https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 24 மார்ச், 2017

வெண்முரசு-முதற்கனல்-வேள்விமுகம்( புதுவை கூடுகை பதிவு)


திரு அரிகிருஷ்ணனது உரை   
அன்பு நண்பர்களுக்கு 


வணக்கம். நேற்றைய நகர்வு ஒரு நுண்மைக் குறியீடு என்பதையே அது நிகழ்கையில் முழுமையாக உணர முயல்கிறேன் . பெரும் தருணங்கள் நம்மிடையே வந்தமர்நது பின் அதன் சூடும்,சுவடும் தெரியாமல் எழுந்தும் சென்றுவிடுகிறது . அந்த தருணத்தை நம்மால் முழுமையாக  'ஒருநாள் அறிய இயலலாம்'. ஊழிப்பெருவளி அந்த கணத்தை நமக்கு அருள பிராத்திக்கின்றேன்.  

பிரதிநியாக, சாட்சியாக அமர்ந்திருந்த திருமதி.சுதா அவர்களுக்கு உளம்நிறைந்த நன்றி.  அது நிகழ உதவிய திரு.சிவாத்மாவை நினைத்துக்கொள்கிறேன். கூடுகை பற்றிய நம்பிக்கையை விதைத்து உந்தித்தள்ளிய திரு.கடலூர்சீனு, இலக்கிய கணத்தை அகக்கண்கொண்டு பார்க்க உதவினார். "புரிவது எளிதல்ல எனப் புரிந்தது" அவருக்கு நன்றி. திரு.மணிமாறன் சரியான தோழமை கொண்டு எல்லாவிதத்திலும் உதவியெனப்படுவது ஒன்றையே செய்தும், கம்ப ராமாயணத்தின்பால் ஈடுபாடு கொண்ட திரு.திருமாவளவனையும் அறிமுகப்படுத்தினார்.  

