https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 மார்ச், 2017

ஜெ வின் கடிதம் -3

தேதி 17-02-2015


அன்புள்ள அரிகிருஷ்ணன் அவர்களுக்கு
நான் 29 ஆம் தேதி வாக்கில் சென்னையில் இருப்பேன். அல்லது ஐந்தாம்தேதிக்குப்பின் சென்னை செல்வேன்
சென்னையில் இருக்கையில் ஒருமுறை நாம் சந்தித்தால் அனைத்தையும் தெளிவுறப்பேசிவிடலாமென நினைக்கிறேன்

விசிஷ்டாத்வைத்தத்தை மூன்று முறைகளில் அணுகும் பொதுமேடையை அமைக்கலாமென்பது என் எண்ணம்

1. விசிஷ்டாத்வைத்தை இன்றையசூழலில் நவீன சொல்லாட்சிகளுடன் அறிமுகம் செய்தல். அதற்கு முதலில் தேவையானது சம்ஸ்கிருதச் சொல்லாட்சிகளை தவிர்த்து தமிழிலேயே அதை அமைத்தல். குரானும் பைபிளும் தமிழில் வந்துவிட்டன. வைணவம் வரவில்லை என்பது வேடிக்கை. உதாரணமாக ராமானுஜரின் கத்யம் என நீங்கள் சொல்கிறீர்கள். கத்யம் என்றால் செய்யுள் என்றே பொருள்.
2 விசிஷ்டாத்வைத்தை இந்தியாவின் சைவசித்தாந்தம், அத்வைதம், சமனம், பௌத்தம் உள்ளிட்ட பிற சிந்தனைகளுடன் ஒப்பிட்டு புரிந்துகொள்ளல்

3 விசிஷ்டாத்வைத்தை இன்றைய நவீன மேலைத்தேய தத்துவசிந்தனைகளுடன் இணைத்துப்புரிந்துகொள்ளல். இதற்குரிய அறிஞர்கள் இருக்கிறார்கள். தேடிப்பிடிக்கவும் வேண்டியிருக்கும்

முடிந்தவரை செய்துபார்க்கலாம்

ஜெ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...