https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 29 அக்டோபர், 2021

அடையாளமாதல் * முன்னிற்கும் அறத்தின் நிழலின் *

 



ஶ்ரீ:



பதிவு : 592  / 782 / தேதி 29 அக்டோபர்  2021


* முன்னிற்கும் அறத்தின் நிழல்  * 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 68.





1991 சட்டமன்ற தேர்தலில் மடுகரை தொகுதி கட்சி நிர்வாக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக என்னை வைத்திலிங்கம் நியமிக்க இருப்பதை அவருக்காக காத்திருந்த நேரத்தில் என்னிடம் சொன்னார். எனது பெயரை தான் சிபாரிசு செய்ததாக பாலன் சொன்ன போது அந்தப் புரியாமை திகைப்பைக் கொடுத்தது . பாலன் தன் இயக்கத்திலிருந்து ஒருவரை கட்சிப் பொது வெளியில் தொடர்புறுத்த அனுப்புவது அவரை பொருத்தவரை தற்கொலைக்கு ஒப்பானது . அவர் ஒட்டு மொத்த இளைஞர் அமைப்பை தன்தாழ்வணர்வினால் உருவான நம்பிக்கையின்மையால் அவரது கண்களுக்கு அனைவரும் ஒரு நாள் துரோகம் இழைக்க காத்திருப்பவர்களாக தெரிந்தனர். கண்ணனை விட்டு அவர் குமுறி வெளியேறியவர் அதையே தனக்கு ஒருவர் செய்யக்கூடும் என்றால் அது துரோகம் என நம்பினார் . அதற்காக அவரின் எதிர்வினை அமைப்பை சூம்பி தேங்க வைத்தது . குறுங்குழுவாக அதை கொண்டு சென்றதில் பாலன் உட்பட அனைவரும் மூச்சு திணறிக் கொண்டிருந்தோம் . அரசியலின் கருத்தியலில்முரண் மற்றும் பெறப்படும் தகவலின்”  அடிபடையில் உருவாகி நிலை பெறுவது . கட்சி அரசியலில் உடன் இருப்பவர் ஒருவரை பற்றி எப்போதும் எதிர்மறை செய்திகளே முதலில் வெளிப்படும். அது சொல்பவரின் பார்வையில் இருந்து அர்த்தமாகிறது. பெறப்படும் செய்திகளும் தகவல்களுக்கும் தேரடி பொருளும் அதற்கு ஆதாரமும் ஒரு நாளும் கிடைக்காது என்பதால் அரசியலின் அடிப்படை துரோகம் வழியாகவே நிலை கொள்கிறது . அதுவே அதன்அறம்” . 


ஒவ்வொரு செய்தியும் அதிலிருந்து எழும் சந்தேகத்தையும் தனக்கு எதிரான அறைகூவலாக நினத்தார் வாழ்நாள் முழுவதும் அதற்கு எதிர் நிற்பதை அரசியல் என கருதினார்.அதன் வழியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றார். அதன் பொருட்டு எல்லோரையும் முள்முணையில் நிறுத்தினார். ஒருவருக்கு ஒருவர் ஒற்று சொல்வதை ஊக்கினார். பிறரின் ரகசியத்தை தெரிந்து கொள்வது வழியாக அவர்களை கட்டுக்குள் நிறுத்த முடியும் என நம்பினார். எதிர்ப்பு என்கிற கதவை மூடிவிடுதனூடாக அதை கடந்து விட இயலும் என நினைப்பமைபோல போதாமை பிறிதில்லை. அரசியலில் தலைமை என்பது எங்கோ ஒருவருக்கு வாய்ப்பது . செயல்படுவது எப்படி என தெரிவு செய்ய வேண்டிய சூழலை காலம் ஒருவருக்கு உருவாக்கிக் கொடு்கிறது . அவை இரண்டே வழிமுறைகள் அரசியலில் இன்று வரை எழுதாத சட்டமாக இருந்து வருகிறது . ஒன்று பொருளியல் வழியாக தேர்தல் களம் காண்பது இரண்டு தொண்டனை திரட்டி அதனூடாக எழுந்து வர முயற்சிப்பது. இரண்டாவது வழிமுறை வெற்றி பெறுவதன் ஆதார பலம் அறவுணர்வை முன்வைப்பது வெல்வது வென்ற பிறகு தக்கவைப்பது .அதில் தவறியவர்களை அந்த அறம் மன்னிப்பதில்லை. வெற்றிக்கு பிறகு அறத்தை நிராகரிப்பவர்கள் சென்று சேரும் இடம் வெறுமையின் இருள்



