https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 25 செப்டம்பர், 2021

அடையாளமாதல் * வரையறை *

 ஶ்ரீ:



பதிவு : 588  / 778 / தேதி 25 செப்டம்பர்  2021


* வரையறை



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 65.





மேலிருந்து பார்த்தால் அந்த உப்பளம் அரசு விருந்தினர் விடுதி குப்புற படுத்துக் கொண்டிருக்கும் அரக்கனைப் போல இருந்தது . படிகூண்டை தலையாக நினைத்தால் இரு பக்கம் தோள்கள் முன் நோக்கி மடக்கிய இரு கைகள் வாசல் வரை நீண்டு உப்பளம் ரோட்டை எட்டிப்பிடிக்க முயற்சிப்பது போல அந்தப்வடிவ இரண்டடுக்கு விடுதி சிறியதும் பெரியதுமான சுமார் 40 அறைகளைக் கொண்டது . ஒவ்வொரு பக்கமும் இருநூறு அடிகளாவது இருக்கும் . சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்வு நடைபெற இருக்கும் அரங்கு மையக் கட்டிடத்தின் தலை போன்ற படிக்கூண்டின் பின் பக்கம் உடலைப் போல பின்நோக்கி படுத்தது போல இருந்தது . அரங்கிற்கு முதல்மாடியில் இருந்தது நுழைய முடியும் என்பதால் கீழிருந்து அரங்கிற்கு செல்லும் படிவழி காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. தேர்ந்தெடுக்பட்ட உறுப்பினர் மற்றும் கட்சியின் முண்ணனி தலைவர்கள் மட்டும் மேலே செல்ல அனுமதிக்கப்பட்டாலும் தலைவர்களுக்கு தேர்வு நடக்கும் அரங்கில் உள்நுழைய அனுமதியில்லை என்பதால் அவர்களுக்கு அரங்கிற்கு இரு பக்கவாட்டில் உள்ள அறைகளை ஒருங்கி இருந்தார்கள். கீழ் தளத்தில் உள்ள அறைகள் முழுவதையும் சண்முகம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு ஒதுக்கி இருந்தார் . கார் நிறுத்துமிடத்திற்கு இடப்புறம் விருந்தினருக்கான தனி மாளிகை இருந்த அறைகளை மேலிடப் பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது அங்குதான் மூப்பனாரும் மேலிட பார்வையாளர்களும் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் . அரங்கின் நேர் கீழ்தளம் உணவு அரங்காக திட்டமிடப்பட்டு பின் கைவிடப்பட்டிருந்தது . பொதுவாக அரசு விருந்தினர் இல்லங்கள் எப்போதும் முகச்சுழிப்பை அளிப்பது. அரசு எந்த வகையிலும் தொழில் நடத்தும் தகுதி இல்லாதது . முதல் சிக்கல் ஊழியர்களின் கடும் அலட்சியம் , ஆடம்பரம் என்கிற வகையில் இடம் தேவைக்கு அதிகமாக உபயோகப்படுத்துவது இதில் சகிக்க இயலாதது அழகூட்டு கலையில் இருக்கும் கற்பனை வறட்சி. இந்த லட்சணத்தில் உணவு விடுதி நடத்துவது கற்பனைக்கும் எட்டாதது . உணவு விடுதி நடத்தும் எண்ணத்தை அரசி கைவிட்டது நல்ல விஷயம்


