபாநாயகராக அமரவைக்கப்பட்டது அவரது அரசியல் செயல்பாடுகளை முடக்குபவையாக எல்லோராலும் பதற்றப்பட்டதுதன்னை செலுத்தும் விசை என உள்ளும் புறமுமாக அவர் உணர்ந்திருந்த ஒன்று தனது செயல்பாடுகளை தன்னை சுற்றி செயல்படும் திரளை தக்ககவைத்துக் கொள்ளும் போராட்டமாக அவர் எப்போதும் நினைத்தார் அவர்களுக்காக தான் முடிவெடுக்க வேண்டும் என்கிற மிகை பாவனை அந்த திரளையும் அவரையும் அனைத்து புள்ளிகளிலும் இணைகிறது , வெற்றியை அடைவதற்கும் அடைந்ததை தக்க வைத்துக் கொள்வதற்கும் அந்தத் திரளின் உற்சாகம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை அத்தகைய அரசியல் உருவாக்கிவிடுகிறது இரு தரப்பையும் ஆற்றல் மிக்கதாக்கும் தருணங்கள் அதிலிருந்து திரண்டு எழுகின்றன. திரள் அரசியலின் மாபெரும் திறப்பு அதன் கொந்தளிப்புகள் எப்போதும் உச்சத்தில் நிலை கொண்டிருப்பதில்லை அவை கடல் அலையைப் போல பொங்குவதும் அடங்குவது. அந்த உணர்வுகளை எப்போதும் நிலைநிறுத்த ஓயாமல் செயலாற்றுவதை அரசியலாக கொண்டவரின் பாதை சுழல் கொண்டவை தொடர் உழைப்பை கோருபவை என்பதால் எப்போதும் ஓரிடத்தில் நிற்காதது . தன்னை மட்டும் முன்வைக்கும் அரசியலுக்குள் நுழைபவர்கள் பின் அதிலிருந்து ஒருபோதும் வெளியேற முடிவதில்லை அவை அறுபடாத நீள் சரடுபோலதன்னை சுற்றி எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்த குரல்களின் நெருக்கடியால் தன்னை தொடர்ந்து முன்வைத்த அரசியலை ஒரு போதும் கைவிட இயலாமலாகி இருக்க வேண்டும் . கண்ணனும் அப்படித்தான் நினைத்தார் . தனக்கு கொடுப்பட்ட சபாநாயகர் பதவியை ஆட்சியாளர் மற்றும் அரசு அலுவர்களுக்கு மேல் சென்று அமரும் இடம் என உருவகித்து , அதன் வழியாக அரசாங்கத்தின் அனைத்தையும் மட்டுறுத்தும் அதிகாரத்தை அது வழங்கும் என நினைத்தார். அதை செயல்படுத்த சட்டமன்றத்தில் ஓயாத கேள்விகளை கேட்டார் பிறர் அரசை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு முழுமையாக இடமளித்து அது நீண்டு பெருக வாய்ப்பளித்தார். இந்த செயல்பாடு வழியாக  மெல்ல காழ்ப்பும் வெறுப்பும் மிக்கவராக மாற்றமடைந்து முதல்வர் வைத்தியலிங்கத்துடன் சட்டமன்றத் தரைகளில் அன்றாடம் மோதி அவரை அலைக்கழிப்பது மட்டுமே அவரது அரசியலானது ,அதன் வழியாக தனது ஆதரவாளர்களை நோக்கி உரையாடிக் கொண்டிருக்கும் நிறைவை அவர் அடைந்திருக்க வேண்டும் . எனவே முடிவில்லாமல் அந்த திரளுடன் அவர் உரையாடிக்கொண்டே இருந்தார் . அவரை உயிர்ப்புடன் வைத்திருந்தது அந்த உரையாடல். ஆனால் அந்த ஆட்சி முடியும் போது அவர் கட்சியில் இருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் உருவாகி அங்கிருந்து வெளியேறி பல அதிகாரமிக்க இடத்தை அடைந்த பின்னரும் கூட எங்கும் நிறைவுறாது சுற்றி இருந்தவர்களை நிலையழியச் செய்து தனக்கான இடம் நோக்கி தொடர்ந்து பயணித்ததுஅரசியலின் இருள்நோக்கி என்பது அதன் வினோதம் .