இளைஞர் காங்கிரஸின் செயல்பாடுகளின் களம் அறச் சீற்றத்தில் இருந்து மட்டுமே பிறக்க முடியும் அதை சமரசம் செய்து கொள்ளும் எவரும் அடைவது மரணத்திற்கு நிகரான ஒன்று . எனது ஆழ்மனத்தில் மிக அழுத்தமாக விழுந்த இந்த எண்ணத்தை வெறும் உணர்வுகளாக மட்டுமே அன்று புரிந்திருந்தேன் . அதை அன்று என்னால் தர்க்க பூர்வமாக முன்வைக்க இயலவில்லை . புது தலைவர்களை உருவாக்கி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து அதன் பெரும் வெற்றி என் கண்முன்னே நின்று கொண்டிருந்ததுஆனால் அதை விட பெரிய அரசியலின் அறம் சூழ்ச்சியென உருவாகி அனைவராலும் நான, கைவிடப்பட்ட போது எனக்கு முன்பாக இருந்த கேள்விகள் இரண்டுஒன்று எல்லோரையும் போல அதை  முறியடிக்க முயலப்போகிறேனா? அல்லது அது காலத்தின் எண்ணம் வேறு என உணர்ந்து செய்ததில் நிறைந்து அதிலிருந்து வெளியேறுவதா? என . நான் இரண்டாவது வழியை தயக்கமில்லாமல் எடுத்து அனைத்திலிருந்தும் வெளியேறினேன். அது பிறரால் எப்படி பார்க்கப்பட்டாலும்  கவலை கொள்ளவில்லை .


வைத்திலிங்கத்திடம் எனது பெயரை பாலன் சிபாரிசு செய்திருப்பதாக சொன்ன போது இதை அவர் உவந்து செய்திருக்கப் போவதில்லை. இளைஞர் காங்கிரஸின் நிர்வாகிகளில் பலர் என்னை விட இதை சிறப்பாக செய்யும் முன் அனுபவம் உள்ளவர்கள் , என்னை தேர்ந்தெடுத்தது நான் அவரை கடந்து செல்லமாட்டேன் சென்றாலும் அது குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் என கணக்கிட்டிருக்கலாம் . வைத்திலிங்கம் தனக்கு ஒருவரை பரிந்துரைக்க கேட்டதன் பின்னணி எனக்கு தெரியாது . அவர் கேட்டதனால் பாலனுக்கு தவிற்க இயலாமலாகி வேண்டும் . முதலியார் பேட்டையில் போட்டிடும் வாய்ப்பிற்கு பிறகு தனது குறுங்குழு அரசியலில் தொடர்ந்து இருந்து வரும் சலிப்பு மற்றும் இடர்பாடுகளில் இருந்து வெளியேற நினைத்திருக்கலாம் என்றால் அது ஆரோக்கியமானதே. அந்நாள் வரை அவரது இலக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு , அது இன்று நிறைவேறி இருக்கிறது இனி சென்று அடையவேண்டிய இலக்கின் முதல்படியில் ஏறியாகிவிட்டது


