https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 25 மார்ச், 2023

“கீதா முகூர்த்தம்” - 8 . * திகைக்கும் தெய்வங்கள் *

 


25.03.2023

கீதா முகூர்த்தம்” -  8 .


* திகைக்கும் தெய்வங்கள் *





ஆஸ்திகன் திரும்பி ஜனமேஜயரிடம்மாமன்னரே, சத்வ, ரஜோ, தமோ குணங்களுடன் இப்புடவி பிறந்து வந்தது. அவை சமநிலையில் இருப்பதன் பெயரே முழுமை. ஒன்று அழிந்தால்கூட அனைத்தும் சிதறி மறையும். நீங்கள் சத்வகுணத்தைத் தவிர பிறவற்றை அழிக்க நினைத்தீர்கள். அதன் வழியாக இவ்வுலகையே அழிக்கவிருந்தீர்கள். அதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நான் தட்சனின் உயிரை கோரிப்பெற்றேன்என்றான்.


ஜனமேஜயன் சினத்துடன், “நீங்கள் சொல்லும் தரிசனத்தை நானறியமாட்டேன். நான் கற்ற வேதாந்தம் அதைச் சொல்லவில்லைஆஸ்திகரே, நீங்கள் தப்பவிட்டது இருட்டை….தீமையைஎன்றார். ஆஸ்திகன் உறுதியான குரலில், “இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்என்றான்


வெண்முரசு . முதற்கணல்


-ஜெயமோகன்-


மத நம்பிக்கையும் அதனுடன் ஆச்சாரம் சடங்கு நிகழ்வுகள் குறித்து மிக ஆவேசமாக பேசப்படுவதை ஒருவித மனவிலக்கத்துடன் பார்ப்பதுண்டு. ஆன்மீகம் பேசத் துவங்கி அது ஆசாரத்தில் வந்து நிலைகொள்வதை பற்றிய தீவிரமான எதிர்மனநிலை கொண்டிருந்தாலும் அதை செயல்படுத்தும் கருவியாக வலுவான கருத்தியல் அதைசார்ந்த நவீன மொழியின் பார்வை ஆகியவை இல்லாமையால் அவை கட்டற்று பறந்து கொண்டிருப்பதாக தோன்றும் . தொந்தரவு செய்யும் கேள்வி கேட்பவனாக எதன் முன் முற்றளிக்க முடியாமல் அது உறுத்திக் கொண்டிருக்கும்.ஒரு கட்டத்தில் நான் என்னை முற்றளித்திருந்த அந்ததனிமை மற்றும் மௌனத்தில்இருந்து நான் வெளியேற்றப்பட்டேன். வெண்முரசு முற்கணலில் அந்த ஒரு வரி அனைத்தையும் இணைத்த போது என் ஆன்மீகம் குறித்த நிலைபாடு உறுதிகொள்ளத் துவங்கியிருந்தது . அதன் பின்னர் எனது பழைய முறையை நிராகரித்து வெளியேறினேன் . அது ஒரு நாளில் நிகழ்ந்ததல்ல பல ஆண்டுகளாக மனதில் ஊடுருவிய கேள்விகளின் தேடலில் அது உருவானது .


பிறரிடம் இருந்து அவர் மாறுபட்டவராக நான் நினைத்தது அவர் ஒவ்வொரு புராண கதாபாத்திரத்தை  ஒரு சமகாலத் தன்மையை ஒரு விமர்சனம் போல முன்வைப்பவர் . பக்தியின் உச்சம் தொடும் சந்தர்பங்களில் கூட அந்த சுய ஏளனம் அல்லது பகடி ஒரு அந்தரங்க தொடுகை போல சூழ்ந்தது எனக்கு அவரை பிற பௌராணிகர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியது . அதுவரை நிகழ்த்திய தனது அத்தனை வருட உபன்யாசத்தில் இருந்து திரட்டி அவர் அடைந்ததாக இருக்க வேண்டும். உபன்யாச கருத்துக்கள் யாரையும் அது சொல்லப்படும் காரணத்தை சென்று அடைவதில்லைமணலில் வாறி இறைக்கப்படும் தண்ணீர் பார்க்கும் இடமெல்லாம் புரண்டு ஓடுவதாக தெரிந்தாலும் சற்று நேரத்தில்  வடிந்து விடுகிறது . மரபான உபன்யாசம் என்பது கேட்கும் அந்தளவில் புண்ணியம் அவ்வளவே அதற்கு வாழ்கை முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அனைவரும் தெரிந்திருந்தாலும் கேட்டவைகளில் இருந்து ஒரு சிறு துளியைக்கூட எடுத்து  அவர்கள் தங்கள் வாழ்கையின் மீது போட்டுப் பார்க்கப் போவதில்லை. அது அங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் மட்டுமின்றி அதை சொல்பவருக்கும் தெரிந்தே