தமிழக காங்கிரஸ் தலைவர்களை கட்சி ரீதியில் புதுவைக்கு வரவழைக்கும் வழக்கம் காமராஜருடன் முடிவுற்றது . காமராஜர் காங்கிரஸில் இருந்து வலகி பிறகு கட்சிசிண்டிகேட் இண்டிகேட்என சிக்கலான பிறகு தமிழ காங்கிரஸ் தலைவர்கள் புதுவையில் வரவேற்கப்படுவதில்லை. சண்முகம் நீண்ட காலம் புதுவை காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்ததால் அந்த தொடர்ச்சி பின்பற்றப்பட்டது, தமிழகத்தில் கட்சி பலமுறை பிளவுண்டது போன்றவையும் காரணமாக இருக்கலாம் . 1981 ல் திமுக வுடன் கூண்டணி முடிவான பிறகு சண்முகம் கேட்டுக் கொண்டதால் RV.வெங்கட்ராமன் புதுவைக்கு மேலிடப்பார்வையாளராக  வேட்பாளர் தேர்விற்காக அனுப்பி வைக்கப்பட்டார் . நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூப்பனார் பார்வையாளராக இப்போது வந்திருக்கிறார் . தமிழக காங்கிரஸ் தலைவரான மூப்பனார் நீக்கப்பட்டு வாழப்பாடி ராம்மூர்த்தி தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் . இருவருடைய அனுகுமுறை நேர் எதிரானது . பண்ணையாரும் தொழிறசங்கவாதியும் ஒரு போதும் இணங்கி செல்லாத இரு பின்புலங்கள் . வாழப்பாடி அரசியல் செயல்பாடுகளில் எப்போதும் ஒரு  மீறல் இருக்கும் . மூப்பனார் பண்ணையார் என விமர்சிக்கப்பட்டாலும் கட்சிக்கு விசுவாசமானவராக அறியப்பட்டார் இந்தியா முழுவதிலும் கட்சிக்கு சிக்கல் எழுந்த போதெல்லாம் சரி செய்ய அனுப்பி வைக்கப்பட்டார். பிரதமராக நரசிம்மராவ் வந்த பிறகு தென்னக அமைப்பை நிர்வகிக்க அவருக்கு மூப்பனாரின் தேவை இருந்தது அதன் அடிப்படையில் மூப்பனார் புதுவை வந்திருந்தார் . அல்லது நரசிம்ம ராங் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரையும் தில்லியைவிட்டு மாநிலத்திற்கு மடைமாற்றிக் கொண்டிருந்தார்.


மூப்பனார் சண்முகத்திற்கு எதிரானவராக கருதப்பட்டார் , அது புதுவை மாநில அரசியல் காரணமாக அது பின்னாளில் வலுவாக கட்டமைக்கப்பட்டது . அது காமராஜர் காலத்தில் இருந்து துவங்கி இருக்கலாம் தமிழக காங்கிரஸின் சிடுக்குகள் அதன் பின்புலம் அதை அடிப்படையாக வைத்ததுதான் புதுவையிலும் . 1989 களில் வாழப்பாடி ராம்மூர்த்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரானவுடன் சூழலில் வாழப்படிக்கு மிக  அனுக்கமானவராக அறியப்பட்டாலும் அவர் தன்னை ஒருபோதும் அப்படி வகைப் படித்திக் கொள்ள விட்டதில்லை . சண்முகம் எந்த பெரிய பின்னணியில் இருந்து வந்தவரல்ல , எளிய விவசாயியான அவர் முட்டி மோதிதான் இந்த இடத்திற்கு வந்தாதால் அரசியலில் தன்னுடைய இடம் என்ன? பிறருக்கு அளிக்க வேண்டியது என்ன? போன்ற தெளிவை தனக்குள் வரையறை செய்து கொண்டதால் வீண் பெருமிதங்களில் நம்பிக்கை கொண்டவராக இருந்ததில்லை கட்சியினர் யாரும் அவரை அப்படி முன் வைக்கவும் முயன்றதில்லைநான் சண்முகத்துடன் இணைந்து அவரது அரசியலை பின்தொடர்ந்த போது கண்டடைந்த இடம் இது . அவரின் 30 வருட அரசியல் செயல்பாட்டில் தன்னைப்பற்றிய கொண்ட புரிதல் காலவதியானதை அவர் அறியவில்லை அல்லது அவர் அடைந்த மாறுபாடுகளை அவரை சுற்றி இருந்தவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதன் இடைப்பட்ட காலத்தில் அவரை பற்றிய எனது புரிதல் எனக்கு சொன்னது அவரை இப்போது முன்வைக்க இயலாது போனால் நான் அடைந்திருந்த தொடர்ச்சி கானாமலாகும் . நான் அதற்கானவனாக என்னை உருவாக்கிக் கொண்ட போது புதிய வழிகளை அது காட்டிக் கொடுத்ததுடன் எனக்கான இடம் பிறர் பார்த்துக் கொண்டிருக்க மெல்ல உருவாகி வந்தது . சண்முகத்தைப் பற்றிய நிரந்தரமான கதைகள் இருந்தன அதில் சொல்லப்பட்ட சண்முகம் ஏறக்குறைய சண்முகமேதான் . ஆனால் அவரை நேரில் சந்திப்பவர்கள் கதைகளையும் அவரையும் பொருத்திப்பார்த்து அடையும் ஏமாற்றம் அவரது பலமாக அல்லது பலவீனமாக இருந்தது . எனக்கான சவால் அதை கடந்து செல்வது . மெல்ல எனக்கிருந்த சிக்கலான பகுதிகளில் நகரத் துவங்கினேன் . அதுவே என்னை அரசியலின் மையத்தில் கொண்டு வைத்தது .  


