https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 29 மார்ச், 2019

காலம் எல்லையற்றது


ஶ்ரீ:






பதிவு :  610 / தேதி 29 மார்ச்  2019


                                                                  காலம் எல்லையற்றது






காலம் எல்லையற்றது . இங்கே நிகழும் அனைத்துமே தற்செயல்கள் . இதில் மனித வாழ்க்கைக்கு என தனியான அர்த்தம் ஏதும் இருக்க முடியாது. அனைத்து அர்த்தங்களும் மனிதனால் உருவாக்கப்பட்டவை மட்டுமே . அவற்றை அறியாமல் நம்புபவன் , வாழ்க்கையை இயல்பாக வாழ்கிறான் . அவற்றின் பொருள் என்ன என்று தேடுபவன் வெறுமையையே சென்றடைகிறான்” .

இங்குள்ள அனைத்தும் வெறுமையல்ல . நாம் பொருளை அறியவில்லை என்பதனால், அறிய முடிவதில்லை என்பதனால், பொருள் இல்லை என்றவதில்லை”  என்றார் அவர், பொருள் உள்ளது . அதை அறிய வேண்டுமென்றால் நான் என்ற நிலையில் இருந்து அதை அணுகக்கூடாது .சார்த்ர் தேடியது எனக்கான பொருள் என்ன என்ற கேள்விக்கான பதில் . இதற்க்கெல்லாம் பொருள் என்ன என்று தேடினால் கண்டுகொள்ளலாம்” என்று அவர் சொன்னார் .

ஜெயமோகனின் முகங்களின் தேசம் கட்டுரை தொகுப்பில் எனக்குள் நான் விவாதிக்கும் கருவிற்கான பதிலாக இன்று வாசிப்பில் எனக்கு முன் எழுந்து ஆகப் பெரும் பதில்களுக்கு துணைப்பவைகளாக நின்றிருக்கிறது.. 

தேடல் மிகுந்த வாழ்க்கையில் இருந்து கண்டடைபவைகள் அனைத்தையும்  பெற்றுக்கொள்ளும் மனப்பான்மை , எப்போதும் நெகிழ்வானதாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை  விதியாக இருந்தாலும் , அது கட்டற்று பெருகிப் பாயும் போது கைக்கொண்டவற்றையும் மோதி சிதைத்து விடுவதுண்டு . அதே சமய, கற்றவற்றை உடைத்துக்கொள்ளாது  புதியவற்றை உள்வாங்குவது நிகழ்வதில்லை என்கிற இரண்டு நிலைகளுக்கு இடையில் தேடலில் இருந்து கிடைக்கும் புரிதல் என்கிற நதி பாய்கிறது , அது எத்தையும் கரைத்து ஆழ் படிமத்தை மட்டும் விட்டுச்  செல்கிறது

இதில் ஒருவர் இருக்க வேண்டிய நிலை பற்றி முடிவாக சொல்லக் கூடியது  என ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை . பெருந்திட்ட வாதத்தில் நம்பிக்கை கொண்டவன் என்கிற அடிப்படையில் . இருப்பின் பொருளை புறிந்துகொள்ள முயற்சிப்பது எனக்கானது என் எப்போது நினைக்கிறேன் .

தந்தை வழியாக எனக்கு கிடைத்த  கொடை என நான் நினைக்கும் மெய்மையை இன்றைய நவீன உலகில் வைத்து புரிந்து கொள்வதை எனக்கான மெய்மை தேடல் என நினைக்கிறேன் . அதில் கிடைக்கும்  இன்பத்தை ,புரிதலை நான் எப்போது இழக்க விரும்புவதில்லை.

மெய்மை என்பது பெருபாலும் ஆச்சாரம் சம்மந்தப்பட்டவைகளாக இருந்து விடுபவை . மெய்மையை அதில் வைத்து குழப்பிக் கொள்வதை விடுத்து பிற அகத் தேடலில் ஈடுபடுவதே எனக்கானதாக  நான் நினைத்து வந்திருக்கிறேன் . ஆச்சாரங்கள் பாத்திரத்தை சுத்தி செய்வது , ஆகையால் அது காலத்தால் மாற்றமடையாக் கூடியவை .எவை எந்த அளவிற்கு. என்பதற்கான பதிலை இன்று யாரும் யாருக்கும் சொல்லும் இடத்தில்லை .