அந்த கசப்பின் தீற்றல் அவரது இவ்வகை நிகழ்த்துகலையின் இப்போதைய வடிவத்தை அடைந்திருக்க வேண்டும். ஆனால் அந்த நாடகீயத் தருணத்தை  மீள மீள வெற்றிகரமான சொல்பவர் , கேட்பவர் அதை ஒருங்குபவர் என அனைவராலும் நடிக்கப்படுகிறது . நான் கிருஷ்ணப்பிரேமியின் உபன்யாசங்களை கேட்க வரும் போது அவர் தனது எண்பது அகவையை நெருங்கிக் கொண்டிருந்தார் . இளம் வயதில் மிக கறாராக தர்மம்,ஆசாரம் என அனைத்தையும் வலியுறுத்தி சொல்ல வந்தவர் பின்னர் அதை தன்னளவில் உள்ளே ஓடும் எதார்த்த சிந்தனைகளை மாறிக் கடந்து அதில் இருந்து வெளிவரும் மரபான நம்பிக்கையை வெளியெடுத்திருக்க வேண்டும். அவைதான் அவரது சமீபகால பேசு மொழியாக இருந்தது . மிக நீண்டகால அனுபவத்திலிருந்து அவர் அதை உணர்ந்திருந்தார் என

அதை நான் எனக்கு மிக நெருக்கமாக அறிந்திருக்க வேண்டும்.


அவர் மரபான பௌராணிக நிகழ்த்துக்கலையின் கூறுமுறையில் இருந்து சற்று வேறுபட்டவர் என புரிந்திருந்தேன் ராமாயண, பாகவதங்களை அதுவரை சம்ஸ்கிரத மூல பாடல் வடிவத்தில் முழுமையாக நான் கேட்டதில்லை . நல்ல ஸ்வர ஞானத்துடன் பிரமாதமான குரல் வளத்துடன் அவர் பாடியதைக் கேட்டது எனக்கு அந்த மன எழுச்சியை , உருக்கத்தை, சில சமயங்களில் அந்த கண்ணீரைக் கொடுத்திருக்க வேண்டும்தொடர்ந்து நான்கு வருடங்கள் பிற எதையும் கேட்காதவனானேன். அதைப்போல மனதை ஆற்றுப்படுத்துவது பிறிதில்லை. நான்கு வருட மௌனமும் தனிமையாலும் மனதில் சொற்கள் முழுமையாக அடங்கியிருந்ததால் சிந்தனை ஒழுக்கு நிதானப்பட்டிருந்தது


வீட்டில் தனித்து இருந்தேன். மனைவியும் அம்மாவும் உடன் இருந்தார்கள். உலகியல் பரபரப்பின் கதவுகள் வாசலில் திறந்து கிடந்தன . ஆனால் தனிமை என்பது யாருமற்ற வனாந்திரத்தில் மட்டுமல்ல அனைத்துடன் மனதளவில் துண்டித்துக் கொள்ளும் போது அது சாத்தியம். வானப்பரஸ்தம் என்பது இன்றைய நவீன உலகில் சாத்தியமாவதில்லை.அரசாங்கமும் அதை அனுமதிக்காது . தன்னுள் தான் தொலைந்து போகும் போது அந்த கதவுகளும் அடைபட்டுவிடுகின்றன.


புராண உச்ச கதாபாத்திரம் ராம கிருஷ்ணர்கள் இன்றைய சமகால மனிதர்களின் பார்வைக்கு மத்தியில் கொண்டு வந்து வைக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு பகடியாக்கப்பட்டது போன்றவை பிற பௌராணிகர்கள் செய்யத் துணியாதது .ஒரு புன்னகையுடன் அனைத்து கதாபாத்திரங்களும் சமகாலத் தன்மையோடு , நாம் சந்திக்கும் உளவியலுக்குள் இன்றைய யதார்தங்களின் மத்தியில் வந்து திகைத்திருப்பதை பார்க்க முடிந்தது . ஒரு வகையில் ஜெயமோகனின் வெண்முரசு கதாப்பாத்திரங்கள் கூட கிருஷ்ணப்பிரேமி அளவிற்கு கூண்டில் ஏற்றப்படவில்லை என நினைக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு வெண்முரசு வாசிப்பின் போது பிற மரபான நம்பிக்கை கொண்டவர்கள் அடையும் திகைப்பை துணுக்குறலை அடைந்து தேங்கிவிடாமல் என்னால் அவற்றைக் கடந்து சென்றுவிட முடிந்தது.