திரு.தண்டபானி துரைவேலு அவர்களும்திரு.நாகராஜ் அவர்களும் ஊழின் கணத்தின் இரு எல்லைகளைப் பற்றிஇருவரும் முன்பே பேசிவைத்துக்கொள்ளாதே பேசியது, உச்ச நிகழ்வுகள். திரு.நாகராஜ் அவர்கள் பேசிய சாங்கிய பெருவெடிப்புக் கொள்கைதற்செயல் வாதத்தையும் (பௌதிகவாதம்) அதை ஒட்டி அதன் மறு எல்லையான வேதக்கோட்பாடுகளை பிரபஞ்ச சிருஷ்டி ஸ்திதி சம்மாஹாரம் எனும் தன் வாலை தான் கவ்வி இருக்கும் பாப்பு பற்றிய குறியீட்டை பெருந்திட்டவாதத்தை முன்வைத்தார் திரு.தண்டபானி துரைவேலு அவர்கள் நல்ல  முரணியக்கம். எனக்கு அதன் தொடர்பின் இழை புரியத்தொடங்க நெடுநேரம் எடுத்துக்கொண்டது. 
ஸ்ரீமுகம்
வியாசர் மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்கிறார் எனவே அதன் மறு ஆக்கமான வெண்முரசு லௌகீகமும் ஆன்மீகமும் கலந்த தொன்மை இலக்கியம். அதனாலேயே அது எக்காலத்தும் விவாதப் பொருளாகிறது. பௌரானிகர் பாணி.............பிற்கால வேதாந்த கால்கட்ட பாணி வேளுக்குடிகிருஷ்ணப்பிரேமி பேச்சு .......நவீன காலகட்ட  ஜெயமோகன் பாணி...
இரண்டு தமிழ் மறுஆக்கம் ஏககாலத்தில்
உபநிஷத்து = அருகில் அமர்ந்து உரையாடல்
நீல லோகிதாஸ் ஜெயமோகன் உரையாடல்கள்
இது பின்நவீனத்துவம் காலத்தை சார்ந்ததாக வடிக்கப்படுவதால் கி.மு கி.பி என்பத போல் சுதந்திர இந்தியாவிற்கு முன பின் என சார்ந்து புரிந்து கொள்ளத்தக்கது......
இந்து ஞானமரபின் ஆறு தரிசனங்கள் என்பதை இதன் சாவியாக கொண்டால் இது பல அற்புதங்களை திறந்து காட்டக்கூடியது......
வெண்முரசு ஒரு நாவல் என்கிற அளவிலே நின்று விடக்கூடியதாஅப்படி எனில் இது விவாதப்பொருளாவதற்கு என்ன அடிப்படை...........
வெண்முரசின் புனைவில் உள்ள நிகழ்காலத்துக்கான குறியீடுகள் பற்றி அறிவது
இனி வருங்காலத்தில் வெண்முரசு தவிர்க்க இயலாதது ஏன்எப்படி...
விவாதம் நம் மொழி ,எழுத்து நடைபுரிதலின் வேகம் மற்றும் சாகச திறப்புகளின் உற்சாகம்
நாஞ்சில் நாடன் சொன்னது போல பல லட்சம் தமிழ் சொற்கள் மீட்டெடுத்தல் நிகழும்
கங்குலி மஹாபாரதம்
ஞானத்தின் ஊற்றுக்கண்ணான இந்த வரலாறு மூவுலகங்களிலும் அறியப்பட்டதாகும். இஃது உயர்பிறப்பாளர்களிடம் விபரமாகவும்சுருக்கமாகவும் என இரு வடிவங்களில் உள்ளது. இது பண்டிதர்களால் புலமைக்காகவும்உணர்வுகளுக்காகவும்மனித தெய்வ உரையாடல்களுக்காகவும் அலசி ஆராயப்பட்டதாகும். 
வியாச பாரதம் நிகழ்வே காலத்தின் வடிவிலே சொல்லப்படுகிறது ஒரு சபைக்குறிப்பு போல.
ஜெ கதை மாந்தரை கதை சொல்லியாக வருகிறார்.
பாரதம் வியாசர் - சூத பௌரானிகர் வைசம்பாயினர் - ஜனமேஜயன் . சூத பௌரானிகர் - ரிஷிகள் நைமிசாரண்யம் .
இரண்டு வம்சம் சூரிய ராமன்  சந்திர கிருஷ்ணன் வம்சம்.
 மூன்று அடுக்கு - வேதம்யோகம்விஞ்ஞானம் - தர்மம்அர்த்தம்காமம் (அறம்பொருள்இன்பம்).
சூத பௌரானிகர் மேடையில் இருக்க பிராமண ரிஷிகள் ஜாதி மறந்து கீழே அமர்ந்து கேட்டது .அவரிடம் பாரதம் இருந்ததே இது ஞானத்திற்கே முதலிடம் என்பது தெளிவு.
பாரதம் 60 லட்சம் ஸ்லோகமாக அதில் முப்பது லட்சம் {30,00,000} செய்யுளடிகள் தேவலோகத்தில் அறியப்பட்டுள்ளது. பதினைந்து லட்சம் {15,00,000} செய்யுளடிகளைப் பித்ருக்களின் உலகம் அறிந்திருக்கிறது. பதினான்கு லட்சம் {14,00,000} கந்தர்வலோகத்திலும்ஒரு லட்சம் {1,00,000} மானுட உலகத்திலும் அறியப்பட்டிருக்கிறது.
இன்றும் வஷபாம்புகளுக்கு  அரனாக ஆஸதீகர் வாக்குறுதி ஸ்லோகம் உள்ளது.
சரப்ப யாகத்தில் ,பெயர்களின் அட்டவனை ரிஷிகள் முதல் வந்து விழுந்த பாம்புகளின் குலம் மற்றும் பெயர்.
ஒவ்வொருவருக்கும் புராணத்தில் இடம் பினைவுகள் பிரம்மிக்கவைப்பவை.
வாழ்வில் நடந்தவை அவற்றினால் நான் அடைந்தவை இவற்றின் மூலம் நாம் கண்டடைதல் என்ன என தொடரும் பயணம். கண்டடைதல் ஒரு வதை என தொடங்குகிறது .