புதுவையின் உட்கட்சிப் பூசல்கள் தமிழக காங்கிரஸில் இருந்து வேறுபட்டவை. இங்கு ஆட்சி அமைக்கும் போட்டியில் இருக்கும் சிடுக்குகளை தமிழக அரசியல் ஊடுருவல் அவற்றை இன்னும் உக்ரமாக்கக் கூடும் எனவே தமிழக காங்கிரஸின் கோஷ்டி அரசியலின் கை புதுவை வரை நீளவேண்டாம் என நினைத்தார் . தங்கபாலு , திண்டிவனம் ராம்மூர்த்தி என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களாக இருந்த அனைவருக்கும் புதுவையின் அரசியலில் ஆர்வமிருந்தாலும் சண்முகம் ஒருபோதும் அதற்கு வாய்ப்பு கொடுத்ததில்லை . மூப்பனார் அல்லது பிற தலைவர்களின் ஆதரவாளராக புதுவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள தயங்கினர். அதை வெளிபடையாக்கிக் கொண்ட சிலர் வக்கீல் முருகேசன் பன்னீர்செல்வம் போன்றவர்கள் மூப்பனாரின் ஆதரவாளராக ரவீந்திரவர்மா போன்றவர்கள் வாழப்பாடி ராம்மூர்த்தியின் ஆதரவாளராக வெளிப்பட்ட பிறகும் சண்முகத்தின் அணியில் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் நீடித்தனர் . அவர்கள் தலைவர்களாக வரித்துக் கொண்டவருடன் உரையாட அந்த அடையாளம் அவர்களுக்கு தேவை என சண்முகம் உணர்ந்திருந்தார். அவர்கள் வழியாக தனது எண்ணங்களை அந்த தலைவர்களிடம் வெளிப்படுத்த பயன்படுத்திக் கொண்டார் அதே சமயம் அவர்களின் மீது சண்முகத்திற்கு இருந்த மன விலக்கத்தை மற்றவர்கள் தெளிவாக அறிந்திருந்தனர் . இந்த புரிதல் முதலில் அவர் மீது ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தியது ஆனால் அரசியலின் இயங்குவசை இப்படிப்பட்ட பல கூறுகளை ஊடுபாவாகக் கொண்டது என அறிந்து கொண்டேன். என் கழுத்திலும் இத்தகைய கயிறு என் எல்லைகளை வகுக்க கட்டப்பட்டிருக்கலாம் . ஆனால் அரசியல் என்பது ஒருவகை மீறல் நான் நகர நகர அவர் தனது கயிற்றின் நீளத்தை மறுவரையறை செய்து கொண்டே இருக்கச் செய்தேன் .

வியாழன், 16 செப்டம்பர், 2021

அடையாளமாதல் * கடவு *

 


ஶ்ரீ:



பதிவு : 587  / 777 / தேதி 16 செப்டம்பர்  2021


* கடவு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 64.