கடவுளர்கள் அவர்கள் மீது ஏற்றி வைக்கப்பட்டவைகளில் இருந்து வெளியே வரும் போது மனிதர்களுக்கு மிக அருகில் கொண்டு வைக்கப்படுகிறார்கள். அவர்களது அதிமாநுடம் அவர்களை தொந்தரவு செய்வதில்லை. ஜோசப் , வேளுக்குடி, கிருஷ்ணப்பிரேமி போன்றவர்கள் காட்டிய கிருஷ்ணனை விட வெண்முரசு தொட்டஇளைய யாதவன்எனக்கு மிக மிக அணுக்கமானவன் . அவனுடன் நீண்ட பயணம் செய்திருக்கிறேன் .அவனுடன் சென்று அவனது உலகத்தை பார்த்திருகிறேன். அவன் என்னுடன் நான் வாழும் உலகத்திற்குள் வந்து நிற்கிறான். அவன் அருகாமை, ஆசி, வழிகாட்டல் மட்டுமின்றி அவனால் கைவிடப்படுதலையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். அவன் இத்துடனே எனது பூஜை அறையில் நான் கொடுப்பதை ஏற்கிறான், மறுக்கிறான் அவன் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்கிறேன்.அதற்கு என்னை பழக்கப்படுத்திவர் கிருஷ்ணப்பிரேமி என்பது ஒரு ஆச்சர்யம். நான் என்னளவில் விரிந்து விரிந்து பெற்று அடைந்தது வெண்முரசில் .


வெள்ளி, 24 மார்ச், 2023

“கீதா முகூர்த்தம்” - 7 . * கடப்பதும் வாழ்வதும் *

 24.03.2023



* கடப்பதும் வாழ்வதும்  *





மிக ஆழ்ந்த மனவருத்ததில் இருந்து எதையெதை கைவிட்டு எதை பற்றி கொண்டு அதிலிருந்து மீண்டு மேலேறி வந்தேன் என்பது பற்றி யோசித்த போது சில அடிப்படை மனநிலைக்கும் சூழ்நிலைக்குமாக சில தீர்மானங்களை எடுத்து அதிலிருந்து வெளிவர முயன்றது நினைவிற்கு வந்தது . ஒன்று அன்றிருந்த பொருளாதார  நெருக்கடியில் இரண்டு  உறவுகள் கொடுத்த ஒயாத மன உளைச்சல்அந்த இரண்டும் நான் எப்படி தவிற்க நினைத்தாலும்  வாழ்வின் மத்தியி்ல் அவை வந்து விழுந்து கொண்டே இருக்கிறது . அது ஊழ்.


பொதுவாக மனம் அமைதி இழக்கும் போதெல்லாம் சில அடிப்படை கோட்பாடுகளை உருவாக்கி அதிலிருந்து மீண்டு வருவது பழகி இருந்தது .இப்போது அந்த இரண்டுக்கும் பொதுவான ஒரு நிலைப்பாடை அப்போது எடுத்தேன் . பொருளாதர நெருக்கடிநில் இருந்து வெளிவர என் வீட்டு பக்கத்தில் இருந்து ஒரு பெரிய சொத்தை விற்க வேண்டிய சூழல்  .பார்ப்பவர்கள் கண்களில் வெளிப்படும் ஏளனம் அவதூறு மற்றும் வெறும் வம்பிற்கு தயங்கி அதைப் பற்றிய முடிவெடுக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருந்தேன் . சிக்கல் தீவிரமான பிறகு அதை விற்க வேண்டிய நிர்பந்தம் உருவாகி அந்த  முடிவை எடுப்பதற்கு முன்பு என்னை அதற்கு தயாரித்துக் கொண்டேன். மிக மிக கொந்தளிப்பான மனநிலையில் இருந்த காலம். அது ஒரு இறப்பின் தருணம்”. இறந்தவனுக்கு இந்த உலகம் எந்த வகையில் பொருள்படும்” என்கிற முதல் கேள்வி அனைத்தையும் துவக்கிவைத்தது.


