https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 20 ஜூன், 2018

அடையாளமாதல் - 353 * செயல்பாடுகள் *

ஶ்ரீ:




பதிவு : 353 / 534 / தேதி :- 20 ஜூன்  2018

* செயல்பாடுகள்  *


நெருக்கத்தின் விழைவு ” - 47
விபரீதக் கூட்டு -04.




1980 களின் இறுதியில் பாலனை  கைகளுக்கு இளைஞர் காங்கிரஸ் வந்தது . கண்ணனின் அசுர வளர்ச்சியை பார்த்த  அனைத்து தரப்பும் அதை முடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டன . அவர்களைப் பொறுத்தவரை முடக்குவது என்பது மாநில கட்சி அமைப்பின் சார்பாக நடக்கும் எல்லா  நிகழ்விலும் புறக்கணிகப்பது . கண்ணனிடமிருந்து பிரிந்த பிறகு எங்களுக்கான அரசியலில் கள நிலவரத்தில் எங்களை ஸ்திரப்படுத்துவதின் வழியாக தில்லி மேலிடத்தின் ஆதரவை பெறுவது ஒன்றுதான் எங்களுக்கான ஒரே வழி  , பொது அரசியல்வெளியில் எங்களை நீர்த்துபோகச் செய்யும் முதற்சிகள் உக்கிரமாக இயங்குவதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை

ஒருமுறை அமைச்சர் ரேணுகா அப்பாதுரை நான் பாலனுடன் இணைந்து இளைஞர் காங்கிரஸில் செயல்படுவது அர்த்தமற்றது என்றும் , நான் எனது எதிர்காலத்தை வீணாக்கிக் கொள்கிறேன் என்றும் , தன்னால் சண்முகத்திடம் பேசி எனக்கான இடத்தை உருவாக்கி கொடுக்க இயலும் என்று சொன்னவரை நான் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தேன் . அன்று மிக தீவிரமாக இளைஞர் அமைப்பை அடிப்படையிலிருந்து அமைப்பை வளர்த்தெடுக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருந்த போதுதான் , இதை பற்றி ரேணுகா அப்பாதுரை பேசினார்

இரண்டு காரணங்களுக்காக அவர் சொன்னதை நான் நிராகரித்தேன் . ஒன்று அடிபடை தொடர்புகள் இல்லாமல் அரசியல் இல்லை என்பது இன்றளவும் எனது கொள்கையாக இருக்கிறது . சண்முகத்தின் கீழ் இயங்கும் அமைப்பில்  என்னைப் போன்றவர்கள் இயங்குவதற்கான களமும் சூழலும் இல்லை . அது போன்ற ஒன்றை உருவாக அல்லது உருவாக்க மாநிலத் தலைமை அனுமதிக்கப்போவதும் இல்லை , என்பதே அன்றைய யதார்த்தம்

பின்னாளில் நான் சண்முகத்தின் கீழ் அரசியலில் ஈடுபடுகிற காலம் வந்த போது இவற்றை நேரடியாக பார்கக நேர்ந்தது . அதுவே என்னை தன்னியல்பால் செயல்பட முயற்சிக்கையில் வல்சராஜால் அதை மிக எளிதாக முடக்க முடிந்தது . மாநில கட்சி அமைப்பின் அனைத்து நிர்வாகிகளும் , கண்ணன் சேவாதளத் தொண்டர் அமைப்பு மோதிக்கொண்ட நிகழ்வும் , அதன் உக்கிரமும் இளைஞர் காங்கிரஸின் மீது பெரும் வெறுப்பை உருவாக்கி இருந்தது. வல்சராஜ் தலைமை ஏற்றது அதை முடக்க சண்முகம் எடுத்த நடவடிக்கை என்றே புரிந்து வைத்திருந்தனர். அது பெருமளவு உண்மையும் கூட , அதை உடைத்த போதுதான் எனக்கான எதிர்காலம் எழுந்து வந்தது . ஆனால் அது எளிதில் நிகழ்ந்து விடவில்லை

பாலன் தலைமையில் இயங்கிய அமைப்பில் , எனது பணிகள் களத்தில் இருந்தாலும் , நான் பெரிதாக அறிமுகமாகி இருக்கவில்லை என்பது எனக்கு சாதகமான விஷயமாக இருந்தது . அதுவே நான் புதிதாக களத்தை உருவாக்கும் முயற்ச்சியில் எனக்கு பெரிதான எதிர்ப்பு கிளம்பவில்லை . தலைவரின் ஊசுடு கொடியேற்ற விழாவின் போதுதான் , நான் வெளிப்பட்டேன் . அது பற்றிய எனது முந்தைய பதிவுகளில் விரிவாக பதிந்திருக்கறேன். அதன் பின்னர் எனது நடவடிக்கைகளை முடக்கும் வேலைகள் தொடங்கின , ஆனால் அதற்கு காலம் கடந்து விட்டிருந்ததை மிக தாமதமாக அறிந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...