https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

அடையாளமாதல் * உள்ளூரும் பிறிதொன்று *

  



ஶ்ரீ:



பதிவு : 667  / 857 / தேதி 28 பிப்ரவரி  2023



* உள்ளூரும் பிறிதொன்று * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 63.







ஒவ்வொரு எழுச்சியும் வீழ்ச்சியில் முடிவுற்ற பின்னால் பிறிதொன்று புதிதாக எழுந்து வரும் என்பது உலகின் விதி . அடுத்த மாற்றம் செறிவானதாக அதுவரை நிகழ்ந்த பிழைகளை கலைந்து புதிய துவக்கத்தை கொடுக்கும் என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே. ஆனால் உண்மையில் அப்படி நிகழ்வதில்லை. புதிய துவக்கம் பிறதொரு சிக்கலுக்கு இட்டுச் செல்வதாகவே இருந்திருக்கிறது . உலகின் இயங்கு விசை அப்படிப் பட்டதாக அறிந்து கொள்கிறேன். கருத்தியல் அரசியல் காலாவதியாகி பல தசாப்தங்கள் கடந்துவிட்டது.காந்தி இருந்த காலத்திலே இது நிகழ்ந்து கொண்டிருந்தது . காந்தியின் போர் அதை நோக்கி ஒவ்வொரு நிமிட அறைகூவலாக இருந்தது. வாழ்கையின் நதி அதற்கேயான ஒழுங்குடனான எப்போதும் சாமான்ய தளத்தின் நியதிபடி இருக்கிறது . சில தலைவர்கள் அதன் போக்கை விசேஷ இடத்தை நோக்கி திருப்ப முயலும் போதெல்லாம் அந்நீரில் உருவாகும் சுழல் அனைத்தையும் தன் மையம் நோக்கி இழுத்தாலும் அதால் தொடப்படாதவை தங்கள் போக்கில் சென்று மறைகின்றன. மையச் சுழல் விசை இழக்கும் போது மொத்த நதியும் தனது வழக்கமான போக்கிற்கு சென்று திரும்பி பிறிதொரு சுழல் உருவாவதற்கு காத்திருக்கிறது. அது புதிய சிலரை அடையாள படுத்துகிறது. அன்றைய சூழலில் புதிய அத்தியாயங்கள் உருவாகி வருகின்றன. இந்தப் பதிவுகள் புதுவை அரசியலில் நடந்தவற்றை இனி நடக்கக்கூடும் என நம்புவதை இங்கு கவனப்படுத்த விரும்புகிறேன்


கருத்தியல் அரசியல் இல்லாமலாகி , தலைவரை நம்பி பின் தொடர்ந்து உருவாகும் அரசியல் நிரையும் இன்றைய சூழலில் காணாமலாகி இருக்கிறது. கண்ணன் தொடங்கி மிக வேகமாக தனது இலக்கு நோக்கி நகர்ந்த இளையர்கள் இன்றைய அரசியலில் முற்றாக இடமிழந்தார்கள்தங்கள் இறுதி அறுபது அகவைகயை கடந்து கொண்டிருக்கிறார்கள். அனைத்திலும் தொடர்பறுந்துவிட்டார்கள் . கண்ணனின் இடத்தை நிரப்ப கூடியவராக பிறரால் நம்பப்பட்ட ரங்கசாமி இரு தசாப்தங்களில் அளவிற்கு அதிகமாக விளம்பர வெளிச்சம் பாய்சப்பட்டு வெளிறி போய் இன்று அனைத்தாலும் கைவிடப்பட்டவராக இருக்கிறார். அவருடன் பலமுறை நேரில் உரையாடிய அனுபவத்தின் ஆரம்பம் முதலே கட்சி அரசியலுக்கு அவர் எவ்வகையிலும் பொருத்தமற்றவராக ஊகித்திருந்தேன். கட்சி அரசியலின் மிகச் சிறந்த நிர்வாகியாக அறிந்த சண்முகம் கூட தனது இறுதி காலத்தில் ஏமாற்றத்தையே அளித்தார். அரசியல் தனது மாற்று வழியை முன்வைத்திருப்பமை அவர் அறியவில்லை. அதிலிருந்து புதிய தலைமையாக ரங்கசாமி எழுச்சி நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. இன்னுமொரு தேர்தலை சந்திக்கும் இடத்தில் அவர் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அடையும் ஏமாற்றத்தினால் நம்பிக்கை இழப்பு ஏற்பட்டாலும் கசப்படைவதில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இது எப்போதும் இப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நண்மை அதனூடாகவே அடுத்த முளைகளில் எப்போதும் வெளிப்படுவதாக நம்பப்படுகிறது