நினைவு தெரிந்த நாள் முதல் என்னை சுற்றியிருந்த உலகம் அதன் பார்வை,  அது என்னைப்பற்றிய மதிப்பீடு போன்றவைகள் குறித்து நான் அறிந்திருந்தது எல்லாம் நான் என்னைப் பற்றி அவர்கள் நினைத்துக் கொண்டாத எண்ணிய என் கற்பனை மட்டுமே. அதன் சாதக பாதகங்கள் உண்டு . அவையே என்னை வடிவமைத்தவை. ஆனால் வயதும் அனுபவம் காரணமாக இந்த உலகில் யாரும் யாருக்கும்  பொருட்படுவதில்லை  என்கிற புரிதல்அது ஒரு கணிப்பு , அதற்கு காலம் கடந்து  எந்த மதிப்பும் இல்லை . இது நான் இறந்த உலகம் இனி இது எனக்கு எந்த வகையிலும் பொருட்படத்தக்கதல்ல என்கிற இந்த விதியை அதில் போட்டு வெளிவந்து விட்டேன் . ஆனால் விதி என ஒன்றை பற்றிக் கொண்டு வாழ்கை மாறுகிற தருணத்தில் அதன் பின் அந்த விதி அனைத்து முடிவிலும் பின்பற்றப் பட வேண்டும் என்பது எனது முடிவாக இருந்தது . அது பின் அந்த வாழ்கை இருக்கும் வரை செல்லத் தக்கது . இனி அனைத்தும் இங்கிருந்து தொடங்கப்படும் என சொல்லிக் கொண்டேன். அதன் பின்னர் அனைத்து  சந்தர்ப்பங்களில் எழுந்த சிக்கல்கள் அனைத்தையும் அந்த விதியே” அனைத்தையும் முடிவு செய்தது.


மதம் அல்லது கோட்பாடு மூலம் உருவாகும் நம்பிக்கை உளவியலில் இங்கு முக்கியமாகச் சொல்லலாம் என நினைக்கிறேன் . கொந்தளிக்கும் போது அது தன்போக்கில் தீவிரமான எதிர் கருத்துக்களையும் வன்முறையை உள்ளூர நியாயப்படுத்திய பின்னர் சற்று நிதானத்தை அளிக்கிறது. அந்த நிதானம்  மனதைக் கூர்மை அடையச்செய்கிறது  .மனம் எப்போதும் பிரிந்து பிரிந்தே இயங்குகிறது. ஒருமனம் ஒன்றை உருவகித்தால் மறுகணம் அதை தகர்க்க தேவையானதை அதுவே ஒரேசமயத்தில் மாறிவிடுகிறது போல  . தன் மனம் ஒரு செயலைச் செய்யும் போது அச்செயலை வேறு ஒருமனம் வேடிக்கை பார்க்கிறது . எந்தப் பதற்றத்திலும் எந்த அச்சத்திலும் அது வேடிக்கை பார்க்காமல் இருப்பது இல்லை . எத்தகைய கொடூரத்தைத் தான் செய்யும்போதும் தன்னில் ஒரு பகுதி அதில் ஈடுபடுவதில்லை என்கிற உபநிஷத்து வாக்கியம் சொல்ல வருவது இதைத்தான் என நினைக்கிறேன்.இது ஜெயமோகனின் உற்று நோக்கும் பறவை” சிறுகதையில் வரும் வரிகளை என் அனுபவத்தில் போட்டு சில மாற்றங்களை செய்து கொண்டபோது சட்டென பொருந்திப் போகிறது.