நாங்கள் அந்த அறையின் வெளியே அமைதியாக அமர்ந்திருந்தோம். யாரும் நாருடனும் பேசிக் கொள்ளவில்லை மூப்பனாரை சந்தித்து விட்டு வந்திருந்தது அபைவரிக்கும் ஒருவித கிளர்ச்சியை கொடுத்திருந்தது , அந்த ஊக்கம் போதும் இன்னும் ஆறு மாத த்திற்கு எந்த கேள்வி.ஐயும் கேட்காது ஓடச்செய்யும் விசையை கொடுத்துவிடும் . அறையில் இருந்து வெளியே வந்த பாலன் வெகு உற்சாகமாய் இருந்தார் முகம் பூரிப்பால் மலர்ந்திருந்தது என்ன?என்ன? என்று ஆவலுடன் கேட்ட அனைவரிடமும் முகத்தை இறுக்கமாக வைத்துஇங்கு பேச வேண்டாம்என்றார் ஏன என எல்லோருக்கும் அவரவர்களின் தகவல்களின் அடிப்படையில் புரிந்தது என்பதால் யாரும் அங்கு பேச விரும்பவில்லை . இதில் வேடிக்கை பாலனின் சமிக்ஞையை அவரவர் தங்களைப் பிற்றிய அதீத நம்பிக்கையில் இருந்தனர் பிறர் இருப்பதால் பாலன் பேசத் தயங்குகிறார் என ஊகித்தனர். அந்தபிறர்ஒவ்வொருவருக்கும் தன்னைத் தவிர என்கிற அர்த்தத்தில். அனைவரும் காரில் பாய்ந்து ஏற முயன்றனர். அங்கிருந்த மற்ற அனைவரையும் காலை 8:00 மணிக்கு உப்பளம் விருந்தினர் விடுதியில் ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் காத்திருக்கச் சொல்லி புறப்பட்டார் . பாலனின் வீட்டிற்கு வரச் சொல்லிவிட்டு நாங்கள் பாலன் வீட்டை அடையும் போது இரவு 9:00 மணி. பாலன் வண்டியில் ஏதும் பேச விழையவில்லை. நான் அவரை கூர்ந்து அவதானிக்க முயன்று கொண்டிருந்தேன் அது பதட்டம் அல்லது பரவசம் என ஏதோ ஒரு உணர்வில் இருந்தார்


வீடு வந்ததும் பாலன் இறங்க அனைவருக்கும் பாலன் வீட்டு சாலையில் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டது. பாலன் ஒன்றில் அமர இன்னொன்றில் என்னை அமரச் சொல்ல நான் மறுத்து அவருக்கு பின்னால் இருந்த வீட்டுப்படியில் சென்று அமர்ந்து கொண்டேன் . பூங்காவனம் என் அருகில் அமர்ந்து கொள்ள பிறர் கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டனர். காலியாக இருந்த அந்த நாற்காலியில் பாலன் மனைவி மலர் சப்பாத்தியை ஒரு தட்டில் சிறு கிண்ணத்தில் சாம்பாருடன் வந்து அந்த நாற்காலியில் வைத்தார் . மூப்பனார் கண்ணனைமக்கள் தலைவர்என அடைமொழி இட்டுச் சொன்னதை சுற்றியே அன்று இரவு பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. அதை வெகு உற்சாகமாக கைகளைத் தட்டி பாலன் சொ்லிக் கொண்டிருந்ததில் இரு௶்து எனக்கு ஏதும் பிடி கிடைக்கவில்லை. நான, கேள்வி ஏதும் கேட்காமல் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன். பீடி குடிக்க சுப்புராயன் எழுந்து கொண்டபோது நான் அவருடன் இணைந்து கொண்டேன் . இருட்டடைந்த தெரு முக்கில் சென்று நின்ற கொண்ட அவரிடம் மூப்பனார் கண்ணனைமக்கள் தலைவர்என அடைமொழி இட்டுச் சொன்னதல் என்ன பேச இருக்கிறது என்றேன் அவர் சிரித்து மக்கள் தலைவர் பட்டம் மூப்பனாருக்கான அடைமொழி அதை கண்ணனுக்கு பயன்படுத்தியதை அவர் ரசிக்கவில்லை . மூப்பனார் கண்ணனுக்கு ஆதரவாக வரவில்லை என்றார் . அவர் புதுவைக்கு வந்தது ஒன்று மரைக்காயரை சரிகட்ட சண்முகம் அவரை வரவழைத்திருக்கலாம் அல்லது அவர் வருகை தற்செயலான ஒன்று . நான் அந்த சொற்களில் இருக்கும் உள்ளர்த்தம் அரசியில் எப்படி எதிரொலிக்கும் என புரியாது நின்றேன் .