இன்று இளைஞர்களை அரசியலை நோக்கி ஈர்க்கும் அனைத்து அரசியல் சக்திகளும் தங்கள் வசீகரத்தை இழந்து போயிருக்கிறார்கள். இங்கிருந்து உருவாகிவரும் 2030 களுக்கான புதிய தலைமுறை எதில் இருந்து கிளைத்து வரக்கூடும் என இங்கிருந்து ஊகிக்க முயல்கிறேன். அதில் சண்முகத்தின்தியரியின்படி அடுத்து என்ன புரிதலை அடைய முடியும் என அவதானிக்க முயல்கிறேன். ஆனால் அது குறித்த தகவல்கள் நம்பிக்கை தருவதாக இலை .


கட்சி உள்கட்டுமானம் அகில இந்திய காங்கிரஸில் மிக அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு செயல்முறை 1990 களுக்கு முன்பு இருந்தது. அதன் மீது நம்பிக்கை இருந்த சிலர் அதன் நீட்சியை 1990 களில் முயற்சித்தனர். ஆனால் அந்த வழிமுறை

பின் முற்றிலும் சிதைந்துவிட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வகத்தில் சில முறைமையை பார்த்திருக்கிறேன். உயர் அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் சில காலம் கட்சி பதவிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு உறைநிலைக்கு கொண்டு செல்லப்பட்டு காத்திருக்க வைக்கப்படுகிறார் . பின்னர் சில காலம் கழித்து அவருக்கு உரிய இடம் உருவாகு வந்து அது அவருக்கு அளிக்கப்படுகிறது. பதவியற்ற அந்தத் தனிமை காலத்தில் அவர்கள் தங்களின் செயல்பாடுகளை பார்வையை மற்றும் நட்பு வட்டத்தை மறு வரையறை செய்து கொள்ள உதவுகிறது. அந்த காலகட்டத்தில் பலர் உதிர்ந்து சிலர் புதிதாக வந்திணைவதை பார்த்திருக்கிறேன். அந்த தனிமையை தாள முடியாத சிலர் கட்சிக்கு எதிராக திரும்பி அதில் இருந்து வெளியேறிவிடுகின்றனர். உருவாகி வந்த சிலர் ஆனந்த சர்மா , முகில் வாஸ்னிக் , குலாம்நபிஆசாத், ஹரிபிரசாத், மணீஷ்திவாரி, தினேஷ் குண்டுராவ்,ஆஸ்கார் பெர்னான்டஸ் போன்ற பல நூறு பேர்களை இப்படி அடையாளம் காட்ட முடியும்


இன்னொரு வழிமுறை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இல்லாத காலங்களிலும் அது அரசிற்கு இணையான மந்திரி சபை போன்ற ஒன்றை தனது கட்சியில் உருவாக்கி அகில இந்திய நிர்வாகிகளை் கொண்டு அமைக்கிறது ஒவ்வொரு நிர்வாகியும் ஒரு அரசு துறையை ஒருங்கிணைக்கிறார். அவர் அமைச்சராக இருந்த போது நிர்வகித்த அதே துறை. அதை இப்போது கட்சியில் இருந்து தொடர்புறுத்துகிறார். அங்கு நிகழ்வதை தனது அரசு அதிகாரத் தொடர்புகளை உபயோகப்படுத்து உடனுகுடன் அறிந்து கொள்கிறார் மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பும் போது விடுபட்டதாக அல்லது புதிதாக அறிந்து கொள்ள எதுவும் இருப்பதில்லை. சட்டென அனைத்து அதற்கான இடத்தில் சென்று அமர்ந்துவதுடன் காலதாமதன்றி செயல்படவும் முடிகிறது. அது ஒரு நல்ல அதிகார அடுக்காக செயல்பாடுகளை நெறிபடுத்தக் கூடியதாக பார்த்திருக்கிறேன். இதில் சில நடைமுறை சிக்கல்களும் இண்டு . அரசியல் அதிகாரத்தில் சிக்கலில்லாத ஒன்று என எதுவும் இல்லை.