உடன் பிறந்தார் வெறும் வம்பாக மாறிய போது  ஒருவித அதீத மனநிலையை அது உருவாக்கி இருந்தது  .உளம் கொந்தளித்து வழிந்தோட தயாராக இருப்பது . அது காட்டும் திசைக்கு பயணப்படுவது திரும்ப முடியாத எல்லைக்கு செல்வது  . இன்று வருத்தமாக நிலைகொண்டிருப்பது   நிரந்தர கோபமான உருவெடுப்பது  அதை தக்க வைக்க அதற்கான ஒரே கருவி அளவில்லாத கசப்பை நிலைகொள்ள வைப்பது .அம்மா எனக்கொரு பாடம் .அவரின் குரோதம் நிரந்தரமானது . ஒரு முறை உருவாகும் வெறுப்பை  இறுதிவரை தூக்கி சுமந்தார். வாழ்நாள் முழுக்க அதற்கு தேவையான கசப்பையும் , கோபத்தையும் அது உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தது  . அது ஒரு நரகம். அம்மாவின் அந்த மூர்கத்தை நான் சிறுவயதில் பார்த்ததில்லை .அப்பா அவருக்குறிய இடத்தை கொடுக்கவில்லை என்கிற தவறான புரிதல் அவரை  வருத்தம் கொண்டவராக மாற்றியிருந்தது . அது சென்று தொட்ட இடம் விபரீதமான பலனை கொடுத்தது .ஆரம்பத்தில் அவரது உள நிலையை மாற்றியமைபட்டதாக நான் உணர்ந்தது இரண்டின் அடிப்படையில் . ஒன்று அப்பாவின் மரணம். இரண்டு  2001 ல் கடும் மாரடைப்பு ஏற்பட்டு பிழைத்தது கிட்டதட்ட மறு ஜென்மம் . ஆனால் அவரின் அந்த அதீத மாற்றங்கள் அதன் பின்னர் உருவானவை. அலைபேசி மற்றும் உருப்படாத தொலைகாட்சி தொடர் அவரை இன்னும் மோசமாக்கின. அது செலுத்தும் உளவியல் செல்லாக்கு அப்படிப்பட்டது


சிறு வயதில் அவரது கசப்பு நான் அறிந்தது .அது அவரை எங்கு கொண்டு சென்றது என்பதை அறிந்திருந்தேன் . அது எனக்கு வேண்டாம் என்கிற நினைப்பே என்னை சுற்றி  நிகழ்ந்த அனைத்தின் மீதான எனது எதிர்விணையைஒரு எல்லையில் நிறுத்தி வைக்க முடிந்தது . ஒரு சொல் , சிறு இடைவெளி மனதை ஆற்றுப்படுத்தும் என உறுதியாக நம்பினேன்ஒரு சொல் பேசாத நிலை . தொடர்ந்து கேட்ட ராமாயண , பாகவத ஸ்லோகங்கள் என்னை நான, மீட்டெடுத்துக் கொள்ள வைத்தது.என் இயல்பு பிறர்மீது நிரந்தர வெறுப்பை என்னால் கொண்டிருக்க முடியாது என்கிற அடிப்படை என்னை நிதானிக்கச் செய்திருக்க வேண்டும் .


வியாழன், 23 மார்ச், 2023

அடையாளமாதல் * துலாச் சொல் *




ஶ்ரீ:



பதிவு : 669  / 858 / தேதி 23 மார்ச்  2023



* துலாச் சொல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 67.





நாங்கள் பேரணிக்கு முன்பாக நிகத்திய திட்டமிடலுக்கு தமாகா வின் இளைஞர் அணித் தலைவர் நமச்சிவாயம் கடைசி நிமிடத்தில் வந்து கலந்து கொண்டார். பிற கட்சி நண்பர்கள் ஆரம்பம் முதல் அவருக்கு அழைப்பு அனுப்ப வேண்டியதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள். காரணம் அந்த அழைப்பு நேர்முகமாக எடுத்துக் கொள்ளப்படாது சீண்டலாக அல்லது எள்ளாலை உருவாக்கலாம் என நினைத்தனர். ஆனால் அவர் கலந்து கொள்வார் என ஆழ்மனத்தால் உணர்ந்திருந்தேன். அப்போது அது வெறும் ஊகம் மட்டுமே. காரணம் அவர் தலைவர் கண்ணன் திமுக அரசில் உள்துறை அமைச்சராக இருந்தார். நிர்வாக அல்லது தனிப்பட்ட ஆளுமை மோதல்களால் ஆளும் அரசிற்குள்ளாக ஒருபோதும் தீர்க்க முடியாத சர்ச்சைக்கு அவர்கள் சென்று விட்டிருந்தனர். அதன் முடிவு என்பது அரசில் இருந்து வெளியேறுவது மட்டுமே என ஊகித்திருந்தேன் அரசியல் எப்போதும் ஊகத்தின் அடிப்படையில கணிக்கப்படுவது . நான் கண்ணனின் மனநிலை அவருக்கு அங்கு மறுக்கபடும் இடம். அவரது தன்மதிப்பு போன்றவை அதற்கு அடிப்படைக் கருவிகளாக இருந்தன


