https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 28 மார்ச், 2017

அடையாளமாதல் - 17 (அரசியல் களம் - 15 உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமை -1)

ஶ்ரீ:


அடையாளமாதல் - 17
அரசியல் களம் - 15
உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமை -1

மூன்று வருட தொடர்பு உள்வட்டத்தின் எனக்கு அவரகளின் அரவனைப்பு என போய்கொண்டிருந்தது .1989 தேர்தல் . காங்கிரஸ் கட்சியரசியல் களம் தேர்தலரசியல் நேரத்தில் ஆயாசமளிப்பது . ஆங்கில மற்றும் இந்தி மொழி தெரியாது எளிய தொண்டர்கள் படும்பாடு சொல்லில் மாள்வதில்லை .வேளைவாய்பை தேடுவது போல.

தன் சுயத்தை காகிதத்தில் எழுதியும் கடந்த கால நிகழ்வுகளை செய்தித் தாள்களின் பேப்பர் கட்டிங்கும் அதற்கான ஆங்கில பொழிபெயரப்பு இப்படி ஒரு கோமாளித்தனமானது . சில கலைச்சொற்களின் மூலமாக , வந்தவரிடம் விளக்க அந்த கோப்பு சடுதியில் எவரைநோக்கி குற்றம்சாட்டப்பட்டதோ அவரிடமே சென்று அடைக்கலமாகும் , வந்த கூட்டம் சாதனை செய்தது அளப்பரையுடன் சென்று சேரும் .

உற்சாகமிழப்பு என்பது மனிதனுடைய இயல்பான குணம் , தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி பாய்வது போல . அவர்களுக்கு அரசியல் தேவையற்றது . எளிய உடன்பாடிற்கு இணங்குவது அவசியமற்றது .

இளைஞர் காங்கிரஸின் போக்கை முடிவு செய்தது அதன் முன்னாள் தலைவர் கண்ணன் . மிக சாதாரண ஏழ்மையான சூழலில் பிறந்து தன் அமைப்பின் மூலமாக தான் லட்சியமாக நினைத்ததை அடைந்தவர் .

ஏனோ அவரது வன்முறைபானி எனக்கு உகப்பாக இருந்ததில்லை , தனக்கென ஒரு கூட்டத்தை இளைஞர் காங்கிரஸ் அமைப்பாக மாற்றி அதன் விசையில் விளைந்தவர் . உணர்ச்சி ததும்ப பேசி அனைத்து இளைஞர்களையும் மின்னூட்டம் அடையச்செயவது  வழமையாக இருந்த காலம் . அப்போது அதற்கு ஒரு பெரும் ஈற்பு இருந்தென்வோ உண்மை.

அரசியல் கனவை சாதாரண மக்களின் மனதில் விதைப்பது அவர்களை ஒரு நல்ல அரசுசூழ்தலுக்கு இட்டுச்சென்றது . சமூக விழுமியங்களின் மீது நம்பிக்கைகளையும் , தன்னால் எந்த சூழலிலும் தன்னையும் தன்சூழ் சமூகத்தையும் அதன் விழுமியங்களுடன்  நிகர்நிலையில் வைக்க முடியும் என்கிற தன்நம்பிக்கையும் மிகதோழமையான, தன்னகங்காரமற்ற தனியாளுமைகளால் ஆனது.

வளர விரும்பும் இளந்தலைவர்களின் அரசியலின்  தனிப்பயன்பாடு அது . அதிகாரவர்கத்தின் முறைசாராமை ,அதன் வழுவாமைக்கு எதிராக தன் கண்டன குரலை பதிவு செய்யவாவது ஒரு தளம் அது இருந்தது வந்திருக்கிறது .

எந்த சூழலிலும் உள்ளூழல் இருந்து கொண்டுதான் இருக்கும் . அதன் போக்கை கட்டுபடுத்தும் அமைப்புகளாக இவை செயல்பட்டு வந்தன .அதை இன்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாட்டில் பார்க்கலாம் அவர்கள் பொரும்பாலும் புறநகர் மற்றும் கிராம்ப்புறங்களில் செலூக்கம் கொண்டதாக இருந்து வருகிறது.