தொகுதி கட்சி அமைப்பை தேர்தல் துறையுடன் தொடர்புறுத்தும்  வேலை சற்று சிக்கலானது  என பின்னர் தெரிந்து கொண்டேன். வேட்பாளர் வைத்திலிங்கத்தின் கட்சி மற்றும் தேர்தல் அலுவலகத்துடன் ஒருங்கிணைக்க அவரின் அதிகாரபூர்வ முகவராக நான் முதலில் அறிவிக்கப்பட வேண்டும்பின்னர் அதற்கான தனி அடையாள சீட்டை தேர்தல் துறை வழங்கும். அதன் அடிப்படையில் வாக்காளர்களுக்கு வகுக்கப்படும் எல்லைகளை கடந்து உள் செல்ல கார் கடவு சீட்டு உட்பட பல நிர்வாக உத்திரவுகளை கையாலும் வாய்ப்பு. வாக்களிக்கும் இடம் வரை செல்லவும் மேற்பார்வையிடமும் அந்த கடவு சீட்டு அனுமதியளிக்கும். வாக்களிப்பு நிகழ்ந்து முடிந்த பிறகு ஓட்டுப் பெட்டி சரிபார்க்கப்பட்டு சீல் வைத்து அனுப்புவதில் தொடங்கி ஓட்டு எண்ணப்படும் நேரத்தில் சீல் பிறித்து, எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர் அறிவிக்கப்பட்டதற்கு வழங்கும் சான்றிதழ்க்கான சாட்சி கையெழுத்து வரை தொடர்வது . ஓட்டு எண்ணப்படும் மேஜைகள் எட்டு தேர்தல் நடத்துனர் மேஜை ஒன்று. ஓட்டு எண்ணப்படும் போது எட்டு மேஜைகளில் ஏற்படும் சிக்கல்கள் அனைத்தும் RO மேஜைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு முன்பாக தீர்வடையும். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடத்தில் அதை நிர்வகிப்பது அது சம்பந்தமாக அடையாள மற்றும் கடவு சீட்டு பெற என்னைப்பற்றிய நகராட்சி மற்றும் வருவாய்த்துறை வழங்கும் சில சான்றிதழ்களை அன்று மாலைக்குள் தேர்தல் துறையில் சமர்பிக்க வேண்டும் என அவரது தனிச் செயலர் பாஸ்கரன் என்னிடம் சொன்னார். என்னால் அன்று மாலைக்குள் அவர் கேட்பது கொடுக்க இயலாது என்பதை சொன்ன போது அவர் சிரித்தபடி அன்று மதியம் அவர் அனுப்பும் நபர் என்னை வீட்டில் வந்து சந்திப்பாதாக அவர் பார்த்துக் கொள்வார் இது பற்றி பிறகு பேசலாம் என்றார். எனக்கு புரியவில்லை . நான் அவரிடம் விடை பெற்று பாலனுடன் முதலியார் பேட்டை இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் வந்து சேர்ந்தேன் . வரும் வழியில் வைத்திலிங்கத்தை சந்தித்தது பற்றி ஒருவரிடமும் சொல்ல வேண்டாம் என்றார் . எனக்கு புரிந்தது . சுப்புரானுக்கு மட்டும் முதலிலேயே தெரியும் என்பது அவர் அது பற்றி என்னிடம் பேசிய போது புரிந்து கொண்டேன். வைத்திலிங்கத்தின் உதவியாளர் என்னை வீட்டில் வந்து சந்திக்க இருப்பதை அவரிடம் சொல்லலாமா என தெரியாததால் சொல்லவில்லை





புதன், 20 அக்டோபர், 2021

அடையாளமாதல் * பொய் பாய்ச்சல் *

 


ஶ்ரீ:



பதிவு : 591  / 781 / தேதி 20 அக்டோபர்  2021



* பொய் பாய்ச்சல்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 67.