சண்முகத்திற்கு 1991 களில் வருத்தம் மிக்கவராக பின்னர்  கசப்படைந்தவராக மாறிக்கொண்டிருந்த போது துவங்கிய சறுக்கல் மிக மெல்ல நிகழ்ந்து அதன் அத்தனை உச்ச , நீச்சங்களைத் தொட்டு பயணப்பட்ட அவருக்கு 1999 களின் இறுதியில் அவரது இலக்கான முதல்வர் பதவி தேடி வந்தது . அது கண்ணனுக்கு வாய்க்காதது மட்டுமின்றி அவரது அமைச்சரவையிலும் கண்ணன் பங்கு கொண்டார்.அனுபவ ஆற்றல் நரம்பின் வழி வெளிப்படுபவை என்பதால் அவை தன்னகங்காரம் ஓங்கி எழும்போது துணைக்காது என்பது அச்சமளிப்பது . தன்னகங்காரம் ஆளுமையை வடிவமைப்பவை அவை ஒரு இடத்தில் பெருகும் போது எதிர்மறையாகி தடுமாற வைக்கிறது சண்முகம் முதல்வராக அமர்ந்ததும் அவருக்கு நிகழ்ந்தது . அந்த பதவியால் அவரை சுற்றி சூழ்ந்திருந்த அனைவரையும் அவரிடமிருந்து முற்றாக விலக்கி சிதறரடித்து இறுதியில் அவரை வீழ்த்தியது . 1989 களில் துவங்கி அனைத்தையும் மிக நுட்பமாக திட்டமிட்டவர் 1991 பிற அரசியல் தலைவர்களின் அரசு சூழ்தலில் சிக்கி முதல்வர் பதவியையும் தனக்கான ஒட்டுமொத்த இடத்தையும் இழந்தது 2001 களில். தனது சமநிலை குலைந்த அர்த்தமற்ற கோபத்தினால் முதல்வர் பதவியை இழந்தாலும் அரசியல் தலைவர்கள் அனைவரும் சந்திக்க விழையும் இடத்தை இறுதியில் மன்மறையும் வரை அவர் இழக்கவில்லை என்பதால் அவரது பதவி விலகல் ஊழின் முடிவல்ல என நினைக்கத் தோன்றுகிறது .


வெள்ளி, 7 மே, 2021

அடையாளமாதல் * மாறாப் பெரு நிகழ்வு *

 


ஶ்ரீ:



பதிவு : 574  / 764 / தேதி 07 மே  2021


* மாறாப் பெரு நிகழ்வு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 52.





இளைஞர் காங்கிரஸ் தனது எதிர்காலத்திற்கான அடிப்படை  “சண்முகம் எதிர்ப்புஎன்கிற ஒற்றை கொள்கையில் கட்டமைக்கப்பட்டது .இது பலமுறை இங்கு சொல்லப்பட்டது தான் என்றாலும் மீளவும் அதை இங்கு சொல்வது ஒரு ஆழ்ப்புரிதலை நோக்கிய காரணத்தை அடிபடையாக வைத்தது . இளைஞர் அமைப்பின் வெற்றிக்கு தடையாக இருப்பவராக முன்  வைக்கப்பட்டவர் சண்முகம் அது அனைவருக்கும் கசப்பை் போல ஒவ்வாமையைத் தருவது. எளிய பரப்பியல் அரசியல் எதிர் நிற்க இயலாத ஒற்றைப்படையானது அதை போல அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி பிறிதில்லை. ஆனால் அந்த அடிப்படை  காலாவதியாகி இருந்ததை நாங்கள்  அறிந்திருக்கவில்லை, சண்முகமே அன்று தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தடுமாறிக் கொண்டிருந்தார் என்பதை காலம் கடந்தே தெரிந்து கொண்டேன் . இளைஞர் காங்கிரஸ் அரசியல் என்பது அனைத்து வகையில் கண்ணன் சண்முகத்திற்கிடையேயான தனிப்பட்ட மோதல்களாக உருமாறி இருந்தன . அதன் பின்னணியை இப்படி புரிந்து கொள்ள முயல்கிறேன். 1977 களில் காங்கிரஸ் கட்சி தன் வேர்களை இழக்கத் துவங்கிவிட்டது அது 1980 களில் மேலும் தீவிரமடைந்திருந்தது . கண்ணன் தனது முழு பலத்தில் வளர்ந்து கொண்டு இருந்தார். வயதும் எதையும் பொருட்படுத்தாத அவரது வேகமும், சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைத்திருக்கும் ஆற்றலால் இளைஞர்களை ஈர்த்ததுக் கொண்டிருந்தார் . காங்கிரஸ் பெரும் கட்டமைப்பை கொண்டதால் அதில் முக்கிய தலைவர்கள் தவிர பிற அனைவரும் முகமிலிகள் என்கிற சூழலில் சாதாரன தொண்டனையும் நினைகூறும் தலைவரால் இளைஞர் காங்கிரஸ் இறுக்கமான அமைப்பாக உருவெடுத்தது. தங்களுக்கான அரசியல் நுழைவிற்கு  மாற்றுத் தலைமையை எதிர்நோக்கி முதிரா இளைஞர் கூட்டம் ஒன்று எப்போதும் காத்திருந்தது. அதை மிக சரியாக கண்ணனின் தனது அரசியலில் பொருத்திக் கொண்டார் .