மரைக்காயரையும் பாலனையும் அழைத்துக் கொண்டு நான் விடுதியை நோக்கி கிளம்பினேன். மரைக்காயர் என்னிடம் நேராக விடுதிக்கு செல்ல வேண்டாம் மாற்று வழியில் செல்லலாம் என்றார் . மரைக்காயர் பாலனுடன் பேச விழைந்தார் என புரிந்து கொண்டேன் . அவர்கள் முன்பே சிலவற்றை பேசி இருக்க வேண்டும் . இப்போது அதன் தொடர்ச்சியை பேசினார்கள் என்னால் ஒன்றுடன் ஒன்று பொருத்தி புரிந்து கொள்ள முடிந்தது . பாலன் மரைக்காயரை நோக்கி கெஞ்சும் குரலில்என்ன காரணமா இருந்தாலும் கண்ணன் முதல்வராக வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்என்று சொல்ல மரைக்காயர்எனக்கு தெரியாதா கவலைப்படாதேஎன்றார் . “சண்முகம் அதை தடுத்துவிடுவார் ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சிலர் தனி கணக்கு வைத்திருக்கிறார்கள்” . மேலும்இந்த முறை சுயேட்டசை உறப்பினர்கள் மூவர் எனவே கூட்டத்தில்தான் எல்லாம் முடிவாகும்என்றார். பாலன் தான் சந்தேகப்படு்ம் மூன்று சட்டமன்ற உறுப்பினர் பற்றியும்சுயேட்சைகளில் ஒருவர் சண்முகத்திற்கு ஆதரவளிக்கலாம் மற்ற இருவரை கணிப்பது கடினம்என்றார். மரைக்காயரிடம் எந்தப் பதட்டமும் இல்லை ஆனால் பாலன் நிலையழிந்தவராக இருந்தார். பாலனிடம் மூப்பனாரை சந்தித்தாகி விட்டதா? என்ன சொன்னார் ? என கேட்டதற்கு பாலன் முதல் நாள் இரவு அவரை சந்தித்தையும் கண்ணனை அவர் நலம் விசாரித்த தோரணையையும் சொல்லியபோது மரைக்காயர் அதிராமல் சிரித்தார் . அதன் பிறகு விடுதி வரும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை


செஞ்சி சாலை பாலத்தை அடைந்தவுடன் காரை நெருங்கி நிறுத்தி ஏதோ சொல்ல வந்த காவலர் பாலனை பார்த்து சற்று திகைத்து பின்னால் அமர்ந்திருக்கும் மரைக்காயரை எதிர்பாராததால் பதறி ரோட்டை அடைத்துப் போட்டருந்த தடுப்புகளை விலக்கி வழி ஏற்படுத்திக் கொடுத்தார் . அங்கு நின்று கொண்டிருந்த கூட்டம் காரை நெருங்கி வந்த பார்த்து அதில் ஒருவர் அவசரமாகமரைக்காயர் வாழ்கஎன குரல் எடுக்க அவர் காரில் இருந்தபடி கும்பிட்டு பின்  என் தோளை தொட்டு முன்னே செல்லச் சொன்னார் . சுற்றி சூழ்ந்து கொண்ட கும்பலை இடிக்காமல் சற்று வேகமெடுத்ததும் கூட்டம் குழம்பியபடி வழிவிட்டது . சற்று மிகை வேகத்துடன் ரயிலவே லைனை கடந்து உப்பளம் விடுதியை அடைந்தேன் . உப்பளம் அரசினர் விடுதியின் நுழைவு வாயில் இரும்புக் கதவு சாத்தி வைக்கப்பட்டிருந்தாலும் உள்ளே கூட்டம் அம்மியது . எனக்கு காரை வெளியில் நிறுத்துவதாக? உள்ள விடுவதா? என குழம்பி நிற்க வெளியே கேட் அருகே நின்ற காவலர்கள் மரைக்காயரை பார்த்தது விரைப்பான சலாம் வைக்க கதவு பரந்து விரிந்து திறக்கப்பட்டது . உள்ளே சென்று வண்டி நிற்க வழி ஏற்படுத்திக் கொடுத்தனர் நான் விடுதி கார் நிறுத்துமிடத்தின் மையத்தில் உள்ள செயற்கை நீரூற்று மேடை சுற்றி விடுதியின் பெரிய போர்ட்டிகோ வாசலுக்குள் சென்று நிறுத்தினேன் . மரைக்காயர் தன்னை வாழ்த்தி எழுந்த கோஷத்தை ஏற்று அந்த கும்பலைக் கடந்து கரைத்து போனார் , பின்னால் பாலன் செல்ல நான் காரை வைத்துக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தேன். அங்கு காரை விட முடியாது . காரை நகர்த்தினால் காவலர்கள் வந்து மெல்ல மெல்ல வழிகாட்டி வெளியே அனுப்பி விடுவார்கள் அதன் பின் நகர்ந்து நகர்ந்து செஞ்சி சாலை பாலத்திற்கே வந்து சேர வேண்டியதுதான். திரும்பவும் விடுதிக்குள் வருவது சாத்தியமில்லை . சட்டென அதுவரை இருந்து எல்லா சிறப்பு அடையாளங்களையும் இழந்து திரளின் ஒரு துளியாவது போல கொடுங்கனவு பிறிதில்லை . எனக்கு பிறர் அடையாளமாக இருப்பதும் காருடன் நான் இருக்கும் கணம்வரை மட்டுமே எனது கௌரவம் இணைக்கப்பட்டிருக்குறது என்கிற எண்ணம் எரிச்சலை கொடுத்தது . இதுவரை திறந்த கதவுகள் அனைத்தும் எனது காரில் அமர்ந்திருந்தவருக்காக . எனக்கென அவை மீண்டும் திறக்காது . ஒரு அது ஒருநாள் திறக்கும் என்கிற நம்பிக்கையே அரசியலின் உந்து விசை


காவலரின் பார்வையில் இருந்து தப்பிக்க அந்த கார் என்னுடையது அல்ல என்பது போல சாவியை எடுத்துக் கொண்டு கும்பலில் ஒளிந்து கொள்ள முயன்றேன் . ஆனால் காவலர் அடையாளம் கண்டு கொண்டார்சார் இங்க வண்டி நிறுத்த முடியாது எடுங்கள்என்றார் . என்ன செய்வது என்று புரியமால் திகைத்தேன். இருபக்கமும் அடைத்து கை நீட்டி உப்பளம் சாலையை விழுங்க முயற்சிக்கும் அரக்கனைப் போல இருந்தது அந்த விடுதி நின்று கொண்டிருந்தது அதன் எல்லையில் இருந்து இரும்புக் கதவு மீண்டும் திறக்கப்பட முன்பு இருந்து உற்சாகம் அனைத்தும் சட்டென வடிந்து போனது.


விடுதியின் இடதுபுறமுள்ள முதல் மாடி அறையின் வெளியே பால்கனியில் நின்று கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து என்னை யாரோ பேர் சொல்லிக் கூப்பிடுவது கேட்டு அன்னாந்து பார்க்க ஒட்டு மொத்த இளைஞர் காங்கிரஸ் கூட்டம் அந்த இடத்தை ஆக்ரமித்து நின்று மேலே வரச்சொல்லி உற்சாகமாக கூவ என்னை நோக்கி கூவி மேல வரச் சொன்னது நான் கையில் இருந்த  சாவியை காற்றில் ஆட்மிக் காட்டி காரை என்ன செய்ய ? என கேட்க நல்ல வேளையாக வேறு ஒரு காரில் உள்ளே வந்த எனது ஓட்டுனர் முனுசாமி அந்த சாவியை பெற்றுக் கொண்ட பிறகே ஆறுதலடைந்தேன் . இந்த முறை அந்த கதவு வேறு ஒரு காருக்கு திறந்தது .


புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...