தமிழக காங்கிரஸ் கட்சி தனது அடிப்படை முரண்களைக் கொண்டது . மூப்பனாருக்கு தமிழக அரசியலைப் போல புதுவையிலும் ஆர்வம் மற்றும் சண்முகம் தன்னை அனுசரித்து போக வேண்டும் என்கிற கருத்து அவரது அகில இந்திய கட்சி நிர்வாக அரசியலுக்கு தேவையாய் இருந்திருக்கலாம் அதன் நீட்சியாக மரைக்காயரும் கண்ணனும் தங்களை மூப்பனார் சார்பில் புதுவை அரசியலில் முன்வைத்தனர் . அது சண்முகத்தின் தலைமைக்கான அறைகூவல் அதற்கு மூப்பனாரின் ஆசி இருந்திருக்கலாம் அல்லது அப்படி சொல்லிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருந்திருக்கலாம் . 1991ல் மேலிடப் பார்வையாளராக மூப்பனார் வந்திருந்தது கண்ணனுக்கு சாதகமானதாக அனைவராலும் கணிக்கப்பட்டது . அங்கு கூடி இருந்த தொண்டர்களின் நிரை அதை மிக அழுத்தமாக மீள மீளச் சொல்லிக் கொண்டிருந்தது . ஆனால் மூப்பனாருடன் நேற்றைய எங்களது அனுபவம் எனக்கு புது செய்திகளை சொல்லியிருந்து . அரசியல் எப்போதும் நேரடித்தன்மை கொண்டதல்ல அது செய்திகளில் பேச்சுகளினாலும் உறுதி செய்யப்பட்டது போன்ற அழுத்தமான தோற்றத்தைக் கொண்டது , ஆனால் நிகழ் அரசியல் எப்போதும அதற்கு நேர் எதிரானதாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.


முதல்வர் தேர்வு நடைபெறும் இரண்டாவது மாடியில் நேர் எதிரே அந்த விடுதியின் வலப்புற நீட்சி பகுதியில் உள் நுழைவாயிலுக்கு அருகில் எங்களுக்கான அறைகள் மரைக்காயரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . அவசியம் ஏற்பட்டால் வராண்டா நடைபாதை வழியாக சுற்றி தேர்வு நடைபெறும் இடத்தை அடைய முடியும். ஒரு வேளை அது அப்படி திட்டமிடப்பட்டிருக்கலாம் . அதற்கு எல்லாவித த்திலும் வாய்ப்பிருந்ததை பின்னர் அறிந்து கொள்ள முடிந்தது.அன்று அமைப்பாக இருந்தது மாநில காங்கிரஸ் கட்சி அதை அடுத்தது இளைஞர் காங்கிரஸ் . முதல்வர் தேர்வில் எழும் அரசியல் ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள நாங்கள் தேவை என மரைக்காயர் நினைத்திருக்கலாம். ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு கூடி இருந்தாலும் அவர்கள் மரைக்காயர் மற்றும் கண்ணன் கோஷ்டி என அறியப்பட்டாலும் அவர்கள் அனைவரும் உதிரிகள் . மேலிட பார்வையாளர் அல்லது பிறரிடம் பேசும் வல்லமை உதிரிகளுக்கு இல்லை அமைப்பு மட்டுமே கட்சிக் கருத்தை முன்வைக்க முடியும் . மேலிடப் பார்வையாளர்களும் அவர்களின் கருத்தை கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியும். தேர்வு நடைபெறும் அரங்கிற்கு வெளியே நடப்பவைகளை அனைத்தையும் இங்கிருந்தே பார்க்கலாம் . கட்சி நண்பர்கள் சிலரை தேர்வு நடைபெறும் அரங்கிற்கு வெளியே நிறுத்து இருப்பதால் முக்கிய தகவல்கள் உடனுக்குடன் எங்களை வந்து சேர்ந்து கொண்டிருந்தன நாங்கள் தங்கி இருந்த மாடிக்கு செல்லும் வழி முழுவதும் ஆட்கள் நிறைத்திருந்தனர் அவர்களை தாண்டி மெல்ல ஒருவழியாக மேலேறி நிர்வாகிகள் நின்றி உந்த  இடத்தை அடைந்தும் அவர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர் நான் பாலன் மற்றும் மரைக்காயருடன் வந்து இறங்கியதை மேலிருந்து பார்த்து விட்டிருந்தனர் . நான் பாலன் மரைக்காயர் இருவரும் பேசிக் கொண்டதை எவ்வளவு தூரம் சொல்லாலாம் என தெரியததால் மூப்பனார் சொன்ன அந்த அங்கதம் பற்றி பாலன் சொன்னதை மரைக்காயர் நகைசுவையாக எடுத்துக் கொண்டார் அதில் பெரிய அரசியல் இருப்பதாக அவர் நினைக்கவில்லை என சொன்னேன்.