1980 களில் அது ஒரு எழுச்சி . அந்த வருடம் மட்டும் அப்படிப்பட்ட அரசியல் எழுச்சி தனித்து காணப்படவில்லை அது மீள மீள நிகழும் ஒன்றுஆர்பரிக்கும்இயற்கை நிகழ்வு  1970,1980,1990, 2000, 2011 மற்றும் 2020 என காலம்  ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒரு முறை பிழைக்காமல் தன்னில் அதை மீள மீள நிகழ்ந்து கொண்டே இருப்பதைப் பார்க்கிறேன் . சில தலைவர்களை முன்னிறுத்தி ஐந்து வருட ஆட்சியில் அவர்களை அமரவைக்க வெளிவரும் அந்தக் கூட்டம் அடுத்த ஐந்து வருட காத்திருப்பற்கு பிறகு அபைத்தின் மீதும் வெறுப்புற்று விலக மீளவும் அங்கு இன்னுமொரு முதிரா இளைஞர் கூட்டம் வந்தமர்கிறது எனவே இதில் பெரியதாக ஒன்றுமில்லை என்பது எளிய கணக்கு . ஆனால் 1970 களில் துவங்கி 2020 வரை அதில் இருந்து திரண்டெழுந்தவர்கள் இரண்டு பேர் ஒருவர் சண்முகம் பிறதொருவர் ரங்கசாமி இரண்டு பேரும் பிரம்மச்சாரிகள் என்பது பொது அம்சம். மக்களின் ஆதரவு என்கிற ஒன்றை இங்கு வரையறை செய்தால் அது ரங்கசாமியும், தனது நுண்ணிய கட்சி நிர்வாக திறமை மற்றும் அரசுசூழ்தல்களால் பல ஆட்சியை அமர்த்தியும் கலைத்தும் புதுவை அரசியல் தன்னை சார்ந்து இங்கும்படி செய்த கொண்ட சண்முகம் என இருவர் மட்டும் அதில் குறிப்பிடத்தக்கவர்கள் எனில் அந்த எளிய 10 வருடக் கணக்கு அதற்குள் பொருந்தி வரவில்லை. 2030 களில் அது போல ஒன்று மீண்டும் நிகழும் வாய்ப்பைப் பார்க்கும் சூழலில் தமிழக அரசியலை ஒட்டி இங்கும் பெரிய மாற்றம் நிகழலாம்.