நடந்தவைகளைதத்துவமாக்குதல் ,தத்துவத்திலிருந்து ,புரிதலில் இருந்து பொருந்தும் இழைகளைக் காணுதல் பொருத்துதலுக்குப் பின்னறே கண்டடைதல் நிகழ்கிறது .
இது எந்த ஒரு விஷயம் எனத் தொடங்கி வாழ்வியல் என முடிவுறுகிறது . உபதாண,நிமித்த மற்றும்,சககாரி காரணம் என மூன்று வகைக்காரணங்கள் ,எனக்கு . உபாதணம் - ஆழ்படிமம்நிமித்தம்  - மனம்சககாரி - ஜெயமோகன்.
நான் இதை இப்படியே உணர்கிறேன் . எல்லாவித கேள்விகளுக்கும் ஆழ்மனபடிமத்திலே பதில் உண்டு என நம்புகிறேன் . அவை சில நிகழ்வுகளெனவும்காட்சிகளெனவும்மின்சொடுக்குகளான புரிதலெனவும்  சில அற்புத தருணங்களாக நமக்கு வாய்க்கின்றன. அவை அடிக்கடி நிகழ்வதில்லை .ஆனால் அவை அடிக்கடி நிகழ்கின்றன ஒரு ஆழ்ந்த இலக்கிய வாசிப்பில்.
ஆர்பரிக்கும் நீர்ப்பெருக்கென ஓயாது தாக்கும் எண்ணம் எப்பொழுதும் புரிதலையே கோருகின்றன . ஆழ்மன கங்கை உடைபெடுக்கும் தருணம்   நிலைகுலைகிறேன்.அவை சில ஏற்றசால் விள்ளளாக முகர்தெடுத்தாலோ அல்லது ஒரு கழிமுகம் கண்டு அவை ஏறி இறங்கினாலோ  நிம்மதி அடைகிறேன் .
எனக்கு ஜெயமோகன் அந்த சால் குவலைப்போல,கழிமுகம் போல .
எண்ணங்களை அவர் எழுத்துகளில் இருந்தோ கருத்துக்களில் இருந்தோ அடைகிறேன் ஆகவே இலக்கிய வாசிப்பு என்பது சுவாசம் போலாயிற்று.இதுவரை அவரை மட்டுமே வாசித்திருக்கிறேன். உலக இலக்கியங்களை தனித்தனியே வாசிக்க இயலாது . ஆனால் வாசித்தவரின் கண்களில் எனக்கான பார்வை இருப்பதால் அந்த ஜன்னல்களின் வழியே அவைகளைக் காண இயலும் .அவர் ஆக்கத்தில் வரும் "பசு வைத்திய நூல்" கொண்டு  அனைத்தையும் அறிந்தது போல அது ஒரு அங்கதமென்றாலும். ஏனெனில் வாழ்வின் தருணங்கள் பெறும்பாலும் அங்கதமாகவே முடிகின்றன.
நாகம் . ஒரு குறியீடு
நாகம் இது உலக ஆண்மீக விஷயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது . குறிப்பாக தட்சகன் இவன் மகாபாரதக் காவியத்தில் குறுக்கு நெடுக்கிலும் ஊடுபாவக வரும் ஒரு பாத்திரம் . மிக முக்கியமாக வெளிப்படும் தருணங்கள் ஜனமேஜயன் யாகசாலை பரீட்சித்து  மகாராஜா மரணம் காண்டவனத் தகனம் எனப் பல இடம். உத்தாலகர் ஆச்சார்ய சம்பாவணை பிரித்தல் என.
நாகர் வாழ்ந்த பகுதி சீர்காழி மாயவரம் கும்பகோணம் பகுதி நாங்கூர்,நாகூர் நாகபட்டினம் தொடங்கி தமிழ்நாட்டின் இடைப்பட்ட இடங்கள் இது நாக ராஜ்யம் எனப் படுகிறது.ராஜா தட்சகன்
வேதம் விளைந்த மண் மகாபாரதத்தில் அஸ்தினாபுர புரோகிதராக வரும் தௌம்மியர் ஒரு தமிழர் இவர் வியாசரின் சீடர்.
உபநிஷத்துக்களில் பேசப்படும் உத்தாலகர் உதங்கர் இவர்கள் யாவரும் தௌம்மியரின் சீடர்களே.
சம்ஸ்கிரத வேற்ச்சொல் சில தமிழில் இருந்து சென்றவை என்கிறார் திரு.சோதிபிரகாசம் அவர்கள் .உதாரணம் லோகாயத மதம்  வேர்ச்சொற் உலகு-உலகாயதம்-லோகாயதம்.
சாங்கியம் தமிழில் தோன்றியதாக இருக்கலாம் என்கிறார் திரு.சோதிபிரகாசம் அவர்கள்.அவ்வாறு எனில் பிரபஞ்ச அடிபடைகளான ஐம்பெரும் பூத சித்தாந்தம் இங்கிருந்து சென்றிருக்க வேண்டும் என்கிறார் .
ஜனமேஜயன் -ஆஸ்தீகர் சுமூக உறவு வெண்முரசில் மாறுபடுகிறது ,மேலும் தான் நடத்த இருக்கும் அஸ்வமேத யாகத்தை நடத்தித்தர சொல்லுகிறார்
இவர் திரு.ஜெயமோகனின் இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் ஆக்கத்திற்கு அனிந்துரை அளித்தவர். இந்தியா என்கிற சிந்தனையை 1947 முன்,பின் என இரண்டாக வகுத்துக் கொள்கிறார்கள்.
இது உத்தங்கர் மற்றும் தட்சகனின் தனிப்பட்ட பழிவாங்கல் என நினைக்க தோன்றும் அளவில் தனி அலகுகள் கொண்டவை.
ஆழ்ந்த நட்புடன்
கிருபாநிதி அரிகிருஷ்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...