1991 எனக்கு எல்லாவகையிலும் மிக முக்கிய தருணமாக உணர்ந்திருக்கிறேன். என்னை அனைத்திலிருந்தும் வேறு பட்டவன் உள்ளிருப்பவன் ஆனால் எதனாலும் தீண்டப்படாதவன் என்கிற நிலைபாடு ஒருவகை ஆணவத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் , அன்றும் அந்தக் கோடு கலையாமல்தான் அந்தத் திரளை திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். யார் எந்த அரசயிலின் உயர்நிலைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டவுடன் அவர் வெளியே வத்ததும் காவல்துறை இந்த திரளை நெட்டித் வெளித் தள்ளும். என்ன ஒரு அவமானம் . எதற்காக இங்கு இப்படி கூடி இருக்கிறார்கள். நான் இவர்களை விட பரவாயில்லை போல நான் சென்று அமர ஒரு அறை இருக்கிறது . ஆனால. நானும் அனைத்தின் வெளியே தான் நின்று கொண்டிருந்தேன் . ஏதோ ஒரு வகையில் நான் இந்த மாபெரும் இயந்திரத்தின் ஒரு சிறி திருகாணி. ஆனால் அப்படி அல்ல அந்த ஒட்டு மொத்த நிர்வாகத்தை அறிந்து கொள்ள அங்கு இருக்கிறேன். சட்டமன்றத்திற்குள் செல்லும் எந்த விழைவும் எனக்கு இல்லை . நான் கட்சி நிர்வாகத்தில் தவிற்க இயலாதவனாக இருக்க முயல்வேன்.

 

கண்ணன் முதல்வர் பதவி பற்றிய தீவிர கனவு கொண்டவர் மேலும் அதற்கான அடிப்படைகளை 1987 களில் தன்னை மிகச் சரியாக பொருத்திக் கொண்டவர் 1985 முல் 1990 வரையிலான மந்திரி சசையின் செயல்பாட்டில் அனைத்து தரப்பிலும் தனக்கான ஆதரவாளர்களை அடையாளம் கண்டு கொண்டார. அதிகாரிகளின் மத்தியில், அவருக்கு இருந்த செல்வாக்கு அதுவரை மரைக்கயருக்கு மட்டுமே இருந்தது . கண்ணன் அந்த இடத்திற்கு வந்து சேரந்தது அவர் இருவருக்கும் போட்டியாளராக உருவெடுத்த பிறகு. மரைக்காயர் அதைத் தான் முதலில் அஞ்சினார்.1991 என்பதால் துவக்கம் முதல் வைத்திலிங்கம் முதல்வராக வருவார் என்கிற அரசியல் கணக்கு எழும்போதே சண்முகத்தின் தோல்வி உணரப்பட்டது