நான் எனக்கான கருதுகோளை இங்கிருந்து பெற்றிருக்க வேண்டும்.நான் அரசு அதிகாரத்தை கையாள்வது குறித்த பயிற்சி மற்றும் அறிமுகம் பற்றிய கனவில் இருந்தேன்.ஆட்சி மாற்றம் உறுதி என்கிற அலர் ஓராண்டிற்கும் மேலாக நிலவிய சூழலில் அதை விரைந்து செயல்படுத்த நினைத்தேன். மாநில அரசியலின் இரு கூறுகளில் ஒன்று அரசியல் அதிகார அடுக்கில் முக்கிய இடத்தில் நிறுவிக் கொள்வது 


அதிகாரத்தில் நிறுவிக்கொள்வது இரண்டு அதிகாரிகள் மத்தியில் முக்கியத்துவம் பெறுவது என்பதாக இருந்தது. அனைவருக்கும் சம இடத்தில என்னை வைத்துக்கொண்டதால் நான் எனது வசீகரத்தை இழந்திருக்கலாம்   அனைவரையும் இணைக்கும் புல்லிய இருந்தேன் அனால் அரசியலில் மேஅல் நகரும் பாதை பிறருக்கு போதுமானதாக இருக்க வில்லை. இங்கு துண்டு துண்டாக சில நிகழ்வுகளை அவதானிக்க நினைக்கிறேன் ஒன்று சண்முகம் கண்ணன் மற்றும் ரங்கசாமியின் வழிமுறைகள் அவற்றில் இருந்து கிடைத்த புரிதலில் நான் எனக்கான பாதையை தெரிவு சீய்த்தேன் நான்கும் நான்குவித பலன்களை கொடுத்த அதே சமையம் இறுதியில் ஒரே இடத்தை சென்று அடைந்தன

வியாழன், 23 பிப்ரவரி, 2023

 23.02.2023


மனங்களின் துளி இன்னொரு அகம்





யோகம் அகவயமான நெறிப்படுத்தலை முன்வைப்பது. அந்த அகவய நெறிப்படுத்தலை கட்டுப்பாடுகள்’ வழியாக எய்த முடியாது. ஏனென்றால் அகத்தை கட்டுப்படுத்துவது இன்னொரு அகம். கட்டுப்படுத்த முயன்றால் அகம் இரண்டாகப் பிளந்து அகமோதல்தான் உருவாகும். அது மனஆற்றலை வீணாக்கி அழிக்கும்.


-ஜெயமோகன்-



ஒருவித திகைப்பை கொடுத்த வரிகள். நினவில் சட்டென பதிந்து விடும் நேர் அல்லது எதிர்மறையான ஒன்று சில நாட்கள் அல்லது வாழ்நாளெல்லாம் தொந்தரவு செய்து கொண்டு இருக்கிறது . எவ்வளவு வேகமாக அதை தடுக்க முயன்றாலும் அது அவற்றை தள்ளிக் கொண்டு முன்பிலும் வேகமாக வந்து முழு சித்தத்தையும் மூடிவிடுவதை பார்த்திருக்கிறேன். மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் இன்னும் துல்லியமாக அவை நினைவில் எழுந்தபடி இருக்கின்றது. ஒரு வித பதறும் எண்ணத்துடன் அதை எதிர் கொள்கிறோம்வேண்டாம் என ஒதுக்கும் ஒன்று ஆழ்மனதில் இருந்து எழுந்து வந்தாலும் நினைவை மூடி முன் நிற்கும் அது எவ்வளவு விலக்க நினைத்தாலும் இயல்வதில்லை . நான் அதை இப்படித் தொகுத்துக் கொளவேன் . மனம் என்பது பல்வேறு பிறவிகளின் வழியாக ஆத்மாவுடன் கலந்து வெளிவருகிறது . இன்றைய மனம் என்பதே கூட பல பிறவியில் இருந்த மனம் என்பதில் ஒரு துளி எடுத்து தொகுத்தது என்பதால் அதை எவ்விதத்திலும் அறுதியிட முடிவதில்லை. மரபான நம்பிக்கை கொண்டு அதிலிருந்து மெல்ல வெளிவந்திருக்கிறேன். ஆனால் அது நிகழும் வரை கொள்ளும் அலைக்கழிப்பு ஒரு போராட்டம்.