அந்தந்த காலகட்டதைச் சேர்ந்த தலைவர்கள் அந்தஅபூர்வநிகழ்வைத் தங்களின் அன்றாடங்களின் மத்தியிலும் கற்பனை வறட்சியாலும் தவறவிட்டார்கள் அல்லது அதன் வீரியத்தை தங்களின் தனிப்பட்ட அதிர்ஷ்டமாக்கி குறுக்கிக் கொண்டார்கள் . 1970 மற்றும் 1980 களில் அத்தகையஅபூர்வநிகழ்வில் தனது கனவுகளை கண்டு கொண்டவராக தலைவர் சண்முகம் என்றால் அதன் முதல் பயனாளியாக அவர் இருந்திருக்க வேண்டும். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியலில் தாங்கி நின்றிருக்கும் சக்தியை அது அவருக்கு கொடுத்ததில் இருந்து இதை ஊகிக்க முடிகிறதுவெற்றி என்பது முயற்சியில் இருந்து கனிவது என்றால் எல்லோருக்கும் அது நடந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி நிகழ்வதில்லை . யாரோ சிலர் மட்டும் வாழ்த்தப்பட்ட நல்லூழ் கொண்டவர்கள் என்பதால் அது இயற்கையின் மாறா விதிகளுக்கு உட்பட்டது .இயற்கையினால் பெறுப்படுவது எப்போதும் பிறிது ஏதோ ஒரு இடத்தில் நிகர் செய்யப்பட வேண்டியது. சண்முகம் முழு பலனையும் அடைந்தவராக கருத்தில் எடுத்துக் கொண்டால் மட்டுமே அதற்கு எங்கோ நிகர் வைக்க தவறவிட்டவராக உணர்கிறேன் . அவரை மிக அனுக்கமாக அறிந்தவன் என்கிற வகையில் பிற அரசியலாளர்களை விட தனித்துவமானவர் என்பது எனக்குள் அவரது இடமாக இருந்தாலும் அதை பல்லாயிரம் வார்தைகளினால்  நியாயப்படுத்த முடிந்தாலும் ஊழின் நியதிகளின்சரி தவறுவேறு வகையானவை , நுட்பமானவை ஒருபோதும் நம்மால் புரிந்து கொள்ளவே இயலாதவை. அந்த நிகர் செய்வதை ஒரு விதியாக அவருக்கு அது கொடுத்திருப்பதை அவர் தனது ஆழ்மனத்தால் உணர்ந்திருக்க வேண்டும் தனது வாழ்நாள் முழுவதும் சிலவற்றை விரதம் போல அநுஷ்டானம் போல கொண்டிருந்தார் . அதை நிகழ்தக்கூடிய தன்னியல்பு உள்ளவர்களை அது தேர்ந்தெடுக்கிறது . அதன் ஆழத்திற்குள் சென்று அதற்கென தன்னை வடிவமைத்துக் கொண்டவராக காந்தியைத் தான் நான் முன்வைக்க முடியும். வாழ்நாளின் இறுதிக்கணம்வரை இரண்டு பக்கமும் நிகர் வைத்துக் கொண்டே இருந்ததை பார்க்க முடிகிறது .


அரசிலாளர்கள் அனைவருக்கும் இந்த விதி பொருந்துகிறதா ? என்றால்ஆம்என்றிருக்க வேண்டும், ஆதனால் பிற எவருக்கும் அது தராத ஒன்றை தனித்த சிலருக்காக திறந்து வைக்கிறது . அதனாலாயே அவர்கள் பெரும் மக்கள் திரளில் கலக்காத உயரத்தில் இருக்கிறார்கள் . சண்முகம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார் என்பது மட்டும் அவரை பலமுள்ளவராக ஆக்கியிருக்கவில்லை. அவர்  அனைவரையும் இணைக்கும் சமரசபுள்ளியில் தன்னை வைத்துக் கொண்டிருந்தார் என்பதும் தனது முடிவுகள் பிறருக்கு என்னவாக படுகிறது என்கிற தயக்கம் மட்டுமே அவரை தலைவராக்கியது . ஏறக்குறைய அதே இடத்தில் கண்ணனும் இருந்தார் . ஆனால் ஒரு இடத்தில் அவர் சண்முகத்திடமிருந்து மாறுபடுகிறார். அரசியல் எப்போதும் தன்னை மட்டுமே முன்வைத்த அரசியலை தொடர்ந்து முன்னெடுத்தார் . அதில் பிறருக்கும் இடம் இருப்பது ஒன்றே அனைவரையும் ஒன்றிணைக்கும் புள்ளி. அது ஒரு கூட்டுப் பொறுப்பாகிறது அனைவரையும் ஒரு இடத்தை நோக்கி நகர்ந்து செல்ல வைக்கிறது . அதில் தன்னை மட்டுமே முனவைக்கும் அரசியலுக்கும் இடமில்லை . அதில் அனைவரையும் தான் சென்று சேர நினைக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது முதன்மைக் கடமையாகிறது. அதன் பொருட்டு  விதி மீறல் அவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது போலும் . ஒன்றில் தொடரந்து இழியும் ஒருவர் எங்கோ ஒரு இடத்தில் சமநிலை குளைகிறார் அங்கு காலம் ஒரு மிருகம் போல உறுமிக் கொண்டு காத்திருக்கிறது. அந்த வகையில் கண்ணனை விட சண்முகம் நல்லூழ் கொண்டவர் ஆனால் அதை அவர் அறிந்திருந்தாரா என்பது தான் கேள்வி

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...