நான் முதன்முதலாக வைத்திலிங்கத்தை நேரில் பாலானால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். அவர் தனது தொகுதியில் வாக்கு சேகரிப்பு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது .அன்று அதிகாலை பாலன் என்னை தொடர்பு கொண்டு பேசும் போது தன்னை உடனே வந்து அவரது வீட்டில் சந்திக்க சொன்னார் .அப்போது வைத்திலிங்கத்தை சந்திக்க அவரது தொகுதி மடுகரைக்கு செல்ல இருப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை . நான் அவரது வீட்டை அடைந்து அவரை அழைத்துக் கொண்டு புறப்பட்ட போதுதான் அவர் மடுகரைக்கு செல்ல இருப்பதை  சொன்னார் . அது ஒரு சந்திப்பு என்கிற அளவில் நான் புரிந்து கொண்டேன் . அப்போது பாலன் முதலியார் பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்.அந்த பரபரப்பான சூழலில் மடுகரை செல்வது முக்கியமானதாக இருக்க வேண்டும என்கிற அளவில் புரிந்திருந்தேன் . வழியில் அவர் பேசவில்லை . மடுகரையை வைத்திலிங்கம் வீட்டிற்கு செல்லும் வழியில் நெருங்கும் போது அவர் வாக்கு சேகரிப்பில் இருப்பது தெரிந்தது அவர் இருக்கும் இடத்திற்கு சென்றோம் . எங்களை கண்டதும் புண்ணுருவலுடன் சற்று நேரத்தில் வருவதாக சொல்லி அருகில் இருக்கும் வீட்டில் காத்திருக்க சொன்னார். நாங்கள் அந்த வீட்டில் காத்திருந்தோம் . சற்று நேரத்தில் வைத்தியலிங்கம உள்நுழைந்ததும் பாலன் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார் . அவரது பேச்சினூடாக என்னைப்பற்றி பாலன் வைத்திலிங்கதுடன் முன்பே பேசி இருந்தது தெரியவந்தது சற்று திகைப்பாக இருந்தது . என்னை பற்றி இருவரும் என்ன பேசி இருக்க முடியும் என குழம்பினேன் . பாலன் ஒருபோதும் தனது நிர்வாகிகளை முதன்மை தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில்லை. எனக்கு இது மேலும் திகைப்பை அதிகமாக்கியது. முதலில் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என விளங்கவில்லை . நான் அமைதியாக நிகழ்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தேன் . சற்று நேர பேச்சிற்கு பின்னர் வைத்திலிங்கம் என்னிடம் நட்பாக கைகுலுக்கி விடைபெற்றார் .முதன் முறையாக பாலன் தனது குறுங்குழ அரசியலில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறார் என புரிந்து கொண்டேன் . அது நல்ல மாற்றம் இனி அமைப்பை அது முன்னோக்கி எடுத்துச் செல்ல அது பயன்படும் என கணக்கிட்டேன் . நான் பொருமை இழ்ந்து என்ன நடக்கிறது என்றேன். அவர் வைத்திலிங்கம் சட்டமன்ற தேர்தல் கட்சி ரீதியில் அவரது தொகுதி நிர்வகிக்க சிலர் வேண்டும் என கேட்டபோது என்னை பரிந்துரைத்ததாக சொன்னார்

திங்கள், 11 அக்டோபர், 2021

அடையாளமாதல் * சமனின் செயலன்மை *

 



ஶ்ரீ:



பதிவு : 590  / 780 / தேதி 11 அக்டோபர்  2021


* சமனின் செயலின்மை



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 66.





1996 களில் தொடர் கட்சி நிகழ்வுகளின் வழியாக சண்முகத்தை முன் வைக்கும் திட்டம் வழியாக அரசியலில் முன்னகர நினைத்தோம். அப்போது அங்கு நிலவிய தேக்க நிலை மற்றும் அது எந்த அணித்தலைவரையும் எதிராக அல்ல. சண்முகத்துடன் முரண்பட்டவர்கள் ஒன்று அமைதியானார்கள் அல்லது கட்சியில் இருந்து வெளியேறினர். இருப்பவர்கள் அனைவரும் அவர்களின் நிழல்களைப் போல ஒருவேளை அந்த தலைவர்கள் திரும்ப வந்தால் அவர்கள் உயிர்த்தெழலாம் என நினைத்திருக்கலாம். சண்முகம் தன்னை எதிர்த்தவர்களுடன் ஓயாது பேசி அவர்களை இன்னும் வன்மம் கொண்டவர்காளாக உருவாக்கிக் கொண்டிருந்தார். அது புரியாத்தனமில்லை பொழுது போகாமல் செல்லப் பிராணிகளை உசுப்பேற்று விளையாடுவதைப் போல. அது வளர்ப்பவரை சந்தர்ப்பம் கிடைக்கும் வரை ஒன்றும் செய்யாது , ஆனால் மற்றவர்கள் சற்று தள்ளி நிற்பது நல்லது என்பதுபோல.


