https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 28 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 320 * கனவின் புறவெளி *


ஶ்ரீ:



பதிவு : 320 / 490 / தேதி :- 28 ஏப்ரல்  2018


* கனவின் புறவெளி *





நெருக்கத்தின் விழைவு ” - 15
விபரீதக் கூட்டு -04






சென்னையிலிருந்து புதுவைக்கு திரும்பியவுடன் , அதிகாலை முன்னாள் அமைச்சர் ஆனந்த பாஸ்கரை தொடர்பு கொண்டு அவரது உதவியை கேட்டேன். நான் புதுவையில் இருப்பதை அறிந்ததும் திகைப்படைந்தார் . என்ன நிகழ்ந்தது என கேட்டவரிடம் ,முழுவதையும் சொன்னேன் .தன்னை வில்லியனூரில் சந்திக்க சொன்னார் . வில்லியனூர் சென்றடையும்போது காலை 6:30 மணியாகி இருந்தது . ஆனந்த பாஸ்கரன் அதிகாலை கருக்கிருட்டில் எழுந்திருக்கும் பழக்கமுள்ளவர் . நான் சென்றடைவதற்குள்ளாக காலை உணவை முடித்துக் கொண்டு , தனது வழமையான வரவேற்பறையில் காத்திருந்தார். என்னை நேரில் சென்று சந்தித்தபோது தனது பாணி வெடி சிரிப்புடன் என்னை வரவேற்றார் . “வில்லங்கத்தை நம்பி எவன் உருப்பட முடியும் , என்றார். காலை உணவு எனக்கு அங்கு ஒருங்கி இருந்தது.

ஆனந்த பாஸ்கரன் ஒரு சிக்கலான ஆளுமை . தனது வெளிப்படையான பேச்சால் பல எதிரிகளை உருவாக்கி வைத்திருந்தார் . அவருடனான எனது நட்பை பலரும் விசித்திரமாக பாரத்ததுண்டு . எங்களுக்குள் வயது ஒரு பெரிய இடைவெளியாக பிறிதொருவரால் பார்க்கப்பட்ட போது , நாங்கள் அதை கடந்த எல்லையில் இருந்தோம். எனது அரசியல் எதிர்காலம் குறித்த மிகுந்த நம்பிக்கையுள்ளவராக அவர் வெளிப்பட்டது , ஒரு உஷ்ணமான சண்டைக்குப்பின் பிறகு . அதன் பின் ஆர்வமுடன் என்னுடன் உரையாடுபவராக மாறினார். அங்கிருந்து நாங்கள் அடைந்த அரசியல் எல்லைகள் மிக விவானவை . ஆனால் அது இயல்பாக நிகழ்ந்துவிடவில்லை

பெரிய பின்புலத்திலிருந்து வந்ததினாலும் , நிலவுடைமை சமூகத்தின் அதிகார பாதிப்புமாக , ஒரு மேட்டிமை தன்மையுடன் அவரது எல்லா செயல்பாடுகளும் இருந்தன . பலர் அவருக்கு எதிர் சொல்லெடுக்க தயங்கி தெறித்ததற்கு இதுவும் ஒரு காரணம் . அனைவரிடமும் இயல்பாக பழகும் குணம் , எந்தப்புள்ளியிலிருந்து தனது தொன்மையான மரபை அடைந்து அந்த பேருரு எழும், என யாரும் கணிக்க இயலாது ,அதனால் மிக சிறிய நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார் .அதில் அவரிடமிருந்து பொருளியல் உதவிகளை பெறுவர்களே பெரும்பான்மையானவர்கள். அதில் அரசியல் சாரந்தவர் வைத்தியநாதன் மட்டுமே

அவருடைய இயல்பு தெரிந்ததனால் , விவாதத்தில் கொண்டு விடும் விஷயங்களை நான் தவிர்த்து விடுவேன் . துவக்கத்தில் ஒவ்வொரு அரசியல் விஷயங்களை குறித்த முரண்பட்ட கருத்துக்களுக்காக நாங்கள் பலமுறை விவாதித்திருக்கிறோம் . ஆரம்பத்தில் நான் எதை கொண்டு பேசினாலும் , அதற்கு அவரிடம் ஒரு சிறுவனுக்கு கற்றுக்கொடுப்பவரின் தோரணையை பார்த்தேன் . அது எதிர்சொல்லை சந்திக்காதவர்களிடம் இயல்பாக எழுவது . அது பலரின் விலகல் போக்கினால் உருவாகி வருவது

அவரது கருத்துக்களுடன் நான் முரண்படும்போதெல்லாம் , அவரை நான் சீண்டுவதாக கோபப்படுவதுண்டு .வயதும் ஸ்தானமும் அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஒரு காரணி என்கிற மனப்பாங்கை அவரிடம் எப்போதும் பார்த்திருக்கிறேன் . என் தரப்பாக எதை வைத்தாலும் அதை தனக்கு எதிர் தரப்பாக , அல்லது அவற்றை தன்னிடம் சொல்லக்கூடிய வயதோ அனுபவமோ எனக்கில்லை என்பது அவரது எண்ணமாக எப்போதும் இருந்தது

சில கருத்துக்களை விவாதம் என்கிற எல்லைக்கு கொண்டுசெல்லாமல் ,அதை ஒரு உரையாடல் என்கிற தளத்திறகு நான் நகர்த்த முயன்றபோது , அவர் தன்னுடனான சிக்கலில் இருந்து வெளிவந்தார் . ஆனால் அது எளிதில் நிகழ்ந்துவிடவில்லை . அது ஒரு உடைவு போல தோன்றி பிறகு மெல்ல விட்டுக் கொடுக்கும் மனோபாவத்தினால் மாறி வந்தது . என்னைகனவு காண்பவன்என்கிற அடைமொழிக்குரியனாக பிறிதெப்போதும் சொல்ல துவங்கினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...