அவற்றை நோக்கி நாம் கேள்விகளை எழுப்பிக் கொள்ளாது போனாலும் நம் சம்பந்தபட்ட யாராவது என்றாவது அவற்றை ஒரு சந்தர்ப்பத்தில்  எழுப்புகிற போது , அவற்றிற்கான பதில் நடைமுறை சார்ந்திருக்க சந்திக்க வேண்டி வருகிற போது அந்த திடுக்கிடல் உணரப்படும் .

புதன், 20 மார்ச், 2019

வியாழன், 14 மார்ச், 2019

அடையாளமாதல் - 436 * காந்திய அணுகுமுறை *

ஶ்ரீ:





பதிவு : 436 / 608 / தேதி 14 மார்ச்  2019

காந்திய அணுகுமுறை  


எழுச்சியின் விலை ” - 37
முரண்களின் தொகை -03 .



புதுவை கம்யூனிஸ்டின் பெரும் தலைவர் .சுப்பையாவிற்கு ரஷ்ய தலைவர்களுடன் நேரடித் தொடர்பிருந்தது  . காந்தியை புதுவைக்கு முதலில் அழைத்தது அவர்தான் என்றாலும் , பின்னர் காந்தியின் அரசியல் நிலைபாட்டால் , மாற்று இயக்கம் நோக்கி நகர்ந்தார்., தேசியவாதியாக தன் அரசியலை துவக்கிய சுப்பையா எதிர்கொண்ட சிக்கல்கள் புதுவை மாநிலத்திற்கென பிரத்யேகமானவை , சிறிய பகுதியாக இருந்ததனாலும் , மிகப் பெரிய நிலப்பரப்பை ஆண்ட பிரிட்டீஷாரை , அதை நிர்வகிக்க பல விதமான புரிதில்களை உருவாக்கிக்கொண்டதை போன்ற ஒன்று இவர்களிடம் இல்லை .

தகவல்களை ஆவணப்படுத்துதல் பிரிட்டீஷாரின் வழமையாக இருந்தது . இந்திய கலாச்சார ,பண்பாடு , மொழி ,ஜாதி குறித்து  அவர்களுக்கு பிரத்யேக பார்வை இருந்தது.அதைக் கொண்டு நிலவுடைமை சமுதாயத்தையும் , பிற சமூகத்தையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் புள்ளிகளை அறிந்திருந்தார்கள். அதைபயன்படுத்தியே அனைத்துத் தரப்பிற்குமான சமரச புள்ளியை உருவாக்கி இருந்தார்கள் . அது அனைத்தையும் சம தூரத்தில் வைத்திருக்க உதவியது. அதிலிருந்து அடையும் , அல்லது புரிந்து கொள்படுபவைகள் ஆவணப்படுத்தினார்கள் , அது அவர்களின் நிர்வாகத்திற்கு பலம் சேர்த்தது.

காந்தி போன்ற தலைவர்களுக்கு புதிய அனுகுமுறைகள் தேவைபட்டதற்கு , பிரிட்டீஷாரின் அந்த புரிதல்களே தடையாக இருந்தன . தொடர்ந்து அவர்களுடன் காந்தி தனது உரையாடல்களின் வழியாக அவர்களின் புரிதல்களில் உள்ள இடைவெளிகளை கண்டடைந்து தனது யுக்தியை உருவாக்கிக் கொண்டார் . காந்தி நிராகரிக்க முடியாத மனிதராக இருந்தார் . அதற்கு அவரது அரசியல் அனுகுமுறைகள் பெரிதும் உதவின.

பிரிட்டீஷாரை போன்ற தகவல் தொடர்புறுத்தல் வழிமுறைகளோ , புரிதல்களோ பிரஞ்சு நிர்வாகத்திற்கு  இல்லை .இந்திய மண்ணின் சிக்கல்கள் சிடுக்களினால் ஆனவை . அவற்றை அடிப்படையிலிருந்து புரிந்து கொள்வது நீண்ட அனுபவத்தை கோருவது .பிரன்ச் அரசாங்கம் அமர வைத்திருக்கிற கவர்னர்களை கண்கானிக்க உள்ளூர் பிரமுகர்களில் இருந்து சிலரை நியமித்துக் கொண்டது . இந்த இரண்டடுக்கு அனுகுமுறை , இரு தரப்பையும் இரண்டு விசைகளில் நிறுத்தி வைத்து , ஒரு சமன்பாட்டை உருவாக்கி வைத்தது.