இளைஞர் காங்கிரஸ் கடந்த கால செயல்பாடுகளின் வழியாக பெற்ற அனுபவம், கள சூழல் அரசியல் மற்றும் தொடர்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது . அந்த மேடைகள் கட்சியில் உள்ள அனைத்து அணிகளின் அளவீட்டு சிக்கலை பொருட்படுத்தாது மாநில காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள் மற்றும் தொகுதி தலைவர்களுடன் அந்த பகுதிகளை சேர்ந்த இளம் மற்றும் அதுவரை அங்கீகரிக்கப்படாத முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் என அனைவரும் இடம்பெற்றனர் . இளைஞர் காங்கிரஸ் நடத்தும் கட்சி கூட்டங்கள் என்பதால் அந்த அமைப்பைத் தவிர  பங்கு கொள்ளும் அனைவரும் விருந்தினர்களே அவர்கள் பங்கேற்கலாம் அல்லது தவிற்கலாம் என்பது மட்டுமே அவர்களின் முன்பு உள்ள வாய்ப்புகள் . வந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பிருந்தது யார் எந்த அணி என்கிற வரையறை செய்து கொள்ளவில்லை . முதல் நிகழ்வு நடத்துவது குறித்த அழைப்பு வெளியான போது கடும் எதிர்ப்பை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்தனர். அதில் சண்முகத்தின் ஆதரவாளர்களும் உண்டு . என்னை அழைத்து நான் கண்டிக்கப்படுவேன் என கணித்திருந்ததால் எவ்வகையிலும் அதை நிறுத்துவது என்பதை பற்றிய பேச்சிற்கு இடமில்லை என்பதை சற்று வலுவாக என் தரப்பு நியாயங்களை சண்முகத்திடம் முன்பே சொல்லியிருந்தேன். அவருக்கு இந்த சில்லறை அரசியலில் எப்போதும் ஆர்வமில்லை . ஆனால் புதிய நிகழ்வுகளால் உருவாக்கும் சமன்குலைவும் அதிலிருந்து முளைக்கும் புதிய சிக்கல்களும் அவருக்கு முன்பு திறந்து வைக்கும் புதிய சமன்பாடுகளையும் சண்முகம் விரும்பாதது . அவர் விரும்பாததை செய்வதில்லை என சொன்ன அவரது ஆதரவாளர்கள் எல்லா செயல்பாடுகளையும் தள்ளிவைத்தனர் அனத்திற்கும் அவரை சார்ந்து நின்று முகமிழந்தனர். வேறு சிலர் அரசுசூழ்தலில் திறனுள்ளவர்கள். அவர்கள்  திரைமறைவுகளில் செயலாற்றி அனைத்து தரப்பினராலும் அருவருத்து நிராகரிக்கப்பட்டனர். இந்த கடந்த கால வரலாறு காரணமாக எந்த அணியில் சென்று சேர்வதை நான் விரும்பவில்லை


அங்கு அதுவரை நிகழ்ந்தது சண்முகம் தன்னை தக்க வைத்துக் கொள்ள ஆதரவு அல்லது எதிர்பு என்கிற இரட்டைகள் மட்டுமே அரசியல் செயல்பாடாக பார்க்கப்பட்டது . அவரை எதிர்த்தவர்கள் சமரசத்தின் அடிப்படையில் பதவிகளை அடைந்தார்கள், ஆதரவளித்தவர்கள் அவரால் சமாதனப்டுத்தப்பட்டு காக்க வைக்கப்பட்டனர் பின்னர் அவர்கள் மெல்ல கானாமலானார்கள் என்கிற விசித்திர நீதி என்னை அச்சுறுத்தியது . என்முன்னே உள்ள ஒன்று நான் அரசியலில் நுழைந்து முதல் நாளில் இருந்து பார்த்தது சண்முகத்தின் எதிர்ப்பு. அது அவரை  பதவியில் இருந்து விலக்கி புது தலைவரை முன்வைப்பது . அதற்கான அத்தனை முயற்சிகளும்  சண்முகத்தால் முறியடிக்கப்பட்டது அல்லது அவை வெறும் பேரத்தை நோக்கி அழைக்கும் அரசியல் பிழைத்திருத்தல் யுக்தி . இரண்டும் மரைக்காயர் தில்லி அரசிலுக்கு சென்று திரும்பிய வேகத்தில் அது காலாவதியானது. இப்போது நினைத்துப் பார்க்கையில் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடங்கி மாற்று அரசியலை முன்வைக்கபடுவது போல எழுந்த அத்தனை உட்கட்சி அரசியலும் கரைந்து அதில் எஞ்சி நின்றது சண்முகம் மட்டுமே என்றாலும் அவர் தன்கீழ் உள்ள அரசியலை காத்திருக்க சொல்வது மட்டுமே அவர் செய்வதாக தோன்றியது. அங்கும் செயல்பட்டு வசைகளையும் எதிர்ப்புகளையும் பெற்று நிற்பது அல்லது செயலின்மையின் உச்சத்திற்கு சென்று திரளிலில் ஒரு துளியென கரைந்து போவது . செயல்படாமல் திரளில் கானாமலாவது என் வழிமுறையல்ல. எனக்கு முன்பாக வாய்ப்புகள் கதவை திறந்து வைப்பதை எனக்கான அறைகூவலாக நான் எப்போதும் எடுத்துக் கொள்வேன். அதை ஒருபோதும்நான் நிராகரிப்பதில்லை