முதல் முறையாக நான் அதுவரை உருவாக்கி வைத்திருந்த அமைப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது பற்றிய முடிவில் இருந்தேன் . அவர்களை களத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்வு அரசியலின் உச்ச கட்டத்தில் நடத்தேற வேண்டும் என நினைத்தேன். கலந்து கொள்பவர்கள் பின் பல காலம் அதை பேசி பேசி உள்ளும் புறமுமாக வளரந்து கொண்டிருப்பார்கள். அரசியல் அனைவருக்கும் பொதுவில் கொண்டு வைக்க அந்த நாளை குறிக்க நினைத்தேன். அதில் எனக்கு அடுத்த கட்டம் நோக்கிய நகர்வு பற்றிய திட்டமிருந்தது. மாநில அமைப்பை முழுமையாக நிறுவிய பிறகு இதுவரை இல்லாத அளவில் பலம் பொருந்தியதாக அது உருப்பெற்றிருந்தது. கண்ணன் தலைமையில் தனித்துவம் மிக்கதாக இருந்ததற்கு இணையாக என்னுடைய இப்போதைய இடத்தை சொல்லவிட முடியாது. ஆனால் தங்கள் அரசியல் விழைவை போராட்டமாக சொல்லி நிறுவ வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. அனைத்து இடத்திலும் எங்கள் கருத்தை பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் கட்சியின் அனைத்து தரப்பினர்களையும் சந்தித்து எங்கள் முடிவை சொல்லத் துவங்கியிருந்தோம். எங்களின் செயல்பாடுகள் செய்திகளாகி வெளிவரும் அனைத்து வழிகளையும் ஒருங்கிணைத்தேன். அதில் முக்கியமாக கருதியது காவல் துறையின் உளவு மற்றும் நுண்ணறிவு பிறிவு எங்களை எப்படிக் கணிக்கிறது என்பதை புந்து கொள்ள முயன்றேன்.

 

காவல் துறையில் அரசியலில் நிகழ்வதை மட்டும் தனியாக உளவறயும் பிரிவு என ஒன்று இருப்பது அரசியலில் உள்ள அனைவரும் அறிந்தது அதில் ஒளிவுமறைவு இல்லை. அவர்களும் சிக்கலுக்கு ஏற்ப அரசியலின் முக்கிய தலைவர்களை நேரில் சந்திப்பதை வழக்கமாக கொண்டவர்கள். அன்று காலை என்னை சந்திக்க யாரோ வந்திருப்பதாக சொன்னபோது கட்சி சம்பந்தமாக யாராவது இருக்கும் என நினைத்தேன்வரவேற்பறைக்கு வந்த போது எனக்கு பழக்கமான காவல் துறை உளவுபிரிவு உயர் அதிகாரி ஒருவர் அமந்திருந்தார். எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றிய பேச்சு இருந்தது. அவர் எனக்கு முன்பே நன்கு அறிமுகமானவர் என்பதால் அவரிடம் பேச எனக்கு தயக்கமிருக்கவில்லை. மேலும் அவர் எனது தூதுவர் போல என் செய்திகளை மாநில அரசியலில் உள்ள முதன்மை ஆளுமைகளிடம் தேரடியாக கொண்டு சேர்ப்பவர். அதில் பல தரப்பு உள்ளது. எனக்கு நேர் எதிர் தரப்பிற்கும் அது சென்று சேரும் என்பாதல் அவரிடம் கூற வேண்டியதை மட்டும் தெரிவு செயது சொன்னேன். எதையும் மிகைபடுத்த முயற்சிக்கவில்லை. அது அரசியலில் நல்ல இடத்தைப் பெற்றுத் தராது. மேலும் அவரிடம் இருந்து முதன்மை தகவல்கை பெற நான் என் வார்த்தகளை மிக எச்சரிக்கையாக வைக்க வேண்டும். நாராயணசாமியிடம் கொண்ட தனிப்பட்ட மோதல்கள் பற்றி எனது எண்ணத்தை முழுமையாக மறைத்துக் கொண்டேன். என்னை கட்சியின் அனைத்து தரப்பு எண்ணத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில் இருப்பது குறித்து சொன்ன போது அவர் திகைப்படைவதை பார்க்க முடிந்தது