இதில் அனால் நகர்சார்ந்த பகுதிகளில் அவை செயலபட்டதில்லை . காரணம் நகர்பகுதிகள் மக்கள் தனியர்கள் , சமூகங்களாக பிறந்திருந்தாலும் பொது பிரச்சனைக்கு வாசல் தாண்டி வரதாவர்கள் , நாசூக்கானவர்கள் . இவர்களின் சிடுக்குகள் பொதுதளத்தில் இருந்தாலும் அனேகமாக  தனிப்பட்ட செல்வாக்கில் அதை அடைய முற்படுபவர்கள் .மக்களின் பகுதிகள்  நான்கு விதத் தொகுதிகளாக அவை பிரிந்து கிடக்கன்றன

நகர் பகுதிகள்.
புறநகர் பகுதிகள்.
கிராப் பகுதிகள்.
புறக்கிராமம் பகுதிகள் .

இந்த நான்கின் தேவைகளும் விழுமியங்களும் வெவேறானவை அவைகளை கட்சிசார்ந்த புரிதலின் வழியாகத்தான் ஒன்றினைக்க இயலும் . இப்படி சொல்கிறேன் , அரசாங்கத்தில் அமைச்சர் போன்ற முக்கிய பதவி வகிக்கும் ஒருவருக்கு தன் தொகுதியை தாண்டிய மக்களால் ஆகக் கூடியது ஒன்றில்லை என்கிற நிலையில் ,அந்தந்த தொகுதியில் தேர்தெடுக்கப்பட்ட ஆளும்  அல்லது எதிர்கட்சி உறுப்பினரின் பரிந்துரைக்கும் விஷயங்கள் பொது நோக்கு கொண்டவைதான் என யாராலும் கூறவியலாது .

அதேசமயம் தொகுதிமக்களின் அசல் தேவைகளை அறிவதற்கு அவர்களுக்கு உதவக்கூடியவர்கள் அவரது தனிப்பட்ட அனுதாபிகளே. அவர்கள் பெரும்பாலும் தேர்தல் களக்காழப்பில் இருந்து விடுபட முடியாமல் அதனாலேயே உந்தப்படுபவர்கள் . எக்காலத்தும் அவர்கள் பொது விழுமியத்தில் நிலை நிற்கமுடியாதவர்கள் .

தேர்ந்தெடுக்கப்ட்ட உறுப்பினரும் , இத்தகைய ரசிகர்பட்டாளத்தையே விரும்புவர். இத்தகைய பட்டாளமே  கூட எவ்வளவு காலம் இவருடன் பிரயாணபடுவார்கள் என்பதற்கு உத்திரவாதமில்லை . அவர்கள் ஒருகாலமும் கட்சி அடையாளத்திற்கு வரமுடியாது . ஏனெனில் அது அவரது ஓட்டரசியலை சார்ந்ததாகவும் தன்சார்புடையதாவே இருக்க வாய்ப்புள்ளது .

அரசியல் கனவுமயமானது ஒருவர் கனவு நனவாகாது போகலாம் ஆனால் பலபேருடைய ஒரே கனவு தோற்பதில்லை . என் அரசியல் தாரகமந்ரமாக இருந்ததும் இதுவே. ஆனால் செயல்படும் பாணிதான் வேறுபாடுகளை உடையது . இளைஞர் காங்கிரஸ் சன்ஜய்காந்தி தலைவராக இருந்த காலத்தில் இயக்கத்தில் இருந்த எவரும் கட்சியரசியலில் தோற்கவில்லை .

அன்றைய இளைஞர்களிடத்தில் அரசியல் விழுமியங்களை அது விதைத்தது , அதை நோக்கி நகரும் நிமிர்வையும் அளித்தது . யாரையும் அண்டியநிலை ,மீட்சி என்பது சுயத்திற்கானது .அதன் தலைமையால் சுரண்டப்பட்டாலும் தனக்கென ஓர் அங்கீகாரம் நிச்சயம் ஒருநாள் வாய்க்கும் என காத்திருந்தனர் .

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...