அன்று நிலவிய ஒற்றை சூழலின் தனி ஆளுமையாக எஞ்சியது சண்முகம் மட்டுமே என்கிற இடத்திற்கு அரசியல் வந்து சேர்ந்திருந்தது . அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி அரசியலில் மெல்ல ஊடுருவும் செயல்பாடு ஒன்றை வடிவமைத்திருந்தேன் . ஆரம்பத்தில் வழக்கம் போல சண்முகதின் கடும் கண்டனத்தை பெற்றேன். ஆனால் அதன் நீண்டகால பலனை எண்ணி அதை கடந்து செல்ல தீர்மணித்தேன். அது புதிய தலைவர்களை அறிமுகப்படுத்தும் நடைமுறை அதன் செயல்பாடுகளில் உள்ள அனைத்து இடர்களை நோக்கி கேள்விகளை வைக்கும். அதிலிருந்து எழும் விமர்சனங்கள் என்னை குறிவைத்து நிகழ்பவை என்பதால் முதல் கண்டனம் சண்முகத்திடம் இருந்து எழுந்தது. ஆனால் அவற்றில் இருந்து எழும் மாற்றத்தை கண்ட பிறகு அவர் தனது எதிர்ப்பை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார் . நான் மேலும் மேலும் அதில் பயணப்பட்டுக் கொண்டே இருக்க அவர் என்னைப் பற்றிய தன் முடிவுகளை மெல்ல மாற்றிக் கொண்டே இருந்தார் . எங்கோ என் மீது அவருக்கு கசப்பிருந்திருக்கலாம். எனது நிலைப்பாடு காரணமாக நான் அடைய வேண்டிய இலக்குகள் கை தவறிப் போன போதும். அதை தீர்த்து சண்முகம் பெரிதாக முனையவில்லை என்பதும் அரசியலில் இயல்பானது என புரிந்திருந்தது நான் அவர் மீது எந்த காழ்ப்பும் கொள்ளவில்லை . அவருடைய ஐம்பதாண்டு கால அரசியல் அவருக்கு சொல்லிக்கொடுத்தது யாரையும் நம்பும் ஒன்றிற்கு எதிரான கருத்தியலை” . நான் எனது அரசியலை வெளியில் உள்ளவர்களை நோக்கி நடத்திச் சென்றேன் . அதன் வெற்றியை அந்த நேர அரசியல் சூழல் முடிவு செய்தது . எனக்கானதை நான் அங்கிருந்து பெற்றுக் கொண்டேன் ஆகவே எந்த கசப்பும் இன்றி இறுதி கணம் வரை அவரை என் தலைவர் என்றே கொண்டிருந்தேன் அதற்கு பின்னால் இருந்தது எனக்கான அரசியல் கற்றலும் புதிய தலைவர்களை அறிமுகப் படுத்துவதில் இருந்து எனக்கான எதிர்காலத்தை நோக்கி நகர்ந்தேன்.


புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 73 அழைப்பிதழ்