புதன், 22 பிப்ரவரி, 2023

எண்ணமும் பார்வையும்

 22.02.2023

எண்ணமும் பார்வையும்





ஆன்னியின் உள்ளம் நான் சந்திக்கும்போது ஒரு சிக்கலான நிலையில் இருந்தது. அவர் கிறித்தவ மிஷனரிகளுக்குரிய ஆழமான மதநம்பிக்கைகளால் ஆனவர். புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் என்பது ஓர் அடிப்படையான மதநம்பிக்கையும் அதைச்சூழ்ந்து சமகால உலகியல் சார்ந்த பகுத்தறிவும் கொண்டது. அந்த மதநம்பிக்கை இந்த பகுத்தறிவால் பாதுகாக்கப்படுகிறது. பகுத்தறிவின் ஐயங்களையும் பதற்றங்களையும் மதநம்பிக்கை போக்குகிறது. அந்த பகுத்தறிவு ஒரு கோட்டை, ஒரு வாள்.


https://www.jeyamohan.in/131428/


கரு [குறுநாவல்]- பகுதி 1 & 2 இரண்டும் ஷம்பாலா என்கிற திபெத்திய சொர்கம் பற்றி பேசுகிறது. இந்து மத்த்தின் நான்கு யுகத்துடன் ஒத்து போகிற வேறு ஒரு பரிமாணத்தை முன்வைக்க முயல்கிறது .வழக்கம் போல ஜெயமோகனின் வித்தைகளில் முதன்மையானது என நான் கருதும்  நிஜத்தையும் புனைவையும் வரையறை செய்யும் கோட்டை முற்றாக அழிக்கும் ஒன்று. அதை இதில் மிக வெற்றிகரமாக செய்து அந்த கோட்டை அழித்திருக்கிறார் . அதில் உள்ள வேர் சொற்களை கூகுளில் தேடும்போது . நிஜ உலகின் அத்தனை கூறும் இதில் பொருந்தி போகும் போது ஒரு வித திகைப்பை கொடுப்பதுடன் அந்தப் புனைவை முழுதாக நம்பும் ஒரு உலகை காட்டிவிடுகிறது . கரு சிறுகதை வழக்கம்போல பல அடுக்குகளாக பிரித்து பார்த்தால் புது புது திறப்புகளை கொடித்துக் கொண்டே இருக்கிறது . நான் எப்போதும் எனது நிலைப்பாட்டுடன் ஒத்து போகிற கருத்தாக சிலவற்றை வாசிக்கும் போது அது எனக்கான மெய்மையை கண்டடைய அகவயமான ஒரு மின்னலை அளித்து விடுகிறது . நிலவும் சூரியனும் காட்டும் உலகில் ஒரு கண நேர மின்னல் காட்டும் உலகம் முற்றிலும் வேறாகி விடுகிறது . அந்த கதைகயில் இருந்து எனக்கான திரண்ட ஒன்றாக மேலே உள்ள குறிப்பு எனக்கு அதை வாசிக்கும் போது கொடுத்த ஒரு மின்னலை இப்போது எனக்குள் மீண்டும் நிகழ்திக் காட்ட முடியுமா என முயற்சிக்கிறேன். இது ஒருவகையான அசட்டுத்தனமாக , அபத்தமாகக் கூட தெரியலாம்


ஆன்னியின் உள்ளம் நான் சந்திக்கும்போது ஒரு சிக்கலான நிலையில் இருந்தது. அவர் கிறித்தவ மிஷனரிகளுக்குரிய ஆழமான மதநம்பிக்கைகளால் ஆனவர். புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் என்பது ஓர் அடிப்படையான மதநம்பிக்கையும் அதைச்சூழ்ந்து சமகால உலகியல் சார்ந்த பகுத்தறிவும் கொண்டது. அந்த மதநம்பிக்கை இந்த பகுத்தறிவால் பாதுகாக்கப்படுகிறது. பகுத்தறிவின் ஐயங்களையும் பதற்றங்களையும் மதநம்பிக்கை போக்குகிறது. அந்த பகுத்தறிவு ஒரு கோட்டை, ஒரு வாள்.