அன்று நிகழவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் தமாகாவில் இருந்து கலந்து கொள்வது பற்றிய முடிவு கண்ணன் எடுத்திருக்க வேண்டும் என ஊகித்தேன். தகவல் கசிந்து என்னை சந்திக்க வந்திருக்கிறார். உளவுத்துறை உயர் அதிகாரி தகவல் பெற வந்திருப்பது எனக்கு ஆரம்பம் முதலே வினோதமாக பட்டது. “ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு அழைப்பிதழ் அனுப்பட்டதற்கான விசேஷ பின்னணி ஏதாவது உண்டாஎன்றார். தகவல் முதல்வர் தரப்பிற்கானது என புரிந்து கொண்டேன். வார்தைகளில் இன்னும் கவனம் வேண்டும். சென்ற முறை திமுக அரசு கொண்டுவந்த பட்ஜெட் மீதான விமர்சன போஸ்டருக்கு எனது வீடு அலுவலகம் மற்றும் வேலை செய்த இடங்களில் நடந்த வருமான வரி சோதனை நிழலாடியது


தாமாக விற்கு அழைப்பிதழ் அனுப்பியதில் பிரத்யேக காலரணம் என ஒன்றில்லைஎன்றேன். “இளைஞர் காங்கிரஸின் செயல்பாடுகளின் பின்னணி எப்போதும் களத்தை நிரப்பக்கூடியதாக இருக்கும். ஆட்சி அதிகாரம் எப்போதும் எங்கள் கைகளுக்கு வருவதில்லை அரசியலில் எங்களுக்கான இடத்தை உருவாக்கி நிலை கொள்ள செய்வது மட்டுமே எங்களது அரசியல். அது களக் கருத்தியல் நுட்பம் கொண்டது. பல சமயங்களில் அது  தாய் அமைப்பிற்கு நேர் முரணான பாதைகளை கொண்டதாக இருந்திருக்கிறது. அகில இந்திய தலைமை அதை அங்கீகரித்திருக்கிறது. மேலும் சமச்சீர் வரி என்கிற கருதுகோள் திமுக அரசு ஏற்காத கருத்தியல். அதை எதிர்த்து போராட்டம் நடத்த அனைத்து அமைப்பும் விரும்புகிறது. இந்த காலகட்டத்தில் அவற்றிகான இடத்ததை மேடையை உருவாக்க நினைக்கிறேன். கட்சி அடையாளத்திற்கு வெளியே ஒரு சமர கருத்தை உருவாக்க நினைக்கிறேன். அதை முன்னெடுத்ததால் அதற்கு கூட்டுத் தலைமை ஏற்றிருக்கிறேன். திமுகா இளைஞர் அமைப்பிற்கும் அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறேன்


ஆட்சியில் பங்கு பெற்றிருக்கும் விவசாய அமைச்சர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்பால்விலை உயர்வை அமச்சரவையில் அறிவித்துவிட்டு அந்த முடிவை பொது வெளியில் விமர்சித்திருப்பதும் போராட்டம் நடத்தியதற்கு பின்னால் என்ன அரசியல் இருக்குமோ அதுதான் இதன் பின்னாலும் இருக்கிறது என்றேன். கட்சிகளின் அரசாங்க நிர்பந்தம் கட்சியின் நிலைபாடுகளாக மாறிவிடுவதை இந்தப் போக்கு தடுக்கும் இது போல பல இங்கும் இந்திய அளவிலும் தொடர்ந்து  நடந்ததுதான்என்றேன். ஊர்வலத்தின் இறுதியில் வன்முறை நிகழலாம் என்கிறது தகவல் இருப்பதாக மறைமுகமாக சொன்னார். ஊர்வலத்தின் இறுதியில் தபால் நிலையத்துள் நுழையும் திட்டமிருந்தது. ஆனால் அது வன்முறையாக கொண்டு செல்வது எனது பாணியில்லை. முன்னர் நிகழ்ந்த ஆலோசனை கூடுகைகளில் அகில இந்திய மாணவர் பெருமன்றம் அது போன்ற ஒன்றை முன்வைத்த போது அது பற்றி பிறகு பார்க்கலாம் என சொல்லியிருந்தேன். அது எங்கள் இருவருக்கான தனிப்பட்ட உரையாடல் அது இப்போது திட்டமிட்டு கசியவிடப்பட்டிருக்கிறது


புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...