இதிலிருந்து வெளியேற கவர்னர்களாக வருபவர்கள்  உள்ளூர் பிரமுகர்களுடன் கைகோர்த்துக் கொண்டனர் அதனால் மூச்சு திணறும் அளவிற்கு உள்ளூர் பிரமுகர்கள் தனியாட்டசி நடத்தினர். அவர்கள்  விடுதலை போராட்டத்தின் குரல் வளையல் அமர்ந்திருந்தனர். இந்திய ஒன்றியத்தின் நீதிமன்ற வழிமுறைகளின் நோக்கம் பிறிதொன்றாக இருந்தாலும் , மக்களிடையே நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது . ஆனால் பிரன்ச் அரசாங்கத்திற்கு முக்கியமான சிக்கல்களில் ஊர் பெரிய மனிதர்களையே சார்ந்திருக்க வேண்டி இருந்ததால் , அவர்களே மக்களை ஆளுபவர்களாக  உருவெடுத்தெனர்

பிரன்ச் இந்திய பகுதியின் சுதந்திரப் போர் என்பது ஒரு கோணத்தில்  இவர்களுக்கு எதிரானதுதான். அதனால் போராட்ட முறைகள் புதுவையில் மாறுபட்டிருந்தது . காந்தி சொன்ன போராட்ட முறைகள், தங்களின்  நுண்ணிய சிக்கல்களுக்கு தீர்வை தராது என்கிற எண்ணம் சுப்பையா போன்றவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் , அதுவே அவர் காந்திய வழிகளில் இருந்து விலகிச் செல்ல காரணமாக இருந்திருக்கலாம்  .அதன்பின் புதுவையில் அரசியல் கொலைகள் புதுவையை புரட்டியது .

பிரிட்ஷ் அரசாங்கம் இந்திய நிலத்திலிருந்து வெளியேறிய பிறகும் , பிரன்ச் அரசாங்கம் இந்திய மண்ணில் நீடித்தது .சுதந்திர நாடான பிறகு இந்திய பிரதமருக்கு சர்வதேச நெருக்கடிகள் தொடங்கின .புதுவை மக்கள் பிரன்ச் அரசாங்கத்திற்கு எதிராக எழாதவரை மற்ற பிரதேசங்களை தனது ஆளுகைக்கு உட்படவைத்த வழிமுறைகள் புதுவைக்கு பொருந்தி வரவில்லை , காரணம் புதுவையில் மக்களெழிச்சி ஏற்படாதே.

புதுவை இந்திய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என்கிற தீர்மானம் கூட புதுவைக்கு வெளியே கீழூரில் தான் நிறைவேற்றப்பட்டது.இது சுதந்திர போராட்டமே கூட சில குறுங்குழுவினதாது போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது . என்ன காரணத்தினால் அந்த முதல் கூட்டம் புதுவையின் மத்திய பகுதியில் நிகழாது போனது . அது நீண்ட வரலாற்று சிடுக்குகள் புதுவையை நாட்டின் மைய ஓட்டத்திலிருந்து விலகியிருந்தது .

காந்திய வழி போராட்ட வழிமுறைகள் அதை செயல்படுத்தும் முணைகளில் உள்ள யதார்த்தம் , நடைமுறை படுத்துகையில் நிகழும் மாற்றத்தை கொண்டு அவை மீளவும் மாற்றி வடிவமைக்கக் கூடிய நெகிழ்வுத் தன்மை கொண்டதாக எப்போதும்  இருந்தது . ஆகவே அது நீண்ட காத்திருப்பை அடிப்படையாகக் கொண்டது .கம்யூனிஸ்ட் தலைவர்  சுப்பையா பிற தீவிர எண்ணம் கொண்டவர்களை போலவே, நீண்ட கால காத்திருப்பிற்கு தயாரில்லாத மனநிலை இருந்தார்.