 சரணாகதி தத்துவத்தில்  ஒரு ஶ்ரீவைஷ்ணவ பக்தனாக அதன் ஆழமான மதநம்பிக்கைகளால் நின்று கொண்டு புறவய உலகம் காட்டும் அன்றாடங்ளுடன் ஒரு வித சமரச , விலகல் மனப்பானமையுடன் கடந்து செல்ல இலக்கிய வாசிப்பு வழிகளை தந்துவிடுவதாக நினைகிறேன் விக்கி பீடியாவில் சரணகதி இப்படு விளக்கபடுகிறது


சரணாகதி (Saranagati - surrender) என்பது இந்து சமயத்தின் வைணவ அடியார்கள், எவ்வித பலன் கருதாமல், தங்களை உடல் அளவிலும், ஆன்ம அளவிலும் முழுவதுமாக, பரம்பொருளான திருமாலிடத்தில் ஒப்புவிக்கும் ஒரு வகையான பக்தியாகும். சரணாகதி தத்துவம் இராமானுசர் மற்றும் சைதன்யர் ஆகியவர்களால் வலியுறுத்தப்பட்டதாகும் .பக்தனின் உயர்ந்த குறிக்கோளான திருமாலையும் இலக்குமியையும் அல்லது கிருஷ்ணரையும் இராதையையும் அடைவதற்கு, சரணாகதியே எளிதானது என இராமானுசரும், சைதன்யரும் போதிக்கின்றனர்.


வீடணன் மற்றும் கஜேந்திரன் முறையே இராமர் மற்றும் பெருமாளிடம் செய்த சரணாகதி வைணவ சமயத்தில் பெரிதும் போற்றப்படுகிறது.


இதை ஒருவகை நகைப்புடன் எடுத்துக் கொண்டாலும்

இன்றைய புரட்டஸ்டண்ட் கிறிஸ்துவத்துடன் ஊடாடி பார்த்தால் ஒரு ஒப்புமை தோன்றிவிடுகிறது என்பது ஓர் அடிப்படையான மதநம்பிக்கையும் அதைச்சூழ்ந்து சமகால உலகியல் சார்ந்த பகுத்தறிவும் கொண்டதாக ஆக்கிக் கொள்ளும் போது அன்றாட உலகியல் நிலையழிவில் இருந்து வெளியேற அதைப் போன்ற ஒன்றை நான் எப்போதும் முயற்சிக்கிறேன் . அதற்கான தர்கம் உடனே உருவாகி நிலை கொண்டு விடுகிறது அதன் வேர் மதத்தில் இருப்பதை கண்டு கொண்டவுடன் அந்த மதநம்பிக்கை இந்த பகுத்தறிவால் பாதுகாக்கப்படுகிறது என்கிற சொல் என்னை மிக நெருக்கமாக அதனுள்ளே கொண்டு விட்டு விடுகிறது . அதே சமயம் பகுத்தறிவின் ஐயங்களையும் பதற்றங்களையும் மதநம்பிக்கை போக்குகிறது. அந்த பகுத்தறிவு ஒரு கோட்டை, ஒரு வாள்.


இது ஒருவகை மிக கச்சிதமான சமன்பாடு எனது ஆழுள்ளம் எனது ஆன்மீக நிலைப்பாட்டை ஒட்டி இருக்கும் ஒன்றாக நினைக்கிறேன். மரபான ஒரு கோட்பாட்டை வாழ்வியலில் கொண்டு வரும் ஒன்றை ஆழ்மனம் வெளிப்படுத்தும் கோணத்தில் சிந்தித்திருக்கிறேன் . உறுதியாக அதை பின்பற்றி இருக்கிறேன்.பலவற்றில் இருந்து மிக வெற்றிகரமாக மீண்டிருக்கிறேன்

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...